Thursday, February 16, 2017

927. மதங்களும் ... சில விவாதங்களும் பற்றிய ஒரு குறிப்பு





*
R. DEVADOSS PANDIAN, Ph.D.

Doctor of Humane Letters (Honorary)
Professor of Mathematics and Dean of Faculty Emeritus
Vice-President for Academic Affairs  and Dean of Faculty
North Central College, Naperville, Illinois, USA 


Dear Sam,

Finally, I read your book from beginning to the end. It was a good read. Given the nature of the subject, it was not an easy read. I was deeply impressed by your knowledge on this subject.  Apparently, you have done a lot of research and read voluminous amount of work in this area. You write well. I liked your writing style; it was almost like you were teaching your readers--which I enjoyed--while at the same time exhibiting great deal of sensitivity in handling this difficult subject.  

I felt that the articles by the three authors starting from page 71 were a bit of digression from the main focus of the book as they did not cohere well with your good essay in the first 70 pages. Perhaps they belong to appendices. Congratulations on your book--a bold venture indeed. People may not agree with you but Tamil Nadu needs people like you, independent thinkers, who are willing to push us into uncomfortable zone. 


Best,

Pandian


*

Friday, February 10, 2017

926. சல்லிக்கட்டுப் போராட்டத்திற்கு ஒரு நினைவுச் சின்னம் கட்டுவோம்







*


*

”லென்ஸ்’ என்ற அமைப்பு, தமிழ்ப் பண்பாட்டுக் கழகம், ”ஐடியாஸ்’ என்ற 3 அமைப்புகள் மெரீனா போராட்டம் பற்றிய ஒரு கருத்தரங்கை நேற்று (9.2.17) நடத்தினார்கள்.

பலர் போராட்டங்களில் நடந்த நிகழ்வுகள், மனதைத் தொட்ட நிகழ்ச்சிகள், போராட்டம்  முடிந்த முறை, காக்கிச் சட்டைகளின் உண்மை நிறம் …. என்று பலவற்றையும் பேசி முடித்தார்கள். அவைகளில் என் மனதில் பதிந்த சிலவற்றை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்:

நானும் கூட இது போன்ற போராட்டங்கள் என்று 1965ல் நடந்த இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம், அடுத்து இந்த போராட்டம் என்று இரு போராட்டங்களைப் பற்றி மட்டும் எழுதினேன். ஆனால் 1935ல் நடந்த ஒரு போராட்டம் பற்றி இங்கு பேசிய பிறகு அறிந்து கொண்டேன். அப்போராட்டம் பலராலும் மறக்கப்பட்ட ஒன்றாக ஆகி விட்டது. ஒரு வேளை அப்போராட்டம் பெரியார் தலைமையில் நடந்ததால் அப்படி ஒதுக்கப்பட்டிருக்குமோ என்றார் திரு. பாண்டியன்.

கூட்டம் முடிந்து கேள்வி நேரத்தில் விழுந்த மூன்று கருத்துகளைக் குறிப்பிட விழைகிறேன்.

கூட்டம் முடியும் தறுவாயில் ஒரு இளைஞன் வெடித்தான். இதெல்லாமே தோல்வி தவிர வேறொன்றுமில்லை. இன்னும் சல்லிக்கட்டு என்பதை ஜல்லிக்கட்டு என்று சொல்லிக் கொண்டு தான்  இருக்கிறோம்.  வடமொழி ஆளுமையை விட்டு நாம் இன்னும் விலகவில்லை என்று சினந்து கூறினான். நாமும் வடக்கின் வழியில் தான் சென்று கொண்டிருக்கிறோம் என்று எனக்கும் தோன்றியது.

 அடுத்து ஒரு இளைஞன் இப்போராட்டங்களில் அரசியல் கலக்காமல் பார்த்துக் கொண்டது ஒரு தவறு என்றான். போராட்டம் காக்கிக் கலகத்தில் முடிந்ததற்கும் இதுவே காரணம் என்றான். இது ஒரு அரசியல் குடைக்குள் வர வேண்டும். அதுவே போராட்டங்களுக்கு ஒரு முகமும், முனைப்பையும் கொடுக்கும் என்றான். அரசியல் உருவாக்கம் தேவை என்றான்.

இறுதியாகப் பேசியவர் பேசியது எனக்கு மிகவும் பிடித்தது:  குப்பத்து மக்கள் போராட்டத்தைத் தாங்கிப் பிடித்து உதவி செய்து காக்கிச் சட்டைகளின் அபிஷேகத்தையும் பெற்றுக் கொண்டார்கள். பாவம் அந்த மக்கள். நம்மோடு நின்று அதற்காக அடி வாங்கி பெரும் நட்டம் அடைந்தார்கள். 

அரசு, காக்கிகள் அழித்த சந்தையை 40 லட்சம் செலவில் கட்டித் தருவதாக உறுதி அளித்திருக்கிறதாம். ஆனால் நடுவில் கமிஷன் எல்லாம் போக 20 லட்சம் ரூபாயில் அவர்களுக்கு ஒரு சந்தை ஒருவேளை உருவாகலாம். அது நிச்சயம் போதாது.



ஆகவே போராட்டக்காரர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அவர்களுக்கு குளிர் அறைகளோடு கூடிய மீன் சந்தை ஒன்றைக் கட்டிக் கொடுக்கலாம். ஆர்வத்தோடு போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்களும், I.T. நண்பர்களும் முன்னெடுக்க வேண்டும். தமிழகம் முழுவதும் அவர்களோடு நிச்சயமாக சேர்ந்து கொள்ளும்.




என்னைப் பொறுத்தவரை அப்படி ஒரு அமைப்பு கட்டி முடிக்கப்பட்டால் அது  மெரினா போராட்டம் / ஜனவரி 18 போராட்டம் / தை மாதப் போராட்டம் / சல்லிக்கட்டுப் போராட்டம் நடந்ததை காலம் காலமாய் நினைவு கூறும் அடையாளச் சின்னமாக  நிலைத்து நின்று என்றும் இந்தப் போராட்டத்தின் உயர்வை உரத்து வரலாற்றிற்கு நிரந்தரமாகச் சொல்லிக் கொண்டிருக்கும்.





இப்பதிவு உங்களுக்குப் பிடித்ததோ பிடிக்கவில்லையோ … நிச்சயம் இந்தக் கடைசிப் பத்தி பிடித்தவர்கள் பலர் இருப்பீர்கள். இப்பதிவை FBல் SHARE செய்து/ blogல் மறு பதிவிட்டு  பலரின் பார்வைக்கு எடுத்து செல்ல உதவுங்களேன்.



மறு பதிவுகளை blogல் இடுவோர் அதன் தொடுப்பு முகவரிகளை பின்னூட்டத்தில் இடும்படிக் கேட்டுக் கொள்கிறேன்.







*

Wednesday, February 08, 2017

925. இதற்காகத்தானே ஆசைப்பட்டாய் ஜார்ஜ்…? *





*
இதற்காகத்தானே ஆசைப்பட்டாய்  ஜார்ஜ்…? *


 மெரீனா வாரம்.
நல்லா ஓடிச்சி.
 ஆறு நாள்.

ஊரு உலகமே கண்ணு போட்டிருச்சி! ஆன்னு எல்லோரும் வேடிக்கை பார்த்தோம் … பார்த்தாங்க. மாடல் மாதிரி நம்ப பசங்களை எடுத்துக் கிட்டாங்க.


என்ன நடந்துச்சோ .. எப்படி நடந்திச்சோ. ஏழாம் நாள். கலஞ்சி போறதுக்கு 4 மணி நேரம் கேட்டிருக்காங்க பசங்க. ஆனா நம்ம க.த. காவல் துறை, அதாவது கடமை தவறாத காவல் துறைக்கு அங்கங்கே வேர்த்திருச்சி. 2 மணி நேரம் …ஒரு மணி நேரம் அப்டின்னு கேட்டிருக்காங்க. கா.துக்கு தாங்கலை. பாஞ்சிட்டாங்க. கண் திருஷ்டி மாதிரி என்னென்னமோ ஆகிப் போச்சு.


இப்போ ஓபிஎஸ் பேசுறதப் பார்த்தா அவர் காவல் துறைக்கு அப்படி ஒரு ஆர்டர் போட்டிருக்க மாட்டார்னு தோணுது. ஒரு வேளை அவர் சொல்றது மாதிரி mini-mumக்கு ஒரு பொறாமை வந்து காவல் துறையை உசுப்பி உட்டுட்டாங்களோ. அல்லது காவல் துறைக்கு ஆறு நாளா அடக்கி வச்சிருந்த தோள் தினவுகள் அதிகமாகப் போய், அதுனால சாமி அவங்க மேல இறங்கி ஒரு ஆட்டம் போட வச்சிருச்சோ என்னவோ…அல்லது சண்டை போடாமல் களத்தை விட்டு போராட்டக்காரர்களை விடுவிக்கக் கூடாது என்ற high level philosophy ஆகக் கூட இருக்கலாம். எல்லாம் அந்த .... கே வெளிச்சம்!


அதுல நான் பார்த்த காணொளிகள் எல்லாம் … அட .. எப்படிப்பட்ட காவல் துறை. மக்கள் நண்பர்களாயிற்றேன்னு தோணும்படி ஆகிப் போச்சு. என்னமா சும்மா ரோட்ல நிக்கிற வண்டிகளை அடிச்சி நொறுக்குறாங்க. ஒரு வண்டிய ரெண்டு போலீசு அடிச்சிட்டு கொஞ்ச தூரம் போய்ட்டு … on second thoughts திரும்ப வந்து மீதி இருக்கிற கண்ணாடி அது இதுன்னு போட்டு சதாய்க்கிறாங்க.


ஆனாலும் எனக்கு என்னமோ அந்த பொம்பிள போலீஸ் ரொம்ப பிடிச்சிப் போச்சு. மஹாலட்சுமி மாதிரி ஒரு பொண்ணு.என்னே அவர்களது கடமை உணர்ச்சி. தூரத்தில எரிஞ்சிக்கிட்டு இருந்த எடத்தில இருந்து ஒரு குச்சியைப் பத்த வச்சி… அப்படியே ஓட்டமா ஓடியாந்து… அங்க இருந்த ஒரு பாவப்பட்ட ஷெட் ஒன்றினை எரிச்சது உணர்வு பூர்வமாக இருந்தது. கார்த்திகைத் தீபம் ஏத்துறது மாதிரி எப்படி ஓடி ஓடி எரிச்சாங்க. அம்மணி நல்லா இருக்கட்டும் பிள்ளை குட்டியோட.


இன்னொரு காணொளி. அலங்காநல்லூர்னு நினைக்கிறேன். நாலைந்து பேர். பாவம். அஹிம்சாவாதிகள் போலும். போலீஸ் விரட்டி விரட்டி அடிக்கிறப்போ இவர்கள் உட்கார்ந்த இடத்தை விட்டு அகலாமல் உக்காந்திருந்தாங்க. நம்ம காக்கி சட்டை வந்ததுகள். ஒரு இளைஞன். என்ன நினைப்பில் உட்கார்ந்திருந்தானோ… எழுந்திருக்காமல் அப்படியே உக்காந்திருந்தான். பக்கத்தில் சில பெண்களும் உட்கார்ந்திருந்தனர். நம்ம க.உ. காக்கிக்கு உணர்வு கொப்புளிக்க அவனை நாலு சாத்து சாத்தி துரத்தினார். பையன் ஓடவில்லை. ஆனால் நகர்ந்து விட்டான். நம்ம க.உ.கா.க்கு இன்னும் கடமை உணர்வு தீரவில்லை. அங்கிருந்ததில் ஒரு வயதான அம்மா. அதாவது ஒரு கிழவி. அதை நாலு சாத்து சாத்தினார். இப்படித்தான் இருக்கணும்… கடமைன்னு வந்திட்டா கிழவியாவது… குமரியாவது. என்ன நான் சொல்றது …? ஆட்டோவை தீ வச்ச காவல் துறை ஆளைக் கண்டு பிடிச்சி ஒரு பரிசு ஒண்ணு கொடுங்கப்பா. இது மாதிரி நிறைய க.த. ஆட்களை கட்சியில … சாரி …சாரி … துறையில எடுத்துப் போடுங்க. மக்களுக்கு நல்ல நண்பர்கள் கிடைக்கும்.


அந்த நடுங்குப்பம் காண்டம் இருக்கே …. அது ஒரு பெரிய சுந்தர காண்டம் மாதிரி. அதில மூணு போலீஸ்காரங்க … ரெண்டு ஆம்பிளை + ஒரு பொம்பிளை ... பெரிய மீனாகப் பார்த்து ஆளுக்கு ஒண்ணு ஆட்டை போட்டதைச் சொன்னாங்க. அதுவும் அவங்க வச்ச நெருப்புல வெந்து வேஸ்ட் ஆகக் கூடாதே அப்டின்ற கடமை உணர்ச்சிலதான் அப்படி எடுத்துட்டு போயிருப்பாங்க. இல்ல?



இதெல்லாம் ஏன் பண்ணினாங்கன்னு தெரியலை. ஆனால் சமீபத்தில் வாசித்த ஒரு நூலில் பார்த்த சில வாக்கியங்கள் இந்த நிகழ்வு மேல் சிறிது அதிகமான வெளிச்சத்தை வீசியது. அதைத் தமிழ்ப் படுத்தி சில வரிகள் தருகிறேன். இங்கேயும் அது பொருந்துமா என்று பாருங்கள்:



“இதே போன்ற “எழுச்சி” இதற்கு முன்பும் இந்தியாவில பல இடங்களில் நடந்து வந்துள்ளன. தெலுங்கானாவிலும், மிசோராமிலும் காவல் துறையும், ராணுவமும் இணைந்து இதே போன்ற நிகழ்வுகளை நிகழ்த்திக் காட்டியுள்ளன.


1984ல் தில்லியிலும், 2002ல் குஜராத்திலும் நாம் கண்ட நிகழ்வுகள் சீக்கியருக்கும் இஸ்லாமியருக்கும் எதிராக நடந்த அந்த நிகழ்வுகள் மக்கள் திரளின் “பெரும் சினத்தால்” எழுந்தது என்று சொல்லப்படலாம். ஆனால் உண்மையில் அப்போது ஆட்சியிலிருந்த காங்கிரசும், ப.ஜ. கட்சியும் தான் இதற்கான அடிப்படைக்காரணங்களாக இருந்தார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மைதான்.


2014ல் மோடி அரசு பதவியேற்றதும்  சிறுபான்மையினரையும், முற்போக்காளர்களையும் கண்காணிப்பதும் தொடர்ந்து நடந்து வந்தன, … நாட்டில் எங்கெல்லாம் அரசியல் தொடர்பில்லாத வலதுசாரிகளின் போராட்டங்கள் ஆரம்பமாகின்றனவோ அங்கெல்லாம் காவல் துறையினரின் அடக்கு முறைகள் தலையெடுத்தன. 

இவை ஒரு வழக்கமான முறையாக நாடளவில் நடைபெற ஆரம்பித்தன. 

 *
இதை எழுதியது ஒரு ஜார்ஜ். டைட்டில்ல வர்ர ஜார்ஜ் இந்த ஜார்ஜ் தான்.


 நீங்க வேற ஜார்ஜை நினச்சிருந்தீங்கன்னா … அது உங்க கனவு ..



 *

Monday, February 06, 2017

924. மதங்களும் ... சில விவாதங்களும், .......... தமிழ் இந்துவில் ஒரு குறிப்பு.






*


மதங்களின் அடித்தளத்தை உலுக்கி ….

ஒவ்வொரு மதத்தினருக்கும் அவர்களின் மதம் சார்ந்த நம்பிக்கை அவர்கள் பிறந்த உடனேயே அவர்கள் மீது திணிக்கப்படுகிறது. வீடு, உறவினர், புழங்கும் வெளி ஆகியவற்றின் மூலமும் அவரவர் மதம் சார்ந்த நம்பிக்கை ஆழமாக உறுதிப்படுத்தப்படுகிறது. இதனால் அவரவர் மதத்தை விமர்சன பூர்வமாகப் பார்க்கும் புறவயமான பார்வை இல்லாமல் போகிறது. தருமியின் இந்த நூல் பல்வேறு மதங்களையும் புறவயமான பார்வையுடன் விமர்சிக்கிறது. 

மதங்களின் புனித நூல்களின் நதிமூலம், ரிஷிமூலத்தையும் தருமி ஆராய்ந்திருக்கிறார். கேள்வியே கேட்கப்படாமல் காலம் காலமாகப் பின்பற்றப்படும் மத வழக்கங்கள், நம்பிக்கைகள் போன்றவற்றின் அடித்தளம் மீதே கைவைக்கிறார். இந்து மதம், இஸ்லாம், கிறித்துவம் இம்மதங்களின் உட்பிரிவுகள் அவற்றின் உள்முரண்கள் என்று தயவுதாட்சண்யம் பார்க்காமல் தருமி அலசியிருக்கிறார். மதவாதிகளின் கண்ணுக்குப் படாமல் அவர் தப்பிக்க வேண்டும்!

இந்த நூலில் தருமியின் கட்டுரைகள் மட்டுமல்லாமல் தமிழ்ப்படை, ஜமாலன், ஆர். கோபால் ஆகியோரின் கட்டுரைகளும் இந்த நூலில் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

பெரியதொரு விவாதத்தைக் கோரும் நூல்.

-       தம்பி





தமிழ் இந்துவில் உள்ள “நூல் வெளி”யில் வரவேண்டும் என்று விரும்பிய என் நூலைப்பற்றிய குறிப்பு ஒன்று சென்ற சனிக்கிழமை – 4.2.2017 – அன்று வெளி வந்துவிட்டது.

பெரும் மகிழ்ச்சி.

குறிப்பாளர் – திரு தம்பி –நூலை முழுவதுமாக வாசித்து நல்லதொரு ஆய்வின் அடிப்படையில் கொடுத்திருப்பது அறிந்து அவருக்கு என் பாராட்டுகள். அதிலிருந்த ஆழமும் அழுத்தமும் மிகவும் பிடித்திருந்தது. மிக்க நன்றி.

lay out நண்பர்களுக்கும் நன்றி சொல்ல வேண்டும்.  நல்ல top slot கொடுத்துள்ளார்கள்.








*

Saturday, January 28, 2017

923. I AM SO…. FORTUNATE








*




  73 years. 

Have seen two great events in my life. 

 1965 Hindi agitation – politics of TN changed so totally with the impact persisting even today. 

2017 Jallikattu agitation – will it be a harbinger for the days to come? 

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் பற்றிய என் பழைய பதிவுகள்; 

ஜல்லிக்கட்டுப் போராட்டக் காலத்தில் ஓர் இரவு. பத்து மணியிலிருந்து புதிய தலைமுறையின் ‘நேர்படப் பேசு’ என்ற நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தேன். இரண்டே இரண்டு அரசியல் வியாதிகள் மட்டும் இருந்தார்கள். இருவரையும் மீனை தரையில் வைத்து உரசுவார்களே அதே மாதிரி உரச வேண்டும் என்று தோன்றியது. விடுங்கள் அவர்களை. இவர்கள் போக கூட்டத்தில் ஒருவர்… பெயர் தெரியவில்லை. கருப்பாக இருந்தார் – ஆனாலும் உண்மையைப் பேசினார்! மிகவும் தெளிவாகப் பேசினார். ஒவ்வொரு பேச்சிலும் உண்மையும் ஆளுமையும் இருந்தது.


 அந்த நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த போது தான் நான் எவ்வளவு lucky என்பது எனக்குள் நிழலாடியது. இன்னும் பத்து வருஷம் நான் முந்திப் பிறந்திருந்தால் ஒருவேளை சுதந்திரப் போராட்டத்தின் முக்கிய நிகழ்வு எதுவும்கூட நினைவில் வந்திருக்கலாம். ஆனாலும் பரவாயில்லை. முக்கியமான இரு வரலாற்று நிகழ்வுகளை ஆயுட் காலத்தில் பார்த்தாயிற்று.


 மகிழ்ச்சி …

1965 - இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தின் நல்ல விளைவுகளை இன்னும் அறுவடை செய்து கொண்டு வருகிறோம். தமிழ்நாடு தனித்து நிற்கும் பெருமைக்கு அது தான் அடிகோலியது. ஆட்சி மாறியது. மாணவரின் பலம் என்ன என்று இன்றும் நாட்டுக்குச் சொல்லிக்கொண்டிருக்கும் நிகழ்வு அது. இந்தியை எதிர்த்ததற்கு இன்றும் நமது மக்கள் பலர் பிரலாபித்துக் கொண்டிருக்கிறார்கள். நல்ல நேரத்தில் போட்ட ஒரு தடையால் இன்றும் அந்த மொழி நம்மை ஆட்சி செய்வதிலிருந்து தப்பித்தோம்.


 அன்று அந்தப் போராட்டம் எங்கிருந்தோ காற்றிலிருந்து வரவில்லை; மேகத்திலிருந்து விழவில்லை. தி.மு.க. அடியெடுத்துக் கொடுத்தது. திராவிட அரசுகள் மேல் குறையாத “அன்பு” கொண்டோர் நம்மிடம் அதிகம் உண்டு. அவர்கள் என் வாழ்வையே இந்தி எதிர்ப்பு கோணலாக்கி விட்டது என்று கதறுபவர்களும் இன்னும் உண்டு. இவர்கள் இந்தி படிக்காததால் அம்மொழி பரிதவித்துப் போனது என்றும், இந்தி படித்திருந்தால் தங்கள் வாழ்க்கை இமயத்தின் உச்சியில் கொடி நாட்டியிருக்கும் என்றெல்லாம் பேசும் அறிஞர்கள் பலரும் உண்டு. எப்படியோ… அன்று மாணவர்கள் எழுச்சி இந்த மொழிவாரி நாட்டில் ஒரு பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்தது.


மாணவர் எழுச்சியே அதற்கான பெரும் காரணம். அக்காரணம் எப்படி படிப்படியாக தமிழ்நாட்டில் வளர்ந்தது என்பதையும், தி.மு.க. மட்டுமே அதற்கான முழுக்காரணமுமில்லை என்பதைப் பற்றி மாலன் என் பழைய பதிவில்  ஒரு பின்னூட்டம் மூலமாக எழுதியுள்ளதை இங்கு மேற்கோளிடுகிறேன்:

 இந்தி எதிர்ப்பு என்பது தமிழ்நாட்டில் 1965க்கும் முன்னரே இருந்து வந்ததுண்டு. மறைமலை அடிகள், திரு.வி.க ( இவர் காங்கிரஸ் இயக்கத்தில் தொண்டாற்றியவர்) போன்றோர் அதில் முனைப்புக் காட்டினார்கள். இவர்கள் அன்றைய சமூகத்தில் மரியாதையைப் பெற்றவர்கள். ஆனாலும் அப்போது இந்தி எதிர்ப்பு 1965ல் இருந்ததைப் போன்ற மக்கள் இயக்கமாக இருக்கவில்லை.ஏன்? ஆட்சிமொழியாக அறிவிக்கப்பட்டதுதான் 1965 கிளர்ச்சிக்கு ஒரு வேகம் கொடுத்தது.

எந்த மனிதனையும் அரசியல் அதிகாரத்தின் மூலம் அடிமையாக்கிவிட முடியாது என்ற ஆதார உண்மைதான் 1965 கிளர்ச்சியின் அடிப்படை.


இன்றும் அதே அரசியல் தத்துவம் உண்மையாகி விட்டது. முரட்டு அதிகாரமும், கண்மூடித்தனமான கோட்பாடுகளும் இளைஞர் மனதில் போராட்ட உணர்வை ஊட்டி விடும் என்பது மீண்டும் நம் முன் புலனாகி விட்டது. எப்படி ஒரு எழுச்சி!  ஒரு வேளை இந்தி எதிர்ப்பின் நீட்சியாகக் கூட ஜல்லிக்கட்டுப் போராட்டத்தைப் பார்க்கலாம். ஒருவேளை அதனால் தான் அரசியல்வாதிகளை இம்முறை ஒதுக்கி வைத்து விட்டார்கள் போலும். அவர்களின் சதுரங்க ஆட்டத்தில் வெற்றுக் காய்களாக இருக்க மறுத்து விட்டார்கள்.


எப்படி கூடினார்கள் .. எப்படி ஒன்றிணைந்தார்கள் என்று எல்லாமே அதிசயம். சாதியில்லை … மதமில்லை … பாலின பேதம் இல்லை… அட.. வயசு வித்தியாசமுமில்லை. அப்பாவும், அம்மாவும் பிள்ளையும் என்று எல்லோருமாக ஒன்று கூடி விட்டார்கள். ஒரே குடும்பம், கூடிய கூட்டத்தினுள் எப்படி இத்தனை ஒழுங்கும், ஒழுக்கமும், கட்டுப்பாடும், சுத்தமும் ஒருங்கிணைந்து செயல்படுத்தப்பட்டன. காவலுக்கு நின்ற காக்கிச் சட்டைகளையே நண்பர்களாக்கிக் கொண்டார்களே!


 இந்த நிகழ்ச்சிகளைக் கண்முன்னே கண்டதே ஒரு பெரும் பேறு. முதல் இந்தித் திணிப்பு போராட்டத்திலும் அதிக ஆச்சரியத்தோடு போராட்டத்தின் முன்னணியிலிருந்தோரை ‘ஆவென’ வாய் பிளந்து ரசித்தேன். இன்றும் அதே நிலைதான். சிட்டுக் குருவிக் கூட்டம் போல் அழகாக ஊருக்கு ஊர் அமைந்த இந்தக் கூட்டம் மெய்சிலிர்க்க வைத்தது. அன்றாவது கூட்டத்தில் ஒருவனாக கோஷம் போட்டுச் சென்றேன். இன்று எட்டத்தில் நின்று படம் மட்டும் எடுத்து வந்தேன்.


 இப்போராட்டத்தில் எல்லாம் செவ்வனே சென்று கொண்டிருந்தது. ஆனால் முடிவு தான் முற்றிலும் தவறாகப் போய் விட்டது. இப்போது எல்லாம் முடிந்த பிறகு இவர்கள் அவர்களையும், அவர்கள் இவர்களையும் பழித்துக் கொண்டு இருக்கிறார்கள்.


என்னைப் பொறுத்தவரை வந்த ஒரு பெரும் சந்தேகம். இன்னும் எதிர்காலத்தில் பல சமூக, அரசியல் பிரச்சனைகள் தலையெடுக்கும் போது இப்போது போல் இளைஞர்கள் மீண்டும் தலையெடுப்பார்களா? ஒன்று கூடி தேரிழுப்பார்களா? அல்லது, இந்த முயற்சியின் இறுதியில் நடந்த முட்டாள் தனமான, வெறித் தனமான விஷயங்கள் அவர்களது எதிர்கால முயற்சிகளை முற்றுமாகத் தடை செய்து விடுமா?

 நடந்த போராட்டத்தின் முடிவினால் தங்களுக்கு இருந்த சில மரியாதைகளையும் காவல் துறையினர் இழந்தார்கள். ஏனிந்த வெறி என்றே புரியவில்லை. எத்தனை எத்தனை வெறியாட்டங்கள்.

 பாவம் … ஒரு பாவப்பட்ட பெண்மணி தன் வீட்டின் முன்னால் நிற்கிறாள். ஓடி வந்த காவலன் ஒருவன் அவளை அடித்து , அவள் கையிலிருந்த ப்ளாஸ்டிக் குடத்தைத் தெருவில் அடித்து உடைத்துப் போகிறான். வெறி ……

யாரைத்தேடி வந்தார்களோ… நாலைந்து காவலர்கள். ஆண்கள் யாரும் அங்கில்லை. இருந்த பெண்களை – அதிலும் வயதில் மிக மூத்த பெண்களை அடித்துத் தள்ளி அங்கு நின்று கொண்டிருந்த இரு சக்கர வாகனங்களை அடித்து உடைத்துப் போகிறார்கள். ஏதோ ஒரு வெறி … ஒரு மன வியாதி.

அதை விட வீட்டுக்கு விளக்கேற்றி வைப்பாள் பெண் என்பார்கள். ஒரு பெண் காவலாளி வேலை மெனக்கெட்டு தூரத்திலிருந்து நெருப்பெடுத்து வந்து ஒரு ஓட்டை வீட்டை ‘விளக்கேற்றி’ எரித்தாள் அந்த நவயுகக் கண்ணகி. 

சாலையில் நின்று கொண்டிருந்த வண்டிகளை அடித்து நொறுக்குவதில் பெயர் வாங்கி விட்டார்கள் நம் தமிழ் போலீஸ்காரர்கள். என்னே அவர்களது திறமை.

ஒதுங்கி நின்ற ஆட்டோவைத் தீ வைத்து எரித்த அவர்களது சாணக்கியத் தனத்தை எப்படி, எத்தனை காலத்துக்கு நாம் போற்றிப் பாடிக்கொண்டிருக்க வேண்டுமோ தெரியவில்லை.

 காவல் துறையின் கேவலமான ஆட்ட பாட்டங்களை மக்கள் அவ்வளவு எளிதில் மறக்க மாட்டார்கள் என்றே நம்புகிறேன். எளிதில் மறக்கவும் கூடாது.

போராட்டத்தின் முடிவால் இன்னொருவருக்கும் பெரும் இழப்பு என்றே நினைக்கின்றேன். ஆயாவின் காலில் விழுந்து தன் தன்மானத்தை முழுவதுமாக இழந்து நின்ற தமிழ்நாட்டின் சீப் மினிஸ்டர் ஓ.பி.எஸ். இப்போராட்டத்தின் ஆரம்பத்தில் விரைவாக தில்லி சென்று ஏதேதோ செய்து அவசரச் சட்டம்… சட்டத் திருத்தம் என்றெல்லாம் கொண்டு வந்தபோது போராட்டக்காரர்களை நேருக்கு நேரோ, மறைமுகமாகவோ சந்தித்து போராட்டத்தை நல்ல முறையில் முடித்து வைப்பார் என்று நினைத்திருந்தேன். அதற்குரிய வழிகள் திறந்தேயிருந்தன. ரம்மி ஆட்டத்தில் எல்லாம் சேர்ந்த பின் ‘டிக்’ அடிக்க வேண்டுமே … அந்த நிலையில் அவர் இருந்ததாக நினைத்தேன். கையில் அத்தனை நல்ல ஜோக்கர்கள் இருந்தார்கள்! அழகாக ‘டிக்’ அடித்திருக்கலாம். உட்டுட்டார் ... பாவம்!!


அப்படி ஏதும் உண்மையில் நடந்திருந்தால் அரசியலில் அவரது நிலை நன்கு காலுன்றி நின்றிருக்கும். அதற்கு மேல் மன்னார்குடி மாபியா அவரைத் தொட அஞ்சியிருக்கும்; மக்கள் மனதிலும் அவர் உயர்ந்திருப்பார். முதலமைச்சர் பதவி நன்கு கைவசமாக வந்திருக்கும்.

ஆனால் …

யாரோ ஒரு பத்திரிகைக்காரர் கேட்டதற்கு அவசரமாக அலங்காநல்லூரில் வாடிவாசலைத் திறந்து வைப்பேன் என்று சொல்லியதே அவரை ஒரு அவசரக்குடுக்கை என்று நினைக்க வைத்தது.


அடுத்து நாள் அலங்காநல்லூர் என்று எடுத்த அவசர முடிவை போராட்டக்காரர்களுக்கு மட்டுமல்ல … எல்லோருக்குமே பொருந்தாத ஒரு முடிவு. அமைச்சரின் முடிவு நிராகரிக்கப்பட்டது.


அதனால் அவருக்கெழுந்த கோபத்தினால் தான் காவல் துறையை மக்கள் மீது ஏவி விட்டு விட்டார் என்றும் ஒரு கருத்து பரவலாக உண்டு.


 உண்மை எதுவோ… வெற்றியின் வாசலைத் தொட்ட முதலமைச்சர் கொடுத்த ஆணையோ… அல்லது வேறு எந்த காரணமோ … காவல் துறையின் வெறியாட்டத்தால் அமைச்சரின் மீது கனிந்த நல்ல கருத்துகள் நாசமாகி விட்டன. மக்கள் மனதில் அவருக்கு ஏற்பட்டிருந்த நல்ல இடம் பறி போனது.


 ரம்மியில் ’டிக்’ அடிப்பதற்குப் பதில் wrong tick அடித்து விட்டார் … பாவம்! 

*
a "heroic" action of police


https://youtu.be/mSnUBMVz2Dw

 *