Saturday, October 08, 2022

1187. பல்லு போய் .. பல்லு வந்துச்சு ... டும்.. டும் ..





*
https://www.facebook.com/sam.george.946/posts/pfbid02W4FPRd1PpbUpDD7RWrutV3Jey6g9D5zqq4UydfKrR6eSCgzY38m551XKBXkLT2rul

*

ஏறத்தாழ ஒரு மாத காலமாக  பல் மருத்துவரிடம் சென்று வந்து கொண்டிருக்கிறேன். ஆகவே பலமுறை நினைவுகள் வாய், பல் என்று அப்பகுதிகளைப் பற்றியே சுற்றி வந்து கொண்டிருந்தன. இன்று எனக்குப் “புதிய” பல்லும் “வளர்ந்து” விட்டது.  விதியைப் பாருங்களேன் .. நான் தான் முதலில் பிறந்தேன். பிறந்ததிலிருந்து ஒரே நிறம் தான் எனக்கு. ஆனால் பாருங்கள் இந்தப் பற்களை! எனக்குப் பின்னால் தான் அவை பிறந்தன. வெள்ளையாக இருந்த பல் காலங்கடந்ததும் மஞ்சள் கலருக்கு வந்தது. நான் கலர் மாறாமல் இருக்கிறேன். அது கலர் மாறியது .. பிறகு ஏறக்குறைய அனைத்தும் பயனில்லாமல் விழுந்து தொலைத்தன. போனால் போகுது என்றும் இருக்க முடியாமல் வைத்தியரிடம் போனேன். அவர் புதிதாக பற்களை “முளைக்க” வைத்து விட்டார். ஆகவே என் பற்கள் மட்டும் – கிறித்துவ மொழியில் அல்லது christian  parlance-ல் சொல்வதென்றால் BORN AGAIN.  இந்துத்துவத்தில் சொல்வதென்றால் த்விஜாஸ் (dvijas)  - இரண்டிற்கும் அர்த்தம் ஒன்றேதான்!

அடேய் சாம்... பரவாயில்லைடா நீ! பல்லில் கூட மதத்தைக் கொண்டு வந்து சேர்த்திட்டியே!!  - இது என் மைண்ட் வாய்ஸ் சொன்னது!

சரி .. எங்கே ஆரம்பித்தேன். நினைவுகள் வாயையும் பல்லையும் சுற்றியே வந்து கொண்டிருந்ததல்லவா? பல் வேலை முடிந்ததும் பிள்ளைகளுக்கும், நண்பர்களுக்கும் புதிய பல்பற்றிய செய்திகளை அனுப்பி வைத்தேன்.  நண்பன் வைத்தி  உடனே தொலைபேசினான்.  பல்லைப் பற்றிக் கேட்டான். அப்போது நான் ஆச்சரியப்பட்ட ஒரு விசயத்தை அவனிடம் சொன்னேன்: 32 பல்களுக்கிடையே ஒரு நாக்கு. எப்படித்தான் பல்லின் கடியிலிருந்து எப்போதும் ஜாக்கிரதையாகத் தன்னைக் காத்துக் கொள்கிறது என்ற என் ஆச்சரியத்தை அவனிடம் சொன்னேன். அதோடு ... சுற்றி அத்தனை எதிரி நாடுகள் சூழ்ந்திருந்தாலும் நடுவே உள்ள சின்ன நாடு – இஸ்ரேல் – எப்படித் தன்னைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்கிறதல்லவா .. அது போல் என்றேன். உடனே ஒரு பதில் வந்தது அவனிடமிருந்து:

இஸ்ரேல் பலம் மிக்க நாடு. அதனால் தான் தன்னைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்கிறது. நாக்கும் தன்னைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்கிறது;, அது flexible-ஆக இருப்பதால் தன்னைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்கிறது.

இரண்டும் சரிதான். இல்ல ?

பின்னிட்டான்ல .... !!!


1 comment:

KILLERGEE Devakottai said...

ஹா.. ஹா.. பல் புராணம் பல்சுவையுடன் இருந்தது.
பழைய பதிவின் கருத்துரை திறந்து விடவில்லையோ... - கில்லர்ஜி

Post a Comment