Monday, March 20, 2017

931. பூங்கா காப்பு போராட்டம்





அந்தக் காலத்தில ....

ஏறத்தாழ 17 - 19 ஆண்டுகளுக்கு முன், நான் எங்களது பகுதியில் புதிதாகக் குடியேறியதும் ஒரு சங்கம் ஆரம்பித்தோம். 20-25 வீடுகள் மட்டும் இருந்தன. ஒரே குடும்பம் போல் இருந்தது. 
                                            

அப்போது எப்படியோ  எங்கள் பழைய போன் விரைவாக எங்கள் வீட்டுக்கு வந்து விட்டது. அத்தனை வீட்டுக்கும் ஒரே போன் எங்களுடைய போன் தான். வீடுகளும் தூர தூரத்தில் இருக்கும். மழைக்காலங்களில் எங்கும் சகதி. போன் வந்தால் சில நிமிட வித்தியாசத்தில் மறுபடியும் போன் செய்யச் சொல்லி விட்டு, போன் வந்தவர்கள் வீட்டிற்குப் போய் செய்தி சொல்லி விட்டு வருவது வழக்கம். 





அதில் ஒரு வீடு மிகவும் தொலைவில் இருக்கும். எங்கள் இரு வீட்டுக்கும் நடுவில் நெல் வயல். மழையில் இருட்டில் சென்று கூப்பிட முடியாது. அப்போது எங்கள் மாடியிலிருந்து அவர் வீட்டுப் பிள்ளையின் பெயர் சொல்லிக் கூப்பிடுவோம். அந்த போன்கள் சிம்லாவில் இருந்து வரும்.   அவர்கள் வீட்டுப் பிள்ளை - பட்டாளத்துப் பிள்ளை - கூப்பிடுவார். அதுவும்  இரவில் தான் வரும். அதுவும் 10 மணிக்கு மேல் தான் அழைப்பு வரும். 








பட்டாளத்துப் பையன். புதிதாகத் திருமணமாகி மனைவியோடு அங்கிருந்து பேசுவார். அவருக்கு உதவுவதில் ஒரு மகிழ்ச்சி எங்களுக்கு. ஆனாலும் போன்
 வந்ததும் அவர்களைக் கூப்பிடக் கஷ்டமாக இருந்தது. அதனால் ஒரு ஹை-டெக் ஒன்றிற்கு மாறினோம். ஒரு லேசர் லைட் அப்போது கீ-செய்னாக வந்தது. அது ஒன்று வாங்கி வந்தேன். எங்கள் வீட்டிலிருந்து அதை அடித்தால் அவர்கள் வீட்டு ஜன்னல் வழியாக அவர்கள் வீட்டு தொலைக்காட்சி ஸ்க்ரீனில் அடிக்கும்.  கூப்பிட மிக வசதியாக இருந்தது!




மரங்கள் நட்டோம். வீட்டுக்கு வீடு மரங்களைத் தத்து எடுத்தார்கள். அவ்வப்போது கூட்டம் போடுவோம். வழக்கமான பொங்கல் நாளன்று கோலப்போட்டிகள், சுதந்திர தின, குடியரசு தின விழாக்கள் போன்றவைகள் 
உறவுகளை வளர்த்தன. இதையெல்லாம் விட pot luck dinner ஒன்று மிகவும் எங்களை நெருங்கியிருக்க வைத்தது. அவரவர் வீடுகளில் உணவுகள் சமைத்து யாராவது ஒருவர் வீட்டு மாடியில் இரவு விருந்து நடக்கும். தாய்க்குலத்தை இது நெருங்கி வரச் செய்தது. சிறு பிள்ளைகளுக்குப் பாடல் போட்டிகள் என்று பல நிகழ்வுகள் எங்களின் உறவுகளை வளர்த்தன. 



 








அப்படியெல்லாம் இருந்த குடியிருப்புப் பகுதி நன்கு வளர்ந்தது; பெரியதானது. இப்போது முன்பு போல் கூட்டங்களோ, விருந்துகளோ நடப்பது அரிதாகி விட்டது. இதற்கு முடிவு கட்டவே வந்தது எங்கள் பூங்காப் பிரச்சனை. விலகியிருந்த எங்களை இப்போது ஒன்றாக்கி விட்டிருக்கிறது.





















எங்கள் பகுதியில் எங்களுக்கே உரித்தான பூங்கா பகுதி ...  ஒன்றுக்கு இரண்டு தீர்ப்புகளும் உயர்நீதி மன்றத்தில் இருந்து  வந்து விட்டன. ஆயினும் இன்னும் சிலர் அப்பகுதி எங்களுடையது என்று மாநகராட்சி ஆரம்பித்த வேலைகளையும் நிறுத்த முயன்று கொண்டிருக்கின்றனர்.








எல்லோருக்கும் எல்லாமும் தெரியவேண்டுமென்றால் ஒரு கூட்டம் தேவையென 19.3.17 அன்று ஒரு கூட்டம் கூட்டினோம். குடியிருப்புப் பகுதி முழுவதும் பங்கெடுத்துக் கொண்டார்கள். திரண்ட கூட்டம்; பெரும் ஆர்வம்.





பழைய கால நினைவுகள் வந்தன. எல்லாவற்றையும் பற்றிப் பேசினோம்.






புதிதாக என்ன செய்வது என்பது பற்றியும் ஆர்வத்தோடு பேசினோம்.






 







                    

போராட்டங்கள் தொடரும் ... வெற்றியை எட்டும் வரை என்று ஒருமித்து முடிவு செய்தோம்.

யார் கண்டது ... இன்று எதிர்க்கும் ஆட்கள் இன்னும் சில நாட்களில் ஓட்டு போடணும்னு நம்ம முன்னால் வந்து நிற்கலாம். யார் கண்டது!!


**







Thursday, March 09, 2017

930. ஆவியில் வந்த ஆசை … 1




*





*




*






Wednesday, March 01, 2017

929. ‘மதங்களும் சில விவாதங்களும்’ - மதங்களின் ஆதி அந்தங்களை அலசும் ஆவணம் - ஆனந்த விகடனில் வந்த விமர்சனம்




*


ஆனந்த விகடனில் வந்த விமர்சனம் 


மதங்களும் சில விவாதங்களும்’ 

மதங்களின் ஆதி அந்தங்களை 
அலசும் ஆவணம் 



மனிதனின் முதல் கண்டுபிடிப்பு கடவுள்தான். ஆதிமனிதன், இடிக்கும், நெருப்புக்கும் அஞ்சி அவற்றை வணங்க ஆரம்பித்து அது வளர்ச்சிபெற்று இன்று இத்தனை மதங்களாகப் பரிணமித்து நிற்கிறது. ஆதிமனிதனின் உள்ளத்தில் பதிந்த ‘தொல் உணர்வு’ தனக்கு மேலே இருக்கும் ஒன்றைக் குறித்த பயம். அது நம்முடைய ஒவ்வொரு செல்லிலும் பதிந்திருக்கிறது. எனவேதான் அதைக் கடப்பதற்கு மதங்களின் ஆதி அந்தங்களை அலசும் ஆவணம் இது. 




 மதங்களும் சில விவாதங்களும் இளமையில் நாத்திகமும் முதுமையில் ஆத்திகமும் பொது இயல்பு. அது மரணபயம் சார்ந்தது என்பதை அறிவோம். அந்தவகையில் தருமி தனது நாற்பதுகளுக்கு மேல் தீவிர நாத்திகரானது என்னை எப்போதும் வியப்பில் ஆழ்த்தும் ஒரு விஷயம். அறிவியல் கற்றதனால், அறிவியல் முறையில் சிந்திப்பது ஒரு காரணம் என்று எப்படிச் சொல்வது? எத்தனையோ அறிவியல் அறிஞர்களே ஆத்திகர்களாக இருந்திருக்கிறார்களே! ஆக, அவரே கூறுவதுபோல் இதுவொரு மிகக் கடினமான பரிணாம வளர்ச்சிதான். 

 என் சிறுவயதில் நடந்த நிகழ்வொன்று. 80-களின் பிற்பகுதி, எனக்குப் பன்னிரண்டு பதிமூன்று வயதிருக்கலாம். வீதிகளில் திராவிடக் கொள்கைப் பிரசாரம் செய்வார்கள். அப்போது ஒரு நோட்டீஸ் கொடுக்கப்படும். அதி்ல், திராவிடக் கட்சியின் கொள்கைகளை விளக்கி மேடையில் பேசுவார்கள் மற்றும் நாள் குறித்த விவரம் இருக்கும். அதில் ஒரு குறிப்பிட்ட விஷயம் என் கவனத்தை எப்போதும் ஈர்த்தது, ‘கடவுள் இல்லையென்பதை நிரூபிக்கும் விதமாக கொதிக்கும் எண்ணெய்ச் சட்டியில் ஒருவர் கைவிடுவார்’ என்றிருக்கும். நானும் சில நண்பர்களோடு ஓரிருமுறை அந்நிகழ்வுக்குச் சென்றிருக்கிறேன். 

 ஒருபக்கம் பேச்சாளர்கள் பேசிக்கொண்டிருக்க மறுபக்கம் பெரியதொரு கொப்பரையில் எண்ணெய் சூடாகிக் கொண்டிருக்கும். பெரும்பாலும் இந்நிகழ்ச்சி மாலைக்கு மேல் ஆரம்பித்து இரவு நேரத்தில் நடக்கும் என்பதால் எங்களால் முழுமையாகப் பார்க்க முடியாது, நான் பார்த்த வரையில் யாரும் அந்தக் கொப்பரைக்குள் கைவிட்டதே இல்லை. நாங்கள் அதற்காகக் காத்திருக்கையில் எங்களை அழைக்க வீட்டிலிருந்து யாரேனும் வந்துவிடுவார்கள். ஒருமுறை என் நண்பன் அப்துல் ரசாக் என்பவனுடன் அங்கே வேடிக்கை பார்க்கச் சென்றிருந்தேன். சிறிதுநேரத்தில் நண்பனின் தந்தை எங்களை அழைக்க வந்தார். எங்கள் இருவரின் வீடுகளுக்கும் மிக அருகில், தெருமுக்கில் மேடை போட்டு அந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. எனவே யாரேனும் அந்தச்சட்டிக்குள் கைவிடும்வரை பொறுத்திருக்கச் சொல்லி அவரைக் கெஞ்சினோம். அவரோ ஆத்திகர். நாங்கள் அங்கே இருந்ததே அவருக்குக் கடுப்பு, “ஏண்டா கடவுள் எண்ணச்சட்டிக்குள்ள இருக்காருன்னு எங்கடா சொல்லியிருக்கு? உள்ள கையை விட்டுட்டு இல்லேன்னு சொல்றதுக்கு. கிளம்புங்கடா.” என்று அதட்டினார். அப்போது எரிச்சலோடும் துக்கத்தோடும் அங்கிருந்து அகன்றாலும் பின்நாட்களில் அந்த வார்த்தை என்னை யோசிக்க வைத்திருக்கிறது. ‘ஆமாம்! கொதிக்கிற எண்ணெய்க்குள் கைவிட்டுவிட்டு கடவுள் இல்லை என்று எப்படி நிரூபிக்க முடியும்?’ என்று நினைத்துச் சிரித்துக் கொள்வேன். திராவிடக் கொள்கைகளை விளக்கும் கூட்டங்கள் அதன்பிறகு என்னை ஈர்க்கவில்லை. 

 ஆனால், பதின்ம வயதைக் கடந்தபின் வாசிப்பின் காரணமாக ஆத்திகன் என்ற நிலையிலிருந்து ‘இரண்டுங்கெட்டான்’ (Agnostic) நிலைக்கு வந்திருந்தேன். அப்போதும் திராவிடக்கட்சிகள் இந்து மதத்தை மட்டுமே கேள்விக்குள்ளாக்குவதும் இஸ்லாம் மற்றும் கிறித்தவ மதம் குறித்து எதுவும் பேசாமல் இருப்பதுவும் (இப்போதும் அப்படித்தானே) அவர்களுடைய சிந்தனை மற்றும் நேர்மை குறித்த கேள்விகளை எழுப்பியது. ‘நான் சார்ந்த மதம் குறித்து முதலில் கேள்வி எழுப்புகிறேன். இதுதான் பெரும்பான்மை மதம். இதில்தான் சாதி இருக்கிறது,’ (எல்லா மதங்களிலும் சாதி/இனம் இருக்கிறது) என்று பல்வேறு விளக்கங்களை அவர்களின் நிலைப்பாட்டுக்குக் காரணமாகக் கூறினாலும் அவ்விளக்கங்கள் உண்மையில் எனக்குப் போதுமானதாக இல்லை. உண்மைக்காரணம் அதில்லை என்று தோன்றியது. பொதுவாக இந்து மதத்தில் நாத்திகம் பேசினால் பலத்த எதிர்ப்புகள் ஏதும் எழுவதில்லை. அதனால்தான் திராவிடக் கட்சிகள் இந்து மதத்தோடு தங்கள் `சேவையை’ நிறுத்திக் கொள்கின்றன. 

 தருமி இந்த இடத்தில்தான் ‘உண்மையான’ நாத்திகராகத் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறார். அவரது கேள்விகள் இந்துமதம் முதல் ஆபிரகாமிய மதங்கள் வரை நீள்கிறது. கேள்விகளும் தர்க்கபூர்வமானவை, அறிவியற் பூர்வமானவை. வடைச்சட்டிக்குள் கைவிட்டுவிட்டு, ‘எங்கே காணோம்!’ என்று கேட்பது போல அபத்தமானவை அல்ல. முதலில் அவர் இம்மதங்கள் சார்ந்த அனைத்து நூல்களையும் தெளிவாக, முழுமையாக வாசித்திருக்கிறார் என்பதை உணர்ந்துகொள்ள முடிந்தது. 


எழுத்தாளர் தருமி ஏன் எந்தக் கடவுளும் உலக மக்கள் அனைவருக்குமான கடவுளாக இல்லை? ஏன் எல்லோருமே அந்தந்தப் பிராந்தியத்தைச் சேர்ந்த கடவுளாக இருக்கிறார்கள்? நிலைமை இப்படியிருக்க மதத்தைப் பரப்ப வேண்டும் என்பதற்காகத்தானே கடவுள் வாக்கென்று சொல்லப்படும் ‘புனிதப் புத்தகங்கள்’ எழுதி / திருத்தி எழுதப்படுகின்றன? – நியாயமான கேள்விகள்தான். பதில்தான் யாரிடமும் இல்லை. 

 இந்து மதத்தில் எப்போதுமே இரண்டு பிரிவுகளுண்டு. பிராமணர்களுக்கான இந்து மதம், அல்லாதவர்களுக்கான இந்து மதம். பெருந்தெய்வ வழிபாடு, சிறுதெய்வ வழிபாட்டை தனக்குள் இழுத்து எவ்வாறு அதன் அடையாளத்தைச் சிதைக்கிறது என்பதை முருகன் என்ற சிறுதெய்வம் வழி அறிந்துகொள்ள முடிகிறது. ஆரம்பத்தில் சிறு குழுக்களின் தெய்வமாக இருந்த முருகன் பிறகு சிவனுக்கு மகனாக்கப்பட்டு, விநாயகருக்கு அண்ணனாக்கப்படுகிறார். அவர் சிறு தெய்வத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தப்பட்டு பெருந்தெய்வமாக்கப் பட்டதற்குச் சான்றுகள் உள்ளன (வள்ளியை மணப்பது அவர்களைத் திருப்திப்படுத்த என்றே நினைக்கிறேன். போலவே, சைவ-வைணவச் சண்டையை நிறுத்த திருமலை நாயக்கரால் உண்டாக்கப்பட்டதுதான் மீனாட்சி கல்யாணம்). இது இந்து மதத்தில் பல நூற்றாண்டுகளாக நிலவிவரும் ஒரு தேர்ந்த யுக்தி. இந்து மதம் என்றழைக்கப்படும் சனாதன மதம் தனக்கு ஒவ்வாததைக்கூடத் தனக்குள் விழுங்கிச் சீரணித்துவிடக் கூடியது. பௌத்தமும் சமணமும் அதற்கான கடந்தகாலச் சான்றுகள். இப்போது மெதுவாக அது புத்தரை விஷ்ணுவின் அவதாரங்களுள் ஒன்று என்கிறது. நாத்திகவாதமும் அதுபோலத்தான். இந்துத் தத்துவப் பிரிவுகளில் ‘சார்வாகம்’ எனும் உலகாயதமும் ஒரு பிரிவாக ஏற்றுக்கொள்ளப்பட்டு சீரணிக்கப்பட்டுவிட்டது. பௌத்தம் மற்றும் சமணத்தின் கொல்லாமை உட்பட பல்வேறு கூறுகளை இந்துமதம் தனக்குள் உள்வாங்கிக் கொண்டுள்ளது. இப்படி மாற்றங்களுக்கு உள்ளாவதன் அரசியல் எளிதாகப் புரிந்து கொள்ளக் கூடியதே. இது அனைத்து மதங்களுக்கும் பொருந்தும்.

நிலமை இப்படியிருக்க அனாதி காலமாக தங்களது மதம் ‘கற்போடு’ உள்ளது என்று நம்பி வாதிடுவதை என்ன மனநிலை என்று கொள்வது? பௌத்தம் இல்லையென்றால் கொல்லாமை, கருணை, அன்பு இவற்றையெல்லாம் இந்நிலப்பரப்பில் இருந்த மதங்கள் பேசியிருக்குமா என்பதே கேள்விதான். பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வைக் கற்பிக்கும் இந்துமதம், தோன்றிய இனத்தை மட்டுமே உயர்த்தி மற்ற இனங்களைத் தாழ்த்தும் கிறித்துவ, இஸ்லாம் மதங்கள் என சக மனிதர்களிடையே கூட சகிப்புத்தன்மையே இல்லாத மதங்கள் அன்பை எப்படிப் போதிக்க முடியும் என்ற கேள்விக்கு ‘அப்படியெல்லாம் இல்லை’ என்று சொல்லி தங்களின் புனிதப் புத்தகத்தைத் தோண்டித் துருவி ஏதேனும் ஒற்றை வரியைப் பெருமிதமாக எடுத்துக் காண்பிப்பார்கள். 

புத்தகத்தில் திருத்த வேண்டிய விஷயங்கள் என நான் நினைப்பது: மேற்கோள் காட்டப்பட்டுள்ள புத்தகங்களின் பட்டியலைத் தனி இணைப்பாகக் கொடுத்திருக்கலாம். அது பலருக்கு உதவியிருக்கும். புத்தகத்தின் இரண்டாம் பகுதியில் இணைக்கப்பட்டுள்ள மூன்று கட்டுரைகள் உண்மையில் தேவையில்லை என்றே தோன்றுகிறது. அவை புத்தகம் பேசிக்கொண்டிருக்கும் விஷயத்திலிருந்தும் சற்றே விலகிச்செல்கிறது. நிச்சயமாக இதுவொரு தடைதான். அதிலும் ஜமாலன் எழுதியுள்ள கட்டுரை என்ன சொல்ல வருகிறது என்று யாருக்கும் உடனே புரிந்துவிடாத வகையில் எழுதப்பட்டுள்ள சிறப்பான கட்டுரை. புத்தகத்தில் இன்னுமொரு திருத்தப்படவேண்டிய அம்சம், அதிலுள்ள ஆங்கிலம். பெரும்பாலான விஷயங்கள் தமிழில்தான் பேசப்படுகிறது என்றாலும் முக்கியமான சில இடங்களில் திடீரென்று ஆங்கிலம் நுழைவது வாசிப்புக்கு ஒரு தடைதான். உதாரணமாக பக்கம் 54-இல் 13-ம் எண்ணுள்ள பத்தி ஆங்கிலத்தில் ஆரம்பிக்கிறது, தொடர்ந்து தமிழில், ‘இதற்கு நான் பதில் சொல்லவேண்டுமா?’ என்று கேட்கிறார். ஆங்கிலம் தெரியாத ஒருவர் இதை எப்படிப் புரிந்து கொள்வார்? போலவே பக்கம் - 64-இல் உள்ள 8-ம் எண் கொண்ட பத்தியும் அவ்வாறே உள்ளது. மற்றுமொரு இடத்தில் முகம்மது நடத்திய போர்களை ஆங்கிலத்தில் கொடுத்திருக்கிறார். அவரது மனைவிகளின் பெயர்கள் பட்டியலில் சில ஆங்கிலம். இதெல்லாம் வாசிப்புக்கான தடைகள். வலைப்பூவில் அவர் எழுதும்போதே இதைக் குறிப்பிட்டிருக்கிறேன். மேலும், வலைப்பூவில் எழுதும்போது சுட்டிகள் கொடுப்பது சரி புத்தகத்தில் எதற்கு? பதிலாக தேடவேண்டிய சொற்களை அடைப்புக் குறிக்குள் ஆங்கிலத்தில் கொடுக்கலாம். அடுத்த பதிப்பில், இக்குறைகளை நிவர்த்தி செய்து, புத்தகத்திலுள்ள ஆங்கிலப் பத்திகளைத் தமிழாக்கம் செய்து வெளியிடுவதன் மூலம் இப்புத்தகத்தை பரந்த வாசிப்புக்கு எடுத்துச் செல்லவும், அதன்மூலம் நிறைய எதிரிகளை உருவாக்கிக் கொள்ளவும் அவருக்குச் சாத்தியப்படும். 

 சாதிகளை உருவாக்கி அவற்றை இன்றளவும் பாதுகாத்து, அதையொரு மேட்டிமையாக மாற்றிக்கொண்டுள்ள இந்துமதம் குறித்து விமர்சிக்கும்போதும், அறிவியல் என்ற விஷயத்தையே அடியோடு ஒதுக்கிவிட்டு புனிதப்புத்தகங்களில் சொல்லியிருப்பதே உண்மை என்று நம்பி வாதிடும் பிற மதங்கள் குறித்துப் பேசும்போதும், தர்க்க ரீதியிலான கேள்விகளைக் கேட்பது அவசியமாகிறது. மதம் என்ற போர்வையில் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள், அடக்குமுறைகள் ஒருபுறம், ஏழைகளாக இருப்பதே சிறப்பானது என்றும் இறப்புக்குப் பின்னான சொர்க்கம் அவர்களுக்கே வாய்க்கும் என்று கூறியபடி அவர்களிடம் இருக்கும் ஒன்றிரண்டு காசுகளைக்கூட கடவுளின் பெயரால் களவாடிச் சுரண்டுவது மறுபுறம். இப்படியான சூழ்நிலையில் அபத்தமான வாதங்களை விடுத்து தருமி போல சரியான கேள்விகளைக் கேட்க வேண்டியதுதான் இன்றைய தேவை என்று நம்புகிறேன். 







 *

Sunday, February 19, 2017

928. பிப்ரவரி பொங்கல்



*

Great show, #DrRichardBeale

#DrRichardBeale never ever knew that you are such a great actor in a TV show!

#DrRichardBeale thanks for coming for the treatment for the CM. Double thanks (?) for coming again for the re-enactment in a TV show!

#DrRichardBeale "All the world is a stage" says your Bard. But why should you re-enact the #treatmenttoCM once again, that too in a TV broadcast?

#DrRichardBeale better serve the patients and not any other political or corporate coterie.

#DrRichardBeale thanks for treating our CM.But sad for being a circumstantial slave for our political minions during treatment!

#DrRichardBeale why do you degrade yourself by getting into the nitty-gritties of our local politics?

#Apollo charges just 5.5 crore. What a great hospital! So poor are the charges!

எப்போது சிங்கை physiotherapists & AIIMS மருத்துவர்கள் இங்கே வந்து தந்தி டிவியில் அடுத்த show காண்பிப்பார்கள்?

#DrRichardBeale thanks for treating our CM. hope you got paid. Good. But did you get any further remuneration for 'rewinding' the treatment thru TV channels?

I HAVE COME HERE TO BURY ......

“Friends, Romans, countrymen, lend me your ears”....

I come to bury MAFIA.
The evil that men do lives after them;

My heart is in the coffin there with Caesar,
And I must pause till it come back to me.

'தொழுத கையுள்ளும் படையொடுங்கும்' ... இப்படியும் சொல்லலாம்!!

TV விவாதங்களில் எல்லோர் மைக்கையும் ஆண்/ஆஃப் பண்றதை நடுவர் வச்சிக்கிட்டா என்ன?

50 நிமிஷம் ... அசத்தல் ... யார் கொடுத்த ஐடியாவோ!

50 நிமிஷம் ஐடியா கொடுத்தவர் வாபஸ் வாங்குறதுக்கு முந்தியே வாய்ஸ் கொடுத்திருந்தால் இன்னைக்கி ஓ பி எஸ் டாப்ல இருப்பார்.

பதவில இருந்து ஓபிஎஸ் வாய்ஸ் கொடுத்திருந்தா ‘எலும்புக்கு நிறைய பேர் பின்னால் ஓடியாந்திருப்பார்கள்.

பஸ்ஸில ஏறும் போது அத்தனையில் ஒண்ணுக்குமா எந்த வித எதிர்ப்புணர்ச்சியும் வரலை. சோற்றாலடித்த பிண்டங்கள் என்பார்களே ... அதுகளா இதுக?
தமிழண்டா ....

ஏன் ஒரு நடுநிலையாளர் கூட உண்மைகளைக் கேட்பதில்லை என்று புரியவில்லை. எல்லோருக்கும் தெரியும் யார் எந்த அளவு கொள்ளை அடித்தார்கள் என்பது. ஆனால் விவாதங்களில் ஒருவர் கூட அதைத் தோலுரிக்க ஏன் தயங்க வேண்டும்? ஜெயலலிதாவும், சசிகலாவும், பன்னீர் செல்வமும் எவ்வளவு கொள்ளை அடித்திருக்கிறார்கள் என்பதை உடைத்துப் பேச யாருக்கும் ஏன் தைரியம் வரவில்லை. எல்லோரும் எல்லோருக்கும் பயப்படுகிறார்கள்.

அட போங்கப்பாநீங்களும் உங்கள் ஊடகங்களும்!

போட்டு உடைச்சா கொஞ்சமாவது அவர்களுக்கு ஒரு சின்ன பயம் வரலாம். இப்படியெல்லாம் கேட்டால் தானே நாளைக்கு ஊடகங்கள் மீது பயமும், மரியாதையும் வரும். இப்படிதடவி தடவிக் கேட்டால் எந்த அரசியல்வியாதிக்கு ஊடகங்கள் மீது மரியாதை வரும். நீங்கள் தடவிக் கொடுத்துக் கொண்டே இருங்கள். அவர்களும் அச்சமில்லைஅச்சமில்லைன்னு ஜாலியா மேலும் மேலும்உயரட்டும்ஊழலில்!

சாத்து சாத்துன்னு சாத்தியாச்சி மூணு தடவை.
எழுந்திருச்சி மறுபடி வந்திருவ ….?

அந்தக் கட்சிக்காரங்களுக்கு கொஞ்சம் அது குறைவோ என்னவோ அரசியல்வியாதிகள், தொண்டர்கள் எல்லோரும் இன்னும் செய்யும் ஒரே ஜெபம் … அம்மா .. அம்மா தான். மம்மிட்ட இருந்து விடுபட மாட்டாங்க.

mini-mum ஏன் சீக்கிரம் மு.அமைச்சராகணும்னு நினச்சிது தெரியுமா? தீர்ப்பு இப்படி வந்தா பதவியை ஊட்டுக்காரர் கையில் கொடுத்து வச்சிருக்காலாம்ல. அதுக்குத் தான் பாடுபட்டுச்சு. அதுக்கு இந்த ஆளுநர் தடை போட்டுட்டாரே……….

சாத்து சாத்துன்னு சாத்தியாச்சி மூணு தடவை.
உயிரோடு இருக்கும் போது சாத்துனது பத்தாதா?

இப்படி ஒரு தீர்ப்பு வந்த பிறகும் கூட ”அம்மா பாசம் குறையலையே. அது சரி .. எல்லாம் ரத்தத்தின் ரத்தங்கள் தானே!

ரொம்ப ஆசைப்பட்டேன். மம்மி ரிசல்ட் வந்த பிறகு போகணும்னு ஆசைப்பட்டேன். பாருங்க இப்போ. இன்னும் மம்மி தான்! ஒருவேளைஉயிரோடு இருந்திருந்தாலும் இதை பஜனையைத் தான் செய்து கொண்டிருப்பார்களோ? அப்டின்னா .. எப்பதான் புத்தி வரும்?

பார்லிமென்ட்ல ஒரு பெரிய சிலை மம்மிக்கு செய்யணும். காமராஜர் சிலையில் அவர் கால் உயரத்திற்கு படிக்கும் சிறு குழந்தைகள் சுற்றி நிற்குமே அது மாதிரி மம்மிக்கு உயரமான சிலை. வெண்கலத்தில. அவரு காலடியைச் சுத்தி தலை தரையைத் தொட, குண்டியைத் தூக்கிக்கிட்டு நிறைய பேர் கால்ல விழுந்து கிடக்கிறது மாதிரி டிசைன். பெரிய பீடம். பார்லிமென்ட் வாசல்ல வைக்கணும். அந்தப் பீடத்தில ”4+6 வருஷம் + 100 கோடிஅப்டின்னு போட்டு உயிரோடு இருந்திருந்தா எந்த ஜெயில்ல போட்டிருப்பாங்களோ அந்த ஜெயில் பெயரையும் போட்டால் …. வர்ர அரசியல்வியாதிகளில் யாருக்காவது ஒருவருக்காவது கொஞ்சமாவது நல்ல புத்தி வரலாமில்லையா? எதிர்காலத்திற்கு ஒரு படிப்பினை தான்.
இதுக்குப் பிறகு நோபெல் பரிசு, பாரத ரத்னா, ரூபாய் நோட்ல அவர் படம் எல்லாத்தையும் அடுத்த வரிசையில வச்சுக்குவோமே.
எல்லாம் ஒரு negative inspiration தான்.
என்னசெலசெஞ்சிருவோமா?

ஜென்மம் சாபல்யமடைஞ்சிருச்சு.....
ரொம்ப பெரிய ஆசை தான். ஏதாவது ஒரு அரசியல்வியாதியாவது தண்டிக்கப்படணும்னு ரொம்ப வருஷமா பெரிய ஆசை. அம்புட்டுதான் ... இனிமே எங்க நடக்கப் போகுதுன்னு நினச்சப்போ ... வந்துச்சே ஒரு சுனாமி
/ வர்தா. அடிச்சி சாச்சிருச்சே... மகிழ்ச்சி
மகிழ்ச்சிக்குக் காரண கர்த்தாக்கள் மூவருக்கும் எம் வணக்கங்களும், வாழ்த்துகளும்.உரித்தாகட்டும்.
அந்த நாலாவதுக்கு …. அதுக்கு என்ன சொல்ல?

என்ன செஞ்சாலும் நமக்கு வேண்டிய அரசியல் ஆளுக செஞ்சா தப்பில்லைன்னு நம்ம மக்கள் நினைக்கிறாங்களேன்னு நினச்சா ரொம்ப பயமா இருக்கு. ஓட்டுப் போடுற பய பிள்ளைக எல்லாம் ஏதாவது ஒரு தல அல்லது சின்னம் அப்டின்னு ஆயுசுக்கும் நிலச்சி நின்னுர்ராங்க. அவங்க ஆளுக என்ன செஞ்சாலும் நாங்க அவங்க பின்னால மட்டும் தான் போவோம்னு அப்படி ஒரு திண்ணமான எண்ணம். அப்புறம் எங்க இருந்துமாற்றம்வரும்.

ஒரு ஊழல் பேர்வழின்னு நீதி மன்றமே சொல்லிருச்சு அப்டின்னா மக்கள் அந்த ஆளை வெறுத்து ஒதுக்கினால் தான் அடுத்த அரசியல்வாதிக்கு ஒரு பயம் இருக்கும். கொஞ்சமா ஜாக்கிரதையா கொள்ளையடிக்கலாம்னு நினைக்கலாம்.

இப்போதும் மம்மி, சித்தின்னு பின்னால ஓடினா என்ன அர்த்தம். ம்ம்அர்த்தமே இல்லை. வெறும் வாய்க்குதவாத charisma இருந்தால் மட்டும் போதும்னு நினப்புதான் வரும். அதுக்கு வேண்டியது மாதிரி ஓசியா நாலு சாமான்களை நம்ம வரிப்பணத்திலேயே வாங்கிக் கொடுத்து அது மூலமா charisma வருதான்னு பார்க்கலாம். இல்ல ஏதாவது ரெண்டு சினிமாவில நடிச்சி சான்ஸ் வருதான்னு பார்க்கலாம்.
நிச்சயமா நல்ல ஆட்சி நடத்தணும்னு மட்டும் நினைக்கவே வேண்டியதில்லை போலும்.

அம்மா மேல் அத்தனை உயிர். மண்சோறு, மொட்டை, அலகு அது இதுன்னு காமிச்சாச்சி. ஆனால் செத்ததும் எல்லாமே மண்ணோடு மண்ணாச்சோ. ஏன்னா, மம்மியைக் கண்ணில காமிக்காமலே சித்து வேலை செஞ்சி கதையை முடிச்சாச்சின்னு மக்கள் கோபமா சொல்லிக்கிட்டு இருந்தாங்க.
ஆனால் இப்போ எப்படி சித்தி என்ன செஞ்சாலும் சரின்னு தலைய ஆட்டிக்கிட்டு போய்க்கிட்டே இருக்காங்க?

காசேதான் கடவுளடா …

டிவி விவாதங்களில் வருபவர்கள் கேட்பவர்கள் எல்லோரும் முட்டாள்கள் என்று நினைத்துக் கொள்வார்களோ என்னவோ! ஜெயலலிதா ஊழல் செய்தார். அதில் வந்த பணத்தை வைத்து ஊழியாட்டம் மற்ற மூவரும் ஆடினார்கள் என்பது தீர்ப்பு. இதனால் சித்தி முதலமைச்சராக ஆக முடியாது என்பது உறுதியாகிவிட்டது. வேட்டுகள், லட்டுகள் என்று அமர்க்களப்படுத்தினார்கள்.
பன்னீர் குழுவில் இருந்த ஒருவரிடம் ஜெயலலிதா ஊழல் செய்தார் என்று சொல்ல்ப்பட்ட பிறகும் எப்படி வேட்டு போட்டீர்கள் என்று கேட்டார் நெறியாளர். வந்தவர் சொன்னார்: நாங்கள் வேட்டு போடவேயில்லை. வேட்டு போட்டதெல்லாம் கருணாநிதி ஆட்கள் என்றார். பன்னீர் வீட்டு முன் வேட்டு போட்டது திமுக என்றா சொல்கிறீர்கள் என்று கேட்டார்.
அந்த மனுஷன் கொஞ்சம் கூட கூச்ச நாச்சம் ஏதுமில்லாமல் ஆமாம் .. திமுக தான் என்றார். நெறியாளர் அப்படியே விட்டு விட்டார்,
அது என்னங்கநாமெல்லோரும் அத்தனை முட்டாள்கள் என்று அரசியல் ஆட்கள் நினைத்து விட்டார்களா?

சசிகலா காரின் ஓட்டுனர் காரில் ஏறி உட்கார்ந்ததும் சீட் பட்டையை ஒழுங்காக மாட்டிக் கொண்டார்.
அதன் பின் ஒரு பெரிய போலீஸ் ஐயாவின் கார் சென்றதைப் பார்த்தேன். அந்த ஓட்டுனர் சீட் பட்டையை மாட்டவில்லை.
Law makers are the first law breakers!

சசிகலாவின் கார் போய்க்கொண்டிருந்தது. உள்ளே அவர்அந்தக் காலத்தில்உட்கார்ந்திருப்பாரே அதே இடத்தில் ஒரு சின்ன பெண் உட்கார்ந்திருந்தது.
அந்தப் பெண்ணுக்கும் பல கனவுகள் தன்னிச்சையாகவே வந்திருக்கும். இல்ல …?


பாவம் ஸ்டாலின்.
தீர்ப்பு வந்ததும் அவர் ஏதாவது ஒன்றைச் சொல்லியேயாக வேண்டிய கட்டாயம்.
நாலு பக்கமும் கல்லை வீசிக்கொண்டிருந்தார்கண்ணாடி வீட்டுக்குள்ளிருந்து!

தீரன் என்று ஒருவர் பேசிக்கொண்டிருந்தார். அவர் ஒரு பேராசிரியர் என்றார்கள்.
பேராசிரியர்கள் மீது இருந்த கொஞ்ச மரியாதையையும் காணாமல் போய் விட்டது.
எனக்குத் தெரிந்த பேராசிரியர்களின் முதுகெலும்பு நன்கு வளையக்கூடியதே. அதுவும் இவர்சாஷ்டாங்க கட்சிக்குள் நுழைந்து விட்டாரல்லவா …. கேட்கவா வேண்டும்!

பஞ்சப் பராரிகளா நம் சட்டசபை உறுப்பினர்கள். ஆனாலும் பஸ்ஸில் ஏறிப்போ என்றதும் மந்தைகள் போல் ஏறிய மகத்துவம் எப்படி நடக்கிறது.
இதுதான் ராணுவ ஒழுங்கோ? இருக்கும் .. இருக்கும்.

அட எங்கப்பா நம்ம V.C. பெருந்தகைகள் எல்லோரும்? சித்திய பார்க்க வரலை; அடுத்து வந்த ரெண்டு மு.அமைச்சர்களைப் பார்க்கவே வரவில்லை. ச்சே! கல்வியின் தரமே ரொம்ப தாழ்ந்து போச்சுபா!

88 பேர் நின்னாங்க. அட .. ஒருத்தருக்குக் கூட நரைத்த மீசை, தலை முடின்னு இல்லை. எல்லோருமே அப்படி
ஒரு இள மையோடு நின்னாங்க.

யாருப்பா அங்க? சித்தி சித்தப்புட்ட சொல்லி நம்ம தீரனுக்கு ஒரு V.C. post வாங்கிக் கொடுங்கப்பா …


ரகசிய ஓட்டெடுப்பு கூட வேண்டாம். புதன் கிழமை அடுத்த ஓட்டெடுப்பு வச்சுக்கலாம். ஆனா அதுக்கு முந்தி சித்தி க்ரூப்பை சுதந்திரமா உட்டுடுங்கப்பா









*