Saturday, December 21, 2019

1077. இந்துக்களே! நீங்கள் R.S.S. வழியில் தான் செல்ல ஆசைப்படுகிறீர்களா?





*

 ”அண்ணன்களின் வழியில் .... வந்ததே புதிய குடியுரிமை சட்டத் திருத்த மசோதா” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளேன். அதை வாசித்தால் அதைத் தொடர்ந்து இங்கு நான் எழுதியது புரியும்.

 கிறித்துவர்கள் ஒரே அமைப்பாக இருந்து பின்பு ஒரு பிரிவினர் பிரிந்து சென்றனர் தனிச்சபையாக. அவர்களுக்குப் பெயர் “பிரிவினைக்காரர்கள்”. கத்தோலிக்க மதாச்சாரியார்கள் செய்த பிழைகள் இப்பிரிவுக்குக் காரணம் என்பர் பிரிவினைக்காரர்கள். எப்படியோ இன்னும் அந்தப் பிரிவு உள்ளது. ஆனாலும் மக்கள் கணக்கெடுப்பில் இருவரும் கிறித்துவர்கள் என்ற ஒரே போர்வைக்குள் வந்து விடுவார்கள்.

 முகமதிய மதத்திலும் சன்னி, ஷியா என்று இரு பிரிவுகள்; அஹமதியா என்றும் ஒரு குழு. இன்னும் சில குழுக்கள் இருப்பதாகவும் சொல்லப் படுகிறது. இவர்களும் கிறித்துவர்கள் போலவே இஸ்லாமியர் என்னும் போது ஒரே குழுவினராக வந்து விடுகிறார்கள்.

 இது போன்ற பிரிவு இந்து மதத்திலும் ஏற்பட்டால் அது நல்லதோ என்று எனக்குத் தோன்றுகிறது. நான் பிறப்பால் ஒரு கிறித்துவன் என்றாலும் ஒரு மத, இறை மறுப்பாளன் என்ற நிலையில் நின்றுதான் இதைப் பேசுகிறேன். எங்கள் மதத்தில் உன் தலையீடு எதற்கு என்று இந்துக்கள் கேட்கலாம். இது என் ஆசை. கிறித்துவம், இஸ்லாம் குழுக்களாகப் பிரிந்தாலும் அது அவர்கள் மதத்தையோ அதன் எண்ணிக்கை பலத்தையோ மாற்றவில்லை. ஆகவே மதத்தின் “பலம்” சேதமடையாமல் “வலுவாகவே” உள்ளனர். அது போல் இந்து மதத்திலும் ஒரு பிரிவினை நடக்க வேண்டுமென்பது என் ஆசை. காரணங்கள் ...இதோ சொல்கிறேன்.


 என் கட்டுரையில் சாவர்கரும், கோல்வால்கரும் சொன்ன பெரும் “உண்மைகளை” எத்தனை இந்து மக்கள் அதை அப்படியே ஒத்துக் கொள்வீர்கள்? நிச்சயமாக 3% விழுக்காடு மக்கள் உடனே ஒத்துக் கொள்வார்கள். ஏனெனில் இதைச் சொல்வதும் ஆரியர்கள் என்று அழைக்கப்படும் பிராமணர்கள் என்று நம்புகிறேன். ஆகவே 3% விழுக்காட்டு பிராமணர்கள் இதை உடனே ஒத்துக் கொள்வார்கள். மற்ற பிறரின் நிலை என்ன?

வரலாற்று வழியில் பார்க்கும் போது இன்றைய இந்து மக்களாகவும் அன்று மதம் என்ற ஓர் அடைப்புக்குள் வராத நம் முன்னோர்களுக்கு குலம் காக்க வந்த பல ஆண்களும் பெண்களும் தெய்வமானார்கள். சுடலைமாடனும், கருப்பு சாமியும், அய்யனாரும் கடவுளாக கிராம எல்லைகளில் வீற்றிருந்தார்கள். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் ancestral worship என்ற வழிமுறைதான் இருந்து வந்துள்ளது. அதன் பின் மக்கள் கணக்கெடுப்பின் போது மதம் என்று ஒன்றைச் சொல்லியாக வேண்டும் எனும் கட்டாயம் ஏற்பட்ட போது எப்போதும் அதிகார பீடத்தில் இருக்கும் பிராமணர்கள் / ஆரியர்கள் இந்த மக்களையும் இந்து என்று அடைப்புக்குள் ஒரு ‘கணக்கிற்காக’ இழுத்து வந்து விட்டனர். எல்லோரும் இந்துக்களாக ஆகி விட்டோம் அல்லது ஆக்கப்பட்டு விட்டோம்.

 இன்று இருக்கும் இந்து மதம் சுத்தமாக ஒரு பிராமணிய மதம். அதன் கடவுள்களை - அதைப் பெரிய கடவுள் என்பார்கள்; முன்னோர் தெய்வங்கள் சிறிய கடவுளாகி mutate ஆகி விட்டார்கள் - பழைய மக்களுக்கு, அதாவது கணக்கெடுப்பு எடுக்க ஆரம்பிப்பதற்கு முன் உள்ள நம் முன்னோர்களுக்கு, இப்போது பிரபலமாக உள்ள இந்துக் கடவுள்களைத் தெரியாது. ஒன்று சொல்ல வேண்டும் .. பிடிக்கிறதோ இல்லையோ .. உண்மையைச் சொல்ல வேண்டுமல்லவா?! பிராமணர்கள் காலங் காலமாய் பெரும் புத்திசாலிகள், அறிவாளிகள். 

தங்கள் ஆர்யக் கடவுள்களைப் பொதுக் கடவுளாக்கி விட்டார்கள் - வரலாறு சொல்லும் உண்மை இது. இந்து மதத்தின் கோட்பாடுகளுக்கும், சாதி வித்தியாசங்களுக்கும் எதிராக எழுந்த இரு பெரும் மதங்களையும் பூண்டோடு அழித்த பெரும் பெருமை அவர்களுக்கே. யாரும் மறுக்க முடியாதபடி அத்தனை புத்திசாலிகள். இன்றும் அதை ஒவ்வொரு கட்டத்திலும் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள். 

 இத்தனை இருப்பினும் தங்கள் மதத்தை மக்கள் மீது அழகாகவும் வன்மையாகவும் இருத்தி வைத்து விட்டார்கள், வன்மை என்று ஏன் சொல்கிறேனென்றால் தங்களை மட்டும் உயர்சாதியாக்கி, அனைவரையும் தங்கள் முன் மண்டியிட வைத்து விட்டார்கள். ‘சாமி’ என்று என் சிறுவயதில் கேட்டதை ஒரு பழைய விஷயமாகி ஒரேயடியாக நின்று விட்டதாகவும் சொல்ல முடியாது. இன்றும் அனைத்து I.I.T. களிலும் அவர்கள் தானே “சாமி”! இல்லையா?

தங்கள் உயர்த்திக் கொண்டு மற்றவர்களைப் படிநிலைகளில் வைத்ததால் சண்டை வந்தாலும் அது backward vs most backward, அல்லது most backward vs dalits என்று தான் வருமேயொழிய forward vs non-forward என்று எப்போதும் வரவே வராது. என்னே அவர்களின் ராஜ தந்திரம். இதனால் தான் நான் அவர்களை “அண்ணாந்து” பார்க்கிறேன். சாதியை மறுக்க முடியாத ஓர் ஆயுதமாக நீட்டிக்க வைத்து விட்டார்கள். அதில் என்னையும், உன்னையும் கீழ் நிறுத்தி, தாங்கள் ஏணியில் உச்சத்தில் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். எத்தனை மகாத்மா பூலேக்களும், இரட்டை மலைகளும், பெரியார்களும், நாராயண குருக்களும் வந்தாலும் மாற்ற முடியாத சாதி அடையாளத்தை ஒவ்வொருவன் பிறக்கும் போது நெற்றியில் அச்சு குத்தி அனுப்பி விடும் வன்மம் இன்னும் பல காலம் தொடரும். என்றாவது அது முடியுமாவென்றும் தெரியவில்லை.

அது ஒரு பக்கம் இருக்கட்டும். சாவர்க்கர், கோவால்கர் சொன்ன “உபதேசங்கள்” எத்தனை பெயருக்குச் சரியென்று படும் என்று கேட்டிருந்தேன். 3% விழுக்காட்டிற்குக் கணக்கு காட்டியாகி விட்டது. அதைத் தவிர இன்னும் எத்தனை விழுக்காட்டிற்கு அந்த இருவர் சொன்னது சரியென்று படும். உங்கள் மனசாட்சிக்கு நீங்களே உண்மையாக இருந்து, அந்த இருவரின் கருத்து சரி என்று உங்களுக்குத் தோன்றினால் இப்பதிவின் கீழ் “ஓம்” என்று பதிவிடுங்கள் - இது பிராமணரல்லாதவர்களுக்கு மட்டும்.

 ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி (சமஸ்கிருதம்), ஒரே கலாச்சாரம் என்பதை வலியுறுத்தும் இந்து மதம் என்னைப் பொறுத்த வரை இன்றைய இந்துக்களில் மிக மிகப் பலருக்குப் புறம்பானதாகவே இருக்கும் .. இருக்க வேண்டும். முன்னோர் வழிபாடு செய்த மக்களின் மேல் திணிக்கப்பட்ட பெரும் வேதக்  கடவுள்களும் புறம்பானவர்களே. இது ஒரு சாதியினரின் அறிவுத் திறனில் விழைந்த விழைவு.

ஒரு வேளை இது நமக்கு (இந்துக்களுக்கு) நன்மை செய்திருந்தால் நலமே. அப்படி என்ன நலம் என்பதை இந்து மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும். ஐயப்பனுக்கும், வெங்கடாஜலபதிக்கும் அளிக்கும் நன்கொடைகளை நம் முருகனுக்குக் கொடுத்தாலும் ‘அந்தத் தமிழ்க் கடவுளும் நாம் கேட்பதைக் கொடுப்பார்’ என்ற நம்பிக்கை அவ்ர்களுக்குத் தானே வர வேண்டும். ஆனால் இதையெல்லாம் விட, இந்து மதம் நம்மை சாதியென்னும் சாக்கடைக்குள் அடைத்து வைத்திருப்பதிலிருந்து வெளிவந்தால் சாதிகளையும், சாதிகளில் உள்ள படிநிலைகளையும் அது உடைத்து விடாதா என்றொரு நப்பாசை. 

ஆனாலும் இந்துக்களின் அடிப்படை உணர்வுகள் தவறு - சாவர்க்கர், கோவால்கர் சொல்வது போல் நம் நாட்டு இந்து மக்கள் அனைவரையும் கட்டுப் படுத்தும் அந்த உணர்வுகள் மிகத் தவறு. இதைத் தெரிந்தும், தெரியாமலும் பலரும் இந்து மதத்தினராக உள்ளார்கள். (இது அனைத்து மதத்திலும் உள்ள நிலைப்பாடுகள் தான். எத்தனை கிறித்துவர்களுக்கு கிறித்துவ மதத்தின் ஆரம்ப கால வரலாறு தெரியும்? கிறிஸ்து கடவுள் என்று எப்படி ஒரு கூட்டம் நிலைப்படுத்தியது என்பது அவர்களுக்குத் தெரியமா? குரானின் “சுத்தம்” பற்றி எழுப்பும் கேள்விகளுக்கான பதிலும், சானா குரான் பற்றிய கேள்விகளும் எத்தனை அடிப்படை இஸ்லாமியவாதிகளுக்குத் தெரியும்?) ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி (சமஸ்கிருதம்), ஒரே கலாச்சாரம் என்பதை வலியுறுத்தும் இந்து மதம் சரியென்று தோன்றுகிறதா? அப்படித் தோன்றினால் ...

 கிறித்துவ மதத்திலும், இஸ்லாமிய மதத்திலும் தோன்றிய இது போன்ற பிரிவு இந்து மதத்திலும் ஏற்பட்டால் அது நல்லதோ என்று எனக்குத் தோன்றுகிறது.


I REPEAT:

அந்த இருவரின் கருத்து சரி என்று உங்களுக்குத் தோன்றினால் இப்பதிவின் கீழ் “ஓம்” என்று பதிவிடுங்கள் - இது பிராமணரல்லாதவர்களுக்கு மட்டும்.


 *


2 comments:

vara vijay said...

You are spoiled by dravidian ideology, always blaming others(Muslim blame jews, vice versa dravidians blaming brahmins) for your problems.

First of all try to accept you are reason for all of your problems.
For instance let us say brahmins are cunning people and they made you as a shit. Let me ask one question where was your brain why dont you utilise it.
Aryans are not only brahmins all the northindian people was considered as aryan, however now there is no vidence for suppoerting arya dravidian theory. Moreover Ravana the demon king was brahimin by birth who was killed by black aryan(for you) Rama.

Sin said...

First all Indians should remember in 18th or 19 century the Muslims & Christian's population is less than one percent even till 1950s there is no fast growth there after political help most of people do conversation for profitable business

Post a Comment