Sunday, May 24, 2020

1098. நெருக்கடி காலத்தில் அரசியல் பேசக்கூடாதா?






*

நெருக்கடி காலத்தில் அரசியல் பேசக்கூடாதா?

(தமிழ் இந்துவில் சமஸ் எழுதிய நடுப்பக்கக் கட்டுரை)


நாட்டிலேயே பெரிய கலிபோர்னியா மாநிலத்தின் ஆளுநர் கரோனா களேபரரங்கள் இடையே கலிபோர்னியாவை ”தேசிய அரசு” என்று அறிவித்தார். அரசு மாநிலங்களுக்கு மருத்துவ சாதனங்கள் அனுப்புவதில் காட்டிய மெத்தனத்தை சாடியவர் நேரடியாகவே வெளிநாடுகளில் இருந்து அவற்றை தடுக்க ஒப்பந்தங்களுக்கு உத்தரவிட்டார். அதற்கான முன்னோட்டமாக இந்த அறிவிப்பை வெளியிட்டார். பொதுவாக ஒரு மாநிலம் தன்னை தேசிய அரசாக அறிவித்து கொண்டால் அதை உள்நாட்டு போருக்கான அறிவிப்பாகத்தான் கருத வேண்டும். ஆனால் இந்த அறிவிப்பு அப்படி பார்க்கப்படவில்லை. மாநில மக்களின் நலன் கருதி எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை சுதந்திரமாக விரைவாக எடுக்க வேண்டிய அவசியத்தை சுட்டும் பிரகடனமாக சரியாகவே புரிந்து கொள்ளப்பட்டது.
மற்ற மாநிலங்களுக்கு எப்படியோ தமிழ் மாநிலத்திற்கு வர வேண்டிய நிதிகள் எதுவும் சரியாக கொடுக்கப்படவில்லை; மருத்துவ சாதனங்கள் ஒழுங்காக அளிக்கப்படவில்லை; இன்னும் பல இல்லை.. இல்லைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இவைகளை எல்லாம் சரிக் கட்டுவதற்கு நாமும் பேசாமல் ஒரு தேசிய அரசு அறிவித்தால் என்ன?
தமிழ்நாடு தேசிய அரசு வாழ்க!!









No comments:

Post a Comment