Wednesday, July 18, 2007

229. A LETTER TO (THE HINDU) EDITOR

வழக்கமாக எழுதி அனுப்பப்படும் கடிதங்களின் கூர்மையைச் சிறிது மழுங்கடித்து (read 'edited') அதன் பின்பே என் சில கடிதங்கள் பதிப்பிற்கு ஏற்றுக் கொள்ளப் பட்டதே இந்து தினசரியைப் பொறுத்தவரை என் முந்திய அனுபவங்கள். நன்றாகவே எடிட் செய்யப் படுவதைப் பார்த்து வியந்ததுண்டு. ஆனால் இம்முறையோ என் கடிதம் மழுங்கடிப்படுவதற்குப் பதில் மேலும் 'கூர்மை"யாக்கப் பட்டிருப்பதைப் பார்த்து ஆச்சரியம்.

இந்துவிற்கு நான் அனுப்பிய என் கடிதத்தில் நான் குறிப்பிடாத "அடிப்படைவாதிகள்' (fundamentalists) என்று ஒரு சொல்லாடலைச் சேர்த்து என் கடிதம் இன்று (18th July,'07)பிரசுரிக்கப் பட்டுள்ளது. அதற்கு இங்கே என் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். (வேறென்ன செய்ய முடியும்?) அதோடு நான் அனுப்பிய ஒரிஜினல் கடிதத்தை இங்கு பதிவிடுகிறேன்.


Sir,

For his article "Debate or denial: the Muslim Dilemma" in your columns on 17th July,'07 Hasan Suroor deserves great appreciation for calling a spade a spade. Especially in the last paragraph of the article he has encapsulated what every Muslim of this day should understand and adhere. But the big question is whether Muslims in general and the Muslim zealots in specific would accept that "When Islam was in its infancy and battling against non-believers violence was deemed legitimate…" but NOT NOW.

The problem arises when people insist that the "words" given by god should not even be interpreted, leave alone be changed.

Wish we get more level headed people among our all religious brethren.

-------------------------------------------------------------------

இஸ்லாம் பற்றிய விவாதங்களும், மறுப்புகளும் என்ற தலைப்பில் எழுதியுள்ள ஹசன் சாரூர் 'இந்து'வில் வழக்கமாக எழுதும் ஒரு இஸ்லாமிய எழுத்தாளர். இக்கட்டுரையில், ஒரு இஸ்லாமியர் இன்றைய சூழலில் எவ்வாறு தன் மதத்தைப் பற்றிய புரிதல் கொள்ள வேண்டும் ஒரு புதிய பார்வையைக் கொடுத்துள்ளார். மறுப்புகளை விடவும் விவாதங்கள் புதிய பாதையில் எப்படித் தொடரவேண்டும் என்று கூறியுள்ளார்.

அக்கட்டுரையில் எனக்குப் பிடித்த அந்த கடைசிப் பத்தியை மட்டும் இங்கு இடுகிறேன்:

Let’s face it; there are verses in the Koran that justify violence. The “hard truth that Islam does permit the use of violence,” as Mr. Butt* points out, must be recognised by Muslims. When Islam was in its infancy and battling against non-believers violence was deemed legitimate to put them down. Today, when it is the world’s second largest religion with more than one billion followers around the world and still growing that context has lost its relevance. Yet, jihadi groups, pursuing their madcap scheme of establishing Dar-ul-Islam (the Land of Islam), are using these passages to incite impressionable Muslim youths. Yet there is no sign of a debate in the community beyond easy platitudes, and it remains in denial.

(கோடிட்ட பகுதி என் கடிதத்தில் மேற்கோளிடப்பட்டது.)

*Hasaan Butt is a reformed British extremist,quoted much in this article.

9 comments:

Thekkikattan|தெகா said...

அட அப்படீங்களா தருமி. அது ரொம்பத் தவறாச்சே அப்படி வார்த்தைகளை மிகைப் படுத்தி Edit பண்றது.

எதுக்கும் இனிமே "தி ஹிண்டு"க்கு அனுப்புற கடிதங்களை பார்த்தே அனுப்புங்க. அந்த மக்கள் எதுவும் உங்க வலைப் பக்கங்களை படிப்பாங்களோ...

சிவபாலன் said...

குறைப்பதும் மிகைப்படுத்துதலும் ஒரு பெரிய பத்திரிக்கைக்கு அழகல்ல.

அப்படி என்றால் ஒவ்வொரு செய்திக்கும் விமர்சனம் எழத்தான் செய்யும். அதை சமாளிப்பது போல் தேர்தெடுக்கப்பட்ட வாசகர் கடிதங்களையும் அப்படியே பிரசிப்பதுதான் சரி. அதனால் வரும் விமர்சனங்களை எதிர்கொள்ள பத்திரிக்கை தயராக இருக்கவேண்டும். அதுதான் The HIndu போன்ற பத்திரிக்கைகளின் கடமைகளில் ஒன்று.

செய்வார்களா?

-/பெயரிலி. said...

Good Post

The Hindu பாரம்பரியம் போன்ற கனிந்த மரத்திலேயிருந்து இப்படியான வெளிக்கண்களுக்கு உடனடியே பழுது தோன்ற முடியாத புழுப்பட்ட கனிகள் விழுவதொன்றும் ஆச்சரியமில்லையே, தருமி ஐயா. கொஞ்சம் நுணுக்கமாகப் பார்க்கும்போதுதான் அலங்காரங்களுக்கு அடியிலேயிருக்கும் அலங்கோலங்கள் தெரியும்.

நீங்கள் உங்கள் சொந்தப்பெயரிலே எழுதியதனாலேதான் இதுவேனும் வந்தது. இந்தியாவிலேயிருந்து The Hindu ஆசிரியருக்குக் கடிதம் எழுதியவர்களின் பெயர்களைக் கொஞ்சம் நுணுக்கமாகப் பார்த்தபோது எனக்குத் தோன்றியது:
அப்பெயர்
1. Gopalan, Ramasubbu என்பதுபோல இருக்கும்,
2. படித்தமட்ட கிருஸ்துவர், முஸ்லீம், ஆங்கிலோ இந்தியராகவிருக்கும், அல்லது
3. தமிழ்நாட்டுக்கு அப்பாலிருந்து எழுதும் குப்தா, பஜ்ஜி, மேத்தா, மெத்தை என்றிருக்கும்.

மற்றவர்களின் கடிதங்கள் பிரசுரிக்கப்படவேண்டுமானால், யூஎஸ், யூகே இலிருந்து மின்னஞ்சல்களூடாகப் போகவேண்டும் :-)

இப்பின்னூட்டத்தை கல்லெறி என்று கருதாவிட்டால்மட்டுமே, நீங்கள் அனுமதிக்கவும்.

நன்றி.

-/பெயரிலி. said...

18/July/2007 அன்று உங்களின் The Hindu கடிதத்தினையும் இணைத்துவிடுவோமே?

Debate or denial?
The article “Debate or denial: the Muslim dilemma” (July 17) calls a spade a spade. But will the fundamentalists accept that violence was deemed legitimate when Islam was in its infancy and battling against non-believers, and that it is no longer relevant? The problem arises when people insist that words in religious texts should not even be interpreted, let alone changed.
G. Sam George,
Madurai

SnackDragon said...

தருமி அய்யா

இந்தக் கேள்வியையும்/கண்டனத்தையும் எழுதி கேட்கமுடியுமா எடிட்டரை?
பதில் வரவில்லையெனில் பதிவு செய்யலாம்

Kannabiran, Ravi Shankar (KRS) said...

தருமி ஐயா.

The Hindu செய்தது தவறான முன்னுதாரணம்! அவர்கள் பதிப்பிக்கிற பத்திகளை எடிட் செய்ய ஆசிரியருக்கு உரிமை உண்டு என்று டிஸ்கி போட்டு விடுவார்கள்! ஆனால் அது வாசகர் கடிதங்களுக்குப் பொருந்துமா என்று நீங்கள் கட்டாயம் கேட்க வேண்டும்!

குறைந்த பட்சம், அப்படிச் செய்திருந்தால், உங்களுக்குத் தகவலாவது சொல்லியிருக்க வேண்டும்! செய்தார்களா?

தவறான செய்திகளுக்கு வருத்தம் தெரிவிக்கும் ஆசிரியர், இது போன்ற குறைபாடுகளுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்? நீங்கள் சொல்லாத செய்திக்கு எவரேனும் தங்களைக் கடிந்து கொண்டால், அதற்கு அவர் பொறுப்பு ஏற்பாரா?

உங்கள் எதிர்ப்பைக் கட்டாயம் அவர்களிடமே, பதிவு செய்யுங்கள் தருமி சார்! என்ன தான் பதில் வருகிறது பார்க்கலாம்!

தருமி said...

தெக்ஸ், சிவபாலன், பெயரிலி, KRS,

அனைவருக்கும் என் நன்றி.

என் கடிதம் 'எடிட்' செய்யப் பட்ட வகையில் இரண்டு பெருமாற்றங்களை அடைந்து விட்டதாக நினைக்கின்றேன்.
ஒன்று, ஏற்கெனவே சொன்னது போல் நான் பயன்படுத்தாத சொல் கையாளப் பட்டுள்ளது.
இரண்டாவதாக, அக்கட்டுரையின் ஆசிரியர், ஹாசன் சரூர் சொன்ன வார்த்தைகள் ("When Islam was in its infancy and battling against non-believers violence was deemed legitimate.." ) என் சொந்த வார்த்தைகளாக மாற்றப் பட்டு விட்டன. அதாவது, The author's words have been put into my mouth!

நேற்றே (18.07.'07)இந்து ஆசிரியருக்கு இப்பதிவின் தொடுப்பை அனுப்பியுள்ளேன். இதுவரை பதில் ஏதுமில்லை.


மதங்களைப் பற்றிய என் கருத்துக்களில் இரு முக்கிய கருத்துக்கள்:
1. NO RELIGION IS UNIVERSAL. எந்த சமயமுமே உலகம் தழுவிய சமயமாக இல்லவே இல்லை.

2. எல்லா வேத நூல்களில் சொல்லப்பட்டவைகளும் எக்காலத்துக்கும், எல்லோருக்கும் பொருத்தமானதாக இருப்பதில்லை.

இதில் இந்த இரண்டாவது கருத்து இக்கட்டுரையின் முக்கிய மய்யப் புள்ளியாக இருந்தமையாலேயே எனக்கு மிகவும் பிடித்துப் போயிற்று; மிக நியாயமான வாதமாகவும் தோன்றுகிறது. இக்கடிதத்தை நான் இந்துவுக்கு எழுதியமைக்கும், இங்கு அதைப் பதிந்ததற்கும் முக்கிய காரணம் இதுவே.

ஆனால், இப்போதோ இந்து ஆசிரியரின் மட்டுறுத்தல் (?) மட்டுமே பேசு பொருளாயிற்று.

தருமி said...

ZuuBeeDuuBee,
எடிட்டருக்கு எழுதியுள்ளேன்.
நன்றி.

பேரு ரொம்பவே நல்லா இருக்கு. அடிக்கடி வந்து போய்க்கிட்டு இருங்க.

தருமி said...

பெயரிலி,
//1. Gopalan, Ramasubbu என்பதுபோல இருக்கும்,
2. படித்தமட்ட கிருஸ்துவர், முஸ்லீம், ஆங்கிலோ இந்தியராகவிருக்கும், ..//

அதாவது religious MONORITY (நீங்கள் சொல்லும் இந்து மதத்தைச் சேர்த்து !) எழுதினால் மட்டுமே இந்துவில் இடம் கிடைக்கும் என்று சொல்கிறீர்களோ?

Post a Comment