Monday, July 27, 2009

325. காவல்துறைக்கு அனுப்பிய கடிதம்.

*

*

"கிணறு வெட்ட பூதம்" என்ற தலைப்பில் பதிவர் ஸ்ரீ ரமேஷ் சதாசிவம் இட்ட பதிவினைப் படித்து, அதிர்ந்து, அதன் தொடர்பாக அப்பதிவின் பின்னூட்டத்தில் கொடுக்கப் பட்ட காவல்துறை முகவரிக்குக் கீழ்க்கண்ட புகாரினை அனுப்பியுள்ளேன்.

அப்பதிவினைப் படித்து, நீங்களும் உங்கள் புகாரையோ அல்லது நானனுப்பியுள்ள புகாரின் நகலையோ நீங்களும் அனுப்ப வேண்டிக்கொள்கிறேன். அதன் முகவரி: http://www.tnpolice.gov.in/mailcomplaint.php

மேற்சொன்ன முறையில் கடிதம் அனுப்பு சிரமம் உள்ளது. அதோடு பெனாத்தல் சுரேஷ் சொன்ன ஒரு திருத்தத்தின் பேரில் இந்த புகார் கடிதத்தை விடவும் நேரடியாக போலீஸ் கமிஷனர் அவர்களுக்கு ஒரு கடிதம் / தந்தி இட்டால் நல்லது என்று கருதப் படுகிறது. ஆகவே கீழ்க்காணும் கடிதத்தை அனைவரும் அனுப்பி நம் பதிவுலக ஒற்றுமையையும், நடக்கும் ஒரு போராட்டத்தில் சிறு பங்கெடுக்கவும் அழைக்கப்படுகிறீர்கள்.




====================================================================





To
Commissioner of Police,
Police commissioner's office,
Egmore,
Chennai- 600 008





ஸ்ரீ ரமேஷ் சதாசிவம் என்ற ஒரு தமிழ்ப்பதிவர் தனது பதிவு ஒன்றில் - http://thirumbiparkiraen.blogspot.com/2009/07/blog-post.html - தான் நடத்திவரும் ஒரு அறப்போராட்டம் பற்றி எழுதியுள்ளார். தொடர்ந்து போராடி வரும் அவரது போராட்டத்தின் அற நிலை குறித்த நம்பிக்கையாலும், அவரது தொடர் போராட்டம் ஒரு ந்ல்ல முடிவைக் காண வேண்டும் என்பதாலும் இதனை உங்களிடம் கொண்டுவருகிறேன்.

1) திரு நாராயணன் தன் தவறை உணார்ந்து நல்ல நீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
2) ஆய்வாளரும் துணை ஆய்வாளரும் சட்டத்துக்கு புறம்பாக செயல்பட்டது குறித்து வருத்தம் தெரிவிக்க வேண்டும்
3) காவல் துறைக்கு வரும் எல்லா புகார்களுக்கும் ரசீது கொடுக்கப்பட வேண்டும். அப்படி ரசீது கொடுப்பது தங்கள் கடமையென காவல் துறை மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மக்கள் ரசீது பெறுவது தங்கள் உரிமையென்பதை உணர்வதற்கான விளம்பரங்கள் வெளியிடப் பட வேண்டும்.




================================================


உயர் காவல்துறையினருக்கு,

ஸ்ரீ ரமேஷ் சதாசிவம் என்ற ஒரு தமிழ்ப்பதிவர் தனது பதிவு ஒன்றில் - http://thirumbiparkiraen.blogspot.com/2009/07/blog-post.html - தான் நடத்திவரும் ஒரு அறப்போராட்டம் பற்றி எழுதியுள்ளார். தொடர்ந்து போராடி வரும் அவரது போராட்டத்தின் அற நிலை குறித்த நம்பிக்கையாலும், அவரது தொடர் போராட்டம் ஒரு ந்ல்ல முடிவைக் காண வேண்டும் என்பதாலும் இதனை உங்களிடம் கொண்டுவருகிறேன்.


*சூளைமேடு ராகவா தெருவில் உள்ள சரவணம் மேன்ஷனின் உரிமையாளர் திரு.நாராயணன் அவர்களிடம் கடந்த 9 மாதங்களாக தான் தங்கியுள்ள அறைக்கு நல்ல நீர் தர முயலவேண்டும் என்று ரமேஷ் சதாசிவம் தொடர்ந்து போராடி வருகிறார். இதற்காக அவர் தன் பதிவில் காவல்துறையினர் இதுவரை எத்துணை 'துணை'யாக இருந்துள்ளனர் என்பதையும் தெளிவாக எழுதியுள்ளார்.

• எழிலகத்தில் உள்ள தமிழ் நாடு குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்தை அணுகி பெற்ற அறிக்கையில், தமிழ் நாடு குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்தின் இளநிலை நீர் ஆய்வாளர் திருமதி. சந்த்ரிகா நாங்கள் பயன் படுத்தும் நீரில் மனித மலத்தின் கலவை மிக அதிக அளவில் இருப்பதாக கூறினார். நூற்றுக்கு முப்பத்தாறு என்கிற விகிதம் எள்ளளவும் சகித்துக்கொள்ள கூடிய அளவில்லை என்றும் கூறியுள்ளார்.

• இப்பிரச்சனையில் துணை ஆய்வாளர் திரு. த. ராதாகிருஷ்ணன், ஆய்வாளர் முனைவர். திரு. செல்வகுமார், நுங்கம்பாக்கம் துணை ஆணையர் ஆகியோர் தலையிட்ட விதம் அப்பதிவில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

• *மாநில மனித உரிமை நீதிமன்றத்தில் ஜூன் பதினொன்றாம் தேதி வழக்கு பதிவு செய்துள்ளார்.

• *குற்றவியல் நீதி மன்றத்திலும் என்னை மிரட்டியது குறித்து வழக்கு பதிவு செய்யவுள்ளார்.

• *நுகர்வோர் நீதி மன்றத்திலும் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு பதிவு செய்யவுள்ளார்.

இன்னும் விடிவுக்காகக் காத்திருக்கிறோம். இன்னொரு பதிவன் என்ற முறையில் நடக்கும் விஷயங்களில் மக்களின் காவலர்களான நீங்கள் அப்பதிவரின் நடவடிக்கைகளுக்கு முறையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டுகிறேன்.

இக்கடிதம் ஏற்கெனவே ஈஸ்வரி என்பவர் அனுப்பிய 709TRID6 என்ற எண்ணிட்டப் புகாரோடு தொடர்புடையது.

===================================================

33 comments:

ramesh sadasivam said...

அன்புள்ள நண்பரே, நீங்கள் செய்திருக்கும் உதவி மகத்தானது. என்றென்றும் இதை நினைவு கூறுவேன். மிக்க நன்றி. இந்த முயற்சிகளால் இனிமேலும் தவறுகள் நேராதிருந்தால், அதுவே நமக்கு கிடைக்கும் வெற்றி. நெகிழ்ச்சியுடன், ரமேஷ்.

ramesh sadasivam said...

குற்றவியல் நீதி மன்றத்தில் 16-07-2009 அன்று வழக்கு பதிவு செய்துவிட்டேன். அது 29-06-09 அன்று, சம்மன் அனுப்பபடுவது குறித்து பரிசீலனைக்கு வருகிறது. என் தளத்தில் அன்று இரவு இது பற்றி பதிவு செய்கிறேன்.

நாகை சிவா said...

அனுப்பியாச்சு!

Your Complaint No Is : 709NGP36

தருமி said...

என்ன? இன்னும் சத்தம் ஏதும் உங்களிடமிருந்து இல்லை?!

நம் பதிவர்களின் மொத்த ஈடுபாட்டைக் காண்பித்தால் நிச்சயம் பதிவுலகத்தின் தாக்கத்தை அது காவல்துறைக்கு உணர்த்தாதா? வாருங்கள் எல்லோரும் ஒரு புகாரை அனுப்புவோம் ... நல்ல எதிர்காலத்தை ஆரம்பிப்போம் ...

நாமக்கல் சிபி said...

அனுப்பியாச்சு!

+1 குத்தி இருக்கேன்!

நட்புடன் ஜமால் said...

நல்ல காரியம்.

நாமும் ஜோதியில் ஐக்கியம்!

இங்கு அழைத்து வந்த
நாமக்கல்-சிபிக்கும் நன்றி

நட்புடன் ஜமால் said...

Your Complaint No Is : 709CHI49

+ 1

துபாய் ராஜா said...

அறப்போராட்டத்திற்கு தோள் கொடுப்போம்.

The complaint No is 709CHI50

பதிவுலக நண்பர்கள் அனைவருமே புகார் அனுப்ப முன்வரவேண்டும்.

வால்பையன் said...

அனுப்பிடுவோம்!

குழலி / Kuzhali said...

Warning: session_start() [function.session-start]: Cannot send session cache limiter - headers already sent (output started at F:\tnpolice\mailcomplaint.php:128) in F:\tnpolice\securimage\securimage.php on line 422

Warning: odbc_exec() [function.odbc-exec]: SQL error: [Microsoft][ODBC SQL Server Driver][SQL Server]String or binary data would be truncated., SQL state 22001 in SQLExecDirect in F:\tnpolice\mailcomplaint.php on line 292
output

எனக்கு இதாங்க அய்யா வருது

மெளலி (மதுரையம்பதி) said...

தருமி சார்,

இந்த முயற்சியில் என் பங்களிப்பு இதோ!

Complaint No Is : 709CHI58

திரு ஸ்ரீ ரமேஷ் சதாசிவம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

கவிதா | Kavitha said...

Complaint No Is : 709CHI45

கவிதா | Kavitha said...

Mr.Kuzhali, plz dont use caps... for verification code...

வோட்டாண்டி said...

muyarchikku vazthukkal..
solrennu thappa nenachikadheenga..
indha online complaint system ellam endha latchanathulla velai paaakudhu kankooda "Department of adminstrative reforms and public greviances"la paarthavan naan..

just escaped narrowly before it boomeranged on me...

online pugaar anuppi adhu moolama tiharku poga virumbulla..

iyalaamaiku varundhugiren..

Thamiz Priyan said...

தமிழ் யுனிகோட் மூலம் தட்டச்சு செய்தவைகளைப் படிக்கும் வசதி அரசு கணிணிகளில் இருக்காது என்று நினைக்கிறேன். ஆங்கிலத்தில் மாற்றித் தந்தால் வசதியாக இருக்கும்.

தினேஷ் said...

எனக்கும் புகார் பதிவு செய்ய மாட்டேங்குது

Warning: session_start() [function.session-start]: Cannot send session cache limiter - headers already sent (output started at F:\tnpolice\mailcomplaint.php:128) in F:\tnpolice\securimage\securimage.php on line 422

Warning: odbc_exec() [function.odbc-exec]: SQL error: [Microsoft][ODBC SQL Server Driver][SQL Server]String or binary data would be truncated., SQL state 22001 in SQLExecDirect in F:\tnpolice\mailcomplaint.php on line 292
output

நாமக்கல் சிபி said...

//Mr.Kuzhali, plz dont use caps... for verification code...//

அப்பவும் எரர் வருதே!

ஜோ/Joe said...

குழலி சொல்லிய அதே பிரச்சனை தான் எனக்கும் வருகிறது (For both CAPS and small)

Santhosh said...

என்னோட எண் 709CHI91. மேலும் Complaint என்ற இடத்தில் தருமி குறிப்பிட்டுள்ள மொத்த பதிவையும் copy paste செய்யாதிங்க இந்த பதிவின் நீளத்தை காட்டிலும் அதன் கொள்ளளவு குறைவு, குழலிக்கு வந்தது போல error வரும் எனவே முதல் பத்தியை மட்டும் அதில் குறிப்பிட்டு தருமி ஜய்யா குறிப்பிட்டுள்ள complaint எண்ணை குறிப்பிட்டால் போதுமானது என்று நினைக்கிறேன்.

Gurusamy Thangavel said...

//Mr.Kuzhali, plz dont use caps... for verification code...//

I did get the same warning message as Kuzali had got. Kavitha's suggestion did not work for me.

Pot"tea" kadai said...

Your Complaint Has Been Registered Successfully.Your Complaint No Is : 709CHI96

தருமி said...

தனிக் கடிதமும் இங்குபின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றி. சில மாற்றங்களில் பதிவில் செய்துள்ளேன். மீண்டும் வாசித்து ஆவன செய்ய அழைக்கிறேன்.

நாமக்கல் சிபி said...

அப்பாடா! ஒரு வழியா நாமளும் ரெஜிஸ்டர் பண்ணிட்டம்! நேத்திலேர்ந்து 15/20 தபா டிரை பண்ணி பண்ணி...
ஒரு வழியா....!

Your Complaint Has Been Registered Successfully.Your Complaint No Is : 709CHI99

துபாய் ராஜா said...

போலிஸ் கமிஷனரது இணையதள முகவரி இருந்தால் அனுப்ப எளிதாக இருக்கும்.

கண்டுபிடிக்க முயற்சிக்கிறேன்.

நண்பர்களும் முயற்சித்து பாருங்கள்.

Ram said...

Dear Ramesh,
I have moved one small crystal of sand in a beach. The complaint no. is 709CHI100. I read the entire proceedings with a sense of dejection. Where is the system headed? Concerted effort from like-minded people on a persistent basis is the only solution.
Regards
Ram

ramesh sadasivam said...

தருமி அவர்களுக்கும் அவரது கோரிக்கையை ஏற்று புகார்களாய் அனுப்பிக் கொண்டிருக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

ramesh sadasivam said...

தருமி சார், வலை மூலமாக புகார்களை அனுப்புபவர்கள் அனுப்பட்டும். நமக்கு தேவை இது குறித்து நிறைய புகார்கள் வர வேண்டும் என்பது தானே? :) பரீசீலனை செய்து பாருங்கள். நான் சொல்வது சரி தானே?

ramesh sadasivam said...

துபாய் ராஜா அவரகளுக்கு நன்றி,

commissioner's email address cop@vsnl.net

கவிதா | Kavitha said...

Friend’s
I did get the same error msg as you all get. I did the following -

1. Did reduce the subject line length and tried – not worked out

2. Did reduce the content of the complaint and tried – not worked out

3. Then last I tried this space between the verification words, caps, small letter etc.. when I did this “small letters without any space” it worked.. hence I suggested this..

Anyway yday itself I could suggest all other options too.. oopps.. I failed !! :) sry dude’s :)

தருமி said...

கீழே உள்ளதுபோல் ஆங்கிலத்தில் ஒரு புகார் கடிதம் இட்டேன். ஏற்றுக் கொள்ளப்பட்டு எண்ணும் வந்தது. (குறிக்க விட்டுப் போயிற்று!!)

This refers to the long case of Mr. Sri Ramesh Sadhasivam, which has been clearly made out in his blog: http://thirumbiparkiraen.blogspot.com/2009/07/blog-post.html

Please take note how the police officers of your department treat this case. This is to support his fight for justice. PLEASE.

தருமி said...

எம்முறை சரியாக வருகிறதோ அந்த முறையைப் பயன்படுத்தி நம் கோரிக்கைகளை அனுப்பி வைப்போம்.

பொதுவாக நம் பதிவர்களில் பலரும் இதில் காட்டும் ஈடுபாடு நல்ல நம்பிக்கையைத் தருகிறது. ஆகவே முடிந்தவரை பல பதிவர்கள் இம்முயற்சியில் கைகொடுக்க வேண்டுகிறேன். தவறாது தங்கள் எண்ணங்களை அனுப்பி விடுங்கள்.

நம் எல்லோரின் முதல் முயற்சி நல்ல பயன் தருமென நம்புகிறேன்.

தராசு said...

தருமி ஐயா,

அனுப்பி விட்டேன்.

Your Complaint Has Been Registered Successfully.Your Complaint No Is : 809CHI4

passerby said...

Mr Dharumi!

It is in the complainட் as demand no.2:

2) ஆய்வாளரும் துணை ஆய்வாளரும் சட்டத்துக்கு புறம்பாக செயல்பட்டது குறித்து வருத்தம் தெரிவிக்க வேண்டும்

This is cowardice, Mr Dharumi.

In a democracy, none is above law. According to the version of the petitionar Mr R.Sadasivam, the police manhandled the bros, used other tactics to obstruct the course of law to them, by locking them up, without cause, or trumped up charges, or trivial charge like looking at the badge of the SI. These are high handedness in violationn of law, which make them accused under law. They should be proceeded against under law for that. Mere aplogy is not only succumbing to the culprits, but also, you are becoming a party to the violators of law.

The Demand No.2 should be:


2. சட்டத்துக்கு புறம்பாக செயல்பட்ட
ஆய்வாளர் துணை ஆய்வாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Post a Comment