Thursday, November 12, 2015

873. I.S.L. 2015. ......(2) & மூன்று விஜய் சீரியல்கள்







*



 என்ன எழுதுவதென்றே தெரியவில்லை.. தலையே சுத்துது. காரணம் - எல்லா அணியும் ரொம்ப நல்லா விளையாடுறாங்க. clear picture கிடைக்கலைன்னு சொல்வாங்களே அப்படித்தான் இருக்குது! ஒரு வேளை செமி பைனல் ரவுண்டுகள் வித்தியாசமா இருக்கலாம். ஆனாலும் அதுக்கு எந்தெந்த அணி வரும்னு தெரியலை. ஏன்னா எல்லா அணிகளும் நல்லா விளையாடுறதுனால ரிசல்ட்கள் எல்லாம் கோக்கு மாக்கா இருக்கு.

 பாருங்களேன் ... கோவா அணி பெரிய அணிகளில் நான் வச்சிருந்தேன்.  ஆனா நம்ம சென்னை டீம் கூட விளையாடி 0:4ன்னு தோத்து நின்னாங்க. முதல் லீக்கில் நடுவில் இருந்த சென்னை அணி கடைசியில் இருந்த வடகிழக்கு அணிட்ட ரெண்டு கோல் வாங்கி தோத்தாங்க. ஆனா புனே அணி டாப்ல இருந்தப்போ நம்ம சென்னை அணி 1:2 என்று வென்றது. இப்படி நடந்தா தலை சுத்தாதா?

முந்தா நாள். 10ம் தேதி. இரண்டாம் லீக்கில் கேரளா அணியும் கல்கத்தாவும் மோதின. நினைத்துப் பார்க்க முடியாத கூட்டம். கொச்சின் மைதானம். 60,276ன்னு நினைக்கிறேன். அம்புட்டு கூட்டம் ...அதுவும் புட்பால் விளையாட்டுக்கு! கட்டாயம் கேரளா ஜெயிச்சிடும்னு நினச்சேன். விளையாட்டும் மகா தீவிரம். ஆனால் கடைசி நிமிடங்களில் 2:3 கல்கத்தா அணி ஜெயிச்சிருச்சி.

அதென்னமோ நிறைய விளையாட்டுகளில் கடைசி பத்து நிமிடங்கள் கதையவே மாத்தியிருது. நேத்து. 11ம் தேதி. சென்னையில் விளையாட்டு. சரியான மழை நடுவில். சென்னையும்,வ.கி. அணியும். 62% பந்து நம்ம கையில் ... ஐ மீன் .. காலில். ஆனால் இதிலும் மிகக் கடைசி நிமிடத்தில் சென்னைக்கு இரண்டாவது கோல் விழுந்தது. 1:2

சென்னைக்கு இன்னும் மூணு ஆட்டம் இருக்கு. எல்லாம் ஜெயிச்சா வரும், செமிக்கு சென்னை வருமோ... வராதோ...?


 ***********




இன்னைக்கி மேட்ச் இல்லை. அப்போ அந்த ரெண்டு சீரியலையும் பார்த்திரலாம் - விஜய் டிவியில். ஆனால் இந்த இரண்டு சீரியலுக்கும் நடுவில் ஒரு சீரியல் வருது பாருங்க .... கடவுள் தந்த வீடு  - அதுக்கு நான் வச்சிருக்கிற பெயர் - சைத்தான் கி கர்.  நிறைய கன்னாபின்னான்னு நகை போட்டுக்கிட்டு மகா கொடூரமா மூணு பொம்பிளைங்க வருவாங்க. கண் கொள்ளாக் காட்சி. அதிலும் நான் இதுவரை பார்த்த - முழுசாகவோ, அரைகுறையாகவோ - சீரியல்களில் இது போன்ற ஒரு முட்டாள்தனமான சீரியல் எதுவும் இல்லை. அட ... மடிக்கணினியை சோப்பு போட்டு சுத்தமா கழுவி வைக்கிற கதாநாயகில்லாம் இதில் உண்டு. ஆனா இந்த சீரியலில் நடிச்ச நிறைய பேருக்கு விஜய் அவார்ட் எல்லாம் கொடுத்தாங்க. (பாவம்,, சரவணா சீரியலில் வர்ர வில்லன் பாண்டிக்கு கொடுக்காம ஒரு பொம்பளைக்குக் கொடுத்தாங்க.) இந்த லட்சணத்தில் இந்த சீரியல் இந்தி, மலையாளத்திலும் ஓடுதாம். நம்மளை விட மலையாளத்துக்காரங்க பெட்டர்னு நினச்சிருந்தேன். அப்படியெல்லாம் இல்லை போலும். அவங்களும் நம்மள மாதிரி தர்த்திகள் தான் போலும்.

ஆனாலும் இந்த ஒரு சீரியலைப் பற்றி மட்டும் சொல்லிட்டா போதுமா? ஆண்டாள் அழகர்னு ஒரு சீரியல். ஒண்ணு இரண்டு வாரத்துக்கு முன்னால் அந்த சீரியலை வீட்ல சென்சார் பண்ணிட்டாங்க. என்ன மாதிரி சின்ன பசங்க எல்லாம் அதைப் பார்க்கக் கூடாதுன்னுட்டாங்க. ஒரு ஜோடி “அது” & “இது”ன்னு ”அதப்பத்தி” அசிங்கமா தொடர்ந்து பேசிக்கிட்டே இருந்தாங்களாம்.

ஆரம்பத்தில சரவணன் மீனாட்சி ரொம்ப பிடிச்சிது. காரணம் என்னன்னா ....நிறைய நல்ல விஷயங்களைக் காண்பிச்சாங்க.  வரதட்சணை கிடையாது; நல்ல நாள் பார்க்கிறது கூடாது; ஜாதகம் பார்க்கக் கூடாது; பெண்ணின் பழைய காதல் - அது infatuationஆக இருக்கலாம் - அதையெல்லாம் தாண்டும் கதாநாயகன்; இப்படி நிறைய பாசிட்டிவ் பாய்ண்டுகள் இருந்திச்சி. இப்போ கழுதை தேஞ்ச கட்டெறும்பா போச்சு. வேற வேற டைரடக்கர்களாம்!

sorry directors ...... கொஞ்சம் தேறப் பாருங்க’ப்பா ..........

2 comments:

வேகநரி said...

//நிறைய நல்ல விஷயங்களைக் காண்பிச்சாங்க. வரதட்சணை கிடையாது; நல்ல நாள் பார்க்கிறது கூடாது; ஜாதகம் பார்க்கக் கூடாது;//
இப்படியும் நல்லதுகளை தமிழ் சீரியலிலை காண்பிக்கிறார்களா? தகவல்களுக்கு நன்றிங்க.

தருமி said...

அடிக்கடி ///இல்லை/// இல்லை... எப்போதும் வாருங்கள், ஆதரவு தேவை. இல்லையா?

Post a Comment