Wednesday, January 04, 2012

544. நல்ல ஒரு மதமும் .. அழகான ஆட்சி முறைகளும் ...




*
//லிபியா மட்டுமல்ல பல இஸ்லாமிய நாடுகள் மிக அடிப்படைவாதிகளான ‘islamic brotherhood' கீழே வரப் போகிறது என்றுதான் எண்ணுகிறேன். அதன் பின் நிலைமை எப்படியிருக்கும் என்றும் எண்ணிப் பார்க்கிறேன்.// -- தருமி

//பிறகு நபித்துவத்தின் வழியில் கிலாபத் ஆட்சி அமையும். பிறகு இறைவன் நாடும் போது உயர்த்த வேண்டிய தருணத்தில் அதை உயர்த்தி விடுவான்.// -- சுவனப்பிரியன்.


சுவனப்பிரியன் சொன்னது போல்  'ஆஹா! இஸ்லாமிய ஆட்சி முறைகள் உலகம் முழுமையும் வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்என்று நான் கற்பனை செய்து கொண்டிருந்த போது, இன்றைய இந்துவில் (4.1.12) வந்த இரு செய்திகள் ஒரு இஸ்லாமிய ஆட்சியில் நடக்கும் "நல்ல விஷயங்களைப்" பற்றிச் சொன்னது. அவைகளை உங்களோடு பகிர்ந்து கொள்ள சில வரிகள் மட்டும் தருகிறேன்.

செய்தி: 1

Editorial
January 4, 2012
Nigeria's twin challenges

http://www.thehindu.com/opinion/editorial/article2772428.ece

The population of Nigeria is made up more or less equally of Christians and Muslims, with a small minority following traditional religion. The first crisis was triggered by deadly Christmas Day bombings near the national capital, Abuja, and in the city of Jos, about 200km away; 49 people were killed and scores injured.

Secondly, persistent and widening inequalities, with poverty especially severe in the Muslim-majority north, alienate citizens and give fundamentalists ready audiences.

Moreover, leaders of Boko Haram, which demands the nationwide adoption of an extreme form of the Sharia law, claim that al-Qaida in the Islamic Maghreb (AQIM) has assisted them; AQIM has also publicly praised the Nigerian group.

=====================

செய்தி - 2:

http://www.thehindu.com/opinion/op-ed/article2772464.ece

A long, sad year after Salman Taseer's killing

Pervez Hoodbhoy

One year ago, the assassination of Salman Taseer, Governor of Punjab, shook liberal and secular Pakistan to the core. Never had the country looked so rudderless.

Fearlessly championing a deeply unpopular cause, this brave man had sought to revisit the country's blasphemy law which he perceived as yet another means of intimidating Pakistan's embattled religious minorities. This law — which is unique in having death as the minimum penalty — would have sent to the gallows an illiterate Christian peasant woman, Aasia Bibi, who stood accused by her Muslim neighbours after a noisy dispute. Taseer's publicly voiced concern for human life earned him 26 high-velocity bullets from one of his security guards, Malik Mumtaz Qadri. The other guards watched silently.

In the long, sad, year more followed. Justice Pervez Ali Shah, the brave judge who ultimately sentenced Taseer's murderer in spite of receiving death threats, has fled the country. Aasia Bibi is rotting away in jail, reportedly in solitary confinement and in acute psychological distress. Shahbaz Taseer, the Governor's son, was abducted in late August — presumably by Qadri's sympathisers. He remains untraceable. Shahbaz Bhatti, the only Christian member of Parliament and another vocal voice against the blasphemy law, was assassinated weeks later on March 2.

Spontaneous celebrations

a murderous unrepentant mutineer had been instantly transformed into a national hero.

the imam of Lahore's Badshahi Masjid declined the government's request to lead the funeral prayers. (ஆனால் நம்ம ஊர்ல ஒசாமாவுக்கு இறுதிச் சடங்குகள் செய்ய ஆளாளுக்குப் போட்டி ...!)

Television screens around the world showed the nauseating spectacle of hundreds of lawyers feting a murderer, showering rose petals upon him, and pledging to defend him pro-bono. (சட்டம் தன் கடமையைச் செய்யும்!![:p] )

In his court testimony, a smugly defiant assassin declared that he had executed Allah's will. Justice Asif agreed, saying that Qadri had “merely done his duty as a security guard”. (என்னே ஒரு இறைப் பற்று!!! கொலை செய்யும் போது கூட ஏன் உங்கள் மக்கள் 'அல்லாஹு அக்பர்' என்று சொல்ல வேண்டும் என்று கேட்டிருந்தேன்; இதுவரை அதற்குப் பதிலேதும் இல்லை.)

It is surely impossible to hear all khutbas, but a few hundred ones have been recorded on tape by researchers, transcribed into Urdu, translated into English, and categorised by subject at www.mashalbooks.org.

Often using abusive language, the mullahs excoriate their enemies: America, India, .. Hindus....

they breathe fire against the enemies of Islam and modernity. Music is condemned to be evil, together with life insurance a...

In frenzied speeches they put women at the centre of all ills, demand that they be confined to the home, covered in purdah, and forbidden to use lipstick or go to beauty parlours.(ஒழுக்கம்னா இதல்லவா ஒழுக்கம்![:@] )

The 19-year-old illiterate who killed Raj Pal, the publisher of the book Rangeela Rasool, subsequently executed by the British, was held in the highest esteem by the founders of Pakistan, Muhammad Iqbal and Muhammad Ali Jinnah. Jinnah had been Ghazi Ilm Din's lawyer.



*

23 comments:

கல்வெட்டு said...

ம்ம்ம்... நீங்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள மறுக்கிறீர்கள்.

//இறைவன் நாடும் போது உயர்த்த வேண்டிய தருணத்தில் அதை உயர்த்தி விடுவான்//

இறைவன் நாடினால்..

இறைவன் நாடும்போது...



என்பவைகள் ஆங்காங்கே தெளித்துவிடப்படும்.

ஏன் என்றால் , நீங்கள் எந்தத் தவறைச் சுட்டினாலும்... "இன்னும் இறைவன் நாடவில்லை. அதனால இப்படி" என்று சுலபமாகச் சொல்லலாம்.

அப்படியே , இறைவன் நாடிவிட்டாலும், ஒரு டிஸ்கிளைமர் உண்டு. அதாவது குரானைச் சரியாகப் புரிந்தது கொள்ளாதவர்களால் இந்த தவறு நடந்தது என்று சொல்லப்படும்.

ஒரே வழி....


1.) 18 வயத்துக்கு மேல் மட்டுமே ஒருவன் மதத்தை தேர்ந்தெடுக்கும் உரிமை கொடுக்கப்படவேண்டும்.

2.) அப்படி ஒருவன் ஒரு மதத்தில் சேர முடிவு செய்துவிட்டால, அந்த மத்திற்கான‌ மதப்புத்தகங்களை (உதாரணம் குரான்) சரியாகப் படித்து ,புரிந்துள்ளார்களா? என்று அறிய , தேர்வு வைக்கவேண்டும்.

3.)அதில் தேறினால் மட்டுமே மதத்திற்குள் சேர்க்க வேண்டும்.

(இப்போது அவர் குரானைச் சரியாகப் புரிந்தவராகிறார். அவர் தவறு செய்தால் புரியாதவர் என்று மழுப்ப முடியாது)

4.) அப்படி சேர்ந்தபின் அவரை இறை நாடும்வரை அவர் பொறுத்து இருக்க வேண்டும். ஏன் என்றால் குரானைப் புரிந்தாலும் இறை தானாக நாடாதவரை அவர் சொல்லும்/செய்யும் செயல்கள் இறையால் அங்கீகரிக்கப்படாவை.

5.)அவர் தன்னை இறைநாடிவிட்டதாகச் சொன்னால், அதையும் ஒரு தேர்வு வைத்து உறுதி செய்து கொள்ள வேண்டும்.

(இப்போது அவர் குரானைச் சரியாகப் புரிந்தவர் மட்டும் அல்லாமல் இறையால் நாடப்பட்டவராகவும் ஆகிறார் . அவர் தவறு செய்தால் மழுப்ப வழியே இல்லை.)

***

"குரானைச் சரியாகப் புரிந்த, இறையால் நாடப்பட்டுவிட்ட (இது இறை நினைத்தால் மட்டுமே சாத்தியம்) ஒருவனையே இஸ்லாமியராக அறிவிக்க வேண்டும்." அப்படி ஒரு நடைமுறை வந்தால், எந்த itம் butம் சொல்லி நழுவ முடியாது.

***
அதுவரை நீங்கள் சொல்லும் எந்தக் குற்றச்சாட்டுக்கும் "குரானைச் சரியாகப் புரியாதவர்", "இறைநாடாத நாடு".. என்று பல விடைகள் உண்டு.

***

suvanappiriyan said...

தருமி!

//சுவனப்பிரியன் சொன்னது போல் 'ஆஹா! இஸ்லாமிய ஆட்சி முறைகள் உலகம் முழுமையும் வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்' என்று நான் கற்பனை செய்து கொண்டிருந்த போது,//

நீங்கள் சுட்டிக் காட்டும் தவறுகளை குர்ஆன் ஆதரிததிருந்தால்தான் அதனை பொறுப்பாக்க முடியும. உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் சில இடங்களில் தவறிழைக்கிறார்கள். அதற்கு காரணம் என்ன? குர்ஆனை அவர்கள் விளங்க வேண்டிய முறையில் விளங்கவில்லை. இன்று குர்ஆனின் சொல்படி ஓரளவு ஆட்சி நடத்தும் சவுதி அரேபியாவில் இத்தகைய குற்றச்சாட்டுகளை நீங்கள் வைக்க முடியாது.

By ARAB NEWS
Published: Jan 3, 2012 00:28 Updated: Jan 3, 2012 00:31
TAIF: A Saudi judge was driving at 170 km an hour on the Al-Jouf-Qasim Road when traffic police pulled him over for speeding, Al-Madinah daily reported.

The judge allegedly told the police that, according to the immunity system, judges should not be booked for traffic violations. The police refused to accept this logic and fined the judge. General security made it clear that traffic rules did not exempt anyone.

The fine for a traffic violation was not an issue the Supreme Judicial Council should be informed about. It asked the council to inform all judges about this rule.

நேற்று அரப் நியூஸில் வந்த செய்தி இது. இஸ்லாமிய சட்டங்கள் முறையாக பின்பற்றக் கூடிய நாடுகளில் நீங்கள் குறிப்பிடும் செயல்கள் நடைபெற சாத்தியமே இல்லை.

'இறைவனை வணங்குங்கள்! அவனுக்கு இணையாக எதையும் கருதாதீர்கள். பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், நெருங்கிய அணடை வீட்டாருக்கும், தூரமான அண்டை வீட்டாருக்கும், பயணத தோழருக்கும், நாடோடிகளுக்கும், உங்கள் அடிமைகளுக்கும் நன்மை செய்யுங்கள். பெருமையடித்து கர்வம் கொள்ளும் எவரையும் இறைவன் நேசிக்க மாட்டான்.'
-குர்ஆன் 4:36

இந்த ஒரு வசனம் போதும். இதற்கு மாற்றமாக நடக்கும் எவரையும் இறைவன் நேசிக்கமாட்டேன் என்று தெளிவாக குறிப்பிடுவதைப் பாருங்கள். அண்டை வீட்டில் கிறித்தவரும் இருப்பார். யூதரும் இருப்பார். சிலை வணங்கியும் இருப்பார். அந்த நெருங்கிய மற்றும் தூரமான அண்டை வீட்டார்களுக்கு நன்மை செய்யுங்கள் என்று அழகாக குர்ஆனின் உபதேசம் இருக்க அதற்கு மாற்றமாக நடப்பவர்களை குர்ஆனோடு நீங்கள் எப்படி சம்பந்தப்படுத்துகிறீர்கள்?

இரண்டு நாள் முன்பு கூட அமெரிக்காவில் இஸலாமிய கலாசார மையமும் இந்து கோவிலும் சில விஷமிகளால் தாக்கப்பட்டது. அதற்கு நான் பைபிளை குறை சொன்னால் என்னை விட முட்டாள் இந்த உலகததில் வேறு யாரும் இருக்க முடியாது.

எகிப்தில் இஸ்லாமிய ஆட்சி அமைவது உறுதியாகி விட்டது. மொராக்கோவிலும் நேற்று இஸ்லாமிய கட்சி அருதி பெரும்பான்மை பெற்றுள்ளது. துனீஷியாவிலும் இஸ்லாத்துக்கு எதிரான ஆட்சி அகற்றப்பட்டு தூய இஸ்லாமிய ஆட்சி தொடங்கப்பட்டுள்ளது. லிபியா, சிரியா, ஏமன், குவைத் போன்ற நாடுகளிலும் கூடிய விரைவிலேயே ஏற்படும் மாற்றங்கள் அந்த மக்கள் இஸ்லாமிய ஆட்சியை விருமபுவது தெரிகிறது.

அமெரிக்காவும் இஸ்ரேலும் வாலை சுருட்டிக் கொண்டு தனது வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தால் மேற்சொன்ன நாடுகளில் அமைதி தவழும். ஆட்சியும் சிறப்புறும். சிறுபான்மையினரின் நலனும் பாதுகாக்கப்படும்.

மதுரை சரவணன் said...

ungkalukkunnu seithikal kannukku thenpadukirathee.. eppadi? mathaththin meethulla athikamaana parru thaane..!

suvanappiriyan said...

லண்டன்: பிரிட்டனில், இந்திய மாணவர் அனுஜ் பித்வே கொல்லப்பட்ட விவகாரம் இன்னும் முடிவடையாத நிலையில், பித்வே கொல்லப்பட்ட அதே பகுதியில், ஆசிய நாட்டைச் சேர்ந்த மற்றொருவர், ஒரு கும்பலால் தாக்கப்பட்டுள் ளார்.

அனுஜ் பித்வே கொல்லப்பட்ட சால்போர்டு பகுதியில், ஆசிய நாட்டைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். இருசக்கர வாகனத்தில் அவரை நான்கு பேர் பின்தொடர்ந்து சென்று, சரமாரியாக கொலைவெறியுடன் தாக்கியுள்ளனர். அடிக்கும் போது கும்பலில் இருந்த ஒருவர், இனவெறி தொடர்பாக சில வார்த்தைகளைக் கூறி அடித்துள்ளார். பின், அக்கும்பலினர் அவரை சாலையில் போட்டு விட்டுச் சென்றனர். தாக்கப்பட்டவர், அருகில் இருந்த மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்கு சேர்ந்துள்ளார். அவர் போலீசாரிடம் அளித்த தகவலின்படி, தாக்கிய கும்பலில் மூன்று பேர் ஆங்கிலேயர், ஒருவர் கறுப்பினத்தவர். இதுகுறித்து போலீஸ் அதிகாரி மார்க் கோல் கூறுகையில்,"இந்த தாக்குதலின் முக்கிய நோக்கமே, கொள்ளையடிப்பது தான். எனினும், அடித்தவர்கள் இனம் தொடர்பான சில வார்த்தைகளையும் கூறியுள்ளதால், விசாரணை அந்தக் கோணத்திலும் நடக்கிறது' என்றார். இந்திய மாணவர் ஒருவர் கொல்லப்பட்டஇரு வாரங்களுக்குள், அதே பகுதியில் ஆசிய நாட்டைச் சேர்ந்த மற்றொருவர் தாக்கப்பட்ட விவகாரம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
-தினமலர் 05-12-2012

No comments!

Anonymous said...

இறை ரொம்ப நாடிவிட்டால், காககககே ஆகிவிட வாய்ப்புண்டு என்பதால் கொஞ்சம் ஜாக்கிரதையாக அணுகவும்

(காககககே - காக்காவலிப்பில் கடவுளை கண்ட கழண்ட கேஸ்)

சித்திரவீதிக்காரன் said...

மனிதனை மனிதனாய் பாரும்
மதங்களும் கண்காணாது ஓடும்.
- கமல்ஹாசன்.

சாதி,மத அடையாளங்களை விட்டு வெளியே வராமல் ஒருவன் நல்ல மனிதனாக முடியாது.
பகிர்விற்கு நன்றி.

தென்காசித் தமிழ்ப் பைங்கிளி said...

வணக்கம்.தருமி ஐயா..
...என்ன அழகான மதுரை பெயர்.இறந்த வீடுகளுக்கோ,அல்லது பாடையிலுள்ள மலர்களுக்கோ ஒரு மணம் தெரியும்.திருமண மலர்கள்,கோவில் மலர்களுக்கு ஒரு மணம் தெரியும்.இது என் அம்மா, பாட்டியும் கூறியிருக்கிறார்கள். நானும் இதை உணர்ந்திருக்கிறேன்

suvanappiriyan said...

பீஜிங்: சீனாவின் இவு நகரில் உள்ள ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ள இந்திய வர்த்தகர்கள் வெளியிட்டுள்ள செய்தியில், தங்களை சீனர்கள் நாயை விடக் கேவலமாக நடத்துவதாகவும், மத்திய அரசு காப்பாற்றா விட்டால் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் கதறியுள்ளனர்.

சீனாவின் ஷீஜியாங் மாகாணத்தில் இவு நகரில் உள்ள ஓட்டலில் தற்போது தங்க வைக்கப்பட்டுள்ள இந்திய வர்த்தகர்கள் தீபக் ரஹேஜா மற்றும் ஷ்யாம் சுந்தர் அகர்வால் இருவரும், விரைவில் ஷாங்காய் நகருக்கு கொண்டு செல்லப்பட உள்ளதாக, மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
மேலும் அவர்களுடன் பாதுகாப்பு கருதி, இந்தியத் தூதரக அதிகாரிகள் இருவரும் செல்வர் என, அவர் கூறியுள்ளார்.
இவ்விவகாரத்தில், இந்தியத் தூதரக அதிகாரி பாலச்சந்திரனுக்கு உணவு, மருந்து வழங்கப்படாமல் தாமதம் செய்யப்பட்டது என்று வெளியான செய்திகளுக்கு, நேற்று சீன வெளியுறவு அமைச்சகம் மறுப்பு தெரிவித்தது.

அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹோங் லீ இதுகுறித்துக் கூறியதாவது: இவு நகரில், இந்தியத் தூதரக அதிகாரிக்கு உணவு, மருந்து வழங்கப்படவில்லை என்ற செய்தி தவறானது. இவ்விவகாரம் வர்த்தகத்தால் விளைந்த சிக்கல். அதனால், சீன சட்டப்படி இவ்வழக்கு நடக்கும். இவ்வழக்கின் வித்தியாசத்தை உணர்ந்து, இதை முறையாக நடத்த இந்தியா உதவும் எனவும், சீனாவில் உள்ள இந்திய வர்த்தகர்கள் சீன சட்டப்படி நடக்க வேண்டும் என, அவர்களுக்கு இந்தியா அறிவுறுத்தும் எனவும் நம்புகிறோம். இவ்வாறு ஹோங் லீ தெரிவித்தார்.

அதேநேரம் இவ்வழக்கில், இந்திய வர்த்தகர்களை சிறை பிடித்து வைத்த ஐந்து சீனர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், இவு நகரில் இருந்து தனியார் செய்தி நிறுவனம் ஒன்றை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய தீபக் ரஹேஜா,"இங்கு ஓட்டலுக்குள்ளேயே சீன வர்த்தகர்கள் வந்துவிட்டனர். எங்களின் உடைகளைக் களைந்து விட்டு, அடிக்கின்றனர். பொருட்களை தூக்கி வீசுகின்றனர். மிருகங்களைப் போல நடத்துகின்றனர். எங்களைக் காப்பாற்றாவிட்டால் நாங்கள் தற்கொலை செய்து கொள்வோம்' எனத் தெரிவித்துள்ளார்.

இவ்வழக்கில், இந்திய வர்த்தகர்களை இந்தியாவுக்கு அனுப்ப மாட்டோம் எனவும், வழக்கு முடியும் வரை அவர்கள் சீனாவில் தங்க வைக்கப்படுவர் எனவும் இந்தியத் தூதரகம், சீனாவுக்கு உறுதியளித்துள்ளது என்பது குறிப்பிடத் தக்கது. ஆனால் தொலைபேசியில் பேசிய ரஹேஜா,"நாங்கள் ஏழைகள். எங்களால் எதுவும் செய்ய முடியாது. மத்திய அரசுதான் எங்களைக் காப்பாற்ற வேண்டும்' எனக் கோரியுள்ளார்.

Dinamalar 06-01-2012

இந்த செய்தியை ஆதாரமாக வைத்து உலகில் உள்ள கம்யூனிஸ்டுகளும் நாத்திகர்களும் மோசமானவர்கள் என்று நான் சொன்னால் என்னை பைத்தியக்காரன் என்று சொல்ல மாட்டீர்களா!

MaduraiGovindaraj said...

மதம்? மதம் நீக்கி மனிதம் வளர்ப்போம்

suvanappiriyan said...

ஆர்.எஸ்.எஸ் இயக்கம் தேசபக்தி இயக்கம் என்று எண்ணிக் கொண்டிருப்பவர்களுக்கு ஓர் நற்செய்தி. சங்பரிவாரின் ஒரு பிரிவான ஸ்ரீராம் சேனா இயக்கத்தை சேர்ந்த ஆறு நபர்கள் பாகிஸ்தான் கொடியை கர்நாடக மாநிலத்தில் ஜனவரி ஒன்றாம் தேதியன்று ஏற்றியிருக்கின்றனர். ஆனால் திருட்டுத்தனமாக இந்த காரியத்தை செய்து விட்டு ஓடிப்போயிருக்கின்றனர். இக்கொடியேற்றம் காரணமாக பந்த் , பஸ் மீது கல்வீச்சு என்று பல வன்முறைகள் அங்கே அரங்கேறியிருக்கின்றன. பாகிஸ்தான் கொடியை ஏற்றியது முஸ்லிம்கள் என்று பழியை சுமத்தி விடலாம் என்று கனவு கண்டிருக்கின்றனர் சங்பரிவார்கள். ஆனால் அவர்களின் நினைப்பில் மண் அள்ளிப்போடும் விதமாக கர்நாடக காவல் துறை உண்மையான குற்றவாளிகள் ஸ்ரீராம் சேனாவை சேர்ந்தவர்கள் என்று கண்டுபிடித்திருக்கிறது.

-P.A.Shaik Dawood

தருமி said...

//மதம் நீக்கி மனிதம் வளர்ப்போம் //

எனக்கும் இதே ஆசைதான். ஆனால் அத்தைக்கு மீசை எப்படி முளைக்கும்?!

தருமி said...

சுவனப்பிரியன்,
நான் செய்தித்தாள்களிலிருந்து இரண்டு செய்தி போட்டால் நீங்களும் அதே மாதிரி இரு செய்தி போடணுமோ?! நல்ல வேடிக்கை உங்களோடு! [:D] :)

கிறித்துவர்களும் இஸ்லாமியர்களும் பாதிப் பாதியாக இருந்தும் எங்கள் ஷாரியத் சட்டம வேண்டும் என்பதுவும், அதுவும் அதை அல்-கொய்தா ஆதரிப்பதுவும் என்னே ஒரு நேர்மை!

அப்படி ஒரு ஷாரியத் சட்டத்தை வைத்துக் கொண்டு நம் அண்டை நாடு போடும் ஆட்டமும், ஆட்டத்திலுள்ள அநியாயங்களையும் எடுத்து வைக்க நான் கொடுத்த மேற்கோள்கள் இரண்டாவது செய்தி.

கொஞ்சம் புரிந்து கொள்ள முயலுங்கள்.

தருமி said...

//.. தவறுகளை குர்ஆன் ஆதரிததிருந்தால்தான் ..//

இந்த வசனத்தை எத்தனை முறையும் சொல்ல உங்களுக்கு அலுக்காது. எனக்கு ரொம்ப அலுத்துப் போச்சு. இதற்கு இரு மறுப்புகள்:
1. வெட்டு .. குத்து .. கொலை என்று எனக்குத்தெரிந்து பேசும் ஒரே கடவுள் உங்கள் அல்லாதான். (சொன்னவை எல்லாம் போர்க்களத்தில் வைத்து சொன்னவை; அதையெல்லாம் எடுத்துக்கக்கூடாது என்கிற பழைய பல்லவி வேண்டாம்!)

2. ஏற்கெனவே சொன்னதுதான்; ஒரு மதமோ, எந்த இயக்கமோ வெளிப்படையாக வல்லின விதிகள் ஏதும் பேசாமலேயே, ஆனால் அந்தக் குழுவினரிடம் வன்முறை இருந்தால் அந்த இயக்கமே வன்முறை இயக்கம் என்றுதான் கருதப்பட வேண்டும். ஆனால், உங்கள் மதத்திலோ வன்முறையைச் செயல்படுத்த அல்லாவே உத்தரவிட்டுள்ளார். நீங்களும் நல்ல அடிப்படைவாதிகளாக அதை நிறைவேற்றுகிறீர்கள்; பாவம் .. உங்கள் மீது என்ன தப்பு? எல்லாம் அவன் (அல்லா) செயல்!!

தருமி said...

////.. தவறுகளை குர்ஆன் ஆதரிததிருந்தால்தான் ..////

2005-லேயே எழுதியுள்ளேன்: http://dharumi.blogspot.com/2006/09/175-7.html
ஹதீது: ஹ்ல்ரத் அலீ (ரலி): "உலகினில் ஏற்படுகின்ற குழப்பங்களுக்குத் தீர்வு காண அல்லாஹ்வின் வேதந்தான் சிறந்த வழி. ...(தன் அறிவைக்கொண்டு) பெருமையடிக்கிறவன் இதனை (அமல் படுத்தாமல்) விட்டு விட்டால், அல்லாஹ் அவனைத் துண்டு துண்டாக ஆக்கிவிடுவான். அது அல்லாத (வேறு கிரந்தத்)தில் நேர்வழியைத் தேடுபவரை வழிதவறச் செய்து விடுவான்."

அடுத்து:
61:10-11
5:33.
2:217 - இவைகளையும் மேற்கோள் காட்டியாகி விட்டது.

2:159. நாம் வேதத்தில் மனிதர்களுக்காக விளக்கிய பின்னரும் - யார் மறைக்கின்றார்களோ, நிச்சயமாக அவர்களை அல்லாஹ் சபிக்கிறான். (உங்க சாமிக்கு வேற வேலையே இல்லையா ..சபிக்கிறது.. கொல்றது... நரகத்துக்கு அனுப்புறது ...!

9:5 இந்த வசனத்தின் பெயரே வாளின் வசனம் என்பதுதான் (verse of the sword). இந்த வசனம் இதுவரை சொன்ன முஸ்லீமல்லாதவர்கள் மீது கருணை, சகிப்புத்தன்மை மன்னிப்பு சம்பந்தப்பட்ட அனைத்து வசனங்களையும் நீக்கம் செய்துவிடுகிறது.

ராஜ நடராஜன் said...

ரொம்ப சுத்தம்!இஸ்லாமிய பதிவு பார்க்கிற மாதிரியே இருக்குது இந்த பதிவு:)

சரி வந்ததுக்கு Boko Haram ன்னா மேற்கத்திய கல்வி கற்காதே என்று அர்த்தமாம்.நைஜீரிய கோனார் நோட்ஸ் உபயம்-பி.பி.சி

சார்வாகன் said...

வணக்கம்
என்ன சொல்வது?.
எனக்கு போரடிக்குது !நீங்க எப்படீஈஈஈஈஈஈஈஈ
பொறுமையாஆஆஆஆஆஆஆ.
நன்றி

தருமி said...

என்ன சார்வாகன் இப்படி சொல்லீட்டீங்க .. அதோடு
//சார்வாகன் said...
தருமி அய்யா
வருகைக்கு நன்றி.அடிக்கடி பதிவிடுங்கள்.//
இப்படி வேற சொல்லிர்ரீங்க [:-((]

naren said...

சகோதரர்???? தருமி அவர்களுக்கு,

அந்த 72 கூட்டத்தை சேராத, நேர்வழி உம்மததை சேர்ந்த சுவனப்பிரியன் சொன்னதை உன்னிப்பாக வாசிப்பு அனுபவத்துடன் படிக்க வேண்டும்.

1) இப்போதிருக்கும் இஸ்லாமிய ஆட்சிகள் அவ்வாறில்லை. ஏனென்றால் இஸ்லாமிய ஆட்சி என்பது என்ன என்று யாருக்கும் தெரியாது. அதனால் அல்லா நாடினால் அவருக்கு தெரிந்த இஸ்லாமிய ஆட்சியாக உயர்த்தி விடுவார்.

2) இஸ்லாமிய ஆட்சியில் ஒரு கூறு உலக தட்டை என்று ஜிஹாத் செய்வது. அதை நைஜீரியா எடுக்காட்டில் சொல்ல தவறிவிட்டீர்கள். மேலும் சாத்தான் நாடுகளான அமெரிக்கா ஐரோப்பா இருந்து சாரை சாரையாக மூமின்கள் இந்த இஸ்லாமிய நாடுகளை நோக்கி ஓடிக்கொண்டிருக்கின்றனர்.

3) அந்த பார்ப்பன, இந்துதவ, இஸ்லாம் விரோதி “தினமலரை” மூமினான சுவனப்பிரியன் இன்னும் படிப்பது எனக்கு வருத்தமாகத்தான் இருக்கின்றது. மேலும் அறிவார்ந்த மூமின்கள் அதை புறக்கணிக்க வேண்டும் என்ற சொல்லியப் பிறகும் அவர் அதை படிக்கின்றார்.

4) குரான் தன்னைத் தானே மூபீன் (simple crystal clear) என்று சொன்னாலும். அதைப் பற்றி ஒருமித்த கருத்து மூமின்களிடையே இல்லை. அதை படித்து புரிவதற்கு ph.d பட்டயறிவு வேண்டும். கடவுளின் வேதம் இப்படி இருப்பதற்கு எனக்கு ரொம்ப வருத்தம்.

5) மாற்று மதத்தினர் செய்யும் செயல்கள், அவர்களின் செயல்களுக்கு அவர்களின் மதப் புத்தகத்தை துணைக்கு அழைத்துக் கொண்டு மேற்கோள் காட்டுவதில்லை. இஸ்லாம் ஆட்சி அமைந்தால் குரானை மேற்கோள் காட்டி என்னவெல்லா நடக்கும்மோ!!!!!!!!!

சுவனப்பிரியனை மேலும் உன்னிப்பாக படியுங்கள். கியாமத் நாளில் அல்லாவிடம் உங்களை சிபாரிசு செய்தாலும் செய்வார்.

தருமி said...
This comment has been removed by the author.
suvanappiriyan said...

நரேன்!

//3) அந்த பார்ப்பன, இந்துதவ, இஸ்லாம் விரோதி “தினமலரை” மூமினான சுவனப்பிரியன் இன்னும் படிப்பது எனக்கு வருத்தமாகத்தான் இருக்கின்றது. மேலும் அறிவார்ந்த மூமின்கள் அதை புறக்கணிக்க வேண்டும் என்ற சொல்லியப் பிறகும் அவர் அதை படிக்கின்றார்.//

என்ன செய்வது? என்னமாதிரி எல்லாம் இஸ்லாத்துக்கு எதிராக காய் நகர்த்துகிறார்கள் என்பதை தெரிந்து கொள்வதற்காவது சோவையும் தினமலரையும் சற்றே பின் தொடரும் கட்டாயம் ஏற்படுகிறது.

//4) குரான் தன்னைத் தானே மூபீன் (simple crystal clear) என்று சொன்னாலும். அதைப் பற்றி ஒருமித்த கருத்து மூமின்களிடையே இல்லை. அதை படித்து புரிவதற்கு ph.d பட்டயறிவு வேண்டும். கடவுளின் வேதம் இப்படி இருப்பதற்கு எனக்கு ரொம்ப வருத்தம்.//

குறைபாடு குர்ஆனில் இல்லை. விளங்கிய முறையில் முஸ்லிம்களில் உள்ள குறைபாடே இது போன்ற ஒரு சில பிளவுகளுக்கு காரணம். பைபிளையும் ரிக் வேதத்தையும், தோராவையும் படிப்பதை விட குர்ஆன் விளங்கிட மிக இலகுவானது. முகமது நபியின் வரலாறை அற்ந்த ஒருவர் குர்ஆனை மிக மற்றவரின் உதவியில்லாமல் மிக எளிதாக விளங்க முடியும். நான் மதரஸா சென்று குர்ஆன் கிளாஸ் எடுக்கவில்லை. நானாக படித்து தெரிந்த கொண்டவையே இஸ்லாம் சம்பந்தமான விடயங்கள் அனைத்தும். பிரச்னை எங்கு என்பதை குர்ஆனே சொல்கிறது பாருங்கள்.

பல விபரங்களையும் தெளிவாகவே கூறி விட்டதாக இறைவன் இங்கு கூறுகிறான். சிலருக்கு குர்ஆனை பார்த்தவுடன், கேட்டவுடன் வெறுப்பு ஏற்படுவதை பார்க்கிறோம். இதற்கு காரணம் குர்ஆன் அல்ல. பக்குவப்படாத அந்த மனிதர்களின் மனமே! இதற்கு பிஹெச்டி பட்டம் எல்லாம் தேவையில்லை. தெளிந்த மனம் இருந்தால் போதும். குர்ஆன் தானாக விளங்கும்.

'அவர்கள் சிந்திப்பதற்காக இந்தக் குர்ஆனில் பல விஷயங்களைத் தெளிவுபடுத்தியுள்ளோம். அது அவர்களுக்கு வெறுப்பையே அதிகப்படுத்துகிறது.'
-குர்ஆன் 17:41

Anonymous said...

காக்காவலிப்பில் கடவுளை பார்த்த கழண்ட கேஸும் கார்பன் கூட்டாளியும்

என்று ஒரு பின்னவீனத்துவ பதிவு எழுதியிருக்கிறேன்

உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.

(இந்த விஷயமெல்லாம் உங்களுக்கு பழசுதான் என்றாலும்)

சிரிப்புசிங்காரம் said...

சுவனப்பிரியன் போன்றவங்க கிணத்துத் தவளைங்க...எது சொன்னாலும் ஏத்துக்க மாட்டாங்க....இருந்தாலும் இதுபோன்ற பதிவுகள் முஸ்லீம்கள் கொடுக்குற நாத்தம் புடிச்ச சென்டுக்கும்,பிரியாணிக்கும் மயங்கி வன்முறையைத்தவிற வேறெதுவும் தெரியாத முஸ்லீம் மதத்தை "இஸ்லாம் ஒரு அன்புமதம்"ன்னு சொல்லுற முட்டாள் ஹிந்துக்களுக்கு கொஞ்சம் சொரணையைக் கொடுக்கும்

கோவி.கண்ணன் said...

//சொன்னவை எல்லாம் போர்க்களத்தில் வைத்து சொன்னவை; அதையெல்லாம் எடுத்துக்கக்கூடாது என்கிற பழைய பல்லவி வேண்டாம்//

அவை எந்தகாலத்திற்கும் எந்த நாட்டிற்கும் பொருத்தமானவை என்று தான் அவர் நினைத்துக் கொண்டு பரப்புகிறார், அவர் அப்படிச் சொல்லி இருக்க வாய்ப்பில்லை.

:)

Post a Comment