Wednesday, October 26, 2022

1190. I SALUTE BRAHMINS ……



*

I SALUTE BRAHMINS ……

“இந்துக்களின் அறிவாளி வர்க்கமாக பார்ப்பனர்களே இருக்கின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை. பார்ப்பன சாதி. … மற்ற சாதியினர் மத்தியில் பெரும் மதிப்புக்குரிய வர்க்கமாகவும் இருக்கிறது. மற்ற சாதியினரைத் தன் பிடிக்குள் வைத்திருக்கும் இது போன்ற ஓர் அறிவாளி வர்க்கம், சாதி சீர்திருத்தத்திற்கு எதிரியாக இருக்கும் போது, சாதி அமைப்பைத் தகர்த்தெறிவதற்கான இயக்கத்தில் வெற்றி வாய்ப்புகள் எட்டாக்கனி என்றே எனக்குத் தோன்றுகிறது.”
டாக்டர். பி.ஆர். அம்பேத்கர்,
சாதியை அழித்தொழிக்கும் வழி)
வேற்றுமைகளை அங்கீகரிக்காமல், ஒற்றுமையைக் கடுகளவும் விரும்பாத தனித்த இனமாக தன்னை அது உச்சாணிக் கொம்பில் வைத்துக் கொள்கிறது. அப்படியான அடைப்பட்ட சமூகமாக (CLOSED COMMUNITY) பார்ப்பனர்கள் மூவாயிரம் ஆண்டுகளாகத் தொடர்வதுதான் வியப்பளிக்கிறது.
----------------
பார்ப்பனியம் என்பது ஒரு வகையான தீவிர சக மனித வெறுப்பு மனநிலை. அந்த மனப்பிறழ்வு இங்கே ஓர் ஆதிக்க சித்தாந்தமாக இயங்கி நாட்டையே வதைக்கிறது.
----------------------
பிறப்பின் அடிப்படையில் தகுதிப்படுத்தும் சாதி எனும் கொடூர வழக்கத்தை உருவாக்கியது பார்ப்பனர்களே! அவ்வழக்கம் அழிந்து விடாதவாறு காலங்காலமாகக் கண்காணித்தும் காப்பாற்றியும் நியாயப்படுத்தியும் வருவதும் பார்ப்பனர்களே!
-----------------------
பார்ப்பனியம் என்பதற்கான நேரடிப் பொருள் பிரித்தாளும் சூழ்ச்சி. ... நாட்டின் பெரும்பான்மை தொல்குடிகளை படிநிலையில் கீழான, இழிவான இடத்திற்குத் தள்ளிய கொடுங்கோன்மைக்குப் பெயர்தான் பார்ப்பனியம். இந்தப் படிநிலை சமத்துவமின்மை கோட்பாட்டிற்கு எந்த ஆபத்தும் வந்துவிடாமல் பார்த்துக் கொள்வது ஒன்றுதான் பார்ப்பனர்கள் காலங்காலமாக செய்து வரும் ஒரே வேலை.
-------------------------
காந்தியைக் கொன்ற கோட்சே ஒரு பார்ப்பனர் என்ற போதும், பார்ப்பனத் தீவிரவாதியாக அவர் என்றுமே அடையாளப்படுத்தப்படுவதில்லை.
------------------------
மூன்று சதவிகிதப் பார்ப்பனர்களே அறிவாளி / முதலாளி வர்க்கமாக உச்சாணிக் கொம்பில் அமர்ந்து கொண்டு இந்நாட்டின் அத்தனை அதிகாரங்களையும் வளங்களையும் அனுபவிக்கின்றனர். ஆனால், வலுவான இந்த ஆளும் வகுப்பினரை இங்கே நடக்கும் பிரச்சனைகளோடும் தொடர்புபடுத்தாமல் அவர்களை பொறுப்புடைமியிலிருந்து நழுவ விடுகிறோம்.
-----------------------
பார்ப்பனியத்தை எதிர்க்க வேண்டிய இடத்தில் இந்துத்துவம், இந்துத்துவம் என கூச்சல் போட பழகிக் கொண்டோம்.
-------------------------
சுதந்திர இந்தியாவில் காங்கிரஸ் ஆண்ட இடத்திலெல்லாம் பார்ப்பனர்களே முதல்வர்களாக்கப் பட்டனர்; அமைச்சர் பதவிகளைப் பிடித்தனர்.
----------------------
பார்ப்பனியம் சாதிகளால் உயிர் வாழ்கிறது. இந்து மதத்தின் பெயரால் காப்பாற்றப்படுகிறது.
--------------------
ஒரு பார்ப்பனர் முகத்தில் ஆசிட் ஊற்றுவதாக இருந்தால் கூட அதை ஊற்றும் ‘privilege’ மற்றொரு பார்ப்பனருக்குத்தான் உண்டு!!
-----------------------
INDIAN PENAL CODE என்பதை எல்லாம் தாண்டி, எப்பேர்ப்பட்ட குற்றங்களில் ஈடுபட்டாலும் பார்ப்பனர்களைத் தப்பிக்க வைக்கும் INDIAN பூணூல் CODE என்ற ஒன்று இங்கே இருக்கத்தான் செய்கிறது.
-------






*



1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

தங்களால் நூலினை வாங்கிவிட்டேன் ஐயா. படிக்க வேண்டும், நன்றி

Post a Comment