Saturday, April 22, 2006

153. இது ஒரு (1/4) மீள்பதிவு

*

வேற ஒண்ணுமில்லை.. பதிய ஆரம்பித்த சின்னாளில் பலநாள் கனவாக நான் ஆங்கிலத்தில் எழுதின ஒன்றை (அது எந்த category-ல் வரும்; கதையய, கட்டுரையா, fantasy-யா என்று தெரியவில்லை!) பதிவிட்டிருந்தேன். இரண்டு பேர் பார்த்திருப்பார்கள் கட்டாயம் - குழலியும், என் மாணவன் அவ்வையும். (இரண்டே பின்னூட்டம்-அதனாலேயே இந்தக் கண்டுபிடிப்பு).
ஏனோ இன்று இட்லிவடையின் பதிவினையும் (49.5%), அதற்கான எதிர்வினையாக குழலியின் பதிவும் என்னை அப்பதிவை மீண்டும் வாசிக்க வைத்தது. அப்போது அந்த ‘இரண்டாம் நாளை’ மட்டுமாவது மீண்டும் பதித்தால் என்ன என்று தோன்றியது. ஆனால் ஒரு எச்சரிக்கை: முதல் நாள் படிக்காவிட்டால் இரண்டாம் நாள் புரியாமல் போகலாம். ஆகவே முதல் நாள் விஷயத்திற்கு அங்கே போகவும்…
The second day begins.

Reservation policy remains with the following conditions: First generation candidates get the full extent of the advantages of the existing reservation policy. Second generation gets only one third of the benefits. Children from financially sound families - identified from their respective security numbers fall under common pool. On the other hand children form poor families irrespective of their castes get the ‘one third benefits’. The minority ‘rights’ are to be replaced by minority ‘protection’.







Pathivu Toolbar ©2005thamizmanam.com


Apr 14 2006 12:14 am | Uncategorized |
7 Responses
கமல் Says:
April 22nd, 2006 at 8:45 am
என்ன சார்! ரொம்ப நாளா பதிவையே காணோம்! சீக்கிரம் போடுங்க!

நன்றி
கமல்

தருமி Says:
April 22nd, 2006 at 2:29 pm
என்ன கமல்,
இந்தப் பதிவைப்பற்றிச் சொல்ல ஒன்றுமில்லையோ…
ஏனென்றே தெரியவில்லை..அடுத்த பதிவுக்கு என்று எழுத ஆரம்பித்தவைகள் இன்னும் ஆரம்பங்களாகவே உள்ளன…
“ஆதரவு”க்கு நன்றி…

பொன்ஸ் Says:
April 22nd, 2006 at 5:31 pm
தருமி சார்,
நல்ல கற்பனை.. ஆனா

“7th day will be when few of the representatives of the third generation and second generation candidates who lost their jobs due to the policy standing around me to with their rifles pointed to me.. ”

தருமி Says:
April 22nd, 2006 at 6:42 pm
பொன்ஸ்,
முதல் முறையோ வருகை தருவது. வருக.நன்றி.

7th day - உங்க கற்பனை நல்லாதான் இருக்கு…

ஆனாலும், அவர்கள் வேலைபார்த்துக் கொண்டுதானே இருப்பார்கள்; அவர்கள் பிள்ளைகளுக்குத்தானே ரிசர்வேஷன் கிடையாது…அதனால துப்பாக்கி அளவுக்குப் போக மாட்டாங்க. அப்படியே எக்குத் தப்பா ஏதாவது நடந்தாலும் ஒரு நாட்டுக்கு நல்லது செய்து, அதற்காக உயிரையே விட்ட ஆளுன்னு ரெண்டு மூணு சிலை வச்சிரமாட்டீங்க…கனவை அப்படியே extend செஞ்சுட்டா போகுது..

பொன்ஸ் Says:
April 23rd, 2006 at 3:11 pm
முதன்முறைதாங்க.. நான் படிக்க ஆரம்பிச்சதுக்கப்புறம் உங்களோட “ஜோசியம்” ங்கற தலைப்புல எழுதினது தான் தெரியும்.. எனக்கு அவ்வளவு இன்டரஸ்ட் இல்லாத தலைப்பு.. (ஏதோ என்னப் பத்தி நல்லதா சொன்னா கேட்டுட்டு போகலாம்.. ஜோசியத்தப் பத்தி படிக்க சொன்னீங்கன்னா.. நான் இல்லைப்பா..)
கதைன்ன உடனே வந்துட்டேன்.. அடுத்த பதிவும் படிக்கப் போறேன்..

தருமி Says:
April 23rd, 2006 at 10:26 pm
கத கேக்க வந்த பொன்ஸ்,
அப்டின்னா நம்ம ‘சொந்தக்கதை’யை படிச்சிப்பாத்து சொல்லுங்க எப்படி இருந்திச்சுன்னு.

ஜவஹர் Says:
April 23rd, 2006 at 11:29 pm
அன்புள்ள தருமி
இப்போதுதான் உங்கள் பதிவை படித்தேன். அதன் முன்பதிவான ஆங்கிலப் பதிவையும் படித்தேன்.அது ஒரு கனவு என்று முடித்திருந்தாலும், உருப்படியான கனவு.எனக்கு அது சாத்தியம் என்றுதான் தோன்றுகிறது. முதல்வன் படத்தில் காட்டப்பட்ட Fantasy யை மக்கள் ரசிக்கத்தானே செய்தனர். இந்தக் கருவை மைய்யமாக வைத்து வெகுஜன பத்திரிக்கையில் ஒரு தொடர்கதை சாயலில் எழுதினால் நல்ல பயனைத் தரக்கூடும்.ஆனால் நமது அரசியல்வாதிகளுக்கு இந்த ஐடியா எட்டிக்காயாகத்தான் இருக்கும்.
அன்புடன்,
ஜவஹர்

No comments:

Post a Comment