Thursday, May 23, 2024

1275. சில பல திரைப்படங்கள் ....



*

நான்கைந்து நாட்கள். வேலை ஏதும் செய்யாமல் அக்கடாஎன்று படுத்துக் கிடந்தேன். ஆனாலும் அப்படியே சும்மாவா படுத்திருக்க முடியும். இருக்கவே இருக்கு ..OTTக்கள் வா ... வா என்று அழைத்துக் கொண்டே இருந்தன. இரண்டு, மூன்று படங்கள் முழுதாகவும்,… சில “சில்லறைப் படங்களைஅரை குறையாகவும் பார்த்து நொந்து கொண்டேன்.







முழுதாகப் பார்த்த முதல் படம் ஒரு வெப்சீரீஸ். வசந்த பாலனின் “தலைமைச் செயலகம்”. முதல் இரண்டு மூன்று எபிசோடுகளைப் பார்த்ததும் உடனே எழுந்து போய் முக நூலில் நல்லதாக நாலு வார்த்தை எழுதிட்டு வரணும்னு ஓர் உந்துதல். முதல் சீனிலேயே ஒய்ட் ஆங்கிள் ரவிச்சந்திரன் படத்தோடு ஒட்ட வைத்து விட்டார். ஹீரோ ஆடுகளம் கிஷோர்; கதாநாயகி எனக்குப் பிடித்த இரு நடிகைகளில் ஒருவரான ஷ்ரேயா ரெட்டி (வெயில் படத்திலிருந்தே …) இருவரின் தோற்றமே நன்கிருந்தது. இருவரும் கண்களால் தங்கள் நடிப்பைக் கொண்டு வந்தது போலிருந்தது. நான்கைந்து எபிசோடுகள் அலுப்பில்லாமல், நன்றாக சென்றது. கடைசி மூன்று,நான்கு எபிசோடுகளை எப்படி முடிப்பது என்று தெரியாமலோ, திரைக்கதை எழுதுவதிலோ ஒரே குழப்படி  செய்து, நம்மை வைத்து செய்து விட்டார்கள்’.  நன்றாக ஆரம்பித்து இறுதியில் சொதப்பலாக,  சோக அவியலாக முடிந்த சோகம் அந்தப் படம். ஆனாலும்  பல மாதங்கள்/ ஆண்டுகளுக்கு முன்பு ஏறத்தாழ இதே மாதிரியான இன்னொரு படம் ஓடிடியில் பார்த்தேன். அது சிவகாசி என்று நினைக்கின்றேன். அதில் பரம்பரையாக இருந்த ஓர் அரசியல் குடும்பத்தை வைத்து இதே போன்ற கதையாக்கத்தோடு – அரசியல்வாதி அப்பாவை மகளோ மகனோ கொன்றுவிடும் கதையாக – பார்த்த நினைவு வந்தது. முதலில் பார்த்த அந்தப் படமே பரவாயில்லை என்று இப்போது தோன்றுகிறது. அழகாக ஆரம்பித்து தடுமாறி முடித்து விட்டார், ஜெமோ இதற்கு அதிகமாகப் பங்கு கொடுத்த்திருப்பார் போலும்.

 


இந்தப் படத்திலிருந்து தப்பி இன்னொரு படத்திற்குத் தாவினேன். தங்கர் பச்சானின் படம். :கருமேகங்கள் கலைகின்றன” தலைப்பெல்லாம் நன்கு கவித்துவமாகவே இருக்கிறது.  பாரதி ராஜா கதாநாயகன். யோகி பாபு துணைக் கதாநாயகன். எஸ்.சி (அதாவது தளபதி விஜய்யின் அப்பா),  கெளதம் வாசுதேவன், அதிதி பாலன் ... என்று ஒரு பெரிய பட்டாளம்.  பாரதி ராஜாவிற்கு ஒரு கதை; யோகிபாபுவிற்கு இன்னொரு கதை; வாசுதேவனுக்கு ஒரு கதை ... என்று பல துணைக்கதைகளை வைத்து மகாபாரதம் போல் ஒரு நீண்ட படம். இதில் ஏதாவது ஒரு கதை – பாரதி ராஜாவின் கதை மட்டும் – வைத்து ஒரு படமெடுத்திருந்தால் உட்கார்ந்து பார்த்திருக்கலாம்.

 

THE TRAIN என்று ஓர் ஆங்கிலப்படம். WW II காலத்துப் படம். பிரான்சிலுள்ள பெரும் ஓவியர்களின் படங்களையெல்லாம் அள்ளிக் கொண்டு செல்ல நினைக்கின்றார் ஒரு ஜெர்மானிய அதிகாரி. அதைத் தடுத்து நிறுத்தி தங்கள் நாட்டின் கர்வத்தையும். பெருமையையும் காப்பாற்றுகிறார் கதாநாயகன்



Burt Lancaster, எப்படி ரயிலை டைரக்ஷன் மாத்துனாங்கறது மட்டும் புரியலை. ஆனா படம் நல்லா இருந்தது.

இதோடு நிறுத்தியிருக்கலாம். THE BOYS அப்டின்னு ஒரு தமிழ்ப்படம் ஓடிடியில். யாரோ செந்தில்குமார் அப்டின்னு ஒரு தயாரிப்பாளராம். காசு எப்படியோ வந்திருக்கும் போலும், அதைக் கண்டபடி செலவு பண்ணியாகஆணும்னு ஒரு வரம் வாங்கிட்டு வந்திருக்கார் போலும். அதுக்காக இப்படி ஒரு படம் எடுத்து ... கடவுளே ... தாங்கலடா சாமி.

இன்னும் இது மாதிரி ஓடிடியில் சில தமிழ்ப்படம் முயற்சித்து,தப்பித்து ஓடி வந்துட்டேன். பலரும் தமிழில் ஓடிடியில் காசை தர்ப்பணம் செய்யவே படம் எடுக்கும் பரிதாபத்தையும் பார்த்தேன்.

 


No comments:

Post a Comment