Sunday, November 05, 2017

952. BIBLE STUDY - பழைய ஏற்பாடு ..... 2





*


மாத் 5-9

“அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர்.”

 ஆஹா … ஏசு அமைதி பற்றிப் பேசுகிறார். மகிழ்ச்சி.

 யோவான் 14 : 27 

“சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சாமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்”.

 தனது சமாதானத்தை நம்மிடம் கொடுக்கிறார். சமாதானத்தின் தூதுவனாக நம்மிடம் இறங்குகிறார். பெரும் மகிழ்ச்சி. 

ஆனால் .. இதென்ன புதிதாக ….?

மத்தேயு 10:34-36  

34. பூமியில் சமாதானத்தை உண்டாக்க வந்தேன் என்று நினைக்காதீர்கள்; சமாதானத்தை அல்ல, பிரிவினையையே உண்டாக்க வந்தேன். 
35.  அப்பாவுக்கு விரோதமாக மகனையும், அம்மாவுக்கு விரோதமாக மகளையும், மாமியாருக்கு விரோதமாக மருமகளையும் பிரிக்க வந்தேன். 
 36.  சொல்லப்போனால், ஒருவருக்கு அவருடைய குடும்பத்தாரே எதிரிகளாக இருப்பார்கள். 

இவையெல்லாம்  தேவனுடைய வார்த்தை என்பீர்கள். ஏன் அக்கடவுள் நம்மைப் பிரிப்பதில், குடும்பத்தை உடைப்பதில் இவ்வளவு மும்முரமாக இருக்கிறார்? அதில் அவருக்கென்ன ஆதாயம்?

மேலே சொன்ன மேற்கோளுக்குப் பொருள் தேட முயன்றேன். பல விளக்கங்கள் … ஆனால் எதுவும் சரியான விடையாகத் தெரியவில்லை.

ஏசு தனது சீடர்களை மதத்தைப் பரப்புவதற்காக அனுப்பும் போது இந்த வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார். ”உருவகம்” என்றெல்லாம் பேசப்படுகிறது. ஆனாலும் சரியான பதில் கிடைக்கவில்லை.

பதில் தெரிந்தோர் பொருள் கொடுத்தால் தன்னியமாவேன்.

உதவுங்கள். 





*

https://www.facebook.com/sam.george.946/posts/10212566033819076

 *

No comments:

Post a Comment