Saturday, March 07, 2009

298. கடவுள் என்றொரு மாயை --- 1

*

தொடர்புடைய ஏனைய பதிவுகள்:

298. கடவுள் என்றொரு மாயை ... 1
300. கடவுள் என்றொரு மாயை ... 2
303. கடவுள் என்றொரு மாயை ... 3
305. கடவுள் என்றொரு மாயை ... 4
306. கடவுள் என்றொரு மாயை ... 5
309. கடவுள் என்றொரு மாயை ... 6
317. கடவுள் என்றொரு மாயை ... 7
330. கடவுள் என்றொரு மாயை ... 8
339. கடவுள் என்றொரு மாயை ... 9
344. கடவுள் என்றொரு மாயை ... 10
346. கடவுள் என்றொரு மாயை ... 11
347. கடவுள் என்றொரு மாயை ... 12


*


கடவுள் என்றொரு மாயை


THE GOD DELUSION


*


*


RICHARD DAWKINS
First Mariner Books edition 2008


According to the dictionary supplied with Microsoft Word: delusion = a persistent false belief held in the face of strong contradictory evidence, especially as a symptom of psychiatric disorder" (pp28)


delusion: தவறு என நிரூபிக்கப்பட்ட போதும் தொடர்ந்து அவைகளை நம்புதல்; ஒரு மனநோய்க்கான அறிகுறி.



இப்போது வாசித்துக் கொண்டிருக்கும் புத்தகம் இது. வாசிக்க ஆரம்பித்ததுமே மிகவும் பிடித்துப் போனது. இருக்காதா, பின்னே! நம்ம 'சைடு' ஆளாச்சே. ஆரம்பித்திலிருந்தே நிறைய கருத்துக்கள் பிடித்துப் போக, அதிலும் அவர் ஒன்று சொல்கிறார்: இப்போதைய உலகத்தில் வெளியே தெரிவதைவிடவும் நிறைய பேர் கடவுள் மறுப்பாளர்களாகத்தான் இருக்கிறார்கள்.(பக்:26) ஆனாலும் தனிப்பட்ட காரணங்களாலும், சமூகக் காரணிகளாலும் இதில் பல பேர் வெளிப்படையாக தங்கள் கருத்தை (தங்களுக்கே கூட) காண்பித்துக் கொள்வதில்லை. இப்படி இருக்கிற ஆளுககிட்ட இந்த நூல் சொல்ற சேதிகளை பண்டமாற்று செய்துகொள்ள வேண்டுமென்ற ஆவலில் இந்தத் தொடர் பதிவுகளை இட நினைத்துள்ளேன்.

அவ்வப்போது, அங்கங்கே பிடிக்கிற இடங்களை தமிழ்ப்படுத்தி இங்கு இடலாமென ஆவல். சொல்கின்ற கருத்துக்கள் எல்லாமே ஆசிரியர் ரிச்சர்ட் டாக்கின்ஸின் கருத்துக்களாகவே இருக்கும். நான் ஏதாவது சொல்ல ஆசைப்பட்டால் அதைக் கருப்பில்லாத வேறு வண்ணத்தில் தருவதாக உத்தேசம். அப்போதுதானே கேள்வி-பதிலுக்கும் வழியிருக்கும்.

==========================================

இனி வருபவை அப்புத்தகத்தில் நான் கண்டெடுத்த முத்துக்கள்:

=========================================

ROBERT M. PIRSIG (Author of ZEN AND THE ART OF MOTORCYCLE MAINTENANCE:

WHEN ONE PERSON SUFFERS FROM A DELUSION, IT IS CALLED INSANITY. WHEN MANY PEOPLE SUFFER FROM A DELUSION IT IS CALLED RELIGION. (pp 28)

புரிஞ்சிருக்குமே; அதான் தமிழில் சொல்லலை!!

========================================



ஐன்ஸ்டீன் கூற்றுக்களில் சில:

* நான் கடவுள் நம்பிக்கையற்ற, ஆனால் ஓர் ஆழமான ஆன்மீகவாதி. இது ஒரு புதுவகையான மதம்தான். (I am a deeply religious nonbeliever. This is somewhat new kind of religion.)

* கடவுள் என்னும் கோட்பாடு எனக்கு ஏற்புடைத்ததல்ல; அது அறிவுக்குப் புறம்பானது.

* இயற்கைக்கு ஏதோ ஒரு குறிக்கோளோ அர்த்தமோ இருப்பதாக நான் நினைக்கவில்லை. இயற்கையின், இந்தப் பிரபஞ்சத்தின் பிரமாண்டத்தையும், அதில் இன்னும் நம் அறிவுக்கு எட்டாதிருக்கும் அறிவியல் உண்மைகளையும் நினைத்து, அறிவுள்ள எவனும் தன்னை மிகவும் அற்பமான ஒன்றாக உணரவேண்டும்.இதுவே உண்மையான சமயச் சார்பான சிந்தனையாகும். இந்த சமய உணர்வுக்கும் மதங்கள் பேசும் இறைத்தன்மைக்கும் ஏதும் தொடர்பில்லை. (pp 36)


ஐன்ஸ்டீனின் மத மறுப்பு அறிக்கைகளுக்குப் பிறகு அவரைக் கண்டித்து பலரும் எழுதியும் பேசியும் வந்தனர். எல்லா பெரிய மனிதர்களையும் போலவே ஐன்ஸ்டீனும் கடைசிக் காலத்தில் கிறித்துவரானார் என்ற புரட்டுச் செய்திகளும் அவர் காலத்திற்குப் பிறகு பரப்பப்பட்டன!
====================================


CARL SAGAN in his book, "PALE BLUE DOT":

எந்த ஒரு பெரிய மதமாவது அறிவியல் உண்மைகளை அறிந்து, பின், "அடே! நாம் நினைத்தவைகளை விடவும் இந்தப் பிரபஞ்சம் பெரியது; நம் நபி / தூதுவர் / (புத்தகத்தில்: prophet) சொன்னதைவிடவும் மகத்தானது; பிரமிப்பூட்டுவது" என்று ஏன் சொல்வதில்லை? அதற்குப் பதிலாக, "இல்லை .. இல்லை ..! என் கடவுள் அப்படி ஒன்றும் பிரமாண்டமானவரில்லை; (அவர் இந்த உலகுக்கானவர் மட்டுமே)" என்றுதான் சொல்கிறது. (நம் மதங்கள் யாவுமே பிரபஞ்சம் எவ்வளவு பெரியது என்பதை நினைவில் கொள்வதில்லை; மனிதகுலம், இந்த நமது உலகம் இதைத்தாண்டி யோசிப்பதில்லை.) (pp 33)

=====================================
DOUGLAS ADAMS:

இந்த தடவை எந்தக் கட்சிக்கு ஓட்டுப் போடணும் அல்லது போடக்கூடாது; நீ ஓட்டு போட்டது சரியான முடிவல்ல - இப்படி எதைப் பற்றியும் நாம் விவாதிக்கலாம். ஆனால் (sabath day for jews)சனிக்கிழமை நீ எந்த வேலையும் செய்யக்கூடாது என்றால் அதைப்பற்றி விவாதிக்கக் கூடாது; ஏனெனில், அது மதம் தொடர்பானது; கேள்வி கேட்காமல் அதை மதிப்பதே சரி! என்பது எவ்விதத்தில் சரி.

சமயம் தொடர்பான நம்பிக்கைகளைக் கேள்வி கேட்கக்கூடாது என்று நாம் நமக்குள் ஒரு வழக்கத்தைக் கைக்கொண்டிருக்கிறோம் என்பதைத் தவிரவும், பகுத்தறிவோடு சிந்தித்தால் எல்லாவற்றையும் போல் இந்த மத நம்பிக்கைகளையும் நாம் ஏன் வெளிப்படையாக விவாதிக்கக்கூடாது? (pp 43)
=====================================

மதம் என்றால் சட்டமும் வளையும்.

மதம் என்றாலே சும்மா அதிருதில்ல ...!

2006-ம் ஆண்டு, பிப். 21-ம் தேதி வழக்கு ஒன்று அமெரிக்க உச்ச நீதி மன்றத்திற்கு வந்தது.
Centro Espiritia Beneficiente Uniao do Vegetal என்ற ஒரு கிறித்துவ மதக் குழு தடை செய்யப்பட்ட dimethyltryptamine என்ற வேதிப்பொருள் அடங்கிய hoasca tea-யைக் குடித்தால்தான் தங்கள் கடவுளோடு தாங்கள் ஐக்கியமாக முடியும் என்றும் அதனால் அந்த டீயை அருந்த தங்களுக்கு உரிமை வேண்டும் என்று ஒரு வழக்குத் தொடர்ந்தனர். மதத்தின் பெயரே இங்கு ஒரு துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தப்பட்டது. வழக்கும் வென்றது! மதம் என்னும் தாயத்து செய்த மாயம் அது!

2004-ம் ஆண்டு ஜேம்ஸ் நிக்சன் என்ற மாணவன் ஒரு டி-சட்டையைத் தன் பள்ளிக்கு அணிந்து வந்தான். அதில், "ஓரினச்சேர்க்கை பாவம்; இஸ்லாம் ஒரு பொய்; கருச்சிதைவு கொலைக்குச் சமம்" என்ற வார்த்தைகள் அச்சிடப்பட்டிருந்தன. பள்ளி அவன் அந்தச் சட்டை அணிவதை அனுமதிக்க மறுத்தது. பெற்றோர்கள் வழக்கு மன்றத்திற்குச் சென்றனர். அவர்கள் கருத்துச் சுதந்திரம், பேச்சு சுதந்திரம் என்ற அடிப்படையில் வழக்கை நடத்தவில்லை. பதிலாக, "மதச் சுதந்திரம்" என்பதே வழக்கின் அடிப்படையாக எடுக்கப் பட்டது; வழக்கும் வெற்றி கண்டது.

இதுபோல் பல வழக்குகள். அதிலும் ஓரினச்சேர்க்கைக்கு எதிர்த்து பல வழக்குகள். இந்த வழக்குகள் எல்லாமே 'நான் கிறித்துவனாக இருப்பதால் எனக்கு அடுத்தவனின் தனிப்பட்ட செயல்களிலும்கூட மூக்கை நுழைக்க உரிமையுள்ளது' என்ற நினைப்பில்தான் தொடுக்கப் பட்டன; வெற்றியும் பெற்றன. (pp44-46)



*

இன்னும் வரும் ...





*

311 comments:

«Oldest   ‹Older   201 – 311 of 311
வால்பையன் said...

//அன்றும் இன்றும் முஸ்லிம்கள் இந்தியாவில் சிறுபான்மையினர்தான்.//

100 கோடிக்கு மேல் மக்கள் தொகை உள்ள நாட்டில் நீங்கள் சிறுபான்மையினர் என்று வருத்தம் கொள்கிறீர்கள்.
கஷ்டம் தான்!

இந்தியாவில் இருக்கும் முஸ்லீம்களின் எண்ணிக்கை பாகிஸ்தானில் கூட கிடையாது!

பாகிஸ்தானில் இந்துக்களோ கிருஸ்தவர்களோ 5 சதவிகிதம் கூட கிடையாது!

வோட்டாண்டி said...

//உயிர் என்றால் என்ன ? ஆத்மா என்றால் என்ன ? சொல்லுங்கள் !! உயிரை யார் அளிக்கிறார் ? டாக்டரா ? உயிர் எங்கே போகிறது ? உயிர் எப்படிச் சிசுக்குள் நுழைகிறது ?//

இந்த வாதத்த ஏற்கனவே நாங்க பல முறை கேட்டாச்சு .. உடல் குள்ள உயிர் எப்படி போது..உயிர் பிரிந்த உடன் மீண்டும் ஏன் அந்த உடலினுள் உயிரை செலுத்த முடியவில்லை.. (அந்த உயிர் தான் ஆத்மா .அது ஆவியா அலையுதுன்னு சொல்லிட வேண்டியது).. இதெல்லாம் ஏற்கனவே கேட்கப்பட்ட கேள்விகள் தான்..
ஒரு உடல் cell மற்றும் tissues ஆல ஆனது.. ஒரு உடலுக்கு உயிர் இருக்குற மாதிரி ஒவ்வொரு cellukum உயிர் உண்டு.. நீங்கள் உடல்-ஆத்மா என்று பிரித்து பார்ப்பது தான் பிரச்சனையே.. human body is just a machine.. அதுல எதாவது ஒரு part காலி ஆகிட்டா machine காலி..(சில பாகங்களை replace பண்ண முடியும்).. இல்ல அந்த இயந்திரம் கொஞ்சம் கொஞ்சமா பழுதாகி அதன் ஆயுள் முடிந்து விடும்..
அறிவியலால் விளக்க முடியாது பல விஷயங்கள் இன்னும் உள்ளன.. அவை சார்ந்த கேள்விகளை எழுப்பி..இதற்க்கு பதில் இல்லை..அங்கு தான் கடவுள் வருகிறார் என்று வாதம் செய்வது ஆத்திகர்களின் வேலை... இதனாலேயே சில கண்டுபிடிப்புகள் தவறு என்று சர்ச்சை எழுப்ப ஒரு கூட்டதோட அலைகிறார்கள். galileova கல்லால் அடித்த பெருமை இந்த கூட்டத்தையே சேரும்..

கோவி.கண்ணன் said...

//சலாஹுத்தீன் said...


திரு. ஜெயபாரதன் தவறாக புரிந்து வைத்திருக்கிறார். சுமார் அரை நூற்றாண்டுகாலமாக மொகலாயர்கள் இந்தியாவின் பெரும் நிலப்பரப்பை ஆண்டிருக்கிறார்கள்.
//

நண்பர் சலாஹுத்தீன், அரை நூற்றாண்டுகள் என்றால் வெறும் 50 ஆண்டுகள் தான். 5 நூற்றாண்டு என்பதற்கு பதில் அரை என்று போட்டு இருப்பதாக கருதுகிறேன், சரியா ?

கோவி.கண்ணன் said...

//Jayabarathan said...

நண்பரே கோவி. கண்ணன்,

///ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது என்பதும் தத்துவம் தான். படைப்பு என்று நீங்கள் எதைக் குறிப்பிடுகிறீர்கள் ? ஒரு இயக்கம் அது சிறிய இயக்கமாக இருந்தாலும் சரி பேரியக்கமாக இருந்தாலும் சரி, அதில் நடப்பது (நுட்பமான மாற்றம்) நம் ஆறாவது அறிவுக்கு இன்னும் அது பற்றிய அறிதல் எட்டவில்லை///

சரியாகச் சொல்லிவிட்டீர்கள். ஏ-1 பதில்.
++++++++++++++


//1. சிசு தாய் வயிற்றில் எப்படி உண்டாகிறது ? எப்படி வளர்கிறது ?

தாயின் கர்ப்பப் பையில் தாயின் கட்டுப்பாடின்றித் தானாக நிகழ்கிறது. தாயின் ஆத்மா அல்லது உயிர் சிசுவை உண்டாக்குகிறது, ஊட்டுகிறது. 10 மாத டைமர் இயங்கிப் பிள்ளையாகப் பிறக்கிறது. தாயின் ஆத்மா (உயிர்) இல்லாவிட்டால் சிசு உண்டாகாது. செத்தவள் வயிற்றில் ஏன் சிசு உண்டாவதில்லை ?
//

ஆக எதுவும் தானாகவே உண்டாகவோ, படைக்கப் படவே இல்லை, ஒன்றின் தொடர்ச்சியாக மற்றொன்று சூழல் பொருத்து தன்னைப் பெருக்கிக் கொள்கிறது என்று சொல்லலாம் என்பதே சரி. அனுக்கள் பெருகுவதும் இப்படித்தானே ?


//உயிர் என்றால் என்ன ? ஆத்மா என்றால் என்ன ? சொல்லுங்கள் !! உயிரை யார் அளிக்கிறார் ? டாக்டரா ? உயிர் எங்கே போகிறது ? உயிர் எப்படிச் சிசுக்குள் நுழைகிறது ? //

ஜெயபாரதன் ஐயா,


மருத்துவர் உயிரை அளிக்க மாட்டார்கள். எடுப்பார்கள் :) ரிலாக்ஸ் !



உயிர் / ஆத்மா ? - இறப்பு என்றால் என்ன ? உடலைவிட்டு ஆன்மா பிரிவதா ? உயிர் பிரிவதா ?



மூளை அணுக்கள் செயல் இழக்கும் போது உடலை இயக்கும் ஆணைகளை உருவாக்க முடியாது, படிப்படியாக இரத்த ஓட்டம் குறைந்து உடல் செயல்படாமல் போய்விடும், அதற்கும் முன் மூளைச் சாவு கேஸ்களில் உறுப்பு தானம் விருப்பம் இருந்தால் பெறப்படுகிறது. உயிர் / ஆன்மா என்பதெல்லாம் இறை நம்பிக்கையில் ஒரு தியரி தான். உயிர் / ஆன்மா, அதற்கான வடிவம், எடை, நிறமெல்லாம் உங்களால் சொல்ல முடியுமா ? ஆன்மா உடலின் எந்த பகுதியில் இயங்குகிறது ? அது முளையா ? மூளையை செயல்படுத்துகிறதா ? உயிர் / ஆன்மா உடலில் சேருவதற்கு முன், இறந்த பின் எங்கே செல்கிறது, இது பற்றி மதங்கள் எதுவும் தெரிவித்திருக்கிறதா ? அவ்வாறு தெரிவித்ததில் அனைத்து மதங்களும் ஒத்தக் கருத்தை எட்டி இருக்கிறதா ? எந்த மதம் சொல்வது சரியான கருத்து ? இல்லை இல்லை நீங்கள் இதற்கு மட்டும் மதக் கருத்துக்களை நம்பவில்லை, என்றால் உங்களால் நான் மேலே கேட்ட வற்றைப் பற்றி விளக்கமாகச் பதில் சொல்ல முடியுமா ?

இப்படி நான் கேட்கும் போதெல்லம பக்தியாளர்கள் சொல்லுவது 'கண்டவர் விண்டில்லை' என்பது மட்டுமே. இந்தக் கூற்று உண்மையாக இருக்க முடியுமா ? அதாவது அது பற்றி அறிந்தவரால் சொல்ல இயலாது என்பது பொருளாம். அறிந்தவர் சொல்ல இயலாது என்று மட்டுமே சொல்வது தான் விளக்கமா ? :)

ஆன்மா இருக்கிறது என்பது வெறும் நம்பிக்கைதான், சில மதங்களில் அது கூட கிடையாது, எனவே அதை இறை நம்பிக்கையாளர்களின் பொதுவான நம்பிக்கையாக கொண்டு வராதீர்கள், உங்களுக்கு மறுபிறவியில் நம்பிக்கை இருக்கும், இஸ்லாமியர்களுக்கு கிடையாது. இருவருமே இறை நம்பிக்கையாளர்கள் தான். யாருடைய நம்பிக்கை சரி ? உங்களைக் கேட்டால் உங்கள் நம்பிக்கைதான் சரி என்று சொல்லுவீர்கள், அவர்களுக்கு அவர்களது.



//2. டெஸ்ட் டியுப் பேபி எப்படி உண்டாகிறது ? டெஸ்டு டியூப் பேபி டாக்டரின் பையிலோ, கையிலோ, ஆய்வகத்திலோ உண்டாக வில்லை. //



நான் முந்தைய பின்னூட்டதிலும் சொல்லி இருக்கிறேன். பொருள்களின் சேர்க்கை வேறொரு ஒரு பொருளை உருவாக்கும், இது உயிருள்ளது, உயிரற்றது இரண்டிற்குமே பொருந்தும்.



நோய்கள் வருவதும் மருந்துகளால் சரியாவதும் கூட இப்படித்தான்.

//அதற்கு முதலில்

1. தாயின் கருப்பை தேவை

2. தாயின் ஆத்மா அல்லது உயிர் தேவை

அன்னையின் கட்டுப்பாடில் நிச்சயம் டெஸ்ட் டியூப் சிசு உண்டாவில்லை ! M.D. படித்த டாக்டர் டெஸ்ட் டியூபில் சிசுவை உண்டாக்க வில்லை.


சி. ஜெயபாரதன்//

படைக்கப்பட்டது என்று சொல்வது சரி இல்லை, ஒன்று இல்லாமல் ஒன்றை படைக்க முடியாமா ? தாயின் கர்ப பை இன்றி கருவை உண்டாக்க முடியுமா ? கருமுட்டையும் விந்தனும் சேர்ந்தால் கருவாக மாற்றம் அடைகிறது, வளர்ச்சியில் துடிப்பு உண்டாகிறது, இதயம் நான்கு வாரங்களுக்கு பிறகே ஏற்படும். ஒரு நல்ல விதையை எடுத்து பதமான ஈர மண்ணில் புதைத்து வையுங்கள் அதுவாக முளைக்கும். விதை முளைக்க சூழல்தான் முக்கியம், மற்ற நேரங்களில் விதை விதையாகத்தான் இருக்கும். வெறும் கிழங்கு வகை செடிகள் கூட உண்டு, அதற்கு விதையெல்லாம் தேவை இல்லை. கிளையை வெட்டி வைத்தால் அதுவாகவே கிளைக்கும். செடி கொடிக்களுக்கு ஆன்மா இல்லை என்று சொல்லிவிடாதீர்கள். அறிவியல் படி அவற்றிற்கும் உயிர் உண்டாமே :)

கோவி.கண்ணன் said...

//பிரபஞ்ச இயக்கங்கள் எல்லாம் சுற்றியக்கம் (Cyclic Process) என்று உறுதியாகச் சொல்ல முடியாது. சுற்றியக்கமில்லாத ஒருபோக்கு இயக்கம் (Uni-directional Process), (Open-ended Process) நிறுத்தம் அடையும் இயக்கம் (Culminating Process), மீளா இயக்கம் (Irreversible Process) போன்ற பல்வேறு இயக்கங்களும் உள்ளன.

ஓர் உதாரணம்.

"எண்டிராப்பி" (Entropy) என்னும் "வெப்பத் தளர்ச்சி" (பிரபஞ்ச வெப்ப இழப்பு) ஒருபோக்கு இயக்கம். அது மீளா இயக்கமும் ஆகும்.


சி. ஜெயபாரதன்//

இதுபற்றி அறிந்தவர் என்ற முறையில் நீங்கள் சொல்லி இருக்கிறீர்கள் என்பதால் அதை ஒரு தகவலாக எடுத்துக் கொள்கிறேன். சுற்றியக்கம் இல்லாத மற்ற இயக்கமெல்லாம் சுற்றியக்கத்தில் இருந்து கிளைப்பவைதான். அதாவது சுற்றியக்கத்தின் எதோ ஒரு நிகழ்வில் அவை அங்கமாகும் அல்லது அடங்கும்

கோவி.கண்ணன் said...

//Jayabarathan said...

Definition of God.

All the things a Man could see are REAL. Real things can come only from a real source. As per the Cause & Effect Theory all the real creations could only be created by a Real Cosmic Designer.

S. Jayabarathan//

அதாவது நம் அறிவுக்குப் பட்டது எல்லாம் ரியல், அறிவுக்கு எட்டாதது கடவுள் செயல் ! என்கிறீர்கள் :)
வினை எதிரிவினை இயற்பியல் / வேதியல் என்பவை கூற்று, ஒன்றுக்கொன்று தொடர்புடையது மட்டுமின்றி பிரிக்கவும் முடியாது, வினைவும் விளைவும் இன்றி எந்த செயலும் இல்லை.

எல்லாம் கடவுள் செயல் என்று நம்பினால் அந்த செயலுக்கு காலம் வகுக்க வேண்டும், இந்த காலத்திற்கு பிறகே இவ்வாறு நடந்தது, பிரபஞ்சம் படைக்கப்பட்டது என்று சொல்லவதாக பொருள். கடவுள் செயல் என்று சொல்லி காலமும் வகுத்துவிட்டால், அந்த குறிப்பிட்ட காலத்திற்கு முன்பு கடவுள் தூங்கிக் கொண்டு இருந்தாரா என்ற கேள்விவரும், ஆம் என்று சொன்னால் எவ்வளவு மில்லியன்/டிரில்லியன் ஒளி ஆண்டுகளா தூங்கினார் ? அப்படி தூங்கும் முன்பு இதே படைத்துவிட்டு அசதியில் தூங்கினாரா ? என்ற கேள்வியெல்லாம் வரும்

கடவுள் நம்பிக்கை ரொம்ப சிக்கலாக இருக்கு இல்லையா ? :)

கோவி.கண்ணன் said...

//Jayabarathan said...

Definition of God.

All the things a Man could see are REAL. Real things can come only from a real source. As per the Cause & Effect Theory all the real creations could only be created by a Real Cosmic Designer.

S. Jayabarathan//

அதாவது நம் அறிவுக்குப் பட்டது எல்லாம் ரியல், அறிவுக்கு எட்டாதது கடவுள் செயல் ! என்கிறீர்கள் :)
வினை எதிரிவினை இயற்பியல் / வேதியல் என்பவை கூற்று, ஒன்றுக்கொன்று தொடர்புடையது மட்டுமின்றி பிரிக்கவும் முடியாது, வினைவும் விளைவும் இன்றி எந்த செயலும் இல்லை.

எல்லாம் கடவுள் செயல் என்று நம்பினால் அந்த செயலுக்கு காலம் வகுக்க வேண்டும், இந்த காலத்திற்கு பிறகே இவ்வாறு நடந்தது, பிரபஞ்சம் படைக்கப்பட்டது என்று சொல்லவதாக பொருள். கடவுள் செயல் என்று சொல்லி காலமும் வகுத்துவிட்டால், அந்த குறிப்பிட்ட காலத்திற்கு முன்பு கடவுள் தூங்கிக் கொண்டு இருந்தாரா என்ற கேள்விவரும், ஆம் என்று சொன்னால் எவ்வளவு ஒளி ஆண்டுகளா தூங்கினார் ? அப்படி தூங்கும் முன்பு இதே போல் படைத்துவிட்டு அசதியில் தூங்கினாரா ? என்ற கேள்வியெல்லாம் வரும்

கடவுள் நம்பிக்கை ரொம்ப சிக்கலாக இருக்கு இல்லையா ? :)

Salahuddin said...

//நண்பர் சலாஹுத்தீன், அரை நூற்றாண்டுகள் என்றால் வெறும் 50 ஆண்டுகள் தான். 5 நூற்றாண்டு என்பதற்கு பதில் அரை என்று போட்டு இருப்பதாக கருதுகிறேன், சரியா ?- கோவி. கண்ணன்//

தவற்றை சுட்டிக் காட்டியதற்கு நன்றி கோவியாரே. 5 நூற்றாண்டுகள் என்பதைத்தான் அரை நூற்றாண்டு என்று எழுதிவிட்டேன்.

//100 கோடிக்கு மேல் மக்கள் தொகை உள்ள நாட்டில் நீங்கள் சிறுபான்மையினர் என்று வருத்தம் கொள்கிறீர்கள்.
கஷ்டம் தான்! - வால் பையன்//

'பிரிட்டிஷ்காரர்கள் வரவில்லையென்றால் இந்தியா கஜினிஸ்தானாக மாறியிருக்கும்' என்று ஜெயபாரதன் சொன்னதை மறுப்பதற்காகவே அப்படி குறிப்பிட்டேன். முஸ்லிம்களின் ஆட்சியின் கீழ் இந்தியா 5 நூற்றாண்டுகள் இருந்திருந்தும் இது 'அரை கஜினிஸ்தானாக' கூட மாறவில்லை. பிரிட்டிஷ்காரர்கள் வராமல் இருந்திருந்தாலும் இந்திய முஸ்லிம் மக்கள் தொகையில் பெருத்த மாறுதல் எதுவும் ஏற்பட்டிருக்காது என்பதுதான் யதார்த்தம்.

தருமி said...

//மிகச் சிறந்த பதில் நண்பரே//

நன்றி

வோட்டாண்டி said...

இறந்தவுடன் ஆன்மா என்ற ஒன்று உடலை பிரிவதாக வைத்து கொள்வோம்.. இப்பொழுது நாய், பூனை, பன்னி இவற்றின் ஆன்மாவும் உடலை பிரிந்து உலாத்துவதாக வைத்து கொள்வோம்.. மீண்டும் செடி, கொடி, நுண்கிருமிகள், இவற்றின் ஆன்மாவும் உலாத்துவதாக வைத்து கொள்வோம்.. ஆன்மாகளின் எண்ணிக்கை..மொத்த உயிரனங்களின் தொகையை போல அதிகரித்து கொண்டே போகவேண்டும்.. உயிரினங்கள் அழியும் அனால் ஆன்மா அழியாது(நான் சொல்லல..சில மதங்கள் சொல்றது ).. அப்படி என்றால் இவ்வுலகில் தோன்றி மறைந்த அனைத்து உயிர்களின் ஆன்மாக்களும் பூமியை சுற்றி தான் உலாத்த வேண்டும்..
இது சாத்தியமா?? அவ்வளவு எடம் பூமில இருக்கா ??

Jayabarathan said...

நண்பரே

உயிர் வேறு. ஆன்மா வேறு. ஆங்கிலத்தில் உயிர் என்பத‌ற்கு ஏற்ற சொல் கூடக் கிடையாது. ஆன்மா ஓர் எரியும் அணையா விளக்கு. மற்ற மெழுகுவர்த்திகளை ஏற்றி வைக்கும் தீ.

ஜெயபாரதன்

Jayabarathan said...

ஓரிணைப்பு

நண்பரே

உயிர் வேறு. ஆன்மா வேறு. ஆங்கிலத்தில் உயிர் என்பத‌ற்கு ஏற்ற சொல் கூடக் கிடையாது. ஆன்மா ஓர் எரியும் அணையா விளக்கு. மற்ற மெழுகுவர்த்திகளை ஏற்றி வைக்கும் தீ.

தாயின் வயிற்றில் உண்டாகும் சிசுவுக்குத் தாயின் ஆன்மாவே உயிர் ஊட்டுகிறது.

ஜெயபாரதன்

ஓகை said...

தருமி அவர்கள் கவனத்திற்கு:

ஓகை said...

//ஐன்ஸ்டீனின் மேற்கோளுக்கான காரணம் நீங்கள் சொன்னதாகத்தானிருக்கணும். ஆனால் அடுத்த வரியில் //நாத்திகர்களால் விஞ்ஞானிகளாக ஆக முடியுமா என்ற ஐயம் எனக்கிருக்கிறது.// என்று சொல்லியுள்ளீர்கள். இரண்டுமே கொஞ்சம் self contradictory ஆக இல்லையா? ஐன்ஸ்டீனும் ஒரு பெரிய அறிவியல் விஞ்ஞானி தானே. அங்கேயே உங்கள் கேள்விக்கான பதில் கிடைத்து விட்டதே.//

self contradictory வரவில்லையே!. நான் ஐன்ஸ்டினை ஒரு நாத்திகர் என்று நம்பவில்லை. நாத்திகர்களின் கடவுள் விளக்கம் வெட்டு ஒன்று துண்டு இரண்டாக கடவுள் இல்லை என்பதாகவே இருக்கும். கடவுள் இல்லை என்பதை சுற்றி வளைத்து சொல்லமாட்டர்கள். அவர்கள் கடவுள் இல்லை என்று சொல்கிறார்களா என்ற விவாதத்துக்கே இடமிருக்காது. பெரியார் தெள்ளத்தெளிவாக கடவுள் இல்லை என்று சொல்கிறார். ஆனால் ஐன்ஸ்டின் என்ன சொல்கிறார்,

//In 1931 Einstein published an article in the magazine Forum and Century titled, “The World as I See It.” ...

“A knowledge of the existence of something we cannot penetrate, our perceptions of the profoundest reason and the most radiant beauty, which only in their most primitive forms are accessible to our minds it is this knowledge and this emotion that constitute true religiosity; in this sense and in this sense alone, I am a deeply religious man.”...//

இப்படி சொல்பவரை எப்படி நாத்திகராக சேர்த்துக் கொள்வது?

//குறுக்கிக் கூறவேண்டுமானால் ..: to the end of his days Einstein rejected the view of a “personal God” in the Judeo-Christian tradition and continued to embrace the view of that God is a creative mind that manifests Itself in the wonders of nature.//

இப்படிப் பட்டவரை எப்படி நாத்திகராக சேர்த்துக் கொள்வது?

நடராஜன்.

Sunday, April 05, 2009 11:14:00 PM
ஓகை said...

// //நாத்திகர்களின் உலகம் இன்று இப்போதிருக்கும் எல்லாவற்றுடன் முடிந்து போகிறது. // இல்லாத ஒன்றான 'ஆன்மா'வைப் பொறுத்தவரை மட்டும் இது சரி. பிரபஞ்ச உண்மைகளைப் பேசுபவர்களில் யாரும் கடவுள் மறுப்பாளர்கள் இல்லையென்றா சொல்கிறீர்கள்? //

"இல்லாத ஒன்றான ஆன்மா" என்பது உங்கள் திட்டவட்டமான முடிவு, இல்லையா! இப்படி முடிவு செய்துவிட்டால் தேடலக்கு இடமே இல்லை என்று ஆகிவிடுகிறதே. சந்திரசூரியரும் நட்சத்திரங்களும் நம்மைச் சுற்றி வருகிறதை கண்கூடாகக் கண்டபின்னும் பூமிதான் சுற்றுகிறதா என்ற ஆராய்ச்சி தேவையில்லாமல் போய்விடுகிறதே! எந்த முன்முடிவுக்காகவும் ஆராய்ச்சியை நிறுத்துபவனின் உள்ளிருக்கும் விஞ்ஞானி இறந்துவிடுகிறான் அல்லவா? கேள்வியும் தேடலும் பிறப்பிக்கிற விஞ்ஞானி அவை இருக்கும் வரையிலேயே விஞ்ஞானியாக இருக்கிறான் அல்லவா?

பிரபஞ்ச உண்மைகளைப் பேசுபவர்களில் யாரும் கடவுள் அல்லது கடவுள் சார்ந்த எல்லா ஆய்வுகளையும் நிறுத்திவிடலாம் என்று சொல்வார்களா?

நடராஜன்.

Sunday, April 05, 2009 11:36:00 PM
ஓகை said...

//Richard Dawkins-ன் இந்தப் புத்தகத்தில் இதைப் பற்றியும் எழுதியுள்ளார்.

எனக்கு யாரோ அனுப்பித்தந்த ஒரு கட்டுரையின் முழு நோக்கமே உங்கள் கேள்விக்கான பதிலாக இருக்கும். அதை தனியாக save செய்யாமல் விட்டு விட்டேன். இப்போது அதை எனது electronic jungle-ல் காணாமல் போட்டு விட்டேன்.//

எனக்கு உதவியாக இருக்கும். இந்த விஷயத்தில் எனக்கு தேடல் இருக்கிறது.

Sunday, April 05, 2009 11:39:00 PM
ஓகை said...

//இப்போதைய உலகத்தில் வெளியே தெரிவதைவிடவும் நிறைய பேர் கடவுள் மறுப்பாளர்களாகத்தான் இருக்கிறார்கள்.(பக்:26) ஆனாலும் தனிப்பட்ட காரணங்களாலும், சமூகக் காரணிகளாலும் இதில் பல பேர் வெளிப்படையாக தங்கள் கருத்தை (தங்களுக்கே கூட) காண்பித்துக் கொள்வதில்லை.//

கடவுள் மறுப்பாளர்களாகத் தெரியும் பலர் உண்மையில் அப்படியில்லை என்பதைக் கண்டிருக்கிறோம்.

ஆனால் நம்பிக்கையாளர்கள் பலர் நம்பிக்கையாளர்களைப் போல் நடிக்கிறார்கள் என்று இந்தக் கூற்று சொல்கிறது.

நம்பிக்கையாளர்களுக்கு தம் நம்பிக்கையின் மேலுள்ள ஐயங்களையே நம்பிக்கையின்மையாக இக்கூற்று கொள்கிறதோ?

Sunday, April 05, 2009 11:47:00 PM
Jayabarathan said...

நண்பர் தருமி,

ஓகை said...

தருமி அவர்கள் கவனத்திற்கு:

ஓகை said...

//ஐன்ஸ்டீனின் மேற்கோளுக்கான காரணம் நீங்கள் சொன்னதாகத்தானிருக்கணும். ஆனால் அடுத்த வரியில் //நாத்திகர்களால் விஞ்ஞானிகளாக ஆக முடியுமா என்ற ஐயம் எனக்கிருக்கிறது.// என்று சொல்லியுள்ளீர்கள். இரண்டுமே கொஞ்சம் self contradictory ஆக இல்லையா? ஐன்ஸ்டீனும் ஒரு பெரிய அறிவியல் விஞ்ஞானி தானே. அங்கேயே உங்கள் கேள்விக்கான பதில் கிடைத்து விட்டதே.//

self contradictory வரவில்லையே!. நான் ஐன்ஸ்டினை ஒரு நாத்திகர் என்று நம்பவில்லை. நாத்திகர்களின் கடவுள் விளக்கம் வெட்டு ஒன்று துண்டு இரண்டாக கடவுள் இல்லை என்பதாகவே இருக்கும். கடவுள் இல்லை என்பதை சுற்றி வளைத்து சொல்லமாட்டர்கள். அவர்கள் கடவுள் இல்லை என்று சொல்கிறார்களா என்ற விவாதத்துக்கே இடமிருக்காது. பெரியார் தெள்ளத்தெளிவாக கடவுள் இல்லை என்று சொல்கிறார். ஆனால் ஐன்ஸ்டின் என்ன சொல்கிறார்,

//In 1931 Einstein published an article in the magazine Forum and Century titled, “The World as I See It.” ...

“A knowledge of the existence of something we cannot penetrate, our perceptions of the profoundest reason and the most radiant beauty, which only in their most primitive forms are accessible to our minds it is this knowledge and this emotion that constitute true religiosity; in this sense and in this sense alone, I am a deeply religious man.”...//

இப்படி சொல்பவரை எப்படி நாத்திகராக சேர்த்துக் கொள்வது?

//குறுக்கிக் கூறவேண்டுமானால் ..: to the end of his days Einstein rejected the view of a “personal God” in the Judeo-Christian tradition and continued to embrace the view of that God is a creative mind that manifests Itself in the wonders of nature.//

இப்படிப் பட்டவரை எப்படி நாத்திகராக சேர்த்துக் கொள்வது?

நடராஜன்.

Sunday, April 05, 2009 11:14:00 PM
ஓகை said...

// //நாத்திகர்களின் உலகம் இன்று இப்போதிருக்கும் எல்லாவற்றுடன் முடிந்து போகிறது. // இல்லாத ஒன்றான 'ஆன்மா'வைப் பொறுத்தவரை மட்டும் இது சரி. பிரபஞ்ச உண்மைகளைப் பேசுபவர்களில் யாரும் கடவுள் மறுப்பாளர்கள் இல்லையென்றா சொல்கிறீர்கள்? //

"இல்லாத ஒன்றான ஆன்மா" என்பது உங்கள் திட்டவட்டமான முடிவு, இல்லையா! இப்படி முடிவு செய்துவிட்டால் தேடலக்கு இடமே இல்லை என்று ஆகிவிடுகிறதே. சந்திரசூரியரும் நட்சத்திரங்களும் நம்மைச் சுற்றி வருகிறதை கண்கூடாகக் கண்டபின்னும் பூமிதான் சுற்றுகிறதா என்ற ஆராய்ச்சி தேவையில்லாமல் போய்விடுகிறதே! எந்த முன்முடிவுக்காகவும் ஆராய்ச்சியை நிறுத்துபவனின் உள்ளிருக்கும் விஞ்ஞானி இறந்துவிடுகிறான் அல்லவா? கேள்வியும் தேடலும் பிறப்பிக்கிற விஞ்ஞானி அவை இருக்கும் வரையிலேயே விஞ்ஞானியாக இருக்கிறான் அல்லவா?

பிரபஞ்ச உண்மைகளைப் பேசுபவர்களில் யாரும் கடவுள் அல்லது கடவுள் சார்ந்த எல்லா ஆய்வுகளையும் நிறுத்திவிடலாம் என்று சொல்வார்களா?

நடராஜன்.

Sunday, April 05, 2009 11:36:00 PM
ஓகை said...

//Richard Dawkins-ன் இந்தப் புத்தகத்தில் இதைப் பற்றியும் எழுதியுள்ளார்.

எனக்கு யாரோ அனுப்பித்தந்த ஒரு கட்டுரையின் முழு நோக்கமே உங்கள் கேள்விக்கான பதிலாக இருக்கும். அதை தனியாக save செய்யாமல் விட்டு விட்டேன். இப்போது அதை எனது electronic jungle-ல் காணாமல் போட்டு விட்டேன்.//

எனக்கு உதவியாக இருக்கும். இந்த விஷயத்தில் எனக்கு தேடல் இருக்கிறது.

Sunday, April 05, 2009 11:39:00 PM
ஓகை said...

//இப்போதைய உலகத்தில் வெளியே தெரிவதைவிடவும் நிறைய பேர் கடவுள் மறுப்பாளர்களாகத்தான் இருக்கிறார்கள்.(பக்:26) ஆனாலும் தனிப்பட்ட காரணங்களாலும், சமூகக் காரணிகளாலும் இதில் பல பேர் வெளிப்படையாக தங்கள் கருத்தை (தங்களுக்கே கூட) காண்பித்துக் கொள்வதில்லை.//

கடவுள் மறுப்பாளர்களாகத் தெரியும் பலர் உண்மையில் அப்படியில்லை என்பதைக் கண்டிருக்கிறோம்.

ஆனால் நம்பிக்கையாளர்கள் பலர் நம்பிக்கையாளர்களைப் போல் நடிக்கிறார்கள் என்று இந்தக் கூற்று சொல்கிறது.

நம்பிக்கையாளர்களுக்கு தம் நம்பிக்கையின் மேலுள்ள ஐயங்களையே நம்பிக்கையின்மையாக இக்கூற்று கொள்கிறதோ?

Sunday, April 05, 2009 11:47:00 PM
Jayabarathan said...

நண்பர் தருமி,

Jayabarathan said...

நண்பர் சலாஹுத்தீன்

///மொகலாயர்கள் இஸ்லாமை பரப்புவதற்காக இந்தியாவிற்கு வரவில்லை. அவர்கள் ஆட்சியில் இருந்த காலத்திலும் இஸ்லாமை பரப்புவது அவர்கள் நோக்கமாக இருந்ததில்லை. இந்தியாவை ஆண்ட மற்ற மன்னர்களைப் போல இவர்களின் நோக்கமும் நாடு பிடிப்பதாகவே இருந்தது. மற்ற மன்னர்களுக்கும் இவர்களுக்கும் இருந்த ஒரே வித்தியாசம் இவர்கள் முஸ்லிம்களாக இருந்தார்கள் என்பது மட்டும்தான். ஆனால் அவர்களின் ஆட்சி முஸ்லிம்களின் ஆட்சியாக இருந்ததேயொழிய இஸ்லாமிய ஆட்சியாக இருந்ததில்லை. ///

முகலாயர் இந்தியாவில் புகுந்து இந்து ஆலயங்களைப் பன்முறைக் கொள்ளை அடித்தார். சிலைகளின் முலையைத் தலையை, மூக்கை உடைத்தார். சில முகலாய மன்னர்கள் (ஔரங்கசீப்) இந்துக்கள் மீது தனி வரி விதித்தார். அவருக்கு உத்தியோகங்களில் தனிச் சலுகை அளிக்க வில்லை. இவை எல்லாம் என்ன ?

சி. ஜெயபாரதன்

Jayabarathan said...

நண்பர் கோவி. கண்ணன்,

//// மூளை அணுக்கள் செயல் இழக்கும் போது உடலை இயக்கும் ஆணைகளை உருவாக்க முடியாது, படிப்படியாக இரத்த ஓட்டம் குறைந்து உடல் செயல்படாமல் போய்விடும், அதற்கும் முன் மூளைச் சாவு கேஸ்களில் உறுப்பு தானம் விருப்பம் இருந்தால் பெறப்படுகிறது. உயிர் / ஆன்மா என்பதெல்லாம் இறை நம்பிக்கையில் ஒரு தியரி தான். உயிர் / ஆன்மா, அதற்கான வடிவம், எடை, நிறமெல்லாம் உங்களால் சொல்ல முடியுமா ? ஆன்மா உடலின் எந்த பகுதியில் இயங்குகிறது ? அது முளையா ? மூளையை செயல்படுத்துகிறதா ? ///

ஆத்மா (Soul) என்றால் என்ன என்று ஆக்ஸ்ஃபோர்டு அகராதியில் எழுதியுள்ளது ? படித்துப் பாருங்கள்.

ஆத்மா மனித உடலெங்கும் பரவியுள்ள இயங்கு சக்தி. காரை மனிதன் ஆக்குகிறான். ஆனால் அதை ஓட்டுபவன் மனிதன். அதுபோல் மனித உடலை இயக்குவது ஆத்மா.

பூமிக்கு ஈர்ப்பியல் சக்தி உள்ளதை யார் பார்த்தார் ? நியூட்டன் ஆப்பிள் ஏன் கீழே விழுகிறது என்று சிந்தித்தார்.
பிரபஞ்சத்தில் கருஞ்சக்தி, கரும்பிண்டம், கருந்துளை ஆகியவை கண்ணுக்குப் புலப்படாதவை. ஆனல் அவை மெய்யாக உள்ளன. கருவிகள் அவற்றின் இருக்கையைக் கண்டுபிடித்துள்ளன. ஆத்மாவைக் காண முடியாது. ஆனால் அது புரியும் இயக்கங்களை நாம் அறிய முடியும்.

/// நான் முந்தைய பின்னூட்டதிலும் சொல்லி இருக்கிறேன். பொருள்களின் சேர்க்கை வேறொரு ஒரு பொருளை உருவாக்கும், இது உயிருள்ளது, உயிரற்றது இரண்டிற்குமே பொருந்தும்.///

இது முற்றிலும் தவறான விஞ்ஞானக் கருத்து. உயிருள்ளவைக்குப் பொருந்தும் என்பதற்கு உதாரணங்கள் தேவை.

மனித அங்கங்களில் "உயிர்மை" இருந்தால்தான் பிறருக்கு மாற்றம் செய்ய முடியும். செத்த உடம்பில் உள்ள அங்கங்கள் பயனற்றவை.

சி. ஜெயபாரதன்

Jayabarathan said...

நண்பர் கோவி. கண்ணன்

///சுற்றியக்கம் இல்லாத மற்ற இயக்கமெல்லாம் சுற்றியக்கத்தில் இருந்து கிளைப்பவைதான். அதாவது சுற்றியக்கத்தின் எதோ ஒரு நிகழ்வில் அவை அங்கமாகும் அல்லது அடங்கும்///

இது உங்கள் கருத்து. முற்றிலும் தவறான கருத்து.

சி. ஜெயபாரதன்

Jayabarathan said...

நண்பர் கோவி. கண்ணன்

///எல்லாம் கடவுள் செயல் என்று நம்பினால் அந்த செயலுக்கு காலம் வகுக்க வேண்டும், இந்த காலத்திற்கு பிறகே இவ்வாறு நடந்தது, பிரபஞ்சம் படைக்கப்பட்டது என்று சொல்லவதாக பொருள். கடவுள் செயல் என்று சொல்லி காலமும் வகுத்துவிட்டால், அந்த குறிப்பிட்ட காலத்திற்கு முன்பு கடவுள் தூங்கிக் கொண்டு இருந்தாரா என்ற கேள்விவரும், ஆம் என்று சொன்னால் எவ்வளவு மில்லியன்/டிரில்லியன் ஒளி ஆண்டுகளா தூங்கினார் ? அப்படி தூங்கும் முன்பு இதே படைத்துவிட்டு அசதியில் தூங்கினாரா ? என்ற கேள்வியெல்லாம் வரும்.///

இது உங்கள் ஐயப்பாடு.

நமது தர்க்கத்துக்கு உகந்தவை அல்ல.

சி. ஜெ.

Jayabarathan said...

நண்பர் கோவி. க.

/// அதாவது நம் அறிவுக்குப் பட்டது எல்லாம் ரியல், அறிவுக்கு எட்டாதது கடவுள் செயல் ! என்கிறீர்கள் :)///

இது உங்கள் preconceived idea.

சி. ஜெ.

கோவி.கண்ணன் said...

//ஆத்மா மனித உடலெங்கும் பரவியுள்ள இயங்கு சக்தி. காரை மனிதன் ஆக்குகிறான். ஆனால் அதை ஓட்டுபவன் மனிதன். அதுபோல் மனித உடலை இயக்குவது ஆத்மா.
//

:) பல்லிக்கு ஆன்மா இருக்கிறாதா ? அது தான் அதன் உடலை இயக்குகிறதா ?

வெட்டுண்ட பல்லியின் வால் அதுவாகவே துடிப்பதை நான் பார்த்திருக்கிறேன்.

மரம் செடி கொடிகளுக்கு ஆன்மா உண்டா ?

கிளைகளாக வெட்டி வைத்தாலும் பல மரங்களை உருவாக்க முடியும், அங்கு ஆன்மா இருந்தால் ஆன்மாவை பிரித்து பிரித்து பல மரங்களாக ஆக்குவதாகுமா ?

மரங்களுக்கு ஆன்மா இல்லை என்றீர்கள் என்றால் ...

ஒரு விதையை நன்றாக வறுத்துவிட்டு முளைக்க வைத்தால் முளைக்காது, ஆன்மா செத்துப் போய்விடும் என்று சொல்லுவிங்களா ?
:))))

உடலெங்கும் பரவியிருக்கிறது இயங்கு சக்தி ?

இதயமாற்று அறுவை சிகைச்சை கூட செய்கிறார்கள், இன்னும் மூளை மாற்று அறுவை சிகிச்சை மட்டும் தான் வரவில்லை. உடலிலெல்லாம் பரவி இருந்தால் ஒருவரின் உடல் தானத்தின் போது ஆன்மாவும் சேர்ந்து அவருடன் சென்றுவிடுமா ?

கோவி.கண்ணன் said...

//Jayabarathan said...
நண்பர் கோவி. கண்ணன்

///எல்லாம் கடவுள் செயல் என்று நம்பினால் அந்த செயலுக்கு காலம் வகுக்க வேண்டும், இந்த காலத்திற்கு பிறகே இவ்வாறு நடந்தது, பிரபஞ்சம் படைக்கப்பட்டது என்று சொல்லவதாக பொருள். கடவுள் செயல் என்று சொல்லி காலமும் வகுத்துவிட்டால், அந்த குறிப்பிட்ட காலத்திற்கு முன்பு கடவுள் தூங்கிக் கொண்டு இருந்தாரா என்ற கேள்விவரும், ஆம் என்று சொன்னால் எவ்வளவு மில்லியன்/டிரில்லியன் ஒளி ஆண்டுகளா தூங்கினார் ? அப்படி தூங்கும் முன்பு இதே படைத்துவிட்டு அசதியில் தூங்கினாரா ? என்ற கேள்வியெல்லாம் வரும்.///

இது உங்கள் ஐயப்பாடு.

நமது தர்க்கத்துக்கு உகந்தவை அல்ல.

சி. ஜெ.

Friday, April 10, 2009
//

ஏன் உகந்தவை இல்லை, இங்கே கடவுள் செயல் குறித்து தானே பேசுகிறோம். Existance of God என்றாலே அதன் செயல்கள் என்று கட்டமைக்கபடுபவை கேள்விக்கு உட்படுத்துவது ஏன் பொருந்தாது ?

கோவி.கண்ணன் said...

//Jayabarathan said...
நண்பர் கோவி. கண்ணன்

///சுற்றியக்கம் இல்லாத மற்ற இயக்கமெல்லாம் சுற்றியக்கத்தில் இருந்து கிளைப்பவைதான். அதாவது சுற்றியக்கத்தின் எதோ ஒரு நிகழ்வில் அவை அங்கமாகும் அல்லது அடங்கும்///

இது உங்கள் கருத்து. முற்றிலும் தவறான கருத்து.

சி. ஜெயபாரதன்
//

ஏன் தவறானது ? பருவகாலம் என்பது முடிவுள்ள இயக்கம், ஆனால் அது திரும்பவும் வரும் என்பது ஒரு ஆண்டு என்னும் சுற்றியக்கத்தின் நிகழ்வுதானே ?

கோவி.கண்ணன் said...

//இது முற்றிலும் தவறான விஞ்ஞானக் கருத்து. உயிருள்ளவைக்குப் பொருந்தும் என்பதற்கு உதாரணங்கள் தேவை. //

உயிருள்ளவைக்கு ஏன் பொருந்தாது, அசையும் பொருள்கள் எல்லாமே துடிப்புள்ள அணுக்களால் தானே இயங்குகின்றன. ஒரு செடி மரமாவது மரத்தின் உயிர்த்தன்மையும் புறப்பொருளுகளை (மரத்தின் உணவு) உட்கொண்டு கிடைக்கும் மாற்றம் தானே ?

உயிரினங்கள் வளர்வதற்கு அது வெளியில் இருந்து எடுத்துக் கொள்ளும் எனர்ஜி தானே காரணம்.
அந்த உணவு மாமிசமாக இருந்தாலும், காய்கறிவகைகளாக இருந்தாலும் அனைத்தும் உயிராய் இருந்தவைதானே.

உயிருள்ளவைகளை மாற்றத்திற்கு உட்படுத்த முடியாது என்றால் பல்வேறு கலப்பு இன பயிர்களை எப்படி உருவாக்குகிறார்கள் ? க்ளோனிங் வரை விஞ்ஞானம் வளர்ந்துவிட்டதே.


//மனித அங்கங்களில் "உயிர்மை" இருந்தால்தான் பிறருக்கு மாற்றம் செய்ய முடியும். செத்த உடம்பில் உள்ள அங்கங்கள் பயனற்றவை.

சி. ஜெயபாரதன்//

நான் செத்த உடம்பைப் பற்றிப் பேசவில்லை. செத்த உடம்பு சிதைவுக்கு உட்பட்டது.
//

Jayabarathan said...

நண்பர் கோவி கண்ணன்,

/// பல்லிக்கு ஆன்மா இருக்கிறாதா ? அது தான் அதன் உடலை இயக்குகிறதா ?

வெட்டுண்ட பல்லியின் வால் அதுவாகவே துடிப்பதை நான் பார்த்திருக்கிறேன்.///

நான் கூறியபடி "ஆத்மா உடலெங்கும் பரவியுள்ளதையும், அது பிரியும் போது எழும் துடிப்பையும்" அழகாக நிரூபித்துக் காட்டிவிட்டீர்கள்.

நன்றி
+++++++++++

///மரம் செடி கொடிகளுக்கு ஆன்மா உண்டா ?
கிளைகளாக வெட்டி வைத்தாலும் பல மரங்களை உருவாக்க முடியும், அங்கு ஆன்மா இருந்தால் ஆன்மாவை பிரித்து பிரித்து பல மரங்களாக ஆக்குவதாகுமா ? ///
ஒரு விதையை நன்றாக வறுத்துவிட்டு முளைக்க வைத்தால் முளைக்காது, ஆன்மா செத்துப் போய்விடும் என்று சொல்லுவிங்களா ? ///

விதையை வறுக்கும் போது என்ன நேருகிறது சொல்லுங்கள் ?

உயிரினங்களுக்கும், பயிரினங்களுக்கும் ஆன்மாக்கள் உள்ளன. அதனால் தண்டும் முளைக்கிறது. கிளையும் முளக்கிறது. ஓட்டுமாங்கனியும் அதே தத்துவம்தான்.

+++++++++++++
உடலெங்கும் பரவியிருக்கிறது இயங்கு சக்தி ?

///இதயமாற்று அறுவை சிகைச்சை கூட செய்கிறார்கள், இன்னும் மூளை மாற்று அறுவை சிகிச்சை மட்டும் தான் வரவில்லை. உடலிலெல்லாம் பரவி இருந்தால் ஒருவரின் உடல் தானத்தின் போது ஆன்மாவும் சேர்ந்து அவருடன் சென்றுவிடுமா ? ////

இதய அறுவைச் சிதைக்கும் போது ஒரு யந்திரம் மனிதனுக்கு மூச்சளித்து வருவது இரத்த ஓட்டம் பராமறிப்பது ஏன் ? அறுவைச் சிகிட்சைக்கு ஏன் டைமர் வேண்டும் சொல்வீர் ?

சி. ஜெ.

கோவி.கண்ணன் said...

////////நண்பர் கோவி கண்ணன்,
/// பல்லிக்கு ஆன்மா இருக்கிறாதா ? அது தான் அதன் உடலை இயக்குகிறதா ?
வெட்டுண்ட பல்லியின் வால் அதுவாகவே துடிப்பதை நான் பார்த்திருக்கிறேன்.///
நான் கூறியபடி "ஆத்மா உடலெங்கும் பரவியுள்ளதையும், அது பிரியும் போது எழும் துடிப்பையும்" அழகாக நிரூபித்துக் காட்டிவிட்டீர்கள்.
நன்றி
+++++++++++ ////////

:) இதுக்கும் மேல உங்களால் சமாளிக்க முடியாது என்பது தான் தெரிகிறது, பல்லியின் வால் துடிப்பு அதன் நரம்பியல் தன்மையால் நடப்பவை, இயற்கையில் இருக்கும் பல்வேறு பாதுகாப்பு அமைப்புகளில் பல்லிக்கு அமைந்தது அந்த வகை, அதன் பிறகு வால் முளைத்துவிடும். இதில் ஆன்மாவைக் கொண்டு சென்று வாலில் ஒட்டவைப்பது சரியா ? நீங்கள் சொல்வதை மெய்ஞான வாதிகள் கூட ஏற்கமாட்டார்கள். நாடித்துடிப்பை ஆன்மாவின் துடிப்பு என்பீர்களா ? மூளை இறந்த பிறகும் ஆன்மா வேலையற்று உடலில் இருக்குமா ?

//ஒரு விதையை நன்றாக வறுத்துவிட்டு முளைக்க வைத்தால் முளைக்காது, ஆன்மா செத்துப் போய்விடும் என்று சொல்லுவிங்களா ? ///
விதையை வறுக்கும் போது என்ன நேருகிறது சொல்லுங்கள் ?
உயிரினங்களுக்கும், பயிரினங்களுக்கும் ஆன்மாக்கள் உள்ளன. அதனால் தண்டும் முளைக்கிறது. கிளையும் முளக்கிறது. ஓட்டுமாங்கனியும் அதே தத்துவம்தான்.//

எல்லாவற்றையும் அப்படி நம்புவது உங்கள் கருத்து தான். அவை வெறும் நம்பிக்கையே.

+++++++++++++
//////////உடலெங்கும் பரவியிருக்கிறது இயங்கு சக்தி ?
///இதயமாற்று அறுவை சிகைச்சை கூட செய்கிறார்கள், இன்னும் மூளை மாற்று அறுவை சிகிச்சை மட்டும் தான் வரவில்லை. உடலிலெல்லாம் பரவி இருந்தால் ஒருவரின் உடல் தானத்தின் போது ஆன்மாவும் சேர்ந்து அவருடன் சென்றுவிடுமா ? ///////////

இதய அறுவைச் சிதைக்கும் போது ஒரு யந்திரம் மனிதனுக்கு மூச்சளித்து வருவது இரத்த ஓட்டம் பராமறிப்பது ஏன் ? அறுவைச் சிகிட்சைக்கு ஏன் டைமர் வேண்டும் சொல்வீர் ?
சி. ஜெ.//

உடலில் இரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டும் இதய மாற்று சிகிச்சையின் போது தற்காலிகமாக இதயம் இருக்காது. அதற்காக அந்த கருவியைப் பயன்படுத்துகிறார்கள். ஆக ஆன்மா எதுவும் உடலின் முன்னேற்றத்திற்காக செய்யப் போவதில்லை, உடல் நல்லா இருந்தால் பயன்படுத்திக் கொள்ளும் அப்படித்தானே ?

ஜெயபாரதன் ஐயா, உங்கள் அறிவியல் அறிவை, உங்கள் ஆன்மிக அறிவுடன் ஒப்பிடும் அளவுக்கு நான் படிக்கவில்லை ஸ்டில் எலிமெண்ட்ரி :)

Jayabarathan said...

நண்பர் கோவி.க.

பருவகாலம் என்பது முடிவுள்ள இயக்கம், ஆனால் அது திரும்பவும் வரும் என்பது ஒரு ஆண்டு என்னும் சுற்றியக்கத்தின் நிகழ்வுதானே ?

இப்போது சூடேறும் பூகோளத்தால் (Global Warming) வேனிற்காலம் நீடித்தும், குளிர்காலம் சுருங்கியும் கால நிலைகள் நீடித்தும் குன்றியும் மாறி விட்டன. சரியாக பருவகாலம் 3 மாதங்கள் என்பது மாறிவிட்டது. ஆகவே பருவகாலம் முடிவுள்ள இயக்கம் என்று யூகிக்க முடியாது.

சி. ஜெ.

Jayabarathan said...

நண்பர் கோவி. க.

/// உயிரினங்கள் வளர்வதற்கு அது வெளியில் இருந்து எடுத்துக் கொள்ளும் எனர்ஜி தானே காரணம். அந்த உணவு மாமிசமாக இருந்தாலும், காய்கறிவகைகளாக இருந்தாலும் அனைத்தும் உயிராய் இருந்தவைதானே.

உயிருள்ளவைகளை மாற்றத்திற்கு உட்படுத்த முடியாது என்றால் பல்வேறு கலப்பு இன பயிர்களை எப்படி உருவாக்குகிறார்கள் ? க்ளோனிங் வரை விஞ்ஞானம் வளர்ந்துவிட்டதே.////


செடியின் உயிர் வேறு. செடிக்கு வேண்டிய உரம் வேறு. செடியின் உயிர் நீடிப்புக்கு உரம் வேண்டும், நிலத்தின் உணவு வேண்டும். உரத்தையும், உணவையும் தூக்கிச் செல்ல நீர் வேண்டும். செத்த செடி எது அளித்தாலும் பிழைக்காது.

ஆட்டைக் குளோனின் செய்ய உயிருள்ள வேறொரு பெண்ணாடு தேவை. மனிதன் புது முறையைத் தூண்டுவதைத் தவிர குளோனிங் ஆட்டை உருவாக்க வில்லை.

சி. ஜெ.

Jayabarathan said...

நண்பர் கோவி. க.


///படைக்கப்பட்டது என்று சொல்வது சரி இல்லை, ஒன்று இல்லாமல் ஒன்றை படைக்க முடியாமா ? தாயின் கர்ப பை இன்றி கருவை உண்டாக்க முடியுமா ? கருமுட்டையும் விந்தனும் சேர்ந்தால் கருவாக மாற்றம் அடைகிறது, வளர்ச்சியில் துடிப்பு உண்டாகிறது, இதயம் நான்கு வாரங்களுக்கு பிறகே ஏற்படும். ஒரு நல்ல விதையை எடுத்து பதமான ஈர மண்ணில் புதைத்து வையுங்கள் அதுவாக முளைக்கும். விதை முளைக்க சூழல்தான் முக்கியம், மற்ற நேரங்களில் விதை விதையாகத்தான் இருக்கும். வெறும் கிழங்கு வகை செடிகள் கூட உண்டு, அதற்கு விதையெல்லாம் தேவை இல்லை. கிளையை வெட்டி வைத்தால் அதுவாகவே கிளைக்கும். ///

வெரி குட் ! மனிதனின் பங்கு எதையும் படைக்கும் இயற்கையின் மகத்தான டிசைன்களில் இல்லை என்று அழகாக நிரூபித்து விட்டீர்கள். நன்றி

சி. ஜெ.

Jayabarathan said...

நண்பர் கோவி. க,


/// ஒரு விதையை நன்றாக வறுத்துவிட்டு முளைக்க வைத்தால் முளைக்காது, ஆன்மா செத்துப் போய்விடும் என்று சொல்லுவிங்களா ?
:)))) ////

நாம் சீரியஸாகத் தர்க்கம் செய்யும் போது :)))) இப்படிக் கோமாளித் தனமாக படம் போட்டு உங்களை cheap ஆகக் காட்டிக் கொள்ளாதீர்கள். Soul என்றால் என்ன வென்று ஆக்ஸ்ஃபோர்டு அகராதி என்ன சொல்கிறது ? எங்கே பதிலைக் காணோம் ? உயிர் என்றால் என்ன ? ஆத்மா என்றால் என்ன ? இந்த வயதில் தெரியாமல் எப்போது தெரிந்து கொள்ளப் போகிறீர்கள் ?


சி. ஜெ.


சி. ஜெ.

தருமி said...

jayabarathan,

//All the things a Man could see are REAL. Real things can come only from a real source. As per the Cause & Effect Theory all the real creations could only be created by a Real Cosmic Designer.//

definition என்று மேற்கூறிஅயதைச் சொல்லியுள்ளீர்கள். அது யாருடைய ஆக்கம் என்று தெரிந்துகொள்ள ஆவல்; ஏனெேனில், அது அவ்வளவு clear-ஆக இருக்கிறது!! :(

கீழேயுள்ள உங்களது சில விவாதப்புள்ளிகள் எனக்கு கொஞ்சம் வேடிக்கையாகத் தோன்றுவது என் தவறாக இருக்கலாமோ என்னவோ?!

//தாயின் ஆத்மா (உயிர்) இல்லாவிட்டால் சிசு உண்டாகாது.

தாயின் வயிற்றில் உண்டாகும் சிசுவுக்குத் தாயின் ஆன்மாவே உயிர் ஊட்டுகிறது.

மனித உடலை இயக்குவது ஆத்மா.

....ஆத்மா உடலெங்கும் பரவியுள்ளதையும், அது பிரியும் போது எழும் துடிப்பையும்" அழகாக நிரூபித்துக் காட்டிவிட்டீர்கள்.

ஆட்டைக் குளோனின் செய்ய உயிருள்ள வேறொரு பெண்ணாடு தேவை. மனிதன் புது முறையைத் தூண்டுவதைத் தவிர குளோனிங் ஆட்டை உருவாக்க வில்லை.//

உயிர், ஆன்மா என்று இங்கு சொல்லப்படுபவை எல்லாமே physical and chemical reactions மட்டுமே என்பது என் கணிப்பு என்பதை மட்டும் சொல்லிக்கொண்டு நான் உங்களிருவர் விவாதத்தில் தள்ளி நின்று பார்வையாளன இருக்கிறேன்.

Salahuddin said...

நண்பர் ஜெயபாரதன்,

//முகலாயர் இந்தியாவில் புகுந்து இந்து ஆலயங்களைப் பன்முறைக் கொள்ளை அடித்தார்.//

மொகலாயர்கள் மட்டுமல்ல, முஸ்லிமல்லாத மன்னர்கள் கூட இன்னொரு நாட்டை வெற்றிகொண்ட பிறகு அந்நாட்டுக் கோவில்களை தாக்கியுள்ளனர் என்பது வரலாறு. அதற்குக் காரணம் அக்காலத்தில் கோவில்கள் அரசுக்கருவூலங்களாகவும் இருந்திருக்கின்றன.

//சிலைகளின் முலையைத் தலையை, மூக்கை உடைத்தார்.//

ஒரு சிலர் இப்படிச் செய்திருக்கலாம். ஆனால் இதுபோன்ற சம்பவங்களை விட பல முஸ்லிம் மன்னர்கள் இந்துக் கோவில்களுக்கு மானியம் அளித்திருப்பதும் கோவில்களை புனர் நிர்மாணம் செய்ய நிதிஉதவிகள் செய்திருப்பதும் அதிகமதிகம் வரலாறுகளில் பதிவு செய்யப் பட்டிருக்கிறது.

//சில முகலாய மன்னர்கள் (ஔரங்கசீப்) இந்துக்கள் மீது தனி வரி விதித்தார்.//

இது அரசாங்கத்திற்கு குடிமக்கள் செலுத்த வேண்டிய வரி. முஸ்லிம் குடிமக்கள் மீது 'ஜகாத்' என்னும் மார்க்க வரி விதிக்கப் பட்டிருக்கிறது. முஸ்லிமல்லாத குடிமக்களுக்கு இந்த வரி கிடையாது. அதனால்தான் 'ஜிஸ்யா' என்ற பெயரில் ஒரு சொற்பத்தொகை வரியாக விதிக்கப் பட்டிருந்தது.

//அவருக்கு உத்தியோகங்களில் தனிச் சலுகை அளிக்க வில்லை. இவை எல்லாம் என்ன ?//

பல முஸ்லிம் மன்னர்களிடம் முஸ்லிமல்லாதவர்கள் பெரிய பதவிகளில் இருந்திருக்கிறார்கள். உதாரணமாக அக்பரிடம் அமைச்சராக இருந்த பீர்பால் முஸ்லிமல்ல. ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தானிடமும் இந்து அமைச்சர்கள் இருந்திருக்கிறார்கள். ஔரங்கசீப்பின் படையிலும் இந்து படைத்தலைவர்கள் இருந்திருக்கின்றனர்.

நீங்கள் சொன்ன மேற்கண்ட காரணங்களை ஒரு வாதத்திற்காக ஒப்புக் கொண்டால் கூட, இவற்றால் இந்தியாவில் முஸ்லிம்கள் எண்ணிக்கை கூடிப் போய்விடவில்லையே? 5 நூற்றாண்டுகள் ஆட்சி முடிவில், முஸ்லிம்கள் இந்தியாவில் சிறுபான்மையினராகத்தான் இருந்தார்கள். இன்றும் சிறுபான்மையாகத்தான் இருக்கிறார்கள். பிரிட்டிஷ்காரர்கள் வரவில்லை என்றால் இந்தியா கஜினிஸ்தான் ஆகியிருக்கும் என்ற உங்கள் கூற்றுக்கு வேறு ஆதாரம் எதுவும் இருக்கிறதா?

Jayabarathan said...

நண்பர் சலாஹுத்தின்,


இந்தியா மீது படையெடுத்த வல்லரசுகள் : மகா அலெக்ஸாண்டர், அரேபியர், கஜினி, கோரி, முகலாயர் (பாபர்), பார்ஸிகள், போர்ச்சுகீஸ், பிரெஞ்ச், ஆங்கிலேயர். இவர்களில் யார் இந்து ஆலயங்களைப் பதினெட்டுத் தடவைக் கொள்ளை அடித்தார் என்றும் சிலைகளைச் சிதைத்தார் என்றும் ஆதரங்களுடன் கூறுங்கள்.

முகலாயர், சுல்தான் ஆட்சிகள் மைசூர், ஹைதிராபாத் வரைத் தென்னகத்தில் பரவின. பிரிட்டீஷ்க் காலனி ஆட்சி இந்தியாவில் நிலை பெறாவிட்டால் சுல்தான்கள் ஆட்சிதானே சென்னையிலும், மதுரையிலும், நெல்லையிலும் பரவியிருக்கும்.

மகா அலெக்ஸாண்டர் தான் ஜெயித்த பகுதிகளை இந்து அரசரிடம் விட்டுவிட்டு இந்தியாவிலிருந்து வான சாஸ்திரம், கணித சாஸ்திரம், ஜோதிடக் கலைகளை ஐரோப்பாவுக்குக் கொண்டு சென்றார்.

அக்பர் தனது அந்தப்புறத்துக்கு அழகிய இந்துப் பெண்களை இழுத்துச் சென்றதை ஏன் விட்டு விட்டீர்கள் ?

சமீபத்தில் தாலிபான் காலிகள் ஆஃப்கானில் 1500 ஆண்டுகளாக நிமிர்ந்து நின்ற, இந்து மன்னர் ஏற்படுத்திய புகழ் பெற்ற புத்தர் சிலையைப் பீரங்கியால் தகர்த்ததை ஏன் சொல்லாமல் விட்டீர்கள் ?

அன்புடன்,
சி. ஜெயபாரதன்.

கோவி.கண்ணன் said...

//Jayabarathan said...

நண்பர் கோவி.க.

பருவகாலம் என்பது முடிவுள்ள இயக்கம், ஆனால் அது திரும்பவும் வரும் என்பது ஒரு ஆண்டு என்னும் சுற்றியக்கத்தின் நிகழ்வுதானே ?

இப்போது சூடேறும் பூகோளத்தால் (Global Warming) வேனிற்காலம் நீடித்தும், குளிர்காலம் சுருங்கியும் கால நிலைகள் நீடித்தும் குன்றியும் மாறி விட்டன. சரியாக பருவகாலம் 3 மாதங்கள் என்பது மாறிவிட்டது. ஆகவே பருவகாலம் முடிவுள்ள இயக்கம் என்று யூகிக்க முடியாது.

சி. ஜெ.//


ஆண்டு சுழற்சி சுற்றியக்கம் என்றே சொன்னேன், அதில் பருவகாலங்களின் நாள்களின் எண்ணிக்கை மாற்றம் குறித்து தான் நீங்கள் சொல்கிறீர்கள், பூமி சுற்றுவதற்கான காலம் பெரிய அளவில் மாற்றம் எதையும் சந்திக்கவில்லை. (தொன்றுதொட்டதில் இருந்து வருவதில் மைக்ரோ செகண்ட் மாற்றம் இருக்குமா ?) நான் பருவகாலம் முடிவற்ற இயக்கம் என்று சொல்லவரவில்லை. முடிவுள்ள இயக்கத்தின் கிளைத்த முடிவுள்ள இயக்கம் என்பதை நான் மறுக்கவும் இல்லை

//செடியின் உயிர் வேறு. செடிக்கு வேண்டிய உரம் வேறு. செடியின் உயிர் நீடிப்புக்கு உரம் வேண்டும், நிலத்தின் உணவு வேண்டும். உரத்தையும், உணவையும் தூக்கிச் செல்ல நீர் வேண்டும். செத்த செடி எது அளித்தாலும் பிழைக்காது.

ஆட்டைக் குளோனின் செய்ய உயிருள்ள வேறொரு பெண்ணாடு தேவை. மனிதன் புது முறையைத் தூண்டுவதைத் தவிர குளோனிங் ஆட்டை உருவாக்க வில்லை.

சி. ஜெ.//

நான் செத்த செடி என்று சொல்லவில்லை, உயிருள்ள செடி கொடிகள், மரம் பற்றிதான் சொல்கிறேன். அதற்கும் ஆன்மா இருப்பதாக தாங்கள் தான் சொல்கிறீர்கள். விலங்குகளில் இருப்பது போல் மரம் செடி கொடிகளுக்கு 'மூளை' என்னும் பகுதி கிடையாது, எனவே அவற்றிற்கு சிந்திக்கும் ஆற்றல் கிடையாது, சிந்திக்கும் தன்மை இல்லாமல் பற்றிப் படருகிறதா என்றெல்லாம் கூட கேட்பீர்கள், அது அந்த செடியின் ஜீன் தன்மைதான். ஊர்வன, பறப்பன,விலங்குகள் போல் மரம் செடி கொடிகளுக்கும் சிந்திக்கும் திறன் (நீங்கள் சொல்வது ஆன்மா) இருப்பதை ஏற்பதற்கு இல்லை. உயிர்த்தன்மை இருக்கிறது, அவ்வளவுதான். செண்டர் புராசசிங் யூனிட் கிடையாது. க்ளோனிங் ஆடு பற்றிய தகவலுக்கு தருமி ஐயா பதில் சொல்லிவிட்டார். உங்கள் வாதப்படியே வைத்தாலும் ஆன்மா அழியாது தானே, பின்பு எப்படி மக்கள் தொகை மிகுந்தது ? டைனசர்களின் ஆன்மாக்கள் என்ன ஆனது ? ஆன்மா அழியாதது என்றால் அதாவது உலக மொத்த உயிரினங்களின் எண்ணிக்கை கூடவோ குறையாவோ கூடாது அல்லவா ? கூடுகிறது என்று நீங்கள் சொல்வதே இறைவன் படைக்கிறான் என்பதற்கு சாட்சி என்று சொல்லாதீர்கள். திரும்பவும் பல்லிவால் கதையாகிடும்

//Jayabarathan said...

நண்பர் கோவி. க,


/// ஒரு விதையை நன்றாக வறுத்துவிட்டு முளைக்க வைத்தால் முளைக்காது, ஆன்மா செத்துப் போய்விடும் என்று சொல்லுவிங்களா ?
:)))) ////

நாம் சீரியஸாகத் தர்க்கம் செய்யும் போது :)))) இப்படிக் கோமாளித் தனமாக படம் போட்டு உங்களை cheap ஆகக் காட்டிக் கொள்ளாதீர்கள். Soul என்றால் என்ன வென்று ஆக்ஸ்ஃபோர்டு அகராதி என்ன சொல்கிறது ? எங்கே பதிலைக் காணோம் ? உயிர் என்றால் என்ன ? ஆத்மா என்றால் என்ன ? இந்த வயதில் தெரியாமல் எப்போது தெரிந்து கொள்ளப் போகிறீர்கள் ?


சி. ஜெ.


சி. ஜெ.

Saturday, April //

கோமாளித்தனம், எலிமெண்ட்ரி படிப்பு இப்படியெல்லாம் சொல்லுவதால் என்ன பயன் ? என்னுடைய கருத்தை மறுப்பதற்கு உங்களுக்கு முழு உரிமை இருக்கிறது, இதே போல் ஒவ்வொருவரும் தனிமனித தாக்குதல்களாக பேசிக் கொண்டால் நல்ல விவாதம் நடத்த முடியுமா ?
ஆக்ஸ்போர்ட் டிக்ஸ்னெரியில் ப்ராமணர் என்பதற்கும் கூடத்தான் பொருள் போட்டு இருக்கிறான், உயர்ந்த குலம் என்கிறார்கள், எந்த வகையில் உயர்ந்தது என்று யாராவது சொல்ல முடியுமா ? ஆன்மா என்பது இந்திய தத்துவம், அது பற்றிய பொருளை இந்தியர் என்ன சொல்கிறார்களோ அதைத்தான் அவன் போட்டு இருப்பான், அதில் ஆன்மா பற்றி எழுதி இருப்பது ஆங்கிலேயர்களின் ஆராய்ச்சி முடிவா ? கண்ணன் என்ற பெயருக்கான விளக்கமாக கோபியர்களுடன் இருந்தவன், துவாரகை மன்னன் என்று எழுதி இருக்கலாம், அதை வைத்து ஆக்ஸ்போர்டு டிக்ஸ்னரி கண்ணன் வாழ்ந்ததை உறுதிப்படுத்துகிரது என்று சொல்லிவிட முடியுமா ?

உங்களுக்கு ஆன்மா பற்றி தெரியுமா ? எல்லோரும் சொல்கிறார்களே, நம்புகிறார்களே என்பதற்காக அதே நம்பிக்கை சார்பாக இருப்பதால் நீங்களும் நம்புகிறீர்கள் என்பதைத் தவிர்த்து, 'நான்' உணர்ந்துவிட்டேன் முழுக்க முழுக்க 'ஆன்ம' ஞானம் கொண்டு தான் பேசுகிறேன் என்று உங்களைப் பற்றி உறுதிப்பட கூற முடியுமா ? கடவுள் ஒரு காக்கை என்று நம்பிக்கை இருந்தால் நீங்களும் கடவுள் காக்கைதான் என்று நம்பப் போகிறீர்கள், இதை ஏற்காதவர்களைப் பற்றி தவறாக நினைக்க என்ன இருக்கிறது. அறியாமல் / உணராமல் எதையும் ஏற்கக் கூடாது என்பதே பகுத்தறிவு வாதம். வெறும் நம்பிக்கைகள் எப்படி உயர்ந்த நம்பிக்கையாக இருக்க முடியும் ? அப்படிப் பார்த்தால் ஆன்மா, கடவுள் இது பற்றி உண்மையிலேயே, அப்படி ஒன்று இருக்கிறதா ? என்று அறிய விரும்புவன் நாத்திகனே, அவனே உண்மையில் தேடலில் இருக்கிறான். மற்றவர்களெல்லாம் நடிகனுக்கு ரசிகர் மன்றம் தொடங்கிப் போற்றுவது போல் வெறும் ரசிகர்களாக இருப்பவர்களே. இறை நம்பிக்கைகளின் வளர்ச்சிகளும், மத மறுமலர்சிகள், அதில் பரிந்துரைக்கும் அல்லது வேறு வழியே இல்லை என ஏற்படும் மாற்றங்கள் எப்போதும் நாத்திக கேள்விகளால் மட்டுமே சாத்தியம்.

ஐயா, இங்கே கேட்கப்படும் கேள்விகள் காலம் காலமாக கேட்க்கப்படுபவையே, ஏன் இன்னும் கேட்கபடுகிறதென்றால் இது வரை அவற்றிற்கான விடைகள் எதுவும் கிடைக்கவில்லை என்பதால் தான்.

Jayabarathan said...

நண்பர் கோவி. கண்ணன்,

///இதுக்கும் மேல உங்களால் சமாளிக்க முடியாது என்பது தான் தெரிகிறது, பல்லியின் வால் துடிப்பு அதன் நரம்பியல் தன்மையால் நடப்பவை, இயற்கையில் இருக்கும் பல்வேறு பாதுகாப்பு அமைப்புகளில் பல்லிக்கு அமைந்தது அந்த வகை, அதன் பிறகு வால் முளைத்துவிடும். இதில் ஆன்மாவைக் கொண்டு சென்று வாலில் ஒட்டவைப்பது சரியா ? நீங்கள் சொல்வதை மெய்ஞான வாதிகள் கூட ஏற்கமாட்டார்கள். நாடித்துடிப்பை ஆன்மாவின் துடிப்பு என்பீர்களா ?///

நீங்கள் திறந்த மனதுடன் கற்றுக் கொள்ளாது மூடிக் கொண்ட மூளையுடன் எதையும் கற்றுக் கொள்ள முடியாது.

The Body & Brain are constantly alive with life & Soul with billions of Electrical & Chemical signals passing through the micro networks of Nerves & Neurons (Nerve cells) which are charged like battery cells. If Soul passes away all these cells die after the battery power is dicharged within a certain period. That is why the human transnplant organs that are stored have time limits.

மனித உயிர் அல்லது அது இயக்கும் மனித ஆத்மாவே அந்த மின்சார, இரசாயன சமிக்கைகளை நரம்பில் அனுப்புகிறது.

++++++

/// உடலில் இரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டும் இதய மாற்று சிகிச்சையின் போது தற்காலிகமாக இதயம் இருக்காது. அதற்காக அந்த கருவியைப் பயன்படுத்துகிறார்கள். ஆக ஆன்மா எதுவும் உடலின் முன்னேற்றத்திற்காக செய்யப் போவதில்லை, உடல் நல்லா இருந்தால் பயன்படுத்திக் கொள்ளும் அப்படித்தானே ?///

If the blood circulation stops to Brain Cells for some specific they lose the oxygen supply to survive & they die. Man dies at once. It has nothing to do with Body Health.

சி. ஜெயபாரதன்

வோட்டாண்டி said...

ஒரு ரெண்டு மூணு வாரத்துக்கு இந்த பக்க வர முடியாதேன்னு(நாங்கல்லாம் ஒரே பிசி..) கவலை பட்டுட்டு இருந்தேன்.. மதவாதிகள்-நாத்திகர்கள் விவாதம் இப்ப கொஞ்சம் கொஞ்சமா ஒரு மதவாதி-இன்னொரு மதவாதி களுக்கு நடுவுல்ல.. எவன் மோசமானவன்.. மொதல்ல எவன் எந்த கோவில்ல உடச்சானு shift ஆயிட்டு இருக்கு.. நல்ல விஷயம் தான்.. இதையே சாக்க வச்சிக்கிட்டு இப்போதைக்கு நான் ஒதுங்கிகுறேன்..(தற்காலிகமாக)

Jayabarathan said...

நண்பர் தருமி,

//All the things a Man could see are REAL. Real things can come only from a real source. As per the Cause & Effect Theory all the real creations could only be created by a Real Cosmic Designer.//

definition என்று மேற்கூறியதைச் சொல்லியுள்ளீர்கள். அது யாருடைய ஆக்கம் என்று தெரிந்துகொள்ள ஆவல்; ஏனெனில், அது அவ்வளவு clear-ஆக இருக்கிறது!! :(

என்னுடைய விளக்கம். நான் கற்றுக் கொண்டது.

சி. ஜெயபாரதன்

Jayabarathan said...

நண்பர் தருமி,

// கீழேயுள்ள உங்களது சில விவாதப்புள்ளிகள் எனக்கு கொஞ்சம் வேடிக்கையாகத் தோன்றுவது என் தவறாக இருக்கலாமோ என்னவோ?! //

//தாயின் ஆத்மா (உயிர்) இல்லாவிட்டால் சிசு உண்டாகாது.

தாயின் வயிற்றில் உண்டாகும் சிசுவுக்குத் தாயின் ஆன்மாவே உயிர் ஊட்டுகிறது.

மனித உடலை இயக்குவது ஆத்மா.

....ஆத்மா உடலெங்கும் பரவியுள்ளதையும், அது பிரியும் போது எழும் துடிப்பையும்" அழகாக நிரூபித்துக் காட்டிவிட்டீர்கள்.

ஆட்டைக் குளோனின் செய்ய உயிருள்ள வேறொரு பெண்ணாடு தேவை. மனிதன் புது முறையைத் தூண்டுவதைத் தவிர குளோனிங் ஆட்டை உருவாக்க வில்லை.//

இவற்றை எதிர்வாதத்தால் தவறு என்று நீங்கள் ஆதாரங்கள் அளிக்காதது எனக்கு வேடிக்கையாக இருக்கிறது.

ஆக்ஸ்ஃபோர்டு அகராதியில் "Soul" என்றால் என்ன என்று சொல்லப் பட்டதை நீங்களோ கோவி. கண்ண னோ தவறென்று சொல்லாமல் விட்டு விட்டது எனக்கு வேடிக்கையாகத் தோன்றுகிறது.

நீங்கள் இருவரும் மூளைக் கதவை அடைத்துக் கொண்டு உயிரைப் பற்றியும் ஆத்மாவைப் பற்றியும் அறிந்து கொள்வது கடினம் !!!

++++++++++++

/// உயிர், ஆன்மா என்று இங்கு சொல்லப்படுபவை எல்லாமே physical and chemical reactions மட்டுமே என்பது என் கணிப்பு என்பதை மட்டும் சொல்லிக்கொண்டு நான் உங்களிருவர் விவாதத்தில் தள்ளி நின்று பார்வையாளன இருக்கிறேன். ///

உயிர், ஆன்மா Physical and Chemical Science மூலமாகவும் அவற்றுக்கு அப்பாற்பட்ட உயிரியல் விஞ்ஞானத்துக்கும், ஆன்மீகச் சிந்தனைக்கும் (Biological Science & Spiritual Thoughts) நெருங்கி உட்பட்டவை என்பது என் கருத்து.

சி. ஜெயபாரதன்

Jayabarathan said...

நண்புர் கோவி. கண்ணன்

/// உயிருள்ள செடி கொடிகள், மரம் பற்றிதான் சொல்கிறேன். அதற்கும் ஆன்மா இருப்பதாக தாங்கள் தான் சொல்கிறீர்கள். விலங்குகளில் இருப்பது போல் மரம் செடி கொடிகளுக்கு 'மூளை' என்னும் பகுதி கிடையாது, எனவே அவற்றிற்கு சிந்திக்கும் ஆற்றல் கிடையாது, சிந்திக்கும் தன்மை இல்லாமல் பற்றிப் படருகிறதா என்றெல்லாம் கூட கேட்பீர்கள், அது அந்த செடியின் ஜீன் தன்மைதான். ஊர்வன, பறப்பன,விலங்குகள் போல் மரம் செடி கொடிகளுக்கும் சிந்திக்கும் திறன் (நீங்கள் சொல்வது ஆன்மா) இருப்பதை ஏற்பதற்கு இல்லை. //

மனிதருக்கு ஆறறிவும், மற்ற விலங்கிற்கு ஐந்தோ அதற்கும் குறைந்தோ உள்ளன.

மனிதருக்குள்ள ஆன்மாவும், விலங்கிற்குள்ள ஆன்மாக்களும் வேறானவை.

செடி, கொடிகளுக்கு, மரங்களுக்குள்ள ஆன்மாக்கள் மேற்கூறியவற்றை விட முற்றிலும் மாறு பட்டவை.

உயிருள்ளவற்றை ஆன்மாதான் இயக்கி வருகிறது என்பது என் கருத்து.

மரஞ்செடி கொடிகளில் மூளை வேரில் உள்ளது என்பது என் கருத்து.


சி. ஜெயபாரதன்

Jayabarathan said...

நண்பர் கோவி. கண்ணன்,

///உங்கள் வாதப்படியே வைத்தாலும் ஆன்மா அழியாது தானே, பின்பு எப்படி மக்கள் தொகை மிகுந்தது ? டைனசர்களின் ஆன்மாக்கள் என்ன ஆனது ? ஆன்மா அழியாதது என்றால் அதாவது உலக மொத்த உயிரினங்களின் எண்ணிக்கை கூடவோ குறையாவோ கூடாது அல்லவா ? கூடுகிறது என்று நீங்கள் சொல்வதே இறைவன் படைக்கிறான் என்பதற்கு சாட்சி என்று சொல்லாதீர்கள். ////

ஆன்மா (ஆத்மா) என்றால் உயிர்ச் சக்தி என்று உட்பொருள். அதற்கு எடை, கொள்ளளவு, வடிவம் கிடையாது.

சி. ஜெயபாரதன்

Jayabarathan said...

நண்பர் கோவி. கண்ணன்,

///ஒவ்வொருவரும் தனி மனித தாக்குதல்களாக பேசிக் கொண்டால் நல்ல விவாதம் நடத்த முடியுமா ? ///

:)))) இப்படிப் போட்டுத் தர்க்கம் செய்தால் என்ன அர்த்தம் ?

சி. ஜெயபாரதன்

Jayabarathan said...

நண்பர் கோவி.கண்ணன்,

/// ஆன்மா என்பது இந்திய தத்துவம், அது பற்றிய பொருளை இந்தியர் என்ன சொல்கிறார்களோ அதைத்தான் அவன் போட்டு இருப்பான், அதில் ஆன்மா பற்றி எழுதி இருப்பது ஆங்கிலேயர்களின் ஆராய்ச்சி முடிவா ? ///

ஆக்ஸ்ஃபோர்டு அகராதியில் Spirit & Spiritualism என்றால் என்ன என்று படியுங்கள். கிறித்துவர், பௌத்தம், சீக்கிய்ர், இஸ்லாமியர் அனைவரும் ஆன்மீகத்தை முழுமையாக நம்புபவர். ஆன்மீகம் இந்தியரின் சொந்தக் கருத்தில்லை.

சி. ஜெயபாரதன்

Jayabarathan said...

நண்பர் கோவி.க.

///ஐயா, இங்கே கேட்கப்படும் கேள்விகள் காலம் காலமாக கேட்க்கப்படுபவையே, ஏன் இன்னும் கேட்கபடுகிறதென்றால் இது வரை அவற்றிற்கான விடைகள் எதுவும் கிடைக்கவில்லை என்பதால் தான்.///

இது எத்தனை சதவீதம் ? சுமார் 10% - 20%. அதே சமயத்தில் கடவுளை நம்புவோர் சுமார் 70%-75%

கடவுளை நம்பாதோர் அறிவாளியும் அல்லர். கடவுளை நம்புவோர் மூடரும் அல்லர்.

சி. ஜெ.

Salahuddin said...

அன்பு நண்பர் ஜெயபாரதன்,

//பிரிட்டீஷ்காரன் இந்தியாவுக்குள் நுழைய வில்லை என்றால், இந்துமத இந்தியா இஸ்லாமிய கஜினிஸ்தானாக மாறி நீங்களும் நானும் மொட்டை அடித்துத் தொப்பியுடன் முஸ்லீமாக இருப்போம்.// என்ற உங்கள் கருத்தையே நான் மறுக்கிறேன். மொகலாய மன்னர்கள் இந்தியா மீது படையெடுத்த வரலாற்றுச் சம்பவங்களை நான் மறுக்கவில்லை.

படையெடுத்தல், கொள்ளையடித்தல், ஆலயங்களை தாக்குதல், பெண்களை மானபங்கப்படுத்துதல் போன்ற செயல்களை இந்தியாவை ஆண்ட இந்து மன்னர்களும் செய்திருக்கிறார்கள். கீழே உள்ள சுட்டியில் பேராசிரியர் ஆ.சிவசுப்ரமணியன் எழுதியிருக்கும் கட்டுரையை படித்தால் உங்களுக்கு உண்மை விளங்கும்.

http://thatstamil.oneindia.in/art-culture/visai/mar05/siva.html

இக்கட்டுரையில் பேராசிரியர் இவ்வாறு குறிப்பிடுகிறார்:

"பரசுராமபாகு என்ற மராட்டிய இந்துத் தளபதி கருநாடகத்தின் மீது படையெடுத்தபோது இந்து மடம் என்று சிருங்கேரி மடத்தைக் கொள்ளையடிக்காமல் விட்டுவிடவில்லை. 60 லட்சம் பெருமானம் உள்ள அணிகலன்கள் யானை, குதிரை, பல்லக்கு ஆகியவற்றை அங்கிருந்து கொள்ளையடித்தான். சிருங்கேரி மடாதிபதிகள் வணங்கி வந்த சாரதா தேவியின் விக்ரகத்தைப் புரட்டிப் போட்டான். பல பிராமணக் குருக்களைக் கொன்றான். உயிருக்குப் பயந்து போய் சங்கராச்சாரியார் காஞ்சிலா என்ற இடத்திற்கு ஓடி ஒளிந்தார். அங்கிருந்தபடியே மைசூரில் இருந்த திப்பு சுல்தானுக்கு உதவி வேண்டி கடிதம் எழுதினார். திப்புவும் சாரதா பீடத்தை மீண்டும் நிறுவ பணமும் தானியங்களும் தந்துதவினான். சாரதா பீடத்தைக் காக்க படைகளையும் அனுப்பினான்."

"படையெடுப்பு என்ற பெயரில் கொடூரமான, அநாகரிகமான செயல்களை மேற்கொள்வோர் மதங்கடந்து நிற்பவர்கள் என்பதுதான் உண்மை. அவர்களுக்கு வேண்டுவன எல்லாம் தங்கமும், வெள்ளியும், வெண்கலமும்தான்."

"ஆதிக்கத்தை நிலைநாட்டவும் பொருளைக் கவரவும் மன்னர்கள் நிகழ்த்தும் போர்களில் அறநெறிகள் பார்க்கப்படுவதில்லை என்பதே வரலாற்று உண்மை. இவ்வுண்மைக்கு கோரி முகம்மது, கஜினி முகம்மது, மாலிக்கபூர் போன்ற இஸ்லாமிய படையெடுப்பாளர்கள் மட்டுமின்றி இராஜராஜன், இராஜேந்திரன் என இந்து மன்னர்களும் எடுத்துக்காட்டாக அமைகின்றனர்."

"சோழ மன்னர்களின் இலங்கைப் படையெடுப்பை வீரச்செயல் என்று தமிழர்கள் கருதினால் சோழ மன்னர்கள் நிகழ்த்திய கொள்ளையென்று சிங்களவர் அதைக் கருதுகின்றனர். உணர்ச்சி வயப்படாமல் சிந்தித்தால் அவ்வாறு அவர்கள் கருதுவதில் நியாயம் உள்ளது என்பது புலனாகும். அதே நேரத்தில் இலங்கையில் வாழும் இன்றைய பெளத்தர்கள் சோழர்களின் படையெடுப்பை தமிழ்நாட்டுச் சைவர்களின் படையெடுப்பு என்று சமய வண்ணம் பூசி இன்றைய இலங்கைத் தமிழ்ச் சைவர்களை வெறுப்புடன் நோக்கினால் அது எந்த அளவு தவறானதோ, அந்த அளவு தவறானது கஜினி முகம்மது, கோரி முகம்மது ஆகியோரின் படையெடுப்பை இஸ்லாமியப் படையெடுப்பு என்று கருதுவதும், அப்படையெடுப்பாளர்களின் வாரிசாக இன்றைய இஸ்லாமியர்களை நோக்குவதும், படையெடுப்பு என்ற பெயரால் கொள்ளையடிக்கும் மன்னர்கள் எதாவது ஒரு மதத்தைச் சார்ந்துதான் இருப்பார்கள். இது இயற்கையானது. இதற்கு இஸ்லாமிய சமயம் சார்ந்த படையெடுப்பாளர்களும் விதிவிலக்கல்ல."

ஆக, மொகலாய மன்னர்கள் இந்தியா மீது படையெடுத்து 5 நூற்றாண்டுகள் ஆட்சி நடத்தியதால் இந்துமத இந்தியா இஸ்லாமிய கஜினிஸ்தானாக மாறி விடவில்லை. அன்றும் இன்றும் ஹிந்துஸ்தான் என்ற பெயராலேயே அறியப்படுகிறது. இன்றளவும் இந்திய மக்களில் பாதிப்பேர் கூட மொட்டை அடித்துத் தொப்பியுடன் முஸ்லீமாக இருக்கவில்லை. பெரும்பான்மையினர் இந்துக்களாகவே இருக்கின்றனர்.

அன்புடன்
சலாஹுத்தீன்

Jayabarathan said...

நண்பர் கோவி. கண்ணன்,

///நான் செத்த செடி என்று சொல்லவில்லை, உயிருள்ள செடி கொடிகள், மரம் பற்றிதான் சொல்கிறேன். அதற்கும் ஆன்மா இருப்பதாக தாங்கள் தான் சொல்கிறீர்கள். விலங்குகளில் இருப்பது போல் மரம் செடி கொடிகளுக்கு 'மூளை' என்னும் பகுதி கிடையாது, ///

இது தவறு. செடிகளுக்கும் மரத்திற்கும் வேரில் மூளை இருக்கிறது.

http://ds9.botanik.uni-bonn.de/zellbio/AG-Baluska-Volkmann/plantneuro/pdf/NeuroPlantTZ-Biologia.pdf

Root apices as plant command centres: the unique ‘brain-like’ status of the root apex transition zone.

S. Jayabarathan

Jayabarathan said...

நண்பார் ககோவ்வி.கண்ணன்


// All the things a Man could see are REAL. Real things can come only from a real source. As per the Cause & Effect Theory all the real creations could only be created by a Real Cosmic Designer.

S. Jayabarathan//

நான் எழுதிய ஆங்கிலத்தின் அர்த்தம் என்ன ? கீழ் உள்ள உங்கள் புரிதல் பதில் என்ன ?

///அதாவது நம் அறிவுக்குப் பட்டது எல்லாம் ரியல், அறிவுக்கு எட்டாதது கடவுள் செயல் ! என்கிறீர்கள் :)///

சி. ஜெ.

கோவி.கண்ணன் said...

//இது தவறு. செடிகளுக்கும் மரத்திற்கும் வேரில் மூளை இருக்கிறது.//

எனக்கு தெரிந்து முருங்கை கிளையோடு வெட்டி வைத்து தான் புதிய மரம் உருவாக்குவார்கள். அதில் வேரெல்லாம் பிறகு தான் தோன்றும். சக்கரவள்ளிக் கிழங்கும் அப்படியே.

கோமாவில் இருக்கும் ஒருவரது ஆன்மா என்ன செய்து கொண்டிருக்கும் ? கட்டளை பிறப்பிப்பதை தற்காலிகமாக நிறுத்திவிட்டு ஓய்வு எடுக்குமா ? தூங்கும் போது கனவுகள் வருகிறது. கோமாவில் இருப்பவர்களுக்கு எதுவுமே ஏற்படாது என்றே நினைக்கிறேன்.

//// All the things a Man could see are REAL. Real things can come only from a real source. As per the Cause & Effect Theory all the real creations could only be created by a Real Cosmic Designer.

S. Jayabarathan//

வினையும் விளைவும் கடவுளால் ஏற்படத்தப்பட்டது என்கிறீர்கள். every energy there should be some source thats is transformation of other energy.

நீங்கள் கையை வீசினால் உங்களது சக்தி அங்கே செலவிடப் படுகிறது, அதன் பிறகு உங்கள் கைப்பட்ட பொருள் கிழே விழுகிறது. நீங்கள் கையை வீச உங்களுக்கு உடலில் சக்தி இருக்க வேண்டும், அந்த சக்தி உணவு மூலம் உங்களுக்கு கிடைக்கிறது. இறைச் செயலுக்கான சக்தி எங்கிருந்து கிடைக்கிறது ? சூனியம், ஜீரோ இதிலிருந்த எந்த சக்தியையும் உருவாக்க முடியாது.

இதையும் கொஞ்சம் வாசிங்க, பதிவுடன் தொடர்புடையது தான்.மேலும் உங்களுக்கு அதிலிருந்து பாயிண்டுகள் கிடைக்கலாம். :)

ஆறாம் அறிவுக்கு மேல்... !

படைப்புக் கொள்கை !

இறைவன் இருக்கிறானா ? எங்கே வாழ்கிறான் ?


நாத்திகனின் கடவுள் பூனை !

இன்னும் நிறைய எழுதி இருக்கிறேன்.

கோவி.கண்ணன் said...

//இது எத்தனை சதவீதம் ? சுமார் 10% - 20%. அதே சமயத்தில் கடவுளை நம்புவோர் சுமார் 70%-75%//

இதிலென்ன வியப்போ தெரியவில்லையா ? பிறக்கும் அனைவருக்குமே மரண பயம் உண்டு, அதை மறந்து பயமின்மையுடன் வாழ்வதற்காக மனிதன் படைத்துக் கொண்ட அமைப்பே கடவுள் மதம். அந்த மாயைத் தேவை இல்லை என நினைப்பவர்கள் சிலர். அவர்கள் நாத்திகர்கள் :)

எந்த விலங்குக்கும் மரண பயம் கிடையாது, அவற்றிற்கான பயம் வலி குறித்து மட்டுமே. விலங்குகளுக்கு இறைவன் தேவை இல்லை என்பதற்கும் இது தான் காரணம்

Jayabarathan said...

நண்பர் சலாஹுத்தீன்

///ஆர்.எஸ்.எஸ். நிறுவனரான ஹெட்கேவார் காலமான பிறகு அவரையடுத்து அதன் தலைவராக விளங்கியவர் கோல்வல்கர். ஆர்.எஸ்.எஸ்.க்காரர்களால் ஸ்ரீகுருஜி என்றழைக்கப்படும் அவர் இந்தியாவின் மீது படையெடுத்த முஸ்லீம் படையெடுப்பாளர்கள் குறித்து:

அந்தப் படையெடுப்பாளர்கள் நமது நாட்டுப் பெண்கள் பலரைக் கற்பழித்தனர். நமது கோவில்களையும், யாத்திரைத் தலங்களையும் தகர்த்துத் தரைமட்டமாக்கியவர்கள். சுகபோகங்களைத் தருவதாக ஆசை காட்டியோ அல்லது வாள்முனையில் மிரட்டியோ பெரும் எண்ணிக்கையினரைத் தமது மதத்திற்கு மாற்றினார்கள் என்று எழுதி யுள்ளார் (கோல்வல்கர், 1992 : 8) ///

++++++++++

/// முதலாம் இராஜேந்திரன் தனது வடஇந்தியப் படையெடுப்பின் போது வடஇந்தியாவிலுள்ள மதுரா, என்ற நகரைக் கைப்பற்றினான். இந்நகர்தான் கஜினி முகம்மதுவின் தாக்குதல்களுக்கு அடிக்கடி ஆளான நகரமாகும். இது குறித்து கே.கே. பிள்ளை (1981; 278, 279) பின்வருமாறு அவதானிப்பார்.

அந்நகர் அக்காலத்தில் செல்வமும் புகழும் பொதிந்து காணப்பட்டதால் அந்நகரின் மேல் கஜினி முகம்மது பன்முறை தாக்குதல் தொடுத்தான். பன்முறை அதைக் கொள்ளையிட்டான். ////

+++++++++

நீங்கள் குறிப்பிடும் 500 ஆண்டுகளில் இந்தியாவிலும் இப்போதுள்ள பாகிஸ்தானிலும் பங்களா தேசத்திலும் எத்தனை பேர் மெய்யான இஸ்லாமியர் என்றும் மாற்றப் பட்ட அல்லது மாறிய இஸ்லாமியர் என்று உங்களால் கூற முடியுமா ?

மேற்கூறிய மூன்று தேசங்களில் உள்ள அத்தனை இஸ்லாமியரும் இந்தியாவுக்குள் அப்படியே புகுந்தவரா ?

சி. ஜெயபாரதன்

Jayabarathan said...

அன்புமிக்க தமிழச்சி,

மனிதன் செத்தால் பிறகு..?

http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=04&article=998

/// இந்த காற்றுப் போக்குவரத்திற்குக் காரணமான உடலிலிருக்கும் சக்தி வேலை செய்யச் சக்தியற்றுப் போய்விட்டால் சுவாசம் நின்று விடுகிறது. இந்த நிலையைத்தான் மதவாதிகள், மூடநம்பிக்கைக்காரர்கள் ஆத்மா உடலை விட்டுப் பிரிந்து போய்விட்டது என்று சொல்லுகிறார்கள். ஆத்மா என்றாலே சுவாசம் (காற்று) என்று தான் பொருள். அது பிரிவதும் இல்லை. பிரிந்து எங்கும் போவதுமில்லை. ///
ஆத்மா (Soul) என்றால் என்ன என்று ஆக்ஸ்ஃபோர்டு ஆங்கில அகராதியைப் பாருங்கள். வெறும் காற்றுதான் சுவாசம் என்பது எந்த அறிவு நூலிலும் கிடையாது.

மனித ஆத்மா ஓர் ஆன்மீக இயக்க சக்தி. ஓர் உதாரணம். தாயின் வயிற்றில் சிசுவை உருவாக்கிப் பத்து மாதம் வரை வளர்த்துக் குழந்தை யாக்கிப் பிறக்க வைக்கிறது. தாயின் ஆத்மாதான் சிசுவுக்கு ஆத்மாவை அளித்து உயிர்ப் பிறவி ஆக்குகிறது.

டெஸ்ட் டியுப் பேபியைத் தாயின் கருவில் சிசுவாக்கிக் குழந்தை ஆக்குவதும் ஆத்மாதான். ஆத்மா இல்லாத செத்த தாய் சிசுவை உருவாக்க முடியாது.

அன்புடன்,
சி. ஜெயபாரதன்.

தருமி said...
This comment has been removed by the author.
தருமி said...

சலாஹுத்தீன்,

ஒரே ஒரு சந்தேகம்.

ஜெயபாரதன் சொன்னதில் உங்களுக்குப் பிடிக்காத ஒன்றைப் பற்றி பின்னூட்டமளித்து வருகிறீர்கள். நல்லது. ஆனால் அதை ஒட்டி நீங்கள் சொல்லும் சில விஷயங்களில்தான் எனக்கு ஒரு கேள்வி.

ராபர்ட் க்ளைவ் ரொம்ப நல்லவரு்; வல்லவரு. கலக்டர் ஆஷ் ஆபத்பாந்தவர். (உண்மையிலேயே தலித் பெண்ணொருத்திக்கு உதவியதாலேயே கொல்லப்பட்டான் என்று ஒரு செய்தி சொல்லப்பட்டாலும்...) ஜெனரல் டயர் ரொம்ப தைரியசாலி; மவுண்ட் பேட்டன் சொல்லவே வேண்டாம் ... இப்படி ஏதாவது ஒரு கிறித்துவன் இதுவரை கூறியதாக எனக்குத் தெரியவில்லை.

அயல்நாட்டுக்காரன் வியாபாரம் செய்ய வந்து நம்மைப் பல காலம் அடிமைப்படுத்தி வைத்திருந்தான் என்பதுதான் உண்மை. அவன் கிறித்துவன் என்பதாலேயே அவன்களுக்குச் சப்பை கட்டு கட்ட எந்த இந்தியக் கிறித்துவனும் வந்ததாக இதுவரை யாரையும் நான் பார்த்தது இல்லை.

ஆனால் நீங்கள் மட்டும் படையோடு வந்து நம் நாட்டு செல்வத்தைக் கொள்ளை கொண்டு போனவன்களையும், இங்கேயே ஆட்சி அமைத்து நம்மை அடிமைப்படுத்தியவன்களையும் ஏன் தாங்கிப் பிடிக்க வேண்டும்?

//சிலைகளின் முலையைத் தலையை, மூக்கை உடைத்தார்.//

//ஒரு சிலர் இப்படிச் செய்திருக்கலாம். ஆனால் இதுபோன்ற சம்பவங்களை விட பல முஸ்லிம் மன்னர்கள் இந்துக் கோவில்களுக்கு மானியம் அளித்திருப்பதும் blah .. blah ...//

ஓ! அதுவும் சிலர் மட்டும்தான் அப்படி; மற்றவன்கள் எல்லோரும் தங்கக் கம்பிகள்; எங்கேயோ ஜென்மம் எடுத்து, நம்மையும் நம் நாட்டையும் காப்பாத்துறதுக்காகவே இங்கே வந்த ஆபத்பாந்தவன்கள்; இல்லையா?

வந்ததே கொள்ளையடிப்பதற்கு .. (மீண்டும் மீண்டும் கஜினி மாதிரி கொள்ளைக்காரன்களை தோற்கடித்தபின்னும் உயிரோடு திருப்பி அனுப்பின நம் நாட்டு முட்டாள் அரசர்களைச் சொல்லணும்.)பின் நாட்டையும் பிடித்தனர். அவன்களெல்லாம் நம்மை வெளிநாட்டிலிருந்து வந்து அடிமைப்படுத்தியவன்கள் அல்லவா? அவர்கள் மான்யம் எல்லாம் அளித்தது உங்களுக்கு் எம்புட்டு பெருமையாக இருக்கிறது. இதைப் பார்க்கும்போது .. என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

//சில முகலாய மன்னர்கள் (ஔரங்கசீப்) இந்துக்கள் மீது தனி வரி விதித்தார்.//

//இது அரசாங்கத்திற்கு குடிமக்கள் செலுத்த வேண்டிய வரி.//

அடப்பாவமே!
யாரு யாருக்கு வரி செலுத்துவதுன்னு கட்டபொம்மன் பட வசனம் ஞாபகத்துக்கு வரலையா? அவன் என்ன நமக்கு மாமனா, மச்சானா ...?அவன் வரி வசூலித்தானாம்; அதை நீங்கள் நியாயப்படுத்துவீர்களாம். நல்லா இருக்கு கதை.

//...'ஜிஸ்யா' என்ற பெயரில் ஒரு சொற்பத்தொகை வரியாக விதிக்கப் பட்டிருந்தது.//
சொற்பத்தொகை .. ம்ம்.. ம்..

ஒளரங்கசீப் பற்றி நாமறிவது அவனது ஆட்சியின் அலங்கோலம்தான். நன்றாகவே ஆண்டதாகவே வைத்துக் கொள்வோம். அது ஆக்கிரமிப்பால் விளைந்த ஆட்சியல்லவா? பிரிட்டிஷ்காரன் ரோடு போட்டான்; குளம் வெட்டினான். ஆகவே அவன்கள் ரொம்ப நல்லவன்கள் என்றா சொல்லிக்கொண்டு இருக்கிறோம்? பின் எப்படி இஸ்லாமிய அரசர்களை நீங்கள் தாங்கிப்பிடிக்கிறீர்கள்?

//படையெடுத்தல், கொள்ளையடித்தல், ஆலயங்களை தாக்குதல், பெண்களை மானபங்கப்படுத்துதல் போன்ற செயல்களை இந்தியாவை ஆண்ட இந்து மன்னர்களும் செய்திருக்கிறார்கள்.//

அதுபோலவே இஸ்லாமிய படையெடுப்பில் அவன்கள் நடந்து கொண்டதெல்லாம் இயற்கைதானே...என்கிறீர்கள் அப்படித்தானே!

ரொம்பவே நல்லா இருக்குங்க ...

ஒளரங்கசீப், கஜினி என்று அவர் சொன்னதும் ராஜ ராஜ சோழனையும், ராஜேந்திர சோழனையும் மேற்கோள் காண்பிக்கிறீர்கள். அதாவது நம் முன்னோரைவிடவும் நம்மை கொள்ளையடிக்க வந்த கொள்ளைக்காரர்கள் மேல்தான் உங்கள் பாசம் என்று நிரூபிக்கிறீர்கள்;இல்லையா! என்ன சொல்றது இதை ..?

தங்க ஊசின்னாலும் அத எடுத்து கண்ணைக் குத்திக்கக் கூடாதுங்க... என்னதான் உங்கள் மதத்தைச் சார்ந்தவன்கள் என்பதற்காக இப்படியா ஆக்கிரமிப்பாளன்களுக்கு வக்காலத்து வாங்குவது ...

(வேண்டுமென்றே இரு அயல்நாட்டுக்காரன்களையும் ஒருமையில் சொல்லியுள்ளேன். ஒருவேளை உங்களுக்கு அதில் பாதி தவறாகப் படலாம்.)

எல்லாவற்றையும் பார்த்து ... ஆச்சரியம் மட்டுமல்ல; வேதனையாகவும் இருக்கிறது.

வாழ்க உங்கள் தேசப்பற்று!!

தருமி said...

ஜயபாரதன்,
நீங்கள் ஒரு இயற்பியல் விஞ்ஞானி. அதனாலேயே நீங்கள் ஐன்ஸ்டீன் பற்றி பேசும்போதெல்லாம் நான் கொஞ்சம் 'அடக்கியே' வாசித்தேன்!. ஆனால் நீங்கள் ஆன்மீகத்தையும், உயிரியலையும் கலந்து கட்டி பேசுவது கொஞ்சம் தமாஷாகி விடுகிறது.

//தாயின் ஆத்மாதான் சிசுவுக்கு ஆத்மாவை அளித்து உயிர்ப் பிறவி ஆக்குகிறது. //
இது எந்த வகை அறிவியல் கண்டுபிடிப்பு என்பது சொன்னால் தெரிந்து கொள்வேன்.

//செடிகளுக்கும் மரத்திற்கும் வேரில் மூளை இருக்கிறது.//
brain and brain-like என்பதற்கும் வித்தியாசமில்லையா? that paper talks about neurotransmitters, some chemicals. அதனாலதான் சொல்றது உயிர்களைப் பொறுத்தவரை it is all physics and chemistry...

//ஆன்மா (ஆத்மா) என்றால் உயிர்ச் சக்தி என்று உட்பொருள்...// உங்கள் definition. சரிதானே? இதைத்தான் சொன்னேன் - உயிரியலையும் ஆன்மீகத்தையும் கலந்து கட்டி என்று!

//உயிருள்ளவற்றை ஆன்மாதான் இயக்கி வருகிறது என்பது என் கருத்து.//
இல்லீங்க .. எல்லாம் கெமிஸ்ட்ரி பண்ற கூத்துங்க .. இது என் கருத்து இல்லைங்க... எல்லா அறிவியலாளர்களின் கருத்துங்க.

அதுமாதிரி வண்ணத்துப் பூச்சியைப்பத்தி சொன்னதும் உண்மைக்குப் புறம்பா ரொம்பவே (factual mistake) இருந்தது.

Jayabarathan said...

நண்பர் தருமி,

//உயிருள்ளவற்றை ஆன்மாதான் இயக்கி வருகிறது என்பது என் கருத்து.//

///இல்லீங்க .. எல்லாம் கெமிஸ்ட்ரி பண்ற கூத்துங்க .. இது என் கருத்து இல்லைங்க... எல்லா அறிவியலாளர்களின் கருத்துங்க.///

எப்படி கெமிஸ்டிரி மனித உடம்பில் கூத்தடிக்குது என்று விளக்கமாகச் சொல்லிக் கொடுங்கள். நான் தெரிந்து கொள்கிறேன்.

Anatomy, Physiology, Biology, Physics & Chemistry ஆகிய அத்தனையும் சேர்ந்து அவற்றை டைமர் வைத்து இயக்குவது Human Soul என்பது என் கருத்து. இது தவறு என்று ஆதாரமோடு விளக்குங்கள்

ஊர்ந்திடும் மண் புழு எப்படிப் பறந்திடும் வண்ணாத்திப் பூச்சியாக மாறுகிறது என்பதில் உங்கள் கருத்து மாறுபாடு என்ன ?


சி. ஜெ.

Jayabarathan said...

நண்பர் தருமி,

கடவுளைப் பற்றி எழுதிய வள்ளுவர் பாக்கள் சிலவற்றை எழுதியுள்ளேன்.


///வகுத்தான் வகுத்த வகையல்லால், கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது. ///

பிரபஞ்சத்தை உருவாக்கிப் படைத்தவனை "வகுத்தான்" (Cosmic Designer & Creater) என்று குறிப்பிடுகிறார்.

/// ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினும் தான்முந் துறும். ///

இதில் கடவுளை Omini-potent என்று குறிப்பிடுகிறார்.

/// கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்///

இதில் கடவுளை Omni-scient என்று குறிப்பிடுகிறார்.

/// இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின்
பரந்து கெடுக உலகியற்றி யான்///

கடவுளை உலகியற்றியான் Creater of the World என்று குறிப்பிடுகிறார்.

/// தனக்குவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது///

கடவுளுக்கு இணையானர் யாருமில்லை என்று குறிப்பிடுகிறார்.

இவற்றைப் பற்றி உங்கள் கருத்தென்ன ?

சி. ஜெ.

Salahuddin said...

//நீங்கள் குறிப்பிடும் 500 ஆண்டுகளில் இந்தியாவிலும் இப்போதுள்ள பாகிஸ்தானிலும் பங்களா தேசத்திலும் எத்தனை பேர் மெய்யான இஸ்லாமியர் என்றும் மாற்றப் பட்ட அல்லது மாறிய இஸ்லாமியர் என்று உங்களால் கூற முடியுமா ? மேற்கூறிய மூன்று தேசங்களில் உள்ள அத்தனை இஸ்லாமியரும் இந்தியாவுக்குள் அப்படியே புகுந்தவரா ? - சி. ஜெயபாரதன் //

நண்பர் ஜெயபாரதன்,

இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேசம் உள்ளிட்ட பிரதேசங்களில் இஸ்லாம் பரவியதற்கு காரணம் மொகலாயர்களின் ஆட்சிதான் என்பது வரலாற்றுப் பிழை. அதைத்தான் நான் வலியுறுத்துகிறேன். கஜினியோ கோரியோ இஸ்லாமை பரப்புவதற்காக இந்தியாவிற்கு வரவில்லை. அவர்களின் படையெடுப்பு, தாக்குதல்கள், ஆட்சி புரிந்தது அனைத்துமே அரசியல் நோக்கங்களுக்காகவே தவிர மதத்தைப் பரப்பும் நோக்கத்தில் அல்ல. அவர்கள் கோவில்களை தாக்கியது இந்து மதத்தை ஒழிப்பதற்காக என்றால் இன்றைக்கு இந்தியாவில் ஒரு இந்துக்கோவில்கூட மிஞ்சியிருக்காது. வாள்முனையிலோ காசு பணம் கொடுத்தோ இந்துக்களை முஸ்லிம்களாக மாற்றினார்கள் என்பது உண்மையென்றால் இன்றைய இந்தியாவில் முஸ்லிம்கள்தான் பெரும்பான்மையாக இருந்திருப்பார்கள். பிரிட்டிஷ்காரர்கள் வந்ததால்தான் மதமாற்றங்கள் முடிவுக்கு வந்தது என்பது உண்மையென்றால் இன்றளவும் மீனாட்சிபுரங்கள் ரஹ்மத் நகர்களாக மாற வேண்டிய தேவை இருக்காது.

இந்தியப் பிரதேசங்களில் இஸ்லாம் தோன்றியதற்கு வேறு பல காரணங்கள் இருக்கின்றன.

அன்புடன்
சலாஹுத்தீன்

Salahuddin said...

நண்பர் தருமி,

//ஆனால் நீங்கள் மட்டும் படையோடு வந்து நம் நாட்டு செல்வத்தைக் கொள்ளை கொண்டு போனவன்களையும், இங்கேயே ஆட்சி அமைத்து நம்மை அடிமைப்படுத்தியவன்களையும் ஏன் தாங்கிப் பிடிக்க வேண்டும்?//

நான் முஸ்லிம் மன்னர்களை தாங்கிப் பிடிக்கவில்லை. நண்பர் ஜெயபாரதனுக்கு எழுதிய என் பதிலில் இதற்கு விளக்கமிருக்கிறது.

//அவன்களெல்லாம் நம்மை வெளிநாட்டிலிருந்து வந்து அடிமைப்படுத்தியவன்கள் அல்லவா? அவர்கள் மான்யம் எல்லாம் அளித்தது உங்களுக்கு் எம்புட்டு பெருமையாக இருக்கிறது. இதைப் பார்க்கும்போது .. என்ன சொல்வதென்றே தெரியவில்லை.//

நண்பர் ஜெயபாரதன் சில முஸ்லிம் மன்னர்கள் கோவில்களை தாக்கியதை மட்டும் சொல்லி, அதனால்தான் இந்தியாவில் இஸ்லாம் வளர்ந்தது என்பது போல எழுதியிருந்தார். ஆனால், முஸ்லிம் மன்னர்கள் கோவில்களை தாக்கியது மதக் காரணங்களுக்காக அல்ல. அவர்கள் தாக்கிய அதே கோவிலை இந்து மன்னர்களும் தாக்கியிருக்கிறார்கள். ஒரு இந்து மன்னர் தாக்கிய ஒரு இந்துக் கோவிலை ஒரு முஸ்லிம் மன்னர் புணர் நிர்மாணம் செய்து வைத்திருக்கிறார். இந்தச் செயல்களுக்கு காரணம் அரசியலே தவிர மதம் அல்ல என்பதை விளக்குவதற்காகத்தான் முஸ்லிம் மன்னர்களின் மானியம் போன்ற உதாரணங்கள்.

//அடப்பாவமே! யாரு யாருக்கு வரி செலுத்துவதுன்னு கட்டபொம்மன் பட வசனம் ஞாபகத்துக்கு வரலையா? அவன் என்ன நமக்கு மாமனா, மச்சானா ...?அவன் வரி வசூலித்தானாம்; அதை நீங்கள் நியாயப்படுத்துவீர்களாம். நல்லா இருக்கு கதை.//

ஒரு நாட்டின் குடிமகனாக இருக்கும் ஒருவர் அந்நாட்டு சட்டதிட்டங்களுக்கு கட்டுப்படுவது நியாயம். காங்கிரஸ் கட்சி எனக்குப் பிடிக்காது என்று காரணம் சொல்லி அவர்கள் ஆட்சியில் இருக்கும்போது நான் வரி கட்ட மாட்டேன் என்று சொல்வீர்களா?

//அதுபோலவே இஸ்லாமிய படையெடுப்பில் அவன்கள் நடந்து கொண்டதெல்லாம் இயற்கைதானே...என்கிறீர்கள் அப்படித்தானே!//

ஒரு திருத்தம். இது இஸ்லாமிய படையெடுப்பல்ல. முஸ்லிம்களின் படையெடுப்பு. அவர்கள் முஸ்லிம்கள் என்பதற்காக அவர்களின் செயல்களை நான் நியாயப்படுத்தவில்லை. பேராசிரியர் சிவசுப்ரமணியன் சொன்னது போல, "படையெடுப்பு என்ற பெயரில் கொடூரமான, அநாகரிகமான செயல்களை மேற்கொள்வோர் மதங்கடந்து நிற்பவர்கள் என்பதுதான் உண்மை. அவர்களுக்கு வேண்டுவன எல்லாம் தங்கமும், வெள்ளியும், வெண்கலமும்தான்." முஸ்லிம் மன்னர்களின் செயல்பாடுகளை இஸ்லாமோடும் இன்றைய முஸ்லிம்களோடும் தொடர்புபடுத்தாதீர்கள்.

//ஒளரங்கசீப், கஜினி என்று அவர் சொன்னதும் ராஜ ராஜ சோழனையும், ராஜேந்திர சோழனையும் மேற்கோள் காண்பிக்கிறீர்கள். அதாவது நம் முன்னோரைவிடவும் நம்மை கொள்ளையடிக்க வந்த கொள்ளைக்காரர்கள் மேல்தான் உங்கள் பாசம் என்று நிரூபிக்கிறீர்கள்;இல்லையா! என்ன சொல்றது இதை ..? //

கஜினி முகமது மீது நான் பாசம் கொள்ளுமளவிற்கு அவர் எனக்கு எதையும் செய்ததாகத் தெரியவில்லை. பேராசிரியரின் வார்த்தைகளை மீண்டும் மேற்கோள் காட்டுகிறேன். "ஆதிக்கத்தை நிலைநாட்டவும் பொருளைக் கவரவும் மன்னர்கள் நிகழ்த்தும் போர்களில் அறநெறிகள் பார்க்கப்படுவதில்லை என்பதே வரலாற்று உண்மை. இவ்வுண்மைக்கு கோரி முகம்மது, கஜினி முகம்மது, மாலிக்கபூர் போன்ற இஸ்லாமிய படையெடுப்பாளர்கள் மட்டுமின்றி இராஜராஜன், இராஜேந்திரன் என இந்து மன்னர்களும் எடுத்துக்காட்டாக அமைகின்றனர்." இன்றைய அரசியல்வாதிகளைப் போல அன்றைய ஆட்சியாளர்களும் தங்கள் ஆட்சியதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காக செய்த செயல்களை அவர்களின் மதத்தோடு பிணைத்துப் பார்க்கக் கூடாது.

'நம் முன்னோர்கள்' என்று நீங்கள் குறிப்பிட்டதற்கு தொடர்பான ஒரு தகவல். பர்மா, சிங்கை, மலேஷியாவில் இந்திய முஸ்லிம்களை குறிப்பிட Chulia என்ற பெயர் புழக்கத்தில் உள்ளது. சிங்கையில் Chulia Street, Chulia Mosque போன்ற இடங்களும் இருக்கின்றன. இந்தச் சூலியா என்ற பெயர் 'சோழா' என்பதன் திரிபு. அந்தக் காலத்தில் சோழ நாட்டின் கடற்கரைப் பிரதேசங்களிலிருந்து மலாயா வந்து குடியேறிய தமிழ் முஸ்லிம் மக்கள் இன்றும் 'சோழர்கள்' என்றே அறியப்படுகின்றனர். சோழப் பரம்பரை என்ற பெயர் இன்று முஸ்லிம்களிடம் மட்டுமே தங்கியிருப்பதை பார்த்தீர்களா? தமிழகத்தில் சோழன் போக்குவரத்துக் கழகத்தை விட்டால் வேறு எங்கும் இந்தப் பெயரை பார்க்க முடியாது.

//என்னதான் உங்கள் மதத்தைச் சார்ந்தவன்கள் என்பதற்காக இப்படியா ஆக்கிரமிப்பாளன்களுக்கு வக்காலத்து வாங்குவது ...//

இப்பின்னூட்டத்தை முதலிலிருந்து மீண்டும் படிக்கவும்.

//வாழ்க உங்கள் தேசப்பற்று!! //

உண்மையான தேசப்பற்று எப்படி இருக்க வேண்டும் என்று சொன்னால் உபயோகமாக இருக்கும்.

அன்புடன்
சலாஹுத்தீன்

கோவி.கண்ணன் said...

// Jayabarathan said...
நண்பர் கோவி. கண்ணன்,

///இதுக்கும் மேல உங்களால் சமாளிக்க முடியாது என்பது தான் தெரிகிறது, பல்லியின் வால் துடிப்பு அதன் நரம்பியல் தன்மையால் நடப்பவை, இயற்கையில் இருக்கும் பல்வேறு பாதுகாப்பு அமைப்புகளில் பல்லிக்கு அமைந்தது அந்த வகை, அதன் பிறகு வால் முளைத்துவிடும். இதில் ஆன்மாவைக் கொண்டு சென்று வாலில் ஒட்டவைப்பது சரியா ? நீங்கள் சொல்வதை மெய்ஞான வாதிகள் கூட ஏற்கமாட்டார்கள். நாடித்துடிப்பை ஆன்மாவின் துடிப்பு என்பீர்களா ?///

நீங்கள் திறந்த மனதுடன் கற்றுக் கொள்ளாது மூடிக் கொண்ட மூளையுடன் எதையும் கற்றுக் கொள்ள முடியாது.

The Body & Brain are constantly alive with life & Soul with billions of Electrical & Chemical signals passing through the micro networks of Nerves & Neurons (Nerve cells) which are charged like battery cells. If Soul passes away all these cells die after the battery power is dicharged within a certain period. That is why the human transnplant organs that are stored have time limits.

மனித உயிர் அல்லது அது இயக்கும் மனித ஆத்மாவே அந்த மின்சார, இரசாயன சமிக்கைகளை நரம்பில் அனுப்புகிறது.//

நல்ல தமாஷ் ! கோமா நோயாளிகளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் ? அவர்களின் ஆன்மாவும் கோமா நிலையில் தான் இருக்குமா ? மூளை இறப்பு கேஸ் களில் கூட உடலில் இரத்த ஓட்டம் இருந்து கொண்டும், இதயம் கூட இயங்கி கொண்டு தான் இருக்கும்.

//If the blood circulation stops to Brain Cells for some specific they lose the oxygen supply to survive & they die. Man dies at once. It has nothing to do with Body Health.

சி. ஜெயபாரதன்//

இவை தெரிந்த தகவல் தான்.

கோவி.கண்ணன் said...

//Saturday, April 11, 2009 11:32:00 PM

Jayabarathan said...

இவற்றை எதிர்வாதத்தால் தவறு என்று நீங்கள் ஆதாரங்கள் அளிக்காதது எனக்கு வேடிக்கையாக இருக்கிறது.

ஆக்ஸ்ஃபோர்டு அகராதியில் "Soul" என்றால் என்ன என்று சொல்லப் பட்டதை நீங்களோ கோவி. கண்ண னோ தவறென்று சொல்லாமல் விட்டு விட்டது எனக்கு வேடிக்கையாகத் தோன்றுகிறது.

நீங்கள் இருவரும் மூளைக் கதவை அடைத்துக் கொண்டு உயிரைப் பற்றியும் ஆத்மாவைப் பற்றியும் அறிந்து கொள்வது கடினம் !!!//

ஐயா, மேலேயே தெரிவித்துவிட்டேன். ஆக்ஸ்போர்ட் டிக்ஸ்னரி விளக்கம் கருத்தியல் ரீதியானது மட்டுமே, ஆராய்ச்சி அல்லது அறிவியல் முடிவோ அல்ல. கடவுள் என்ற சொல்லுக்கும் கூட ஆக்ஸ்போர்டில் விளக்கம் உண்டு. அதற்க்காக அந்த அகராதி கடவுள் இருப்பதை உறுதி படுத்துவதாக எடுத்துக் கொள்ள முடியுமா ?

கோவி.கண்ணன் said...

// Jayabarathan said...
நண்புர் கோவி. கண்ணன்

உயிருள்ளவற்றை ஆன்மாதான் இயக்கி வருகிறது என்பது என் கருத்து.

மரஞ்செடி கொடிகளில் மூளை வேரில் உள்ளது என்பது என் கருத்து. //

:) முருங்கை மரத்தையோ, சில கொடிகளின் பகுதியை வெட்டி வைத்த பிறகே வேர் முளைத்து மரமாக மாறும், அவற்றை விதை வழியாக பயிரிடுவதை விட விரைவான வழி உண்டு. வேர் மூளை என்றால், வேரின்றி குறிப்பாக கரும்பு போன்றவை வெட்டி வைத்தே (மூளை இன்றி) பயிர் செய்யப்படுவதை அறிந்திருப்பீர்கள் !

கோவி.கண்ணன் said...

// Jayabarathan said...
நண்பர் கோவி. கண்ணன்,

///உங்கள் வாதப்படியே வைத்தாலும் ஆன்மா அழியாது தானே, பின்பு எப்படி மக்கள் தொகை மிகுந்தது ? டைனசர்களின் ஆன்மாக்கள் என்ன ஆனது ? ஆன்மா அழியாதது என்றால் அதாவது உலக மொத்த உயிரினங்களின் எண்ணிக்கை கூடவோ குறையாவோ கூடாது அல்லவா ? கூடுகிறது என்று நீங்கள் சொல்வதே இறைவன் படைக்கிறான் என்பதற்கு சாட்சி என்று சொல்லாதீர்கள். ////

ஆன்மா (ஆத்மா) என்றால் உயிர்ச் சக்தி என்று உட்பொருள். அதற்கு எடை, கொள்ளளவு, வடிவம் கிடையாது.

சி. ஜெயபாரதன்

Sunday, April 12, 2009 2:09:00 AM//

உயிர் என்பதை யார் மறுத்தார்கள் ? ஆனால் அந்த உயிர்த் தன்மை பற்றி பல்வேறு கட்டுக்கதைகளைத் தான் கேள்வி படுத்த வேண்டி இருக்கிறது. நீங்கள் உயிர்சக்தி என்று சொல்வதை செல் திரட்சி அல்லது செல்கள் தொக்குபின் கெமிக்கல் ரியாக்சன் என்று சொல்வதை ஏன் தவறு என்கிறீர்கள் ? இறப்பின் போது செல்கள் தொடர்ப்பு அறுந்து முற்றிலும் அழிந்து போகிறது.

கோவி.கண்ணன் said...

//

ஆக்ஸ்ஃபோர்டு அகராதியில் Spirit & Spiritualism என்றால் என்ன என்று படியுங்கள். கிறித்துவர், பௌத்தம், சீக்கிய்ர், இஸ்லாமியர் அனைவரும் ஆன்மீகத்தை முழுமையாக நம்புபவர். ஆன்மீகம் இந்தியரின் சொந்தக் கருத்தில்லை.

சி. ஜெயபாரதன்//

ஜெயபாரதன் ஐயா,
கிறித்துவ நம்பிக்கைப் படி மனிதன் தவிர்த்து பிறவற்றிற்கு ஆன்மா கிடையாது அதனை ஸ்பிர்ட் என்றே கூறுவார்கள். ஸ்பிரிட்டுக்கும் அவர்கள் சொல்லும் ஆன்மா (ஸோல்) க்குக்கும் வேறுபாடு உள்ளது. விலங்குகளுக்கு ஆன்மா இல்லை, அதனைக்கொல்வது பாவம் இல்லை என்பது அவர்களது வாதம். மரம் செடி கொடி, விலங்களுக்கும் ஆன்மா உள்ளதாகச் சொல்லும் உங்கள் வாதத்திற்கு முற்றிலும் மாறுபட்டது

கோவி.கண்ணன் said...

// Jayabarathan said...
நண்பர் கோவி.க.

///ஐயா, இங்கே கேட்கப்படும் கேள்விகள் காலம் காலமாக கேட்க்கப்படுபவையே, ஏன் இன்னும் கேட்கபடுகிறதென்றால் இது வரை அவற்றிற்கான விடைகள் எதுவும் கிடைக்கவில்லை என்பதால் தான்.///

இது எத்தனை சதவீதம் ? சுமார் 10% - 20%. அதே சமயத்தில் கடவுளை நம்புவோர் சுமார் 70%-75%//

இறை நம்பிக்கையின் அடிப்படையே மனிதனுக்கு இருக்கும் மரண பயம் தான், பிறக்கும் ஒவ்வொருவரும் தனக்கு மரணம் இருப்பதை வளர்ந்த பிறகு அறிந்து கொள்ளுவர், அதன் தொடர்பிலான பயம், இவைதான் அந்த விழுக்காட்டிற்குக் காரணம். மற்றபடி இந்த விழுக்காட்டின் எண்ணிக்கையால் பெருமை பட ஒன்றும் இல்லை. யார் மரண பயம் அற்றவரோ அவர்களே தெளிவாக சிந்திக்கும் ஆற்றல் உடையோர். அந்த வகையில் 'பகவான்' புத்தருக்கென்ற வரலாற்றில் தனி இடம் உண்டு, அவரை பின்பற்றியவர்கள் பழக்கதோசத்தினால் அவரையே கடவுள் ஆக்கியதும், சனாதனத்தார் விஷ்ணுவின் அவதாரம் என்று போற்றியதெல்லாம் தனிக்கை கதை. மனிதன் தவிர்த்தும், இராம நாரயணன் படத்து விலங்குகள் தவிர்த்தும் வேறெதற்கும் இறை நம்பிக்கை கிடையாது. :) ஏனெனில் அவற்றிற்கு மரணம் என்றால் என்ன வென்றே தெரியாது, வலி மட்டுமே அறிந்திருக்கும், தாக்க வரும் போது தப்பிச் செல்ல நினைப்பது வலியினால் தானே அன்றி இறக்கப் போகிறோம் என்கிற அச்சம் எதுவும் அவற்றிற்கு கிடையாது

தருமி said...

சலாஹுத்தீன்,

//ஒரு நாட்டின் குடிமகனாக இருக்கும் ஒருவர் அந்நாட்டு சட்டதிட்டங்களுக்கு கட்டுப்படுவது நியாயம். காங்கிரஸ் கட்சி எனக்குப் பிடிக்காது என்று காரணம் சொல்லி அவர்கள் ஆட்சியில் இருக்கும்போது நான் வரி கட்ட மாட்டேன் என்று சொல்வீர்களா?//

ஓ! இதுதான் உங்கள் நியாயமா .. ரொம்பவே நல்லா இருக்குங்க உங்க நியாயம். அப்படியே புல்லரிக்குது போங்க ..
1. ஒரு உதாரணம் கொ்டுக்கும்போது கொஞ்சம் யோசித்து, சரியாகக் கொடுக்கவும். காங்கிரஸ் அரசையும், ஒரு அன்னிய அக்கிரம ஆக்கிரமிப்பாளனையும் ஒன்றாக வைத்து உங்களது விவாதம் இருக்கிறது. வித்தியாசம் புரியலையா உங்களுக்கு ..?
2. நீங்கள் சொன்னபடியே பார்த்தால், காந்தி தலைமையில் உப்பு சத்தியாக்கிரகம், வரிகொடா இயக்கம், அந்நிய துணிகள் பகிஷ்கரிப்பு எல்லாமே எம்ம்புட்டு தேச துரோகம் .. இல்லீங்க!!
அன்னியன் ஆட்சியில் இருந்தாலும் நான் வரி கட்ட மாட்டேன் என்று சொல்வது எம்புட்டு தவறு; இல்லீங்களா?!

//முஸ்லிம் மன்னர்களின் செயல்பாடுகளை இஸ்லாமோடும் இன்றைய முஸ்லிம்களோடும் தொடர்புபடுத்தாதீர்கள்.//

தொடர்பு ஏற்படுத்தும் நிலைமையைத் தொடர்ந்து தருவது யாருங்க?

//கஜினி முகமது மீது நான் பாசம் கொள்ளுமளவிற்கு அவர் எனக்கு எதையும் செய்ததாகத் தெரியவில்லை.//

அப்போ உங்களுக்கு எதையும் செய்தால்தான் நீங்கள் பாசம் கொள்ளும் 'டைப்' போலு்ம்; இல்லீங்களா?

இன்னும் கஜினியையும், பாபரையும் அக்பரையும் ஒளரங்சீப்பையும் ஒரு தட்டில் வைத்துக் கொண்டு, ராஜ ராஜ சோழனையும், ராஜேந்திர சோழனையும் இன்னொரு தட்டில் வைத்துக் கொண்டு தானே இருக்கிறது உங்கள் ஒப்பீடு.

//
நான் முஸ்லிம் மன்னர்களை தாங்கிப் பிடிக்கவில்லை//

இல்லை, நீங்கள் தாங்கிப்பிடிக்கிறீர்கள் என்று மீண்டும் குற்றம் சாட்டுகிறேன். ஏனெனில் கீழே வரும் இந்த வரிகள் எனக்கு அதைத்தான் சொல்கின்றன். உங்களால், ஆமாம் ... படையெடுத்து வந்த முஸ்லீம் மன்னர்கள் பல அராஜகங்கள் செய்தார்கள் என்று சொல்ல உங்கள் மனம் இடம் கொடுக்க மாட்டேனென்கிறதே! இன்னும்
//ஒரு சிலர் இப்படிச் செய்திருக்கலாம். ஆனால் இதுபோன்ற சம்பவங்களை விட பல முஸ்லிம் மன்னர்கள் இந்துக் கோவில்களுக்கு மானியம் அளித்திருப்பதும் blah .. blah ...// என்றுதானே சொல்கிறீர்கள்.

//இன்றைய அரசியல்வாதிகளைப் போல அன்றைய ஆட்சியாளர்களும் தங்கள் ஆட்சியதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காக ..//

இதில் ஒரு திருத்தம். அக்பரும், பாபரும், கஜினியும், ஒளரங்கசீப்பும் உங்களுக்கு இன்னும் அன்றைய ஆட்சியாளர்களாகத்தான் தெரிகிறார்கள். எனக்கோ அந்நிய, அக்கிரம, ஆக்கிரமிப்பாளர்களாகத் தான் தெரிகிறார்கள். அதுதான் நமக்குள் இருக்கும் வித்தியாசம்.

//உண்மையான தேசப்பற்று எப்படி இருக்க வேண்டும் என்று சொன்னால் உபயோகமாக இருக்கும்.//
அரிச்சுவடியிலிருந்து பாடம் கற்றுத் தரும் பொறுமை இல்லீங்க .. .. மன்னிக்கணும். ஆனாலும் உண்மையான தேசப்பற்று எப்படியிருக்க வேண்டும் என்பது தெரியாது என்று் ஒப்புக் கொண்டமைக்கு மகிழ்ச்சியே.

தருமி said...

ஜெயபரதன்,

//நீங்கள் திறந்த மனதுடன் கற்றுக் கொள்ளாது மூடிக் கொண்ட மூளையுடன் எதையும் கற்றுக் கொள்ள முடியாது.// \\நீங்கள் இருவரும் மூளைக் கதவை அடைத்துக் கொண்டு உயிரைப் பற்றியும் ஆத்மாவைப் பற்றியும் அறிந்து கொள்வது கடினம்//

அப்பாடா! எப்படியோ எங்களிருவருக்கும் மூளை இருப்பதை ஒத்துக் கொண்டுவிட்டீர்கள். ஏனென்றால் முதலுக்கே மோசம் என்றாகிவிடக் கூடாதல்லவா!!

//Anatomy, Physiology, Biology, Physics & Chemistry ஆகிய அத்தனையும் சேர்ந்து அவற்றை டைமர் வைத்து இயக்குவது Human Soul என்பது என் கருத்து. இது தவறு என்று ஆதாரமோடு விளக்குங்கள்//

இது உங்கள் hypothesis. அப்படியானால் அதை ஆதாரமோடு விளக்க வேண்டிய கடமை உங்களுக்குத்தானுண்டு. டாக்கின்ஸ் இதைத்தான் வலியு்றுத்துகிறார். வாசிக்கலையா நீங்க? (அடிக்கடி ஒண்ணு சொல்றீங்க .. டைமர் வைத்து இயக்குவது அப்டின்னு; அது என்னன்னு கொஞ்சம் விளக்கிவிடுங்களேன். புரியலை.)

//தாயின் ஆத்மாதான் சிசுவுக்கு ஆத்மாவை அளித்து உயிர்ப் பிறவி ஆக்குகிறது. //

அப்படியா? ஒண்னு செய்யுங்கள். எங்களுக்கு அடிக்கடி ஹோம்வொர்க் நிறைய குடுக்குறீங்க ..அந்த டிக்ஷனரி் பாரு..இந்த அகராதி பாரு அப்டின்னு. அது மாதிரி நீங்களும் கொஞ்சம் basic concepts of IVF (test tube baby) வாசிச்சி பாருங்க. லின்க் கூட கொடுத்திர்ரேன்:http://en.wikipedia.org/wiki/Test_tube_baby

முட்டையும் விந்தும் மனித உடலுக்கு வெளியே இணைந்து, கருவாகிறது. அது சில மணி நேரங்களில் சில செல் நிலைக்கு வந்த பிறகோ, அல்லது blastocyst என்ற நிலை (மூன்று நாட்கள் கழித்து வரும் நிலை) வந்ததுமோ பெண்ணின் உடம்பினுள் செலுத்தப் படுகிறது. ஆச்சா .. கரு என்ற நிலை வந்ததுமே அது உயிர் பெற்று விடுகிறது, அதனால்தான் மேற்கொண்டு வளர்ச்சி நடைபெறுகிறது,
உடம்புக்கு வெளியே petri dish-ல் நடந்த அந்த நிகழ்வில் எங்கே இருந்து "ஆத்மா" அந்த உடலுக்குள் வந்திருக்கும்?

//எப்படி கெமிஸ்டிரி மனித உடம்பில் கூத்தடிக்குது என்று விளக்கமாகச் சொல்லிக் கொடுங்கள். நான் தெரிந்து கொள்கிறேன்.//

விளக்கமா சொல்ல முடியாதுங்க..எந்த biology புத்தகமும் அதைச் சொல்லிக் கொடுக்கும். உங்கள் astro-physics மாதிரி எல்லாம் இல்லாமல் இது ரொம்ப ஈசியாகத்தானிருக்கும்.

இருந்தும் உங்களுக்காக ஒரே ஒரு கருத்து்: ஒவ்வொரு செல்லும் அதன் orgnanelles-ம் இயங்கும் எல்லாவித நிலைகளிலும் வேதிப் பொருட்கள்தான் முன்னிலை வகிக்கின்றன. அவைகளின் இயக்கம் physical principles படி நடக்கின்றன. mitochondriaக்களை எடுத்துக் கொள்ளுங்களேன். அதில் நடக்கும் வேதிப்பொருட்களின் இயக்கமே சக்தியை உண்டாக்குகின்றது.(that is why they are called POWER HOUSES of cells) இந்த இயக்கம் osmosis, difusion போன்ற physical principles படி நடக்கின்றன. இதைத்தான் சொன்னேன்.

Salahuddin said...

தருமி,

எனக்கு ஏதோ பதில் சொல்ல வேண்டுமே என்பதற்காக எழுதியதைப் போல இருக்கிறது உங்கள் பதில்.

//காங்கிரஸ் அரசையும், ஒரு அன்னிய அக்கிரம ஆக்கிரமிப்பாளனையும் ஒன்றாக வைத்து உங்களது விவாதம் இருக்கிறது. வித்தியாசம் புரியலையா உங்களுக்கு ..?//

நான் எதற்காக இந்த உதாரணத்தைச் சொன்னேன் என்பது மெய்யாலுமே உங்களுக்குப் புரியலையா? ஆட்சியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் 100% குடிமக்களின் ஆதரவை பெற்றிருப்பார்கள் என்று சொல்ல முடியாது. ஆனால் ஆட்சியாளர்கள் நடைமுறைப் படுத்தும் சட்டங்கள் பிடித்தவர், பிடிக்காதவர் அனைவரையுமே கட்டுப்படுத்தத்தான் செய்யும். அதைத்தான் நான் சுட்டிக் காட்டினேன்.

//காந்தி தலைமையில் உப்பு சத்தியாக்கிரகம், வரிகொடா இயக்கம், அந்நிய துணிகள் பகிஷ்கரிப்பு எல்லாமே எம்ம்புட்டு தேச துரோகம் .. இல்லீங்க!!//

ஒரு ஆட்சியாளரின் பார்வையில், வரி விதிக்கும் உரிமை அவருக்கு இருக்கிறதா இல்லையா என்பதைப் பற்றி விவாதித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், அப்படி விதிக்கப் பட்ட வரியை கட்டலாமா கூடாதா என்று நீங்கள் எதிர் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.

//முஸ்லிம் மன்னர்களின் செயல்பாடுகளை இஸ்லாமோடும் இன்றைய முஸ்லிம்களோடும் தொடர்புபடுத்தாதீர்கள்.//
தொடர்பு ஏற்படுத்தும் நிலைமையைத் தொடர்ந்து தருவது யாருங்க?//

யாருங்க?

//அப்போ உங்களுக்கு எதையும் செய்தால்தான் நீங்கள் பாசம் கொள்ளும் 'டைப்' போலு்ம்; இல்லீங்களா?//

எனது ஒரு வார்த்தையை வைத்துக் கொண்டே நான் என்ன 'டைப்' என்று முடிவு செய்து விடுவீர்கள் போலிருக்கிறது. அவரும் முஸ்லிம் நானும் முஸ்லிம் என்பதைத் தவிர நான் பாசம் கொள்ளுமளவிற்கு எனக்கும் கஜினிக்கும் வேறு எந்தத் தொடர்பும் இல்லை என்பதைத்தான் அப்படிச் சொன்னேன்.

//இல்லை, நீங்கள் தாங்கிப்பிடிக்கிறீர்கள் என்று மீண்டும் குற்றம் சாட்டுகிறேன். ஏனெனில் கீழே வரும் இந்த வரிகள் எனக்கு அதைத்தான் சொல்கின்றன். உங்களால், ஆமாம் ... படையெடுத்து வந்த முஸ்லீம் மன்னர்கள் பல அராஜகங்கள் செய்தார்கள் என்று சொல்ல உங்கள் மனம் இடம் கொடுக்க மாட்டேனென்கிறதே!//

எனது நிலையை நான் நன்றாகவே தெளிவு படுத்தி விட்டேன். அதையும் தாண்டி என் மீது குற்றம் சுமத்துவதாக இருந்தால் தாராளமாக சுமத்திக் கொள்ளுங்கள்.

//இதில் ஒரு திருத்தம். அக்பரும், பாபரும், கஜினியும், ஒளரங்கசீப்பும் உங்களுக்கு இன்னும் அன்றைய ஆட்சியாளர்களாகத்தான் தெரிகிறார்கள். எனக்கோ அந்நிய, அக்கிரம, ஆக்கிரமிப்பாளர்களாகத் தான் தெரிகிறார்கள். அதுதான் நமக்குள் இருக்கும் வித்தியாசம்.//

நானும் நீங்களும் ஒரே விதமான கருத்தைக் கொண்டிருந்தால் இந்த விவாதமே வந்திருக்காதே?

//ஆனாலும் உண்மையான தேசப்பற்று எப்படியிருக்க வேண்டும் என்பது தெரியாது என்று் ஒப்புக் கொண்டமைக்கு மகிழ்ச்சியே.//

தேசப்பற்றைப் பற்றி எனக்குத் தெரியாது என்று நான் எப்போது ஒப்புக் கொண்டேன்? தேசப்பற்று என்பதற்கு உங்கள் definition என்ன என்பதைத் தெரிந்து கொள்ளத்தான் அப்படிக் கேட்டேன்.

Jayabarathan said...

நண்பர் கோவி. கண்ணன்,


//// இதிலென்ன வியப்போ தெரியவில்லையா ? பிறக்கும் அனைவருக்குமே மரண பயம் உண்டு, அதை மறந்து பயமின்மையுடன் வாழ்வதற்காக மனிதன் படைத்துக் கொண்ட அமைப்பே கடவுள் மதம். அந்த மாயைத் தேவை இல்லை என நினைப்பவர்கள் சிலர். அவர்கள் நாத்திகர்கள் :) ///

இது மனப் பக்குவம் அடையாத ஓர் அறிஞரின் அரைகுறை அறிவு. மரணத்துக்கு அஞ்சாமல், கொலைக்கு அஞ்சாமல் பிளாஸ்டிக் வெடியை மடியில் கட்டி அப்பாவிகளைக் கொல்லும் ஜிகாத் தத்துவம் இது. www.tamilhindu.com இல் உள்ள இந்து சமயக் கருத்துக்களைப் படியுங்கள். விவேகானந்தர் எழுதிய கர்ம யோகத்தையும், ஞான யோகத்தையும் படித்துப் பாருங்கள். கடவுளைப் பற்றி விவேகானத்தர் கூறியதைப் படித்துப் பாருங்கள்.

++++++++++++

/// எந்த விலங்குக்கும் மரண பயம் கிடையாது, அவற்றிற்கான பயம் வலி குறித்து மட்டுமே. விலங்குகளுக்கு இறைவன் தேவை இல்லை என்பதற்கும் இது தான் காரணம்.///

ஆறறிவு படைத்த மனிதன் கடவுள் நம்பிக்கை வேண்டாத ஐந்தறிவு விலங்காக இருக்க வேண்டும் என்பது உங்கள் முடிவு !!!

நல்ல மனப் பக்குவக் கருத்து நண்பரே !!!

சி. ஜெயபாரதன்

கோவி.கண்ணன் said...

இஸ்லாமிய மன்னர்களின் வாரிசுகள் பலர் இந்தியாவில் தங்கிவிட்டனர், இன்றைய இஸ்லாமியர்களில் அவர்களை பிரித்து அறிவதும் கடினம். ஆனால் வெள்ளைக்காரர்களை நம்மைச் சேர்ந்தவர்களாக நினைக்க இந்திய கிறித்துவர்கள் அவர்களது வாரிசுகள் இல்லை. வெள்ளைக்காரர்கள் எல்லோருமே திரும்பிவிட்டார்கள், ஆங்கிலோ இந்திய கலப்பினம் மட்டுமே மிஞ்சுகிறது. அவர்கள் ஒருவேளை வெள்ளைக்காரர்கள் இந்தியாவுக்கு நன்மை செய்ததாக நினைக்கும் கருத்து இருக்கலாம். தமிழ் கிறித்துவ நண்பர் ஒருவர் என்னிடம் "ஈரோப்பியன்ஸ் வரவில்லை என்றால் இந்தியர்கள் கோவணத்துடன் தான் இன்றும் அலைவார்கள்" என்றார். இஸ்லாமிய மன்னர்களுக்கு ஆதரவான நிலைக்கும், வெள்ளைககார்களுக்கு எதிரான நிலைக்கும் உங்களது இந்திய கிறித்துவர் / இந்திய இஸ்லாமியர் ஒப்பீடு பொருந்திவருவதாக கருத முடியவில்லை.

Jayabarathan said...

> அன்புமிக்க தமிழச்சி,
> மனிதன் செத்தால் பிறகு..?http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=04&article=998
>
> /// இந்த காற்றுப் போக்குவரத்திற்குக் காரணமான உடலிலிருக்கும் சக்தி வேலை
> செய்யச் சக்தியற்றுப் போய்விட்டால் சுவாசம் நின்று விடுகிறது. இந்த
> நிலையைத்தான் மதவாதிகள், மூடநம்பிக்கைக்காரர்கள் ஆத்மா உடலை விட்டுப் பிரிந்து
> போய்விட்டது என்று சொல்லுகிறார்கள். ஆத்மா என்றாலே சுவாசம் (காற்று) என்று தான்
> பொருள். அது பிரிவதும் இல்லை. பிரிந்து எங்கும் போவதுமில்லை. ///


மாண்புமிகு நண்பர்கள் ஜெயபாரதன் அவர்களுக்கும் தமிழச்சி அவர்களுக்கும்
என் சிரந்தாழ்த்தி வணக்கம் தெரிவிக்கிறேன். நண்பர் ஜெயபாரதன் அவர்கள்
கூறியபடி ஆன்மா சுவாசக்காற்று அல்ல! இது பற்றி உபநிடதங்கள் பலவாக
விரிவாக‌ கூறுகின்றன. மின்சாரம் பல்பில் இயங்குகிறது. ஆனால் பல்பும்
மின்சாரமும் ஒன்றா? இல்லை.
பல்பு சரியில்லை என்றால் மின்சாரம் அங்கு இயங்காது.

உடல் இறந்தபின் ஆன்மா அதில் இயங்காது. உடல்தான் ஆன்மா என்றால் தவறு. உடல்
பல மாறூதல்களுக்கு உட்பட்டது. சிறு பிராயத்திலிருந்து முதுவயது முதல் அதே
தனி பிறவிதான். உடல் ஆன்மா என்றால் உணர்வு சக்தி மற்றும் "நான் என்ற
உணர்வு" வேறுபட்டு நினைவு தொடர் அறுபடும். ஐந்து வயதில் இருந்த நான்
இப்போது அதே பிறவி என்று எப்படி கூறுவது. ஏதோ ஒரு உணர்வு தொடர்ந்து
வருகிறது. ஆதலால் உடல் இல்லை ஏனெனில் அப்போது இருந்த உடல் இப்போது இல்லை

சுவாசமா? இல்லை. ஏனெனில் சுவாசத்தை நான் அடக்கி தற்கொலை செய்ய முடியும்.
உணவு இல்லையேல் சுவாசமும் இல்லை. மனதில் நான் நினைத்தால் உணவையும் அடக்கி
சுவாசத்தையும் அடக்க முடியும்! சுவாசம் மனதிற்கு கட்டுப்பட்டது

ஆதலால் மனம்தான் பிரதானமா? இல்லை. ஏனனெனில் மனதில் எழும் ஆசைகளை நான்
அறிவால் தெளிந்து அடக்குவேன். மனதில் எழும் ஆசைகளையெல்லாம் அடக்க எனக்கு
தெளிவும் அறிவும் வரலாம். ஆதலால் அறிவுதான் பிரதானமா? இல்லை.

அறிவும் மகிழ்ச்சியை ஆனந்தத்தை ஒட்டிதான் நடக்கிறது. துன்பத்தை
நீக்கியும் இன்பத்தை தேடியும் ஆதலால் ஆனந்தத்தை தழுவியே அறிவும், மனமும்,
சுவாசமும், உடலும் உழல்கிறது!

ஆதலால் ஆனந்தம்தான் பிரதானமோ!

"நான்" என்று கூறுவதற்கு என்ன பொருள எந்த சக்தியால் உந்தப்பட்டு நான்
செயல்படுகிறேன்? "நான்" என்பது யார்? உடலா, மனமா, சுவாசமா,அறிவா? எது?

உங்கள் பதிலை பார்த்து மேலும் எழுதுகிறேன்!


பணிவன்புடன்
உண்மைவிளம்பி
--~--~---------~--~----~------------~-------~--~----~

Jayabarathan said...

What is the Soul ?

By : Mara Freeman, 2007



The soul is the bridge that connects the personality with Spirit. Spirit (or the godhead, Creator, the Tao, etc.) is the primordial Ground of All Being. The closest we can come to it is in experiences of Cosmic Consciousness. This unified and indivisible Source cast forth sparks from Itself, so that the One became the Many. The human soul is like one of these sparks, that knows itself to be divine, yet also separate from the One. Although timeless itself, the soul proceeds on a great journey into time and space: what has been called the Arc of Involution, descending into many cycles of incarnation or what is called in the East ‘the wheel of death and rebirth.’ As it becomes more and more identified with the physical, etheric, and astral planes of existence, it forgets its divine origins altogether. When it has travelled on this Arc to the furthest point of separation, there comes a turning-point, when the soul begins its long return journey along the Arc of Evolution, eventually finding its way home again to the Source.

The soul within each of us might be compared to the bulb or rhizome of a plant. It is the stable, undying essence of the plant that lives underground. It puts down roots and sends up green shoots which grow upwards towards the sun in springtime. Leaves unfurl, flowers blossom, fruit and seeds set. When autumn comes, the plant dies and decays, returning to the soil as recyclable dead matter, and when winter comes, the ground appears bare. Yet the rhizome is still underneath the soil, and has grown in size with the nutrients it has received from the plant during the year.

The part of us we call the ‘soul’ is the hidden bulb or rhizome, which cyclically puts forth a new aspect of itself into the world of appearances. Each lifetime is a new ‘season of the soul’ wherein a new person comes into being, grows, reaches fullness, maturity and old age, then eventually dies. Just as the rhizome grows larger from its seasonal growth, so does the soul expand in consciousness with every lifetime on the physical plane. In fact, each lifetime has been designed in order to maximize the soul’s growth, evolution and maturity. Eventually, the soul will have evolved to the point when it no longer needs to incarnate in a human body. It is well on the way to the ‘Great Return’ to the divine Source from which it came and to which it will return, now fully conscious and Self-knowing.

++++++++++

Sent By S. Jayabarathan

Jayabarathan said...

Plato's Theory of the Soul

Plato theory of the soul is the origin of his theory of the state. In it he claims that the only happy person is the just person, or the person who is ruled by Reason.

According to Plato, the soul consists of three basic energies which animate human beings: Reason, Emotion, and Appetite. Reason is given the greatest value, while Emotion and especially Appetite are regarded as the “lower passions”. The soul that is ordered is governed by Reason, and therefore keeps one’s emotions and one’s appetites under control. The lower passions *must* submit to the dictates of Reason.

Plato’s theory of the soul can be found in his major work, *The Republic*, where it is a response to the challenge of the Sophists as to why one ought to live morally. The Sophists in Plato’s time were men who used philosophy for profit, inventing moral loopholes to get people out of obligations, or to excuse what would otherwise be considered immoral behavior. The skeptics ask why one ought to be moral when morality is apparently a social device for maintaining order. But if there are no consequences to “immoral behavior,” then there is no motivational pressure for morality.

Plato answers by claiming that morality is a necessary cause of happiness, that one’s happiness is correlary to one’s moral behavior. Therefore, an immoral person would be motivated to be moral if he wants to be happy. The happy person, according to Plato, is the just person, a claim that he posits in two ways:

1. If x is happy, then x is just, and

2. If x is just, then x is happy.

The response of the skeptics is to claim that daily reality contradicts Plato, and that contrary to number one, tyrants, motivated by unjust principles, may be found to be happy. Moroever, they argue that contrary to number 2, saints and renunciates are known to suffer, rather than to be happy. This is where Plato’s theory of the Soul is established. He argues to the contrary that the three basic energies of the soul must be ordered in order for a person to be happy. The Emotions (reactions like anger or fear) and the Appetites (needs for food, sex, money, etc), must be ruled by Reason (thinking, persuasion, arguement) in order for a person to be truly happy. When the lower passions are ruled by Reason, a person is also therby just.

In response to the skeptics, Plato argues that the tyrant is not therefore truly happy, and that this can be seen in his behavior. Ruled by lower passions, tyrants are known to displace Reason with Emotion, such as the fear of being assassinated, the inability to trust others; or, he will displace Reason with Appetite, such as the unsatiable greed for riches or power. In the end, such a person will be pulled apart by his lower passions, and cannot possibly find happiness with a disordered soul. Plato brings up the ancient figure of the tragic hero in order to illustrate this. Moreover, Plato argues, the suffering saint is happy amid his suffering because he is ruled by reason, and his soul is ordered. Happiness thus springs from inward qualities in the soul, according to Plato, and is not contingent upon external circumstances. When the lower passions are ordered by Reason, there is “psychic harmony,” a quality of soul that is not vulnerable to a fatal blow from an external source. A person can therefore suffer externally, and remain happy because there is harmony internally, in his soul.

The psychic harmony of the soul, according to Plato, expresses itself in four cardinal virtues, which are each related to the three basic energies of the soul. In relation to Reason, the happy or just person possesses Wisdom (or prudence). In relation to Emotion, the just person has the virtue of Courage. In relation to Appetite, the just person owns the virtue of Temperance, which is the control of natural desires. Flowing outward from this psychic harmony is the fourth cardinal virtue, Justice. Wisdom, Courage and Temperance are directly related to one’s own self-control; Justice flows outward from this harmony, and is directed towards other people through acts of charity and kindness.

Plato was prepared to say that the truly just person, whose soul is ordered, is beyond tragedy, and cannot be harmed. Such a person is leading a meangingful life, as against the immoral person. Moreover, Plato extended his theory of the Soul to encapsulate the perfect government, the Republic, led by “philosopher kings” who are just, governed by Reason. Contemporary theories of the psyche also draw upon Plato’s three basic qualities of the soul, such as the Freudian designations of Ego, Superego and Id.

+++++++++

Sent By : S. Jayabarathan

Jayabarathan said...

Greek Notion of The Soul

What is it that, when present in a body, makes it living? — A Soul.


Now, as we have seen in some detail, the Greek notion of soul included the idea of soul as animating body probably as early as the sixth century, when Thales attributed soul to magnets. Connections between the soul and morally significant characteristics such as courage, temperance and justice, and with cognitive and intellectual functions, notably with planning and practical thought, are firmly established in fifth century Greek usage. But it is obviously far from clear whether the ordinary notion of soul, as it develops from the Homeric poems down to the end of the fifth century, is a well-formed, coherent notion, one that can suitably support the very prominent role that Plato assigns to the soul, in the Phaedo as well as in other dialogues. Perhaps most pressingly, it is far from clear whether what distinguishes the animate from the inanimate is the very thing that, in the case of some animate organisms, is responsible for cognitive functions such as sense-perception and thought, and that, specifically in the case of human beings, is the bearer of moral qualities such as justice, courage and the like. The question is neither explicitly raised nor, of course, resolved in the Phaedo; but a passage in the Republic (352d-354a), with which we will be concerned in section 3.2, suggests that Plato took the ordinary notion of soul, in all its richness and bewildering complexity, to be well-formed and coherent, and to be capable of supporting the requirements of his own theory.

Given the idea that soul is the distinguishing mark of all living things, including plants, the Greek notion of soul is, as we have seen already, broader than our concept of mind. For it is at least conceivable, and probably true as a matter of fact, that there are living (hence ensouled) organisms without minds, without, that is to say, desire and cognition by sense or intellect. (Plato appears to think that plants do have minds in this sense, because he takes them to exhibit desire and sense-perception (Timaeus 77b), but that is presumably supposed to be a matter of empirical fact or inference, rather than simply a consequence of the fact that plants have souls.)

++++++++++
Sent By : S. Jayabarathan

Jayabarathan said...

Plato on the soul -2

Plato on the Immortality of the SoulLike many people today Plato held the belief that the human being was both dualistic in nature, namely comprising of two separate entities; body and soul, and possessed a soul that would survive its embodied state. Plato saw the soul as immortal through being cyclical in nature and having this cycle comprising of three states; pre - natal, embodiment, and post - mortem. Plato formulates three arguments to back up his claim that the soul is immortal; the theory of opposites, the theory of recollection and the theory of destruction. Plato touches on the theory of a souls immortality in many texts but the one text that deals principally with this issue is Phaedo. Although Plato's arguments are very cohesive and well constructed and in the day they were written must have seemed infallible, when we look back at them today there are a few flaws which leave Plato's theories and arguments somewhat unsubstantiated. In order to better understand Plato's argument as a whole this essay shall approach each theory and its problems separately before concluding them all as a whole.
The theory of opposites is the first theory that Plato offers to his compatriots in Phaedo for a proof of immortalit


This statement is backed up by a couple of examples; things become bigger from having been smaller, weaker from stronger, faster from slower, worse from better . Plato backs this claim by using the example of our knowledge of equality. This theory differs from the previous two by dealing principally with what happens to the soul after the body's death rather than the pre - natal state of the soul. The theory of recollection supposes that learning is in fact recollection, recollection of what we knew in a previous existence, so we must have at least pre-existed this life. This theory is extrapolated from Plato's theory of the Forms which supposes that the "forms are eternal unchanging and immaterial objects, known by the mind (or in our case, soul) alone". Thus if we consciously recognise this deficiency it means we must have some grasp of what equality is as itself, or perfect equality, by hypothesis it is not derived from experience, so it must have been with us before birth. The problem with this final argument is the same as the first, that Plato applies a complex and unprovable theory to an overwhelming question based only on simple observations from his own life. If we come from death to be alive then it must be true that our souls pre - existed this life and are thus immortal and cyclical in nature, "Failing this cyclic process everything would end up dead" The problem for this line of argument is simple, it assumes too much as fact and infers a complex and unprovable theory from simple observations such as from small to big that have little bearing on the overwhelming question of immortality.

This final argument is based on the notion that things that are composite are likely to break up; things that are simple are not . Thus if these opposites are so prevalent in life why not life itself, as if from sleep to being awake then Plato supposes the same must apply to life from death. The final argument to prove the immortality of the soul is the theory of destruction. For Plato's case this theory applies to his notion that "the soul is most like that which is divine, immortal, indissoluble and invariable, whereas the body is most like that which is human, mortal, dissoluble and never self - consistent" . If we handle equal sticks and stones we handle objects that we recognise do not capture equality perfectly but rather with some deficiency.

+++++++++++++++++++

Common topics in this essay:
Secondly Plato, Phaedo Plato's, Gwynneth Matthews, Immortality Soul, Firstly Plato, theory recollection, immortality soul, theory opposites theory, theory opposites, final argument, opposites theory, simple observations, based notion, complex unprovable, true souls pre, immortal cyclical, opposites theory recollection, pre natal, souls pre existed, complex unprovable theory,
++++++++++++++
Sent By : S. Jayabarathan

Jayabarathan said...

நண்பர் கோஒவி. கண்ணன்,

/// இறை நம்பிக்கையின் அடிப்படையே மனிதனுக்கு இருக்கும் மரண பயம் தான், பிறக்கும் ஒவ்வொருவரும் தனக்கு மரணம் இருப்பதை வளர்ந்த பிறகு அறிந்து கொள்ளுவர், அதன் தொடர்பிலான பயம், இவைதான் அந்த விழுக்காட்டிற்குக் காரணம். மற்றபடி இந்த விழுக்காட்டின் எண்ணிக்கையால் பெருமை பட ஒன்றும் இல்லை. யார் மரண பயம் அற்றவரோ அவர்களே தெளிவாக சிந்திக்கும் ஆற்றல் உடையோர். அந்த வகையில் 'பகவான்' புத்தருக்கென்ற வரலாற்றில் தனி இடம் உண்டு, அவரை பின்பற்றியவர்கள் பழக்கதோசத்தினால் அவரையே கடவுள் ஆக்கியதும், சனாதனத்தார் விஷ்ணுவின் அவதாரம் என்று போற்றியதெல்லாம் தனிக்கை கதை. மனிதன் தவிர்த்தும், இராம நாரயணன் படத்து விலங்குகள் தவிர்த்தும் வேறெதற்கும் இறை நம்பிக்கை கிடையாது. :) ஏனெனில் அவற்றிற்கு மரணம் என்றால் என்ன வென்றே தெரியாது, வலி மட்டுமே அறிந்திருக்கும், தாக்க வரும் போது தப்பிச் செல்ல நினைப்பது வலியினால் தானே அன்றி இறக்கப் போகிறோம் என்கிற அச்சம் எதுவும் அவற்றிற்கு கிடையாது ///

இந்தப் பாட்டி புராணத்தை இங்கு யார் தர்க்கமிடுகிறார் உங்களைத் தவிர.

வட்ட மையத்தை விட்டு நீங்கள் விட்டத்துக்கு ஏன் தாவ வேண்டும் ?
ஆத்மாவையும் கடவுளையும் பற்றிப் பேசும் போது புராணக் குப்பைகளை ஏன் கிளறுகிறீர்கள் ?

சி. ஜெ.

Jayabarathan said...

நண்பர் கோவி. க.

/// நீங்கள் உயிர்சக்தி என்று சொல்வதை செல் திரட்சி அல்லது செல்கள் தொக்குபின் கெமிக்கல் ரியாக்சன் என்று சொல்வதை ஏன் தவறு என்கிறீர்கள் ? ///

கெமிகல் ரியாக்சன் எப்படி மூளை நியூரான்களை இயக்குகிறது, நரம்புகளில் மின்னியல் சமிக்கைகளை எப்படி அனுப்புகிறது என்று விளக்குங்கள் ?

மூளையில் Subjective (Emotional) Brain & Objective (Logical) Brain என்று இரண்டு எதிர்மறைப் பகுதிகள் உள்ளன. அவற்றை கெமிகல் ரியாக்சன் எப்படி இயக்குகிறது என்று சொல்லுங்கள் ?

மூளையில் Conscious & Sub-conscious Parts என்பவற்றை ஆத்மா இயக்கி வேலை செய்கின்றன. ஆத்மா இல்லாமல் இவை முடங்கிப் போகும். அப்படி இல்லை என்று ஆதாரமோடு மறுப்புக் கூறுங்கள்.

சி. ஜெ.

Jayabarathan said...

/// கரு என்ற நிலை வந்ததுமே அது உயிர் பெற்று விடுகிறது, அதனால்தான் மேற்கொண்டு வளர்ச்சி நடைபெறுகிறது, உடம்புக்கு வெளியே petri dish-ல் நடந்த அந்த நிகழ்வில் எங்கே இருந்து "ஆத்மா" அந்த உடலுக்குள் வந்திருக்கும்? ///

கரு எங்கே உண்டாகிறது ?
தாயின் கர்ப்பப் பையில்.
கரு எங்கே வளர்கிறது ?
தாயின் கர்ப்பப் பையில்.
கருவும், சிசுவும் இரத்த ஒட்டம் பெறுவது, ஆக்ஸிஜன் பெறுவது எங்கே ?
தாயின் கர்ப்பப் பையில்.

டெஸ்ட் டியூபில் கருவுக்கு இரத்தம் ஓட்டமும், பிராண வாயுவும் வளர்ச்சிக்கு கிடைக்கா.

சி. ஜெ.

Jayabarathan said...

நண்பர் கோவி. க.


///கிறித்துவ நம்பிக்கைப் படி மனிதன் தவிர்த்து பிறவற்றிற்கு ஆன்மா கிடையாது அதனை ஸ்பிர்ட் என்றே கூறுவார்கள். ஸ்பிரிட்டுக்கும் அவர்கள் சொல்லும் ஆன்மா (ஸோல்) க்குக்கும் வேறுபாடு உள்ளது. விலங்குகளுக்கு ஆன்மா இல்லை, அதனைக் கொல்வது பாவம் இல்லை என்பது அவர்களது வாதம். மரம் செடி கொடி, விலங்களுக்கும் ஆன்மா உள்ளதாகச் சொல்லும் உங்கள் வாதத்திற்கு முற்றிலும் மாறுபட்டது ///

எல்லா மதங்களும் ஆன்மீகத்தைப் பற்றித் தனித்துவ முறையில் கூறுகின்றன. ஒரே மாதிரி அவை சொல்ல வேண்டும் என்று நீங்கள் கருதுகிறீர்களா ?

நீங்கள்தான் அது இந்து மதத்தின் சொந்த சிந்தனை என்று வாதாடினீர்கள். இப்போது மற்ற மதங்களின் ஆன்மீகம் பற்றி எனக்குச் சொல்கிறீர் !!!

சி. ஜெ.

Jayabarathan said...

நண்பர் கோவி. க.


/// மேலேயே தெரிவித்துவிட்டேன். ஆக்ஸ்போர்ட் டிக்ஸ்னரி விளக்கம் கருத்தியல் ரீதியானது மட்டுமே, ஆராய்ச்சி அல்லது அறிவியல் முடிவோ அல்ல. கடவுள் என்ற சொல்லுக்கும் கூட ஆக்ஸ்போர்டில் விளக்கம் உண்டு. அதற்க்காக அந்த அகராதி கடவுள் இருப்பதை உறுதி படுத்துவதாக எடுத்துக் கொள்ள முடியுமா ? ///

ஆத்மா என்றால் என்ன என்று ஆக்ஸ்ஃபோர்டு அகராதி கூறுவது சரியில்லை என்றால் நீங்கள் சொல்வதைப் புத்தகத்தில் போடலாமா ?

கடவுள் என்பது என்ன வென்று விளக்கும் ஆக்ஸ்ஃபோர்டு அகராதி கடவுள் உண்டா இல்லையா என்று ஏன் தர்க்கமிட வேண்டும் ?

ஐந்தாம் வகுப்பு வரை படித்த தந்தைப் பெரியார் "ஆன்மா" என்றால் "காற்று" என்று சொல்கிறார். அதைத் தமிழ் அகராதியில் போடலாமா ?


சி. ஜெ.

Jayabarathan said...

நண்பர் கோவி. க.

/// முருங்கை மரத்தையோ, சில கொடிகளின் பகுதியை வெட்டி வைத்த பிறகே வேர் முளைத்து மரமாக மாறும், அவற்றை விதை வழியாக பயிரிடுவதை விட விரைவான வழி உண்டு. வேர் மூளை என்றால், வேரின்றி குறிப்பாக கரும்பு போன்றவை வெட்டி வைத்தே (மூளை இன்றி) பயிர் செய்யப்படுவதை அறிந்திருப்பீர்கள் ! ///

காயாத கரும்புத் தண்டுக்கு உயிர் உள்ளது. அதனால் தரையில் முளைக்கிறது. பிறகு வேர் உண்டாகிறது. விதையும் உயிர் உள்ளதால் வேரில்லாமல் முதலில் முளைக்கிறது.

சி. ஜெ.

Jayabarathan said...

நண்பர் கோவி. க.

///கோமா நோயாளிகளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் ? அவர்களின் ஆன்மாவும் கோமா நிலையில் தான் இருக்குமா ? மூளை இறப்பு கேஸ் களில் கூட உடலில் இரத்த ஓட்டம் இருந்து கொண்டும், இதயம் கூட இயங்கி கொண்டு தான் இருக்கும்.///

மனித மூளையில் சில பாகங்கள் பழுதாகும் போது ஆத்மா இயக்க முடியாது மனிதன் முடமாகிறான். இரத்த ஓட்டம் நாடித் துடிப்பை உண்டாக்கினாலும், மூளைப் பாகம் பழுதடையும் போது நடமாட்டம் தடைப்பட்டுக் கோமாவில் கிடக்கிறான்.

சி. ஜெ.

Jayabarathan said...

நண்பர் சலாஹுத்தீன்

/// இந்தியப் பிரதேசங்களில் இஸ்லாம் தோன்றியதற்கு வேறு பல காரணங்கள் இருக்கின்றன. ///

1.இஸ்லாமிய மதன் இந்தியாவில் எப்படிப் பரவியது என்று சொல்லுங்கள் ?

2.முகலாயருக்கும் இஸ்லாமியருக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன ? முகலாயர் எங்கே இருக்கிறார் ? இஸ்லாமியர் எங்கே இல்லை ?இருவரும் குர்ரானைத்தானே பின்பற்றுகிறார்.

3. இஸ்லாமியர் ஆட்சியே ஏற்படாத தமிழ் நாட்டில் எப்படி இஸ்லாமியர் இத்தனை பேர் இருக்கிறார் ? அவர் ஒரிஜினல் இஸ்லாமியரா அல்லது மாற்றப் பட்ட இஸ்லாமியரா ?

சி. ஜெ.

Jayabarathan said...

நண்பர் கோவி. க.

///நீங்கள் கையை வீசினால் உங்களது சக்தி அங்கே செலவிடப் படுகிறது, அதன் பிறகு உங்கள் கைப்பட்ட பொருள் கிழே விழுகிறது. நீங்கள் கையை வீச உங்களுக்கு உடலில் சக்தி இருக்க வேண்டும், அந்த சக்தி உணவு மூலம் உங்களுக்கு கிடைக்கிறது. இறைச் செயலுக்கான சக்தி எங்கிருந்து கிடைக்கிறது ? சூனியம், ஜீரோ இதிலிருந்த எந்த சக்தியையும் உருவாக்க முடியாது.///

1. Toatl Energy in a System is a constant.

2. Energy cannot be created or destroyed.

3. Energy can be converted from one for to another.

The Energy Man gets from food, like fruits & vegetables or animal meats was already available to him from Nature.

In the empty space (Vacuum) there is plenty of Dark Energy & Dark Matter.

S. J.

Jayabarathan said...

First Test-Tube Baby - Louise Brown
By Jennifer Rosenberg, About.com


On July 25, 1978, Louise Joy Brown, the world's first successful "test-tube" baby was born in Great Britain. Though the technology that made her conception possible was heralded as a triumph in medicine and science, it also caused many to consider the possibilities of future ill-use.

Previous Attempts

Every year, millions of couples try to conceive a child; unfortunately, many find that they cannot. The process to find out how and why they have infertility issues can be long and arduous. Before the birth of Louise Brown, those women who were found to have Fallopian tube blockages (approximately twenty percent of infertile women) had no hope of becoming pregnant.

Usually, conception occurs when an egg cell (ovum) in a woman is released from an ovary, travels through a Fallopian tube, and is fertilized by the man's sperm. The fertilized egg continues to travel while it undergoes numerous cell divisions. It then rests in the uterus to grow.

Women with Fallopian tube blockages cannot conceive because their eggs cannot travel through their Fallopian tubes to get fertilized.

Dr. Patrick Steptoe, a gynecologist at Oldham General Hospital, and Dr. Robert Edwards, a physiologist at Cambridge University, had been actively working on finding an alternative solution for conception since 1966. Though Drs. Steptoe and Edwards had successfully found a way to fertilize an egg outside a woman's body, they were still troubled by problems after replacing the fertilized egg back into the woman's uterus. By 1977, all of the pregnancies resulting from their procedure (about 80) had lasted only a few, short weeks.

Lesley Brown became different when she successfully passed the first few weeks of pregnancy.

Lesley and John Brown

Lesley and John Brown were a young couple from Bristol who had been unable to conceive for nine years. Lesley Brown had blocked Fallopian tubes. Having gone from doctor to doctor for help to no avail, she was referred to Dr. Patrick Steptoe in 1976. On November 10, 1977, Lesley Brown underwent the very experimental in vitro ("in glass") fertilization procedure.

Using a long, slender, self-lit probe called a "laparoscope," Dr. Steptoe took an egg from one of Lesley Brown's ovaries and handed it to Dr. Edwards. Dr. Edwards then mixed Lesley's egg with John's sperm. After the egg was fertilized, Dr. Edwards placed it into a special solution that had been created to nurture the egg as it began to divide.

Previously, Drs. Steptoe and Edwards had waited until the fertilized egg had divided into 64 cells (about four or five days later). This time, however, they decided to place the fertilized egg back into Lesley's uterus after just two and a half days.

Close monitoring of Lesley showed that the fertilized egg had successfully embedded into her uterus wall. Then, unlike all the other experimental in vitro fertilization pregnancies, Lesley passed week after week and then month after month with no apparent problems. The world began to talk about this amazing procedure.

Ethical Problems

Lesley Brown's pregnancy gave hope to hundreds of thousands of couples not able to conceive. Yet, as many cheered this new medical breakthrough, others were worried about future implications.

The most important question was whether this baby was going to be healthy. Had being outside the womb, even for just a couple of days, harmed the egg? If the baby has medical problems, did the parents and doctors have a right to play with nature and thus bring it into the world? Doctors also worried that if the baby wasn't normal, would the process be blamed whether or not it was the cause?

When does life begin? If human life begins at conception, are doctors killing potential humans when they discard fertilized eggs? (Doctors may remove several eggs from the woman and may discard some that have been fertilized.)

+++++++++++

Jayabarathan said...

நண்பர் கோவி. கண்ணன்,

ஆறாம் அறிவுக்கு மேல்... !

/// கண்டுபிடிப்புகள் அனைத்துமே பல்வேறு மூலப்பொருள்களின் சேர்க்கை அல்லது மாற்றம் என்பவைதானே. ////

இது முழுமை பெறாத அரைகுறைக் கருத்து. உதாரணமாக நியூட்டன் கண்டு பிடித்த ஈர்ப்பியல் சக்தி, கருமைச் சக்தி, கரும் பிண்டம் போன்றவை தனித்துவம் பெற்றவை. எதனுடனும் இணையாதவை.

+++++++++++++

/// நாம் கண்டுபிடிக்காதவை அனைத்துமே நம் அறிவைப் பொருத்தவரை ஒழுங்கற்ற அல்லது குழப்பமானவை என்று சொல்வதே பொருத்தமானது.///

இது முரணான தவறான கருத்து.

++++++++++++

// கண்டுபிடித்த பொருள்கள் ஒழுங்கான, தெளிவான என்ற நிலைக்கு அதன் சமன்பாடுகள் அறியப்பட்டு, வரையறைக்குள் வந்துவிடுகிறது. //

நியூட்டன் கண்டுபிடித்த ஈர்ப்பாற்றல் ஐன்ஸ்டைனால் மாற்றம் அடைந்தது. இப்போது ஐன்ஸ்டைன் ஈர்ப்பியலும் கூடிய சீக்கிரம் மாறப் போகிறது.

+++++++++++++

/// அதாவது உலக, பிரபஞ்ச பொருள்கள் அதன் இயக்கங்கள் இவற்றை ஒழுங்கான (கண்டுபிடிக்கப்பட்ட) மற்றும் ஒழுங்கற்ற (இது வரை கண்டறியப்படாத) என்ற இரு வகைக்குள் தான் இருக்கின்றன. ///

ஒழுங்கான வகை, ஒழுங்கற்ற வகை என்று யார் இப்படிப் பிரித்தார் ? இது தவறான வகுப்புக் கண்ணோட்டம்.

+++++++++++++++++

/// இந்திய சமயசார் தத்துவங்கள் டார்வின் கொள்கையை ஏற்றுக் கொள்கின்றன. டார்வின் கொள்கையை ஏற்றுக் கொள்வதில் இந்திய மதங்களுக்கு இருக்கும் மறைமுக சிக்கல், உயிரினங்களின் தோற்றம் என்பவை காலமாற்றத்தினால் ஏற்பட்ட ஜீன்களின் உருமாற்றத்தால் உருவானவை என்கிற அடிப்படையில் அமைந்திருப்பதால், இங்கே இறைவனின் படைப்புக் கொள்கையை எங்கே இடைச் சொருகுவது என்பது அந்த சிக்கல். டார்வின் கொள்கையை ஒரு மதம் ஏற்றுக் கொண்டால், அது கிட்டதட்ட இறைவனின் படைத்தல் தொழிலை மறுப்பது போன்றதாகும், ///

டார்வின் கொள்கைப்படி ஐந்தறிவு உள்ள மனிதக் குரங்கிலிருந்து ஆறறிவு படைத்த மனிதன் Cosmic Designer இடையே செம்மைப்ப் படுத்தாமல் தோன்றியிருக்க முடியாது. ஏனெனில் அது காரண-விளைவு (The Cause & Effect Theory) நியதிக்கு முரணாக இருக்கிறது.

++++++++++++++++

/// நமக்கு கிடைக்கும் அறிவின் தொகுப்பு பகுத்தறிவு, அறிவியல் ஆன்மிகம் இப்படி எதன் மூலம் வந்திருந்தாலும் அவை இயங்கு பொருள்களில் இருக்கும் ஒழுங்குமுறையை அறிந்து கொள்வதை மட்டுமே தந்திருக்கிறது. ///

இதில் வரும் ஆன்மீகத்துக்கு என்ன அர்த்தம் ? ஆன்மீகத்தை நம்பாத நீங்கள் அதில் உள்ள ஒழுக்க முறைகள் என்ன வென்று விளக்கமாகச் சொல்லுங்கள் ?

++++++++++++++++++++

/// ஒரு வித்திற்குள் முழுவளர்ச்சியின் தன்மையை அடங்கி இருப்பது மிக மிக நுட்பமான ஒன்று, நம் மனித அறிவால் விளங்கிக் கொள்ளவும் முடியாது, ///

/// ஆறாம் அறிவின் மூலம் இயற்கையை முழுவதுமோ ஆராய்ந்துவிட முடியும் என்கிற மனித முயற்சி இயற்கையின் பேரறிவுக்கும் முன்பு பெரும் அறைகூவல் தான். பகுத்தறிவாளர்கள் அல்லது இறைமறுப்பாளர்கள் இறைவனை நம்பத் தேவையில்லை என்றாலும் மனித அறிவுடன் ஒப்பிட முடியாத அளவுக்கு இயற்கை பேரறிவு மிக்கது என்பதை ஒப்புக் கொண்டே ஆகவேண்டும்.///

பூமியிலே கோடான கோடி மரஞ்செடி கொடிகளை நட்டது எது ? பிரபஞ்ச உயிரினப் படைப்பிலே உன்னத மனித இனத்தைப் படைத்தது எது ? உலகத்திலே படைக்கப் பட்டவை அனைத்தும் ஒரு வகை விளைவுப் பயன்களை நோக்கியே ஏன் உருவாகப் பட்டுள்ளன ? இவையெல்லாம் மாயமாய் வரவில்லை. மந்திர சக்தியால் உருவாக வில்லை. இவற்றை யெல்லாம் முடத்துவ இயற்கை படைத்ததுவா ? அல்லது உலகியற்றியான் படைத்தானா ?

சி. ஜெயபாரதன்

வால்பையன் said...

கடவுள் என்றொரு மாயை என்ற தலைப்பில் உள்ள பதிவில் கடவுளைத்தவிர அனைத்தும் விவாதிக்கப்படுகிறது!

உங்க அளவுக்கு நான் படிக்கல!
ஆனாலும் இங்களை விட சந்தோசமா என் வாழ்க்கை கழியிறதா நான் நம்புறேன்.

என் அறிவுக்கு எட்டாத கடவுள் உங்க அறிவுக்கு எட்டியிருப்பார்ன்னு பார்த்தா அங்கேயும் குழப்பம் தான் போல!

படித்து முட்டாளாய் இருப்பதை விட படிக்காமலேயே முட்டாளாய் இருன்னு எங்க தாத்தா சொல்லுவாரு!

சும்மா ஞாபகம் வந்தது சொன்னேன்!

தருமி said...

jeyabarathan,

பெண் A-யிடமிருந்து முட்டை;
X-யிடமிருந்து விந்து. உண்டாகும் கரு பெண் B-யின் கருவறையில் புகுந்து, வளர்ந்து வரும் குழந்தைக்கு யாருடைய ஆன்மா இருக்கும்?

Salahuddin said...

நண்பர் ஜெயபாரதன்,

//1.இஸ்லாமிய மதன் இந்தியாவில் எப்படிப் பரவியது என்று சொல்லுங்கள் ?//

மொகலாயர் வருகைக்கும் பல்லாண்டுகளுக்கு முன்பே இஸ்லாம் இந்தியாவில் தோன்றிவிட்டது. முஹம்மது நபி அவர்களின் ஆயுட்காலத்திலேயே அவர்களின் போதனைகளை அறிந்த சேரமான் பெருமாள் என்ற மலபார் பகுதியின் அரசர் முஸ்லிமாகி இந்தியாவின் முதல் பள்ளிவாசலை கட்டியதாக வரலாற்றுக் குறிப்புகள் இருக்கின்றன. மொகலாய மன்னர்கள் வராமலே போயிருந்தாலும் இந்தியாவில் இஸ்லாம் வளர்ந்திருக்கும்.

//2.முகலாயருக்கும் இஸ்லாமியருக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன ? முகலாயர் எங்கே இருக்கிறார் ? இஸ்லாமியர் எங்கே இல்லை ?இருவரும் குர்ரானைத்தானே பின்பற்றுகிறார்.//

எல்லா மொகலாயரும் இஸ்லாமியராக இருக்கலாம். ஆனால் எல்லா இஸ்லாமியரும் மொகலாயர்கள் அல்ல.

//3. இஸ்லாமியர் ஆட்சியே ஏற்படாத தமிழ் நாட்டில் எப்படி இஸ்லாமியர் இத்தனை பேர் இருக்கிறார் ? அவர் ஒரிஜினல் இஸ்லாமியரா அல்லது மாற்றப் பட்ட இஸ்லாமியரா?//

இந்தியாவில் இஸ்லாம் பரவ மொகலாயர்கள் காரணமல்ல என்பதற்கு தமிழகமே சிறந்த சான்று. ஒரிஜினல் இஸ்லாமியர் என்று நீங்கள் யாரைக் குறிப்பிடுகிறீர்கள் என்று தெரியவில்லை. அரேபியர் அல்லது மொகலாயர்களை குறிப்பிடுகிறீர்கள் என்று நினைக்கிறேன். அப்படியென்றால் தமிழக முஸ்லிம்கள் அந்த 'ஒரிஜினல் இஸ்லாமியர்' அல்ல. மாற்றப்பட்ட இஸ்லாமியரும் அல்ல. மாறிய இஸ்லாமியர்.

தருமி said...

//எனக்கு ஏதோ பதில் சொல்ல வேண்டுமே என்பதற்காக எழுதியதைப் போல இருக்கிறது உங்கள் பதில்.//
அப்டிங்களா??!

//ஆட்சியாளர்கள் நடைமுறைப் படுத்தும் சட்டங்கள் பிடித்தவர், பிடிக்காதவர் அனைவரையுமே கட்டுப்படுத்தத்தான் செய்யும். அதைத்தான் நான் சுட்டிக் காட்டினேன்.//

இதற்குத்தான் பதில் சொல்லிவிட்டேனே. காந்தியார் செய்தது என்னவென்று. அதை நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை போலும்.

//அவர்கள் ஆட்சியில் இருக்கும்போது நான் வரி கட்ட மாட்டேன் என்று சொல்வீர்களா?//
சொல்வேன்; சொல்ல வேண்டும். அதுதான் ஆங்கிலேயர் ஆட்சியில் நடந்தது.

//ஒரு ஆட்சியாளரின் பார்வையில், வரி விதிக்கும் உரிமை அவருக்கு இருக்கிறதா இல்லையா என்பதைப் பற்றி விவாதித்துக் கொண்டிருக்கிறோம். //

மீண்டும் மீண்டும் நான் சொல்வது: நீங்கள் அவர்களை ஆட்சியாளர்களாகத்தான் பார்க்கிறீர்கள், அதுதான் தவறென்று சொல்லிக் கொண்டிருக்கிறேன். புரிந்து கொள்ள மறுக்கிறீர்கள். அந்நியனுக்கு நம் மேல் வரி விதிக்க ஏது உரிமை என்று நான் கேட்கிறேன். நீங்கள் அவர்களுக்கு (ஒளரங்கசீப்) உரிமை இருக்கிறது என்பது மட்டுமல்லாமல் ஜிஸ்யா என்னும் வரியை கொஞ்சூண்டுதானே நம் மேல் ஏற்றினார் என்று பெருமையடிக்கிறீர்கள்.

Salahuddin said...

நண்பர் கோவி கண்ணன்,

//இஸ்லாமிய மன்னர்களின் வாரிசுகள் பலர் இந்தியாவில் தங்கிவிட்டனர், இன்றைய இஸ்லாமியர்களில் அவர்களை பிரித்து அறிவதும் கடினம்.//

நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் இன்றைய இந்திய முஸ்லிம்களின் எண்ணிக்கையில் இந்த வாரிசுகள் மிகச் சொற்ப அளவில்தான் இருப்பார்கள். அதுவும் வட இந்திய பிரதேசங்களில் மட்டும். பெரும்பான்மை இந்திய முஸ்லிம்கள் இந்திய வம்சாவளியில் தோன்றியவர்கள்தான்.

தருமி said...

Plato's Theory of the Soul
Plato on the soul -2
Greek Notion of The Soul
இதை நான் மட்டுமல்ல யாரும் வாசித்திருக்க மாட்டார்கள் என்று தான் நினைக்கிறேன். ஒன்று அதில் உள்ள சாராம்சத்தை மேற்கோளிடுங்கள். இப்படி ஹோம் வொர்க் கொடுக்காதீர்கள்!

//First Test-Tube Baby - Louise Brown
By Jennifer Rosenberg, About.com//

எதற்கு இது?

//மனித மூளையில் சில பாகங்கள் பழுதாகும் போது ஆத்மா இயக்க முடியாது//
அப்போ ஆத்மா மூளையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. மூளையைப் பற்றி அதன் ஒவ்வொரு பாகம் பற்றி, neurons பற்றி பலப்பல அறிவியல் சோதனைகள் நடந்துள்ளன. மூளையின் எந்தப் பகுதியும் இப்படி ஆன்மைவைக் கட்டுப்படுத்துவதாக எந்த அறிவியல் சோதனையும் சொன்னதாகத் தெரியவில்லை.

தருமி said...

//கடவுள் என்றொரு மாயை என்ற தலைப்பில் உள்ள பதிவில் கடவுளைத்தவிர அனைத்தும் விவாதிக்கப்படுகிறது!//பதிவுக்குத் தொடர்பில்லாத விஷயங்களே மிகவும் இங்கு வந்துள்ளது உண்மைதான் வால்ஸ். அது எனக்கும் வருத்தமே. நானெடுத்துக் கொண்ட நூலின் கருத்துக்கள் பற்றிய விவாதங்களாக இருந்தாலே நன்றாக இருக்கும். இந்த முதல் பகுதியை மட்டும் "இப்படி" விவாதித்து விட்டு மீதிப் பகுதிகளை அம்போன்னு விட்டுட்டு போக வேண்டியதிருக்கு.

Salahuddin said...

நண்பர் தருமி,

//மீண்டும் மீண்டும் நான் சொல்வது: நீங்கள் அவர்களை ஆட்சியாளர்களாகத்தான் பார்க்கிறீர்கள், அதுதான் தவறென்று சொல்லிக் கொண்டிருக்கிறேன். புரிந்து கொள்ள மறுக்கிறீர்கள்.//

அன்றைய காலத்தில் படையெடுப்பு, போர்கள் மூலமாகத்தான் ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்தன. அவ்வாறு ஆட்சியைக் கைப்பற்றி 5 நூற்றாண்டுகள் இந்தியாவை ஆட்சி புரிந்தவர்களை ஆட்சியாளர்கள் என்று ஒப்புக் கொள்வதில் எனக்கு எந்தப் பிரச்னையுமில்லை.

//அந்நியனுக்கு நம் மேல் வரி விதிக்க ஏது உரிமை என்று நான் கேட்கிறேன். நீங்கள் அவர்களுக்கு (ஒளரங்கசீப்) உரிமை இருக்கிறது என்பது மட்டுமல்லாமல் ஜிஸ்யா என்னும் வரியை கொஞ்சூண்டுதானே நம் மேல் ஏற்றினார் என்று பெருமையடிக்கிறீர்கள். //

ஜிஸ்யா வரியைப் பற்றிச் சொன்னது எனது சொந்தக் கருத்தல்ல. பெருமையடித்துக் கொள்வதற்காகவும் நான் அதைச் சொல்லவில்லை. இந்துக்களை முஸ்லிம்களாக மதம் மாற்றத்தான் ஜிஸ்யா வரி விதிக்கப்பட்டது என்று பொய்யான வரலாறு போதிக்கப் படுவதால் அதை மறுக்க நேரிடுகிறது.

கரைகண்டம் கி. நெடுஞ்செழியன் என்பவர் எழுதிய 'முஸ்லிம் மன்னராட்சியில் இந்தியாவின் முன்னேற்றம்' என்ற புத்தகத்தில் Prof.Sathish Chandra என்ற வரலாற்று ஆய்வாளரை மேற்கோள் காட்டி இவ்வாறு குறிப்பிடுகிறார்:

"ஔரங்கசீப் ஆட்சிக்கு வந்து 22 ஆண்டுகளுக்குப் பிறகு கி.பி. 1679-ல் ஜெசியா வரியை விதிக்க முடிவு செய்தார். அதே நேரத்தில் ஏழைகள், பெண்கள், குழந்தைகள், உடல் ஊனமுற்றோர், அரசு பணியில் உள்ளோர், வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்வோர், என எண்ணற்றோர் இந்த வரியிலிருந்து விலக்குப் பெற்றனர். மொத்தத்தில் இந்த வரியைச் செலுத்தியவர்களின் எண்ணிக்கை மிகவும் சொற்பம் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

அதே நேரத்தில் இந்த வரி விதிப்பானது, இஸ்லாமியர் அல்லாதோர் இஸ்லாமியராக மதம் மாற வேண்டும் என்ற நிர்ப்பந்தத்திற்காகவோ, இஸ்லாத்தை இந்த வரி விதிப்பின் மூலம் நாடு முழுவதும் பரப்பி விடலாம் என்ற ஆசையினாலோ ஔரங்கஜேப் இந்த வரிவிதிப்பை அமுல்படுத்தவில்லை. ஆனால் இந்த வரி விதிப்பின் மூலம் அரசியல் ரீதியாக தன்னை எதிர்த்து கிளர்ச்சி செய்து வந்த தக்காண சுல்தான்களை திருப்தி படுத்தி விடலாம் என்று ஔரங்கஜேப் ஓர் அரசியல் கணக்கைப் போட்டார் என்கிறார் பேராசிரியர் சதீஸ் சந்திரா.

"Aurangazeb's hope that reviving Jizyah, he would be able to rally Muslim opinion behind him, especially in the context of a likely contest with the Deccani Muslim States, remained largely unfil filled"

என்றாலும் 1705 ஆம் ஆண்டு இந்த வரியினையும் ஔரங்கஜேப் அடியோடு நீக்கி விட்டார்"

தருமி said...

//அன்றைய காலத்தில் படையெடுப்பு, போர்கள் மூலமாகத்தான் ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்தன. அவ்வாறு ஆட்சியைக் கைப்பற்றி 5 நூற்றாண்டுகள் இந்தியாவை ஆட்சி புரிந்தவர்களை ஆட்சியாளர்கள் என்று ஒப்புக் கொள்வதில் எனக்கு எந்தப் பிரச்னையுமில்லை//

ஆமாம் .. நானும் அதைத்தான் சொல்கிறேன்: உங்களுக்கு அதில் எந்தப் பிரச்சனையுமில்லை என்று.

நன்றி

கோவி.கண்ணன் said...

//கெமிகல் ரியாக்சன் எப்படி மூளை நியூரான்களை இயக்குகிறது, நரம்புகளில் மின்னியல் சமிக்கைகளை எப்படி அனுப்புகிறது என்று விளக்குங்கள் ?

மூளையில் Subjective (Emotional) Brain & Objective (Logical) Brain என்று இரண்டு எதிர்மறைப் பகுதிகள் உள்ளன. அவற்றை கெமிகல் ரியாக்சன் எப்படி இயக்குகிறது என்று சொல்லுங்கள் ?

மூளையில் Conscious & Sub-conscious Parts என்பவற்றை ஆத்மா இயக்கி வேலை செய்கின்றன. ஆத்மா இல்லாமல் இவை முடங்கிப் போகும். அப்படி இல்லை என்று ஆதாரமோடு மறுப்புக் கூறுங்கள்.

சி. ஜெ.//

அப்படிப் பார்த்தால் மின் கலன் (பேட்டரிக்கும்) ஆன்மா இருக்கனும் :) மின் சாரம் பாய்ந்ததும் விளக்கு எரிவது இல்லையா ? இங்கே செல்கள், செல்களின் இயக்கம்

கோவி.கண்ணன் said...

Jayabarathan said...

நண்பர் கோவி. கண்ணன்,


//// இதிலென்ன வியப்போ தெரியவில்லையா ? பிறக்கும் அனைவருக்குமே மரண பயம் உண்டு, அதை மறந்து பயமின்மையுடன் வாழ்வதற்காக மனிதன் படைத்துக் கொண்ட அமைப்பே கடவுள் மதம். அந்த மாயைத் தேவை இல்லை என நினைப்பவர்கள் சிலர். அவர்கள் நாத்திகர்கள் :) ///

//இது மனப் பக்குவம் அடையாத ஓர் அறிஞரின் அரைகுறை அறிவு. மரணத்துக்கு அஞ்சாமல், கொலைக்கு அஞ்சாமல் பிளாஸ்டிக் வெடியை மடியில் கட்டி அப்பாவிகளைக் கொல்லும் ஜிகாத் தத்துவம் இது. www.tamilhindu.com இல் உள்ள இந்து சமயக் கருத்துக்களைப் படியுங்கள். விவேகானந்தர் எழுதிய கர்ம யோகத்தையும், ஞான யோகத்தையும் படித்துப் பாருங்கள். கடவுளைப் பற்றி விவேகானத்தர் கூறியதைப் படித்துப் பாருங்கள். //


இறைவன், ஆன்மிகம், ஆன்மா என்று பேசியவர் திடிடென்று ' வெள்ளைக்காரன் வராவிட்டால் அனைவரும் குல்லா அணிய வேண்டி வரும்' என்று இஸ்லாமிய வெறுப்பைக் கொட்டினாரே ஏன் என்று நினைத்தேன். இப்போதுதான் காரணம் புரிகிறது. நீங்கள் சுட்டி இருக்கும் இணையத்தளம் கரசேவைக்காரர்களுக்கானது. விவேகனந்தரையாவது இந்துத்துவத்திலிருந்து விடுதலை அளிக்காவிட்டால் பாவம் அவரது கருத்துக்களும் இந்து மதக் குப்பையாக நினைத்து புறக்கணிக்கும் நிலைமைக்கு சென்றுவிடப் போகிறது என்ற கவலை எனக்கு எப்போதும் உண்டு.


மேலும் விவேகநந்தரைப் பற்றி நிறையவே படித்து இருக்கிறேன். பிரம்மம் பற்றி மிகுதியாக பேசுவார். பிரம்மம் என்றால் தனித்து அறியும் கடவுள் கிடையாது. அது அத்வைத கொள்கை. புத்தரின் நிர்வாணத்தத்துவம் ஏதுவுமில்லை என்பது, அதற்கு மாற்றாக அத்வைதம் 'எல்லாம் அது' என்பது. உதாரணத்துக்கு ஒரு குடுவையைப் பார்த்த நான் வெறும் குடுவை என்கிறேன். எடுக்கு மடக்காக ஒருவர் அதில் காற்று இருக்கலாம் என்கிறார். இதுதான் நிருவானத்தத்துவத்துக்கும் பிரம்மதத்துவத்துக்கும் உள்ள வேறுபாடு, இரண்டிலுமே தனித்தறியும் இறைவன் கிடையாது. விவேகநந்தரின் ஞான யோகத்தை நன்றாக படித்துவிட்டு கடவுள் என்று அவர் எதைக் குறிப்பிடுகிறார் என்று சொல்லுங்கள், நான் படித்து இருக்கிறேன்

கோவி.கண்ணன் said...

///// எந்த விலங்குக்கும் மரண பயம் கிடையாது, அவற்றிற்கான பயம் வலி குறித்து மட்டுமே. விலங்குகளுக்கு இறைவன் தேவை இல்லை என்பதற்கும் இது தான் காரணம்.///

ஆறறிவு படைத்த மனிதன் கடவுள் நம்பிக்கை வேண்டாத ஐந்தறிவு விலங்காக இருக்க வேண்டும் என்பது உங்கள் முடிவு !!!

நல்ல மனப் பக்குவக் கருத்து நண்பரே !!!

சி. ஜெயபாரதன்//

விலங்குகளைப் பார்த்தாவது மரணபயமின்றி இருக்கலாம் என்பதில் என்ன தவறு ?, சொர்கம் அனுப்புகிறேன் என்று அப்பாவிகளை வஞ்சித்து. சொர்கம் செல்ல குதிரைகளும் ஒருகாலத்தில் யாகக் குண்டத்தில் தூக்கிப் போடப் பட்டது என்பது தெரியுமா ? பெண்ணடிமைத்தனம் இன்னும் எத்தனையோ பழமைவாதம் இவை அனைத்தும் மதம் என்ற பெயரில் கட்டமைத்து, அதை இறைவன் வகுத்தான், அளித்தான் என்ற பெயரில் மக்களுக்கு திணித்ததைவிட மனிதன் விலங்குகள் போல் பயமின்றி வாழலாம் என்பதில் தவறு இல்லை. காக்கா கூட்டத்தைப் பாருங்க அதுக்கு கற்றுக் கொடுத்தது யாருங்க என்று தானே சொல்கிறார்கள். உங்க பரிணாம நம்பிக்கைப் படி குரங்கில் இருந்து பரிணாமம் பெற்ற மனிதன் கூடவே தனக்கென இறைவனையும் படைத்துக் கொண்டான் என்று நான் சொல்வதில் என்ன தவறு ? மனிதன் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் ஒரு 'நாகரீக விலங்கு' தான்

கோவி.கண்ணன் said...

//டார்வின் கொள்கைப்படி ஐந்தறிவு உள்ள மனிதக் குரங்கிலிருந்து ஆறறிவு படைத்த மனிதன் Cosmic Designer இடையே செம்மைப்ப் படுத்தாமல் தோன்றியிருக்க முடியாது. ஏனெனில் அது காரண-விளைவு (The Cause & Effect Theory) நியதிக்கு முரணாக இருக்கிறது. //

நான் டார்வின் கொள்கை சரி என்றே சொல்லவில்லை. அது ஒரு தியரி மட்டுமே. காஸ்மிக் டிசைனர் ? ஏன் மரபியல் மாற்றம் என்று சொல்லக் கூடாது ? கூனிக் கொண்டே ஏழு தலைமுறை நடந்தால் எட்டாவது தலைமுறையில் உள்ளவர்கள் கூனத் தேவையில்லை கூனராகவே மாறிவிடுவர். மரபனுவில் மாற்றம் ஏற்படும். உலகில் பல்வேறு சூழல்களில் பல்வேறு இனங்களின் முகங்கள், உடலமைப்புகள் மாறி இருப்பது சுற்றுச் சூழலில் தொடர்ந்து ஏற்படுபவையே ஏற்படுபவையே. வீரிய பயிர்களும் மரபியல் அடைப்படையில் மாற்றப் படுகிறது. இதெல்லாம் எந்த காஸ்மிக் டிசைனர் வந்து படைத்தார் ? இந்தியாவில் 3000 ஆண்டுகளுக்கு முன் நுழைந்த ஆரியர்களுக்கு இந்திய முகம் வந்துவிடவில்லையா ?

கோவி.கண்ணன் said...

//இதில் வரும் ஆன்மீகத்துக்கு என்ன அர்த்தம் ? ஆன்மீகத்தை நம்பாத நீங்கள் அதில் உள்ள ஒழுக்க முறைகள் என்ன வென்று விளக்கமாகச் சொல்லுங்கள் ?//

எண்ணியல் முறைகள், கணக்குகள் நாம் நம் வசதிக்காக ஏற்படுத்திக் கொண்டது, அதில் அடங்காதவற்றை அதில் இல்லாதவற்றை நாம் எப்படி அறிய முடியும் ? இன்னும் 1000 நூற்றாண்டுகள் மனிதன் இயற்கையை அழித்து தானும் அழியாமல் இருந்தால் ஒருவேளை அறிய வாய்ப்புக் கிடைக்கலாம். மற்றபடி அனைத்தும் இறைவனின் படைப்பு என்பதை நான் எப்போதும் நிராகரிக்கிறேன்

//

பூமியிலே கோடான கோடி மரஞ்செடி கொடிகளை நட்டது எது ? பிரபஞ்ச உயிரினப் படைப்பிலே உன்னத மனித இனத்தைப் படைத்தது எது ? உலகத்திலே படைக்கப் பட்டவை அனைத்தும் ஒரு வகை விளைவுப் பயன்களை நோக்கியே ஏன் உருவாகப் பட்டுள்ளன ? இவையெல்லாம் மாயமாய் வரவில்லை. மந்திர சக்தியால் உருவாக வில்லை. இவற்றை யெல்லாம் முடத்துவ இயற்கை படைத்ததுவா ? அல்லது உலகியற்றியான் படைத்தானா ?

சி. ஜெயபாரதன்//

திரும்பவும் பழைய கதை. மாற்றம் மாற்றம் ஒன்றிலிருந்து பிரிதொன்றாக மாறும் மாற்றம் ! நான் கேட்ட டைனசர்களின் ஆன்மா என்ன ஆனது என்பதற்கு பதிலே இல்லை. முதலில் கோழியா ? முட்டையா ? இதுக்கு விடை சொல்லுங்கள். நட்டான் படைத்தான் என்றால் மரத்தை நட்டானா ? விதையை படைத்தானா ? கோழி - முட்டை இவை ஒரே பொருளின் இரு தன்மைகளாக இருந்து,எப்போதும் இருப்பவையாகவே இன்றும் இருக்கக் கூடாது ? மேலும் இங்கே இருக்கிறது

Jayabarathan said...

நண்பர் தருமி,

/// பெண் A-யிடமிருந்து முட்டை;
X-யிடமிருந்து விந்து. உண்டாகும் கரு பெண் B-யின் கருவறையில் புகுந்து, வளர்ந்து வரும் குழந்தைக்கு யாருடைய ஆன்மா இருக்கும்? ///

The greatness of the Cosmic Creater is this: Each individual has his own Soul & individuality. When Uyir enters a Fetus in the Mother's womb, it grows as an individual Soul.

Boys & Girls from the same parents will all have different Souls which spell out their typical behaviours & individualities.

If perhaps twins are born, their Souls appears to be 99% identical. Is it not amazing to see the twin children are identical in many respects to prove the Soul Theory.

S. Jayabarathan

தருமி said...

//Is it not amazing to see the twin children are identical in many respects to prove the Soul Theory.//

NO, SIR. It sounds only ridiculous.

அது எப்படி சார், நேரடியான கேள்விக்குக் கூட பதில் சொல்லாம இப்படி என்னென்னமோ உங்க சொந்த தியரிகளையா உதிர்க்கிறீங்க ..!?

என் 'ஆன்மா'வுக்கு இதெல்லாமே பிடிக்கலைங்க....

Jayabarathan said...

நண்பர் கோவி. க.

/// அப்படிப் பார்த்தால் மின் கலன் (பேட்டரிக்கும்) ஆன்மா இருக்கனும் :) மின் சாரம் பாய்ந்ததும் விளக்கு எரிவது இல்லையா ? இங்கே செல்கள், செல்களின் இயக்கம் ///

உயிருள்ள மனிதனுக்கும் விலங்கு, பயிரினங்களுக்கும் வெவ்வேறு ஆன்மாக்கள் உள்ளன. நீங்கள் கூறிய முடத்துவப் பாட்டரிக்கு உயிர் கிடையாதே.

சி. ஜெ.

தருமி said...

பட்டாம்பூச்சி பற்றிய உங்களது தவறான புரிதலுக்குச் சரியான சமயத்தில் வந்துள்ள, நீங்கள் கட்டாயம் வாசிக்க வேண்டிய பதிவு:பார்க்க.

Jayabarathan said...

நண்பர் தருமி,

/// NO, SIR. It sounds only ridiculous.

அது எப்படி சார், நேரடியான கேள்விக்குக் கூட பதில் சொல்லாம இப்படி என்னென்னமோ உங்க சொந்த தியரிகளையா உதிர்க்கிறீங்க ..!? ///

Truth will be bitter & the real facts are hard to swallow if you have preconceived ideas about the Soul.

" The Soul Theory belongs to the Great Greek Thinker Plato.

S.J.

Jayabarathan said...

நண்பர் தருமி,

/// பட்டாம் பூச்சி பற்றிய உங்களது தவறான புரிதலுக்குச் சரியான சமயத்தில் வந்துள்ள, நீங்கள் கட்டாயம் வாசிக்க வேண்டிய பதிவு: ///

பதிவுக்கு நன்றி. பட்டாம்பூச்சி முட்டை இடுவதை அறிந்து கொண்டேன். ஆனாலும் (சில) பட்டம் பூச்சிகள் முட்டையிலிருந்து நேரடியாகப் பறக்கும் பூச்சிகளாக வரவில்லை என்பது மறுக்கப் படவில்லையே.

சி. ஜெ.

தருமி said...

//ஆனாலும் (சில) பட்டம் பூச்சிகள் முட்டையிலிருந்து நேரடியாகப் பறக்கும் பூச்சிகளாக வரவில்லை என்பது மறுக்கப் படவில்லையே.//

உங்கள ஒண்ணும் பண்ண முடியுது'ங்க!

//" The Soul Theory belongs to the Great Greek Thinker Plato//

So what'ங்க?
2300 வருசத்துக்கு முந்தி ஒருத்தர் சொன்னதுங்களா ... நல்லதுங்க. நன்றி.

ஒண்ணு பண்ணலாமுங்களா .. இந்தப் பதிவில் நம்ம ஆட்டத்தை முடிச்சுக்குவோமா. at least மற்ற பதிவுகளிலாவது பதிவை ஒட்டிய விவாதங்களை மட்டும் வைத்துக் கொள்வோமா... நன்றி.

பை .....

Anonymous said...

Great discussion. Thanks to Tharumi.

சுந்தரம் சின்னுசாமி said...

பல பிரச்சினைகளுக்கு அறிவியலால் தீர்வு சொல்ல முடியாது என்னும் வாதமே பொய்யானது. பல பிரச்சினைகளுக்கு அறிவியல் தீர்வு கண்டதுடன் மட்டுமல்லாது மதங்களால் அவிழ்த்துவிடப்பட்ட கட்டுக்கதைகளையும் அறிவிய தகர்த்தெறிந்திருக்கிறது என்பதே உண்மை. பிரபஞ்சத்தின் தோற்றம் மற்றும் அதன் இருப்புப் பற்றி அறிவியல் ஆராய்ந்துகொண்டுதான் இருக்கிறது - சுய விருப்பு வெறுப்பற்ற பார்வையில். மதங்களைப்போல் அதாரமற்ற முடிவுக்கு வந்து "இதுதான் காரணம். இதை நீ நம்பித்தான் ஆகவேண்டும்" என்று கூறுவதில்லை. ஆனாலும் அறிவியல் இன்னும் கடக்க வேண்டிய தூரம் இன்னும் எவ்வளவோ இருக்கிறது என்பதையும் அது உணர்ந்தேதான் இருக்கிறது. எல்லாவற்றிற்கும் ஒரு காரணம் இருக்கும் என்பது உலகியல் அனுபவத்தின் முடிவாக இருக்கிறது. பிரபஞ்சத்திற்கான காரணம் கடவுள் என்று மதங்கள் நிருவ முயல்கின்றன. காரணமின்றியே ஒரு நிகழ்வு நிகழலாம் என்றோ, அல்லது பிரபஞ்ச சிருஷ்டிக்கு கடவுள் காரணமல்ல வேறு ஏதோ ஒன்று என்று அறிவியல் நிறுவினால் கடவுள் காணாமல் போய் விடுவார்.

Jayabarathan said...

http://www.tamilhindu.com/author/aravindan/

S. Jayabarathan
http://jayabarathan.wordpress.com/

தருமி said...

நீலகண்டனின் பல கட்டுரைகள் நீங்கள் கொடுத்துள்ள முதல் தொடுப்பில் உள்ளது. எதை அல்லது எல்லாவற்றையுமே நான் வாசித்துக் கொள்ளவா?

இரண்டாவது தொடுப்பு உங்கள் கட்டுரை. இப்பதிவுக்குத் தொடர்புள்ளதா என்று தெரியவில்லையே!

Jayabarathan said...

Please read the first article
"Expanding Universe" by Aravindan.

S. Jayabarathan

Unknown said...

kadavul erukiraro ellaiyo anal eyarkai enru onru erukirathu

தருமி said...

your name strikes a bell!!! it is my g.daughter's name too.

see : http://jjessica13.blogspot.in/

«Oldest ‹Older   201 – 311 of 311   Newer› Newest»

Post a Comment