Friday, March 15, 2013

643. காணாமல் போன நண்பர்கள் - 15 - அவனுக்கென்னப்பா ...





*

அதீதம் இணையப் பத்திரிகையில் வந்த பதிவின் மீள் பதிவு: 



 அது என்னமோ .. வாத்தியார் பிள்ளை மக்கு என்பார்களே .. என் விஷயத்தில் ரொம்ப சரி. இளங்கலை முடிந்தது. அடுத்து என்னன்னு ஏதாவது யோசிக்கணுமே. ஒண்ணும் கிடையாது. புதுசா வந்த மருத்துவக் கல்லூரிக்கு ஒரு சின்ன முட்டு முட்டி கிடைக்காம போச்சா... அதற்கு முந்தியே நினைத்தது மாதிரி பிடிக்காமல் படித்து முடித்த விலங்கியலை முதுகலையில் தொடர்ந்தாச்சு. அடுத்து வேற ஏதாவது செய்யலாமா என்பது மாதிரியான சிந்தனைகள் சுத்தமாக இல்லை. ஏதோ யாரோ கோடு போட்டுக் கொடுத்து அந்தக் கோட்டிலேயே நடந்து போனது மாதிரி போயாச்சு. மாற்று முனைப்பு என்பதே இல்லாத வாழ்க்கை!

முதுகலை சேர்ந்தாச்சு. முதுகலைப் பேராசிரியர் எங்களுக்கு இளங்கலையில் வகுப்பெடுக்கவில்லை. அதனால் அவர் மட்டும் தெரியாது. இளங்கலையிலிருந்து நான் மட்டுமே முதுகலை வகுப்பில் சேர்ந்திருந்தேன். ஆக நான் மட்டும் ஆசிரியர்களுக்குத் தெரிந்த ஒரே மாணவன். எல்லோரும் இளங்கலையில் என்னிடம் அன்போடு இருந்த ஆசிரியர்களே. முதுகலைப் பேராசிரியரிடம் இரண்டு மூன்று முறை மாட்டிக் கொண்டேன். படிக்கட்டுக்கு கீழே முதுகலை மாணவர்கள் தம்மடிக்கிற இடம். அதில் ஒரு முறை வசதியாக மாட்டிக் கொண்டேன். வகுப்பு மாணவிகளிடம் சண்டை போட்டு, அவர்கள் இல்லாத நேரம் பார்த்து, அவர்கள் உட்கார்கிற பெஞ்சு மேசைகளில் என் அம்பாசிடர் ஷூவை நன்றாக அழுக்காக்கி அவர்கள் உட்காரும் மேசை மேல் தடம் பதிய நடந்து கொண்டிருக்கும் போது தானா அவர் எங்கள் வகுப்பைக் கடக்க வேண்டும். இப்படியாக அவரிடம் மாட்டிக் கெட்ட பெயர் வாங்கி, அவரும் எல்லோரிடமும் என்னைப் பற்றி புகார் கூறியிருந்தார். இரண்டாம் ஆண்டுதான் அவர் எங்களுக்கு வகுப்பெடுக்க வருவார். அதற்குள் முதலாண்டுத் தேர்வின் மதிப்பெண்களை வைத்து என்னிடம் பயங்கர பிரியமாகி விட்டார். அதன் பின் அவரது ஏகோபித்த செல்ல மாணவன் ஆனேன்.

We, the seniors with our Juniors - 1965-66


இது ஆசிரியர்கள் பாகம். எங்கள் மாணவர் பாகம் சொல்லணும்னு தான் ஆரம்பிச்சு எங்கேயோ போய்ட்டேன். எங்கள் வகுப்பில் 15 மாணவர்கள். எட்டு பசங்க .. ஏழு பொண்ணுங்க. எட்டு பசங்கன்னு சொல்லக்கூடாது. ஏன்னா எங்க வகுப்பில் ஒரு அண்ணன், அவருக்கு கல்யாணம் ஆகி பையனும் பள்ளிக்கூடம் போக ஆரம்பித்திருந்தான். அவரும் சில ஆண்டுகள் வேலை பார்த்து இங்கே மீண்டும் படிக்க வந்திருந்தார். எட்டு பசங்களில் நாலு நாலு பேரா கொஞ்ச நாளிலேயே பிரிஞ்சிட்டோம். எல்லாரும் பேசிக்கொள்வோம். ஆனா அந்நியோன்யம் எங்க நாலு பேரு .. அவங்க நாலு பேரு என்றானது. எஙக குரூப்ல ஒருத்தன் நாகர்கோவில்; இன்னொருவன் நாகர்கோவில் பக்கமிருந்து வந்த மலையாளி. ஆனாலும் தமிழ் பேசுவான். இந்த ரெண்டு பேரும் பேச ஆரம்பிச்சா பொண்ணுக எங்களைப் பாவமா பார்ப்பாங்க. ஏன்னா அவங்க ரெண்டு பேரும் பேசுற தமிழ் இந்த மக்களுக்குக் கொஞ்சம் கூட புரியாது. நாளான பிறகு கொஞ்சம் மாறியது.’சினிமாய்க்கி போயி சாடி, சவட்டி டிக்கெட் எடுத்தோம்’னு நாகர்கோவில்கார கண்ணன் பேசினது அவங்களுக்குப் புரிய ரொம்ப நாளாச்சு.இவனும், நானும் முதலிலிருந்தே ஒட்டிக்கிட்டோம். இந்த நண்பன் காணாமல் போகவில்லை. படித்து முடித்த பிறகு அவ்வப்போது என்று சில முறை இவனைப் பார்த்திருக்கிறேன். ஆனால் அடுத்த நண்பனின் நட்பு முதுகலையோடு நின்று போனது. படித்த பின் இவனைப் பார்க்கவே இல்லை. அவன் நம்ம மலையாளிப் பயல் - மணிகொண்டான் தம்பி. Manikondan Thampi என்றுதான் எழுதுவான்.


பொண்ணுகளோடு படிக்கிறது நிறைய பேருக்கு இதான் முதல் தடவை. அதுனால கொஞ்ச நாள் பலருக்கும் ஒரே ஜிவ்வு! அதன் பின் அவர்களோடு ஒட்டியும் ஒட்டாமலும் ஒரே பிரச்சனைகள். அப்போ தம்பிக்கு - முதலிலிருந்தே co-ed படிச்சவனாம் - எங்களைப் பார்த்தால் ஒரே வேடிக்கையாக இருக்கும். அவன் தான் பெண்களோடு சாதாரணமாகப் பழகணும்னு ட்யூஷன் எடுத்தான். பெண்களுக்கும் சொல்லிக் கொடுத்தான். அவன் முதலில் பெண்களோடு சாதாரணமாகப் பேசுவதே எங்களில் பலருக்கு பயமா, ஆச்சரியமா இருக்கும். தல எப்பவுமே ஒய்ட் & ஒய்ட் தான்.




 தம்பி ஒழுங்காக மலையாள மனோரமா வாராந்தரி வாங்கிடுவான். ஒரு நாள் ஒரு மனோரமாவையும், குமுதத்தையும் எடுத்து வைத்தான். அட்டை டூ அட்டை விமர்சனம் செய்தான். வாராந்தரியில் உள்ளூர், வெளியூர் அரசியல், அறிவியல் அது இதுன்னு இருந்தது. நம்ம ஊர் நூலில் கொஞ்சூண்டு லோக்கல் அரசியல், அடுத்து அனைத்தும் சினிமா என்றிருந்தது. ’ஏண்டா உங்க ஊர் பத்திரிகைகள் இவ்வளவு கேவலமா இருக்கு? எங்க ஊர் இதழில் எம்புட்டு விஷயம் இருக்கு?’ அப்டின்னான். அன்றும் அந்தக் கேள்விக்குப் பதில் இல்லை; இன்றும் இல்லை.




வகுப்பில் நான், இவன், கண்ணன், வரதன் நால்வரும் ஒரு செட். ஆனாலும் வரதன் எங்களுக்கு அண்ணனாகி கொஞ்சம் விலகியிருந்தார்.மீதி நாங்க மூணு பேரும் ஒண்ணா சுத்துவோம்.
படிப்பிலும் நல்ல பெயர் வாங்கினோம்.



ஒரு நாள் நானும் தம்பியும் கல்லூரிக்கு நடந்து வந்து கொண்டிருந்தோம். அரசமரத்து பிள்ளையார் கோவில் இருக்குமே அதுக்குப் பக்கத்தில் ஒரு புத்தம் புது அம்பாசிடர் கார். வெள்ளை வெளேர்னு பளிச்சின்னு ரோட்ல நின்னது.

‘புது கார்’டா’ என்றேன்.

‘நல்லா இருக்கு’ அப்டின்னான்.

’இது மாதிரி ஒரு கார் நம்ம லைப்ல வாங்க முடியுமா’டா?” என்று கேட்டேன். கேட்ட என் குரலிலேயே என்னால அது முடியாது அப்டின்ற அர்த்தம் நிறைய இருந்தது. ஏன்னா எனக்கு சுத்தமா அந்த நம்பிக்கையே இல்லை. ஆனால் தம்பியிடமிருந்து ரொம்ப நம்பிக்கையான, அதைவிட ஒரு matter of fact தொனியில்,

‘ஏண்டா .. இம்புட்டு படிச்சிட்டு இதுகூட வாங்காமலா போவோம்’ அப்டின்னு ரொம்ப சாதாரணமா சொல்லிட்டுப் போனான்.

இது என் மனசுக்குள்ள ரொம்ப வருஷம் ஒரு நிறைவேறா ஆசையாக அப்ப்டியே நின்னுது. நாம எல்லாம் கார் வாங்கிறதாவது என்ற நப்பாசைதான் மனதில் எப்படியோ ஓடிக்கொண்டிருந்தது.  ஒரு வழியாக அந்த ஆசை கனவாக மாறுவதற்குள் ஏறக்குறைய ஓய்வு பெரும் வயது நெருங்கியிருந்தது. ஆனால் இந்தப் பயல் நிச்சயமாக ரொம்ப சீக்கிரமே கட்டாயம் ஒரு கார் வாங்கியிருந்திருப்பான். அவன் குரலில் ஒலித்த நிச்சயமும் தன்னம்பிக்கையும் இன்றும் என் நினைவில் நன்கிருக்கிறது. பல ஆண்டுகள் கழித்து அவன் பெயரில் ஒரு பாடப்புத்தகம் வெளியாயிருந்தது. திருவனந்தபுரம் பல்கலையில் வேலை பார்த்திருந்திருப்பான் போலும் அவன் பெயரில் Marine Ecology என்று ஒரு நல்ல புத்தகம் வெளியாகி இருந்தது.




அவனுக்கென்னப்பா ... புத்தகம் எல்லாம் போட்டவன்.  எப்பவோ கார் வாங்கமலா இருந்திருப்பான்?



*


Thursday, March 14, 2013

645. இதையெல்லாமா ப்ளாக்ல எழுதுவாங்க ...?




*



 ரெண்டு நாளா ஒரே போராட்டம்.


1997-ல் புது வீட்டுக்கு வந்தோம். அந்த ஏரியாவில எங்க வீடுதான் கட்டக் கடைசி. எதுத்தாப்ல ஒரு ப்ளாட். அதைத் தாண்டினா நெல் வயல். நாங்க போன நேரம் டிசம்பர் 27ம் தேதி. கொஞ்சம் மழை பெஞ்சிருந்தது. பத்தாதா ... எங்க ஏரியா முழுவதும் ஒரே சகதி. வீட்டுக்கு வரணும்னா 30 அல்லது 40 மீட்டருக்கு முன்னாலேயே செருப்பைக் கழட்டி, கால் சட்டையை முழங்காலுக்கு மேல மடிச்சி விட்டுக்கிட்டு, சர்க்கஸ் சாகசக்காரன் கயித்து மேல நடக்கிறது மாதிரி ஆட்டம் போட்டுக்கிட்டே வரணும். இந்த லட்சணத்தில சில சமயம் தண்ணிப் பாம்பு, தவக்காளை எல்லாம் நம்ம பக்கத்தில் ஜாலியா வரும். தங்க்ஸ் கூட வந்தா இன்னொரு பெரிய சர்க்கஸ். அவங்க செருப்பு, என் செருப்பு, அவங்க பை, என் பை அப்டின்னு ஒரு நீள பட்டியல். எல்லாத்தையும் நான் தூக்கிக்கிட்டு நான் முன்னாலே போறேன் ... நீ பின்னாலே வாயேன் .. அப்டின்னு ஒருத்தர் பின்னால இன்னொருத்தரா போவோம். அதுலயும் டேஞ்சர் இருந்ததாலே அவங்கள முன்னால உட்டுக்கிட்டு நான் பின்னால, பாதுகாவலா போவோம். வண்டி வீட்டைத் தாண்டி ஒருத்தர் வீட்ல நிக்கும். காலையில் வீட்டை விட்டுப் போகும்போதே ரப்பர் செருப்பு ஒண்ணு போட்டுக்கிட்டு போய் கல்லூரியில் போய் அங்க வச்சிருகிற ஷூவை எடுத்துப் போட்டுக்கணும்.

ஒரு மழை பெஞ்சா வீடு பூரா வித விதமான பூச்சிகள் வந்திரும். ஒரு பூச்சி .. நம்ம மேல உக்காந்திருக்கேன்னு கையால தட்டி விட்டா ... அம்மாடி .. அப்படி ஒரு நாத்தம் கையில இருக்கும். கழுவினாலும் உடனே போகாது. முதல் நாள் வீட்டுக்கு வந்து சாமான்களை அடுக்கும்போது இந்தப் பூச்சிகளின் பயத்தில் கதவை சாத்தி வைத்து விட்டு அடுக்கிக்கொண்டிருந்தோம். கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க மெல்ல வெளியே வந்தேன். நம்ம த்ரில்லர் கதை எழுதுறவங்க எல்லோரும் சொல்வாங்களே .. கும் இருட்டு அப்டின்னு. அது மாதிரி வெளியே இருந்தது. அடடா மணி எட்டு ஆயிருக்கும்னு நினச்சி, டைம் பார்த்தா அப்போதான் ஆறு மணி ஆகியிருந்தது. அட ஆறு மணிக்கே இப்படி உலகம் இருட்டிடுமான்னு இங்க வந்த பிறகு தான் தெரிஞ்சுது. நாலு மழைத்துளி விழுந்தால் போதும் ஆரம்பிச்சுடும் இசைக் கச்சேரி. எங்கிருந்து தான் இத்தனை தவக்காளைகளோ ... பெரும் சங்கீதப் போட்டி நடக்க ஆரம்பிச்சிடும்.

இப்படி ‘இயற்கையோடு இயைந்த வாழ்க்கை’ வாழ்ந்து கொண்டிருந்தோமா ... வீட்டுக்கு சுற்றுச் சுவர் கிடையாது. எல்லா இயற்கைகளும், அதாவது பாம்பு, பல்லின்னு நிறைய வீட்டுக்குப் பக்கம் வரும் ... போகும். நண்பர்களிடமிருந்து எதற்கும் பாதுகாப்பிற்காக ஒரு நாய் வளர்த்துக் கொள் என்ற ஞான பாடம் வந்தது. வீட்டில் நால்வருக்கும் நாயென்றால் பிடிக்காது. அதையும் அப்படி கொஞ்சுவார்களே அதைப் பார்த்தால் சுத்தமாக ஆகாது. அதுவும் என் பெண்கள் உற்வினர்கள் வீட்டுக்குப் போகும் போது அவர்கள் வீட்டு நாயைப் பார்த்து பக்கத்தில் வந்தால் நாற்காலிக்கு மேல் நின்று கொள்ளும் ஆட்கள். இருந்தாலும் ஒரு நாய் இருக்கட்டுமே என்று நினைத்து நண்பர் ஒருவரிடம் கேட்டேன். நாலைந்து நாளில் ஒரு டாபர்மேன் க்ராஸ் இருக்கு .. வேணுமான்னு கேட்டார். நானும் போய் பார்த்தேன். காதெல்லாம் தொங்கிக் கொண்டு டாபர் லுக்கில் ஒரு நாய் இருந்தது. சரின்னு எடுத்து வந்தேன். நாய் நல்ல கருப்பு. நீளமாகவும் இல்லாம கொஞ்சூண்டு முடி. கருப்பு வண்டு அப்டின்னு கூப்பிட்டுக்கிட்டு இருந்தோம். பின்னால் குட்டையா ஒரு பெயர் வேணுமேன்னு யோசிச்சி ஒரு பெயரை வச்சோம். Minky அப்டின்னு பெயர் வச்சோம். Mink coat கோட் மாதிரி எங்க ஆளு வழு வழுன்னு இருக்காம்! டாபர் மேன் அப்டின்னா வாலை குட்டையா வெட்டியாகணும்னு அமெரிக்காகாரன் சொல்லிட்டானாம். ரவி நாயைத் தூக்கிக்க வண்டியில போய் வாலையும் வெட்டிட்டி வந்திட்டோம். வாலை வெட்டியதும் அது ரேன்க் ரொம்ப கூடிப் போச்சு. பாக்குறவங்க எல்லாம் வாலை வெட்டிட்டா ரொம்ப கோவமா இருக்குமாம்; அதான் வெட்டியிருக்காங்க; தள்ளிப் போங்க அப்டின்னு சொல்ற அளவுக்கு எல்லாரும் பயப்பட ஆரம்பிச்சாங்க.

அதென்னமோ தெரியலை. நம்ம ஆளு ‘பைரவ குலமே’ இல்லை போலும். வளர்க்கிறவங்க கிட்ட எல்லா நாயும் எப்ப்டி அந்நியோன்யமா இருக்கும். இது சுத்தமா அப்படியில்லை. தெரியாம கால் கீல் அதுமேல பட்டிருச்சின்னு வச்சுக்குவோம். ஒரு சவுண்டு கொடுக்கும். அரட்டியா போய்டும். கழுத்தில செயினை மாட்டணும்னா அதோடு ஏதாவது பேசிக்கிட்டே ரொம்ப ஜாக்ரதையா போடணும். எங்க எல்லாத்திட்ட இருந்தும் ரொம்ப் அந்நியமா இருக்கும். யாராவது வீட்டுக்கு வந்து முன் கதவைத் திறந்தா தல உள்ளே வந்தவங்களை ஒரு கை பார்க்கும்னு நினச்சீங்கன்னா ரொம்ப தப்பு. முதல் வேலையா சுதந்திரக் காத்தை சுவாசிக்கணும்னு வெளியே போய்டும். கூப்பிட்டாலும் ஓடிடும். பக்கத்தில போனா கொஞ்சம் உருமும். பயத்தில வந்திருவோம். முதலில் வெளியே போனா திரும்பி வர அரை நாள் ஆகும். வயசு ஆக ஆக ரொம்ப சீக்கிரமே வீட்டுக்குள்ள வந்திரும். அதிலும் ஒரு விசேஷம் என்னன்னா .. இப்போ கடைசி சில மாதங்களில் வெளியே போனா திரும்பி எங்க வீட்டுக்குள்ள வர்ரதுக்குப் பதிலா பக்கத்து வீடு ரெண்டு வீடு இருக்கு. அங்க போய் அவங்க வீட்டுக் கதவை திறந்து வச்சா சீக்கிரம் அவங்க வீட்டுக்குப் போயிரும். என்னா நன்றி விசுவாசம்!

நாய்ன்னா பிடிக்காதுன்னு சொன்ன தங்க்ஸிற்கு நாள் ஆக ஆக ரொம்ப பாசமா போச்சு. இத்தனை வருசத்தில பிரிட்ஜ் ப்ரீசர்ல கட்டாயம் கோழிச் சில்லறை இருக்கணும் - வாயில்லாத ஜீவன் வயித்துக்கு! அது இல்லைன்னா தங்க்ஸ் என்ன மேஞ்சிருவாங்க. கொஞ்சம் கூட மிங்கி மேல பாசமே இல்லாம போய்ட்டேனாம். அதனால் தான் அதையெல்லாம் ஒழுங்கா வாங்கி வைக்கிறதில்லைன்னு ஒரு பெரிய ரிப்போர்ட் வரும். பயந்து போய் தொடர்ந்து அதையெல்லாம் வாங்கிக் குடுத்திர்ரது தான். கோழிக்கடைக்கு எங்களுக்காகப் போனதை விட மிங்கிக்காக போனது தான் அதிகம். அட .. கோழிக்கடைக்கார பாண்டியே, ‘என்ன சார்.. மிங்கி எப்படி இருக்கு?’ன்னு கேக்கிற அளவுக்கு ஆகிப் போச்சு.

இதில இன்னொரு பெரிய விஷயம் என்னன்னா தங்க்ஸ் தவிர வீட்ல நாங்க மூணு பேரும் தலைட்ட கடி வாங்கி ஊசியெல்லாம் போட்டுக்கிட்டோம். வெளிய யாரையும் தொட்டது கூட கிடையாது; ஆனா எங்கள் கடிச்சாச்சி ... தங்க்ஸ் மட்டும் தப்பிச்சிட்டாங்க. அதுனால் பாசம் ரொம்ப ஓவர். ஆனால் குரைக்கிற காலத்தில் அது சவுண்டுக்கு எல்லோரும் நல்லா பயப்படுவாங்க. அது ஒரு பெரிய நன்மை. அதே மாதிரி எங்க ஏரியாவின் முன்னாள் குடிமக்களான பாம்பு மவராசாக்கள் வரும் போது வேறு மாதிரி குலைக்கும். தங்க்ஸ் கண்டு பிடிச்சிடுவாங்க. மூணு தடவை நல்ல பாம்போடு சாருக்கு போட்டி நடந்திருக்கு. அதெப்படி அதுகளுக்குத் தெரியுமோ .. வேறு சில பாம்புகளை கவ்வி மொட்டை மெத்தைக்குத் தூக்கிட்டு போய்டும். ஆனால் நல்ல பாம்புன்னா தூரத்தில இருந்து குரைக்கும். அதைப் போகவும் விடாது. ரெண்டும் தூரத்தில் நின்னு மாத்தி மாத்தி ஆட்டம் காமிக்கும்.

நாளாச்சு. வழக்கமா பைரவர்களின் ஆயுசு 12 வருஷம் தானாம். அதன் ஒரு வயசு நம்ம எட்டு வயசுக்கு ஒத்திருக்கும் அப்டின்னாங்க. ஆனால் நம்ம ஆளு 15 ஆண்டுகள். ரெண்டு மூணு வருஷத்திற்கு முந்தியே கண் பார்வை போச்சு. கண்ணைப் பார்த்தால் கறுப்பு கோலி குண்டு மாதிரி இருக்கும். cataract ஆகிப் போச்சு. வழக்கமா எது சொன்னாலும் கேட்காது. ஆனால் walk போகலாமான்னு சொன்னா உடனே தல கேட் பக்கம் வந்து நிற்கும். நம்மளை ரொம்ப ஆர்வத்தோடு சுத்தும். எல்லாம் ‘சுதந்திர வேட்கை’ தான் ! நான் நடையை விட்டு விளையாடிட்டு வந்தாலும் கொஞ்ச தூரமாவது கூட்டிட்டு போகணும். நான் வர்ர நேரம் சரியா வந்து கேட் பக்கத்தில நிக்கும்.

ஆனால் இப்போ ஒரு மாசமா அதால நடக்கவே முடியலை. no walk! நடக்கவே ரொம்ப கஷ்டப்பட்டது. அதிலும் முன்னறைக்கு வந்து வழியை மறிச்சி படித்துக்கும். அதைத் தாண்டவும் பயந்து போய் தாண்டுவோம். கடைசி பத்து நாளா ரொம்ப சிரமப்பட்டது. பின்னால ஏதோ ஒரு கட்டி. அப்பவே euthanasia செஞ்சிருவோம்னு சொன்னேன். தங்க்ஸிற்கு மனசு கேக்கலை. கட்டி உடைந்து ... ஒரே சோகம். நடக்கவும் முடியலை. கடைசி இரு நாளா மிகவும் பாவமாக இருந்தது. ஒரே அழுகை. ஒரு தடவை அழுகையில் ‘ம்மா’ அப்டின்னு ஒரு சவுண்டு வந்தது. தங்க்ஸிற்குத் தாங்க முடியவில்லை. vet doctors பலரை முயற்சித்துப் பார்த்து விட்டேன். எல்லோரும் தாங்கள் அதைச் செய்வதில்லை என்றோ மருந்து இல்லை என்றோ சொல்லி விட்டார்கள். இரண்டு நாளாக முயன்று ஒருவர் வந்தார். என்னைத் தலையைப் பிடிச்சுக்க சொல்லி ஒரு பழைய காலத்து பெரிய ப்ளாஸ்டிக் syringe வைத்து கருணைக் கொலை செய்தார். முதல் syringe போடும்போது கொஞ்சம் உடல் ஆடியது. அப்போது அதன் cataract கண் வழியே என்னைப் பாவமாகப் பார்த்தது போலிருந்தது.



முடிந்தது......



வீட்டின் பின்னால் தென்னைக்கு அடியில் வச்சிருங்க என்றார்கள். அதையே செய்தோம். படுத்திருந்த இடத்தைச் சுத்தம் செய்து, உடனே குளிப்போம் என்றேன். தங்க்ஸ் மெல்ல குளிப்போம் என்றார்கள். ‘தீட்டு .. உடனே குளிக்கணும்’ என்றேன். நான் தீட்டு சொன்னதும் அவர்களுக்குஆச்சரியம். ’என்ன புதுசா இருக்கு’ அப்டின்னாங்க. இந்த மாதிரி நோய்வாய்பட்டு இறந்தவங்களுக்காகத்தான் தீட்டுன்னு ஒண்ணு வச்சிருக்காங்க. நீங்க அதை சாஸ்திரமா பாக்றீங்க. இந்த மாதிரி சாவுக்குப் பிறகு இடம், ஆள் எல்லாம் சுத்தமாகணும்னு’ ஒரு லெக்சர் கொடுத்துட்டு குளிச்சேன்.

நாலு பேத்துக்கு உடனே நியூஸ் போயிரும்ல... நான் குளிச்சிட்டு வர்ரதுக்குள்ள சொந்தகாரங்க - தங்க்ஸ் அண்ணன் தான் - ஒருத்தங்க இரண்டு தடவை நாய் வளர்த்து கருணைக் கொலை செய்து, பெரும் அழுகையோடு தங்கள் தோட்டத்தில் புதைத்தவர்கள். அவர்களிடமிருந்து தங்க்ஸிற்கு புதைத்த பிறகு ஒரு தம்ளர் பால் ஊத்திடுங்க என்ற கட்டளை வந்தது. அதற்குள் இன்னொரு இடத்திலிருந்தும் இதே அட்வைஸ். தங்க்ஸ் என்னிடம் சொன்னாங்க. ’அட போமா’ன்னு சொல்லி, இதையெல்லாம் எதுக்கு அப்டின்னு போய்ட்டேன். சில மணிநேரம் கழித்த பின் தங்க்ஸ் மெல்ல சொன்னார்கள். ‘பால் ஊத்தணும் போல் இருந்தது. நானே போய் ஊத்திட்டேன். (அவ்வளவு எளிதாக் வீட்டின் பின் பக்கமெல்லாம் போகாத ஆள்!) அதோடு, ’மாதா எண்ணெய்’ இருந்தது, அதையும் ஊத்திட்டு வந்திட்டேன் என்றார்கள். ம் .. ம் .. வளர்த்த பாசம் ..! :(

இதையெல்லாம் எழுதப் போறேன்னு சொன்னேன்.


‘இதையெல்லாமா ப்ளாக்ல எழுதுவாங்க ...?’ என்றார்கள்.





*

Wednesday, March 13, 2013

644. பரதேசி - A GOOD TEASER



*

பாலான்னா பாலா தான்!


*




*




Anurag Kashyap’s Phantom Films will be releasing Paradesi nationally with subtitles.


*





*


*




*

642. காணாமல் போன நண்பர்கள் - 14 - டாக்டர் கேசவன்






*
அதீதம் இணைய இதழில் வெளிவந்த கட்டுரையின் மறுபதிப்பு ....


1961 - 64-ல் ...........

 B.Sc. முடித்து விட்டு முதுகலை போக நினைத்திருந்தேன். அந்த சமயத்தில் B.Sc. முடித்தவர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் சில இடங்கள் என்று அறிவிப்பு ஒன்று வந்தது. அட .. இப்படி ஒரு சான்ஸா என்று நினைத்து நானும் எனது B.Sc. வகுப்பு நண்பர்கள் இருவரும் நேர்முகத் தேர்வுக்கெல்லாம் போனோம். சென்னைக்கு மூவரும் ஒன்றாகப் போனோம். அந்த இரு நண்பர்கள் - மாணிக்க வாசகம். மதுரையில் இவரது வீடு என் வீட்டுக்குப் பக்கத்தில். ஆகவே சைக்கிளில் தினமும் கல்லூரிக்கு ஒன்றாகப் போவோம். இவர் இளம் வயதிலேயே காலமாகி விட்ட செய்தி கிடைத்தது. இன்னொருவன் I. கேசவன். ஜாலியான பயல். வகுப்பில் இவனுக்கு dissection சரியாக வராது. இருவரும் செய்முறை வகுப்புகளில் அடுத்தடுத்த வரிசையில் இருப்போம். அந்தக் காலத்தில் அடிக்கடி தவளையை அறுத்து என்னென்னமோ பண்ணுவோம். அநேகமாக தலையில் உள்ள நரம்புகளை - cranial nerves - எடுத்து தொடர்புகளை அழகு படுத்தணும். கேசவன் திடீரென்று என்னைப் பெயர் சொல்லி அழைப்பான். அப்படி அழைத்து விட்டால் அவன் எடுக்க வேண்டிய நரம்பை அறுத்து விட்டான் என்று அர்த்தம்.

மூன்றாமாண்டு படிக்கும் போது நானும் அவனும் ஒட்டிக் கொண்டோம். முக்கிய காரணம் ‘தம்’. இருவரும் வகுப்புகளுக்கு நடுவில், மாலையில் கல்லூரிக்குப் பக்கத்தில் உள்ள ஒரு டீக்கடையில் ஒன்றாகச் செல்வோம். நான் அதுவரை திருட்டுத் தம் மட்டும் அடித்தவன் மூன்றாமாண்டில் ‘ஓப்பன்’ டைப்பாகி விட்டேன். இருவரும் அங்கே போவோமா .. அங்கே எனக்கு ஒரு புதுப் பழக்கம் சொல்லிக் கொடுத்தான். டீ வாங்கணும் ... மெல்ல உறிஞ்சிக் குடிக்கணும் .. பாதி டீ குடித்ததும் ஒரு சிகரெட் பற்ற வைக்கணும் .. அடுத்த இரண்டு மூன்று உறிஞ்சில் டீ முடிஞ்சிடணும் .. பின் இன்னும் ரசித்து சிகரெட் இழுக்கணும். ஆஹா ... நல்லா இருந்தது. ஆனால் பிரச்சனை என்னடான்னா ... இதுவரை அப்பப்போ திருட்டு தம் அடிச்ச நான் இப்போ டீ + சிகரெட் இரண்டுக்கும் - ஒரு காம்போ எஃபெக்ட் - சேர்ந்து அடிமையாக ஆய்ட்டேன். பின்னாளில், அட மாபாவி கேசவா இப்படி பண்ணிட்டியேடா ... அப்டின்னு அடிக்கடி நினச்சிக்குவேன்.

 மருத்துவக் கல்லூரி நேர்முகத் தேர்வுக்குப் போனோம். அங்கு எங்கள் ஆசிரியர் ஒருவரும் எங்களோடு நேர்முகத் தேர்வுக்கு வந்தார். அவர் B.Sc. முடித்து எங்களுக்கு தாவரயியலில் ஓராண்டு ஆசிரியராக - demonstrator - இருந்தார். மொத்த மதிப்பெண்கள் எல்லோருக்கும் ஒன்றாக இருந்தது - B Grade. ஆனால் தமிழ் ஆங்கில மதிப்பெண்களும் சேர்த்துப் பார்ப்பதாகச் சொன்னார்கள். அப்படியென்றால் எங்கள் நால்வரில் எனக்கு மதிப்பெண்கள் கொஞ்சம் பெட்டர்.

அதிக நம்பிக்கையில்லாமல் நேர்முகத் தேர்வுக்குப் போனோம். கேசவனுக்கு நேர்முகத் தேர்வை விட நாங்கள் அதிகம் அப்போது கேள்விப்பட்டிருந்த புகாரி ஹோட்டலில் சாப்பிட வேண்டும் என்று குறியாக இருந்தான். நேர்முகத் தேர்வு நடக்கும் இடத்திற்கு அதற்கு முந்திய நாள் போய்விட்டு அதன் பின் புகாரி போக முடிவு செய்திருந்தோம். புகாரி ஹோட்டலைத் தேடி போனோம். சர்வர் மெனு கார்டை வந்து கொடுத்தார். இரு குருவிகள் BH என்ற எழுத்துகளைத் தூக்கி செல்வது போல் அட்டையில் ஒரு படம். நீளமான அந்த அட்டையைக் கொடுத்தார்.குருவிப்படம் அது இதெல்லாம் பார்த்தவுடன் கேசவனுக்குக் குழப்பம். இவர் எதற்கு எனக்கு ஏதோ அழைப்பிதழ் எல்லாம் கொடுக்கிறார் என்று முழித்தான். அவன் குழப்பம் எனக்குப் புரிந்தது. சர்வரை அனுப்பி விட்டு கேசவனிடம் ‘டேய் .. இது மெனு’டா’ என்றேன். அதுவும் அவனுக்குப் புரிபடவில்லை. திறந்து காண்பித்தேன். பட்டியல் என்று புரிந்தது. ‘ஓ .. இதுவா?’ என்று சொல்லி உள்ளே பார்த்தோம். ஒன்றும் புரியற மொழியில் இல்லை! ஏதோ சொல்லி எதையோ சாப்பிட்டு விட்டு வெளியே வந்தோம்.
வெளியே வந்ததும் கேசவன், ‘டேய் .. ஏதாவது ஒரு புரோட்டா கடைக்குப் போய் சாப்பிடுவோமா ... நல்லா பசிக்குது’ என்றான்.

நான் நேர்முகத் தேர்வுக்கு இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பே போய்விட்டேன். என் அப்பா நேர்முகத் தேர்வு அன்று சென்னை வந்தார். நேர்முகத் தேர்வு முடிந்த அன்று மாலை ஒரு உறவினர்  சுகாதார அமைச்சரின் (அப்போது ஜோதி வெங்கடாசலம் அமைச்சர் என்று நினைக்கிறேன்.) செயலர் எனக்குத் தெரியும். ஆனால் இப்போ ரொம்ப லேட் என்றார். சரி .. ரிசல்ட் பாத்து சொல்லுங்க என்றோம். அடுத்த நாள் கல்லூரிகளில் பட்டியல் போட்டிருவாங்க. ஆனால் அதற்கு முந்திய நாள் பட்டியலில் என் பெயர் இருப்பதாக அவர் சொன்னார். ஆஹா .. மகனுக்கு மருத்துவ சீட் கிடச்சிருச்சி அப்டின்னு என்ற சந்தோஷத்தோடு அப்பா அன்றே மதுரைக்குப் பயணமானார். நான் போய் எல்லாம் தயார் பண்றேன்’டா அப்டின்னு சந்தோஷமா சொல்லிட்டு அப்பா மதுரைக்குப் புறப்பட்டாச்சு.

நான் அடுத்த நாள் நண்பர்களோடு ரிசல்ட் பார்க்கப் போனேன். நான் நமக்குத்தான் சீட் கிடைச்சாச்சேன்னு போய் பார்த்தேன். லிஸ்ட் இருந்துச்சி... ஆனா அதில் என் பெயரைத்தான் காணோம். தங்கியிருந்த உறவினர் வீட்டிலிருந்து சீட் கிடச்சுதுன்னு சொன்னவருக்குப் பேசினோம். அவர் தம்பி பெயரை நான் முந்திய நாள் மாலை பார்த்தேன். ஆனால் ராத்திரி அமைச்சர் கடைசி நிமிட மாற்றல் சில செய்தாராம். அதில் எப்படியோ இப்படி ஆகிப் போச்சு என்றார். அதற்கு ஒரு கதையும் சொன்னார்.  சோகமாக மதுரை வந்தோம்.

 கேசவன் மிகவும் எளிதாக இந்த நேர்முகத் தேர்வை எடுத்துக் கொண்டது போல் தெரிந்தது. ஆனால் அடுத்த வருஷம் முதலிலேயே சில ஏற்பாடுகளைச் செய்தான். அந்த வருஷம் அவனுக்கு மருத்துவ சீட் கிடச்சிது. மதுரையில் சேர்ந்தான். அதற்குள் நான் முதுகலை முதலாண்டு முடித்திருந்தேன். சில தடவை மருத்துவக் கல்லூரிக்குச் சென்று கேசவனைப் பார்த்து விட்டு வந்தேன். ‘நீ மெடிக்கல் முடிப்பதற்குள் நான் முதுகலை முடித்து Ph.D. முடிச்சிர்ரேண்டா. ரெண்டு பேரும் ஒண்ணா டாக்டர் பட்டம் வாங்கிருவோம்’ என்றேன். ஆனால் அது வெறும் வார்த்தையாகவே போச்சு. எங்களுக்குள் தொடர்பும் அதன் பிறகு விட்டுப் போச்சு ...


*

Friday, March 01, 2013

641. பாலச்சந்திரன் பிரபாகரின் கொலைச் செய்தி




*  
 சமீபத்தில் இலங்கை சென்ற போது dbsjeyaraj என்ற சிறந்த பத்திரிகையாளரைப் பற்றிக் கேள்விப்பட்டேன். இப்போது எனது நண்பர் அனுப்பிய மயிலிலும் அதே பத்திரிகையாளரின் செய்தி ஒன்று வந்துள்ளது. முழுப்பதிவையும் இங்கு வாசித்துக் கொள்ளுங்கள். 

தமிழில் சில தந்துள்ளேன்: 



Was LTTE Leader Prabhakaran’s son Balachandran Killed by Maj-Gen Kamal Gunaratne on the Orders of Defence Secretary Gotabhaya Rajapaksa who had been Advised by Ex-Tiger “Col”Karuna to do so? 


 முன்பு புலிப்படையில் இருந்த கர்னல் கருணாவின் அறிவுரையின் மேல், பாதுகாப்புச் செயலர் கோத்பயா ராஜபக்சே கொடுத்த உத்தரவின் பேரில், மேஜர் ஜெனரல் கமல் குணரத்னே பிரபாகரனின் மகன் பாலசந்திரனைக் கொன்றாரா?









குணரத்னே பாலச்சந்திரனை நேர்முக விசாரணை செய்துள்ளார்.


விசாரணையில் பாலச்சந்திரன் தன் தந்தை முந்திய நாள் இரவில் புலிகளுக்கும் இலங்கை ராணுவத்திற்குமான போரில் சிக்கிக்
கொண்டார்.

பாலச்சந்திரன் தானும் தன் தந்தையும் ஒரு படகில் துப்பாக்கிச் சூட்டில் இருந்து தப்பிக்க முயற்சித்தோம். அப்போது இன்னொரு படகில் தன் தாயும் சகோதரியும் இருந்ததாகக் கூறியுள்ளான். அப்போது என் அப்பா சுடப்பட்டார். அம்மாவும் சகோதரியும் என்ன ஆனார்கள் என்பது எனக்குத் தெரியாது என்று கூறியுள்ளான்.

கருணா அம்மான் பாதுகாப்புச் செயலரிடம் பாலச்சந்திரன் கொல்லப்பட வேண்டும்; ஏனெனில், அவன் தப்பித்தால் அவனே அடுத்த புலிகளின் தலைவனாகலாம். சிறு வயது காரணமாக நீதி மன்றங்கள் மூலம் அவன் விடுவிக்கவும் படலாம்.