Sunday, January 09, 2011

468. சுவனப்பிரியனும் நானும் ...

*

”என்னைக் கவர்ந்த திருமணங்கள்!” என்ற தலைப்பில் திரு. சுவனப்பிரியன் பதிவு ஒன்று இட்டிருந்தார்.
அவர் உறவுத் திருமணங்கள் பற்றி எழுதிவிட்டு, அதில் //என் வீடு, என் தெரு, என் ஜாதி, என் ஊர் என்ற குறுகிய எண்ணங்களை எல்லாம் விட்டு விட்டு 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்ற கணியன் பூங்குன்றனாரின் பழமொழிக் கேற்ப வாழ முற்பட்டிருக்கும் இந்த ஜோடிகளை நாமும் வாழ்த்துவோம்.// என்று எழுதியுள்ளார்.

அவர் மகிழ்ச்சியோடு நானும் கலந்து கொள்கிறேன். மணமக்களுக்கு என் அன்பான வாழ்த்துகள்.

இப்பதிவில் நானொரு பின்னூட்டம் இட்டிருந்தேன்.

//என் வீடு, என் தெரு, என் ஜாதி, என் ஊர் என்ற குறுகிய எண்ணங்களை எல்லாம் விட்டு 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்ற கணியன் பூங்குன்றனாரின் ...//

இதில் ஒரு சின்ன மாற்றம்: என் வீடு, என் தெரு, என் ஜாதி, என் மதம், என் ஊர் என்ற குறுகிய எண்ணங்களை எல்லாம் விட்டு 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற கணியன் பூங்குன்றனாரின் ...//  என்பது என் பின்னூட்டம்.

இதற்குப் பதிலாக சுவனப்பிரியன் ஒரு பின்னூட்டம் இட்டிருந்தார்:
//உங்கள் வாதத்தை ஒத்துக் கொள்கிறேன். நீங்கள் சொல்வது போல் இஸ்லாம் ஒரு மதமே அல்ல. அது ஒரு வாழ்க்கை நெறி. இனம், மொழி, நாடு கடந்து இந்த வாழ்க்கை நெறியைக் கடை பிடிக்கும் அனைவரும் முஸ்லிம்களே! நீங்கள் நாத்திகராக இருந்தாலும் உங்களுக்கென்று சில வாழ்க்கை நெறி முறைகளை வகுத்து வைத்திருக்கிறீர்கள். அதே போல் முஸ்லிம்களும் தங்களுக்கென்று சில வழக்கங்களைக் கொண்டிருக்கிறார்கள். ஒரு வித்தியாசம் அந்த சட்ட திட்டங்களெல்லாம் இறைவனிடமிருந்து வந்ததாக முஸ்லிம்களின் நம்பிக்கை. இந்த நம்பிக்கை உலகளாவிய அளவில் பரந்திருப்பதால்தான் ஒரே குடும்பத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும், எகிப்தும் சங்கமிக்க முடிந்தது.

நம் நாட்டிலோ ஒரே மதத்தில் அதன் உட்பிரிவுகளில் பழக்க வழக்கங்களில் ஏக வித்தியாசத்தைப் பார்க்க முடிகிறது. சாதிகளுக்குள் இருக்கும் ஏற்றத் தாழ்வுகளும் உறவுகள் மலர்வதற்கு தடையாக இருக்கின்றன.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.!//

இதற்கு நான் ...
//இந்த வாழ்க்கை நெறியைக் கடை பிடிக்கும் அனைவரும் முஸ்லிம்களே! //

இது நீங்கள் சொல்வது. இந்து மதம் ஒரு வாழ்க்கை நெறி என்கிறார்கள் அவர்கள்.

//இந்த நம்பிக்கை உலகளாவிய அளவில் பரந்திருப்பதால்தான்...//

இது போல் வேறு சில மதங்களும் அவர்கள் நம்பிக்கைகளும் உலகில் பரந்து கிடக்கின்றனவே!

//இஸ்லாம் ஒரு மதமே அல்ல. //
சுரா: 47.4 - 6... இதில் இறை நிராகரிப்பவர்களை என்ன செய்யச் சொல்லியுள்ளது? (இது ஒரு war cry என்று சொல்ல வேண்டாம்.) கடவுளின் வார்த்தைகள் இடத்திற்கும் காலத்திற்கும் மாறுபட்ட பொருளைத் தரக் கூடாதல்லவா?
அதோடு ... அப்படிக் கொல்பவர்களை ‘சுவனத்தில் அவர்களை நுழைவிப்பான்’ என்பதுவும், முகமதுவின் வார்த்தைகளான, “Two religions shall not remain together in the peninsula of the Arabs' என்பதும் நீங்கள் சொல்லும் வாதத்தை (ஒரே குடும்பத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும், எகிப்தும் சங்கமிக்க முடிந்தது.) எனபதை முறியடிக்கின்றனவே ...

உலக அளவில் மக்கள் நம்மைப் பிரிப்பவைகளே race & மதங்கள்தானே... சாதிகள் நம்ம ஊர் சரக்கு - extra load!!//

இதற்கு சுவனப்பிரியன் ...

//இது நீங்கள் சொல்வது. இந்து மதம் ஒரு வாழ்க்கை நெறி என்கிறார்கள் அவர்கள். //

இந்து மதம் வர்ணாசிரமத்தில் கட்டப்பட்டது. உலக மக்கள் அனைவரும் ஒரு தாய் தந்தையரிலிருந்து பிறந்தவர்கள் என்று கூறும் இஸ்லாத்தோடு எப்படி ஒப்பிடுகிறீர்கள்.

//இது போல் வேறு சில மதங்களும் அவர்கள் நம்பிக்கைகளும் உலகில் பரந்து கிடக்கின்றனவே!//

அந்த மக்களால் எந்த அளவு அந்த மதங்கள் பின்பற்றப்படுகிறது என்பதையும் நாம் பார்க்க வேண்டும். அமெரிக்காவிலும் இன்னபிற ஐரோப்பிய நாடுகளிலும் கிறித்தவ மதம் பெயரளவுக்குத்தான் உள்ளது. அந்த மக்களின் வாழ்க்கையில் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்ப்படுத்தவில்லை. அதிகம் நாத்திகர்களைத்தான் உருவாக்கியிருக்கிறது. உங்களையும் சேர்த்து.

//சுரா: 47.4 - 6... இதில் இறை நிராகரிப்பவர்களை என்ன செய்யச் சொல்லியுள்ளது? (இது ஒரு war cry என்று சொல்ல வேண்டாம்.) கடவுளின் வார்த்தைகள் இடத்திற்கும் காலத்திற்கும் மாறுபட்ட பொருளைத் தரக் கூடாதல்லவா? அதோடு ... அப்படிக் கொல்பவர்களை ‘சுவனத்தில் அவர்களை நுழைவிப்பான்’ என்பதுவும்,//

முகமது நபியையும் அவரின் தோழர்களின் வீடு வாசல் சொத்து சுகங்கள் அனைத்தையும் பறி கொடுத்து மக்காவை விட்டு வெளியேற்றப்பட்டனர். மதீனா வந்து தனி அரசையும் உருவாக்கினர். இதன் பிறகும் மக்காவாசிகள முஸ்லிம்களை அழிக்கும் முகமாக படையெடுத்து வந்ததால் போர் செய்ய குர்ஆன் கட்டளை இடுகிறது. தன்னை அழிக்க வருபவர்களிடமிருந்து தற்காத்து கொள்வது தவறா? நம் நாட்டோடு பாகிஸ்தான் போருக்கு வந்தால் நம் நாட்டு வீரர்களுக்கு எதை உபதேசிப்போமோ அதைத்தானே குர்ஆனும் செய்கிறது. இதில் தவறு எங்கிருந்து வருகிறது.

'முகம்மதே! போர்க்களத்தில் எதிரிகள் சமாதானத்தை நோக்கி சாய்ந்தால் நீரும் அதை நோக்கி சாய்வீராக!'- குரஆன் 8:61

//முகமதுவின் வார்த்தைகளான, “Two religions shall not remain together in the peninsula of the Arabs' என்பதும் நீங்கள் சொல்லும் வாதத்தை (ஒரே குடும்பத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும், எகிப்தும் சங்கமிக்க முடிந்தது.) எனபதை முறியடிக்கின்றனவே ...//

ஆம். இஸ்லாம் என்ற ஒரே வாழ்க்கை நெறியில் அவர்களை சங்கமிக்க வைத்ததைத்தான் சுட்டிக்காட்டியுள்ளேன்.//

இதற்குரிய பின்னூட்டத்தை வலையேற்ற முயற்சித்து முடியாததால் அதனை இங்கே பதிவாக இட்டுள்ளேன்.
நான் கொடுத்துள்ள பதில்:
//மதம் ஒரு வாழ்க்கை நெறி// - இப்படி சொல்லுங்கள்; ஒப்புக் கொள்கிறேன். எந்த தத்துவத்தில் பிறந்திருந்தாலும் எந்த மதமும் ஒரு சரியான நெறி முறையைப் பற்றித்தான் பேசும். நல்லவனாக இரு என்பதே எந்த மதத்தின் அடிப்படை நாதமாக இருக்கும். இதில் உன்னுடையது சிறந்ததல்ல என்னுடையதே சிறந்தது என்ற கோஷம் வரும்போதுதான் வருகின்றன பிரச்சனைகள்.

இந்து மதத்தில் வர்ணாசிரமம் ஒரு பகுதி. அதுதான் இந்து மதம் என்பது தவறு.

//தாய் தந்தையரிலிருந்து பிறந்தவர்கள் என்று கூறும் இஸ்லாத்தோடு ..//  -  மற்ற இரு ஆபிரஹாமிய மதங்கள் என்ன சொல்கின்றன? (அவர்களை நீங்கள் திம்மிகளாகச் சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.)  பொதுவாகவே, கடவுள் மனிதனைப் படைத்தார் என்றுதான் எல்லா மதங்களும் சொல்கின்றன. இதில் தனித்துவம் எம்மதமும் கொண்டாட முடியாது. ஆபிரஹாமிய மதம் அவங்களுக்கு பெயரெல்லாம் வைத்திருப்பதாலேயே அது மட்டும் ஒரிஜினல என்று சொல்ல முடியாது.

//எந்த அளவு அந்த மதங்கள் பின்பற்றப்படுகிறது என்பதையும் நாம் பார்க்க வேண்டும். //  -  கட்டாயமாக. அதோடு ஏன் என்றும் யோசிக்க வேண்டும். இஸ்லாமில் உள்ள இறுக்கம் இதற்கான காரணம். பாகிஸ்தானில்  தஸீர் நிலைமையைப் பார்த்தீர்கள் அல்லவா? நான் ஒரு கிறித்துவ நாட்டில் இருந்திருந்தாலும் அந்தக் கடவுளை என்னால் புறக்கணிக்க முடியும். ஒரு இஸ்லாமிய நாட்டில் இந்த “சுதந்திரம்” உண்டா? அதை விடுங்க ... தமிழ்நாட்டில், பர்தா வேண்டாம் என்று சில இஸ்லாமியப் பெண்கள் ஒரு தொலைக் காட்சியில் சொல்ல முயன்றதை எதிர்த்து என்னவெல்லாம் சொல்லி வாதிட்டீர்கள்?  இந்த இறுக்கத்தின் காரணம் - சிறு வயதிலிருந்தே சொல்லிப் பயமுறுத்தப்படும் காரணம் - இதுவே உங்கள் கேள்விக்கான பதில். அதோடு மத நம்பிக்கை, இறுக்கம் இந்த இரண்டும் எந்த மனிதனையும் நல்லவனாக வைத்திருக்க முடியாது. (அமினா கதை வாசித்தீர்களா?) தமிழில் ஒரு பழமொழி உண்டு: படிக்கிறது ராமாயணம்; இடிக்கிறது பெருமாள் கோவில்!

//முஸ்லிம்களை அழிக்கும் முகமாக படையெடுத்து வந்ததால் போர் செய்ய குர்ஆன் கட்டளை இடுகிறது.//  --  ஏதோ எதிரிகள் முகமதையும், இஸ்லாமியரையும்  விரட்டி விரட்டி அடித்தது போன்ற ஒரு ‘பாவனையை’ ஏற்படுத்தியுள்ளீர்கள். இரு குழுக்கள் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி வெட்டிக்கொண்டார்கள், வெட்டிக் கொன்றார்கள் என்பதுதான் வரலாறு.  அதோடு, இறை மறுப்பாளர்களை (எதிரிகளை)க் கொன்று குவித்து விடு - இப்படி ஒரு கடவுள் போதித்து ”உக்கிரசாமி”யாவதை விடவும், ’அன்பே சிவம்’ என்பதுவும், ‘உன் வாளை உறையில் போடு; வாளை எடுத்தவன் வாளாலேயே சாவான்’ என்பதுவும், எவ்வுயிரையும் கொல்லாதே என்று சமணத்தில் சொல்வதுவும், வாடிய பயிரைக் கண்டு வாடினேன் என்பதுவும்  ‘நல்லசாமி’களின் நல்ல வார்த்தைகளாக எனக்குத் தோன்றுகின்றன. எங்கேயாவது ஒரு சாமி ‘சண்டை போடு’ என்று சொன்னாலே அது எனக்கு மிக வேடிக்கையாகவும் நகை முரணாகவும் தோன்றுகிறது.

//தன்னை அழிக்க வருபவர்களிடமிருந்து தற்காத்து கொள்வது தவறா?//  -  தவறேயில்லை. ஆனால் அல்லா சொல்லும் வசனம் என்ன? சுரா 47.4 - இறை நிராகரிப்பாளர்களை (எதிரிகளை என்று சொல்லவில்லையே?) நீங்கள் போரில் சந்திக்க நேர்ந்தால் முதல் வேலை கழுத்துக்களை வெட்டுவதுதான்;  ஆனால் ஆங்கிலத்தில் : When you meet the unbelievers, strike off their heads;... என்று உள்ளது. (”நீங்கள் போரில் சந்திக்க நேர்ந்தால்//- இது ஏன் ஆங்கில நூலில் இல்லை? தமிழில் யார், ஏன் சேர்த்தது ??!!)

//இஸ்லாம் என்ற ஒரே வாழ்க்கை நெறியில் அவர்களை சங்கமிக்க வைத்ததைத்தான் சுட்டிக்காட்டியுள்ளேன். // -- புரியவில்லை.

மீண்டும் சொல்கிறேன்: எங்கேயாவது ஒரு சாமி ‘சண்டை போடு’ என்று சொன்னாலே அது எனக்கு மிக வேடிக்கையாகவும் நகை முரணாகவும் தோன்றுகிறது. இப்படியெல்லாம் ஒரு ”எல்லாம் வல்ல நல்ல கடவுள்” “போதிக்கலாமா”? - இக்கேள்விக்கு உங்கள் பதிலை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.




173 comments:

suvanappiriyan said...

பதிவாகவே இட்டு விட்டீர்கள். என் பதிவிலும் உங்கள் பின்னூட்ங்கள் இரண்டு முறை ஏறி விட்டது. பிறகு அதனை சரிபடுத்தியுள்ளேன்.

எந்த மதத்தையும் நான் குறைத்து மதிப்பிடவில்லை. அனைத்து மதங்களுமே இறைவனால் கொடுக்கப்பட்டவையே

'இறைவனையும் எங்களுக்கு அருளப்பட்டதையும் தம் இறைவனால் ஆபரஹாம், இஸ்மவேல்,யாகூப், மற்றும் அவரது வழித்தோன்றல்களுக்கு அருளப்பட்டதையும் மோஸேவுக்கும், ஏசுவுக்கும் வழங்கப்பட்டதையும் ஏனைய நபிமார்களுக்கு தமது இறைவனிடமிருந்து வழங்கப்பட்டதையும் நம்பினோம். அவர்களுக்கிடையே பாகுபாடு காட்ட மாட்டோம். அவனுக்கே நாங்கள் கட்டுப்பட்டவர்கள்' என்று கூறுங்கள்.- குரஆன் 2:136

என்று குர்ஆன் எனக்கு கட்டளையிட்டுருக்க நான் எப்படி மற்ற மதங்களை குறைத்து மதிப்பிட முடியும்? இறைவன் அளித்த அநத மதங்கள் அந்த மக்களால் மாற்றப்பட்டதைத்தான் சுட்டிக் காட்டினேன். நீங்கள் கூட வருடா வருடம் 'திருத்திய பைபிள்' என்று தானே வெளியிட்டு வருகிறீர்கள்! இறைவன் அளித்த அந்த வார்த்தைகளை மனிதர்கள் எப்படி மாற்றலாம் என்று ஏன் ஒரு கிறித்தவரும் குரல் எழுப்புவதில்லை? இப்படி நிறை கேட்கலாம். நேரம் கிடைக்கும்போது வருகிறேன்.

baleno said...

"என்னைக் கவர்ந்த திருமணங்கள்!" என்ற பதிவில் நீங்கள் கொடுத்த சிறந்த பதில் பார்த்தேன். நன்றி. "நான் ஏன் இன்னும் முஸ்லிமாகவே இருக்கிறேன்" என்ற பதிவு கூட நல்ல தமாஷ். அவர்கள் விரும்பினால் கூட அவர்கள் மதத்தைவிட்டு வெளியேறுவதோ, மதம் மாறுவதோ சுலபமாக மற்றய மதத்தவர் போல் செய்யகூடிய காரியமா! முஸ்லிமாகவே இருக்க வேண்டியது தான்.

Unknown said...

இதையும் வாசிங்க.

http://www.jerin.co.in/2010/12/blog-post.html

தருமி said...

//அனைத்து மதங்களுமே இறைவனால் கொடுக்கப்பட்டவையே//

!!!
இதற்குப் பதிலாக வேறென்ன சொல்ல?
முப்பது முக்கோடி தெய்வங்களும் இறைவனால் கொடுக்கப்பட்டவையே !!!

தருமி said...

//அநத மதங்கள் அந்த மக்களால் மாற்றப்பட்டதைத்தான் சுட்டிக் காட்டினேன். //

வழக்கமான சொல்லாடல்.
என் கேள்வி: எத்தனை ஆண்டுகளாக ஜிப்ரேல் குரானை முகமதுவிற்கு சொல்லியது? கால் நூற்றாண்டிற்கும் மேலாக! (ஏன் இத்தனை ஆண்டுகள் எடுக்க வேண்டும் என்றெல்லாம் கேட்கலாம் .. ) ஆனால் அதையும் தாண்டி ஒரு கேள்வி: எப்போதும் சொல்லப்படும் பொருள் - அதுவும் அல்லாவால் அருளப்பட்டு ஜிப்ரேலால் சொல்லப்பட்டவை - சர்வ நிச்சயமாக ஒரு தொடராக, ஏதாவது ஒரு தொடர்போடு (continuity) இருக்க வேண்டும். ஆனால் அப்படியா இருந்தது.

குரானின் வசனங்களைத் தொகுத்தவர் யார்? மனிதர்கள்தானே?
முன்னதைப் பின்னதாகவும், பின்னதை முன்னதாகவும் மாற்றியது யார்? மனிதக் கரங்கள்தானே? வெறும் நீளங்களை வைத்து முறைப்படுத்தியது யார்? மனிதர்கள் தானே? இப்படி தொடர்பின்மையை ஏற்படுத்தியது யார்? மனிதர்கள்தானே!

தருமி said...

//அவர்களுக்கிடையே பாகுபாடு காட்ட மாட்டோம். //

தாடி, மீசை வச்சிக்கிறது; அதுக்கு ‘கலர்’ அடிக்கிறது - இது மாதிரியான விஷயங்களில் கூட யூதர்கள், கிறித்துவர்கள் போலிருக்கக் கூடாது என்பதல்லவா கட்டளை!!

தருமி said...

//நேரம் கிடைக்கும்போது வருகிறேன்.//

awaiting ....

உமர் | Umar said...

//இறைவன் அளித்த அநத மதங்கள் அந்த மக்களால் மாற்றப்பட்டதைத்தான் சுட்டிக் காட்டினேன்.//

குர் ஆனில் கூட வசனங்கள் மாற்றப்பட்டுள்ளன என்று முன்னர் உரையாடியுள்ளோம். அதற்கு பதிலில்லை.

.

Anna said...

Completely agree with Dharumi Sir.

"நமது நாட்டில் சொந்தத்திலும் ஒரே ஊரிலும் திருமணம் முடிப்பதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். இப்படி நாடு விட்டு, இனம் விட்டு இஸ்லாம் மார்க்கம் ஒன்றினால் மட்டுமே இணைந்திருக்கும் இந்த ஜோடிகளை இறைவன் பொருந்திக் கொள்ளட்டும்."

இப்பொது எத்த‌னையோ த‌ம்ப‌திய‌ர் எல்லாத்தையும் விட்டு ம‌ன‌ம் ஒன்றிய‌தால் ம‌ட்டுமே இணையும் கால‌ம் சில‌ நாடுக‌ளில் கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாக‌ சாதிய‌மாகிக் கொண்டுவ‌ருகின்ற‌து.

"அந்த மக்களால் எந்த அளவு அந்த மதங்கள் பின்பற்றப்படுகிறது என்பதையும் நாம் பார்க்க வேண்டும். அமெரிக்காவிலும் இன்னபிற ஐரோப்பிய நாடுகளிலும் கிறித்தவ மதம் பெயரளவுக்குத்தான் உள்ளது. அந்த மக்களின் வாழ்க்கையில் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்ப்படுத்தவில்லை. அதிகம் நாத்திகர்களைத்தான் உருவாக்கியிருக்கிறது."

This is true with the exception of America being non-religious. அமெரிக்காவில் இன்னும் எத்த‌னையோ கிறித்த‌வ‌ fundamentalists உள்ள‌ன‌ர். இந்த நாத்திக வளர்ச்சிக்குக் காரணம் மதமல்ல, சுதந்திரமாகச் சிந்திக்கும் உரிமையும் சுதந்திரமாக எந்த அறிவையும் பெறக்கூடியதாக இருப்பதுமே. இவையிரண்டும் இஸ்லாமிய மத நாடுகளில் 100% இல்லை. மதத்திற்கு எதிராக சிறுதாக ஏதும் சொன்னாலே மரண தண்டனை எனும் போது, இதெல்லாம் எப்படி சாத்தியமாகும்?

தருமி said...

//குர் ஆனில் கூட வசனங்கள் மாற்றப்பட்டுள்ளன என்று முன்னர் உரையாடியுள்ளோம். அதற்கு பதிலில்லை.//

கும்மி,
நானும் என் பதிவொன்றில் மனிதக் கரம் படியாதது என்பதை மறுத்து எழுதியுள்ளேன். பதிலில்லை.

முதல் பதிவில் Why i am not muslim என்ற நூல், அடுத்த பதிவில் "god is not great" என்ற நூல், கடைசியாக இப்பதிவில் சாங்கிருத்யாயனின் நூல் --- இம்மூன்று பதிவுகளிலும் குரானின் காலக் கட்டமைப்பு, அவைகள் தொகுக்கப்பட்ட விதம், அவைகளில் இயற்கையாக நிகழக்கூடிய குழப்பங்கள், தொகுத்த பின் அவைகளை ஏற்றுக் கொள்வதில் வந்த வரலாற்றுக் குழப்பங்கள், மாறுபட்ட கருத்துக்கள், அரசியல் தலையீடுகள் என்று பலவற்றைக் குறிப்பிட்டுள்ளேன்.


இத்தனை குழப்பங்களையும், மனிதக் குறைபாடுகளையும் கவனத்தில் எடுத்துக் கொண்டால் 1400 வருடங்களாக மனிதக் கரம் படாத நூல் என்று குரானைக் கூறுவதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? மத நம்பிக்கைகள், சிறுவயதிலிருந்தே சொல்லிக் கொடுக்கப்படும் பாடங்கள் என்பவற்றைத் தள்ளி வைத்து விட்டுப் பார்க்க முடிந்தால் உண்மை பட்டெனத் தெரியும்.

சீனு said...

//ஆனால் ஆங்கிலத்தில் : When you meet the unbelievers, strike off their heads;... என்று உள்ளது. (”நீங்கள் போரில் சந்திக்க நேர்ந்தால்//- இது ஏன் ஆங்கில நூலில் இல்லை? தமிழில் யார், ஏன் சேர்த்தது ??!!)//

இது ஏற்கனவே உங்களின் ஒரு பதிவில் இட்டது. மீண்டும் மறுமொழியிடுகிறேன்...

"ஒரு முன்னாள் இஸ்லாமியர் வஃபா சுல்தான் சொன்னது, "குரானை உண்மையான அர்த்தத்தில் தெரிந்துகொள்ள வேண்டுமாணால் அதை அரபியில் படிக்கவேண்டும். காரணம், மற்ற மொழிகளில் மொழி பெயற்க்கப்படும் பொழுது அதன் அர்த்தத்தில் மேலே 'சர்க்கரை' தடவி சொல்லப்பட்டிருக்கும். உதா, நபி ஒரே இரவில் 900 யூதர்களை கொன்று அன்று இரவு கொல்லப்பட்ட யூதர்களின் மனைவிமார்கள், தங்கைகள், மகள்களுடன் உறவு கொண்டார் என்று அரபி தெரிந்த குழந்தைகளுக்கு பாடநூலாக சொல்லப்படுகிறது" என்றார். தெரிந்தவர்கள் யாராவது விளக்கினால் சரி!"

suvanappiriyan said...

தருமி!

//நான் ஒரு கிறித்துவ நாட்டில் இருந்தாலும் அந்தக் கடவுளை என்னால் புறக்கணிக்க முடியும். ஒரு இஸ்லாமிய நாட்டில் இந்த “சுதந்திரம்” உண்டா? இந்த இறுக்கத்தின் காரணம் - சிறு வயதிலிருந்தே சொல்லிப் பயமுறுத்தப்படும் காரணம் - இதுவே உங்கள் கேள்விக்கான பதில். அதோடு மத நம்பிக்கை, இறுக்கம் இந்த இரண்டும் எந்த மனிதனையும் நல்லவனாக வைத்திருக்க முடியாது.//

சவுதியில் இலட்சக்கணக்கில் இந்து நண்பர்கள் உள்ளனர். பல வருடங்களாக குடும்பத்தோடு வாழ்ந்து வருகின்றனர். அவர்களை யாரும் இது வரை கட்டாயப்படுத்தியதில்லையே! சிறு வயதில் ஒருக்கால் பயத்தினால் நான் இஸ்லாத்தை கடைபிடிக்க ஆரம்பித்திருக்கலாம். இப்பொழுது எல்லாம் விளங்கியவுடன் நான் ஏன் இஸ்லாத்தை விட்டு இது வரை வெளி வரவில்லை. உண்மையான காரணம் நான் குர்ஆன் இறைவனால் அருளப்பட்டது என்பதை எந்த சந்தேகத்திற்கு இடமின்றி நம்புவதால்தான். அது இறைவனால் அருளப்பட்டது என்பதை எப்படி தெரிந்து கொண்டீர்கள் என்று கேட்டால் அதற்கும் பதில் இருக்கிறது.

//ஏதோ எதிரிகள்

முகமதைyum, இஸ்லாமியரைyum விரட்டி விரட்டி அடித்தது போன்ற

ஒரு ‘பாவ்னையை’ ஏற்படுத்தியுள்ளீர்கள். இருவரும் ஒருவரை

ஒருவர் மாற்றி மாற்றி வெட்டிக்கொண்டார்கள் என்பதுதான் வரலாறு.//

இஸ்லாத்தை போதிப்பதற்கு முன்னால் மிகச் சிறந்த செல்வந்தராக இருந்தவர் முகமது நபி. அனைத்தையும் அபகரித்துக் கொண்டு மக்காவிலிருந்து மதினாவுக்கு எதிரிகள் விரட்டி அடிக்கின்றனர். மதினாவில் முகமது நபியின் கொள்கையை ஏற்று ஒரு கணிசமான ஆட்கள் சேர்ந்து விட்டனர் என்று கேள்விப்பட்டு அங்கும் அவரையும் அவரது தோழர்களையும் கொலை செய்ய படை திரட்டி வந்ததாலேயே போர் அவசியமாகிறது. ஆதாரமான இந்த வரலாறை பிறகு நான் தனிப் பதிவாகவே போடுகிறேன்.

குர்ஆனில் 'கொல்லுங்கள்' என்று ஒரு வசனம் வந்தால் அதற்கு முந்திய வசனத்தையும் சேர்த்து படித்தால் தான் அது போர்க் களத்தில் சொல்லப்பட்ட வசனம் என்பதை விளங்க முடியும். அந்த வசனம் எப்பொழுது இறங்கியது, அதற்கான காரணம் அனைத்தையும் அவரின் தோழர்கள் சொல்ல அனைத்தும் வரலாறாக பாதுகாக்கப்பட்டுள்ளது. எந்த எந்த வசனம் உங்களை குழப்புகிறது என்று வசன எண்னோடு தாருங்கள். அதற்குரிய விளக்கத்தைத் தருகிறேன்.

suvanappiriyan said...

தருமி!

//நான் ஒரு கிறித்துவ நாட்டில் இருந்தாலும் அந்தக் கடவுளை என்னால் புறக்கணிக்க முடியும். ஒரு இஸ்லாமிய நாட்டில் இந்த “சுதந்திரம்” உண்டா? இந்த இறுக்கத்தின் காரணம் - சிறு வயதிலிருந்தே சொல்லிப் பயமுறுத்தப்படும் காரணம் - இதுவே உங்கள் கேள்விக்கான பதில். அதோடு மத நம்பிக்கை, இறுக்கம் இந்த இரண்டும் எந்த மனிதனையும் நல்லவனாக வைத்திருக்க முடியாது.//

சவுதியில் இலட்சக்கணக்கில் இந்து நண்பர்கள் உள்ளனர். பல வருடங்களாக குடும்பத்தோடு வாழ்ந்து வருகின்றனர். அவர்களை யாரும் இது வரை கட்டாயப்படுத்தியதில்லையே! சிறு வயதில் ஒருக்கால் பயத்தினால் நான் இஸ்லாத்தை கடைபிடிக்க ஆரம்பித்திருக்கலாம். இப்பொழுது எல்லாம் விளங்கியவுடன் நான் ஏன் இஸ்லாத்தை விட்டு இது வரை வெளி வரவில்லை. உண்மையான காரணம் நான் குர்ஆன் இறைவனால் அருளப்பட்டது என்பதை எந்த சந்தேகத்திற்கு இடமின்றி நம்புவதால்தான். அது இறைவனால் அருளப்பட்டது என்பதை எப்படி தெரிந்து கொண்டீர்கள் என்று கேட்டால் அதற்கும் பதில் இருக்கிறது.

//ஏதோ எதிரிகள்

முகமதைyum, இஸ்லாமியரைyum விரட்டி விரட்டி அடித்தது போன்ற

ஒரு ‘பாவ்னையை’ ஏற்படுத்தியுள்ளீர்கள். இருவரும் ஒருவரை

ஒருவர் மாற்றி மாற்றி வெட்டிக்கொண்டார்கள் என்பதுதான் வரலாறு.//

இஸ்லாத்தை போதிப்பதற்கு முன்னால் மிகச் சிறந்த செல்வந்தராக இருந்தவர் முகமது நபி. அனைத்தையும் அபகரித்துக் கொண்டு மக்காவிலிருந்து மதினாவுக்கு எதிரிகள் விரட்டி அடிக்கின்றனர். மதினாவில் முகமது நபியின் கொள்கையை ஏற்று ஒரு கணிசமான ஆட்கள் சேர்ந்து விட்டனர் என்று கேள்விப்பட்டு அங்கும் அவரையும் அவரது தோழர்களையும் கொலை செய்ய படை திரட்டி வந்ததாலேயே போர் அவசியமாகிறது. ஆதாரமான இந்த வரலாறை பிறகு நான் தனிப் பதிவாகவே போடுகிறேன்.

குர்ஆனில் 'கொல்லுங்கள்' என்று ஒரு வசனம் வந்தால் அதற்கு முந்திய வசனத்தையும் சேர்த்து படித்தால் தான் அது போர்க் களத்தில் சொல்லப்பட்ட வசனம் என்பதை விளங்க முடியும். அந்த வசனம் எப்பொழுது இறங்கியது, அதற்கான காரணம் அனைத்தையும் அவரின் தோழர்கள் சொல்ல அனைத்தும் வரலாறாக பாதுகாக்கப்பட்டுள்ளது. எந்த எந்த வசனம் உங்களை குழப்புகிறது என்று வசன எண்னோடு தாருங்கள். அதற்குரிய விளக்கத்தைத் தருகிறேன்.

suvanappiriyan said...

தருமி!

//நான் ஒரு கிறித்துவ நாட்டில் இருந்தாலும் அந்தக் கடவுளை என்னால் புறக்கணிக்க முடியும். ஒரு இஸ்லாமிய நாட்டில் இந்த “சுதந்திரம்” உண்டா? இந்த இறுக்கத்தின் காரணம் - சிறு வயதிலிருந்தே சொல்லிப் பயமுறுத்தப்படும் காரணம் - இதுவே உங்கள் கேள்விக்கான பதில். அதோடு மத நம்பிக்கை, இறுக்கம் இந்த இரண்டும் எந்த மனிதனையும் நல்லவனாக வைத்திருக்க முடியாது.//

சவுதியில் இலட்சக்கணக்கில் இந்து நண்பர்கள் உள்ளனர். பல வருடங்களாக குடும்பத்தோடு வாழ்ந்து வருகின்றனர். அவர்களை யாரும் இது வரை கட்டாயப்படுத்தியதில்லையே! சிறு வயதில் ஒருக்கால் பயத்தினால் நான் இஸ்லாத்தை கடைபிடிக்க ஆரம்பித்திருக்கலாம். இப்பொழுது எல்லாம் விளங்கியவுடன் நான் ஏன் இஸ்லாத்தை விட்டு இது வரை வெளி வரவில்லை. உண்மையான காரணம் நான் குர்ஆன் இறைவனால் அருளப்பட்டது என்பதை எந்த சந்தேகத்திற்கு இடமின்றி நம்புவதால்தான். அது இறைவனால் அருளப்பட்டது என்பதை எப்படி தெரிந்து கொண்டீர்கள் என்று கேட்டால் அதற்கும் பதில் இருக்கிறது.

suvanappiriyan said...

தருமி!
//ஏதோ எதிரிகள்
முகமதைyum, இஸ்லாமியரைyum விரட்டி விரட்டி அடித்தது போன்ற
ஒரு ‘பாவ்னையை’ ஏற்படுத்தியுள்ளீர்கள். இருவரும் ஒருவரை
ஒருவர் மாற்றி மாற்றி வெட்டிக்கொண்டார்கள் என்பதுதான் வரலாறு.//
இஸ்லாத்தை போதிப்பதற்கு முன்னால் மிகச் சிறந்த செல்வந்தராக இருந்தவர் முகமது நபி. அனைத்தையும் அபகரித்துக் கொண்டு மக்காவிலிருந்து மதினாவுக்கு எதிரிகள் விரட்டி அடிக்கின்றனர். மதினாவில் முகமது நபியின் கொள்கையை ஏற்று ஒரு கணிசமான ஆட்கள் சேர்ந்து விட்டனர் என்று கேள்விப்பட்டு அங்கும் அவரையும் அவரது தோழர்களையும் கொலை செய்ய படை திரட்டி வந்ததாலேயே போர் அவசியமாகிறது. ஆதாரமான இந்த வரலாறை பிறகு நான் தனிப் பதிவாகவே போடுகிறேன்.

குர்ஆனில் 'கொல்லுங்கள்' என்று ஒரு வசனம் வந்தால் அதற்கு முந்திய வசனத்தையும் சேர்த்து படித்தால் தான் அது போர்க் களத்தில் சொல்லப்பட்ட வசனம் என்பதை விளங்க முடியும். அந்த வசனம் எப்பொழுது இறங்கியது, அதற்கான காரணம் அனைத்தையும் அவரின் தோழர்கள் சொல்ல அனைத்தும் வரலாறாக பாதுகாக்கப்பட்டுள்ளது. எந்த எந்த வசனம் உங்களை குழப்புகிறது என்று வசன எண்னோடு தாருங்கள். அதற்குரிய விளக்கத்தைத் தருகிறேன்.

உமர் | Umar said...

// அரபி தெரிந்த குழந்தைகளுக்கு பாடநூலாக சொல்லப்படுகிறது//

அரேபியாவில் இருக்கும் நிலை பற்றி தெரியவில்லை. ஆனால், பொதுவாக அரபி மொழி கற்றுக்கொடுக்கும் எந்த வழிமுறையிலும், நபிகளின் வாழ்க்கை வரலாறு ஒரு பாடமாக இருக்கும்.

அரபி மொழி கற்றுக்கொடுக்கும் ஒரு வலைதளத்திற்கான முன்னுரை எனக்கு இப்படி வந்தது.

"This site presents an online arabic course, which is very unique in its format and delivery. Every week, you have to listen to 2 to 3 hours of recorded sessions along with 2 hours of live sessions with the teacher. From the third week itself, you will start reading an arabic book - the stories of the prophets and translating from it."

தங்கள் தலைவரின் வரலாற்றை எப்படி கூறுவார்கள் என்பதுதான் தெரியுமே. தமிழகத்தில் சில பத்தாண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு சாதி சங்கத் தலைவர், இன்று கடவுளாக்கப்பட்டு வருகின்றாரே.

உமர் | Umar said...

//சவுதியில் இலட்சக்கணக்கில் இந்து நண்பர்கள் உள்ளனர். பல வருடங்களாக குடும்பத்தோடு வாழ்ந்து வருகின்றனர். அவர்களை யாரும் இது வரை கட்டாயப்படுத்தியதில்லையே!//

கேள்வியை தவறாக புரிந்து கொண்டு பதிலளித்துள்ளீர்கள். சவுதியில் இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்த ஒருவர், இஸ்லாத்தைத் துறப்பதை வெளிப்படையாக அறிவிக்க முடியுமா?

உமர் | Umar said...

Wafa Sultan இன் பேட்டி அடங்கிய கலையரசனின் பதிவு.

இஸ்லாத்தை விட்டு வெளியே வந்த இவரை மிரட்டிக்கொண்டிருக்கின்றனரே. அதைதான் இங்கே நாம் பேசுகின்றோம்.

கேள்வி மிகத் தெளிவாக இருக்கின்றது. ஒரு இஸ்லாமிய நாட்டில் இஸ்லாத்தைத் துறக்கும் “சுதந்திரம்” உண்டா?

suvanappiriyan said...

தருமி!

//எப்போதும் சொல்லப்படும் பொருள் - அதுவும் அல்லாவால் அருளப்பட்டு ஜிப்ரேலால் சொல்லப்பட்டவை - சர்வ நிச்சயமாக ஒரு தொடராக, ஏதாவது ஒரு தொடர்போடு (continuity) இருக்க வேண்டும். ஆனால் அப்படியா இருந்தது.//

நீங்கள் உங்கள் மகனுக்கு 10 வருடமாக அறிவுரைகளைக் கூறி வருகிறீர்கள். அந்த அறிவுரைகளை எல்லாம் ஒரு புத்தகமாக தொகுத்தால் அதில் ஒரு தொடர் கிடைக்குமா? கண்டிப்பாக கிடைக்காது.

அதே போல் குழந்தை 7 வயதாக இருக்கும்போது வீட்டை விட்டு அதிகம் வெளியில் அனுப்ப மாட்டோம். அதே குழந்தை 18 வயது வாலிபனாகும் போது 'வீட்டிலேயே ஏன் அடைந்து கிடக்கிறாய்? நாலு பேரோடு சேர்ந்து பழகு' என்று வீட்டை விட்டு வெளியே நாமாக அனுப்புவோம். ஒரே தந்தை சில வருடங்களுக்குள்ளாகவே தனது அறிவுரையை மாற்றிக் கொள்கிறார். இதே அளவு கோளை அன்றைய அரபு மக்களோடு பொருத்திப் பாருங்கள். குர்ஆனின் தொடர்பின்மையும், அறிவுரைகள் மாறுவதும், ஒரே அறிவுரை பலமுறை வருவதும் அந்த மக்களுக்கு முகமது நபி 23 ஆண்டுகள் போதித்தவைகளே! 23 ஆண்டுகள் ஒருவரின் போதனைகளை தொகுத்தால் எப்படி இருக்குமோ அதைத்தான் குர்ஆனாகவும், முகமது நபியின் வாழ்க்கை வரலாறாகவும் பார்க்கிறோம்.

//குரானின் வசனங்களைத் தொகுத்தவர் யார்? மனிதர்கள்தானே?
முன்னதைப் பின்னதாகவும், பின்னதை முன்னதாகவும் மாற்றியது யார்? மனிதக் கரங்கள்தானே? வெறும் நீளங்களை வைத்து முறைப்படுத்தியது யார்? மனிதர்கள் தானே? இப்படி தொடர்பின்மையை ஏற்படுத்தியது யார்? மனிதர்கள்தானே!//

இதனால் குரஆனின் வசனங்கள் எதுவும் மாற்றப்படவில்லையே! குர்ஆன் முழுவதையும் மனனமாக்கிய பல தோழர்களின் முன்னிலையில்தான் தொகுக்கப்பட்டதாக வரலாறு.

suvanappiriyan said...

கும்மி!
//குர் ஆனில் கூட வசனங்கள் மாற்றப்பட்டுள்ளன என்று முன்னர் உரையாடியுள்ளோம். அதற்கு பதிலில்லை.//

நமது நாடு சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகள் கூட ஆகவில்லை. ஆனால் அறுபதுக்கு மேல் சட்ட திட்டங்களில் மாற்றங்களை ஏற்படுத்தி விட்டோம். நமது மேல் உள்ள அக்கறையினால் நமது ஆட்சியாளர்க்ள செய்யும் இந்த திருத்தங்களை நாம் ஏற்றுக் கொண்டுள்ளோம். அதே போல் சட்டத்தை சொன்ன இறைவன் மகனுக்கு தந்தை கூறும் அறிவுரை போல் நமது நன்மையை கருதி சட்டத்தை மாற்றுகிறான். ஆனால் இந்து, கிறித்தவ,யூத மார்க்கங்களில் மனிதர்களே இறைவனின் சட்டத்தை மாற்றி விட்டனர். 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' தான் நம் முன்னோர்களின் மார்க்கம். ஆனால் இன்று தெருவுக்கு ஒரு கடவுள் நம் நாட்டில் வந்ததும், முக்கடவுள் கொள்கை கிறித்தவத்தில் புகுந்ததும் இறை வேதத்தில் மனிதக் கரங்கள் புகுந்ததால்தான். இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை விளங்கியிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

suvanappiriyan said...

சீனு!

//ஆனால் ஆங்கிலத்தில் : When you meet the unbelievers, strike off their heads;... என்று உள்ளது. (”நீங்கள் போரில் சந்திக்க நேர்ந்தால்//- இது ஏன் ஆங்கில நூலில் இல்லை? தமிழில் யார், ஏன் சேர்த்தது ??!!)//

நான் முன்பே சொன்னதுபோல் ஒரு வசனம் எந்த இடத்தில் சொல்லப்பட்டது என்பதை தெரிந்து கொள்ள அதன் முதல் வசனத்தை பார்த்தால் எளிதில் விளங்கும். சில தமிழ் மொழி பெயர்ப்பாளர்கள் படிப்பவர்களுக்கு குழப்பம் ஏற்படாமல் இருக்க அடைப்புக் குறிக்குள் முதல் வசனத்தின் இடத்தை எழுதுவார்கள். சில ஆங்கில மொழி பெயர்ப்பாளர்கள் மக்கள் விளங்கிக் கொள்வார்வகள் என்ற ரீதியில் விட்டிருக்கலாம். ஆனால் மூலப்பிரதியில் இன்று வரை எந்த மாற்றமும் இல்லை. சீனுவுக்கு இன்னும் சந்தேகம் ஏற்ப்பட்டால் ரஷயாவுக்கும் துருக்கிக்கும் சென்று மூலப்பிரதியை பார்வையிட்டுக் கொள்ளலாம்.

suvanappiriyan said...

ஏன் துறக்க வேண்டும்? ஐயா! ஒரு இசமோ, ஒரு மார்க்கமோ தவறாக இருக்கும் பட்ஷத்தில் தான் மற்றதைப் பற்றி யோசிக்க வேண்டும். என் பூர்வீக மதம் என்னை சிறுமைபடுத்தியதால்தான் என் முன்னோர்கள் மதம் மாறினர். திரும்பவும் புறப்பட்ட இடத்துக்கே வர வேண்டும் என்றால் அதற்குரிய காரணம் வேண்டும் அல்லவா? ஒரு மக்களை நேர் வழிப் படுத்தும் பொறுப்பு கண்டிப்பாக ஒரு அரசுக்கு உண்டு. தவறான வழி காட்டுதல் அந்த மக்களை திசை திருப்பி விடக் கூடாதல்லவா!

மதங்களையே வெறுத்த பெரியாரே 'அனைவரும் இஸ்லாத்தை நோக்கி செல்லுங்கள்' என்று சொன்னாரே!

'அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
மானம் உடையது அரசு.-குறள்

உமர் | Umar said...

//அதே போல் சட்டத்தை சொன்ன இறைவன் மகனுக்கு தந்தை கூறும் அறிவுரை போல் நமது நன்மையை கருதி சட்டத்தை மாற்றுகிறான். //

முதலில் என்ன சட்டம் சொன்னான். பிறகு அதை எப்படி மாற்றினான் என்று ஏதேனும் குறிப்புகள்?

எந்த அடிப்படையில் மாற்றப்பட்டது சட்டங்கள் என்று கூறுகின்றீர்கள்?

உமர் | Umar said...

சுவனப்பிரியன்,

இன்னொரு வேண்டுகோள். பதிலளிக்கும்போது நேரடியாக பதிலை மட்டும் கூறுங்கள். உதாரணங்கள் கேட்கும்போது கொடுங்கள்.

ஏனெனில், உதாரணம் கூறுவது போன்று வேறொன்றை கூறி இதுதான் அது என்று கூறுவது பிஜேயின் பாணி. Beating around the bush பற்றி மேலும் விபரங்களுக்கு எங்கள் தளத்தில் உள்ள இந்தப் பதிவினை பாருங்கள்.

ராவணன் said...

நானும் ஒரு பின்னூட்டம் இட்டேன், அது அங்கே வருமா வராதா என்று தெரியாது. அதனால் அப்படியே இங்கேயும் அதை பதிகின்றேன்.

"ஒரு சீன இனத்தவரையோ ஜப்பானியரையோ அவர்கள் திருமணம் செய்திருந்தால் கணியன் பூங்குன்றனாரின் கூற்று உண்மையாகும்,
அதைவிடுத்து அவர்கள் இசு லாமியர்களையே திருமணம் செய்ததை பூங்குன்றனாரின் கூற்றுக்கு ஒப்பாகுமா?

உங்கள் மதத்தில் யாராவது தமிழில் பெயர் வைக்கின்றீர்களா? பெயரைக்கூட தமிழில் வைக்காதவர்கள் கணியனை இழுக்கவேண்டாம்.

தமிழில் எழுதினாலும் பேசினாலும் யாரும் தமிழர்கள் ஆகமுடியாது.
அது யாராயிருந்தாலும் சரி.......
தமிழர்களாக வாழவேண்டும்."

தருமி said...
This comment has been removed by the author.
தருமி said...
This comment has been removed by the author.
தருமி said...
This comment has been removed by the author.
தருமி said...
This comment has been removed by the author.
தருமி said...

சுவனப்பிரியன்
பதிலளிக்க வசதியாக இருக்க வேண்டுமென்பதற்காக என் பின்னூட்டங்களை எண்ணிட்டு வரிசைப் படுத்தியுள்ளேன். 1 - 4

தருமி said...

.......... 1

//உண்மையான காரணம் நான் குர்ஆன் இறைவனால் அருளப்பட்டது என்பதை எந்த சந்தேகத்திற்கு இடமின்றி நம்புவதால்தான். //
-- மிக்க மகிழ்ச்சி. இதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த உங்களுக்கு இப்படித்தான் தோன்றுமென்பதை நான் பல இடங்களில் சொல்லியாயிற்று. ஒரு இந்துக் குடும்பத்தில் பிறந்திருந்தால் ஒரு சுப்பிரமணியனாக அந்த இறை நம்பிக்கையோடு இருந்திருப்பீர்கள். இது தான் நடைமுறை உண்மை.
ஆனாலும் எல்லோரும் உங்களைப் போல் மார்க்கத்தை முழுமையாக நம்ப முடியாது. சிலருக்கு சில கேள்விகள் மார்க்கத்தில் வரலாம். வந்தால் வெளியே சொல்ல முடியுமா யாராலும்? ஒரு கேள்வி கேட்டேனே .. தொலைக்காட்சியில் பர்கா -- இதில் சில பெண்களுக்கு ஒரு கேள்வி; இதை முன் வைக்க வந்தார்கள். என்ன சத்தம் உங்கள் பக்கமிருந்து. ஏன் உங்கள் மதங்களில் கேள்வியே கேட்கக் கூடாதா? கேட்டாலே அது blasphemyதானா? அதுவும் இந்த நாட்டிலேயே இப்படின்னா இஸ்லாமிய நாட்டில் எவன் எதில் கேள்வி கேட்பான்? ஆனால் நீங்கள் இஸ்லாமியர் எல்லோரும் மார்க்கத்தை ”ஒழுங்காக”க் கடைப் பிடிக்கிறார்கள் என்று சொல்லி விடுவீர்கள்; இல்லையா?

தருமி said...

.......... 2 ..........

//அது இறைவனால் அருளப்பட்டது என்பதை எப்படி தெரிந்து கொண்டீர்கள் ...// -- இதைப் பற்றி ஏற்கெனவே நான் சொன்னதை நீங்கள் வாசிக்கவேயில்லையா?

மனித சக்திக்கு மீறிய ஒன்றை 1400 ஆண்டுகளாகச் சொல்லி வருகிறீர்கள். நீங்கள் சொல்வது போல பலரின் மனத்தில் உள்ளதை கடவுள் கொடுத்த எழுத்து மாறாமல் எழுதி வைக்க மனிதனால் முடியாது. அதுவும் அந்த நேரத்தில் நடந்த வரலாற்றுக் குழப்பங்களுக்கு நடுவில். அப்படியே அது கடவுளால் நிறைவேற்றப்பட்டது என்று நீங்கள் கூறினீர்கள் என்றால் அதற்கும் ஒரு பழைய கேள்வி கேட்டாச்சு ... அப்போ //ஆபரஹாம், இஸ்மவேல்,யாகூப், மற்றும் அவரது வழித்தோன்றல்களுக்கு அருளப்பட்டதையும் மோஸேவுக்கும், ஏசுவுக்கும் வழங்கப்பட்டதையும் ஏனைய நபிமார்களுக்கு தமது இறைவனிடமிருந்து வழங்கப்பட்டதையும் நம்பினோம். // இந்த வஹிகளை ஏன் கடவுள் காப்பாற்ற முடியாது போயிற்று. மக்களால் மாற்றப்பட்டதை ஏன் கடவுள் தடுக்க முடியாது போயிற்று.

இதுபோன்ற லாஜிக்கலான கேள்விகள் நம்பிக்கையுள்ளோர் மனதில் தோன்றாது. எனக்கும் “ஒரு காலத்தில்” அப்படித்தான் இருந்தது.

தருமி said...
This comment has been removed by the author.
தருமி said...

............. 3 ...........

//ஆதாரமான இந்த வரலாறை பிறகு நான் தனிப் பதிவாகவே போடுகிறேன்.//

'இஸ்லாமியத் தத்துவம்’ என்ற நூலில் உள்ளதை நானே போட்டிருக்கிறேன். அது போதும். நடந்த கொடூரங்களை எதற்கு மீண்டும் மீண்டும் படித்துக் கொண்டு ....

//அது போர்க் களத்தில் சொல்லப்பட்ட வசனம் என்பதை விளங்க முடியும்.//
இதைத்தான் நானே கூறிவிட்டேனே இது ஒரு war cry என்று சொல்வீர்கள். அதற்குத்தான் நான் கூறினேன்: //எங்கேயாவது ஒரு சாமி ‘சண்டை போடு’ என்று சொன்னாலே அது எனக்கு மிக வேடிக்கையாகவும் நகை முரணாகவும் தோன்றுகிறது. இப்படியெல்லாம் ஒரு ”எல்லாம் வல்ல நல்ல கடவுள்” “போதிக்கலாமா”? // இப்படி கேட்டு இதற்கான உங்கள் பதிலையும் கேட்டிருந்தேன். நீங்கள் சொன்ன பழைய விஷய்ங்களையே சொல்கிறீர்கள்.

//குர்ஆனில் 'கொல்லுங்கள்' என்று ஒரு வசனம் வந்தால் ..// - இப்படி ஒரு வசனம் கடவுள் எந்த நிலையிலும் சொல்லலாமா என்பதுதான் என் கேள்வி. பச்சையா சொல்லணும்னா, எந்தக் காரணத்துக்கும் கொல்லுடான்னு சொல்ற 'சாமி' என்ன 'சாமி’யய்யா?

தருமி said...

.......... 4 ............

// எந்த எந்த வசனம் உங்களை குழப்புகிறது என்று வசன எண்னோடு தாருங்கள். அதற்குரிய விளக்கத்தைத் தருகிறேன்.
// -- எதுவும் என்னைக் குழப்பவில்லை. முகமது soft ஆக இருந்த போது, மெக்காவில் சுரா 109; தீவிரத்தன்மையில் மதீனாவில் சுரா 47.4-6 -- இந்த வசனங்கள்தான்.

//ஒரே தந்தை சில வருடங்களுக்குள்ளாகவே தனது அறிவுரையை மாற்றிக் கொள்கிறார். // -- அதாவது முதலில் ‘உன் மதம் உனக்கு; என் மதம் எனக்கு’; அதன் பின், ’இறை மறுப்பாளன் தலையை சீவு’. எப்டிங்க இவ்வளவு கிளியரா இருக்கிறதைப் பார்த்தும் .... ?

அது ஏனுங்க 23 வருஷம் மாத்தி மாத்தி போதிக்கணும். ஒரு வாத்தியார் ஒரு கொள்கை விளக்கம் கொடுக்கணும்னா பாய்ண்ட் பாய்ண்டா ஒவ்வொண்ணா வரிசையா கொடுப்பாங்க. மாத்தி மாத்தி சொல்லி கன்ஃப்யூஸ் பண்ண மாட்டாங்க.

//இதனால் குரஆனின் வசனங்கள் எதுவும் மாற்றப்படவில்லையே! .// -- இது நம்ப முடியாத ஒரு 1400 ஆண்டுக் கதை! கண்ணை இறுக மூடியவர்களுக்கு மட்டும் முழு உண்மை! இதை முன் நான் சொன்ன காரணங்களோடு பொருத்திக் கொள்ளுங்கள்.

தருமி said...

............. 5 .............

எங்கேயாவது ஒரு சாமி ‘சண்டை போடு’ என்று சொன்னாலே அது எனக்கு மிக வேடிக்கையாகவும் நகை முரணாகவும் தோன்றுகிறது. இப்படியெல்லாம் ஒரு ”எல்லாம் வல்ல நல்ல கடவுள்” “போதிக்கலாமா”? - இக்கேள்விக்கு உங்கள் பதிலை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

baleno said...

அமெரிக்காவிலும் இன்னபிற ஐரோப்பிய நாடுகளிலும் கிறித்தவ மதம் பெயரளவுக்குத்தான் உள்ளது.
அதிகம் நாத்திகர்களைத்தான் உருவாக்கியிருக்கிறது.
-சுவனப்பிரியன்
இந்த நாத்திக வளர்ச்சிக்குக் காரணம் மதமல்ல, சுதந்திரமாகச் சிந்திக்கும் உரிமையும் சுதந்திரமாக எந்த அறிவையும் பெறக்கூடியதாக இருப்பதுமே. இவையிரண்டும் இஸ்லாமிய மத நாடுகளில் 100% இல்லை. மதத்திற்கு எதிராக சிறுதாக ஏதும் சொன்னாலே மரண தண்டனை எனும் போது, இதெல்லாம் எப்படி சாத்தியமாகும்?
The Analyst ,மிக சிறப்பாக உண்மையை விளங்கபடுத்தியுள்ளீர்கள்.

Anna said...

Related reads:
Who Authored the Qur’an?

You Quote the Quran Out of Context

suvanappiriyan said...

ராவணன்!

//"ஒரு சீன இனத்தவரையோ ஜப்பானியரையோ அவர்கள் திருமணம் செய்திருந்தால் கணியன் பூங்குன்றனாரின் கூற்று உண்மையாகும்,
அதைவிடுத்து அவர்கள் இசு லாமியர்களையே திருமணம் செய்ததை பூங்குன்றனாரின் கூற்றுக்கு ஒப்பாகுமா?//

சீனாவிலும் ஜப்பானிலும் கூட முஸ்லிம்கள் இருப்பது உங்களுக்கு தெரியாதா? அதுவும் தவறு என்பீர்களோ!

//உங்கள் மதத்தில் யாராவது தமிழில் பெயர் வைக்கின்றீர்களா? பெயரைக்கூட தமிழில் வைக்காதவர்கள் கணியனை இழுக்கவேண்டாம்.//

ராமன், முருகன்,சரஸ்வதி போன்ற இந்து மக்களின் கடவுள் பெயர்களைத் தவிர்த்து அன்பழகன்,அன்பரசன், சுவனப்பிரியன் , போன்ற பெயர்களை தாராளமாக வைக்கலாம். அரபியில்தான் பெயர் வைக்க வேண்டும் என்று எந்த சட்டமும் இஸ்லாமில் இல்லை. பழைய இந்து பெயரிலேயே ஒருவர் இஸ்லாத்தை ஏற்றால் அவர் எந்த சாதி என்ற அடுத்த கேள்வி வரும். ஒரு திலிப்குமார் ரஹ்மானாக மாறும்போது அவரது முந்தய சாதி மறக்கப்படுகிறது. இதுதான் குறிப்பாக முஸ்லிம்கள் அரபியில் பெயர் வைக்கக் காரணம்.

//தமிழில் எழுதினாலும் பேசினாலும் யாரும் தமிழர்கள் ஆகமுடியாது.
அது யாராயிருந்தாலும் சரி.......
தமிழர்களாக வாழவேண்டும்."//

தமிழன் என்பது என்ன ஐநா சபை பதவியா? இவ்வளவு டிமாண்ட் பண்றீங்க! முதலில் தமிழன் என்றால் யார்? அவனுக்குரிய இலக்கணம் என்ன? யாரை எல்லாம் தமிழர்களின் லிஸ்டில் சேர்க்கப் போகிறீர்கள் என்று சொன்னால் கொஞ்சம் நன்றாக இருக்கும்.:-)

ஏதோ சீமானும், வைகோவும், நெடுமாறனும் காமெடி பண்ணிக்கிட்ருக்காங்க! நம்ம பொழப்பை பார்ப்போம் அப்பு! :-)

suvanappiriyan said...

தருமி!

//இந்த வஹிகளை ஏன் கடவுள் காப்பாற்ற முடியாது போயிற்று. மக்களால் மாற்றப்பட்டதை ஏன் கடவுள் தடுக்க முடியாது போயிற்று.//

சாத்தான் இறைவனைப் பார்த்து
'என் இறைவா! என்னை நீ வழி கெடுத்ததால் பூமியில் தீமைகளை அழகாக்கிக் காட்டுவேன். அவர்களில் உன்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட உனது அடியார்களைத் தவிர மற்றவர்கள் அனைவரையும் வழி கெடுப்பேன்' என்று கூறினான். -குர்ஆன் 15:36,40

மனிதர்களை நேர்வழியில் இருந்து பிறழச் செய்வதே சைத்தானின் வேலை. சாத்தானுக்கு அத்தகைய ஆற்றலை இறைவனே கொடுக்கிறான். பரீட்சையில் பாஸ் செய்பவர்களுக்கு சொர்க்கம். பெயில் ஆகிறவர்களுக்கு நரகம். சாத்தானின் மாயையில் வீழ்ந்த ஒரு சிலர் வேதங்களை மாற்றுகின்றனர்.

'மா சிதன்யதிவி சன்சதா' -'தெய்வீக தன்மை வாய்ந்த அவனையல்லாது வேறு எவரையும் வணங்காதீர்கள். அவனை மட்டுமே வணங்குங்கள்.'
-ரிக் வேதம் 8:1:1-10

'இஸ்ரவேலே கேள்! நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே!'
-மாற்கு 12:29

'நீங்கள் கேட்கிற வசனம் என்னுடையதாயிராமல் என்னை அனுப்பின பிதாவினுடையதாயிருக்கிறது.'
-யோவான் 14:24

இவ்வளவு தெளிவாக இறை வசனங்கள் இருக்க இந்து கிறித்தவ மதங்களில் இத்தனை தெய்வங்கள் எப்படி வந்தது? இது யாருடைய வேலை? கண்டிப்பாக சாத்தானின் வேலை.

suvanappiriyan said...

தருமி!

//எங்கேயாவது ஒரு சாமி ‘சண்டை போடு’ என்று சொன்னாலே அது எனக்கு மிக வேடிக்கையாகவும் நகை முரணாகவும் தோன்றுகிறது. இப்படியெல்லாம் ஒரு ”எல்லாம் வல்ல நல்ல கடவுள்” “போதிக்கலாமா”? - இக்கேள்விக்கு உங்கள் பதிலை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.//

'இறைவன் நாடியிருந்தால் எதிரிகளை போர்க்களத்தில் அவனே தண்டித்திருப்பான்.மாறாக உங்களில் ஒருவர் மூலம் மற்றவரை அவன் சோதிக்கிறான். இறைவனின் பாதையில் கொல்லப்பட்டோரின் செயல்களை அவன் வீணாக்கவே மாட்டான்.'- குர்ஆன் 47:4

உங்கள் கேள்விக்கு இறைவனே அழகாக பதிலளிக்கிளான். போர்க்களத்தில் இஸ்லாத்தின் எதிரிகளை இறைவனாலேயே நிர்மூலமாக்க முடியும். ஆனாலும் மனிதர்களில் உண்மையான நம்பிக்கையாளர் யார் என்பது போர்க் களத்தில்தான் தெரிய வரும். தன் உயிரையே துச்சமாக மதித்து போரிடும் ஒருவனுக்கு இதனாலேயே சொர்க்கமும் தருவதாக வாக்களிக்கிறான். அவர்கள் அன்று பட்ட அந்த துயரத்தினால்தான் எங்கோ தமிழகத்தில் இருக்கும் என்னால் இன இழிவு நீங்கி விடுதலையை சுவைக்க முடிகிறது. இல்லை என்றால் இன்றும் கூட எங்களையும் அர்ச்சகராக்கு, கருவறை வரை செல்ல எங்களுக்கும் அனுமதி கொடு, என்னறெல்லாம் நானும் போராட வேண்டியிருந்திருக்கும்.

கல்வெட்டு said...

.

மறுபடியும் மொதல இருந்தா? இருந்தாலும் உங்களுக்கு பொறுமை அதிகம் வாத்தியாரே. :-))))

***

சுவனப்பிரியன் குரான் வசனங்களில் தவறே இல்லை என்றும் அவை அனைத்தும் இறைவனாலே இறக்கப்பட்டது என்றும் நம்பும் ஒருவர். அனைத்தும் அவரது நம்பிக்கையாய் இருக்கும்வரை அவரை விட்டுவிடுவதே நல்லது.

***

அறிவியலை கேள்வி கேட்டால் மட்டும் பேசலாம் என்பது எனது நிலை.

அதற்கே தலை சுத்தி நாக்குத் தள்ளிவிடும். முதுகு விந்தணு உற்பத்தி மேட்டர் நினைவுக்கு வருகிறதா அய்யா?

***

நிலாவைல் பாட்டி வடை சுடுவதாக நானும் 7 வயதுவரை ( 8 க்கூட இருக்கலாம்) நம்பியதாகவே என் அம்மா கூறுகிறார்.

நான் இப்போது வளர்ந்துவிட்டேன்.

ஆனால் சக காலத்தில் பிறந்த சில குழந்தைகள் துரதிர்ஷ்டத்தால் , உடல் வளர்ந்திருந்தாலும் மூளை வளர்ச்சி இல்லாமல் அதே 7 வயதின் அறிவு நிலையிலேயே தேங்கிவிட்டார்கள் ( எல்லாம் இறைவன் செயல். அவன் அனுமதி இல்லாமல் ஒன்றும் நடக்காது. சாந்தி நிலவட்டும்) அவர்கள் இன்னும் பாட்டி வடை சுடுவதாக நம்புகிறார்கள். :-(((

நான் அவர்களிடம் தோற்கவே விரும்புகிறேன்.

அவர்களின் அந்த நம்பிக்கையே அவர்களை அந்த நிலையிலும் மகிழ்ச்சியாக வைத்து இருக்கிறது. அதைக் குலைக்க விரும்பவில்லை.

அவர்கள் ,நிலாவில் உள்ள பாட்டி சுட்ட வடைதான் தனக்கு வேண்டும் என்று அழுதால், தெரு முனையில் "செகப்பி பாட்டி" விற்கும் வடையை வாங்கிக் கொடுத்து அவர்களை நம்பவைப்பது தவறே அல்ல.

**

இறைவன் ஒருவரே. அவரே அம்பானியின் அடுக்கு மாளிகைக்கும் , வண்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்ட அருக்காணியின் நிலைக்கும் காரணம். எனது இறைவனின் புகழ் ஓங்குக. விரும்பியவர்கள் கட்சியில் சேரலாம். எல்லாம் நம்பிக்கையே. கேள்வி கேட்கக்கூடாது.

.

தருமி said...
This comment has been removed by the author.
தருமி said...

//இந்த வஹிகளை ஏன் கடவுள் காப்பாற்ற முடியாது போயிற்று. மக்களால் மாற்றப்பட்டதை ஏன் கடவுள் தடுக்க முடியாது போயிற்று.// -- ஆஹா .. அதாவது முதல் பாய்ண்டுக்கு பதில் இன்னும் சொல்லலை. இரண்டாவதிலிருந்து ஏன் ஆரம்பிக்கணும்? முதல் கேள்விக்கும் பதில் சொல்ல ஆரம்பியுங்களேன்...

தருமி said...

//என் இறைவா! என்னை நீ வழி கெடுத்ததால் ...// --
1. எப்படி கடவுள் ஷைத்தானைக் “கெடுத்தார்”? ஆதாமை காலில் விழுந்து வணங்கு என்று சொன்னதாலா..?
2.அது எப்படிங்க ஒரு கடவுள் ‘கெடுக்கலாம்’? (இது கல்வெட்டு சொல்ற பாட்டிக் கதை மாதிரி. ஆனாலும், உங்களுக்கு இந்த வயதிலும் {உங்க வயது தெரியாது. ஆனா நிச்சயமா 25+ இருக்கும்லா?} எப்படி நம்புவதற்குரியதாக இருக்கிறது?! )

//பரீட்சையில் பாஸ் செய்பவர்களுக்கு சொர்க்கம். பெயில் ஆகிறவர்களுக்கு நரகம். //
3. இதென்னங்க ரொம்ப அநியாயமா இருக்கு. பரிச்சை வைக்கிறது ஷைத்தான். ஆனால் பாஸ் / பெயிலுக்கு அல்லா தர்ர சொர்க்கம் / நரகம். உங்களுக்கே இது தப்பா / அநியாயமா தெரியலையா?

//கண்டிப்பாக சாத்தானின் வேலை.//
4. அப்போ அல்லா vs ஷைத்தான் - இதில் யார் சூப்பர் பவர்? அல்லா கொடுத்ததை ஷைத்தான் மாற்ற வைத்தால் பெரியவர் ஷைத்தான் தானே!

தருமி said...

//உங்கள் கேள்விக்கு இறைவனே அழகாக பதிலளிக்கிளான்.//
5. முகமது போடச்சொன்ன சண்டைக்கு அவரே கொடுத்த சால்ஜாப்பாகத் தெரிகிறது. (இது போன்ற சில வஹிதுகளை ஏற்கெனவே முன்னுதாரணம் காட்டியிருந்தேன். - ஆயிஷா ஜோக்)

//எங்கோ தமிழகத்தில் இருக்கும் என்னால் இன இழிவு நீங்கி விடுதலையை சுவைக்க முடிகிறது.//
6. உங்களைப் போல்தானுங்க நானும். ஆனால் அதற்கு அல்லா காரணமில்லைங்க. நான் வேற “கடவுளை” அல்லது அந்தக் கடவுளை என் சமூகத்திற்குக் கொண்டு வந்து சேர்த்த ”ஆட்களைக்” காரணமாகச் சொல்வேன்!!

சீனு said...

//அவர்கள் அன்று பட்ட அந்த துயரத்தினால்தான் எங்கோ தமிழகத்தில் இருக்கும் என்னால் இன இழிவு நீங்கி விடுதலையை சுவைக்க முடிகிறது. இல்லை என்றால் இன்றும் கூட எங்களையும் அர்ச்சகராக்கு, கருவறை வரை செல்ல எங்களுக்கும் அனுமதி கொடு, என்னறெல்லாம் நானும் போராட வேண்டியிருந்திருக்கும்.//

இங்கு போராடவாவது வழி இருக்கிறது. எங்களை நாங்களே திருத்திக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது என்றே நினைக்கிறேன்.

//ஆனால் மூலப்பிரதியில் இன்று வரை எந்த மாற்றமும் இல்லை. சீனுவுக்கு இன்னும் சந்தேகம் ஏற்ப்பட்டால் ரஷயாவுக்கும் துருக்கிக்கும் சென்று மூலப்பிரதியை பார்வையிட்டுக் கொள்ளலாம்.//

இந்த கேள்வியை தெருமி சார் கேட்டது என்று நினைக்கிறேன். சரி! ஆக, மொழிமாற்றம் செய்யப்படும் போது அர்த்தம் மாறுகிறது என்கிறீர்கள்? நீங்க எந்த குரானை படித்தீர்கள்? அரபியா, இல்லை மொழி மாற்றப்பட்டதையா?

சீனு said...

//ஐயா! ஒரு இசமோ, ஒரு மார்க்கமோ தவறாக இருக்கும் பட்ஷத்தில் தான் மற்றதைப் பற்றி யோசிக்க வேண்டும். என் பூர்வீக மதம் என்னை சிறுமைபடுத்தியதால்தான் என் முன்னோர்கள் மதம் மாறினர். திரும்பவும் புறப்பட்ட இடத்துக்கே வர வேண்டும் என்றால் அதற்குரிய காரணம் வேண்டும் அல்லவா?//

அப்படியா? அதனால் தான் மதம் மாறினீர்களா? நான் கூட என்னவோ ஏதோவென்று நினைத்து விட்டேன்... ;)

தருமி said...

//சில தமிழ் மொழி பெயர்ப்பாளர்கள் படிப்பவர்களுக்கு குழப்பம் ஏற்படாமல் இருக்க அடைப்புக் குறிக்குள் முதல் வசனத்தின் இடத்தை எழுதுவார்கள்.//

!!!!!!!!!!!

தருமி said...

//உங்களுக்கு பொறுமை அதிகம் வாத்தியாரே. :-))))
//

உங்க பொறுமை தான் ஆச்சரியம்.. :-))))

தருமி said...

//கிறித்தவ மதங்களில் இத்தனை தெய்வங்கள் எப்படி வந்தது?//

கிறித்துவ மதத்தின் உள்ளே இருந்துகூட இந்தக் கேள்வியை கேட்க முடியும். ஆனால் உங்கள் மதத்தில் கேள்வி கேட்டாலே ‘எல்லாம் முடிஞ்சி போச்சி’ அப்டின்னா ... நல்லாவா இருக்கு. இதையெல்லாம் இப்படி நீங்கள் யாரும் ஏன் யோசிக்கிறதேயில்லை!

தருமி said...

சீனு,
//அதனால் தான் மதம் மாறினீர்களா?// இப்போ உள்ள கிறித்துவ இஸ்லாமிய எல்லோரும் சாதி, கல்வி, இலவசம், அரசியல் - இதில் ஏதோ ஒன்றுக்காக மாறியவர்கள்தான் என்று என் முதல் பதிவுகளில் கூறியிருப்பேனே. என் மூதாதையருக்கு பாவம் என்ன படிப்பு, மறையறிவு இருந்திருக்கும்? மேற்சொன்ன ஏதோ ஒன்றினால் மாறியவர்கள்தானே அவர்கள்.

ஆனால் இன்று நாங்கள் எங்கள் மதத்தை எங்கள் உயிர் போன்றது. அது மட்டுமே உண்மையானது; உயரியது என்றெல்லாம் வசனம் பேசுவோம்.

எல்லாம் “காலத்தின் கட்டாயம்”.

ஏ.ஆர். ரஹ்மான்கூட மதம் புரிந்து மனம் மாறியவர் என்று நினைத்தேன்; அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. வயித்து வலி சரியாப்போச்சு ... அம்புடுதான்!

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

சகோ.சுவனப்பிரியன்,

//கேள்விகள் கேட்பதன்றி வேறொன்றும் அறியேன்,வலைஞர்களே!// ---இதை படிக்கவில்லையா, நீங்கள்? இவ்வளவு தெளிவாக அறிவித்தபின்னும் இவரிடம் போய்...?!?!?!?!

இதனால்தான், //அடிப்படைவாதம்: மாற்று மாதவராஜ்//--இந்த பதிவில் இவரை சேர்த்துக்கவே இல்லை நான்...

பதில்களையே படிக்காமல் திரும்பத்திரும்ப திரும்பத்திரும்ப திரும்பத்திரும்ப கேள்விகள் மட்டுமே கேட்பதை மட்டுமே பொழுதுபோக்காக நினைப்பவர்களை கேள்விகளை விற்பதற்கென்றே அதற்காகவே 'கடை' வைத்திருப்பவர்களை விட்டுவிடுங்களேன்... ப்ளீஸ்.

yasir said...

//வழக்கமான சொல்லாடல்.என் கேள்வி.எத்தனை ஆண்டுகளாக ஜிப்ரீல் குரானை முகம்மதுக்கு சொல்லியது? கால் நூற்றாண்டிற்கும் மேலாக!(ஏன் இத்தனை ஆண்டுகள் எடுக்க வேண்டும் என்றெல்லாம் கேட்கலாம்..)// இத்தோடு ஆகு என்று சொல்வ‌துதான் தாம‌த‌ம் அதுவாக‌ ஆகிவிடும் வ‌ல்ல‌மை வாய்ந்த‌வ‌னுக்கு உல‌கை ப‌டைக்க‌ ம‌ட்டும் ஆறு நாட்க‌ள் எத‌ற்கு?என்ற‌ கேள்வியும்,சேர்த்தே ஏற்க‌ன‌வே கேட்டாகிவிட்ட‌து அய்யா. அத‌ற்கு ஒரு ப‌ழுத்த‌ ப‌ழைமைவாதி இஸ்ல‌மிய‌ காமெடி கேள்வி ப‌தில் ஒன்றில் கீழ்க‌ண்ட‌வாறு எழுப்பிய கேள்விதான் இந்த‌ நூற்றாண்டின் மெகா சிரிப்பொலி.
"நாம் ஒரு 5 கேள்விக‌ள் கேட்டால் ம‌ன‌தில் ப‌திய‌ வேண்டும் என்ப‌த‌ற்காக‌ வாரா வார‌ம் ஒரு கேள்விக்கு ப‌தில் சொன்னால் 5 கேள்விக‌ளுக்கும் ஒரே நேர‌த்தில் ப‌தில் சொல்ல‌ முடிய‌வில்லை என்று ஆகுமா?ம‌ற்றும் ந‌ம‌க்கு 50 கிலோ எடையுள்ள‌ ஒரு பொருளை தூக்க‌ முடியும் ஆனால் தேவைக்கேற்ப‌ சிறிது சிறிதாக‌ தூக்கினால் ந‌ம‌க்கு 50 கிலோ எடையை தூக்க‌ முடிய‌வில்லை என்று ஆகுமா?மேலும் 50 கிலோ தூக்கும் ச‌க்தி உன‌க்கு இருந்தால் ஏன் கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாக‌ தூக்க‌ வேண்டும் என‌ எவ‌னாவ‌து கேட்பானா?
இப்ப‌டி ஒரு மெகா காமெடி அடித்து ந‌ம்மை சிரிக்க‌வும் சிந்திக்க‌வும் செய்துவிட்டார். ஒலிம்பிக் போட்டியில் ஒருவ‌ன் 100 கிலோ எடையை தூக்குவ‌த‌ற்கு ப‌திலாக‌ நான் ப‌த்துப‌த்து கிலோவாக‌ தூக்குகிறேன் என்றால் ப‌த‌க்க‌ம் கொடுப்பார்க‌ளா? அல்ல‌து ஏம்ப்பா கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாக‌ தூக்கி சிர‌ம‌ப்ப‌ட‌ வேண்டும்,உன‌க்குத்தான் 100 கிலோ தூக்கும் ச‌க்தி இருக்கே இந்தா புடி த‌ங்க‌ப்ப‌த‌க்க‌ம் என் எவ‌னாவ‌து கொடுப்பானா?வ‌ல்ல‌மையை நிரூபிக்க‌வே போட்டிக‌ள் ஒரே நேர‌த்தில் 100 கிலோ தூக்குகிற‌வ‌னே வ‌ல்ல‌மை ப‌டைத்த‌வ‌ன். அதுபோல் ஆகு என்ற‌ ஓசையில் உல‌க‌மும் ஒரே நேர‌த்தில் ஒரு நொடியில் இற‌ங்கியிருக்க‌ வேண்டும் வேத‌மும்,அப்ப‌டி இல்லாத‌தால் இறைவ‌ன் என்கிற க‌ற்ப‌னைக்கு வ‌ல்ல‌மை ஏதும் இல்லை.

தருமி said...
This comment has been removed by the author.
தருமி said...

அய்யா முகமது ஆஷிக் அவர்களே,

சுவனப்பிரியன் பதிவிலேயே பின்னூட்டம் போட்டிருக்கலாமே. நானே அங்கேயே போய் வாசித்திருப்பேன். ரெண்டு எடத்தில கடை போட்டு ஒண்ணும் இல்லன்னு இங்கே கடை போட வந்திட்டீங்க போலும். //இவ்வளவு தெளிவாக அறிவித்தபின்னும் இவரிடம் போய்...?!?!?!?!// தெரிஞ்சும் ஏனய்யா இங்கே கடை போட வந்தீங்க? இங்கே அவர் கடை போடக்கூடாதுன்னு சொல்ல வந்தீங்க போலும் ...நல்லது. அய்யா,

திரும்பத்திரும்ப திரும்பத்திரும்ப திரும்பத்திரும்ப கேள்விகள் மட்டுமே கேட்டால் என்ன அர்த்தம்னு தெரியலையா? கேட்ட கேள்விகளுக்கு இதுவரை ஒழுங்கான பதில் ஏதும் இல்லைன்னுதானய்யா பொருள். சரியான பதில் வர்ரது வரை நல்ல வாத்தியார் க்ளாஸ்ல திரும்பத்திரும்ப கேள்வி கேட்பாருங்க. இங்கேயும் அதே கதைதானுங்க.

பதில்னு நீங்க சொல்றதை கேட்டுட்டு அதோடு வாயை மூடிக்கிணம்னு நினைக்கிறீங்க.
எல்லாத்துக்கும் நாலு; உங்க முகமதுக்கு கணக்கில்லையேன்னா - அது அப்படித்தான்; அல்லா உத்தரவு கொடுத்துட்டார் அப்டின்னா அதான் பதிலா?

ஏங்க, வளர்ப்பு மகன் பிள்ளையைக் கட்டிக்கிட்டார் அப்டின்னா, அது அப்படித்தான் அப்டின்னும், வளர்ப்பு பிள்ளை என்ன உண்மையான பிள்ளையான்னு மிகப் பயங்கர அறிவுக் கூர்மையோடு பதில் சொல்வீங்களே அதை அப்படியே ஏத்துக்கிட்டு பேசாம போயிடணுமோ?

ஏய்யா, உங்க சாமி கழுத்தை சீவுன்னு சொல்லுதேன்னா சண்டைக்கு போகும்போது எங்க கடவுள் சொன்னது அதுன்றீங்க. அதென்னங்க, உங்க கதைப்படி கூட முந்திய நபி ஈசா தப்பித்துதானே போனார்; முகமது மட்டும் ஏனிப்படி சண்டை போடுறார். எந்த கடவுளாவது சண்டை போடு; கழுத்தை வெட்டு அப்டின்னு சொல்லலாமான்னு கேட்டா பதிலே சொல்லலை... அப்போ திரும்பத்திரும்ப கேள்விதான்.

விந்து கதை - அது ஒரு நல்ல கதை. முதுகுத் தண்டிற்கும் நெஞ்செலும்புக்கும் நடுவில் இருந்து அப்டின்னு ஒரு தத்துவம் ..
அடுத்து, தேனீ பழம் சாப்பிடுதுன்னு குரான்ல சொல்லியிருக்கேன்னா அதுக்கும் ஏதோ ஒரு அழகு பதில் ...

இதுமாதிரி தனிப் பதிவு போட்டு ஒரு பாடு எழுதலாமுங்க. இப்படி நீங்க சொல்ற பதில்களை படித்துவிட்டு வாயைத் திறக்காம போக முடியுங்களா? திரும்பத்திரும்ப திரும்பத்திரும்ப திரும்பத்திரும்ப கேள்விகள் மட்டுமே கேட்டிக்கிட்டுதானே இருக்கணுமுங்க; இப்போ இந்த சில உதாரணங்களோடு நிப்பாட்டிக்கிட்டு அடுத்த விஷயத்துக்குப் போகலாமா?

உமர் | Umar said...

@yasir

நானும் அந்த சிரிப்பொலி நிகழ்ச்சி பார்த்து சிரித்தேன். எப்பொழுதுமே சம்பந்தமில்லாத ஒரு உதாரணத்தைக் கூறுவதன் மூலம், பேசுபொருளை வேறு பக்கம் கொண்டு சென்றுவிடுவார்கள். அதனால்தான், நான் தற்பொழுதெல்லாம் நேரடி பதிலை மட்டும் கூறுங்கள்; உதாரணங்கள் வேண்டாம் என்று கூறி விடுகின்றேன்.

தருமி said...

ஆஷிக்,

மாதவராஜ், வேணு கோபாலன் இருவரும் கொஞ்சம் கூட இரக்கமில்லாதவர்கள்! நீங்க கேள்வி கேட்டு, 3 please போட்டும், அதையே இரண்டு நாட்களாய் தொடர்ந்து கேட்டபின்னும் மாதவராஜ் பெரியமனதுடன் போனால் போகட்டும்' என்று இரண்டு நாள் கழித்து மறுமொழி கொடுத்துள்ளார். ஆனால் நான் அப்படியெல்லாம் இல்லைங்க... நீங்க கேட்ட கேள்விகளுக்கும் அதோடு மூன்று முறை போட்ட pleaseக்கும் சேர்த்து உங்க கேள்விகளுக்கு நான் பதில் சொல்கின்றேனுங்க ...

அதற்கு முன்னால் .. உங்களை நீங்களே ஒரு ‘அடிப்படைவாதி’ என்று அழைத்துக் கொள்கிறீர்கள். அகராதியின் பொருள்படி இதில் ஏதும் தப்பில்லை. ஆனால், அடிப்படைவாதி என்பது எப்போதும் ஒரு negative பொருளையே வழக்கில் கொண்டுள்ளது. (இதைப் பற்றி கவலைப்படக்கூடிய அடிப்படைவாதி நீங்கள் இல்லை என்று தெரியும். இருந்தும் ...)
----------------------------

மத நம்பிக்கை என்றால் என்ன?
மதம் என்ற பெயரால் என்ன சொன்னாலும் கண்மூடி நம்புவது. (உதா: கங்கையின் புனிதம்; ஹஜ் யாத்திரை; கிறித்துவ அதிசய சுகமளித்தல்)

அடிப்படைவாதம் என்றால் என்ன?
மனிதம், மனித நேயம் எல்லாம் தொலைத்து, மொட்டையான கொள்கைகள் என்று சிலவற்றைக் கட்டி மாரடிப்பது. (உதா: சமய வழிபாட்டு இடங்களில் பிறருக்கு ஏற்படும் தொல்லையைக் கருதாது போடும் சத்தங்கள்.)

மத அடிப்படைவாதம் என்றால் என்ன?
மத நூல்களில் எப்போது, ஏன், எதற்காகச் சொல்லப்பட்டது என்ற கேள்வி ஏதுமின்றி பலவற்றைக் கட்டி மாரடிப்பது. (உதா: யூதர்கள் தங்கள் ஓய்வு நாளன்று வீட்டு விளக்கை on செய்வது கூட தவறு என்று நினைத்து அதற்காக வேலைக்காரர்களை வைப்பார்களாமே அது போன்றது.)

இஸ்லாமிய மத அடிப்படைவாதம் என்றால் என்ன?
எந்த லாஜிக்கிற்கும் உடன் படாத, 1400 வருடமாக, தங்கள் சமயக் கதைகள் கடவுளின் வாயிலிருந்து வந்தது என்ற பிரம்மையில் இருந்து. அதன் ஒவ்வொரு வார்த்தைக்கும் நேரத்திற்கேற்றாற் போல் பொருள் கொடுத்து நடத்தும் கொடுமைகள். (உதா: மும்முறை தலாக் - அது விளையாட்டாக chat-ல் சொல்லப்பட்டாலும் அதையும் விடுவதில்லையே, அது.)

பெரும்பான்மை அடிப்படைவாதம் என்றால் என்ன?
மேற்சொன்ன இஸ்லாமிய மத அடிப்படைவாதங்களை ஒரு நாட்டின் சட்டமாகவே மாற்றுவதும், மெஜாரிட்டி இல்லா இடங்களில் மதம். புனிதத்துவம் என்ற பெயரில் தனித்து நிற்பது. (உதா: கல்லால் எறிந்து, தலையைத் துண்டாக்கிக் கொடுக்கப்படும் தண்டனைகளை நாட்டின் சட்டமாக்கி வைத்திருப்பது.)

தருமி said...

அடிப்படைவாதி ஆஷிக் அவர்களுக்கு,
உங்கள் நியாயம் வெகு நன்றாக உள்ளது!

//ஒரு நல்ல மத அடிப்படைவாதி, ஒரு இஸ்லாமிய மத விரோதியால் கொல்லப்பட்டார் என்பதே சரி.//

அதாவது கொல்லப்பட்டவர் நல்ல அடிப்படைவாதி!! கொன்றவன் இஸ்லாமிய விரோதி!! ரொம்ப நல்லா இருக்குங்க.

கொன்றவன் சென்ற இடமெல்லாம் மக்களால் அவனுக்குப் பூக்களால் அர்ச்சனையாமே! அதையும் தாண்டி உங்கள் மதங்களை நன்கு படித்தறிந்த ‘குருமார்கள்” (?) கொல்லப்பட்டவரின் இறுதி தொழுகையை நடத்தவும் வர மறுத்தார்களே - அவர்களும் ஒட்டு மொத்தமாக இ. விரோதிகள் தானா?

ஆக கொன்றவன், கொன்றவனுக்கு மலர் அர்ச்சனை செய்யும் பாக் மக்கள் பெரும்பான்மையோர், இஸ்லாம் கருத்துக்களில் ஊறிய குருமார்கள் -- இவர்கள் அனைவரும் இ. விரோதிகள்; ஆனால் இங்கிருக்கும் நீங்கள் இதையெல்லாம் தாண்டியவர்கள்; இல்லையா? நான்கு பெண்கள் பர்தா வேண்டாமென்ற கருத்துள்ளவர்கள் தங்கள் கருத்தை வெளியில் சொல்லக்கூட விடாத நீங்கள் ஒரு பரந்த அடிப்படைவாதி; இல்லையா?

//தூக்கி வீசப்பட்ட அந்த விசிட்டிங் கார்டில் இருந்த இவரின் பெயர் முஹம்மத்..! //
இதே கதை நம்மூரிலும் நடந்ததே! Quo vadis என்ற செருப்பின் product ambassador ஆக இருந்த ஒரு இஸ்லாமிய கிரிக்கெட் வீரர் தன் கையெழுத்தைப் போட்டதும் நம்ம ஊர்ல எழுந்த கூக்குரல் இன்னும் என் நினைவில் இருக்கிறது. நல்ல அடிப்படைவாதம்.

//ஒரு மனிதன் இன்னொரு மனிதனை கொன்றால் நேரடி நரகம் என்பதும்...// -- இப்படியும் சொல்வீங்க; காபிர், இறை மறுப்பாளர்களை ‘ஒரு கை’ பாருன்னும் சொல்லியிருக்கு அப்டீம்பிங்க. நல்ல அடிப்படைவாதம்.

இன்னும் நிறைய சொல்லிக்கிட்டே இருக்கலாம் ........... நல்லா இருங்க!

saarvaakan said...

எல்லா மத புத்தகங்களிலும் தத்துவம்,வரலாறு,அறிவியல்(இன்னும் எவ்வளவோ) இருப்பதாக அம்மதத்தினர் நம்புகின்றனர்.

முதலில் மதத்தில் அறிவியல் என்பது பிரச்சாரகர்களின் தந்திரம் என்பதும் அது ஒரு வார்த்தை ஜால விளையாட்டு மட்டுமே என்பதால் மத தத்துவங்கள், மத,வேத வரலாற்று பற்றிய நடுநிலைமையான ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

இரண்டாவது ஏறத்தாழ எல்லா மதங்களின் புத்தகங்களில் குறிப்பிடும் மனிதர்கள், சம்பவ்ங்கள்,அத்தாட்சிகள் போன்ற விஷயங்கள் வரலாற்று ஆதாரம் இல்லாத்வை.

அப்படி ஏதாவது வரலாற்று ஆதாரம் இருந்தால் கூறுங்கள்.

மிச்சம் இருப்பது தத்துவம் மட்டுமே

எல்லா மதங்களின் கொள்கைகளையும் பின் வருமாறு கூறலாம்

1.கடவுள்(கள்) மனிதனை படைத்தது அவரை வழிபடுவதற்காக ,ஆதலால் வழிபட மறுத்தல் மிக பெரிய தவ‌றாகும்.

2.அம்மதத்தின் படி வழிபடுபவர்களை காக்க (அம்மதத்தின் படி) வழிபடாதவர்களை அழிக்க(அடிமைப் படுத்த) கடவுள்(கள்) உதவி செய்வார்(கள்),இறப்பிற்கு பின் சொர்க்க வாழ்வை அளிப்பார்(கள்).

இந்த இரண்டு கொள்கைகளுமே எனக்கு அநாகரிகமாக தவறாக தெரிகிறது.

இந்த இரு தத்துவதங்களையும் சரியென்று எப்படி சொல்கிறார்கள்?
மத நம்பிக்கை தனி மனித நம்பிக்கை மட்டுமே சார்ந்த விஷயம் என்றால் நமக்கு எந்த பிரச்சினையுமே இல்லை.

இதில் என் மதம் மட்டுமே சரியானது,என் புத்தகம் மட்டுமே மாறாதது,இது ஒரு சர்வ ரோஹ நிவாரணி,ஆகவே அதில் குறிப்பிட்ட படி உலகத்தில் உள்ள அனைத்தும்,அனைவருமே நடக்க‌ வேண்டும் என்பதால் ,அதனால் அம்மதத்தை பின் பற்றாதவர்கள் பாதிக்கப் படுகிறார்கள் என்பதாலும் அதன் நம்பகத் தன்மை விவாதிக்கப் ட்ட்டே ஆக வேண்டும்.

மத நம்பிக்கையாளர்கள் சொர்க்கம செல்ல ஆசைப்பட்டால் நல்லது வாழ்த்துகள்.ஆனால் உங்கள் நம்பிக்கைக்காக இவ்வுலகத்தை நரகம் ஆக்காதீர்கள்.

வால்பையன் said...

//'இறைவன் நாடியிருந்தால் எதிரிகளை போர்க்களத்தில் அவனே தண்டித்திருப்பான்.மாறாக உங்களில் ஒருவர் மூலம் மற்றவரை அவன் சோதிக்கிறான். இறைவனின் பாதையில் கொல்லப்பட்டோரின் செயல்களை அவன் வீணாக்கவே மாட்டான்.'- குர்ஆன் 47:4

உங்கள் கேள்விக்கு இறைவனே அழகாக பதிலளிக்கிளான்.//


நான் நாடியிருந்தால் என்று வசனம் வந்திருந்தால் தானே அது இறைவனின் வசனம், இறைவன் நாடியிருந்தால் என்றால் அது இரண்டாம் நபர் முன்றாம் நபருக்கு சொல்லும் செய்தி அல்லது கடவுளை பற்றிய அவரது கூற்று!

தருமி said...

ஒரு திருத்தம்: //Quo vadis என்ற செருப்பின் ...//ம் - இந்த செருப்புக்கு முதலில் வைத்த ‘அலிபாபா’ என்ற பெயருக்குத்தான் அந்த கூப்பாடு.

தருமி said...

வால்ஸ்
நல்ல புள்ளி (பாய்ண்ட்!). ஆனால் இதுக்கு அரபி மொழி... அதன் மொழியாக்கம் .. அது இதுன்னு ஏதாவது ஒரு விளக்கம் வரும்னு நினைக்கிறேன்.

suvanappiriyan said...

வால் பையன்!

//நான் நாடியிருந்தால் என்று வசனம் வந்திருந்தால் தானே அது இறைவனின் வசனம், இறைவன் நாடியிருந்தால் என்றால் அது இரண்டாம் நபர் முன்றாம் நபருக்கு சொல்லும் செய்தி அல்லது கடவுளை பற்றிய அவரது கூற்று!//

தந்தை தனது மகனிடம் கோபத்தில் 'உனக்குத் திமிர் அதிகமாகி விட்டது' என்று முன்னிலையாகப் பேசிக் கொண்டே வந்து திடீரென்று 'இவனை வீட்டை விட்டு வெளியேற்றினால்தான் நிம்மதி' எனக் கூறுவார்.

அதேபோல் 'இது என் வீடு' என்று கூறும் இடத்தில் 'இது நம்ம வீடு' என்று கூறுகிறோம். இதை மற்றவர்களுக்கும் பங்கு உண்டு எனப் புரிந்து கொள்ள மாட்டோம்.

முன்னிலையிலிருந்து படர்க்கைக்கு மாறுவதும், படர்க்கையிலிருந்து முன்னிலைக்கு மாறுவதும் பேச்சு வழக்கில் எல்லா மொழிகளிலும் சர்வ சாதாரணமாகக் காணலாம். குர்ஆன் எழுத்து வடிவில் அருளப்படவில்லை. மக்களை நோக்கிப் பேசும் ஒலி வடிவமாகவே அருளப்பட்டது. எனவேதான் இது போன்ற மாற்றங்களை ஒரு சில இடங்களில் நம்மால் காண முடிகிறது.

குர்ஆன் பல இடங்களில் முகமது நபியைப் பார்த்து பேசும். சில இடங்களில் முஸ்லிம்களைப் பார்த்து பேசும். சில இடங்களில் தருமியையும், வால் பையனையும் பார்த்து கூட பேசும். குர்ஆனை நீங்கள் முழுவதும் வாசித்தால் இந்த பேசும் வழக்கு முறையை பல இடங்களில் காணலாம்.

suvanappiriyan said...

ஆசிக்!

//பதில்களையே படிக்காமல் திரும்பத்திரும்ப திரும்பத்திரும்ப திரும்பத்திரும்ப கேள்விகள் மட்டுமே கேட்பதை மட்டுமே பொழுதுபோக்காக நினைப்பவர்களை கேள்விகளை விற்பதற்கென்றே அதற்காகவே 'கடை' வைத்திருப்பவர்களை விட்டுவிடுங்களேன்... ப்ளீஸ்.//

தருமி போன்றவர்களின் பதிவுகளை படித்து விட்டு அரை குறை இஸ்லாமிய அறிவு உடைய ஒரு சில முஸ்லிம்கள் நாத்திகத்தின் பக்கம் சென்று விடக் கூடாதல்லவா! எனவே தருமிக்காக இல்லாவிட்டாலும் நடுநிலையாளர்களுக்காகவாவது இத்தகைய விளக்கங்கள் அவசியம் என்றே கருதுகிறேன். இவர்களின் கேள்விகளால் எனது இஸ்லாமிய அறிவு மேலும் விரிவடைகிறது. தற்போது வேலை நேரம் போக ஓய்வும் அதிகம் கிடைப்பதால் அதை பயனுள்ள வழியில் செலவழிக்கலாமே என்றுதான்.....

வருகைக்கும் கருத்தக்கும் நன்றி!

வால்பையன் said...

//குர்ஆன் பல இடங்களில் முகமது நபியைப் பார்த்து பேசும். சில இடங்களில் முஸ்லிம்களைப் பார்த்து பேசும். சில இடங்களில் தருமியையும், வால் பையனையும் பார்த்து கூட பேசும். குர்ஆனை நீங்கள் முழுவதும் வாசித்தால் இந்த பேசும் வழக்கு முறையை பல இடங்களில் காணலாம். //


முகமதை பார்த்து குரான் பேசினால் அது முகமதுக்கு மட்டும் தான் என அர்த்தம், முஸ்லீம்களை பார்த்து பேசினால் அது முஸ்லீம்களுக்கு, என்னையும், தருமியையும் பார்த்து பேசினால் அது எங்களுக்கு, எங்களுக்கு சொன்னதை நாங்கள் ஏன் எல்லோருக்கும் சொல்லி குழப்ப வேண்டும்!

saarvaakan said...

திரு முகமது குரான் உலக மக்கள் அனைவருக்கும் அளிக்கப்பட்டதாக நினைத்திருப்பாரா என்பது சந்தேகமே. குரானை முழுமையாக்கி அதனை பிற மொழிகளில் மொழி பெயர்க்க அவர் எந்த முயற்சியுமே செய்ய வில்லை.

அவருக்கு பின் வந்தவர்களுக்கு அவர் கட்டிய கற்ப்னை கோட்டையை(நன்றி திரு செங்கொடி) பாதுகாக்க அவர் இறை வெளிப்பாடு என்று கூறியதை எல்லாம் அதனை மனனம் செய்தவர்களிடம் இருந்து தொகுத்தார்கள்.

சில வசனங்கள் அப்படியே பல இடங்களில் கொஞ்சம் மாற்றத்தோடு(சில இடங்களில் அப்படியே) வருவதற்கு ஒரே வெளிப்பாடு வசனங்களை பலர் பல விதமாக கூறும் போது அனைவரின் சொற்களையும் வெவ்வேறு இடங்களில் பொருத்தி விட்டார்கள்.

இந்த ஹதிதில் கூட திரு உமர் குரானை ஒரு புத்தகமாக தொகுத்து விடலாம் என்று அபு பக்கரிடம் கூறும் போது ,திரு முகமதுவே செய்யாத வேலையை நீ ஏன் செய்ய முயல்கிறார் என்று மறுமொழி வருகிறது. பிறகு உமர் அபு பக்கரை ஒரு வழியாக சம்மதிக்க வைத்தார். அபு பக்கரும் அல்லா தன் உள்ளத்தை திறந்து இது சரி என்று கூறியதாக கூறுகிறார். எப்படி திறந்தார் என்று தெரியவில்லை.அப்போது அபு பக்கரும் இறைவனிடன் இருந்து குரானை தொகுக்க வெளிப்பாடு பெற்றாரா?


Bukhari: vol. 6, hadith 509, p. 477; book 61

Narrated Zaid-bin-Thabit:

Abu Bakr As-Siddiq sent for me when the people of Yama-ma had been killed (i.e. a number of the prophets companions who fought against Musailama). (I went to him) and found Umar bin Al-Khattab sitting with him. Abu Bakr then said to me, "Umar has come to me and said: `Casualties were heavy among the Qurra of the Qur'an (ie those who knew the Qur'an by heart) on the day of the battle of Yama-ma, and I am afraid that more heavy casualties may take place among the Qurra on other battle fields, whereby a large part of the Qur'an may be lost. Therefore I suggest that you (Abu Bakr) order that the Qur'an be collected'." I said to Umar, "How can you do something Allah's Apostle did not do?" Umar said, "By Allah, that is a good project". Umar kept on urging me to accept his proposal till Allah opened my chest (persuaded me) for it and I began to realise the good idea which Umar had realised.

This hadith clearly shows that Muhammad never made a final collection of the Qur'an before his death, for when Abu Bakr was asked to collect the Qur'an into one volume he said: How can you do something Allah's Apostle did not do? Muhammad did not make a final collection of the Qur'an because there were many of his companions whom he trusted to teach the Qur'an and these made their own collections:

அல்லாவின் வார்த்தைகளான குரானை விமர்சிக்க முகமதின் வார்த்தைகளான
ஹதீஸே தேவையானது மற்றும் போதுமானது.ஆங்கில ஹதிஸ் வரிசை ப்டுத்தலும் தமிழ் ஹதீஸ் வரிசை படுத்தலும் வேறு படுகிறது.ஆக்வே நிறைய ஹதிதுகளை தமிழில் கண்டு பிடிக்க முடிவதில்லை.தமிழ் குரான் வசனக்களை எளிதில் தேடி எடுப்பது போல் ஹதிதில் முடிவதில்லை.ஆகவே மதவாதிகள் ஹதித் மொழி பெயர்ப்பு வரிசை எண்களை சீர்படுத்தினால் எங்களுக்கு உதவியாக இருக்குமென்று தாழ்மையோடு வேண்டுகிறேன்.

saarvaakan said...

திரு முகமது குரான் உலக மக்கள் அனைவருக்கும் அளிக்கப்பட்டதாக நினைத்திருப்பாரா என்பது சந்தேகமே. குரானை முழுமையாக்கி அதனை பிற மொழிகளில் மொழி பெயர்க்க அவர் எந்த முயற்சியுமே செய்ய வில்லை.

அவருக்கு பின் வந்தவர்களுக்கு அவர் கட்டிய கற்ப்னை கோட்டையை(நன்றி திரு செங்கொடி) பாதுகாக்க அவர் இறை வெளிப்பாடு என்று கூறியதை எல்லாம் அதனை மனனம் செய்தவர்களிடம் இருந்து தொகுத்தார்கள்.

சில வசனங்கள் அப்படியே பல இடங்களில் கொஞ்சம் மாற்றத்தோடு(சில இடங்களில் அப்படியே) வருவதற்கு ஒரே வெளிப்பாடு வசனங்களை பலர் பல விதமாக கூறும் போது அனைவரின் சொற்களையும் வெவ்வேறு இடங்களில் பொருத்தி விட்டார்கள்.

saarvaakan said...

இந்த ஹதிதில் கூட திரு உமர் குரானை ஒரு புத்தகமாக தொகுத்து விடலாம் என்று அபு பக்கரிடம் கூறும் போது ,திரு முகமதுவே செய்யாத வேலையை நீ ஏன் செய்ய முயல்கிறார் என்று மறுமொழி வருகிறது. பிறகு உமர் அபு பக்கரை ஒரு வழியாக சம்மதிக்க வைத்தார். அபு பக்கரும் அல்லா தன் உள்ளத்தை திறந்து இது சரி என்று கூறியதாக கூறுகிறார். எப்படி திறந்தார் என்று தெரியவில்லை.அப்போது அபு பக்கரும் இறைவனிடன் இருந்து குரானை தொகுக்க வெளிப்பாடு பெற்றாரா?


Bukhari: vol. 6, hadith 509, p. 477; book 61

Narrated Zaid-bin-Thabit:

Abu Bakr As-Siddiq sent for me when the people of Yama-ma had been killed (i.e. a number of the prophets companions who fought against Musailama). (I went to him) and found Umar bin Al-Khattab sitting with him. Abu Bakr then said to me, "Umar has come to me and said: `Casualties were heavy among the Qurra of the Qur'an (ie those who knew the Qur'an by heart) on the day of the battle of Yama-ma, and I am afraid that more heavy casualties may take place among the Qurra on other battle fields, whereby a large part of the Qur'an may be lost. Therefore I suggest that you (Abu Bakr) order that the Qur'an be collected'." I said to Umar, "How can you do something Allah's Apostle did not do?" Umar said, "By Allah, that is a good project". Umar kept on urging me to accept his proposal till Allah opened my chest (persuaded me) for it and I began to realise the good idea which Umar had realised.

This hadith clearly shows that Muhammad never made a final collection of the Qur'an before his death, for when Abu Bakr was asked to collect the Qur'an into one volume he said: How can you do something Allah's Apostle did not do? Muhammad did not make a final collection of the Qur'an because there were many of his companions whom he trusted to teach the Qur'an and these made their own collections:

அல்லாவின் வார்த்தைகளான குரானை விமர்சிக்க முகமதின் வார்த்தைகளான
ஹதீஸே தேவையானது மற்றும் போதுமானது.ஆங்கில ஹதிஸ் வரிசை ப்டுத்தலும் தமிழ் ஹதீஸ் வரிசை படுத்தலும் வேறு படுகிறது.ஆக்வே நிறைய ஹதிதுகளை தமிழில் கண்டு பிடிக்க முடிவதில்லை.தமிழ் குரான் வசனக்களை எளிதில் தேடி எடுப்பது போல் ஹதிதில் முடிவதில்லை.ஆகவே மதவாதிகள் ஹதித் மொழி பெயர்ப்பு வரிசை எண்களை சீர்படுத்தினால் எங்களுக்கு உதவியாக இருக்குமென்று தாழ்மையோடு வேண்டுகிறேன்.

saarvaakan said...

இந்த ஹதிதில் கூட திரு உமர் குரானை ஒரு புத்தகமாக தொகுத்து விடலாம் என்று அபு பக்கரிடம் கூறும் போது ,திரு முகமதுவே செய்யாத வேலையை நீ ஏன் செய்ய முயல்கிறார் என்று மறுமொழி வருகிறது. பிறகு உமர் அபு பக்கரை ஒரு வழியாக சம்மதிக்க வைத்தார். அபு பக்கரும் அல்லா தன் உள்ளத்தை திறந்து இது சரி என்று கூறியதாக கூறுகிறார். எப்படி திறந்தார் என்று தெரியவில்லை.அப்போது அபு பக்கரும் இறைவனிடன் இருந்து குரானை தொகுக்க வெளிப்பாடு பெற்றாரா?

Bukhari: vol. 6, hadith 509, p. 477; book 61

Narrated Zaid-bin-Thabit:

Abu Bakr As-Siddiq sent for me when the people of Yama-ma had been killed (i.e. a number of the prophets companions who fought against Musailama). (I went to him) and found Umar bin Al-Khattab sitting with him. Abu Bakr then said to me, "Umar has come to me and said: `Casualties were heavy among the Qurra of the Qur'an (ie those who knew the Qur'an by heart) on the day of the battle of Yama-ma, and I am afraid that more heavy casualties may take place among the Qurra on other battle fields, whereby a large part of the Qur'an may be lost. Therefore I suggest that you (Abu Bakr) order that the Qur'an be collected'." I said to Umar, "How can you do something Allah's Apostle did not do?" Umar said, "By Allah, that is a good project". Umar kept on urging me to accept his proposal till Allah opened my chest (persuaded me) for it and I began to realise the good idea which Umar had realised.

This hadith clearly shows that Muhammad never made a final collection of the Qur'an before his death, for when Abu Bakr was asked to collect the Qur'an into one volume he said: How can you do something Allah's Apostle did not do? Muhammad did not make a final collection of the Qur'an because there were many of his companions whom he trusted to teach the Qur'an and these made their own collections:

saarvaakan said...

இந்த ஹதிதில் கூட திரு உமர் குரானை ஒரு புத்தகமாக தொகுத்து விடலாம் என்று அபு பக்கரிடம் கூறும் போது ,திரு முகமதுவே செய்யாத வேலையை நீ ஏன் செய்ய முயல்கிறார் என்று மறுமொழி வருகிறது. பிறகு உமர் அபு பக்கரை ஒரு வழியாக சம்மதிக்க வைத்தார். அபு பக்கரும் அல்லா தன் உள்ளத்தை திறந்து இது சரி என்று கூறியதாக கூறுகிறார். எப்படி திறந்தார் என்று தெரியவில்லை.அப்போது அபு பக்கரும் இறைவனிடன் இருந்து குரானை தொகுக்க வெளிப்பாடு பெற்றாரா?

saarvaakan said...

Bukhari: vol. 6, hadith 509, p. 477; book 61

Narrated Zaid-bin-Thabit:

Abu Bakr As-Siddiq sent for me when the people of Yama-ma had been killed (i.e. a number of the prophets companions who fought against Musailama). (I went to him) and found Umar bin Al-Khattab sitting with him. Abu Bakr then said to me, "Umar has come to me and said: `Casualties were heavy among the Qurra of the Qur'an (ie those who knew the Qur'an by heart) on the day of the battle of Yama-ma, and I am afraid that more heavy casualties may take place among the Qurra on other battle fields, whereby a large part of the Qur'an may be lost. Therefore I suggest that you (Abu Bakr) order that the Qur'an be collected'." I said to Umar, "How can you do something Allah's Apostle did not do?" Umar said, "By Allah, that is a good project". Umar kept on urging me to accept his proposal till Allah opened my chest (persuaded me) for it and I began to realise the good idea which Umar had realised.

This hadith clearly shows that Muhammad never made a final collection of the Qur'an before his death, for when Abu Bakr was asked to collect the Qur'an into one volume he said: How can you do something Allah's Apostle did not do? Muhammad did not make a final collection of the Qur'an because there were many of his companions whom he trusted to teach the Qur'an and these made their own collections:

அல்லாவின் வார்த்தைகளான குரானை விமர்சிக்க முகமதின் வார்த்தைகளான
ஹதீஸே தேவையானது மற்றும் போதுமானது.ஆங்கில ஹதிஸ் வரிசை ப்டுத்தலும் தமிழ் ஹதீஸ் வரிசை படுத்தலும் வேறு படுகிறது.ஆக்வே நிறைய ஹதிதுகளை தமிழில் கண்டு பிடிக்க முடிவதில்லை.தமிழ் குரான் வசனக்களை எளிதில் தேடி எடுப்பது போல் ஹதிதில் முடிவதில்லை.ஆகவே மதவாதிகள் ஹதித் மொழி பெயர்ப்பு வரிசை எண்களை சீர்படுத்தினால் எங்களுக்கு உதவியாக இருக்குமென்று தாழ்மையோடு வேண்டுகிறேன்.

saarvaakan said...

Bukhari: vol. 6, hadith 509, p. 477; book 61

Narrated Zaid-bin-Thabit:

Abu Bakr As-Siddiq sent for me when the people of Yama-ma had been killed (i.e. a number of the prophets companions who fought against Musailama). (I went to him) and found Umar bin Al-Khattab sitting with him. Abu Bakr then said to me, "Umar has come to me and said: `Casualties were heavy among the Qurra of the Qur'an (ie those who knew the Qur'an by heart) on the day of the battle of Yama-ma, and I am afraid that more heavy casualties may take place among the Qurra on other battle fields, whereby a large part of the Qur'an may be lost. Therefore I suggest that you (Abu Bakr) order that the Qur'an be collected'." I said to Umar, "How can you do something Allah's Apostle did not do?" Umar said, "By Allah, that is a good project". Umar kept on urging me to accept his proposal till Allah opened my chest (persuaded me) for it and I began to realise the good idea which Umar had realised.

This hadith clearly shows that Muhammad never made a final collection of the Qur'an before his death, for when Abu Bakr was asked to collect the Qur'an into one volume he said: How can you do something Allah's Apostle did not do? Muhammad did not make a final collection of the Qur'an because there were many of his companions whom he trusted to teach the Qur'an and these made their own collections:
ஆங்கில ஹதிஸ் வரிசை ப்டுத்தலும் தமிழ் ஹதீஸ் வரிசை படுத்தலும் வேறு படுகிறது.ஆக்வே நிறைய ஹதிதுகளை தமிழில் கண்டு பிடிக்க முடிவதில்லை.தமிழ் குரான் வசனக்களை எளிதில் தேடி எடுப்பது போல் ஹதிதில் முடிவதில்லை.ஆகவே மதவாதிகள் ஹதித் மொழி பெயர்ப்பு வரிசை எண்களை சீர்படுத்தினால் எங்களுக்கு உதவியாக இருக்குமென்று தாழ்மையோடு வேண்டுகிறேன்.

saarvaakan said...

Bukhari: vol. 6, hadith 509, p. 477; book 61

Narrated Zaid-bin-Thabit:

Abu Bakr As-Siddiq sent for me when the people of Yama-ma had been killed (i.e. a number of the prophets companions who fought against Musailama). (I went to him) and found Umar bin Al-Khattab sitting with him. Abu Bakr then said to me, "Umar has come to me and said: `Casualties were heavy among the Qurra of the Qur'an (ie those who knew the Qur'an by heart) on the day of the battle of Yama-ma, and I am afraid that more heavy casualties may take place among the Qurra on other battle fields, whereby a large part of the Qur'an may be lost. Therefore I suggest that you (Abu Bakr) order that the Qur'an be collected'." I said to Umar, "How can you do something Allah's Apostle did not do?" Umar said, "By Allah, that is a good project". Umar kept on urging me to accept his proposal till Allah opened my chest (persuaded me) for it and I began to realise the good idea which Umar had realised.

This hadith clearly shows that Muhammad never made a final collection of the Qur'an before his death, for when Abu Bakr was asked to collect the Qur'an into one volume he said: How can you do something Allah's Apostle did not do? Muhammad did not make a final collection of the Qur'an because there were many of his companions whom he trusted to teach the Qur'an and these made their own collections:

suvanappiriyan said...

சார்வாகன்!

//இரண்டாவது ஏறத்தாழ எல்லா மதங்களின் புத்தகங்களில் குறிப்பிடும் மனிதர்கள், சம்பவ்ங்கள்,அத்தாட்சிகள் போன்ற விஷயங்கள் வரலாற்று ஆதாரம் இல்லாத்வை.

அப்படி ஏதாவது வரலாற்று ஆதாரம் இருந்தால் கூறுங்கள்.//

குர்ஆன் முதன்முதல் முகமது நபிக்கு இறக்கப்பட்ட ஹீரா குகையை இன்றும் நாம் பார்க்கலாம். இஸ்லாமிய வரலாற்றில் குறிப்பிடப்படும் அனைத்து இடங்களும் இன்றும் மெக்கா, மதீனா நகரங்களில் நாம் காணலாம். மோஸே என்ற இறைத்தூதர் எகிப்திலிருந்து விரட்டப்பட்டு கடல் பிளந்து(டென் கமாண்டஸ் திரைப்படம்) மறு கரையான சவூதியை அடைகிறார். அங்கு அவரோடு வந்த முஸ்லிம்கள் அவரிடம் குடிக்க தண்ணீர் கேட்கின்றனர். மோஸேயின் பிரார்த்தனையை ஏற்ற இறைவன் பன்னிரண்டு இடங்களில் இருந்து தண்ணீரை வரவழைக்கிறான். அனைத்தும் மலைகள் அடர்ந்த பாறைகள். அந்த ஊற்றுகளில் இருந்து இன்றும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நானும் எனது நண்பர்களும் அந்த இடங்களை எல்லாம் சென்று பார்த்தோம்.

அதே போல் இறைத்தூதர் ஸாலிஹூம் அவரைப் பின்பற்றிய மக்களும் மலைகளையே குடைந்து வீடுகள் அமைத்திருந்தனர். இதுவும் குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளது. அதையும் நாங்கள் சென்று பார்த்து பிரம்மித்து நின்றோம். 3000 வருடங்களுக்கு முன்பே அந்த மக்கள் நாகரிகத்தின் உச்சத்தில் இருந்திருக்கிறார்கள். என்ன அழகிய வீடமைப்பு! அனைத்தும் ஒரே மலையில் எப்படித்தான் வடிவமைத்தார்களோ? சவூதி அரசு அந்த இடங்களை எல்லாம் புராதனச் சின்னமாக பாதுகாத்து வருகிறது. தபூக் நகரைச் சுற்றி இந்த இடங்களெல்லாம் அமைந்துள்ளது.

ஏசு நாதர் பிறந்து, வளர்நத இடங்களெல்லாம் ஜோர்டான், இஸ்ரேல் போன்ற நாடுகளில் இன்றும் நீங்கள் சென்றால் பார்க்கலாம். இறைவன் நாடினால் அந்த இடங்களையும் பார்க்க எண்ணியுள்ளேன். முன்பு இதைப் பற்றி விரிவாக ஒரு பதிவே போட்டிருக்கிறேன்.

தருமி said...

//அபு பக்கரும் அல்லா தன் உள்ளத்தை திறந்து ...Allah opened my chest (persuaded me)// - இந்த வசனக் கோர்வை கிறித்துவ மக்களிடம் இப்போதும் அதிகம் காணலாம். ஏதாவது ஒரு முடிவெடுக்க ஜெபம் செய்வார்கள். அதன் பின் முடிவெடுப்பார்கள் - கடவுள் தன்னிடம் பேசியாதாகச் சொல்வார்கள். பொதுவாக திருமணங்களை முடிவு செய்ய இந்த ஏற்பாடு நடக்கும். எனக்குத் தெரிந்தவரையிலும், ஒரு நல்ல கிறித்துவர் சொன்னதையும் வைத்துப் பார்க்கும்போது ‘தட்டிக் கழிக்கவோ/ நடத்திக் கொள்வதற்கோ’ இதனை நன்கு பயன்படுத்துகிறார்கள். உழைக்கும் தங்கள் பிள்ளைகளின் கல்யாணத்தைத் தள்ளிப்போட பல பெற்றோர்களுக்கு இது மிகப் பெரிய உதவி!!! :(

ரிஷபன்Meena said...

//இதனை நன்கு பயன்படுத்துகிறார்கள். உழைக்கும் தங்கள் பிள்ளைகளின் கல்யாணத்தைத் தள்ளிப்போட பல பெற்றோர்களுக்கு இது மிகப் பெரிய உதவி!!! :(//

பெற்றவர்கள் தங்கள் குழந்தைக்கு தீங்கு நினைக்கவே மாட்டர்கள் என்ற வசனம் பேப்பரில் எழுதிப் படிக்க நன்றாக இருக்கும்.

நிஜத்தில் நீங்கள் சொல்வது போல தான் இருக்கிறார்கள். நான் நேரில் எத்தனையோ பேரை இப்படிப் பார்த்திருக்கிறேன். 33 வயதைக் கடந்தும் கூட கொஞ்சம் கூட வருத்தமோ கவலையோ இல்லாமல் தன் பெண்ணின் கல்யாணத்தை எதாவது ஒரு வகையில் தள்ளிப்போடுவார் என் உறவினர் ஒருவர். கவலைக்குரியது.

suvanappiriyan said...

வால் பையன்!

//முகமதை பார்த்து குரான் பேசினால் அது முகமதுக்கு மட்டும் தான் என அர்த்தம், முஸ்லீம்களை பார்த்து பேசினால் அது முஸ்லீம்களுக்கு, என்னையும், தருமியையும் பார்த்து பேசினால் அது எங்களுக்கு, எங்களுக்கு சொன்னதை நாங்கள் ஏன் எல்லோருக்கும் சொல்லி குழப்ப வேண்டும்!//

'முஹம்மதே!அழகியவற்றையே பேசுமாறு எனது அடியார்களுக்குக் கூறுவீராக!' - குர்ஆன் 17:53

இங்கு மக்களுக்கு அழகியவற்றையே பேசுமாறு உபதேசம் செய்ய இறைவன் முஹம்மதுக்கு கட்டளை இடுகிறான். எனவே இது முகமது நபிக்கு மாத்திரம் என்று நம்மால் ஒதுக்க முடியாது.

'இந்த குர்ஆன் மனித குலத்துக்குச் சென்றடைய வேண்டியதாகும். இதன் மூலம் அவர்கள் எச்சரிக்கப் படவும் வணக்கத்துக்குரியவன் ஒரே ஒருவனே இருக்கிறான் என்பதை அவர்கள் அறிந்து கொள்வதற்க்காகவும் அறிவுடையோர் சிந்திப்பதற்க்காகவும் இது அருளப்பட்டுள்ளது.' -குர்ஆன் 14:52

எனவே குர்ஆனை அறிந்திருக்கும் முஸ்லிம்கள் அதனை அறியாத மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று முஸ்லிம்களைப் பார்த்து குர்ஆன் கட்டளை இடுகிறது.

'இறைவனை மறுக்கும் அவர்களுக்கு உண்மை தெளிவாக வேண்டும் என்பதற்க்காக பல பாகங்களிலும் அவர்களுக்கு உள்ளேயும் நமது சான்றுகளை அவர்களுக்குக் காட்டுவோம்' -குர்ஆன் 41:52

இறை மறுப்பிலிருக்கும் தருமி, வால்பையன் போன்றோருக்கு தெளிவடையும் பொருட்டு இணையம் மூலமாக, எஸ்எம்எஸ் மூலமாக, பத்திரிக்கை வாயிலாக என்று பல வழிகளில் இந்த தூதுச் செய்தியை இறைவன் எத்தி வைக்கிறான். இதனால் குழப்பம் நீங்கி தெளிவே கிடைக்கும்.

வால்பையன் said...

//'முஹம்மதே!அழகியவற்றையே பேசுமாறு எனது அடியார்களுக்குக் கூறுவீராக!' - குர்ஆன் 17:53

இங்கு மக்களுக்கு அழகியவற்றையே பேசுமாறு உபதேசம் செய்ய இறைவன் முஹம்மதுக்கு கட்டளை இடுகிறான். எனவே இது முகமது நபிக்கு மாத்திரம் என்று நம்மால் ஒதுக்க முடியாது. //


நம்மால் எதையுமே ஒத்துக்க முடியாதுன்னு தான் தெரியுமே!

முகமதுக்கு நேரடியாக கடவுள் வந்து குரானை சொல்லல, அதுக்கே ஒரு தேவதூதர் தான் வந்தார்னு முனர் எங்கியோ சொன்னிங்க, இப்ப அது இறைவன்னு சொல்றிங்க!

என் கேள்வி முகமதேன்னு ஆரம்பிக்கும் அந்த வசனம் ஒரு கருத்தை சொல்கிறது, அதில் சொல்லபபட்டுள்ளது அழகியவற்றை, சரி என்ன என்ன அழகு!

முகமது எதுவெல்லாம் அழகு என்று கைகாட்டுகிறாரோ அதெல்லாம் அழகு!

உண்மையில் தனக்கு சாதகமாக முகமது மக்களை பயன்படுத்தி கொண்டார் என்பதற்கு இதைவிட சான்று வேணுமா!

வால்பையன் said...

//'இந்த குர்ஆன் மனித குலத்துக்குச் சென்றடைய வேண்டியதாகும். இதன் மூலம் அவர்கள் எச்சரிக்கப் படவும் வணக்கத்துக்குரியவன் ஒரே ஒருவனே இருக்கிறான் என்பதை அவர்கள் அறிந்து கொள்வதற்க்காகவும் அறிவுடையோர் சிந்திப்பதற்க்காகவும் இது அருளப்பட்டுள்ளது.' -குர்ஆன் 14:52//


அறிவுடையோர் சிந்திக்கவும் என்ற வார்த்தையின் மூலம் குரானை படிப்பவனே அறிவுடையவன், அவனே சிந்திக்க தெரிந்தவன் என்பது போல் உருவகபடுத்தப்பட்டிருக்கிறது!

நான் நல்லவன், வல்லவன், திறமைசாலி, புத்திசாலி என நானே பெருமை பீத்திகொள்வதை போல் குரான் தன்னை படித்து தெளிவுறுங்கள் என்பதை விட, தெளிவானவனே என்னை படிப்பான் என்று மூளை சலவை செய்கிறது!

வால்பையன் said...

// குர்ஆனை அறிந்திருக்கும் முஸ்லிம்கள் அதனை அறியாத மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று முஸ்லிம்களைப் பார்த்து குர்ஆன் கட்டளை இடுகிறது.//


உலகெங்கும் மனிதர்களை படைத்த கடவுள், மத்தியகிழக்கு பகுதிகளில் மட்டும் தொடர்ச்சியாக நபிகளை தேந்தேர்டுத்தது ஏன் என்ற காரணமே இன்னும் புரியவில்லை!

ஆபிரஹாம மதங்களின் நீட்சியாகவும்,அப்போதைக்கு தனக்கு வசதியாகவும் இருக்க முகமது பயன்படுத்தி கொண்டது, முகமது பெண்கள் குறித்து வைத்திருந்த மதிப்பீட்டில் தெரிகிறது!

குரான் அறியாத மக்களுக்கு கொண்டு செல்கிறீர்கள் என்றால், நாகரிக மனிதர்கள் வாழாத பகுதிக்கு தான் சென்று கொடுக்க வேண்டும், அங்கேயும் அவர்களுக்கு ஒரு கடவுள் இருக்கலாம்!, அவர்களுக்கு அந்த கடவுளை காட்டி கொடுத்தது யார்!

பின் இஸ்லாத்தை பின்பற்றுங்கள், உங்களுக்கு சொர்க்கத்தில் நித்தியகன்னிகைகள் என்று ஏன் சொல்லி வைக்க வேண்டும்!

இதற்கு பெயர் தான், காட்டியும் கொடுக்குறது, கூட்டியும் கொடுக்குறதா!?

என்னமோ போங்க சார்!
தூங்குற மாதிரி நடிக்கிறவங்களை என்ன தான் பண்ணமுடியும்!

வால்பையன் said...

//இறைவனை மறுக்கும் அவர்களுக்கு உண்மை தெளிவாக வேண்டும் என்பதற்க்காக பல பாகங்களிலும் அவர்களுக்கு உள்ளேயும் நமது சான்றுகளை அவர்களுக்குக் காட்டுவோம்' -குர்ஆன் 41:52//

தோழர் செங்கொடி, பல பாகங்களாக குரான் சான்றுகளை கிழித்து தோரணம் கட்டி தொங்கவிட்டு கொண்டிருக்கிரார்!

எதோ சுவரு இருக்காம், அதில் ஒரு ஓட்டையும் இருக்காம்!

நமக்கு சாதகமான சான்றுகளை மட்டுமே எடுத்து கொள்வேன் என்றால் எப்படிங்க, குரானில் ஒரு வசனம் தப்புன்னாலும் குரானே தப்பு என்பதை முதலில் ஒப்பு கொள்ளுங்க!

நல்லதை யார் சொன்னாலும் கேட்கலாம், அது முகமதுவாக தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை!

குரானில் நல்ல கருத்துகள் இருக்கலாம், குரானில் இருப்பது எல்லாமே நல்ல கருத்துகளா என்ற ஆராய்ச்சிக்கு முதல்ல வாங்க!

வால்பையன் said...

//இறை மறுப்பிலிருக்கும் தருமி, வால்பையன் போன்றோருக்கு தெளிவடையும் பொருட்டு இணையம் மூலமாக, எஸ்எம்எஸ் மூலமாக, பத்திரிக்கை வாயிலாக என்று பல வழிகளில் இந்த தூதுச் செய்தியை இறைவன் எத்தி வைக்கிறான். இதனால் குழப்பம் நீங்கி தெளிவே கிடைக்கும். //


அல்லாவோ, ஏசுவோ, சிவனோ எதாவது ஒரு கடவுள் வேண்டும் என்ற மனநிலையில் இருப்பவர்களுக்கும்,
தருமிஐயா, கல்வெட்டு, என்னை போன்றவர்களுக்கும் நீங்கள் நினைப்பதை போல் மலையளவு வித்தியாசம் எல்லாம் இல்லை!

எவற்றையும் ஆராய்ச்சி கண்ணோடு பார்த்தே பழகிவிட்டது, அல்லா தான் உண்மையான கடவுள் என நிருபித்தேயேர்களானால், இல்லை என்று நாங்கள் மறுக்கப்போவதில்லை, அப்போதும் சொர்க்கத்தில் கிடைக்கும் கன்னிகளுக்காக மாறப்போவதுமில்லை!

yasir said...

உழைக்காமல் கிடைக்கவேண்டும் என்ற பேராசையில் வணக்கவழிபாடு மற்றும் பிரார்த்தனை,மொட்டையடிக்க யூனிஃபார்ம் போட்டு காட்டிலிருந்து நாடுகடத்திய விலங்குகளை அறுத்து பலியிடும் நவீன காட்டுவாசிகள். எந்தப்பக்கமாவது எதையாவது வணங்கியே தீரவேண்டும் என்கிற நிர்பந்த ஆட்டு மந்தைக் கூட்டம், உழைப்பவனையும் சோம்பேரியாகவே வைத்திருக்க தான தர்மம். இந்த மூட நம்பிக்கைகளை நழுவவிடாமல் தடுப்பதற்கு சொர்க்கத்தில் சுகபோகம் என்கிற மதுவைவிட போதைதரும் மறுவாழ்வு. மறுப்பவர்களை பயமுறுத்த மறுமை என்ற கற்பனை. நடுநிலையாளர்களை நடுங்கவைக்க அற்புத செயல் என்கிற அந்தக்காலத்து மாயாஜால வித்தை,இன்றைக்கு மேஜிக் காட்சியாக கடைவீதிக்கு வியாபாரமாக மாரிப்போன விந்தை. ஆக கற்பனை உலகில் வாழ்ந்து கொண்டும்,நிரூபிக்கப்படாத கற்பனைக் கடவுளை வணங்கிக் கொண்டும் அதை ஒரு புத்தகமாக எழுதி விற்பதையும் வாங்கி படித்துவிட்டு அது உண்மை என நம்புகின்ற முட்டாள்கள் இருக்கும்வரை இறைவியாபாரம் நடந்து கொண்டுதானிருக்கும். கடவுளையே கண்ணால் பார்க்கமுடியாது என்கிற போது வசனம் மட்டும் இறங்கியதாக கூறும் கட்டுக் கதையை எந்தவித ஆதாரமும் இல்லாமல் எப்படி இன்னும் நம்புகிறார்கள் என்றுதான் விளங்கவில்லை. மனிதன் இடும் கட்டளை வலைதளங்களில் இன்று சென்றுகொண்டிருக்கும் போது கடவுளின் கட்டளை நின்றுபோனது ஏனோ? காட்டுவாசிகள் என்றைக்கும் காட்டுவாசிகளாகவே இருப்பார்கள் என்ற நினைப்போ கடவுளுக்கு?

வால்பையன் said...

//குர்ஆன் முதன்முதல் முகமது நபிக்கு இறக்கப்பட்ட ஹீரா குகையை இன்றும் நாம் பார்க்கலாம். //


அயோத்திராமர் பிறந்தஇடம், இலங்கை ராமர் பாலம் போன்ற காமெடி ட்ராக்கை விட, இது புதுசா இருக்கு!

நீங்களும் பெரிய ஆக்டர் தான், எவ்ளோ அடிச்சாலும் வலிக்காத மாதிரியே நடிக்கிறிங்களே!

வால்பையன் said...

// மோஸே என்ற இறைத்தூதர் எகிப்திலிருந்து விரட்டப்பட்டு கடல் பிளந்து(டென் கமாண்டஸ் திரைப்படம்) மறு கரையான சவூதியை அடைகிறார். அங்கு அவரோடு வந்த முஸ்லிம்கள் அவரிடம் குடிக்க தண்ணீர் கேட்கின்றனர். மோஸேயின் பிரார்த்தனையை ஏற்ற இறைவன் பன்னிரண்டு இடங்களில் இருந்து தண்ணீரை வரவழைக்கிறான். அனைத்தும் மலைகள் அடர்ந்த பாறைகள். அந்த ஊற்றுகளில் இருந்து இன்றும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நானும் எனது நண்பர்களும் அந்த இடங்களை எல்லாம் சென்று பார்த்தோம்.//



அல்லா கடவுளா இல்ல மேஜிக்மேனா!?

ஒரு சிறு கூட்டத்தை காப்பாற்ற கடல் பிளக்கிறது, அதில் மேஸே கூட வந்த முஸ்லீம்கள் தண்ணீர் கேட்டார்கள் என்று சொல்லியிருக்கிறீர்கள்!
அப்போ முஸ்லீமுக்கும், முகமதுவின் இஸ்லாமுக்கும் சம்பந்தமில்லையா!?
நிஜமாலுமே தெரியாம தான் கேக்குறேன்!

கடலை பிளக்க வைக்க முடிந்த கடவுளால் ஏன் இபிலீஸை அழிக்க முடியவில்லை, இபிலீஸ் கடவுளை விட சக்தி வாய்ந்தவனோ!

வால்பையன் said...

// இறைத்தூதர் ஸாலிஹூம் அவரைப் பின்பற்றிய மக்களும் மலைகளையே குடைந்து வீடுகள் அமைத்திருந்தனர். இதுவும் குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளது. அதையும் நாங்கள் சென்று பார்த்து பிரம்மித்து நின்றோம். 3000 வருடங்களுக்கு முன்பே அந்த மக்கள் நாகரிகத்தின் உச்சத்தில் இருந்திருக்கிறார்கள். என்ன அழகிய வீடமைப்பு! அனைத்தும் ஒரே மலையில் எப்படித்தான் வடிவமைத்தார்களோ?//


குரான், இதை குரானாக ஏற்று கொள்ளலாம் என ஒரு முடுவுக்கு கொண்டுவரப்பட்டே 1400 வருடங்கள் தான் ஆகுது, அதில் 3000 வருடங்களுக்கு முன் வாழ்ந்தவற்றை எழுதியிருப்பதில் ஆச்சர்யப்பட என்ன இருக்கு!

கையே இல்லாமல் ஒரு அலகினால் அருமையான கூட்டை கட்டும் தூங்னாங்குருவியை விட மலையில் குடாய்ந்து வாழ்பவர்களை நபியாக தேர்தெடுக்க கடவுளுக்கு என்ன காமெடி சென்ஸ் இருந்திருக்க வேண்டும்!

வால்பையன் said...

//தருமி போன்றவர்களின் பதிவுகளை படித்து விட்டு அரை குறை இஸ்லாமிய அறிவு உடைய ஒரு சில முஸ்லிம்கள் நாத்திகத்தின் பக்கம் சென்று விடக் கூடாதல்லவா!//


நாத்திகம் என்பது கடவுள் மறுப்பாக மட்டுமே உங்களுக்கு தெரியுது! கடவுளை தேடுவதும் நாத்திகம் தான்!
கடவுள் யார் என்று அறிய பகுத்தறிவுவாதியை விட கடவுளை நம்புபவன் செய்யும் ஆராய்ச்சி மிகக்குறைவு!

பகுத்தறிவு எதுவும் இல்லாமல் கண்மூடிதனமாக நம்புவதற்கு நாத்திகனாக இருப்பதே மேல்!

yasir said...

//இணையம்,எஸ்.எம்.எஸ்.,பத்திரிக்கை வாயிலாக என்று பல வழிகளில் இந்த தூதுச் செய்தியை இறைவன் எத்தி வைக்கிறான்//

இப்படி இறைவன் எத்திய எத்து முகம்மது காலத்தில் எத்த முடிந்ததா? ஏன் இவைகள் யாவும் முகம்மது கண்டுபிடித்த சொத்தா? ஆற்றல்(?)மிக்கவனின் தூதுச் செய்தியை எடுத்துவர ஒரு ஆள்,எடுத்துச் சொல்ல ஒரு ஆள் அதிலும் ஒரே ஒருவருக்கு(முகம்மது)மட்டுமே கேட்டது. ஆனால் மனிதனின் நவீன் தகவல் தொடர்புத் துறையால் உலக மக்கள் அனைவரும் பார்க்கவும் கேட்கவும் முடிகிறது எனில் யார் வல்லவன்? சாதாரண ஒலிபெருக்கி இன்று இல்லை என்றால் பக்கத்து வீட்டிற்காவது பாங்கு ஒலி கேட்குமா என்று சிந்தியுங்கள் நண்பரே!

தருமி said...

//ஏசு நாதர் பிறந்து, வளர்நத இடங்களெல்லாம் ஜோர்டான், இஸ்ரேல் போன்ற நாடுகளில் இன்றும் நீங்கள் சென்றால் பார்க்கலாம்.//

எங்க பழைய ஆள் (ஈசா)வையும் நம்புகிறீர்கள். ஆனால், அவர் வாளை எடுக்காதே என்றார். என் ராட்சியம் இது அல்ல என்றார். ஆனால் உங்கள் முகமது ஒரே சண்டை மயம்! இந்த இரு துருவங்களில் எதை நம்புவது? எங்கள் நபி சொன்னதுதான் உண்மை என்று இருவரும் சொன்னால் ...?

ஒரே வரியில் பதில் சொல்லிடலாம்; ஈசா கதை மொத்தமும் ‘கதை’தான் அப்டின்னு. எல்லாமுமேவா?

உமர் | Umar said...

//இஸ்லாமிய வரலாற்றில் குறிப்பிடப்படும் அனைத்து இடங்களும் இன்றும் மெக்கா, மதீனா நகரங்களில் நாம் காணலாம். //

சுவனப்பிரியன்,

ஒரே கேள்வி, பதிலிருந்தால் கூறுங்கள்.

குர் ஆனில் துல்கர்னைன் கட்டியதாகக் கூறப்படும் சுவர் உலகில் எங்குள்ளது?

குர் ஆனில் 18 வது அத்தியாத்தில் வசனங்கள் 94 முதல் 98 வரை அந்த சுவற்றைப் பற்றி பேசுகின்றன.குர் ஆனில் மிகத் தெளிவாக கூறப்பட்டுள்ளது, அந்த சுவர், இரு மலைகளுக்கு இடையிலான பாதையை அடைத்திருக்கும்; இரும்பாலும், செம்பாலும் கட்டப்பட்டிருக்கும் என்று. கியாமத் நாள் வரை அந்த சுவர் நிலைத்திருக்கும் என்று.

உலகில் எந்தப் பகுதியில் அந்த சுவர் இருக்கின்றது?

சவுதியில் இஸ்லாமியர் இஸ்லாத்தைத் துறப்பதை வெளிப்படையாக அறிவிக்க முடியுமா என்று கேட்ட கேள்வியை சாய்ஸில் விட்டது போல் இந்த கேள்வியை விட மாட்டீர்கள் என்று எண்ணுகின்றேன்.

அந்த சுவர் எங்கே என்று நீங்கள் கூறாவிட்டால் ஏற்படக்கூடிய சிக்கல்கள் நிறைய இருக்கின்றன.

துல்கர்னைன் பாத்திரம் வரலாற்றுச் சம்பவம் அல்ல என்று ஆகிவிடும்.

துல்கர்னைன் பயணம் கற்பனை கதை என்பது தெரிந்துவிடும்.

அப்படியானால், அந்தக் கதை இறைவன் கூறியது அல்ல என்று ஆகிவிடும்.

அந்தக் கதை இறைவன் கூறியது அல்ல என்றால், குர் ஆன் இறைவனின் வார்த்தைகள் என்று ஆகிவிடும்.

குர் ஆன் இறைவனின் வார்த்தைகள் இல்லை என்றானால், அல்லாஹ் என்பதே முகம்மது இட்டுக்கட்டிய கற்பனை என்று ஆகிவிடும்.

இதெல்லாம் நேராமல் இருக்கவேண்டுமானால், அந்த சுவர் எங்கே இருக்கிறது என்று நீங்கள் கூற வேண்டும். சாய்ஸில் விட முடியாத, விடக்கூடாத கேள்வி இது.

குர் ஆனில் துல்கர்னைன் கட்டியதாகக் கூறப்படும் சுவர் உலகில் எங்குள்ளது?

.

தருமி said...

//இந்த குர்ஆன் மனித குலத்துக்குச் சென்றடைய வேண்டியதாகும்//

- இது இங்கே!
அங்கே - இதை எல்லா திசைகளுக்கும் சென்று போதியுங்கள்.

இதை என்ன பண்றது?

தருமி said...

சுரா 18. 98: ’என் இறைவன் வாக்களித்த நேரம் வந்து விட்டால் அவன் இதனைத் தூள்தூளாக்கி விடுவான்.

கும்மி, ஒரு வேளை சாமி இதை தூள்தூளாக்கி விட்டிருப்பாரோ ..?

நல்ல கேள்வியாகத்தான் இருக்கு. வழக்கம்போல் எதிர்பார்ப்போடு இருப்போம்.

தருமி said...

//நடுநிலையாளர்களுக்காகவாவது இத்தகைய விளக்கங்கள் அவசியம் என்றே கருதுகிறேன்.//

Oh! defense role எடுத்திருக்கீங்களா...?

தருமி said...

//முகமதுவே செய்யாத வேலையை நீ ஏன் செய்ய முயல்கிறார் என்று மறுமொழி வருகிறது. //

ஆமால்ல ... தான் கேட்டதையெல்லாம் உடனுக்குடனே எழுதி வைக்கணும்னு ஏன், எப்படி முகமதுவிற்குத் தோன்றவில்லை?!

ஆச்சரியம்தான்........

உமர் | Umar said...

//ஒரு வேளை சாமி இதை தூள்தூளாக்கி விட்டிருப்பாரோ ..?//

தூள் தூளாக்கியிருந்தால் உலகம் அழிந்துவிட்டதாக அர்த்தம். ஆனால் நாம் இங்கே உட்கார்ந்து இணையத்தின் வழி உரையாடிக்கொண்டிருக்கின்றோம். ஒரு வேளை, நாம் இருப்பது சொர்க்கமோ? :-)

அப்படி தூள் தூளாக்கிவிட்டதாகக் கூறினாலும், தூளாக்கியதற்கு வரலாற்றில் ஆதாரம் வேண்டும். ஏனெனில், முகம்மது காலத்தில் அந்தச் சுவற்றில் ஒரு ஓட்டைப் போடப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். 3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்றுச் சான்றுகள் இருக்கும்போது, 1400 ஆண்டுகளுக்குள் நடைபெற்ற ஒரு சம்பவத்திற்கு வரலாற்று ஆதாரம் கொடுத்தே ஆக வேண்டுமே.

.

தருமி said...

Noa's ark மாதிரி இதையும் இன்னும் தேடிக்கொண்டிருக்கலாம். விரைவில் கிடைத்து விடும்! :)

saarvaakan said...

நண்பர் சுவன பிரியன்
எல்லா மதத்தினரும் பல இரடங்களை காட்டி இதுதான் அது என்று கூறுவார்கள்.அது போல்தன் நீங்கள் கூறுவதும் உள்ளது .மூஸா(மோஸஸ்) விஷயம் மட்டும் எடுத்துக் கொள்வோம்.

1.யூதர்களை எகிப்தில் இருந்து மூஸாவின் தலைமையில் பாலஸ்தீனத்திற்கு(இஸ்ரேல்) இறைவன் அழைத்து வந்து அங்கு இருந்தவர்களை விரட்டி விட்டு அவர்களுக்கு அந்நாட்டை கொடுத்ததாக ,தோரா,பழைய ஏற்பாடு(?),மற்றும் குரான் கூறுகிறது.

5:21. (தவிர, அவர்) “என் சமூகத்தோரே! உங்களுக்காக அல்லாஹ் விதித்துள்ள புண்ணிய பூமியில் நுழையுங்கள்; இன்னும் நீங்கள் புறமுதுகு காட்டி திரும்பி விடாதீர்கள்; (அப்படிச் செய்தால்) நீங்கள் நஷ்ட மடைந்தவர்களாகவே திரும்புவீர்கள்” என்றும் கூறினார்.
5:22. அதற்கு அவர்கள், “மூஸாவே! மெய்யாகவே, அ(ந்த இடத்)தில் மிகவும் பலசாலிகளான கூட்டத்தார் இருக்கின்றார்கள்; எனவே அவர்கள் அதைவிட்டு வெளியேறாத வரையில் நாங்கள் அதில் நுழையவே மாட்டோம். அவர்கள் அதைவிட்டு வெளியேறிவிடின், நிச்சயமாக நாங்கள் பிரவேசிப்போம்” எனக் கூறினார்கள்.
5:23. (அல்லாஹ்வை) பயந்து கொண்டிருந்தோரிடையே இருந்த இரண்டு மனிதர்கள் மீது அல்லாஹ் தன் அருட்கொடையைப் பொழிந்தான்; அவர்கள், (மற்றவர்களை நோக்கி:) “அவர்களை எதிர்த்து வாயில் வரை நுழையுங்கள். அது வரை நீங்கள் நுழைந்து விட்டால், நிச்சயமாக நீங்களே வெற்றியாளர்கள் ஆவீர்கள், நீங்கள் முஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வையுங்கள்” என்று கூறினர்.

17:104. இதன் பின்னர் நாம் பனூ இஸ்ராயீல்களுக்குச் சொன்னோம், நீங்கள் அந்த நாட்டில் குடியிருங்கள்; மறுமையின் வாக்குறுதி வந்தால், நாம் (உங்களையும், ஃபிர்அவனின் கூட்டத்தையும் விசாரணைக்காக) நம்மிடம் ஒன்று சேர்ப்போம்.

யூதர்கள் எகிப்தில் இருந்து வந்து பலஸ்தீனத்தில் குடியேறிதற்கு வரலாற்று ஆதாரமாக் எதனை கூறுகிறீர்கள்?

saarvaakan said...

நண்பர் சுவன பிரியன்
எல்லா மதத்தினரும் பல இரடங்களை காட்டி இதுதான் அது என்று கூறுவார்கள்.அது போல்தன் நீங்கள் கூறுவதும் உள்ளது .மூஸா(மோஸஸ்) விஷயம் மட்டும் எடுத்துக் கொள்வோம்.

1.யூதர்களை எகிப்தில் இருந்து மூஸாவின் தலைமையில் பாலஸ்தீனத்திற்கு(இஸ்ரேல்) இறைவன் அழைத்து வந்து அங்கு இருந்தவர்களை விரட்டி விட்டு அவர்களுக்கு அந்நாட்டை கொடுத்ததாக ,தோரா,பழைய ஏற்பாடு(?),மற்றும் குரான் (5:21-25, 17:104)கூறுகிறது.


17:104. இதன் பின்னர் நாம் பனூ இஸ்ராயீல்களுக்குச் சொன்னோம், நீங்கள் அந்த நாட்டில் குடியிருங்கள்; மறுமையின் வாக்குறுதி வந்தால், நாம் (உங்களையும், ஃபிர்அவனின் கூட்டத்தையும் விசாரணைக்காக) நம்மிடம் ஒன்று சேர்ப்போம்.

யூதர்கள் எகிப்தில் இருந்து வந்து பலஸ்தீனத்தில் குடியேறிதற்கு வரலாற்று ஆதாரமாக் எதனை கூறுகிறீர்கள்?

saarvaakan said...

2. மூஸா விஷயம் தொடர்கிறது.
குரான் 5:21௨5 ல் இருந்து அங்கு ஏற்கெனவே வசித்து வந்த மனிதர்களை விரட்டி விட்டே இறைவன் பாலஸ்தீனத்தை கொடுத்தார் என்றால் அது நியாயமாக படவில்லை.இது ஆன்மீக அளவில் மட்டுமே என்றால் யாரும் கண்டு கொள்ள போவதில்லை,மத்திய கிழக்கில் இது ஒரு பற்றி எரியும் பிரச்சினை.

3.மூஸாவின் காலத்தில் யூதர்கள் மட்டுமே ஓரிறை கொள்கை உடையவர்கள்(முஸ்லிம்கள்?). ஆனால் இப்போது அப்பகுதியில் வாழும் எகிப்தியர்,அரபியர் மற்றும் பாலஸ்தீனர் அனைவருமே முஸ்லிம்கள்.

இன்னும் இஸ்ரேலில் யூதர்கள் செய்து வருவதை குரானும் நியாயப் படுத்துவது போல் உள்ளது.கடந்த கால முஸ்லிம்(யூதர்)களுக்காக நிகழ்கால முஸ்லிம்(பாலஸ்தீனர்)களை இறைவன் தண்டிக்கலாமா?

suvanappiriyan said...

வால் பையன்!

//உலகெங்கும் மனிதர்களை படைத்த கடவுள், மத்தியகிழக்கு பகுதிகளில் மட்டும் தொடர்ச்சியாக நபிகளை தேந்தேர்டுத்தது ஏன் என்ற காரணமே இன்னும் புரியவில்லை!//

'எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கிக் கூறுவதற்க்காக அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம்.'-குர்ஆன் 14:4

இதன் மூலம் நம் நாட்டுக்கும் நம் மொழிக்கும் கூட நபி வந்திருக்கிறார். ஆனால் அவரையும் நாம் கடவுளாக்கி விட்டோம். நம் நாட்டுக்கு அனுப்பப்பட்ட தூதர் யார் என்ற விபரம் கிடைக்கவில்லை.

//எவற்றையும் ஆராய்ச்சி கண்ணோடு பார்த்தே பழகிவிட்டது, அல்லா தான் உண்மையான கடவுள் என நிருபித்தேயேர்களானால், இல்லை என்று நாங்கள் மறுக்கப்போவதில்லை,//

'இறைவன் தான் நாடியோருக்கு ஞானத்தை வழங்குகிறான். ஞானம் வழங்கப்பட்டவர் ஏராளமான நன்மைகள் வழங்கப்பட்டு விட்டார். அறிவுடையோரைத் தவிர யாரும் சிந்திப்பதில்லை.'-குர்ஆன் 2:269

//கடலை பிளக்க வைக்க முடிந்த கடவுளால் ஏன் இபிலீஸை அழிக்க முடியவில்லை, இபிலீஸ் கடவுளை விட சக்தி வாய்ந்தவனோ!//

'இறைவா! அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை எனக்கு அவகாசம் தருவாயாக!' என்று சைத்தான் கேட்டான்.'
'குறிப்பிட்ட நேரம் வரும் நாள் வரை நீ அவகாசம் அளிக்கப்பட்டவன்' என்று இறைவன் கூறினான்.'
-குர்ஆன் 15:36,37,38
எனவே இறைவனின் அனுமதியைப் பெற்றே சைத்தான் உலகுக்கு வருகிறான்.

suvanappiriyan said...

கும்மி!
//குர் ஆனில் துல்கர்னைன் கட்டியதாகக் கூறப்படும் சுவர் உலகில் எங்குள்ளது?//

உலகம் மிக விசாலமானது நண்பரே! நமது முழு ராணுவமும் முயற்ச்சித்தும் நம்ம வீரப்பன் அண்ணாச்சியை காட்டுக்குள் பிடிக்க முடிந்ததா? வஞ்சகமாக பேசி காட்டுக்கு வெளியில் கொண்டு வந்துதான் அவனை பிடிக்க முடிந்தது. ஆப்ரிக்க காடுகள் இதை விட அடர்த்தியதானவை. மனிதனின் காலடி படாத இடங்கள் இன்னும் எத்தனையோ உள்ளது. உலக முடிவு நாளில்தான் அந்த செம்பினால் ஆன அந்த சுவர் உடைக்கப்படும் என்பது குர்ஆனின் கூற்று. அது வரை பொறுப்போமே!

//சவுதியில் இஸ்லாமியர் இஸ்லாத்தைத் துறப்பதை வெளிப்படையாக அறிவிக்க முடியுமா என்று கேட்ட கேள்வியை சாய்ஸில் விட்டது போல் இந்த கேள்வியை விட மாட்டீர்கள் என்று எண்ணுகின்றேன்.//

நமது நாடு மதசார்பற்ற நாடு.(அப்படி சொல்லிக் கொள்கிறோம்:-)) சவுதி மத சார்புடைய நாடு. முன்பே சொன்னதுபோல் இஸ்லாம் ஒரு வாழ்க்கை நெறி. சவுதி மக்கள் விரும்பி இந்த வாழ்க்கையை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். அமைதியாகவும் வாழ்கிறார்கள். இதை விட ஒரு சிறந்த வாழ்க்கை முறையை உலகில் நீங்கள் காண்பித்தால்தான் கேள்வியே எழும். வயித்து வலிக்காக மதம் மாறிய ஏ.ஆர்.ரஹ்மானுக்கு திரும்பவும் தாய் மதம் திரும்புவதில் என்ன பிரச்னை? பெரியார்தாசன்(கருத்தம்மா புகழ்) அப்துல்லாவாக மாற என்ன அவசியம் வந்தது? யாரும் வற்புறுத்தினார்களா? இல்லையே! எனவே ஒரு மார்க்கத்தை வலுக்கட்டாயமாக நெடு நாட்களுக்கு பின் பற்ற வைக்க முடியாது. மக்கள் மனது வைக்க வேண்டும்.

கல்வெட்டு said...

// கும்மி...
உலகம் அழிந்துவிட்டதாக அர்த்தம். ஆனால் நாம் இங்கே உட்கார்ந்து இணையத்தின் வழி உரையாடிக்கொண்டிருக்கின்றோம். ஒரு வேளை, நாம் இருப்பது சொர்க்கமோ? :‍) //


ஆசை தோசை அப்பளம் வடை.... நினைப்பப்பாரு அய்யாவுக்கு. :-))))

நம்மல்லாம் நரகத்தில் இருக்கோம்.

ஆனா எப்படி சுவனப்பிரியன் போன்றவர்கள் நரகத்தில் இருக்கும் நம்முடன் பேசமுடிகிறது? ஐ.எஸ்.டி எஸ்.டி.டி போல நரக.டி.டி. சொர்க்க.டி.டி தொடர்பா இருக்குமோ?

*******

//கும்மி...
குர் ஆனில் துல்கர்னைன் கட்டியதாகக் கூறப்படும் சுவர் உலகில் எங்குள்ளது?//


இறைவன் நாடினால் உங்களுக்குத் தெரியும். "ஏக இறைவனை" ஏற்றுக்கொள்ளாதவர்கள் எல்லாம் அவர் சொன்ன அதிசியத்தை எங்கே என்று கேட்பது நகைப்பாக உள்ளது.

உமர் | Umar said...

வழக்கம்போல் சம்பந்தமில்லாத உதாரணம்.

வீரப்பன் ஆறடிக்கும் குறைவான உயரம் உள்ள மனிதன். துல்கர்னைன் சுவர் மலையளவு உயரம் உடையது. வீரப்பன் இருக்குமிடத்திற்கு மிக அருகில் சென்றால் மட்டுமே நேரில் பார்க்க முடியும். சுவர் எந்த காட்டுக்குள் இருந்தாலும் மலையளவு உயரம் என்பதால் பார்வையின் வீச்சிற்குள் மலையைக் கண்டாலே சுவற்றையும் பார்க்க முடியும். வீரப்பன் இருப்பிடத்தை மாற்றிக்கொண்டே இருப்பவன். சுவர் ஒரு இடத்தில் நிலையாய் இருப்பது. எந்த விதத்திலும் பொருந்தாத ஒன்றை எப்படி நீங்கள் உதாரணம் என்று கூறுகின்றீர்கள்? அதிலும் உயிரற்றதை பற்றி பேசினால் உயிருள்ளதை உதாரணமாகக் கொண்டு வருகின்றீர்கள். உயிருள்ளதைப் பற்றி பேசினால் உயிரற்றதை உதாரணமாகக் கொண்டு வருகின்றீர்கள். உங்கள் உதாரணங்களை படிப்பதற்கே அயர்ச்சியாய் இருக்கின்றது. தயவு செய்து நேரடி பதில் மட்டும் கொடுங்கள். உதாரணங்கள் கேட்டால் மட்டும் கொடுங்கள்.

//ஆப்ரிக்க காடுகள் இதை விட அடர்த்தியதானவை. மனிதனின் காலடி படாத இடங்கள் இன்னும் எத்தனையோ உள்ளது.//

மனிதனின் காலடி படாத இடங்களை சாட்டிலைட்டுகள் மூலம் ஆராய முடியும். மனிதனால் ஏறி கடக்க முடியாத உயரத்தை உடைய சுவர் எந்தக் காட்டுக்குள் இருந்தாலும், சாட்டிலைட் மூலம் பார்க்க முடியுமே. Google Earth போன்றவற்றின் மூலம் நீங்களே கூட தேடிப்பார்க்க முடியுமே. முகம்மது விரலசைத்தது, தலையை ஆட்டியதை எல்லாம் ஹதீஸ்களில் தொகுத்தவர்கள், முகம்மது அந்த சுவற்றில் ஓட்டை இடப்பட்டுள்ளது என்று கூறியதை மட்டும் ஹதீஸில் சேர்த்தவர்கள், அந்த சுவற்றை பற்றி எழுப்பப்பட்ட கேள்விகளை ஏன் ஹதீஸ்களில் சேர்க்கவில்லை? முகம்மதுவின் மாமனார்களுள் ஒருவரான உமர் அந்தச் சுவரை தேடிச் சென்றுவிட்டு அது போன்ற ஒன்று இல்லை என்று முயற்சியை கைவிட்டாரே. அதன்பிறகு, அதிலும் 1400 வருடங்களாக ஏன் எந்த இஸ்லாமியரும் அந்தச் சுவற்றைத் தேடிச் செல்லவில்லை?

உங்கள் மதத்திற்கு சம்பந்தமே இல்லாத மற்ற மதங்களில் இருக்கும் ஓட்டைகளை அம்பலப்படுத்த முனையும் நீங்கள், உங்கள் வேதபுத்தகத்தில் கூறப்பட்டிருக்கும் ஒரு இடத்தைக் கண்டறிய ஏன் எந்த முயற்சியும் எடுக்கவில்லை? குர் ஆனில் கூறப்பட்டுள்ள அனைத்து வரலாற்றுப் பகுதிகளுக்கும் சென்றதாகக் கூறியுள்ள நீங்கள் ஏன் அந்தச் சுவற்றை மட்டும் பார்க்கவில்லை?

முகம்மதுவின் சமகாலத்தில் வாழ்ந்த ஒருவர், அவரது மாமனார்களுள் ஒருவர் முகம்மது கூறிய இடத்தில் சென்று பார்த்துவிட்டு அது போல் எதுவும் இல்லை என்று வந்துவிட்டார். 1400 ஆண்டுகளுக்கு பிறகு வாழும் நீங்கள், அந்தச் சுவர் இருக்கின்றது என்று கூறுவது வேடிக்கையாக இருக்கின்றது.

உமர் | Umar said...

சுவனப்பிரியன்,
//நமது முழு ராணுவமும் முயற்ச்சித்தும் நம்ம வீரப்பன் அண்ணாச்சியை காட்டுக்குள் பிடிக்க முடிந்ததா? //

வழக்கம்போல் சம்பந்தமில்லாத உதாரணம்.

வீரப்பன் ஆறடிக்கும் குறைவான உயரம் உள்ள மனிதன். துல்கர்னைன் சுவர் மலையளவு உயரம் உடையது. வீரப்பன் இருக்குமிடத்திற்கு மிக அருகில் சென்றால் மட்டுமே நேரில் பார்க்க முடியும். சுவர் எந்த காட்டுக்குள் இருந்தாலும் மலையளவு உயரம் என்பதால் பார்வையின் வீச்சிற்குள் மலையைக் கண்டாலே சுவற்றையும் பார்க்க முடியும். வீரப்பன் இருப்பிடத்தை மாற்றிக்கொண்டே இருப்பவன். சுவர் ஒரு இடத்தில் நிலையாய் இருப்பது. எந்த விதத்திலும் பொருந்தாத ஒன்றை எப்படி நீங்கள் உதாரணம் என்று கூறுகின்றீர்கள்? அதிலும் உயிரற்றதை பற்றி பேசினால் உயிருள்ளதை உதாரணமாகக் கொண்டு வருகின்றீர்கள். உயிருள்ளதைப் பற்றி பேசினால் உயிரற்றதை உதாரணமாகக் கொண்டு வருகின்றீர்கள். உங்கள் உதாரணங்களை படிப்பதற்கே அயர்ச்சியாய் இருக்கின்றது. தயவு செய்து நேரடி பதில் மட்டும் கொடுங்கள். உதாரணங்கள் கேட்டால் மட்டும் கொடுங்கள்.

//ஆப்ரிக்க காடுகள் இதை விட அடர்த்தியதானவை. மனிதனின் காலடி படாத இடங்கள் இன்னும் எத்தனையோ உள்ளது.//

மனிதனின் காலடி படாத இடங்களை சாட்டிலைட்டுகள் மூலம் ஆராய முடியும். மனிதனால் ஏறி கடக்க முடியாத உயரத்தை உடைய சுவர் எந்தக் காட்டுக்குள் இருந்தாலும், சாட்டிலைட் மூலம் பார்க்க முடியுமே. Google Earth போன்றவற்றின் மூலம் நீங்களே கூட தேடிப்பார்க்க முடியுமே. முகம்மது விரலசைத்தது, தலையை ஆட்டியதை எல்லாம் ஹதீஸ்களில் தொகுத்தவர்கள், முகம்மது அந்த சுவற்றில் ஓட்டை இடப்பட்டுள்ளது என்று கூறியதை மட்டும் ஹதீஸில் சேர்த்தவர்கள், அந்த சுவற்றை பற்றி எழுப்பப்பட்ட கேள்விகளை ஏன் ஹதீஸ்களில் சேர்க்கவில்லை? முகம்மதுவின் மாமனார்களுள் ஒருவரான உமர் அந்தச் சுவரை தேடிச் சென்றுவிட்டு அது போன்ற ஒன்று இல்லை என்று முயற்சியை கைவிட்டாரே. அதன்பிறகு, அதிலும் 1400 வருடங்களாக ஏன் எந்த இஸ்லாமியரும் அந்தச் சுவற்றைத் தேடிச் செல்லவில்லை?

உங்கள் மதத்திற்கு சம்பந்தமே இல்லாத மற்ற மதங்களில் இருக்கும் ஓட்டைகளை அம்பலப்படுத்த முனையும் நீங்கள், உங்கள் வேதபுத்தகத்தில் கூறப்பட்டிருக்கும் ஒரு இடத்தைக் கண்டறிய ஏன் எந்த முயற்சியும் எடுக்கவில்லை? குர் ஆனில் கூறப்பட்டுள்ள அனைத்து வரலாற்றுப் பகுதிகளுக்கும் சென்றதாகக் கூறியுள்ள நீங்கள் ஏன் அந்தச் சுவற்றை மட்டும் பார்க்கவில்லை?

முகம்மதுவின் சமகாலத்தில் வாழ்ந்த ஒருவர், அவரது மாமனார்களுள் ஒருவர் முகம்மது கூறிய இடத்தில் சென்று பார்த்துவிட்டு அது போல் எதுவும் இல்லை என்று வந்துவிட்டார். 1400 ஆண்டுகளுக்கு பிறகு வாழும் நீங்கள், அந்தச் சுவர் இருக்கின்றது என்று கூறுவது வேடிக்கையாக இருக்கின்றது.

வால்பையன் said...

//நம் நாட்டுக்கும் நம் மொழிக்கும் கூட நபி வந்திருக்கிறார். ஆனால் அவரையும் நாம் கடவுளாக்கி விட்டோம். நம் நாட்டுக்கு அனுப்பப்பட்ட தூதர் யார் என்ற விபரம் கிடைக்கவில்லை.//


குரானில் ஆதாமிலிருந்து முகமது வரை நபிகள் பட்டியலிபட்டுள்ளார்கள் தானே! அதில் இந்தியாவுக்கு இன்னார் என்ற விபரம் தெரியலைன்னு சொன்னா எப்படி, மேலும் ஒரு நபி இருந்த இடம் தெரியாமல் காணாமல் போனார் என்றால் அந்த நபியை தேர்ந்தெடுத்த கடவுளின் வேல்யூ என்ன!?

வால்பையன் said...

//'இறைவன் தான் நாடியோருக்கு ஞானத்தை வழங்குகிறான். ஞானம் வழங்கப்பட்டவர் ஏராளமான நன்மைகள் வழங்கப்பட்டு விட்டார். அறிவுடையோரைத் தவிர யாரும் சிந்திப்பதில்லை.'-குர்ஆன் 2:269//


என்ன ஒரு கேனத்தனமான வசனம்!

அதாவது இறைவன் “தான்” நாடியோர்க்கு, கிட்டதட்ட நீ இப்படி தான் இருக்கனும்னு எல்லாம் முன்கூட்டியே திட்டமிடபட்டுவிடும், சுருக்கமா சொல்லனும்னா விதி மாதிரி.

எனகென்னவோ கடவுள் ஒரு சைக்கோ மாதிரி தெரியுது!

வால்பையன் said...

//'இறைவா! அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை எனக்கு அவகாசம் தருவாயாக!' என்று சைத்தான் கேட்டான்.'
'குறிப்பிட்ட நேரம் வரும் நாள் வரை நீ அவகாசம் அளிக்கப்பட்டவன்' என்று இறைவன் கூறினான்.'
-குர்ஆன் 15:36,37,38
எனவே இறைவனின் அனுமதியைப் பெற்றே சைத்தான் உலகுக்கு வருகிறான்.//


தனக்கு எதிராக செயல் படுவான் என்று தெரிந்து அனுப்பி வைத்திருக்கிறார் அல்லா அப்படி தானே!

கன்ஃபார்மா சைக்கோ தான் போலயே!

மனிதர்கள் விளையாட்டு பொம்மையா?, தன் நோக்கத்துக்கு ஆட்ட, இந்த மாதிரி லூஸு கடவுளை போய் எப்படி தான் ஏத்துகிறிங்களோ!

உமர் | Umar said...

//சவுதி மத சார்புடைய நாடு. முன்பே சொன்னதுபோல் இஸ்லாம் ஒரு வாழ்க்கை நெறி. சவுதி மக்கள் விரும்பி இந்த வாழ்க்கையை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். இதை விட ஒரு சிறந்த வாழ்க்கை முறையை உலகில் நீங்கள் காண்பித்தால்தான் கேள்வியே எழும். //

விரும்பி ஏற்றிருக்கின்றார்களா இல்லையா என்பதலா கேள்வி. விருப்பமில்லை என்பதை வெளிப்படையாக அறிவிக்க முடியுமா என்பதுதான் கேள்வி. சவூதி ஒரு மதச்சார்புடைய நாடு என்று கூறியுள்ளதன் மூலம் வெளிப்படையாக அறிவிக்க முடியாது என்ற தோற்றம் ஏற்படுகின்றது. தோற்றம் சரியா? தவறா? தவறு எனில் மதச்சார்புடைய என்னும் வார்த்தைக்கு என்ன அர்த்தம்?

உமர் | Umar said...

@கல்வெட்டு
//நம்மல்லாம் நரகத்தில் இருக்கோம்//

நரகம்ன்னா கொதிக்கிற எண்ணெய்ச் சட்டி இருக்கும்ன்னு சொல்லுவாங்க. இங்கே அப்படியெல்லாம் இல்லையே, இணையம்லாம் இருக்குறதுனால சொர்க்கமா இருக்கும்ன்னு தப்பா நெனைச்சிட்டேன்.

நம்மள மாதிரி நரகவாசிகளை தொடர்பு கொள்வதற்காக, காபிர்களை ஏவி இந்த இணையம்லாம் உருவாக்கி இருக்காங்கன்னு இப்பதான் தெரியுது.

:-)

.

yasir said...

//நம் நாட்டுக்கும் நம் மொழிக்கும் கூட நபி வந்திருக்கிறார் ஆனால் அவரையும் நாம் கடவுளாக்கி விட்டோம்//

இயேசுவைக் கூடத்தான் கடவுளாக்கி விட்டார்கள் இவர் மட்டும் குரானில் இருக்கும் போது, நம் நாட்டு தூதரை மட்டும் காணவில்லையோ? பத்திரிக்கையில் காணவில்லை என விளம்பரம் போட்டு தக்க பரிசு வழங்களாமே!

ஒரு வேலை புத்தர்,சிவன்,ராமன் போன்றவர்களும் தூதர்கள் தானோ? இல்ல நம்ம தமிழுக்கு வேதம் தந்த வள்ளுவரும் நபியாக இருப்பரோ? சொன்னாலும் சொல்லுவாங்கப்பா!

yasir said...

//நம் நாட்டுக்கும் நம் மொழிக்கும் கூட நபி வந்திருக்கிறார் ஆனால் அவரையும் நாம் கடவுளாக்கி விட்டோம்//

இயேசுவைக் கூடத்தான் கடவுளாக்கி விட்டார்கள் இவர் மட்டும் குரானில் இருக்கும் போது, நம் நாட்டு தூதரை மட்டும் காணவில்லையோ? பத்திரிக்கையில் காணவில்லை என விளம்பரம் போட்டு தக்க பரிசு வழங்களாமே!

ஒரு வேலை புத்தர்,சிவன்,ராமன் போன்றவர்களும் தூதர்கள் தானோ? இல்ல நம்ம தமிழுக்கு வேதம் தந்த வள்ளுவரும் நபியாக இருப்பரோ? சொன்னாலும் சொல்லுவாங்கப்பா!

வால்பையன் said...

//ஒரு வேலை புத்தர்,சிவன்,ராமன் போன்றவர்களும் தூதர்கள் தானோ? இல்ல நம்ம தமிழுக்கு வேதம் தந்த வள்ளுவரும் நபியாக இருப்பரோ? சொன்னாலும் சொல்லுவாங்கப்பா!//


இறைவன் ஒருவனே என்று கூறுவது மட்டும் தூதரின் வேலையில்லை, இறைவன் என் மூலமாக இதை உங்களுக்கு சொல்ல சொன்னான், நிறைய புருடா விடனும், உலகம் ஆறே நாளில் படைக்கப்பட்டதுன்னு அடிச்சி சொல்லனும்!

இந்த இறைவனை வணங்கினால் உங்களுக்கு ஆடிதள்ளுபடி சொர்க்கத்தில் கிடைக்கும்னு வியாபாரம் பண்ணனும்னு

இதெல்லாம் பண்ணாதான் தூதர்.

புத்தர்,சிவன்,ராமன்!?,வள்ளுவரெல்லாம் இதையா சொன்னாங்க.

தூதருக்குன்னு தனி அடையாளங்கள் இருக்குன்னே.

saarvaakan said...

//நம் நாட்டுக்கும் நம் மொழிக்கும் கூட நபி வந்திருக்கிறார் ஆனால் அவரையும் நாம் கடவுளாக்கி விட்டோம்//
நண்பர்கள் பலர் நம் நாட்டுக்கு அனுப்பப் பட்ட தூதர் யாரென்று தெரிந்துகொள்ள ஆர்வமாக இருப்பதால் நாம் அவர்களுக்க்காக துப்பறிந்து உதவுகிறோம்.

உலகின் முதல் மனிதர் திரு ஆதம்(உயரம் 90 அடி.உண்மையிலேயே உயர்ந்த மனிதர்தான்) அவர்கள் இலங்கையில்தான் சொர்க்கத்தில் இருந்து முதலில் காலடி எடுத்து வைத்தார்.அவர் தமிழ் பேசியதாகவும்(ஆகா உலகின் முதல் மொழி தமிழ்) அவரை சிவ்ன் என்று இந்தியர்கள் கூறுவதாக சில இஸ்லாமிய அறிஞர்கள் கூறுகின்றனர்.
இலங்கையில் இருந்து ஆத்ம(சிவன்) ஒரு பாலம் வழியாக(ஆதம் அல்லது இராமர் பாலம் என்றழைக்கப் படும் மணல் திட்டுகள்) தமிழ்நாடு வந்து அங்கிருந்து அரெபியா சென்று அவரின் மனைவி ஹவ்வாவை சந்தித்தாகவும் கூறுகின்றனர்.

திருவள்ளுவரையே ஒரு கும்பல் கிறித்தவர் என்றும் அவர் புனித தோமாவை சந்தித்து கிறித்தவராக மறினார் என்று கதை கட்டி வருகிறது.திருவள்ளுவர் ஒரு முன்னாள் கிறித்தவ தூதர் என்றால் முகதுக்கு முந்திய் யூத ,கிறித்தவ தூதர்கள் அனைவரும் முஸ்லிம்கள் என்ற விதியின் படி திருவள்ளுவர் இஸ்லாமிய தூதரே.

ஆகவே சிவன்(ஆதம்) ஒரு தூதர்,திருவள்ளுவர் இன்னொரு தூதர்.

saarvaakan said...

சிவன்தான் ஆதம் என்று கூறும் இணைப்பு.
http://idrees.lk/?p=546

suvanappiriyan said...

வால்பையன்!

//அதில் இந்தியாவுக்கு இன்னார் என்ற விபரம் தெரியலைன்னு சொன்னா எப்படி,//

தெரியவில்லை என்றால் அந்த விபரம் இங்கு தேவையில்லை என்பதால் விடப்பட்டுள்ளது. முகமது நபி ஒரு அரேபியர். முதன் முதலில் இஸ்லாத்தை ஏற்றவர்களும் அரபுகளே! அந்த மக்களின் சந்தேகங்களைத் தீர்க்கும் வகையில் அரபு நாடுகளை ஒட்டி வாழ்ந்த தீர்க்க தரிஷிகளை குர்ஆன் பட்டியலிடுகிறது. ஒருக்கால் முகமது நபி தமிழராக இருந்திருந்தால் இலங்கை, பர்மா, தாய்லாந்து, சீனா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளுக்கு அனுப்பப்பட்ட இறைத்தூதர்களின் பட்டியலை காண முடியும்.

//தனக்கு எதிராக செயல் படுவான் என்று தெரிந்து அனுப்பி வைத்திருக்கிறார் அல்லா அப்படி தானே!//

கண்டிப்பாக! சாத்தானின் தீங்கிலிருந்து மக்களை நேர்வழிப்படுத்த இது வரை ஒரு லட்சத்திற்க்கும் மேற்பட்ட நபிகளை இறைவன் பூமிக்கு அனுப்பியுள்ளான். செவி ஏற்க்காதது அந்த மக்கள் செய்த தவறு.

suvanappiriyan said...

கல்வெட்டு!

//அறிவியலை கேள்வி கேட்டால் மட்டும் பேசலாம் என்பது எனது நிலை.

நிலாவைல் பாட்டி வடை சுடுவதாக நானும் 7 வயதுவரை ( 8 க்கூட இருக்கலாம்) நம்பியதாகவே என் அம்மா கூறுகிறார்.

நான் இப்போது வளர்ந்துவிட்டேன்.//

நீங்கள் எந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறீர்கள் என்பதை http://suvanappiriyan.blogspot.com/2011/01/blog_post-11.html இங்கு சென்று பார்த்துக் கொள்ளுங்கள்.

வால்பையன் said...

////தனக்கு எதிராக செயல் படுவான் என்று தெரிந்து அனுப்பி வைத்திருக்கிறார் அல்லா அப்படி தானே!//

கண்டிப்பாக! சாத்தானின் தீங்கிலிருந்து மக்களை நேர்வழிப்படுத்த இது வரை ஒரு லட்சத்திற்க்கும் மேற்பட்ட நபிகளை இறைவன் பூமிக்கு அனுப்பியுள்ளான். செவி ஏற்க்காதது அந்த மக்கள் செய்த தவறு. //


மனிதர்களையும் படைத்துவிட்டு, சாத்தானையும் படைத்து, போய் மனிதர்களுக்கு தீங்கு செய் என்று அனுப்பிவிட்டு, பின் மனிதர்களை திருத்த ஒரு லட்சம் நபிகளை அனுப்பி வைத்தாரிக்கிறார்!

என்ன ஒரு பாசம் மனிதர்கள் மேல்!

கடவுள் ஒரு சிறந்த காமெடி பீஸ்!

தருமி said...

//சிவன்தான் ஆதம் என்று கூறும் இணைப்பு.
http://idrees.lk/?p=546//

saarvaakan,
எப்டீங்க இந்த மாதிரி பதிவுகள் உங்கள் கண்ணில் படுது?!! ஆச்சரியமான ஆராய்ச்சிகளின் இடுகையாக இருக்கே. நான் ரசித்த சில பகுதிகள்:
//ஆதாமின் இப்பாதச் சுவடு 5’4” நீளமாகும். அகலம் 2’ ஆகும்.// செம சைஸ்!!

//“மனித குலத்தின் தந்தை” என்று பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்றும் இருக்கிறது.// எந்த மொழியிலோ??

//ஆதாம் ஏவாளை தடுத்த கனி அறிவுக்கனியாகும். // இப்படி ஒரு கனியைப் படைச்சிட்டு சாப்பிடாதே என்ற கடவுளின் ‘அறிவுக்கனி’ ரொம்ப ஆச்சரியமான விஷயமில்லையா!!

//குமரி மாவட்டத்து அவ்வைக் கோயில்கள் ஆதித்தாயாகிய அவ்வையை (ஹவ்வா) வழிபடும் கோயில்கள் என்று இதிலிருந்து தெளிவாகிறது.// -- அடப் பாவமே! நம்ம ஒளவைப் பாட்டிதான் ஹவ்வாவா? செம ஜாலி!!

//டார்வின் ஆதிகால மக்களுக்கு கோரைப் பற்கள் இருந்தன என்றும் ... கூறியுள்ளார்.//-- இவங்க ஆராய்ச்சியில் டார்வினும் வந்திர்ராரே .. நல்லா இருக்கு!!

ரொம்ப நல்ல பதிவு. எல்லோரும் கட்டாயம் வாசிங்க ...

தருமி said...

//தொலைக்காட்சியில் பர்கா -- ...ஏன் உங்கள் மதங்களில் கேள்வியே கேட்கக் கூடாதா? கேட்டாலே அது blasphemyதானா? அதுவும் இந்த நாட்டிலேயே இப்படின்னா இஸ்லாமிய நாட்டில் எவன் எதில் கேள்வி கேட்பான்? //

ஒன்றாம் எண்ணில் கேட்ட இந்த கேள்வியை ஏனிப்படி கண்டு கொள்ளாமல் இருக்கிறீர்கள்? பதில் தர முடியவில்லையா? மனமில்லையா?

தருமி said...

//எந்தக் காரணத்துக்கும் கொல்லுடான்னு சொல்ற 'சாமி' என்ன 'சாமி’யய்யா?//

இதுக்கும் பதிலே இல்லை!!

தருமி said...

//குர் ஆனில் துல்கர்னைன் கட்டியதாகக் கூறப்படும் சுவர் உலகில் எங்குள்ளது?//

கும்மி
இப்படி ஒரு ”கதை” இருப்பது தெரியாதே! நல்ல “கதை”யாக இருக்கிறதே. 1400 வருஷமா பலவிதக் கேள்விகளை முன் வைத்து, இஸ்லாமியர்கள் அதற்குப் பதிலளிக்கக் கஷ்டப்படுவதற்குப் பதில் இந்த ஒரு மலையைக் கண்டு பிடிச்சிச்சா ... ஜோலி எல்லாமே முடிஞ்சிருமே! பிரச்சனையே இல்லாம நாம எல்லோரும் அந்த மார்க்கத்துக்குப் போயிடலாமே! இல்லையா?!!!

அதை ஏன் செய்ய மாட்டேங்குறாங்க?

Unknown said...

///சுரா 47.4 - இறை நிராகரிப்பாளர்களை///

குரானில் கூறப்பட்டுள்ள சம்பவங்கள் எல்லாம் முகம்மதின் மற்றும் அவருடைய காலத்திற்கு முற்பட்டவைகள்தான். அன்று முகம்மது தனது கொள்கையை அதாவது இறைவன் ஒருவனே அவனே அல்லா என்று பிரச்சாரம் செய்யும் போது அதனை ஏற்று அதில் இணைந்தவர்கள் ஈமான்தாரிகள் அதாவது முகம்மதின் ஓரிறைக் கொள்கையை ஏற்றுக்கொண்டவர்கள். அவ்வாறே முகம்மதின் கொள்கையை மறுத்தவர்கள் இறைநிராகரிப்பாளர்கள் என்று ஈமான்தாரிகளால் அழைக்கப்பட்டனர். அன்று அதாவது முகம்மதின் காலகட்டங்களில் இவ்விரு வேறு பிரிவினருக்குமிடயேதான் சண்டைகள் நடக்கின்றன. முகம்மது மதினாவில் இருக்கும் சமயம் குறைஷிகளால் போர்தொடுக்கப்படும்போது மேற்குறிப்பிட்ட அவ்வசனம் முகம்மதால் (கடவுளால் அல்ல) கூறப்படுகிறது. இங்கு அவர் இறைநிராகரிப்பாளர்கள் எனக் குறிப்பிடக் காரணம், அவ்வாறு போர் தொடுத்தவர்களில் முகம்மது மற்றும் அவருடன் மக்காவிலிருந்து வந்தவர்களின் உறவினர்களும் இருந்தனர். இதன்காரணமாக ஏற்படும் தயக்கம் காரணமாக உறவினர்களாக இருந்தாலும் அவர்களும் ”இறைநிராகரிப்பாளர்களே” எனவே கழுத்தை வெட்டுங்கள் என்கிறார். இது அச்சமயம் நடைபெற்ற போருக்காக சொல்லப்பட்ட வசனம்.

//எந்தக் காரணத்துக்கும் கொல்லுடான்னு சொல்ற 'சாமி' என்ன 'சாமி’யய்யா?//
///இதுக்கும் பதிலே இல்லை///

தன்மீது வலிந்து நடத்தப்படும் ஒரு போரில், ஒரு சண்டையில் அமைதியாக உட்கார்ந்திருங்கள் என்று சொல்லச் சொல்கிறீர்களா!
உங்களிடம், எதிரி ஒரு கண்ணத்தில் அறைந்தால் மறுகண்ணத்தையும் காட்டுன்னு சொன்னாலும் தவறாக இருக்கிறது. திருப்பி அடிடான்னு சொன்னாலும் தப்பா இருக்கிறதே! வேறு என்னதான் செய்யச் சொல்லனும் அய்யா!

தருமி said...

//ஏ.ஆர். ரஹ்மான் வயித்து வலி சரியானதும் பழைய மதத்துக்கு ஏன் போகவில்லை?//

ரொம்ப நல்ல கேள்வி! அத அவர்ட்ட கேக்கணும்.
பதில்: நன்றிக் கடன் / நம்பிக்கை / வெளியே போனதும் மறுபடி வந்திருச்சுன்னா அப்டின்ற பயம் --இதுலே உள்ள ஏதோ ஒரு (மூட)நம்பிக்கையாக இருக்கலாம்.

உமர் | Umar said...

//கும்மி
இப்படி ஒரு ”கதை” இருப்பது தெரியாதே! நல்ல “கதை”யாக இருக்கிறதே. 1400 வருஷமா பலவிதக் கேள்விகளை முன் வைத்து, இஸ்லாமியர்கள் அதற்குப் பதிலளிக்கக் கஷ்டப்படுவதற்குப் பதில் இந்த ஒரு மலையைக் கண்டு பிடிச்சிச்சா ... ஜோலி எல்லாமே முடிஞ்சிருமே! பிரச்சனையே இல்லாம நாம எல்லோரும் அந்த மார்க்கத்துக்குப் போயிடலாமே! இல்லையா?!!!

அதை ஏன் செய்ய மாட்டேங்குறாங்க?//

இந்தக் கதைதான் குர் ஆனில் இருக்கும் ஓட்டைகளிலேயே மிகப்பெரும் ஓட்டை. மேம்போக்காகப் பார்க்கும்போது ஒரு சாதாரணக் கதை போல் தோன்றும் இக்கதையை ஆராய்ந்தால் குர் ஆனின் வண்டவாளம் முழுதும் வெளியே வந்துவிடும்.

உமர் அக்காலத்தில் முயற்சி செய்தும் சுவற்றினைக் கண்டுபிடிக்கமுடியவில்லை. (இஸ்லாம் பரவியதில் பெரும்பங்கு உமரினையேச் சாரும்). அதனால்தான் யாரும் அதைப் பற்றி பேசுவதில்லை.அப்படிப்பட்ட சுவர் இருப்பதுக் கண்டுபிடிக்கப்பட்டாலும், இன்னும் பல ஆப்புகள் அந்தக் கதையிலேயே காத்திருக்கின்றன.

இந்தக் கதை யூத மதத்திலும் இருக்கின்றது. Zulqarnain என்னும் பாத்திரம் கிறித்துவத்தில் இருக்கின்றதா என்று தெரியவில்லை.

மற்ற எல்லாவற்றிற்கும் உடனே வஹி வந்துவிடும் முகம்மதுவிற்கு. ஆனால், இந்தக் கதையைப் பற்றி யூதர்கள் கேட்டபின்பு 15 நாட்கள் கழித்தே 'வஹி' வந்தது. அறிந்திராத செவிவழிக் கதைகளை அறிந்துகொள்ள 15 நாட்கள் போதுமானதாகத் தான் இருந்திருக்கின்றது. :-)

உமர் | Umar said...

//மேற்குறிப்பிட்ட அவ்வசனம் முகம்மதால் (கடவுளால் அல்ல) கூறப்படுகிறது. //

குர் ஆனில் இருப்பவை அனைத்தும் இறைவனின் வார்த்தைகள் என்றுதானே கூறுவார்கள்?

உமர் | Umar said...

//அந்த மக்களின் சந்தேகங்களைத் தீர்க்கும் வகையில் அரபு நாடுகளை ஒட்டி வாழ்ந்த தீர்க்க தரிஷிகளை குர்ஆன் பட்டியலிடுகிறது. //

அப்படியானால், குர் ஆன் அரபு நாடுகளில் வாழ்ந்த மக்களுக்கு மட்டுமேயானது என்பதை ஒத்துக்கொள்கின்றீர்களா?

தருமி said...

என்னங்க அஸ்கார் .. கொழப்புறீங்க ..//அவ்வசனம் முகம்மதால் (கடவுளால் அல்ல) கூறப்படுகிறது.//

இந்த மாதிரி குழப்பமும் உங்க குரான்ல இருக்கா??

:(

Unknown said...

அதை விடுத்து மற்றவைகளுக்கு பதில் அளிக்கலாமே!

தருமி said...

//உறவினர்களாக இருந்தாலும் அவர்களும் ”இறைநிராகரிப்பாளர்களே” எனவே கழுத்தை வெட்டுங்கள் என்கிறார்.//

ச்சே! என்ன ஒரு நபி!

அவருக்கு நம்மாளு கிருஷ்ண பரமாத்வா பரவாயில்லைன்னு தோணுதே! இவரு இந்த அளவு crude இல்லையே!

ஈசாவும் தன் ஆளுகளைத் திரட்டிட்டு போய் ரோமானியர்களுடன் சண்டை போட்டிருக்கணும் .. நல்லா இருந்திருக்கும்ல!!

தருமி said...

//Askar said...

அதை விடுத்து மற்றவைகளுக்கு பதில் அளிக்கலாமே!//

அப்டீங்கிறீங்க !! என்னங்க இது .. முதலுக்கே மோசமா இருக்கே!

உமர் | Umar said...

//குரானில் கூறப்பட்டுள்ள சம்பவங்கள் எல்லாம் முகம்மதின் மற்றும் அவருடைய காலத்திற்கு முற்பட்டவைகள்தான். ......
.. இது அச்சமயம் நடைபெற்ற போருக்காக சொல்லப்பட்ட வசனம்.//

குர் ஆனில் கூறப்பட்டுள்ளவை எக்காலத்திற்கும், எல்லாப் பகுதி மக்களுக்கு உரியவை என்றுதானே பிரச்சாரம் செய்யப்படுகின்றது?

நீங்கள் இதிலும் முரன்படுகிண்றீர்கள். குர் ஆன் இறைவனின் வார்த்தைகள் என்பதிலும் முரண்படுகிண்றீர்கள்.

இந்த வசனம் இறைவனிடமிருந்து வந்ததாக முகம்மது கூறியுள்ளார். ஆனால், அவை அவரது வார்த்தைகள்தான்; அவர் பொய் சொல்லியுள்ளார் என்று கூறுகின்றீர்கள். இந்த வசனத்தில், இறைவனிடமிருந்து வந்தது என்று பொய் கூறிய முகம்மது ஏன் மற்ற வசனங்களிலும் பொய் கூறியிருக்கக் கூடாது?

suvanappiriyan said...

கும்மி!

//சுவர் எந்த காட்டுக்குள் இருந்தாலும் மலையளவு உயரம் என்பதால் பார்வையின் வீச்சிற்குள் மலையைக் கண்டாலே சுவற்றையும் பார்க்க முடியும்.//

இரண்டு மலைகளுக்கு நடுவே கட்டப்பட்ட சுவர் அதுவும் மலை போல்தானே காட்சி அளிக்கும்!

//உயிருள்ளதைப் பற்றி பேசினால் உயிரற்றதை உதாரணமாகக் கொண்டு வருகின்றீர்கள்.//

உயிருள்ளதோ உயிரற்றதோ இங்கு தேடுதல் என்ற செயல் இரண்டுக்கும் பொருந்தும்.

//மனிதனின் காலடி படாத இடங்களை சாட்டிலைட்டுகள் மூலம் ஆராய முடியும்.//

மரங்கள் அடர்ந்த மலைகளை நீங்கள் சேடலைட் மூலம் பார்த்தால் மரங்களைத்தான் பார்க்க முடியுமே தவிர அதனுள் ஊடுருவி சென்று பார்க்க இயலாது. உசாமாவையும், தாலிபான்களையும் பிடிக்க முடியாமல் கையை பிசைந்து கொண்டிருக்கும் அமெரிக்கர்களிடம் கேளுங்கள் விபரம் சொல்வார்கள். ஆப்கனில் பாலைவனத்தில் உள்ள குகைகளையே அவர்களால் துல்லியமாக கண்டு பிடிக்க முடியவில்லை. அங்கு மரங்களோ காடுகளோ இல்லாத பாலைவனத்திலேயே இவ்வளவு பிரச்னை. சாடலைட்களால் தோராயமாகத்தான் காண முடியும் துல்லியமாக அல்ல!

suvanappiriyan said...

Kummi!
//முகம்மதுவின் மாமனார்களுள் ஒருவரான உமர் அந்தச் சுவரை தேடிச் சென்றுவிட்டு அது போன்ற ஒன்று இல்லை என்று முயற்சியை கைவிட்டாரே.//

வழக்கமான பொய் செய்தி. இதனை எங்கிருந்து எடுத்தீர்கள் என்ற ஆதாரத்தை தாருங்கள்.

//நீங்கள் ஏன் அந்தச் சுவற்றை மட்டும் பார்க்கவில்லை?//

மற்ற இடங்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. துல்கர்னைன் கட்டிய சுவர் எங்கிருக்கிறது என்ற விபரம் சொல்லப்படவில்லை. உலக முடிவு நாளில் அச்சுவர் உடைக்கப்படும். அந்நாளில் நானும் நீங்களும் உயிரோடு இருந்தால் அவசியம் பார்க்கலாம். இந்த உலகம் ஒரு நாள் அழியும் என்று விஞ்ஞானிகளும் ஒத்துக் கொண்டுள்ளனர்.

தருமி said...

//சாடலைட்களால் தோராயமாகத்தான் காண முடியும் துல்லியமாக அல்ல!//

அட போங்க சார்! அவனவன் வீட்டை மட்டும் தனியா பார்க்க முடியுது!

ஆனாலும் சாமிக்கு எதுக்கு இந்த விளையாட்டு .?. மெட்டல் சுவர் அதில் ஒரு ஓட்டை -- எதிலேயும் லாஜிக் இல்லாமல்லா இருக்கு ..!

உமர் | Umar said...

//வழக்கமான பொய் செய்தி. இதனை எங்கிருந்து எடுத்தீர்கள் என்ற ஆதாரத்தை தாருங்கள்.//

எது பொய்ச் செய்தி? உமர், முகம்மதுவின் மாமனார் என்பது பொய்யா? அல்லது அவர் அந்தச் சுவற்றை தேடிச்செல்லவில்லை என்பது பொய்யா? எது பொய் என்று கூறுகின்றீர்கள் என்று கூறுங்கள். ஆதாரம் தருகின்றேன்.

தருமி said...

//மற்ற இடங்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. //

ஒரு பெயரும் இல்லையே .. கிழக்கே மேற்கே என்று திசைகள் .. அங்கே சூரியன் கருப்பு நீரில் முங்கிப் போகுது ..ய்ஃஜூஜ், மஃஜூஜ் ஆளுகள் .. இப்படிதானே போகுது கதை.

அறிவியலையே புட்டு புட்டு வைக்கிற குரானில் இப்படி ஒரு topography இல்லாமல் இப்படி இருக்கு?

suvanappiriyan said...

உமர் தேடிச் சென்று "அந்த சுவர்" தென்படவில்லை என்று சொன்னதாகச் சொன்னீர்கள் அல்லவா! அந்த செய்தியை எங்கிருந்து எடுத்தீர்கள். என்ற விபரத்தைத்தான் கேட்டேன்.

suvanappiriyan said...

சார்வாகன்!
//திரு முகமதுவே செய்யாத வேலையை நீ ஏன் செய்ய முயல்கிறார் என்று மறுமொழி வருகிறது.//

இது முகமது நபியை அந்த மக்கள் எந்த அளவு மரியாதை வைத்திருந்தார்கள் என்பதை எடுத்துக் காட்டுகிறது. மார்க்க விஷயங்களில் முகமது நபி சொல்லாத எந்த ஒன்றையும் அவர்கள் செய்ததில்லை. ஆனால் முந்தய வேதங்களில் ஏற்பட்டது போல் குர்ஆனிலும் மனிதர்களின் கரம் பட்டு விடக் கூடாது என்பதற்க்காக பலமுறை ஆலோசித்து குர்ஆனை தொகுக்க முயற்ச்சிக்கின்றனர். குர்ஆனை மனனம் செய்திருந்த பலரும் போரில் கொல்லப்பட்டிருந்தாரகள். எனவே குர்ஆனை தொகுப்பது அவசியம் என்றாகி விட்டது. அபுபக்கரும் உமரும் செய்த அந்த முயற்ச்சிதான் இன்று வரை மனிதக் கரங்கள் புகாமல் குர்ஆன் பாதுகாக்கப்பட்டுள்ளது.

//குரானை முழுமையாக்கி அதனை பிற மொழிகளில் மொழி பெயர்க்க அவர் எந்த முயற்சியுமே செய்ய வில்லை.//

முகமது நபி காலத்திலேயே பல தோழர்களும் உலகின் பல இடங்களுக்கும் தங்கள் நெஞ்சிலே குர்ஆனையும் முகமது நபியின் போதனையையும் சுமந்தவர்களாக பயணித்தனர். மாலிக் இப்னு தீனார் என்ற தோழர் முகமது நபி காலத்திலேயே கடல் மார்க்கமாக கேரளத்துக்கு வருகிறார். முதல் பள்ளியையும் அங்கு கட்டுகிறார். அந்த பள்ளி இன்றும் இருக்கிறது. அப்பொழுது சேரமான் பெருமாள்(கண்ணதாசனின் சேரமான் காதலி) இஸ்லாத்தை ஏற்று முகமது நபியை காணும் பொருட்டு மெக்கா நோக்கி சென்றதாக வரலாறு. அரபு மொழி தெரியாத கேரள மக்களும் தமிழக மக்களும் அந்த அரபுகளின் நாணயத்தையும் நேர்மையையும் ஒழுக்கத்தையும் பார்த்து இஸ்லாத்தை ஏற்க்கின்றனர்.

முகமது நபி காலத்திலேயே மன்னர் ஹெர்குலிஸ், மன்னர் நஜ்ஜாஸ் போன்றோருக்கு இஸ்லாத்தின் கொள்கைகளை விளக்கி கடிதங்கள் முகமது நபி சொல்ல எழுதப்பட்டது. அக்கடிதங்கள் இன்றும் பாதுகாக்கப்பட்டுள்ளன.

suvanappiriyan said...

//தொலைக்காட்சியில் பர்கா -- ...ஏன் உங்கள் மதங்களில் கேள்வியே கேட்கக் கூடாதா? கேட்டாலே அது blasphemyதானா? அதுவும் இந்த நாட்டிலேயே இப்படின்னா இஸ்லாமிய நாட்டில் எவன் எதில் கேள்வி கேட்பான்? //

ஒன்றாம் எண்ணில் கேட்ட இந்த கேள்வியை ஏனிப்படி கண்டு கொள்ளாமல் இருக்கிறீர்கள்? பதில் தர முடியவில்லையா? மனமில்லையா?//

மனமில்லாமலெல்லாம் இல்லை. ஏற்கெனவே பேசப்பட்ட விஷயம் என்பதால்தான் அதை விட்டு விட்டேன். புர்கா என்பது முகம் கைகளைத் தவிர மற்ற இடங்களை அந்நிய ஆடவர்களின் பார்வையில் படாதவாறு அணிந்து கொள்வது. இதனால் அந்த பெண்கள் பாதுகாப்படைகிறார்கள். வேலைக்குச் செல்லும் பெண்கள் படும் துயரத்தை எனது முந்தய பதிவிலே விபரமாக கொடுத்துள்ளேன். இஸ்லாமிய பெண்கள் எங்களின் முன்னேற்றத்திற்க்கு புர்கா தடையாக இருக்கிறது என்று எங்குமே கொடி பிடிக்கவில்லை. சவூதியில் பெண்கள் அலுவலகததுக்கும் கல்லூரிக்கும் மருத்துவ மனைகளுக்கும் சென்று அங்கு பணி புரிந்தும் வருகிறார்கள். புர்கா அவர்களுக்கு எந்த இடைஞ்சலையும் ஏற்படுத்தவில்லை. நாம் ஆண்கள் முழுக்கை சட்டை, பேண்ட் போட்டுக் கொள்கிறோம். அதே போல் பெண்கள் தலையில் மாத்திரம் வெளியில் செல்லும்போது ஒரு துணியை கட்டிக் கொள்ள இஸ்லாம் பணிக்கிறது. ஜாக்கெட்டுக்கும் கீழ் ஒரு இடைவெளி எதற்கு? தொப்புளைக் காட்டுவதால் பெண்களுக்கு என்ன முன்னேற்றம் வந்து விடப் போகிறது? நமது கலைஞர் தொப்புளைக் காட்டித்தான் முதலமைச்சர் ஆனாரா?

சமீபத்தில் இஸ்லாத்தை ஏற்ற இரு இளம் பிரிட்டிஷ் பெண்களிடம் 'தற்போது புர்கா அணிவது சிரமமாக இல்லையா?' என்று கேட்கப்பட்டது. 'இல்லை! முன்பை விடப் பாதுகாப்பாக இருக்கிறோம். இன்று எங்களை யாரும் சீண்டுவதில்லை. இடிப்பதில்லை. மரியாதையாகப் பார்க்கிறார்கள். நாங்கள் இதை மிகவும் விரும்புகிறோம்' என்றனர். பிரான்சிலும் மற்ற ஐரோப்பிய நாடுகளிலும் புர்காவுக்கு தடை விதித்த போது பொங்கி எழுந்தது அதிகம் இஸ்லாமிய இளம் பெண்கள்தான்.

பெண்களுக்கு பாதுகாப்பாக உள்ள புர்காவை விமர்சித்ததால் அதன் பெருமைகளை விளக்க முஸ்லிம்கள் முயற்ச்சித்திருக்கலாம். அது உங்களுக்கு வித்தியாசமாக தெரிந்திருக்கிறது.

உமர் | Umar said...

சுவனப்பிரியன்,

//இரண்டு மலைகளுக்கு நடுவே கட்டப்பட்ட சுவர் அதுவும் மலை போல்தானே காட்சி அளிக்கும்!//

நீங்கள் Google Earth, Wikimapia ஆகியவற்றையெல்லாம் உபயோகித்ததில்லை என்றால் நேரடியாகச் சொல்லவேண்டியதுதானே. இப்படி உங்கள் அறிவை வெளிச்சமிட்டுக் காட்டவேண்டாமே.


//உயிருள்ளதோ உயிரற்றதோ இங்கு தேடுதல் என்ற செயல் இரண்டுக்கும் பொருந்தும்.//

நகர்ந்து கொண்டிருப்பதை தேடுவதும், நிலையாய் இருப்பதை தேடுவதும் ஒன்று என்னும் ஒரு அறிய கண்டுப்பிடிப்பை நிகழ்த்தியுள்ளீர்கள். உட்டாலக்கடி நோபல் பரிசுக்கு உங்கள் பெயரை பரிந்துரைக்கின்றேன்.


//மரங்கள் அடர்ந்த மலைகளை நீங்கள் சேடலைட் மூலம் பார்த்தால் மரங்களைத்தான் பார்க்க முடியுமே தவிர அதனுள் ஊடுருவி சென்று பார்க்க இயலாது.//

அறிவாளி, ஒரு தடவை Wikimapia பயன்படுத்திப் பாத்துட்டு பதில் சொல்லுங்க.

//உசாமாவையும், தாலிபான்களையும் பிடிக்க முடியாமல் கையை பிசைந்து கொண்டிருக்கும் அமெரிக்கர்களிடம் கேளுங்கள் விபரம் சொல்வார்கள். //

பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டா கொட்டைப்பாக்கு துட்டுக்கு எட்டுன்னானாம்.

நிலையான ஒன்றைப் பற்றி பேசும்போது மீண்டும் இடம் மாறிக்கொண்டிருக்கும் ஒன்றின் உதாரணம். இதுதான் இஸ்லாம் பற்றிய கேள்விகளுக்கு இவர்கள் அளிக்கும் பதில். அது சரி சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்.

yasir said...

//தூதருக்குன்னு தனி அடையாளங்கள் இருக்குன்னே//

அட உண்மைதான் வால் நான் இதை யோசிக்கவில்லை,எடுத்துவிட்டதற்கு நன்றி.

உமர் | Umar said...

//அறிவியலையே புட்டு புட்டு வைக்கிற குரானில் இப்படி ஒரு topography இல்லாமல் இப்படி இருக்கு?//

அதுக்குதான் ஹதீஸ்கள் துணை கொண்டு புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறுவார்கள்.

:-)

ஒரு ஹதீஸில் முகம்மது கூறுகின்றார், அரபு மக்களுக்குக் கேடு நேரப்போகின்றது. யஜூஜ், மஜூஜ் கூட்டத்தார் அந்தச் சுவற்றில் துளையிட்டு விட்டனர், அவர்கள் அரேபியர்களைத் துன்புறுத்தும் நாள் நெருங்கிவிட்டது என்று கூறுகின்றார். (உலக மக்களுக்கு என்று அவர் கூறவில்லை. அரபு மக்களுக்கு என்றுதான் கூறியுள்ளார்)

அதன்படி பார்க்கும்போது, அந்தச் சுவர் அரபு நாடுகளுக்கு அருகில்தான் அமைந்திருக்கவேண்டும். உலகின் அனைத்துப் பகுதிகளிலும் இருக்கும் மலைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றுள் இருந்து அருகருகே அமைந்திருக்கும் மலைகளின் தொகுப்பைத் திரட்டி, அவற்றுளும் அரபு நாடுகளுக்கு அருகில் அமைந்திருக்கும் மலைகளுக்கிடையே ஏதேனும் இரும்பாலும், செம்பாலும் கட்டப்பட்ட சுவர் இருக்கிறதா என்று பார்த்தால், அப்படிப்பட்ட ஒரு சுவர் இருந்தால், ஒரு வாரத்திற்குள் அறிந்துகொள்ளலாம். ஆனால், இத்தகைய ஒரு முயற்சியை எடுத்து அது போன்ற ஒரு சுவர் இல்லை என்பது நிரூபணம் ஆகிவிட்டால், குர் ஆன் இறைவனின் வார்த்தைகள் இல்லை என்பதை ஒத்துக்கொண்டாகவேண்டுமே. அதனால், இதுபோன்ற முயற்சிகள் எல்லாம் எடுக்க மாட்டார்கள்.

அல்லது, இதுபோன்ற ஒரு முயற்சி எடுத்து, குர் ஆன் இறைவனின் வார்த்தைகள் அல்ல என்பது தெளிவானபின்பும், கமுக்கமாக வைத்துக்கொள்ள இவர்கள் உமரைப் போல் பல தேசங்களை ஆளும் நிலையிலா இருக்கின்றார்கள்?

அதிலும், அரபு தேசம் முழுதும் இஸ்லாமியர்கள் இருக்கும்போது அருகில் இருக்கும் மலைகளுக்கிடையே அமைந்திருக்கும் ஒரு சுவரை 1400 ஆண்டுகளாக யாருமே பார்த்ததில்லை என்னும்போதே, அந்தச் சுவரும், துல்கர்னைன் கதையும் கற்பனை என்று ஆகிவிடுகின்றது.

இது தெரியாமால் பாவம் சொர்க்கத்திற்கு பிரியப்பட்டு என்னவெல்லாமோ பேசிக்கொண்டிருக்கின்றனர்.

Rajan said...

//இந்த உலகம் ஒரு நாள் அழியும் என்று விஞ்ஞானிகளும் ஒத்துக் கொண்டுள்ளனர்.//

ஹா ஹா ஹா! உலகம் உருண்டைனு ஒத்துக் கொண்டுள்ளனர்!

சூரியன சுத்துது பூமின்னு ஒத்துக் கொண்டுள்ளனர்


நெருப்பு சுடும்னு ஒத்துக் கொண்டுள்ளனர்!

என்னங்க இது! காமெடியா இருக்கு! தேவைக்கு மட்டும் விஞ்ஞானிகள வக்காலத்துக்கு வெச்சுக்குவாங்க போல! விஞ்ஞானிக ஒத்துகிட்ட மத்த விசயங்களையும் ஒத்துக்குவீங்களா?!

Rajan said...

//உலக முடிவு நாளில் அச்சுவர் உடைக்கப்படும்//


ஒரு நாள் முன்னாடி அத மட்டும் ஒடைக்க சொல்லுங்களேன்! ப்ளீஸ்! உலக முடிவுன்னாலே எல்லாம் இடிஞ்சு ஒடையணும் இல்லாட்டி எரிஞ்சு அழியணும்! இதுல என்ன டுவிஸ்ட் வேண்டிக்கெடக்குது?

ஒருத்தன் சாகற நாளில் அவனுக்கு மூச்சு நின்னுடும்னு சொல்றா மாதிரி இருக்கு!

Rajan said...

//தொப்புளைக் காட்டுவதால் பெண்களுக்கு என்ன முன்னேற்றம் வந்து விடப் போகிறது? நமது கலைஞர் தொப்புளைக் காட்டித்தான் முதலமைச்சர் ஆனாரா?
//


ஆஹா!@ அட்டகாசமான வாதம்! யாராச்சும் இதுக்கு பதில் சொல்ல்லுங்கய்யா பாக்கலாம்!

தருமி said...
This comment has been removed by the author.
தருமி said...

//பெண்கள் பாதுகாப்படைகிறார்கள்.// -அப்படியா?
//நமது கலைஞர் தொப்புளைக் காட்டித்தான் முதலமைச்சர் ஆனாரா?// - நல்ல கேள்வி!!!!
//முன்பை விடப் பாதுகாப்பாக இருக்கிறோம்// - வேறென்ன அவர்கள் சொல்ல்ல முடியும்!

//பொங்கி எழுந்தது அதிகம் இஸ்லாமிய இளம் பெண்கள்தான்.//
அப்படியா?

ஆனால், இதையெல்லாம் நான் கேட்கவில்லை. நான் கேட்டது: ஒரு தொலக்காட்சியில் இஸ்லாமியப் பெண்கள் பர்கா வேண்டாமென்று பேசியதை ஏன் வெளியிடக்கூடாதென கூச்சல் போட்டீர்கள்? ஏன் உங்கள் மதத்தில் எந்த எதிர்ப்பையும் இப்படி ‘பயங்காட்டி’ மறைக்கிறீர்கள்? எதிர்க்கிறீர்கள்? - இதுதான் என் கேள்வி.

இங்கேயே இப்படி நீங்கள் இருந்தால் பாகிஸ்தானில் எப்படியிருக்கும். இந்த கட்டுரையை வாசித்துப் பாருங்கள்;அதிலும் சிறப்பாக இந்த வார்த்தைகள்: “The unprecedented edict issued by several hundred clerics denying Salmaan Taseer the right to Islamic funeral prayers means that the Ahle Sunnat [essentially the Barelvis] who had been relegated hitherto to a secondary status vis-à-vis the smaller but richer and better armed Deobandi faction now feels strong enough to claim the overall leadership of the faithful,

பர்க்காவின் பயன்களை இன்னும் லிஸ்ட் போடாதீர்கள்! அது கேள்வியல்ல. உங்கள் இஸ்லாமியரிடமிருந்தே உங்கள் மதத்தைக் காக்க நீங்கள் போடும் சண்டைகள், கூக்குரல்கள் ... பயங்கரம்தான்!

தருமி said...
This comment has been removed by the author.
தருமி said...

அடிப்படைவாதி ஆஷிக் அவர்களுக்கு,

முந்திய பின்னூட்டத்தில் இவ்வாறு எழுதியுள்ளேன்: தொலைக்காட்சியில் இஸ்லாமியப் பெண்கள் பர்கா வேண்டாமென்று பேசியதை ஏன் வெளியிடக்கூடாதென கூச்சல் போட்டீர்கள்? ஏன் உங்கள் மதத்தில் எந்த எதிர்ப்பையும் இப்படி ‘பயங்காட்டி’ மறைக்கிறீர்கள்? எதிர்க்கிறீர்கள்? - இதுதான் என் கேள்வி.

இங்கேயே இப்படி நீங்கள் இருந்தால் பாகிஸ்தானில் எப்படியிருக்கும்?


எப்படியிருக்கும் தெரியுமா? இப்படித்தான் இருக்கும்....

//இதெல்லாம் ஒரு நாடு.. இவனுங்கல்லாம் தலைவர்கள்..
சொந்த வீடு வாசல் சொத்து சொந்தபந்தம் நண்பர்கள் ஊர் நாடு இவற்றை எல்லாம் விட்டுட்டு பரதேசியாய் நாடு வெறிபிடித்து பாகிஸ்தானுக்கு ஓடிய நயவஞ்சகர்கள்...
இவர்கள் கொலைகளுக்கெல்லாம் ஒரு பதிவு..//

இப்படியெல்லாம் ஒரு பதிவில் பாக். மக்களைத் திட்டிப் பின்னூட்டம் போட்டுவிட்டால் இங்கே “எல்லாம்” சரியாகி விடுமா?

இந்தச் செய்தியைப் போய் பாருங்கள் ஏதோ ஒரே ஒரு இஸ்.விரோதி மட்டும் போய் அந்த கவர்னரைக் கொன்றது போல எழுதுகிறீர்கள். ‘இதெல்லாம் ஒரு நாடு” என்று நீங்கள் சொல்லும் பாக். முழுவதும் இதுபோன்ற ஆட்கள் பரவிக்கிடப்பதை இந்த செய்தி உறுதி செய்கிறது. அதைவிடவும் இஸ்லாமைக் கற்றுத் தேர்ந்த இஸ். குருமார்கள் கடைசி தொழுகையைச் செய்ய வரமாட்டோம் என்பது எல்லாவற்றையும் தெள்ளத் தெளிவாகச் சொல்லி விடுகிறது.

இதுதான் இஸ்லாமிய நாட்டின் நிலை. இதுதான் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் கொடூர மனம். இதுதான் இஸ்லாமியக் கட்டுக் காப்பு; இதுதான் இஸ்லாமியம்.

வெளியே இருந்து கொண்டு அவர்களைப் பற்றி திட்டினால் நிச்சயம் இங்கே எல்லாம் சரியாகி விடாது.

உமர் | Umar said...

சுவனப்பிரியன்,
//உமர் தேடிச் சென்று "அந்த சுவர்" தென்படவில்லை என்று சொன்னதாகச் சொன்னீர்கள் அல்லவா! அந்த செய்தியை எங்கிருந்து எடுத்தீர்கள். என்ற விபரத்தைத்தான் கேட்டேன்.//

நீங்கள் கேட்ட விபரம் இந்தச் சுட்டியில்.

An early expedition to Derbent was ordered by the Caliph Umar (586–644 AD) himself, during the Arab conquest of Armenia where they heard about Alexander's Wall in Derbent from the conquered Christian Armenians. Umar's expedition was recorded by the renowned exegetes of the Qur'an, Al-Tabarani (873-970 AD) and Ibn Kathir (1301–1373 AD), and by the Muslim geographer Yaqut al-Hamawi (1179-1229 AD):
... Umar sent ... in 22 A.H. [643 AD] ... an expedition to Derbent [Russia] ... `Abdur Rahman bin Rabi`ah [was appointed] as the chief of his vanguard. When 'Abdur Rehman entered Armenia, the ruler Shehrbaz surrendered without fighting. Then when `Abdur Rehman wanted to advance towards Derbent, Shehrbaz [ruler of Armenia] informed him that he had already gathered full information about the wall built by Dhul-Qarnain, through a man, who could supply all the necessary details .."

அந்தக் கோட்டை இருக்கும் இடத்தின் wikimapia link. க்ளிக் பண்ணுங்க அந்த இடம் தெரியும்.

உமர் அந்தச் சுவற்றைத் தேடிச் சென்றதற்கான வரலாற்று ஆதாரம் இது.

இப்பொழுது முந்தைய விஷயத்திற்கு வருவோம்.
//வழக்கமான பொய் செய்தி. // என்று கூறியுள்ளீர்கள். நான் எந்த விஷயத்தில் பொய் சொல்லியுள்ளேன்? நீங்கள் வழக்கமான என்னும் வார்த்தையை உபயோகித்துள்ளதைப் பார்க்கும்போது நான் தொடர்ந்து பொய்களை சொல்வது போல் தோன்றும். ஆனால், நான் எந்தப் பொய்யும் சொல்லவில்லை. நீங்கள் கேட்ட விஷயத்திற்கும் வரலாற்று ஆதாரம் தந்துவிட்டேன்.

எதனடிப்படையில் நீங்கள் வழக்கமான பொய்ச் செய்தி என்று கூறியுள்ளீர்கள்? இதுபோன்று சம்பந்தமே இல்லாமல் பேசும் உங்களைப் பார்த்து இஸ்லாமியர்களே இப்படித்தான் போலும் என்னும் எண்ணம் ஏற்படாமல் இருப்பதற்காகவேனும் நீங்கள் விளக்கம் கொடுக்க வேண்டிய நிலையில் இருக்கின்றீர்கள்.

ஏற்கனவே பதிலளிக்க வேண்டிய கேள்விகளோடு, இப்பொழுது இன்னொரு விஷயத்திற்கும் விளக்கமளிக்க வேண்டிய நிலை உங்களுக்கு. எதையும் சாய்ஸில் விட முடியாது.

உமர் | Umar said...

சுவனப்பிரியன்,
//உமர் தேடிச் சென்று "அந்த சுவர்" தென்படவில்லை என்று சொன்னதாகச் சொன்னீர்கள் அல்லவா! அந்த செய்தியை எங்கிருந்து எடுத்தீர்கள். என்ற விபரத்தைத்தான் கேட்டேன்.//

நீங்கள் கேட்ட விபரம் இந்தச் சுட்டியில்.

An early expedition to Derbent was ordered by the Caliph Umar (586–644 AD) himself, during the Arab conquest of Armenia where they heard about Alexander's Wall in Derbent from the conquered Christian Armenians. Umar's expedition was recorded by the renowned exegetes of the Qur'an, Al-Tabarani (873-970 AD) and Ibn Kathir (1301–1373 AD), and by the Muslim geographer Yaqut al-Hamawi (1179-1229 AD):
... Umar sent ... in 22 A.H. [643 AD] ... an expedition to Derbent [Russia] ... `Abdur Rahman bin Rabi`ah [was appointed] as the chief of his vanguard. When 'Abdur Rehman entered Armenia, the ruler Shehrbaz surrendered without fighting. Then when `Abdur Rehman wanted to advance towards Derbent, Shehrbaz [ruler of Armenia] informed him that he had already gathered full information about the wall built by Dhul-Qarnain, through a man, who could supply all the necessary details .."

அந்தக் கோட்டை இருக்கும் இடத்தின் wikimapia link. க்ளிக் பண்ணுங்க அந்த இடம் தெரியும்.

உமர் அந்தச் சுவற்றைத் தேடிச் சென்றதற்கான வரலாற்று ஆதாரம் இது.

இப்பொழுது முந்தைய விஷயத்திற்கு வருவோம்.
//வழக்கமான பொய் செய்தி. // என்று கூறியுள்ளீர்கள். நான் எந்த விஷயத்தில் பொய் சொல்லியுள்ளேன்? நீங்கள் வழக்கமான என்னும் வார்த்தையை உபயோகித்துள்ளதைப் பார்க்கும்போது நான் தொடர்ந்து பொய்களை சொல்வது போல் தோன்றும். ஆனால், நான் எந்தப் பொய்யும் சொல்லவில்லை. நீங்கள் கேட்ட விஷயத்திற்கும் வரலாற்று ஆதாரம் தந்துவிட்டேன்.

எதனடிப்படையில் நீங்கள் வழக்கமான பொய்ச் செய்தி என்று கூறியுள்ளீர்கள்? இதுபோன்று சம்பந்தமே இல்லாமல் பேசும் உங்களைப் பார்த்து இஸ்லாமியர்களே இப்படித்தான் போலும் என்னும் எண்ணம் ஏற்படாமல் இருப்பதற்காகவேனும் நீங்கள் விளக்கம் கொடுக்க வேண்டிய நிலையில் இருக்கின்றீர்கள்.

saarvaakan said...

1.குரானின் சாமர்கண்ட் மூலப் பிரதிக்கும்,இப்போது உள்ள குரானுக்கும் வித்தியாசம் இருக்கிறதா? இருக்கிறது எனறு கூறுகிறது இப்பதிவு.

http://isakoran.blogspot.com/2008/09/mss-1.html

2.

முகமது மற்ற தேச அரசர்களுக்கு அனுப்பிய கடிதங்கள்.

http://isakoran.blogspot.com/2008/07/blog-post_31.html

http://en.wikipedia.org/wiki/Muhammad's_letters_to_the_Heads-of-State


முகமது மற்ற தேச அரசர்களுக்கு அனுப்பிய கடிதங்கள்.



சாஅமர்கண்ட் பிரதியில் உள்ள குரான் எழுத்து குயுஃபிக் வகை(8 ஆம் நூற்றாண்டு).ஆனால் முகமது எழுதிய கடிதம் வேறு வகையாக இருக்கிறது.ஏன்?

உமர் | Umar said...

அந்தச் சுவற்றைப் பற்றி இன்னொரு தகவல் இன்று படித்தேன். முகம்மது அந்தச் சுவற்றைப் பற்றி கூறியபோது அருகிலிருந்த ஒருவர் கூறினாராம். நானும் அந்தச் சுவற்றைப் பார்த்தேன். வண்ண நிறத் துணியை போன்று இருந்தது என்றாராம். உடனே, முகம்மது நீங்கள் பார்த்தது சரிதான் என்று கூறினாராம்.

--------------------------------------------------
உங்களுக்கு ஏதேனும் கதைகள், பழமொழிகள் நினைவுக்கு வந்தால் கம்பெனி பொறுப்பல்ல.

:-)

.

உமர் | Umar said...

இஸ்லாமியர்களின் மத சகிப்புத்தன்மைக்கு(!) இன்னொரு உதாரணம்.

மலேசியாவில், பாங்கு சத்தம் அதிகமாக இருக்கின்றது; குறைத்து வைத்துக் கொள்ளச் சொல்லுங்கள் என்று பிரதமருக்கு கடிதம் எழுதிய ஒரு வழக்கறிஞர் மன்னிப்பு கேட்க வைக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு மிரட்டல் விடுத்தவர்கள் அமைதியின் மார்க்கத்தைச் சார்ந்தவர்கள். ஆனால், அவர்களது செயல்களுக்கு இஸ்லாம் பொறுப்பாகாது என்பார்கள்.

:-(

.

குடுகுடுப்பை said...

பாவம் சொர்க்கத்திற்கு பிரியப்பட்டு என்னவெல்லாமோ பேசிக்கொண்டிருக்கின்றனர்.
//
இது மாறிட்டாலே மத வெறி நீர்த்துப்போகும்.ஆனால் டவுட்டாதான் இருக்கு, இல்லாத ஒன்னுக்கு எவ்ளோ விளம்பரம்னு.

தருமி said...

saarvaakan

நீங்கள் கொடுத்த தொடுப்புகளை வாசித்தேன்.
1. ஈசா குரான் - பெயரைப் பார்த்தால் இஸ்லாமியல்லாதவர் எழுதியது. ஆகவே நம்பலாமா என்று கேள்வி எழுப்பலாம். ( என் பதில்: இவ்வளவு ஆணித்தரமாக படத்தோடு (நம்க்கென்ன அராபி மொழி தெரியுமா என்ன..) விளக்கும்போது தவறாக இருக்க வாய்ப்பில்லை.

2. சுத்தமாக இருக்கிறது. அதுவும் ஓமன் அரசருக்கு அனுப்பியது “சுத்தம்”!
தலைப்பை அது சரிப்படுத்தி விட்டது.

saarvaakan said...

ஒரு மதத்தை விமர்சிக்கும் போது இரு முறைகளில் செய்யலாம்.
1. மதத்தின் புத்தகங்கள்,அதில் குறிப்பிடப்பட்ட மனிதர்கள்.சம்பவங்கள் போன்றவைகளின் உண்மைத் த்ன்மை,சம கால புத்தகங்களின் ஆதாரங்கள்,அகழ்வாராய்ச்சி முடிவுகள்,ஆரம்ப கால‌ வரலாறு போன்றவற்றை திரட்டி ஆராயலாம்.

2. அம்மதத்தினரின் இப்போதைய செயல்களை விமர்சிக்கலாம்.

முதல் செயல் மதத்தை மட்டும் ஆய்வுக்கு உட்படுத்துவதாகும்.அதனை முதவாதிகள் செய்ய மாட்டாகள்.இது மிகவும் ஆக்க பூர்வமான அணுகுமுறையாகும். இந்த மாதிரி ஆய்வு புத்தகங்களை மதத்தின் எதிரிகளால் எழுதப் பட்டது என்று கூறி ஒதுக்கி விடுவார்கள்.

இஸ்லாமியர்களின் குரான் அரபி மொழியில் இருந்ததாலேயெ விமர்சனத்திற்கு பல காலம் உட்படுத்தப்படவில்லை. இந்த விமர்சனத்தால் என்ன பலன் என்றால் மத பிரச்சாரகர்கள் சொல்லாத பல உண்மைகள் இஸ்லமியர்களுக்கு தெரிய வருகிறது.
எ.கா 1) சுன்னத் செய்வது 2) வெள்ளிக்கிழமை ஜுமா தொழுகை போன்றவை குரானில் கூறப்படவில்லை. குரானுக்கு பிறகு 200 ஆண்டுகளில் அப்பாசித்து கலிஃபாக்களின் ஆட்சியிலே தொகுக்கப் பட்ட ஹதிதில் மட்டுமெ கூறப் படுகிறது.

தருமி said...

//இந்த விமர்சனத்தால் என்ன பலன் என்றால் மத பிரச்சாரகர்கள் சொல்லாத பல உண்மைகள் இஸ்லமியர்களுக்கு தெரிய வருகிறது.//

உண்மை. சுன்னத் பற்றி இஸ்லாமிய(பதிவ)ர்கள் பலருக்கும் உண்மை நிலை என்னவென்பது தெரியவில்லை என்பது சமீபத்தில் ஒரு பதிவின் மூலம் தெரிந்தது.

saarvaakan said...

ஹதிதின் நம்பகத்தனமை குறித்து பல்வேறு விவாதங்கள் நடைபெறுகின்றன.
ஒவ்வொரு இஸ்லாமிய பிரிவினரும் பல ஹதிதுகளை பின் பற்றுகின்றனர்.
சில இஸ்லாமிய பிரிவினர் ஹதிதுகளை நிராகரிக்கின்றனர்.

மிக அதிகமான ஹதிதுகளை கூறிய அபு ஹுரைரா என்பவர் முகமதுவோடு இருந்தது 3 இருந்தது 3 வருடங்கள் மட்டுமே. இவர் 5374 நபி மொழிகளை கூறியுள்ளார்.முகமதுவுட்ன் 23 ஆண்டுகள் இருந்த அபுபக்கர் 142 நபி மொழிகளை மட்டுமே கூறியுள்ளார். 12 ஆண்டுகள் வாழ்ந்த கதிஜா ஒரு நபி மொழி கூட கூறவில்லை.
இந்த காணொளிகலை பாருங்கள்.

http://www.youtube.com/user/QuranVsHadith#p/c/80060B0C48E5C92E/23/n4vXWhMJ8q4

உமர் | Umar said...

saarvaakan சார்.

மிகப்பெரும் தகவல் களஞ்சியம் சார் நீங்க. நான்கூட இவ்வளவு தகவல்களைத் தேடியதில்லை.

தருமி said...

saarvaakan

பெரும் சுரங்கங்களைக் காண்பித்துள்ளீர்கள். தோண்ட ஆரம்பிக்கிறேன் ...

நன்றி

கல்வெட்டு said...

சுன்னத் --- இது இஸ்லாம் பழக்கம் அல்ல.
அந்த மண்சார்ந்த பழக்கம்.
யூதர்களும் செய்வார்கள்.

அந்த மண்ணில் தோன்றிய எல்லா மதங்களும் மண்சார்ந்த பழக்கதை மதப்பழக்கமாக வரித்துக் கொண்டார்கள்

http://en.wikipedia.org/wiki/Circumcision

**
saarvaakan ,
தகவல்களுக்கு நன்றி

.

suvanappiriyan said...

Kummi!
//எதனடிப்படையில் நீங்கள் வழக்கமான பொய்ச் செய்தி என்று கூறியுள்ளீர்கள்? //

//முகம்மதுவின் மாமனார்களுள் ஒருவரான உமர் அந்தச் சுவரை தேடிச் சென்றுவிட்டு
அது போன்ற ஒன்று இல்லை என்று முயற்சியை கைவிட்டாரே.//

நீங்கள் கொடுத்த சுட்டி அப்துல் ரஹ்மான் என்பவரின் தலைமையில் ஒரு குழுவை அனுப்பியதாகத்தான் உள்ளது.
இது பழைய செய்தி. உமர் சென்று பார்த்து விட்டு வந்ததாக பொய்யான தகவலை
சொன்னீர்கள் அல்லவா அதைத்தான் சொன்னேன். துல்கர்னைன் சம்பந்தமாகவும்,
அந்த சுவர் சம்பந்தமாகவும்
இங்கு சென்று பார்த்துக் கொள்ளுங்கள்.
விளக்கமாக எழுதியுள்ளேன்.

உமர் | Umar said...

//நீங்கள் கொடுத்த சுட்டி அப்துல் ரஹ்மான் என்பவரின் தலைமையில் ஒரு குழுவை அனுப்பியதாகத்தான் உள்ளது.
இது பழைய செய்தி. உமர் சென்று பார்த்து விட்டு வந்ததாக பொய்யான தகவலை
சொன்னீர்கள் அல்லவா அதைத்தான் சொன்னேன்.//

உமர் படையனுப்பியதே அந்தச் சுவற்றைத் தேடித்தான். நீங்கள் அதனைப் பொய் என்று கூறுகின்றீர்கள். வரலாற்றை விட மதம் பெரிதுதான். வாழ்க உங்கள் மதப் பற்று.


நீங்கள் இட்டிருக்கும் பதிவில்
//குர்ஆன் தெளிவாக சொல்லி விடுகிறது அந்த சுவர் உலக முடிவு நாள் சமீபமாகத்தான் வெளிப்படுத்தப்படும். அது வரை மனிதர்களின் பார்வையிலிருந்து மறைத்து வைக்கப்படும்.//
என்று கூறியுள்ளீர்கள்.

குர் ஆனில் எந்த வசனத்தில், அந்தச் சுவர் மனிதர்களின் பார்வையிலிருந்து மறைக்கப்படும் என்று கூறியுள்ளது என்றும், உலக முடிவு நாள் சமீபமாகதான் வெளிப்படுத்தப்படும் என்றும் கூறும் வசன எண்களை கொடுங்களேன். எதனடிப்படையில் நீங்கள் இந்த விளக்கத்தைக் கொடுக்கின்றீர்கள் என்பதை மக்கள் அறிந்துகொள்ளட்டும்.

இன்னொரு விஷயத்தையும் நினைவில் கொள்ள வேண்டும். அந்தச் சுவற்றை பார்த்ததாக ஒருவர் முகம்மதுவிடம் கூறியிருக்கின்றார்.

.

குடுகுடுப்பை said...

கல்வெட்டு said...
சுன்னத் --- இது இஸ்லாம் பழக்கம் அல்ல.
அந்த மண்சார்ந்த பழக்கம்.
யூதர்களும் செய்வார்கள்.

அந்த மண்ணில் தோன்றிய எல்லா மதங்களும் மண்சார்ந்த பழக்கதை மதப்பழக்கமாக வரித்துக் கொண்டார்கள்

http://en.wikipedia.org/wiki/Circumcision//
என்னோடு வேலை பார்த்த முஸ்லீம் நண்பர், முகமது பிறக்கும்போதே அப்படித்தான் பிறந்தாராம் அதனால் முஸ்லீம்கள் சுன்னத செய்து கொள்கிறார்கள் என்றார்.

saarvaakan said...

நண்பர்களே
துல்கர்னைன் மற்றும் சுவர் குறித்து ஒரு பதிவு இட்டுள்ளேன். கடந்த காலத்தில் துல்கர்னைன் என்பவர் அலெக்சாண்டராக அடையாளம் காட்டப்பட்டர்ர்,தோரா மற்றும் பைபிளில் துல்கர்னை மற்றும் சுவர் குறிப்பிட படவில்லை,துல்கர்னைன் பற்றிய இப்போடைய கருத்துகள் ஆகியவற்றை கிடத்த தகவல்களுடன் குறிப்பிட்டு உள்ளேன்.
http://saarvaakan.blogspot.com/2011/01/blog-post_19.html

கல்வெட்டு said...

.

"குரான் என்ன சொல்கிறது? அதன் உண்மையான அர்த்தம் என்ன என்று தெரியாமல் யாரோ ஒருவர் சொல்லும் அடைப்புக்குறி வசனங்கள் மட்டுமே தெரிந்தவர்கள் பெரும்பாலான தமிழக இஸ்லாமியர்கள்" என்பது எனது எண்ணம்.

குரானில் எந்த வசனத்தில் அந்தச் "சுவர் தற்போது மனிதர்களின் பார்வையிலிருந்து மறைக்கப்பட்டுள்ளது" என்றும் , "உலக முடிவு நாள் சமீபமாகதான் வெளிப்படுத்தப்படும்" என்றும் கூறும் வசன எண்களை மட்டும் ( நோ அடைப்புக்குறி விளக்கம்) யாராவது கொடுத்தால் நன்றாக இருக்கும்.

****

Dhul-Qarnayn பற்றிய அனைத்து குரான் வசன எண்களும் இங்கே உள்ளது. அதில் நீங்கள் சொன்ன மேஜிக் இல்லை. கடைசி நாளில் சுவர் உடைப்படும் என்ற அளவில்தான் அர்த்தம் வருகிறது.

Dhul-Qarnayn
http://en.wikipedia.org/wiki/Dhul-Qarnayn

இல்லாத சுவரை எப்படி உடைப்பார் என்றால் "சுவரே கடைசிக் காலத்தில்தான் வரும்" என்றால் அதற்கான வசன எண் வேண்டுமல்லவா?


ZULQARNAIN IN QURAN
http://zulqarnaininquran.blogcu.com


.

saarvaakan said...

//இல்லாத சுவரை எப்படி உடைப்பார் என்றால் "சுவரே கடைசிக் காலத்தில்தான் வரும்" என்றால் அதற்கான வசன எண் வேண்டுமல்லவா?//
நல்ல கேள்வி நண்பர் கல்வெட்டு,
அலெக்சாண்டரை பற்றி கேள்விப்பட்ட மரபுக் கதையே மிகை படுத்தி கூறப்பட்டுள்ளது.அலெக்சாண்டரை துல்கர்னைன் என்று ஏற்பதில் கொள்கை குழப்பம் வருகின்றது.இன்னும் பல குழப்பங்கள் உள்ளன.

1.அவரிடம் இறைவன் சில விஷயங்களை கூறியுள்ளார். இந்த (18:86)ல் நாம் என்பது இறைவனே.
2.துல்கர்னைன் சூரியன் மறையும் மேற்கு திசை எல்லை(எது?) மற்றும் உதிக்கும் கிழக்கு எல்லை வரை சென்றதாகவும் கூறப்படுகிறது.(18:86)
3.அந்த மக்களுக்கும் சூரியனுக்கும் இடையில் எந்த தடுப்பும் இல்லை என்றால் என்ன?(18:90&91)
4. முதலில் மேந்கு திசை(85&86) ,பிறகு வேறு திசை(வடக்கு அல்லது தெற்கு 90&91) பிறகு கிழக்கு கடைசியாக(தெற்கு அல்லது வடக்கு) சென்றே சுவர் கட்டும் இடத்தை அடைகிறார்.
இந்த அளவிற்கு உலகம் சுற்றிய ஆள் யாராக இருக்க முடியும்?.

இந்த சுட்டி பாருங்கள்.துல்கர்னனை பற்றி நடுநிலைமையோடு எழுதப்பட்ட கூறப்பட்டுள்ளது. இதனை யாராவது தமிழாக்கம் செய்து பதிவிட்டால் நல்லது.
http://www.ummah.com/forum/showthread.php?187896-Dhul-Qarnayn-how-is-he-Alexander-the-great

உமர் | Umar said...

saar vaakan,

நல்லதொரு சுட்டியினை அளித்துள்ளீர்கள். அதில் உரையாடியுள்ளபடி குர் ஆன் ஒரு மிகப்பெரும் கற்பனை கதை என்பதை துல்கர்னைன் பயணம் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு வரியிலிருந்தும் விளங்க முடியும்.

முதலில் நாம் சுவர் பற்றி பேசியுள்ளோம். அடுத்து setting point, veil from sun rise எல்லாம் பேசத்தொடங்கினால் குர் ஆன் ஒரு மிகச் சாதாரண புத்தகம் என்பது தெளிவாகிவிடும்.

இந்நிலையில் The bible was written by the same men that believed the earth was flat என்னும் சொற்றொடரை இங்கேயும் பொறுத்த முடியும்.
:-)
எங்கள் பதிவில் குர் ஆன் பற்றிய முதல் பதிவாக இதனை இடலாம் என்று நினைத்திருந்தோம். ஆனால், இங்கேயே பெரும்பாலானவற்றை பேசிவிட்டோம்.

எனினும், இந்த வசனம் தொடர்பான வேறொரு பதிவு உள்ளது. அடுத்த வாரம் இடுவோம்.

suvanappiriyan said...

சார்வாகன்!

//1.குரானின் சாமர்கண்ட் மூலப் பிரதிக்கும்,இப்போது உள்ள குரானுக்கும் வித்தியாசம் இருக்கிறதா? இருக்கிறது

சாஅமர்கண்ட் பிரதியில் உள்ள குரான் எழுத்து குயுஃபிக் வகை(8 ஆம் நூற்றாண்டு).ஆனால் முகமது எழுதிய கடிதம் வேறு வகையாக இருக்கிறது.ஏன்?//

மொழியின் வளர்ச்சி காரணமாக 1000 வருடங்களுக்கு முன்பு இருந்த எழுத்துக்கள் எல்லாம் பல மாற்றங்களைக் கண்டுள்ளன. நம் தமிழில் கூட திருக்குறளை எழுதிய திருவள்ளுவர் நாம் பயன் படுத்தும் தற்போதய எழுத்து முறையைப் பயன் படுத்தவில்லை. சில ஓலைச் சுவடிகளை நம்மால் இன்று படிக்க முடியாது. குர்ஆன் இறங்கிய காலத்திய அரபி மொழிக்கும் தற்போதய அரபி மொழிக்கும் வித்தியாசம் இருப்பதை உணரலாம். பண்டைய காலத்தில் அரபி எழுத்துக்களில் புள்ளிகள் கிடையாது. தற்போதய உலக நாடுகளில் உள்ள குர்ஆனில் புள்ளிகள் இடப்பட்டிருக்கும். அனைவரும் சிரமம் இல்லாமல் படிப்பதற்க்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் பொருளில் எந்நத மாற்றமும் ஏற்பட்டிருக்காது. 'இந்த குர்ஆனின் தெளிவான வசனங்கள் கல்வி வழங்கப்பட்டோரின் உளளங்களில் இருக்கிறது.'- 29:48 என்று குர்ஆன் கூறுவதும் இதனால்தான்.

அந்த கடிதங்களை முகமது நபி எழுதவில்லை. ஏனென்றால் அவருக்கு எழுதப் படிக்கத் தெரியாது. அவர் சொல்ல அவரின் தோழர்கள் எழுதியதுதான் நீங்கள் குறிப்பிடும் கடிதங்கள். மேலும் குர்ஆனின் அரபி நடை மிக உயர்ந்த தரத்தில் இருக்கும். அதே சமயம் முகமது நபியின் போதனைகளை எடுத்துப் பார்த்தால் மிக சாதாரண நடையில் பேசப்படும் நாட்டுப்புற அரபி பாஷையாக இருக்கும். இதை அரபி மொழி தெரிந்த அனைவரும் அறியலாம். ஆங்கில, தமிழ் மொழி பெயர்ப்புகளிலும் இந்த வித்தியாசத்தைப் பார்க்கலாம். இதுவும் கூட முகமது நபி தனது சொந்த கற்பனையில் குர்ஆனை சொல்லவில்லை. அது இறைவனால் அருளப்பட்டது என்பதை சொல்லிக் கொண்டிருக்கிறது.

தருமி said...

//அது இறைவனால் அருளப்பட்டது என்பதை சொல்லிக் கொண்டிருக்கிறது.//

Noldeke என்ற அறிஞர் குரானின் மொழி நடையின் குறைபாடுகளை விளக்குகிறார்:...

தமிழ்ப் பையன் said...

//'யாதும் ஊரே யாவரும் கேளீர்' //

அய்யாச் சாமிகளே இது யாடும் ஊரே யாவரும் கேளிர் எனவரவேண்டும் ...

கேளிர் என்றால் உறவுகள் எனப் பொருள் படும் .... மாற்றிக் கொள்ளுங்கள் ..

ஒரே மதத்தில் திருமணம் செய்வதை தடை செய்ய வேண்டும் --- ஹி ஹி ஹி !!! எப்பூடி நம்ம சமத்துவ ஐடியா ..

ஒரு வீட்டில அப்பா இந்து அம்மா கிருத்துவம், தாத்தா முஸ்லிம் - இன்னொரு தாத்தா பௌத்தம் இப்படி குடும்பம் இருக்கனும் .. அப்போ தான் ஒருத்தன் இன்னொருத்தனை அடிச்சிக்குன் சாக மாட்டான் ...

Post a Comment