Saturday, February 05, 2022

1251. கிழவனின் பழைய புலம்பலுக்கு ஒரு பயன் !!!



*

அடேய் தருமி! நீ ஒரு பெரிய prophet - அதாவது - ஒரு தீர்க்கதரிசி தான்’டா!

8 ஆண்டுகளுக்கு முன்பே நீ டாஸ்மாக் பார்களை மூடினால் நல்லது என்று உன் ப்ளாக்கில் எழுதினாய் .. இன்று அது நடைமுறைக்கு வந்து விட்டது.

எப்படி’டா உன்னால் இதெல்லாம் இப்படி தீர்க்கதரிசனமா .. அதாவது .. வருமுன் உரைப்போனாக சொல்ல முடிகிறது.

நல்லா இருடே ….


இன்றைய செய்தி:

https://www.hindutamil.in/news/tamilnadu/764103-madras-high-court-orders-closure-of-bars-in-tasmac-liquor-shops-within-6-months.html


நான் அன்று எழுதிய ஒரு விண்ணப்பம் / ஆசை.

https://dharumi.blogspot.com/2014/11/798_7.html

 

டாஸ்மாக் பத்தி இப்போதைக்கு ஒண்ணும் சொல்லலை. ஆனால் அந்தக் கடைகளை ஒட்டி நடத்தும் பார்களை மட்டுமாவது முதலில் நிறுத்தலாமே..

பார் முன்னால் நிறுத்தியிருக்கும் வண்டிகளை குடிமக்கள் எடுத்துக் கொண்டு போவதைப் பார்க்கும் போது இன்னைக்கி எத்தனை பேர் பலியோ என்று தான் தோன்றுகிறது.

அப்புறம் ஏன் தமிழ்நாட்டில் தான் இந்தியாவிலேயே அதிக சாலை விபத்துகள் வராது?

யாராவது சமுகத் தளங்களில் பார்களை முதலில் எதிர்க்க ஏதாவது ஒரு ஏற்பாடுஆரம்பியுங்களேன்....ப்ளீஸ்.

அதற்குப் பிறகு கேரளா மாதிரி ஏதாவது பண்ணலாமே! அம்மாட்ட கேட்டு ஓபிஎஸ் ஏதாவது பண்ணுவாரான்னு பார்ப்போம்!





*




No comments:

Post a Comment