Friday, January 12, 2024

1270 . சென்னைப் புத்தக விழாவில் இரண்டாவது புத்தகம் - சூத்திரர்

இந்த நூலுக்கு “சூத்திரன்” என்றே பெயர் வைக்க விரும்பினேன். அந்தச் சொல்லே சூத்திரர்களைக் குத்தும் என்று நினைத்தேன்; அதையே விரும்பினேன். ஏனெனில், இந்த நூலை வாசிக்கும் போதே என்னை நானே நொந்து கொண்டேன்.... இத்தனை ஆயிரம் ஆண்டுகளாக நான் ஏன் சுத்தமாக சுய மரியாதை இல்லாமல் இருந்து தொலைத்தேன். (இங்கே நானென்பது என் மூதாதையரையும் சேர்த்து அனைத்து சூத்திரன்களையும் ஒன்று சேர்த்தே சொல்கிறேன்.) சில ஆண்டுகள், சில நூற்றாண்டுகள் என்றாலும் பரவாயில்லை. ஆனால் அன்றிலிருந்து இந்த வினாடி வரை கூனிக் குறுகி, சுயமரியாதை என்றால் என்னவென்று தெரியாமல், அறியாமல், புரியாமல் இருந்திருக்கிறேனே என்று நினைத்துக் கொண்டே இந்த நூலை வாசித்தேன். நூலில் கொடுத்துள்ள உண்மைகள் அத்தனை வன்மையானவை; உண்மையானவை; உணர்ந்து படிக்க வேண்டியவை.

சூத்திரன் என்று நம்மை ஒதுக்கி வைத்த மக்களும் இதைக் கட்டாயம் வாசித்தாக வேண்டும். ஒரு வேளை இத்தனைக் கொடுமையானவர்களா நாம் என்ற கேள்வியும், மனிதத்தன்மையிலிருந்து எவ்வளவு விலகிப் போய்விட்டோம் என்பதை அவர்களும் இந்நூலை வாசிக்கும்போது (ஒருவேளை) உணரலாம்.

கட்டாயம் வாசிப்போம் .... திருந்துவோமா என்பது அதற்கடுத்த நிலை !!!


No comments:

Post a Comment