Thursday, February 03, 2011

472. ராபர்ட் க்ளைவ் - நல்லவர்; ஜெனரல் டயர் - மிக மிக நல்லவர்: புரிந்து கொள்ளுங்கள்.

*

ராபர்ட் க்ளைவ் - நல்லவர்; 
ஜெனரல் டயர் - மிக மிக நல்லவர்: 

புரிந்து கொள்ளுங்கள்.



எப்டின்னு கேக்குறீங்களா ...


அதுக்கு முன்னால் ஒரு வார்த்தை:

என்னடா .. இந்தப் பதிவில் அங்கங்கே சில நீல எழுத்துக்கள் தலை நீட்டுகிறதே என்று நீங்கள் கேட்கலாம். ஒன்றும் பெரிய விஷயமில்லை. அவைகள் எல்லாமே கடன் வாங்கிய எழுத்துக்கள்”. அதனால்,  இப்பதிவை வாசிப்பதற்கு முன் இன்னும் இரு பதிவுகளையும் அதன் பின்னூட்டங்களையும் வாசித்தால் இன்னும் நலம் !

1.   http://thiruchchikkaaran.wordpress.com/2011/01/31/aurangaseebs-imposition-of-religious-tax-on-poor-dhimmis/


2. http://suvanappiriyan.blogspot.com/2011/02/blog-post.html
Image and video hosting by TinyPic


ராபர்ட் க்ளைவ் தன் 19-ம் வயதிலேயே ஒரு குமாஸ்தாவாக இந்தியாவுக்கு வந்தார். ஆனாலும் அவர் ரொம்ப ஒழுங்கானவர்; மிகுந்த புத்திசாலி. இவர் ரொம்ப மண்டூவாக இருந்ததால்தான் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டார் என்று சில வரலாற்று ஆசிரியர்கள் தவறான ஒரு செய்தியை நம்மிடம் பரப்பி விட்டனர். இதுபோல்தான் //நம்முடைய வரலாற்றுப் பாட நூல்களில் எத்தனையோ பொய்களை அரங்கேற்றி இன்று வரை மாணவர்களுக்கு போதித்து வருகிறார்கள். // பல இந்தியர்கள் ஆங்கிலேயர்கள்  //மேல் வெறுப்பை உமிழ காரணம் இளம் வயதில் படித்த இத்தகைய வரலாற்று பாட நூல்களே! இதை நாமும் நம்பி விடுகிறோம்.//

ஆனால் க்ளைவ் அப்படிப்பட்டவரல்ல. பார்த்த குமாஸ்தா வேலையில் இருக்கும்போதே பிரஞ்ச், டச் நாட்டுக்காரர்கள் இந்தியாவில் இல்லாமல் ஆக்கி விட வேண்டுமென்று பாடுபட்டார். இந்தியாவின் வரலாற்றை இப்படி உருவாக்கியவர்தான் க்ளைவ். இது இப்போதைய இந்தியர்களுக்குத் தெரியுமா?

விவிலியத்தில் ரோமானியர்களுக்கு உரியதை ரோமானியர்களுக்கும், செசேரியனுக்குரியதை செசேரியனுக்கும் கொடுத்துவிடு என்று ஏசு கூறியிருக்கிறார். அதே போல் க்ளைவ் பாண்டிச்சேரி போர்க்களத்திலும் சண்டையிட்டு நவாபுக்கு துணை நின்று அவரை பிரஞ்சு படையிடமிருந்து காப்பாற்றினார். நல்ல வேளை - இப்படி ஒன்று நடக்காவிடில் நம் நாட்டின் அன்றைய நிலை எப்படியெப்படியோ மாறிப்போயிருந்திருக்கும். 1613-லிருந்து 1947 வரை எப்படிப்பட்ட பொற்காலம். இத்துணை காலம் அவர்கள் இங்கு ஒரு நல்ல காலனியாதிக்கத்தை வைத்திருந்தார்கள் என்றால்  //மேலோட்டமாக சொல்லாமல் ஆதாரத்தோடு அதை வரலாற்றாசிரியர்கள் விளக்கி இருக்க வேண்டுமே! // அதுவுமின்றி ஏறத்தாழ மூன்று நூற்றாண்டுகள் அவர்கள் இங்கு நம்மை ஆண்டிருக்கிறார்கள். இதற்கு //முன் இந்தியாவை ஆண்டவர்களின் ஆட்சியை விட இவர்களின் ஆட்சி நிம்மதியாக இருந்ததால்தான் 350 வருடம் இந்தியாவை அவர்களால்ஆள முடிந்தது.//

அதைவிடவும் இவர் இந்தியாவிலிருந்து தாய்நாடு திரும்பியதும் அவர் வைத்திருந்த செல்வத்தைப் பார்த்து பொறாமை கொண்ட மக்கள் அவர் மீது பல குற்றச்சாட்டுகளை வைத்து அவர் மேல் வழக்கு தொடுத்தனர். அவர் குற்றமற்றவர் என்பது நிருபணம் ஆனது. இன்று அவர் நம்மோடு நம் நாட்டில் இருந்திருந்தால் இந்திரா காந்தியின் நகர்வாலா கொலை வழக்கு நடக்க விட்டிருப்பாரா? ராஜீவி காந்தியின் போபர்ஸ் வழக்கு நடக்க விட்டிருப்பாரா? இல்லை ...இன்று ஆ.ராசா மாதிரி ஆட்கள் வந்திருக்க முடியுமா? இந்த வரலாற்று உண்மைகளா ஆய்ந்து பார்க்க வேண்டாமா? நல்ல ஒரு கிறித்துவராக, பண்பாளராக இருந்ததால்தான் அவர் மேலிட்ட வழக்கில் அவர் நல்லவர் என்று நிரூபணம் ஆனது.

ஆனாலும் மிகுந்த நல்லவரான க்ளைவ் வழக்கில் வெற்றி பெற்றாலும் ’தன்மேல் இப்படி ஒரு பழியா?” என்ற நல்ல மனிதனுக்குரிய உயர்ந்த மனதால், மிகவும் மனக்கஷ்டப்பட்டு தன் 49-வது வயதில் தற்கொலை செய்து கொண்டு மோட்சம் ஏகினார்.

இந்த அளவு நல்ல உள்ளம் கொண்ட க்ளைவ் இந்தியாவில் செய்த அளப்பரிய நல்ல காரியங்களுக்காக William Pitt the Elder என்ற வரலாற்றாசிரியர் க்ளைவ் அவர்களை இந்தியாவிற்கான, இங்கிலாந்திற்கான 'heaven sent general' என்று அழைத்தார். எவ்வளவு உயர்வான மனிதர் க்ளைவ்!!!

--------------

Brigadier-General Reginald Edward Harry Dyer


Image and video hosting by TinyPic
 

க்ளைவ் நம் நாட்டில் ஆங்கிலேயர் காலடி வைக்கத்தான் போராடி, அதன் மூலம் பல சின்னச் சின்ன பகுதிகளாக சிதறுண்டு கிடந்த நம் நாட்டை ஒன்றாக்கும் முதல் முயற்சியை எடுத்தார். அப்படி ஒன்று சேர்ந்த பிறகு அந்நாடு  அந்த கட்டுக்கோப்போடு இருக்க வேண்டுமா இல்லையா? அதற்காக பெரும்பாடுபட்டவர் ஜெனரல் டயர். ஜாலியன்வாலா பாக் உங்களுக்கு நினைவுக்கு வரவேண்டுமே! அன்று இருபதாயிரம் பேர் கூடி இருந்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக கோஷம் போட துணிந்தனர். நாட்டை ஒன்றாக்கி நல்லாட்சி செய்யும் எந்த அரசும் என்ன செய்ய வேண்டும்? முதலில், நாட்டைக் காக்க வேண்டும். அதைத்தானே டயர் செய்தார் !

அதோடு அவர் ஒரு பெரும் படையின் தலைவர். அவருக்கு வந்த கட்டளை அந்தக் கூட்டத்தைத் தடுக்க வேண்டும்; கலைக்க வேண்டும். அதற்கான உத்தரவும் வந்தது. பின் ஒரு நல்ல தலைவன் என்ன செய்வான்? சுடச் சொல்வான். அவனது சிப்பாய்கள் - அதில் மிகப் பலர் இந்தியர்களே - சுட்டார்கள். இதில் டயர் மீது என்ன தவறு. கட்டளையைப் புறக்கணிக்காமல் தன் கடமையைத்தானே செய்தார். ஆளுமைக்குப் பயந்து நட என்று விவிலியத்தில் சொல்லவில்லையா? பின் டயர் மீது என்ன தவறு?

20,000 மக்களை நோக்கி அவர் என்ன பீரங்கி குண்டுகளையா போட்டார்? வெறும் துப்பாக்கி மூலம் 1600 ரவுண்டுகளைப் பயன்படுத்தினார்.  Mishra Planeswalker என்ற வரலாற்றாசிரியர் மக்களைக் கொல்ல வேண்டுமென்பதற்காக சுட்டிருந்தால் இன்னும் பல குண்டுகளை அல்லவா செலவழித்திருக்க வேண்டும் என்ற ஒரு அழகான ஒரு கேள்வியை நம்முன் வைக்கிறார். துவேஷத்தில் இருக்கும் இந்தியர்கள் இதை நினைத்துப் பார்க்க வேண்டும்.

அதோடு, ஜாலியன்வாலா பாக் நிகழ்ச்சிக்குச் சில நாட்களுக்கு முன் அமிர்தசரஸில் Miss Marcella Sherwood என்ற ஆங்கிலேய இளம்பெண்ணை இந்தியர்கள் சிலர் தாக்கியுள்ளார்கள். சில இந்தியர்களே அவளை பின் காப்பாற்றியுள்ளார்கள். இருந்தும், ஒரு  பெண்ணை அடித்துத் துன்புறுத்தியவர்கள் என்பதால் டயர் அதிக சினம் கொண்டிருந்தார். குற்றம் செய்யாதவர்கள் முதல் கல்லை இந்தப் பெண்ணின் மேல் எறியுங்கள் என்றாரே விவிலியத்தில். எதற்காக?  ஒரு பெண்ணைக் காப்பாற்ற. அதே போல் இங்கும் டயர் ஒரு பெண்ணை அடித்தவர்களைத் தண்டிக்க எண்ணி ஜாலியன்வாலா பாக் நிகழ்ச்சியில் நியாயமான ஒரு கோபத்தோடு, தவறு செய்தவர்களைத் தண்டிக்க வேண்டுமென்ற தன்மான தைரியத்தோடு நடந்து கொண்டுள்ளார்.

அதோடு டயர் வேறு நேரங்களில் தவறாக நடந்து கொண்டதாக எக்குறிப்பும் இல்லை.  //அப்படியே கொடுமை படுத்தியிருந்தாலும் அவை வரலாறுகளில் பதியப் பட்டிருக்குமே! மேலோட்டமாக சொல்லாமல் ஆதாரத்தோடு அதை வரலாற்றாசிரியர்கள் விளக்கி இருக்க வேண்டுமே! //

இந்த நல்ல காரணங்களுக்காகத் தான் அவர் இங்கிலாந்து சென்றதும் அவருக்கு அந்தக் காலத்திலேயே  இப்போது  Daily Telegraph என்றழைக்கப்படும் அன்றைய Morning Post என்ற தினசரி நாளிதழால் 26,000 பவுண்டுகள் பரிசாகக் கொடுக்கப்பட்டது. பெண்களின் காவலனாக இருந்ததால் 13 பெண்கள் அணியினர் அவருக்கு "the Saviour of the Punjab” என்ற பட்டம் கொடுத்து அவருக்கு ஒரு வாளும் பண்மும் பரிசாகக் கொடுத்தார்கள்.
எவ்வளவு உயர்வான மனிதர் டயர் !!!
 ----------
துண்டுச் செய்தி:
//'சதி'யை நிறுத்தியவர்//  William Bentinck என்ற ஆங்கிலேய அதிகாரி. //ஆதரவற்ற துர்பாக்கியவதியான ஒரு பெண்ணை 'சதி' (உடன்கட்டை ஏறுதல்) உயிருடன் எரிக்க முயன்றனர். அதை ஆடசித் தலைமை//யில் இருந்த அந்த அதிகாரி,
ராஜாராம் மோகன்ராய் போன்ற நம் நாட்டுத் தலைவர்கள் மூலம்  விதவை மறுமணம், சத்தி, துகி என்று சொல்லப்படும் காளிக்கு அளிக்கப்பட்டு வந்த மனிதப் பலிகள் போன்றவற்றை சட்டப்படி நிறுத்தினார்.

இந்த வரலாற்று உண்மைகளை மறைத்து விட்டதால் நம் இந்தியர்கள் க்ளைவ், டயர் போன்றவர்களையும், மற்ற ஆங்கிலேயர்களையும் புரிந்து கொள்ளாமல், இங்கிலாந்து //அரசைக் கவிழ்க்க சதி செய்தனர்.//  அவர்களை //...விரோதி என பொய்களைப் புனைந்துரைத்தனர்.//

இதெல்லாமே  மாற வேண்டும்.





254 comments:

1 – 200 of 254   Newer›   Newest»
Robin said...

புரியது, புரியுது :)

thiruchchikkaaran said...

தருமி ஐயா அவர்களே,

நல்ல கட்டுரை. ஆனால் மதப் பற்றில் சிக்கி நியாய அநியாயங்களை மறந்தவர்களைநாடு நிலை சிநதனைக்கு கொண்டு வருவது எளிதன்று.

எந்த ஒரு காரணமும் இன்றி பிற மதங்களை வெறுப்பது, அவர்களை துன்புறுத்துவது, கட்டாயப்படுத்துவது பண்பற்ற காட்டு மிராண்டித் தனம் என்பதை உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் அவர்கள் மாணவராக இருக்கும் போதே பாடத் திட்டத்தில் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

தருமி said...

suresh
முழுசா படிச்சி புரிஞ்சி அதுக்குப் பிறகு இன்னொரு பின்னூட்டம் போடுங்க.

சீனு said...

நச்...

saarvaakan said...

நல்ல பதிவு.

அவரங்கசீப் என்ற மன்னர் மதம் சார்ந்த சட்டத்தை அமல் படுத்தி,ஜிஸ்யா என்ற வ்ரியை பிற மதத்தினரிடம் இருந்து வசூலித்தார்.இத்னை யாரும் மறுக்க முடியாது.

இது ஒரு மன்னர் தன் ஆட்சிக் காலத்தில் ஏதோ ஒரு சூழ்நிலையில் கடைபிடித்த நடைமுறை.பல மன்னர்கள் சில பிரிவினரை ஆதரித்தும் பலரை அடிமைப் படுத்தியே ஆட்சி நடத்தி வந்துள்ளனர்.யாஅரும் அவர்கள் செய்ததை நியாயப் படுத்தாத போது,அவுரங்கசீப் ஜிஸ்யா வசூலித்ததை, இப்போதும் சிலர் சரி என்று கூறுவதுதான் பிரச்சினை.
நாம் கேட்பதெல்லாம் இத்தான்.

1. ஜிஸ்யா வரி வசூலித்தல் அப்போது மட்டும் சரியா இல்லை எபோதும் எங்கேயும் சரியா?

2.ஒரு ம‌த ஆட்சி நடக்கும் நாடுகளில் பிற மதத்தினர் மீது மட்டும் ஜிஸ்யா வரி இப்போதும் நடைமுறையில் உள்ளதா?.

இன்னும் பேசுவோம்.

வால்பையன் said...

//suresh
முழுசா படிச்சி புரிஞ்சி அதுக்குப் பிறகு இன்னொரு பின்னூட்டம் போடுங்க//

ஹாஹாஹாஹா

Unknown said...

ஐயா
நாய் வாலை நேராக்க முடியாது.

இங்கு நாய் வால் என்பது இஸ்லாமிய வெற்யர்கள் மட்டும் இல்லை.

நன்றி

Robin said...

//suresh
முழுசா படிச்சி புரிஞ்சி அதுக்குப் பிறகு இன்னொரு பின்னூட்டம் போடுங்க.//

யார் அந்த suresh ?

கபீஷ் said...

தங்கத்தின் தங்கம் கிளைவ், வைரத்தின் வைரம் டயர் புகழ் ஓங்குக

தருமி said...

//தங்கத்தின் தங்கம் கிளைவ், வைரத்தின் வைரம் டயர் புகழ் ஓங்குக//

இது ...

நல்லா புரிஞ்சிக்கிட்டீங்க ..

தருமி said...

ராபின்,
என் பக்கம்,
வால்ஸ்,
சார்வாகன்,
சீனு,
திருச்சிக்காரன்

.............நன்றி

suvanappiriyan said...

தருமி!

//ஆனால் அவன் ஒரு வெளிநாட்டு ஆக்கிரமப்பாளன். நம் நாட்டு மன்னர்களைக் கொன்று நம் நாட்டைக் கைப்பற்றியவன், அதாவது க்ளைவ், டயர் மாதிரி. இவனுக்கு எதற்கு இத்தனை துதி? ஏனிந்த வக்காலத்து? ....பதில் சொல்லக்கூடாதா?//

வரலாறு தெரிந்தும் தெரியாதது போல் ஏன் நடிக்கிறீர்கள். மொகலாயர்களுக்கு முன்னால் அகண்ட பாரதமே கிடையாது. சேரநாடு, சோழ நாடு, பாண்டிய நாடு(அதாவது உங்கள் நாடு), என்று ஊருக்கெல்லாம் ஒரு ராஜாவை வைத்துக் கொண்டிருந்தவர்கள்தாம் நாமெல்லாம். மொகலாயர்கள் வந்தவுடன் 'தம்பிகளா! ஊருக்கெல்லாம் ஒரு ராஜா இருக்கக் கூடாது. வேண்டுமானால் பஞசாயத்து போர்டு தலைவர்களைப் போல் இருந்து கொள்ளுங்கள். உங்கள் அனைவரையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து அகண்ட பாரதத்தை உருவாக்குகிறேன்' என்று கூறி இன்று வல்லரசாக ஆகத் துடித்துக் கொண்டிருக்கும் இந்தியாவுக்கு ஆணி வேராக இருந்தவர்கள் மொகலாயர்கள். இதை மறுக்க முடியுமா?

சேரர்கள் சோழர்களோடு போரிட்டுள்ளார்கள். சோழர்கள் பாண்டியர்களோடு போரிட்டு நாட்டை பிடித்திருக்கிறார்கள். அதே கதைகள் தான் பல்லவர்களிலிருந்து வடக்கே மௌரியப் பேரரசு வரை. அப்படி என்றால் அவர்களெல்லாம் தேச துரோகிகளா? மொகலாயர்கள் உருவாக்கி தந்த அகண்ட பாரதத்தை வியாபார நோக்கில் வந்து அமர்ந்து கொண்டனர் பிரிட்டிசார். எனவே அவர்களை வெளியேற்றுவது இந்தியர்களாகிய நமது கடமை. இதற்காக முஸ்லிம்களும் போரிட்டிருக்கிறார்கள் பிரிட்டிசாரை எதிர்த்து. எனவே மொகலாயரையும் பிரிட்டிசாரையும் ஒரே தட்டில் வைத்து நம்மால் மதிப்பிட முடியாது.

'சமண சமயம் பலவிதத்தில் தாக்கப்பட்டது. கொடுமைப் படுத்துதல், கழுவேற்றுதல், கொலை செய்தல், கலகம் விளைவித்தல், நில புலங்களைக் கவர்தல் முதலிய செயல்கள் நிகழ்ந்ததைக் காண்கிறோம். இந்துக்கள் சமண மதத்தை அழித்த செய்திகள் பல உள்ளன.
-மயிலை சீனி வேங்கடசாமி, சமணமும் தமிழும்,
Page 68.

'வெறுப்போடு சமணர் முண்டர் வீதியில் சாக்கியர்கள் நின்பால் பொறுப்பரியன்கள் பேசில் போவதே நோயதாகிக் குறிப்பெனக் கடையுமாகில் கூடு மேல் தரையை ஆங்கே அறுப்பதே கருமங்கண்டாய் அரங்கமா நகருளானே!'
-தொண்டரடிப் பொடியாழ்வார், திருமலை, எட்டாவது பாடல்.

suvanappiriyan said...

சார்வாகன்!

//1. ஜிஸ்யா வரி வசூலித்தல் அப்போது மட்டும் சரியா இல்லை எபோதும் எங்கேயும் சரியா?//

ஜசியா வரி ஏன் எதற்கு என்று என் பதிவில் விளக்கமாக கொடுத்திருக்கிறேன் பார்த்துக் கொள்ளுங்கள்.

இறை சட்டம் என்பது எக்காலத்துக்கும் பொருந்தி வர வேண்டும். எனவே உலக முடிவு நாள் வரை இந்த சட்டம் மாற்றப் படாது.

//2.ஒரு ம‌த ஆட்சி நடக்கும் நாடுகளில் பிற மதத்தினர் மீது மட்டும் ஜிஸ்யா வரி இப்போதும் நடைமுறையில் உள்ளதா?.//

இல்லை.

Robin said...

முகலாயர்கள் அகண்ட பாரதம் ஏற்படுத்தவேண்டும் என்ற நல்ல எண்ணத்தோடுதான் இந்தியாவுக்கு வந்தனர். அதோடு சமண சமயத்தை காப்பாற்றவேண்டும் என்ற இலட்சியமும் இருந்திருக்கு. பிரிட்டிசார்தான் வியாபாரத்திற்காக வந்தனர். முகலாயர்கள் நல்லவர்கள்.

ஒழுங்கா வரலாறைப் படிச்சி புரிஞ்சி எழுதுங்க தருமி சார்.

தருமி said...

//ஒழுங்கா வரலாறைப் படிச்சி புரிஞ்சி எழுதுங்க தருமி சார்//

ஆமாங்க .. தப்புதான். கன்னத்தில போட்டுக்கிறேன்.

தருமி said...

சுவனப்பிரியன்,

ஒன்றும் தெரியாதது போல் நடிக்கிறீர்களா இல்லை கேலி செய்கிறீர்களா?

ஏங்க .. பாண்டியனும் சோழனும் சண்டை போடுறதும், எங்கேயோயுள்ள அந்நிய நாட்டான் இங்கு வந்து சண்டை போட்டு “அகண்ட பாரதம்” படைப்பதும் ஒன்றா?

சும்மாவா சொன்னாங்க .. தூங்குறவங்களைத்தானே எழுப்ப முடியும்.

பேசாம அவனுக எல்லாம் இஸ்லாம் காரங்க..அதுனால் நான் அப்படித்தான் சப்போர்ட் பண்ணுவேன்னு சொல்லிட்டீங்கன்னா அதுக்கு மேல பேச ஒண்ணும் இல்லைன்னு போய்டலாம்.

தருமி said...

why i am not a muslim பகுதியில், முகலாயர்களின் போர்களைப் பற்றி எழுத வேண்டியதிருந்தது. அவைகளில் உள்ள கொடூரங்களைப் பற்றியெல்லாம் எழுதாது விட்டு விடுவோம்னு ’பல காரணங்களுக்காக’ நினைத்தேன். ஆனால் உங்கள் அறிவார்ந்த விவாதங்களால் அதை முழுவதுமாக எழுதுவதாக முடிவெடுத்துள்ளேன். பயங்கரம்தான் .. வேறு வழியில்லை போலும்!

தருமி said...

என்னங்க உங்களோடு கூத்தா இருக்கு? எதுக்கு இந்த சமண, சைவ சண்டைகள் பற்றி பேசுறீங்க?
நான் கேட்டது: //ஒளரங்கஜேப் பின்பற்றியதை ஏன் நீங்களும் பின்பற்றக் கூடாது?//

இந்த கேள்விக்கு இதுதான் பதிலா? ரொம்ப நல்லா இருக்கு உங்கள் விவாதங்கள்!

suvanappiriyan said...

//முகலாயர்கள் அகண்ட பாரதம் ஏற்படுத்தவேண்டும் என்ற நல்ல எண்ணத்தோடுதான் இந்தியாவுக்கு வந்தனர். அதோடு சமண சமயத்தை காப்பாற்றவேண்டும் என்ற இலட்சியமும் இருந்திருக்கு. பிரிட்டிசார்தான் வியாபாரத்திற்காக வந்தனர். முகலாயர்கள் நல்லவர்கள்.//

அவர்கள் வந்த நோக்கம் வேறாக இருந்தாலும், அதனால் நமது நாட்டுக்கு நன்மைதானே கிடைத்திருக்கிறது. அவர்களை பாராட்ட வேண்டாம். தூற்றாமலாவது இருக்க வேண்டும். வரலாற்றில் பொய்களை ஏற்ற வேண்டாம் என்றுதான் நான் சொல்ல வந்தது. மதத்தின் பெயரால் மனிதர்களை உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பேதப்படுத்தலை எதிர்த்து வர்ணாசிரமத்திற்கு சரியான பதிலடி கொடுத்தவர்களும் மொகலாயர்கள்: இதனாலும் அவர்கள் போற்றப்பட வேண்டியவர்கள். மது மாதில் திளைத்த மொகலாயர்களையும் நான் கண்டிக்கிறேன். இது போன்ற பாவமான காரியங்களிலிருந்து விலகியிருந்தவர்தான் ஒளரங்கசீப். மக்களின் வரிப் பணத்தில் தனது மனைவிக்கு தாஜ்மஹால் கட்டியதை எதிர்த்துதான் தனது தந்தையையே சிறையில் அடைத்தார் ஒளரங்கசீப்.

suvanappiriyan said...

//ஒளரங்கஜேப் பின்பற்றியதை ஏன் நீங்களும் பின்பற்றக் கூடாது?//

இந்த கேள்விக்கு இதுதான் பதிலா? ரொம்ப நல்லா இருக்கு உங்கள் விவாதங்கள்!//

மதத்தை அரசியலில் கலக்கும்படி நான் எங்கு சொன்னேன். அவர் சொல்வதை நானும் ஒத்துக் கொள்கிறேன். மொகலாயர்களில் பல அரசர்கள் தவறுகளும் செய்திருக்கிறார்கள். அதை நான் ஒத்துக் கொள்கிறேன்.

வால்பையன் said...

//மதத்தின் பெயரால் மனிதர்களை உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பேதப்படுத்தலை எதிர்த்து வர்ணாசிரமத்திற்கு சரியான பதிலடி கொடுத்தவர்களும் மொகலாயர்கள்://

இஸ்லாம் அல்லாதவர்களுக்கு தனி வரி விதித்ததும் வர்ணாசிரமம் தான் அண்ணே!

அது முகமது காலத்தில் இருந்து இருக்கு என்பதை நினைவில் கொள்க! பார்பணீயத்திற்கு எந்த வகையிலும் சளைத்ததல்ல, இஸ்லாமும்!

தருமி said...

சுவனப்பிரியன்
தயவு செய்து தப்பாக எடுத்துக் கொள்ளாதீர்கள் - உங்கள் பதில்களைப் படிக்கும்போது சிரிக்கவா, கோவப்படவா என்பதே தெரியவில்லை.

//அவர்கள் வந்த நோக்கம் வேறாக இருந்தாலும், அதனால் நமது நாட்டுக்கு நன்மைதானே கிடைத்திருக்கிறது. // வெள்ளைக்காரக் கொள்ளைக்காரர்கள் வந்ததாலும் பல நன்மைகள் கிடைத்ததே. அதேபோல்தான் இந்தப் பெருங் கொள்ளைக்காரர்களும். வெள்ளையனை விரட்டிய போல் எந்த அன்னியனையும் தூக்கித்தானே எறிந்திருக்க வேண்டும். நீங்கள் வெள்ளையனை விரட்டிவிட்டோம் என்று மார்தட்டிக் கொள்கிறீர்கள். நான் சொல்வது எந்த அன்னிய படையெடுப்பாளனையும் சேர்த்துச் சொல்கிறேன்.
//தூற்றாமலாவது இருக்க வேண்டும். // கொள்ளையடிக்க வந்த கொள்ளைக்காரர்களை தூற்றாமல் போற்ற வேண்டும் என்று சொல்லுபவர்களைப் பற்றி என்ன சொல்ல?

தருமி said...

// தாஜ்மஹால் கட்டியதை எதிர்த்துதான் தனது தந்தையையே சிறையில் அடைத்தார் ஒளரங்கசீப்.//

இந்த மாதிரி கதைகளைக் கேட்கணும்னு எனக்கென்ன தலைவிதியோ! சகோதரர்களை ஏனுங்க அந்த ஐயா கொலை செஞ்சாரு? கொலைகளைக்கூட சரின்னு சொல்றீங்களே, ஐயா!

நிலமை .. :(

தருமி said...

//எதிர்த்து வர்ணாசிரமத்திற்கு சரியான பதிலடி கொடுத்தவர்களும் மொகலாயர்கள்: இதனாலும் அவர்கள் போற்றப்பட வேண்டியவர்கள். //

ஆமாங்க ... இந்தக் கொள்ளைக்காரர்கள் வந்தபின் வர்ணாசிரமம் இல்லாதொழிந்து ஒரு அகண்ட புதிய பாரதம் ஏற்பட்டுவிட்டது பாருங்கள் ...!

தருமி said...

கேட்ட கேள்வி அயல்நாட்டான் நம்மைப் போரிட்டு, அடக்கி, அகண்ட பாரதம் படைத்தானே ... கொள்ளையடிக்க அப்படிப் படையெடுத்து வந்த ஒரு அயலானை வெறுக்காமல், //நமது நாட்டுக்கு நன்மைதானே கிடைத்திருக்கிறது. // என்று சொல்வது நிச்சயமாக நாம் பிறந்த நாட்டுக்கு செய்யும் ஒரு பச்சைத் துரோகம்.

தருமி said...

//மதத்தை அரசியலில் கலக்கும்படி நான் எங்கு சொன்னேன். //

அடப் பாவமே! நீங்கள்தான் மூச்சுக்கு முன்னூறு தடவை எங்கள் குரானில் அல்லா அப்படியே வாழ்க்கை முறையைக் கொடுத்திருக்கிறார். அந்தக் கொள்கைகள் படிதான் அரசை அமைக்க வேண்டும் என்று தினமும் பாடி வருகிறீர்கள். இல்லையா? உங்கள் இஸ்லாம் நாட்டு சட்ட திட்டங்கள் எல்லாம் என்ன IPC-ஆ? எல்லாமே குரான்தானே உங்களுக்கு. சமீபத்திய பாக்கிஸ்தானின் blasphemy நிகழ்வு அதற்குள்ளா மறந்து போச்சு! புதுசாக மதத்தை அரசியலில் கலக்கச் சொல்லவில்லை என்று முழு பூசணிக்காயை பிரியாணியில் மறைக்கிறீர்களே!

தருமி said...

ஒன்று செய்யுங்கள் சுவனப்பிரியன்,
எனக்கு ரெண்டு பதில் நீங்கள் தரலாமா?
1. ஒளரங்கஜேப்.. அவங்க தாத்தா.. அதுக்கு முன்னாடி வந்தவர்கள் கொள்ளைக்காரர்கள் தானே? (நீங்கள் சொன்னது: // அவர்கள் வந்த நோக்கம் வேறாக இருந்தாலும், // அதென்ன “வேறாக” ,அவர்கள் வந்த நோக்கம் கொள்ளையடிக்க என்றுதானே சொல்ல வேண்டும்?)

2. அந்த உரைகல் விஷயம் சொன்னேனே - அதையும் செய்து பார்த்து விட்டு பதில் சொல்லுங்களேன்.

காத்திருக்கிறேன் ........

saarvaakan said...

//மொகலாயர்களுக்கு முன்னால் அகண்ட பாரதமே கிடையாது.//
போரின் கோரத்தை கண்டு வன்முறை மறுத்து அன்பின் வழிகண்ட அசோகரின் சாம்ராஜ்யம்.
http://en.wikipedia.org/wiki/Ashoka
ஜிஸ்யாவை குரான் வலியுறுத்துகிறது.
_______
9:29. வேதம் அருளப்பெற்றவர்களில் எவர்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஈமான் கொள்ளாமலும், அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஹராம் ஆக்கியவற்றை ஹராம் எனக் கருதாமலும், உண்மை மார்க்கத்தை ஒப்புக் கொள்ளாமலும் இருக்கிறார்களோ. அவர்கள் (தம்) கையால் கீழ்ப்படிதலுடன் ஜிஸ்யா (என்னும் கப்பம்) கட்டும் வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்.
_________
ஆனால் இபோது தலிபான்கள் தவிர உலகில் வேறு யாரும் இதனை பின் பற்றுவதில்லை.இது அடிமை முறை போல் மனித விரோதக் கொள்கை என்று உணர்ந்ததால் கைவிடப் பட்டது. 1920 C.E வரை ஆட்டோமான் பேரரசில் நடைமுறையில் இருந்தது.
______________
பெரும்பான்மையான் இஸ்லாமியர்களுக்கு மதம் என்ன சொல்கிறது என்பது தெரியாது. இந்த கருத்து திரு சுவனப் பிரியனின் தனிப்பட்ட கருத்தாகவே நான் எடுத்துக் கொள்கிறேன்.
__________
நண்பர் சுவனப் பிரியன் அவுரங்கசீப் ஜிஸியா வசுலிததை சரி என்கிறாரா? ஜிஸியாவை உலகம் முழுவதும்(தலிபான் நீங்கலாக) பின்பற்றவில்லையே என்று கவலைபடுகிறார?.

thiruchchikkaaran said...

மத ரீதியிலான வன்முறையை, சித்திரவதையை, கட்டாய வரி விதிப்பை, இனப் படுகொலைகளை.... செய்தவர் யாராக இருந்தாலும் அதை வன்மையாகக் கண்டிக்கிறோம், எதிர்க்கிறோம்.

உலகில் ஒருவர் கூட மத, இன, மொழி, வர்க்க, பாலிய, பிராந்திய, சாதிய... அடிப்படையில் அச்சுறுத்தப் படக் கூடாது என்பதுவே நியாயமான நாகரீகமான கொள்கை. இதை விட்டு இவங்கக் வன்முறை பன்னுலையா , அதே போல அவங்கக் வான் முறை பண்ணினாங்க.... போவியா என்று சொல்லுவது இரக்கமற்ற, மனித நேயமற்ற கோட்பாடே.


சோழரும் பாண்டியரும் சண்டை போட்டார் என்றால், அது படைகளுக்குள் நடை பெற்ற சண்டை.(அதுவும் தவிர்க்கப் பட வேண்டிய ஒன்றே. அவ்வையார் போன்ற அக்காலப் புலவர்கள் போருக்குப் பதில் சமாதனத்திக் கொண்டு வருவதில் வெற்றி பெற்று உள்ளனர்)!

சோழனோ, பாண்டியனோ மக்களைக் கொடுமைப் படுத்தவில்லை.


சமணர்களை இந்துக்கள் கொடுமைப் படுத்தி இருந்தால் அதுவும் வன்மையாக கண்டிக்கப் பட வேண்டிய ஒன்றே. ஆனால் சமணர்கள் கொடுமைப் படுத்தப் பட்டதாக , கழுவில் ஏற்றப் பட்டதாக சொல்லப் படுவதற்கு வரலாற்று ஆதாரமோ, சமூக செய்தி ஆதாரமோ இல்லை. இந்திய வரலாற்றில் சமணர்கள் கழுவில் ஏற்றப் பட்டதாக குறிப்பு இல்லை. இன்னும் முக்கியமாக சொல்லப் போனால் சமணர்களே அவர்களின் சமய வரலாற்றில் இதைப் பற்றிய குறிப்பு எதையும் வைக்கவில்லை. எந்த ஒரு மதத்தை செர்ந்தவராவது தங்கள் மதத்தினர் முன்பு தாக்கப் பட்டு இருந்தால் அதைப் பற்றிய குறிப்பை அறிவிக்காமல் இருப்பார்களா?

இது விடயமாக நானும் சமண மதத்தை சார்ந்த சிலரிடம் கேட்டேன், அவர்களுக்கே நான் கூறியது புதிய செய்தியாக இருந்தது.

அதே வேளையில் சமணர்கள் தாக்கப் பட்டு இருந்தால் அதை வன்மையாக கண்டிக்கிறேன். உலகில் மத ரீதியாக யார் அச்சுறுத்தப் பட்டாலும், தண்டிக்கப் பட்டாலும், கட்டாயப் படுத்தப் பட்டாலும், வரி விதிக்கப் பட்டாலும் அது எனக்கு நேர்ந்ததாகவே உணர்கிறேன்.

(Contd...)

suvanappiriyan said...

//ஏங்க .. பாண்டியனும் சோழனும் சண்டை போடுறதும், எங்கேயோயுள்ள அந்நிய நாட்டான் இங்கு வந்து சண்டை போட்டு “அகண்ட பாரதம்” படைப்பதும் ஒன்றா?//

தருமி சார்! சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு என்று தனித்தனி நாடுகள் இருந்ததும், அவர்களுக்குள் சண்டை நடந்ததும் உண்மையா இல்லையா? ஒரு நாட்டு மக்களின் சொத்துக்களை மற்ற நாடு கொள்ளை அடித்ததா இல்லையா? இங்கு என் நாட்டு அன்றைய மன்னனான ராஜ ராஜ சோழனின் ந்ல்ல குணங்களை பட்டியலிட்டால் சேர நாட்டுக்கும் பாண்டிய நாட்டுக்கும் நான் துரோகி ஆவேனா? அப்படியானால் சேர நாட்டுக்கும் பாண்டிய நாட்டுக்கும் ராஜ ராஜ சோழன் பகை நாட்டவனா? இன்னும் தெளிவாக கேட்கிறேன். முகலாயர்களின் ஆட்சிக்கும் முன்னால் உலக நாடுகள் அங்கீகரித்த நமது நாட்டின் வரை படத்தை தாருங்கள். அல்லது முகலாயர்களுக்கு முன்னால் இந்த அகண்ட பாரதத்தின் மன்னன் யார்? என்ற விபரத்தையும் தாருங்கள். ஆசிரியரான உங்களுக்கு இது சுலபமானதுதானே! ராஜராஜ சோழனையும் ஒளரங்கஜேப்பையும் எந்த வகையில் வேறுபடுத்திப் பார்க்கிறீர்கள்?

//சோழரும் பாண்டியரும் சண்டை போட்டார் என்றால், அது படைகளுக்குள் நடை பெற்ற சண்டை.//-  திருச்சிக்காரரின் இந்த வார்த்தையைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

//அந்தக் கொள்கைகள் படிதான் அரசை அமைக்க வேண்டும் என்று தினமும் பாடி வருகிறீர்கள். இல்லையா?//

இஸ்லாமிய அரசுக்குத்தான் குர்ஆனின் சட்டத்தை மக்கள் மேல் திணிக்க அதிகாரம் உண்டு. ஒளரங்கஜேப் ஆட்சி செய்தது இஸ்லாமிய ஆட்சியே அல்ல. 100 சதவீதம் முஸ்லிம்களே உள்ள சவுதி அரேபியாவில் கூட இஸ்லாமிய ஆட்சி நடைபெறவில்லை. ஓரளவு சிவில் சட்டத்தையும் குற்றவியல் சட்டத்தை மட்டும் நடைமுறைபடுத்துகிறார்கள். எனவே இஸ்லாமிய ஆட்சி அமையும்போதுதான் குர்ஆனின் சட்டம் என்ற பேச்சுக்கே இடம் வரும். இப்பொழுது நாம் அகண்ட பாரதத்தைப் பெற்று விட்டோம். இந்த நேரத்தில் பாகிஸ்தான் நம் மீது போர்தொடுத்து வந்தால் என் நாட்டுக்காக அவர்களை எதிர்த்து நின்று உயிரையும் விடத் தயாராக இருப்பேன். இந்த வேளையில் நான் நம் நாட்டுக்காக உழைக்காமல் முஸ்லிம் நாடு என்ற காரணத்தினால் பாகிஸ்தானுக்கு ஆதரவாக நடந்தால் அப்பொழுதுதான் என் நாட்டுக்கு துரோகம் இழைக்கிறேன். இஸ்லாத்தின் பார்வையிலும் சொந்த நாட்டுக்கு அநியாயமாக துரோகம் இழைப்பது பச்சை துரோகமாகும்.

suvanappiriyan said...

சார்வாகன்!

//நண்பர் சுவனப் பிரியன் அவுரங்கசீப் ஜிஸியா வசுலிததை சரி என்கிறாரா? ஜிஸியாவை உலகம் முழுவதும்(தலிபான் நீங்கலாக) பின்பற்றவில்லையே என்று கவலைபடுகிறார?.//

முஸ்லிம்கள் தனது வருமானத்தில் 2.5 சதவீதம் வரியாக அரசாங்கத்துக்கு செலுத்தும்போது மற்ற மதத்தவர்கள் எந்த வரியும் கொடுக்காமல் இருப்பது நீதிதானா? முஸ்லிம்களிடம் வரி வசூலிக்காமல் ஹிந்துக்களிடம் மட்டும் ஒளரங்கஜேப் வரி வசூலித்திருந்தால் உங்கள் வாதத்தில் நியாயம் இருக்கும்.

தாலிபான்கள் எங்கு ஜஸியா வரியை அமுல்படுத்தி இருக்கிறார்கள். அவர்களிடம்தான் ஆட்சியே இல்லையே! அடுத்து தாலிபான்கள் செயல்கள் அனைத்தும் இஸ்லாத்தினால் அங்கீகரிக்கப்பட்டவை அல்ல. பெண்களுக்கு கல்வி கொடுக்க மறுத்தல், கஞ்சா அபின் மூலம் வரும் வருமானத்தை அங்கீகரித்தல், அப்பாவி பொது மக்களை கொல்லுதல் என்று அவர்கள் இஸ்லாத்தை விட்டு வெளியேறி வெகுநாட்களாகிறது.

suvanappiriyan said...

திருச்சிக்காரரே!

//ஆனால் சமணர்கள் கொடுமைப் படுத்தப் பட்டதாக , கழுவில் ஏற்றப் பட்டதாக சொல்லப் படுவதற்கு வரலாற்று ஆதாரமோ, சமூக செய்தி ஆதாரமோ இல்லை. இந்திய வரலாற்றில் சமணர்கள் கழுவில் ஏற்றப் பட்டதாக குறிப்பு இல்லை. இன்னும் முக்கியமாக சொல்லப் போனால் சமணர்களே அவர்களின் சமய வரலாற்றில் இதைப் பற்றிய குறிப்பு எதையும் வைக்கவில்லை. எந்த ஒரு மதத்தை செர்ந்தவராவது தங்கள் மதத்தினர் முன்பு தாக்கப் பட்டு இருந்தால் அதைப் பற்றிய குறிப்பை அறிவிக்காமல் இருப்பார்களா?//

கழுவிலேறிய சமணர்கள்!

'பாண்டியவரசர் குலச்சிறை நாயனாரை நோக்கி சமணரைக் கழுவிலேற்றி முறை செய்யுமாறு பணித்தார். பிள்ளையார் அவர் செய்த சிவா பராதங்கருதி விலக்காதிருந்தார். குலச்சிறை நாயனார் முறை செய்யச் சமணர் யாவரும் கழுவிலேறி மாண்டார்கள்.'
-சதாசிவ செட்டியார், தேவாரப் பதிகங்கள், சென்னை
1925, page 18

'அரசர் குலச்சிறையாரை நோக்கி, 'சமணர்களைக் கழுவிலே ஏற்றுக என்று ஆஞ்ஞாபித்தார்..... திடபக்தியுடைய அமைச்சர் குலச்சிறையார் கழுத்தறிகளை நிறையாக நாட்டு வித்து அவைகளில் ஏற்ற, அதிபாதகர்களாகிய சமணர்கள் எண்ணாயிரவரும் தானாகவே ஏறினார்கள்.'
ஏ.ஜி.கோமதி அம்மாள், திருத் தொண்டர் பெரிய புராணம், சைவம் வளர்த்த அரசி, கோவில்பட்டி,
1948, Page 18

'அமைச்சர் குலச்சிறையார் கழுத்தறிகளை நாட்டிய பின் தோல்வியுற்று நின்ற சமணர் அனைவரும் அத்தறிகளில் ஏறி உயிர் துறந்தனர்.'
க. வெள்ளைவாரணன்,பன்னிறு திருமறை வரலாறு, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,
1972, Page 144

சமணர்கள் அனுபவித்த கொடுமை!

'மன்னன் சமண விரோதியாகி, பாண்டிய நாட்டிலுள்ள சமணர்களை வெட்டி வீழ்த்தி, அவர்கள் சொத்து, சுதந்திரம், கோயில், குளம், மடம் முதலியவைகளைக் கைப்பற்றும்படி தன் சைன்யங்களை ஏவியதோடு, தன் முன்னிலையிலேயே அநேக ஆயிரக்கணக்கான சமண முனிவர்களை வலியப் பிடித்து கழுமரத்திலேற்றி பதைக்கப் பதைக்கக் கொன்றான்.'
-அ.பொன்னம்பலம், அப்பரும் சமபந்தரும், சென்னை,
1983, Page 28

'கழுவிலேறாத சமணர்களை எல்லாம், சைவாச்சாரத்தைக் கொண்டவர்கள் ஒவ்வொருத்தராகப் பிடித்து அந்த முத்தலைக் கழுமரங்களிலே ஏற்றியிருத்திக் கொன்றார்கள். அந்த சமணர்களுக்குப் பாரம்பரியாக அடியார்களானவர்கள் சாவப்பயந்து மனங்குலைந்து விபூதி பூசிக் கொண்டார்கள். அந்த விபூதி கிடையாமல் பசுவின் கோமயத்தை எடுத்திட்டுக் கொண்டார்கள். அதுவும் கிடைக்காத சிலர் பசுவின் கன்றைத் தோள் மேலே தூக்கிப் போட்டுக் கொண்டார்கள்.'
'விபூதி, கோமயம், பசுவின் கன்று இந்த மூன்றுங் கிடையாத சிலர் விபூதி பூசின நெற்றியுடனே நெற்றியை மோதிப் பூசிக் கொள்ள கோமயத்திலுமப்படியே மோதியிட்டுக் கொண்டும் இப்படியாகத் தங்கள் பாசங்களை வென்று பிழைக்க எண்ணினவர்களைக் கொல்லாமல் விட்டு விட்டனர்.'
-பூவை கலயாண சுந்தர முதலியார் பொழிப்புரை, திருவிளையாடற் புராணம்,சென்னை,
1925, Page 494.

தருமி said...
This comment has been removed by the author.
தருமி said...

//ராஜராஜ சோழனையும் ஒளரங்கஜேப்பையும் எந்த வகையில் வேறுபடுத்திப் பார்க்கிறீர்கள்?//

இந்த கேள்விக்குப் பதிலளிக்கும் முன் உங்கள் அறிவு, மனசாட்சி இரண்டில் எதை ஐயப்படுவது என்று எனக்குத் தெரியவில்லை.

மகா மோசமான, எந்த சமூக அறிவிற்கும், பொது அறிவுக்கும் புறம்பான கேள்வி இக்கேள்வி. உங்களுக்கு இந்த இருவரும் ஒன்றுதான் என்றால் அந்த மனசாட்சி உள்ள ஆளிடம் பேச எனக்கு ஒன்றுமில்லை........

உங்கள் பூனைக்கு மூன்று கால்தான்; ஒத்துக் கொள்கிறேன்.

தருமி said...

ராபர்ட் க்ளைவ் - நல்லவர்;

ஜெனரல் டயர் - மிக மிக நல்லவர்:

ஒளரங்கஜேப் - மிக மிக மிக மிக நல்லவர்.

புரிந்து கொண்டேன்.

ramachandranusha(உஷா) said...

பூனைக்குட்டி வெளியே வந்துடுச்சு. (தருமி ஒரு இந்துத்வா ஆளு ;-)

தருமி said...

//முஸ்லிம்கள் தனது வருமானத்தில் 2.5 சதவீதம் வரியாக அரசாங்கத்துக்கு செலுத்தும்போது மற்ற மதத்தவர்கள் எந்த வரியும் கொடுக்காமல் இருப்பது நீதிதானா? //
எல்லோருக்கும் ஒரு நீதி - இதுதான் ஒரு நல்ல அரசாக இருக்க முடியும். ஆளுக்கொரு, சாதிக்கொரு, சமயத்துக்கொரு வரி என்பது அரசல்ல... அராஜகம்! மதம் அதற்குத் துணையாக இருந்தால் அந்த மதம் ஒரு அராஜக மதம்.

//முஸ்லிம்கள் தனது வருமானத்தில் 2.5 சதவீதம் வரியாக அரசாங்கத்துக்கு செலுத்தும்போது மற்ற மதத்தவர்கள் எந்த வரியும் கொடுக்காமல் இருப்பது நீதிதானா? //

இப்படி ஒரு பதில் நீங்களே கொடுப்பீர்கள். ஆனால் மறுபடியும் நீங்களே ..

//மதத்தை அரசியலில் கலக்கும்படி நான் எங்கு சொன்னேன். // என்றும் மனசாட்சியைப் புறக்கணித்து இன்னொரு கேள்வி கேட்பீர்கள்.

நல்லா இருக்குங்க ..........

தருமி said...

//பூனைக்குட்டி வெளியே வந்துடுச்சு. (தருமி ஒரு இந்துத்வா ஆளு ;-)//

long time ... no see!

புதுசா வந்துட்டு தப்பா சொன்னா எப்படி?
க்ளைவ், டயர் அடுத்து ஒளரங்கஜேப் இவங்களை நல்லவர்னு சொன்னா எப்படி ஒரு இந்துத்வா ஆளு? சரியான மைனாரிட்டி ஆளுல்லா?!

தருமி said...

//மதத்தின் பெயரால் மனிதர்களை உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பேதப்படுத்தலை எதிர்த்து வர்ணாசிரமத்திற்கு சரியான பதிலடி கொடுத்தவர்களும் மொகலாயர்கள்: இதனாலும் அவர்கள் போற்றப்பட வேண்டியவர்கள்//

மொகலாயர்கள் போற்றி .. போற்றி.

ஆனால்...
மதத்தின் பெயரால் மனிதர்களை வரியால் பிரித்து பேதப்படுத்தலை சொல்லும் மதத்தையும் அதை ஆட்சிப்படுத்திய மொகலாயர்களையும் எப்படி போற்றுவது?

saarvaakan said...

//முஸ்லிம்கள் தனது வருமானத்தில் 2.5 சதவீதம் வரியாக அரசாங்கத்துக்கு செலுத்தும்போது மற்ற மதத்தவர்கள் எந்த வரியும் கொடுக்காமல் இருப்பது நீதிதானா? முஸ்லிம்களிடம் வரி வசூலிக்காமல் ஹிந்துக்களிடம் மட்டும் ஒளரங்கஜேப் வரி வசூலித்திருந்தால் உங்கள் வாதத்தில் நியாயம் இருக்கும்.//
அன்புள்ள சுவன பிரியன்

1.ஒரு ஆட்சியில் வரி வசுலித்தால் மத பாகுபாடு இல்லாமல் எல்லாரிடமும் ஒரே மாதிரி வருமானத்திற்கு தகுந்தது போல் வசுலித்து இருந்தால் இது பிரச்சினையே இல்லை. ஆனால் அப்படி இல்லை.

2. முஸ்லிம் அல்லாத மக்கள் அவுரங்கசீப் ஆட்சியில் முஸ்லிம்களை விட குறைவாக வரி கட்டினார்கள் என்று சொன்னால் ஆதாரம் தாருங்கள்.
//தாலிபான்கள் எங்கு ஜஸியா வரியை அமுல்படுத்தி இருக்கிறார்கள். அவர்களிடம்தான் ஆட்சியே இல்லையே! //
3 தலிபான் சீக்கிய மக்களிடன் ஜிஸியா வசுலித்த செய்தி
http://www.deccanchronicle.com/international/taliban%E2%80%99s-jizya-forces-sikhs-quit-tribal-area-913
//அடுத்து தாலிபான்கள் செயல்கள் அனைத்தும் இஸ்லாத்தினால் அங்கீகரிக்கப்பட்டவை அல்ல. //

4.தலிபான் இஸ்லாமிய ஆட்சி அமைக்க போராடுவதாக சொல்கிறார்கள்.
இதைப் பாருங்கள்

http://www.youtube.com/watch?v=VMgnhS58mPM&oref=http://www.youtube.com/results%3Fsearch_query%3Dtaliban%2Bislam%26aq%3Df&has_verified=1

thiruchchikkaaran said...

திரு. சுவ‌ன‌ப் பிரிய‌ன் அவ‌ர்களே,

நாங்க‌ல் வ‌குப்பில் ப‌டித்த‌ வ‌ர‌லாற்றிலும் ச‌ரி, பிற‌கு ஆர்வ‌த்தின் பேரில் நூலகத்திலே ப‌டித்த‌ வ‌ர‌லாற்றிலும் ச‌ரி, ச‌ம‌ண‌ர்க‌ள் க‌ழுவில் ஏற்ற‌ப் ப‌ட்ட‌தாக‌ குறிப்பு இல்லை. ஜைன‌ ம‌த‌த்தின‌ர் அவ‌ர்க‌ளின் ம‌த‌ வ‌ரலாற்றை தொகுத்து வைத்துள்ள‌ன‌ர், அதிலும் இல்லை.

நீங்க‌ல் காட்டும் சில‌ நூல்க‌ளிலே அப்ப‌டி இருக்கிற‌து என்றால், அதை நாங்க‌ள் க‌ண்டுக்காம‌ல் போக‌வில்லை. அப்ப‌டி ந‌டந்திருந்தால், ச‌ம‌ண‌ர்க‌ளைக் க‌ழுவில் ஏற்றி இருந்தால் அதை மிக‌ வ‌ன்மையாக‌ க‌ண்டிக்கிரோம். அவ‌ர‌ங்ஜேபையும், அலாவுதீன் கில்ஜியையும் எந்த‌ அள‌வுக்கு க‌ண்டிக்கிரோமா, அதை விட‌ வ‌ன்மையாக‌ பாண்டிய‌ அரச‌னையும், குல‌ச் சிறை நாய‌னாரையும் க‌ண்டிக்கிரோம்.


உல‌கில் எந்த‌ ஒரு ம‌னித‌னும் த‌னக்கு விருப்பமான‌ ம‌த‌த்தைப் பின்ப‌ற்ற‌வோ, எந்த‌ ஒரு ம‌தத்தையும் பின்ப‌ற்றாம‌ல் யாருக்கும் தீங்கு விளைவிக்காம‌ல் அமைதியாக‌ வாழ‌வோ சுத‌ந்திர‌ம் வ‌ழ‌ங்க‌ப் ப‌ட‌ வேண்டும் என்கிறேன். உல‌கில் எந்த‌ ஒரு ம‌னித‌னையும் குறிப்பிட்ட‌ ம‌தத்தை அனுச‌ரிக்க‌ ப‌லவ‌ந்த‌மாக‌ வ‌ற்புறுத்த‌க் கூடாது என்கிறோம். உலகில் இந்துவோ, கிரிஸ்துவ‌னோ, சொராச்டிரிய‌ரொ, யூத‌ரோ, இச்லாமிய‌ரோ, ப‌வத்த‌ரோ.... யாராக‌ இருந்தாலும், அவ‌ர்க‌ள் ம‌த‌ அடிப்ப‌டையிலே,பிற‌ர் மீது பொருளாத‌ர‌ அட‌க்குமுறையோ, வ‌ன்முறையோ, தாக்குத‌லோ, அச்சுறுத்த‌லோ, வெறுப்புண‌ர்ச்சி தூண்டுத‌லோ செய்வ‌து காட்டுமிராண்டித்த‌ன‌த்தை விட‌ கொடூர‌மான‌ , ம‌னித‌ நேய‌ம‌ற்ற‌ செய‌ல், இர‌க்க‌ம‌ற்ற‌ செய‌ல் என்று சொல்கிறோம். திரு. சுவ‌ன‌ப் பிரிய‌ன் அவ‌ர்க‌ளே‍ இந்த‌க் க‌ருத்து உங‌களுக்கு ஒப்பா? இதை ம‌ன‌ப் பூர்வ‌மாக‌ வழி மொழிகிறீர்க‌ளா‍? உங்க‌ள் ப‌திலை எதிர்பார்க்கிரேன்!

suvanappiriyan said...

திருச்சிக்காரரே!

நாங்கல், நீங்கல் தமிழ் இலக்கணப்படி தவறு நாங்கள், நீங்கள் என்று திருத்திக் கொள்ளுங்கள்.

//உலகில் எந்த ஒரு மனிதனையும் குறிப்பிட்ட மதத்தை அனுசரிக்க பலவந்தமாக வற்புறுத்தக் கூடாது என்கிறோம். உலகில் இந்துவோ, கிரிஸ்துவனோ, சொராச்டிரியரொ, யூதரோ, இச்லாமியரோ, பவத்தரோ.... யாராக இருந்தாலும், அவர்கள் மத அடிப்படையிலே,பிறர் மீது பொருளாதர அடக்குமுறையோ, வன்முறையோ, தாக்குதலோ, அச்சுறுத்தலோ, வெறுப்புணர்ச்சி தூண்டுதலோ செய்வது காட்டுமிராண்டித்தனத்தை விட கொடூரமான , மனித நேயமற்ற செயல், இரக்கமற்ற செயல் என்று சொல்கிறோம். திரு. சுவனப் பிரியன் அவர்களே இந்தக் கருத்து உஙகளுக்கு ஒப்பா? இதை மனப் பூர்வமாக வழி மொழிகிறீர்களா? உங்கள் பதிலை எதிர்பார்க்கிரேன்!//

உங்களின் அனைத்து வாதங்களையும் நானும் ஒத்துக் கொள்கிறேன். இதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

முஸ்லிமாக மதம் மாறுகிறேன் என்ற அரசர்!

விஜய நகர அரச சாம்ராஜ்ஜியத்தின் கடைசி அரசர் ஸ்ரீரங்க ராயலு பிஜப்பூர் காரர்கள் கர்நாடகத்தை வென்று தெற்கிலிருந்து முன்னேறி வருவதையும் கோல்கொண்டா தளபதிகள் வடக்கிலிருந்து முன்னேறி வருவதையும் கண்டு தன்னுடைய ராஜ்ஜியம் தனது கரங்களிலிருந்து நழவிக் கொண்டிருப்பதை அவர் உணர்ந்தார். எனவே தக்காண சுல்தான்களிடமிருந்து தனக்குப் பாதுகாப்பு அளிக்கும் படி வேண்டி ராமராவ் என்ற பிரதிநிதியை ஒளரங்கஜேப்பிடம் அனுப்பி வைத்தார். ஆனால் இதில் தலையிட ஒளரங்கஜேப் விரும்பவில்லை.

ரங்கராயலுக்கு போர் நெருக்கடிகள் இன்னும் அதிகமானபோது ஸ்ரீனிவாஸ் என்ற பிராமணத் தூதுவரை ஒளரங்கஜேப்பிடம் அனுப்பி வைத்தார். 'இரண்டரை கோடி ரூபாயும், இருநூறு யானைகளும், தன்னிடமுள்ள ஆபரணங்களையும் தருவதுடன் வருடாந்திர வரியைத் தொடர்ந்து கட்டிடவும் தனது ராஜ்ஜியத்தை முகலாய சாம்ராஜ்ஜியத்துடன் இணைத்து விட்டு பின் தனது பகுதியை ஒரு ஜாகீராகத் தனக்குத் திரும்பக் கொடுப்பதற்கும் சம்மதம்' என்று ஸ்ரீரங்க ராயலு தெரிவித்தார்.

மேலும் 'தானும் தனது உற்றார் உறவினர்களும் குடிமக்களும் முஸ்லிமாக மதம் மாறுவதற்கு சம்மதிப்பதாகவும்' சொல்லி அனுப்பியவர் ஸ்ரீரங்கராயலு.

“….the Raja promised tp turn Muslim with all his relatives and dependents!……”

உளள்த்தில் மாற்றம் ஏற்படாமல் ஆட்சி போகிறதே என்ற பயத்தினால் இஸ்லாமாவதை தாம் விரும்பவில்லை என்று கூறிய ஒளரங்கஜேப் அந்த அரசரின் கோரிக்கையை நிராகரித்தார்.

Sir Jadunath Sarkar, History Of Aurangzib, Calcutta, 1912 vol. 1, Page 248, 249

இந்த சம்பவத்தைப் பற்றி சொல்லும் போது 'இந்தக் கோரிக்கையின் பெயரில் எடுக்கப்பட்ட நடவடிக்கை இந்தியாவில் முகலாயர்கால ஆட்சியின் பண்பைப்பற்றி நல்ல விளக்கத்தைத் தருகிறது.'என்கிறார் ஜாதுநாத் சர்க்கார்.

History Of Aurangzeb, Page 249.

'இம்மார்க்கத்தில் எந்த வற்புறுத்தலும் இல்லை. வழிகேட்டிலிருந்து நேர் வழி தெளிவாகி விட்டது.'- குர்ஆன் 2:256

suvanappiriyan said...

//ராபர்ட் க்ளைவ் - நல்லவர்;

ஜெனரல் டயர் - மிக மிக நல்லவர்:

ஒளரங்கஜேப் - மிக மிக மிக மிக நல்லவர்.

புரிந்து கொண்டேன்.//

தருமி சார்!

'யாதும் ஊரே யாவரும் கேளீர்'

இந்த உலகில் உள்ள அனைத்து மனிதர்களும் ஒரு தாய் தந்தையிலிருந்து பிறந்தவர்கள்தான். எனவே உலக மக்கள் அனைவரிடத்திலும் நாம் அன்பு செலுத்துவோம். தவறான பாதையில் செல்பவர்களை கண்டிப்போம். தண்டிப்போம். அது ராஜராஜ சோழனாக இருந்தாலும். ராபர்ட் கிளைவாக இருந்தாலும். ஒளரங்கஜேப்பாக இருந்தாலும். இந்த மனநிலைக்கு வந்து விட்டால் நான் வைக்கும் வாதங்களில் உள்ள நியாயத்தை நீங்கள் புரிந்து கொள்வீர்கள். வெளியே வந்த பூனைக்குட்டியும் உள்ளே சென்று விடும்.

suvanappiriyan said...

வால்பையன்!

//பார்பணீயத்திற்கு எந்த வகையிலும் சளைத்ததல்ல, இஸ்லாமும்!//

'பிராமணன் முதல் வருணத்தான் ஆனதாலும் பிரம்மாவின் முகமாகிய உயர்ந்த இடத்தில் பிறந்ததினாலும் எல்லா வருணத்தாருடைய பொருள்களையும் தானம் வாங்கத் தலைவனாகிறான்' - மனு த.சா.ஆ .1 சு., 100 என்றும்

'சூத்திரன் பிராமணர்களைத் திட்டினால் அவன் தாழ்ந்த இடமான காலில் பிறந்தவனாகையால் அவன் நாக்கை அறுக்க வேண்டும்' (மனு த.சா.அ. 8.சு 270) என்றும்

'பிராமணனுக்கு மங்கலத்தையும், சத்திரியனுக்கு வலுவையும், வைசியனுக்குப் பொருளையும், சூத்திரனுக்கு தாழ்வையும் காட்டுகிற பெயரை இட வேண்டும்' - மனு (த.சா.அ 2 சு,31) என்றும் கூறுவது மனுவின் தருமம் ஆகும்.

'மக்களே! நாம் உங்களை ஒரு ஆண் ஒரு பெண்ணிலிருந்து படைத்தோம். நீங்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் பொருட்டு உங்களைப் பல சமுதாயங்களாகவும் பல கோத்திரங்களாகவும் ஆக்கினோம்.'-குர்ஆன் 49:13.

'உங்களில் எவர் பயபக்தி உடையவராக இருக்கிறாரோ இறைவனிடத்தில் அவர் நிச்சயம் கண்ணியம் உள்ளவராவார்' - குர்ஆன் 49:13

என்று கூறும் குர்ஆனை இந்து மதத்தோடு எப்படி ஒப்பிடுகிறீர்கள்?

தருமி said...

//...உங்களைப் பல சமுதாயங்களாகவும் பல கோத்திரங்களாகவும் ஆக்கினோம்.'-குர்ஆன் 49:13.//

ஓ! அப்படி வேற இருக்கா!

உண்மைத்தமிழன் said...

எனக்கு நல்லா புரிஞ்சு போச்சு..!

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தைப் புரிந்து கொள்ளாமல் அவர்களை எதிர்க்கும் இந்திய கைக்கூலி தருமி ஒழிக..!

அகண்ட பாரதத்தை உருவாக்க வேண்டி அலை அலையாய் உருண்டு, புரண்டு இந்தியாவை ஒருங்கிணைத்த முகலாயர்களை எதிர்க்கும் துரோகி தருமி ஒழிக..!

அப்பாடா.. நானும் ஜோதில ஐக்கியமாயி்ட்டேன்..!

தருமி said...

/நான் வைக்கும் வாதங்களில் உள்ள நியாயத்தை ...//

எக்கச்சக்கமான நியாயமுங்க ...

கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதில் மட்டும் இல்லைங்க ...

வால்பையன் said...

//குர்ஆனை இந்து மதத்தோடு எப்படி ஒப்பிடுகிறீர்கள்? //


இஸ்லாம் அல்லாதவர்களை காஃபிர்கள் என்பதும், அவர்களை அல்லா மன்னிப்பதில்லை என்பதும் பிராமண சூத்திர வகையறா தான்!

ஆங்கிலத்தில் தேங்ஸ், தமிழில் நன்றி மாதிரி!.

இஸ்லாம் அல்லாதவர்களுக்கு ஸ்பெஷல் வரி போடுவது மூன்றாம் தர குடிமக்களாக நடத்துவது தான், பாப்பானாவது சட்டத்திற்கு புறம்மா தீண்டாமையை கடைபிடிக்கிறான், இஸ்லாம் சட்டம் போட்டு கடைபிடிக்குது!

வால்பையன் said...

//'உங்களில் எவர் பயபக்தி உடையவராக இருக்கிறாரோ இறைவனிடத்தில் அவர் நிச்சயம் கண்ணியம் உள்ளவராவார்' - குர்ஆன் 49:13//


'உங்களில் எவர் (அல்லாவிடம்)பயபக்தி உடையவராக இருக்கிறாரோ இறைவனிடத்தில் அவர் நிச்சயம் கண்ணியம் உள்ளவராவார்' - குர்ஆன் 49:13

எல்லாத்துக்கும் அடப்புகுறி போடும் நீங்கள் இங்கே விட்டதிலிருந்தே தெரியுது, உங்கள் இரட்டை வேடம், உண்மையில் அதுகெல்லாம் நிறைய திறமை வேணும், உங்களை ஆஸ்காருக்கு பரிந்துரைக்கலாம்!

வால்பையன் said...

//...உங்களைப் பல சமுதாயங்களாகவும் பல கோத்திரங்களாகவும் ஆக்கினோம்.'-குர்ஆன் 49:13.//

ஓ! அப்படி வேற இருக்கா! //


இதெல்லாம் அவுங்க கண்ணுக்கு தெரியாது வாத்தியாரே!

வால்பையன் said...

//'இம்மார்க்கத்தில் எந்த வற்புறுத்தலும் இல்லை. வழிகேட்டிலிருந்து நேர் வழி தெளிவாகி விட்டது.'- குர்ஆன் 2:256 //


வற்புறுத்தல் இல்லை, ஆனால் சொர்க்கத்தில் ப்ளா ப்ளா என ஆசைகட்டுவது மட்டும் உள்ளது, சரியா அண்ணே!

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

தங்கள் அனைவர் மீதும் அமைதி நிலவட்டுமாக.

//ஹிட்லர் - கெட்டவர்; மோடி - மிக மிக கெட்டவர்: புரிந்து கொள்ளுங்கள்...//

இப்படி மக்களுக்கு உபயோகமாகவும் கொஞ்சம் எழுதுங்களேன், நெஞ்சில் துணிவிருந்தால்...

விவாதியுங்களேன், எழுத்தில் பழுத்த நேர்மை இருந்தால்...

தமிழக மீனவர்கள் உயிர்மட்டும்தான் உயிரா? அப்பாவி குஜராத் முஸ்லிம்கள் உயிர்... .யிரா?

சிங்களன் மட்டும் கொடூரமானவனா? மோடி ரொம்ப நல்லவனோ?

தயவு செய்து இனி முஸ்லிம்கள் விஷயத்தில் நாத்திக வேஷம் போட்டுக்கொண்டு காவித்தனம் செய்ய வேண்டாம்... ஆர்.எஸ்.எஸ்.அம்பி தருமி..!

இதுவரை இந்தியாவை பிடித்து ஆட்டும் காவி பயங்கரவாத்தைதை எதிர்த்து ஒரு பதிவு இல்லை... ஒரு பின்னூட்டம் போட்டதாகக்கூட நினைவு இல்லை... ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதி தருமி.

thiruchchikkaaran said...

அன்புக்குரிய திரு. சுவனபிரியன், நாங்கள் தான் சரி, நாங்கல் தவறு என்பது எனக்கு தெரியும். மொழி மாற்று மென் பொருள் அப்படி செய்து விட்டது.

இங்கே தேர்வில் மதிப்பெண் வாங்க எழுதவில்லை. எனவே முக்கிய விடயத்தில் இருந்து கவனத்தைத் திருப்ப இதை உபயோக்கிக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

கீழே எழுதி உள்ளதைப் படிக்கவும். அதில் சொல்லப் பட்டுள்ள எல்லாவற்றையும் நீங்கள் மனப் பூரவமாக வழி மொழிகிறீர்களா என்பதை உறுதி செய்யவும்.

"உலகில் எந்த ஒரு மனிதனும், இன்னொரு மனிதனை, தன்னுடைய மதத்துக்கு மாறுமாறு பொருளாதார அடக்கு முறையையோ, உடல் பலத்தையோ, படை பலத்தையோ உபயோகித்து நிரப்பந்தப் படுத்தினால், அப்படி நிர்ப்பந்தப் படுத்துபவன் என்னுடைய மதத்தை சேர்ந்தவனாக இருந்தாலும், அவன் அப்படி செய்வதை எதிர்ப்பேன், கண்டிப்பேன், தடுத்து நிறுத்துவேன் என்று நான் (திருச்சிக்காரன்)மனப் பூர்வமாக,என் மன சாட்சியின் பேரால் உறுதி கூறுகிறேன்.

அதே உறுதி மொழியை நீங்களும் அளிக்க தயாரா?


இந்த உறுதி மொழியை "உலகில் மத அடிப்படையில் எந்த ஒரு மனிதன் இன்னொரு மனிதனை தன்னுடைய மதத்துக்கு மாறுமாறு பொருளாதார அடக்கு முறையையோ, உடல் பலத்தையோ படை பலத்தையோ உபயோகித்து நிரப்பந்தப் படுத்தினால், அப்படி நிர்ப்பந்தப் படுத்துபவன் என்னுடைய மதத்தை சேர்ந்தவனாக இருந்தாலும் , அவன் அப்படி செய்வதை எதிர்ப்பேன், கண்டிப்பேன், தடுத்து நிறுத்துவேன் என்று எழுதி நான் (சுவனப் பிரியன்) மனப் பூர்வமாக உறுதி அளிக்கிறேன், ஆண்டவன் பேரால் உறுதி மொழி அளிக்கிறேன் என்று எழுதி உறுதி செய்து மனிதத்துக்கு வலு சேர்க்க இயலுமா?


இந்த ராஜா இப்படி செய்தார் , அந்த ராஜா அப்படி செய்தார் என்பதை தனியே வேறு பின்னூட்டத்தில் எழுதுவது சிறப்பாக இருக்கும்!

வழக்கம் போல உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன். (எழுத்துப் பிழைகளை திருத்துவதை அப்புறம் வைத்துக் கொள்ளலாம்), நன்றி!

thiruchchikkaaran said...

இந்த மனு என்பவர் ஒரு அரசர். அவர் இந்திய சமுதாயத்தை நிருவியவரோ, இந்து மதத்தை ஸ்தாபித்தவரோ அல்ல.

மனு தன்னுடைய காலத்தில் நிலவிய பழக்க வழக்கங்களைத் தொகுத்து தன்னுடய ஆட்சிக்கு சட்ட திட்டங்களை உருவாக்கிக் கொண்டார். அதுதான் மனு சாஸ்திரம் எனப் படுகிறது.

அரசியல் சட்டங்கள் அவ்வப் போது மாறும். ஆட்சி மாறும் போது சட்டங்கள் மாறும். மனுவின் சட்ட திட்டங்களையும் ஏற கட்டியாகி விட்டது.

மனுவுக்கு முன்னும் இந்திய சமூகம் இருந்தது. மனுவுக்குப் பின்னும் இந்திய சமுதாயம் உள்ளது.

மனுவுக்கு முன்னும் இந்து மதம் இருந்தது, மனுவுக்கு பின்னும் இந்து மதம் இருக்கிறது . மனு இந்து மதத்திற்கு மெசியாவோ, தூதரோ, அவதாரமோ, குருவோ அல்ல.

இந்திய மக்கள் யாரும் இன்று மனுவை அங்கீகரிக்கவும் இல்லை, நினைப்பது கூட கிடையாது.99.9% இந்துக்களுக்கு மனு யார் என்று கூட தெரியாது. அவர் இராமரைப் போலவோ, அரிச்சந்திரனைப் போலவோ, சிபியைப் போலவோ, பரதனைப் போலவோ புகழ் பெற்றவரும் அல்ல. மனு மட்டும் அல்ல, சாதி அடிப்படியில் வெவ்வேறு சட்டங்களை வகுப்பவர் யாராக இருந்தாலும் அவரை எதிர்க்கிறோம், கண்டிக்கிறோம்.


எந்த ஒரு மனிதரையும் இழிவு படுத்தும் வகையிலான கருத்துக்களை எதிர்க்கிறோம். மனுவின் கோட்பாடும் கருத்தும் தவறானது. அது இந்து மதத்திற்கு எதிரானது. ஒவ்வொரு மனிதனும் , தன்னைத் தானே மேம்படுத்திக் கொள்ள உதவுவதே ஆன்மீகம். எந்த ஒரு மனிதனும் மிக உயர்ந்த ஞானி ஆக முடியும் என்பதை இந்து மதம் எடுத்து சொல்கிறது. மனிதன் இழிந்தவன் அல்ல, ஒவ்வொரு மனிதனும் சிறந்தவன், எல்லை அற்ற வலிமை உடையவன், அவன் மனதில் உள்ள அறியாமையை மயக்கத்தை எந்த அளவுக்கு ஒருத்தன் விட்டு விடுகிறானோ அந்த அளவுக்கு அவன் தன்னுடய சிறந்த உண்மையான நிலையை நெருங்கிகிறான் என்பதே இந்து மதத்தின் கோட்பாடு. மனு அதை புரிந்து கொள்ளவில்லை.

suvanappiriyan said...

சார்வாகன்!

//1.ஒரு ஆட்சியில் வரி வசுலித்தால் மத பாகுபாடு இல்லாமல் எல்லாரிடமும் ஒரே மாதிரி வருமானத்திற்கு தகுந்தது போல் வசுலித்து இருந்தால் இது பிரச்சினையே இல்லை. ஆனால் அப்படி இல்லை

2. முஸ்லிம் அல்லாத மக்கள் அவுரங்கசீப் ஆட்சியில் முஸ்லிம்களை விட குறைவாக வரி கட்டினார்கள் என்று சொன்னால் ஆதாரம் தாருங்கள்.//

இஸ்லாம் கட்டச் சொல்லும் 2.5 சதவீத வரியை இந்துக்களையும் கட்டச் சொன்னால் 'இஸ்லாமிய சட்டத்தை எங்கள் மீது ஏன் புகுத்துகிறீர்கள்' என்று இந்துக்கள் எதிர்க்க மாட்டார்களா? அங்கும் பிரச்னை வரும் அல்லவா? எனவேதான் இந்துக்களுக்கு ஜிஸியா வரியும், முஸ்லிம்களுக்கு 2.5 சதவீத வரியும்.

பொருளாதார சீர்திருத்தத்திற்காவே ஜெஸ்யா வரி விதிக்கப்பட்டதாகவும் 1705 ம் ஆண்டு இந்த வரியினை அவுரங்கசீப் அடியோடு நீக்கிவிட்டார் என்றும் இந்திய சரித்திரத்தில் மாற்றம் செய்து முஸ்லிம்களுக்கு எதிராக முதன் முதலில் எழுதிய சர் எலியட் என்ற ஆங்கிலேயே வரலாற்றாசிரியர் கூறுகிறார்.

இந்த வரி யாருக்கு எப்படி போடப்பட்டது ?
எல்லா செலவுகளும் போக ஆண்டொன்றுக்கு வருமானத்தில் ரூபாய் 52 மிஞ்சினால் அதற்கு வரி ரூ.3/4. ரூபாய் 250 மிஞ்சினால் வரி ரூ61/2. ரூபாய் 2500 மிஞ்சினால் வரி ரூ 13. அதற்குமேல் வரி இல்லை. இதை நடுத்தர வர்க்கமாக இருந்தால் இரண்டு தவணைகளிலும் சாதாரண வர்க்கமாக இருந்தால் மூன்று தவணைகளிலும் செலுத்தலாம்.
வரி விலக்கு அளிக்கப்பட்டவர்கள்:
ஆறு மாதங்கள் நோய்வாய்ப்பட்டிருந்தால் அவருக்கு வரி இல்லை; உழவருக்கு வரி இல்லை; தச்சருக்கு வரி இல்லை; பொற்கொல்லருக்கு வரி இல்லை; கருமாருக்கு வரி இல்லை; கொத்தனாருக்கு வரி இல்லை; கூலி வேலை செய்பவருக்கு வரி இல்லை; அரசாங்க ஊழியருக்கு வரி இல்ல அவர் எந்த பதவியில் இருந்தாலும்; அர்ச்சகர், புரோகிதர், துறவிகள் இவர்களுக்கு வரி இல்லை. (அப்போதெல்லாம் டை கட்டிக்கொண்டு ஆபிஸிலும் பேங்கிலும் உத்தியோகம் பார்க்காத காலம்)
அப்படியானால் வரி வசூலித்தது எவ்வளவு ? ஒரு புள்ளி விபரம்:
1680-81 ம் ஆண்டில் பாதுஷாபூர் என்ற பட்டணத்தில் வாழ்ந்த மக்களின் முஸ்லிம் அல்லாதோர் எண்ணிக்கை 1855. அதில் வரி விலக்கு அளிக்கப்பட்டவர் களின் எண்ணிக்கை 1320. வரி அளித்தவர்கள் 535 பேர் மட்டுமே. வசூலிக்கப்பட்ட மொத்தத் தொகை ரூபாய் 2950.

அதே நேரம் முஸ்லிம்கள் தங்களது வருமானத்தில் 2.5 சதவீதம் கட்டாயம் கொடுக்க வேண்டும். இதன்படி பார்த்தால் முஸ்லிம்கள் தான் அதிகம்வரி செலுத்தியிருக்கிறார்கள். சில காலங்களுக்குப் பிறகு ஜிஸியா வரியை அடியோடு ஒளரங்கஜேப் எடுத்து விட்டதையும் வரலாறுகளில் நாம் பார்க்கிறோம்.

//3 தலிபான் சீக்கிய மக்களிடன் ஜிஸியா வசுலித்த செய்தி
4.தலிபான் இஸ்லாமிய ஆட்சி அமைக்க போராடுவதாக சொல்கிறார்கள்.//

நான் முன்பே தாலிபான்கள் இஸ்லாத்தை விட்டு வெளியேறி விட்டார்கள் என்று விளக்கியும் இருக்கிறேன். யார் என்ன அறிக்கை விட்டாலும் குர்ஆனுக்கு மாற்றமாக நடக்கும் எந்த ஆட்சியும் இஸ்லாமிய ஆட்சியாக முடியாது.

suvanappiriyan said...

//ஓ! அப்படி வேற இருக்கா!//

''நீங்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் பொருட்டு உங்களைப் பல சமுதாயங்களாகவும் பல கோத்திரங்களாகவும் ஆக்கினோம்.'-குர்ஆன் 49:13.''

என்ற முழு வாக்கியத்தில் பாதியை மட்டும் எடுத்துப் போடுகிறீர்களே! வாத்தியாரே! உங்களுக்கே இது நியாயமாகப் படுதா!:-(

saarvaakan said...

நண்பர் சுவன பிரியன்
மதத்தில் நிர்ப்பந்தம் இல்லை(குரான் 2.256) என்று சொல்கிறீர்கள். இஸ்லாமிய ஆட்சியின் கீழுள்ள பிற மதத்வரிடம் ஜிஸியா வரி(குரான் 9.29) வசூலித்தல் ஒரு நிர்ப்பந்தம் இல்லையா?

இது இரண்டாம் கலிஃபா திரு உமர் அவர்கள் கி.பி 637ல் சிரிய கிறித்தவர்களுடன் செய்த ஒப்பந்த விதிகளை பாருங்கள்.

http://wikiislam.net/wiki/The_Pact_of_Umar

இந்த ஒபந்தத்தால் சிரிய இப்போது ஒரு இஸ்லாமிய பெரும்பான்மை(87%) நாடு.

நான் கேட்பதெல்லாம் இரு கேள்விகள்.

1.ஒரு தூய்மையான(ஷாரியா அடிப்படையிலான‌) இஸ்லாமிய ஆட்சியில் பிற மதத்தினர் ஜிஸ்யா வரி கட்டித்தான் ஆக வேண்டுமா?

2.அவர்கள் இந்த உமர் உடன்படிக்கையின்படியா அல்லது எப்படி நடத்தப் படுவார்கள்?

thiruchchikkaaran said...

நாங்கள் மனுவின் கோட்பாட்டைக் கண்டிக்கிறோம், எதிர்க்கிறோம்.

மனுவின் கோட்பாடு காலாவதியாகி பல காலம் ஆகி விட்டது. மனு இந்து மதத்தை நிறுவியவர் அல்ல.

மனுவிற்கு முன்னும் இந்து மதமும், இந்திய சமுதாயமும் இருந்தது.

மனுவுக்குப் பிறகும் இந்திய சமுதாயமும், இந்து மதமும் இருக்கிறது.

இந்து மதத்தை பின்பற்றிய இந்திய சமுதாயம் சாதி அமைப்பிலான சமுதாயம் ஆக இருந்ததால், இந்து மதம் சாதியத்தை பின்பற்றுவது போல கருதப் பட்டது.

எந்த இந்து மதத்தின் மீது சாதீயக் குற்றச் சாட்டு வலுவாக வைக்கப் பட்டதோ, அந்த இந்து மதத்தின் முக்கியக் கோவில்களில் இன்று யாரும் சாதி வித்யாசம் பார்ப்பது இல்லை.

திருப்பதி பாலாஜி கோவிலில், சில நொடிகள் பாலாஜியை தரிசிக்க முடியுமா என்று தவிப்பவன், தனக்கு அருகில் நிற்பவன் எந்த சாதி என்று எண்ணிக் கூடப் பார்ப்பது கிடையாது.

சபரி மலைக்கு மாலை போட்டுக் கொள்ளும் பார்ப்பன சமுதாயம் என்று சொல்லப் படும் சமுதாயத்தை சேர்ந்தவர் ஒருவர், தனக்கு குருசாமியாக பார்ப்பனர் அல்லாத ஒருவரை ஏற்று மாலை போட்டுக் கொள்கிறார்.

கலப்புத் திருமணங்களில் பார்ப்பன சமுதாயப் பெண்டிர், பார்ப்பனர் அல்லாதவரை திருமணம் செய்வது கணிசமாக நடப்பதைக் காண்கிறோம்.

இதெல்லாம் இந்து மதம் இல்லையா?

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், திருப்பதியில் பக்கத்தில் நிற்பவர் எந்த சாதி என்று எல்லாம் எண்ணிக் கூடப் பாராமல் இடித்துப் பிடித்தக் கொண்டு சாமி கும்பிடுவது - இது இந்து மதம் இல்லையா? அப்ப இது எந்த மதம் , கம்போடிய மதமா?

ஐயையோ, இவங்க சாதியை எல்லாம் விட்டுடுவாங்க போல இருக்கே, அப்ப நாம எதை வச்ச திட்டி பொழைக்கிறது, என்று எண்ணி, பதறியபடி , நீ இந்த சாதிதான், அவன் அந்த சாதிதான், சாதியை விட முடியாது என்று, சாதிய வேறுபாடுகளை நிலை நிறுத்த முயலுகின்றனர்.


மனு என்பவர் ஒரு அரசர். அவர் இந்து மதத்தில் சுவாமி விவேகானந்தர், இராமானுஜர், ஆதி சங்கரர் போல ஒரு முக்கிய ஆன்மீக வாதி அல்ல, அரிச்சந்திரன், பாரதன், இராமர் அளவுக்குப் புகழ் வாய்ந்த அரசர் கூட இல்லை.

இந்த மனு, தன்னுடைய கால கட்டத்தில் இருந்த சமூக கட்டமைப்புக்கு ஏற்ப தன்னுடைய ஆட்சிக்கு சட்ட திடங்களை உருவாக்கி நூலாக ஆக்கி இருக்கிறார். அரசியல் சட்டங்கள் ஆட்சி மாறும் போது மாறும். மனுவின் சட்டங்களும் மாறி விட்டன.

இன்றைக்கு 99.9% இந்துக்களுக்கு மனு யார் என்றே தெரியாது. சாதிய சமுதாயத்தி நிலை நிறுத்தி, சாதி அடிப்படையில் அரசியல் நடத்தி வருவோர் தான் விடாமல் மனுவைத் தேடித் பிடித்து அப்படி எழுதினார், இப்படி எழுதினார் என்று போட்டு வருகின்றனர். சரி, சரி,மனுதான் இந்து மதம் என்று சொல்லி விடலாம் என்று அவசரமாக இன்னும் சிலர் முயலுகின்றனர்.

இந்திய சமுதாயம் சமத்துவப் பாதையில் வேகமாக செல்லுகிறது. இன்னும் முன்னேற வேண்டியுள்ளது.

முழு சமத்துவ, சமரச, மத வெறியற்ற, மத சகிப்புத் தன்மை உடைய,நல்லிணக்க, நாகரீக சமுதாயம் அமைய வாழ்த்துக்கள்.

வால்பையன் said...

//இஸ்லாம் கட்டச் சொல்லும் 2.5 சதவீத வரியை இந்துக்களையும் கட்டச் சொன்னால் 'இஸ்லாமிய சட்டத்தை எங்கள் மீது ஏன் புகுத்துகிறீர்கள்' என்று இந்துக்கள் எதிர்க்க மாட்டார்களா? அங்கும் பிரச்னை வரும் அல்லவா? எனவேதான் இந்துக்களுக்கு ஜிஸியா வரியும், முஸ்லிம்களுக்கு 2.5 சதவீத வரியும்.//


அதனால் தான் நீங்கள் இந்திய அரசியல் சட்டம் எதையும் மதிப்பதில்லையா!?, உங்களை பொறுத்தவரை இவையெல்லாம் மக்களுக்காக விதிக்கபட்ட வரிகள் இல்லை அப்படி தானே. தம்மை ஒரு இஸ்லாம் அரசராக காட்டும் பொழுது மதத்தில் அரசியல் இல்லை, அரசியலில் மதம் இல்லை என்ற சப்பை கட்டு வேறு! என்னமோ போங்க!

மாமியார் உடைச்சா மண்சட்டி, மருமக உடைச்சா பொன் சட்டி பழமொழி உங்களுக்காகவே உருவாகியது போல!

thiruchchikkaaran said...

//இஸ்லாம் கட்டச் சொல்லும் 2.5 சதவீத வரியை இந்துக்களையும் கட்டச் சொன்னால் 'இஸ்லாமிய சட்டத்தை எங்கள் மீது ஏன் புகுத்துகிறீர்கள்' என்று இந்துக்கள் எதிர்க்க மாட்டார்களா? அங்கும் பிரச்னை வரும் அல்லவா? எனவேதான் இந்துக்களுக்கு ஜிஸியா வரியும், முஸ்லிம்களுக்கு 2.5 சதவீத வரியும்.//

இஸ்லாமியருக்கு ஒரு வரி, இஸ்லாமியர் அல்லாதவருக்கு ஒரு வரி என்று விதிக்க வண்டிய அவசியம் என்ன? ஒருவன் யாராக இருந்தாலும் , எந்த மதமாக இருந்தாலும் அவன் ஒரு குடி மகன். அவனுடைய வருமானத்துக்க ஏற்ப அரசாங்கத்திற்கு வரி கட்ட வேண்டும்.

இதை விட்டு விட்டு திம்மிகளுக்கு மட்டு தனி வரி, கட்டாய மத வரி, அவன் ஏழையாக இருந்தாலும் மத வரி . ஏழை திம்மிகளுக்கு, கட்டாய மத வரி விதிக்கப் பட்டு உள்ளது. அந்த திம்மி மதம் மாறினால் வரி கட்ட வேண்டியதில்லை.

thiruchchikkaaran said...

எல்லா மதங்களுடனும் நல்லிணக்கத்தைக் கடைப் பிடிப்பதோடு, எல்லா மதங்களிலும் நல்ல கருத்துக்கள் உள்ளன என்பதை சுட்டிக் காட்டி அவற்றைப் பாராட்டுகிறோம். ஒவ்வொரு மதத்திலும் ஆன்மீக முன்னேற்றத்துக்கான சிந்தனை செயல்கள் உள்ளதை சுட்டிக் காட்டுகிறோம். எல்லா மத விழாக்களிலும் கலந்து கொள்கிறோம் . இது ஒரு விடயம்.

அதே நேரம் ஒருவர் இன்ன மதத்தைப் பின்பற்றுகிறார் என்பதற்காக அவர் மீது மத வரியைப் போட்டு துன்புறுத்தி கட்டாயப் படுத்தும் கொடுங்கோன்மைக்கு முன் மண்டி இட இயலாது.

ஏழை திம்மிகளுக்கு வரி போட்டா தப்பு இல்லை, கட்டிட்டுப் போக வேண்டியதுதானே என்ற ரீதியில் ஒளரங்கஜேபின் கோட்பாட்டை பாராட்டி வரவேற்பதை என்னும் போது, மனதில் எச்சரிக்கை தோன்றுகிறது. மத வெறியை, மதக் கட்டாய வரியை திட்ட வட்டமாக எதிர்க்கிறோம். எல்லோருக்கும் வரி போட்டால் நாம் ஆட்சேபிக்க ஒன்றுமில்லை. எருது நோவு காக்கைக்கு தெரியாது.

thiruchchikkaaran said...

என் பணியாள் ஆயா பேக்கிடம் என் பணப்பை உள்ளது. அதில் கவனமாகச் சேமித்து வைத்த 04 ரூபாயும் 02 அனாக்களும் இருக்கின்றன. எனக்கு ஓய்வான நேரத்தில் நான் குர்ஆன் பிரதிகளை கையால் எழுதிக்கொடுத்தேன், தொப்பிகள் தைத்தேன். அந்த தொப்பிகளை விற்றுத்தான் நான் நேர்மையாக சம்பாதித்த பணம்தான் அது. அந்த பணத்தில்தான் (என் உடல்மூடும்) க·பன் துணி வாங்கப்பட வேண்டும். இந்த பாவியின் உடலை மூட வேறு எந்தப் பணமும் செலவிடப்படக் கூடாது. இது எனது இறுதி விருப்பம். (என் கையால் எழுதப்பட்ட) குர்ஆனின் பிரதிகளை விற்று நான் 305 ருபாய்கள் பெற்றேன். அந்தப் பணமும் ஆயாபேக்கிடம்தான் உள்ளது. இந்த பணத்தில் வாங்கப்படும் இனிப்பு சோறு ஏழை முஸ்லிம்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என்பது என் விருப்பம்.

இதன் அடிப்படையில்தான் நம்முடைய எட்டாம் வகுப்பு வரலாற்று பாட புத்தகத்தில் குல்லாய்க ளை தைத்து விற்றும் , குரான்களின் கைப் பிரதிகளை எழுதி விற்றும் எளிய வாழக்கை வாழ்ந்தவர் என்று புகழ் மாலை சூட்டி உள்ளனர்.


ஆனால் உலகில் அக்காலத்தில் இருந்த அரசுகளிலே மிகவும் செல்முடைய கஜானவாக இருந்தது ஒளரங்கஜேபின் கஜானா!

Revenue administration

Emperor Aurangzeb’s exchequer raised a record £100 million in annual revenue through various sources like taxes, customs and land revenue, et al. from 24 provinces.[23] A pound sterling was exchanged at 10 rupees then.

No. Province Land Revenue (1697) Notes
- Total £38,624,680
1 Bijapur £5,000,000
2 Golconda £5,000,000
3 Bengal £4,000,000
4 Gujarat £2,339,500
5 Lahore £2,330,500
6 Agra £2,220,355
7 Ajmere £2,190,000
8 Ujjain £2,000,000
9 Deccan £1,620,475
10 Berar £1,580,750
11 Delhi £1,255,000
12 Behar £1,215,000
13 Khandesh £1,110,500
14 Rajmahal £1,005,000
15 Malwa £990,625
16 Allahabad £773,800
17 Nande (Nandair) £720,000
18 Baglana £688,500
19 Tatta (Sind) £600,200
20 Orissa £570,750
21 Multan £502,500
22 Kashmir £350,500
23 Kabul £320,725
24 Bakar £240,000
அதில் பெரும்பாலான செல்வத்தை அவர் போருக்காக செலவிட்டு இருக்கிறார்

thiruchchikkaaran said...

. நான் இந்தியாவின் சக்கரவர்த்தியாக இருந்து இந்த நாட்டை ஆண்டேன் என்பது சத்தியமானது. ஆனால் நான் என் வாழ்நாளில் ஒரு நல்ல காரியம்கூடச் செய்ததில்லை என்பதற்காக நான் மிகவும் வருத்தப்படுகிறேன். ஆனால் இப்போது வருந்துவதனால் எந்தப் பயனுமில்லை. என் இறுதிச் சடங்குகளை என் அருமை மகன் ஆஸம்தான் செய்யவேண்டும் என்பது என் விருப்பம். வேறுயாரும் என்னுடலைத் தொடக்கூடாது.


”ஆனால் நான் என் வாழ்நாளில் ஒரு நல்ல காரியம்கூடச் செய்ததில்லை என்பதற்காக நான் மிகவும் வருத்தப்படுகிறேன். ஆனால் இப்போது வருந்துவதனால் எந்தப் பயனுமில்லை’
‘ இப்படி ஒரு ஒப்புதல் வாக்கு மூலத்தை இறுதிக் காலத்தில் அளித்து உள்ளார் ஒளரங்கஜேப். கடைசி காலத்தில் அவருக்கு புரிந்தது இன்றைக்கு அவரது புகழ் பாடி அவரது மத அடிப்படைவாத கொடுங்கோன்மையை நியாயப் படுத்துவோருக்குப் புரியுமா?

thiruchchikkaaran said...

பணக்கார முஸ்லீம்கள தங்கள் சொத்தில் பத்தில் ஒரு பங்கை ஏழைகளுக்கு வழங்க வேண்டும் என்பதுதானே ஜகாத். இது சரியா இல்லையா. இது (ஜகாத்) கட்டாயமா என்பது வேறு விடயம்.

ஆனால் வசதி படைத்த முஸ்லீம்கள் தங்கள் சொத்தில் ஒரு பங்கை ஏழை முஸ்லீமுக்காக தர வேண்டும். அந்த சொத்து, பணம் ஏழைகளுக்கு பங்கிட்டு தரப்பட வேண்டும். இது சரியா இல்லையா?

இந்த நிலையில் ஏழை முஸ்லீம்கள் மீது கட்டயாமாக ஜகாத் வரி விதிக்கப் பட்டதா?

அவரங்கசீப் ஏழை முஸ்லீம்கள் மீது கட்டாய ஜகாத் வரி விதித்தரா?

உலகில் எந்த ஒரு இஸ்லாமிய அரசும் ஏழை முஸ்லீம்கள மீது கட்டாயமாக ஜகாத் வரி விதித்ததாக சரித்திரம் இல்லை, எனக்குத் தெரிந்த அளவில் இல்லை.


ஆனால் ஏழை திம்மிகள் மீது கட்டாயமாக “ஜிஸியா” வரி விதிக்கப் பட்டுள்ளது. இதை வசதியாக மறைத்து விடுகிறார்கள்.

ஏழை முஸ்லீம் மீது ஜகாத் என்பது கட்டாய வரியாக விதிக்கப் பட்டது என்பதாக அவுரங்கசீப் கால வரலாற்றில் ஒரு சிறு குறிப்பு கூட இல்லை. எந்த ஒரு வரலாற்று ஆராய்ச்சியாளரும், அவ்ரங்கசீப் ஆட்சிக் காலத்தில் ஏழை திம்மிக்கு விதிக்கப் பட்ட கட்டாய மத வரியைப் போல,ஏழை இஸ்லாமியருக்கு சகாத் வரி விதிக்கப் பட்டதாக எழுதவில்லை என்பதை முக்கியமாக சொல்ல விரும்புகிறோம்.

எப்பொழுதெல்லாம் கட்டாய மத வரியான ஜிசியாவைப் பற்றி எழுதினாலும் உடனே அதை சமாளிக்கும் விதமாக சகாத் பற்றி பலரும் எழுதுகிறார்கள். சகாத் பற்றி எல்லோருக்கும் தெரியாது என்று நினைத்து விட்டார்களா, அல்லது அவர்களே சகாத் பற்றி சரியாகப் புரிந்து கொள்ளவில்லையா என்பது நமக்கு தெரியாது.

வால்பையன் said...

//நான் முன்பே தாலிபான்கள் இஸ்லாத்தை விட்டு வெளியேறி விட்டார்கள் என்று விளக்கியும் இருக்கிறேன்.//

குரானில் சொல்லப்பட்டிருக்கும் ஜிகாத்தை கடைப்பிடிப்பதால் தாங்கள் தான் உண்மையான இஸ்லாமியர்கள் என்றும், சுவனபிரியன்(சுவனம்னா சொர்க்கம் தானே, இப்படி பொய் பேசினா அங்க உங்களுக்கு ”அதுகள்” கிடைக்குமா?) தான் பொய் பேசி கொண்டு திரிகிறார்ன்னு அவுங்க சொல்றாங்களாம்!

வால்பையன் said...

//''நீங்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் பொருட்டு உங்களைப் பல சமுதாயங்களாகவும் பல கோத்திரங்களாகவும் ஆக்கினோம்.'-குர்ஆன் 49:13.''

என்ற முழு வாக்கியத்தில் பாதியை மட்டும் எடுத்துப் போடுகிறீர்களே! வாத்தியாரே! உங்களுக்கே இது நியாயமாகப் படுதா!:-( //


ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள தனித்தனியா பொறத்தா போதுமே? தனிதனி இனமாகவும், மதமாகவும் பிறக்கனுமா என்ன?

இங்க கதை விடுறது நீங்களா இல்ல அல்லாவா!?

வால்பையன் said...

//தயவு செய்து இனி முஸ்லிம்கள் விஷயத்தில் நாத்திக வேஷம் போட்டுக்கொண்டு காவித்தனம் செய்ய வேண்டாம்... ஆர்.எஸ்.எஸ்.அம்பி தருமி..!

இதுவரை இந்தியாவை பிடித்து ஆட்டும் காவி பயங்கரவாத்தைதை எதிர்த்து ஒரு பதிவு இல்லை... ஒரு பின்னூட்டம் போட்டதாகக்கூட நினைவு இல்லை... ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதி தருமி. //



ஹாஹாஹாஹா!

என்னா சார் இது, சி.பி.ஐ வச்சு பார்த்தா மாதிரி சொல்றாங்க!

இதுக்கு தான் நான் எல்லா கடவுளையும் கண்டமேனிக்கு திட்டுறது, இப்பயாவது புரிஞ்சிக்கோங்க, மதம்னு வந்துட்டாளே மனிதம் மறந்து வெறி பிடிச்சிகுது பாருங்க எல்லாருக்கும், நாம ஒரு கேள்வி கேட்டா, அவனை கேட்டியான்னு பதில் வருது, இன்னும் கொஞ்ச நேரத்தில் அவன் பண்ணான் அதான் நானும் பண்ணேன்னும் பதில் வரும் பாருங்க!

thiruchchikkaaran said...

இந்தப் பதிவிற்கான மேன் அப் தி மேட்ச், திரு. வால் பையனுக்கு கொடுக்கப் பட வேண்டும் என்று நான் கருதுகிறேன்.

தருமி said...
This comment has been removed by the author.
தருமி said...

//thiruchchikkaaran said...
இந்தப் பதிவிற்கான மேன் அப் தி மேட்ச், திரு. வால் பையனுக்கு கொடுக்கப் பட வேண்டும் என்று நான் கருதுகிறேன்.//

ஏன் அது நமது அடிப்படைவாதி இஸ்லாமிய அம்பி
முஹம்மத் ஆஷிக் அவர்களுக்குக் கொடுக்கக்கூடாதென்று சவாலிடுகிறேன்.

தங்கள் அனைவர் மீதும் அமைதி நிலவட்டுமாக.

thiruchchikkaaran said...

ஐயோ தருமி ஐயா,

நீங்களும் இதை சொல்ல ஆரம்பித்து விட்டீர்களா, இந்த வாசகம், நல்ல வாசகம் தான். ஆனால் இதை சொல்லி முடித்த உடனே, நீ இப்படி தான் இருக்க வேண்டும், அப்படி பேசக் கூடாது என்று பல உருட்டல் மிரட்டல்களோடு கட்டளைகள் வருகின்றன.

மத வரி போட்டா தப்பில்லை, ஒத்துக்கோ, கொஞ்ச பணம்தான், பர்சில இருக்கிற பணத்தை எடுத்து வரியைக் கட்டு. இதை எதிர்த்துக் கேட்டால் நீ தீவிரவாதி என்று நீங்களும் சொல்லி விடாதீர்கள்.


வெறுமனே அமைதி நிலவட்டும் என்று வாழ்த்தினால் போறுமா? அவரவர் விரும்பிய மதத்தை தொழட்டும், அவர்கள் சமுதாயத்துக்கு கெடுதல் உண்டாகாத வகையிலே, பிற மதங்களின் மீது வெறுப்புணர்ச்சியை தூண்டி, மோதலை உருவாக்கி இரத்த ஆறு ஓட விடாத வரையிலே அமைதியாக அவரவர் எந்த மதத்தை வேண்டுமானாலும் தொழட்டும். எல்லோரும் குடி மகன், சம மாக எண்ணி ஒரே மாதிரியான வரி, ஒரே மாதிரியான நீதி என்று இருந்தால் அமைதி தானாக வரும். வெறுமனே அமைதி வரட்டும் என வாழ்த்தி விட்டு மிரட்டலை ஆரம்பித்தால் எப்படி அமைதி வரும்!

தருமி said...

திருச்சிக்காரன்

பயந்து விட்டீர்களா? அதெல்லாம் என்னன்னா ..
நமது அடிப்படைவாதி இஸ்லாமிய அம்பி முஹம்மத் ஆஷிக் அவர்கள் என்னைப் பற்றி மிக மரியாதையாக ஒரு பின்னூட்டம் இட்டிருந்தார். படித்துப் பாருங்கள். அப்பின்னூட்டத்தின் முதலில் இந்த வார்த்தைகள்: //தங்கள் அனைவர் மீதும் அமைதி //

எனக்கு இது வேடிக்கையாக இருக்கிறது. அடுத்தவர்களைப் புண்படுத்துவது மாதிரி பேசிவிட்டு ‘அனைவருக்கும் அமைதி’ என்பது பெரிய நகைமுரணாகத் (parody)தோன்றியதால் அதை அங்கிட்டேன். ஏதோ பழக்காம ஒன்றை எழுதிட்டு நம்ம செய்ற வேலைகளைத் தொடருணும் போலும்!!

குடுகுடுப்பை said...

இஸ்லாமிய அடிப்படைவாதியின் எகிப்து புரட்சியின் பின்னூட்டம் படியுங்கள், அடிப்படைவாதிகளின் எகிப்திய நோக்கம் புரியும்.

முன்னாள் கிறிஸ்தவரான நீங்கள் பிரிட்டிஷார்க்கு சொம்பு தூக்காததை கண்டிக்கிறேன்.

திருச்சிக்காரனோடு சில கருத்து வேறுபாடு உண்டு, ஆனாலும் இந்தப்பதிவில் அடித்து ஆடியிருக்கிறார்.

தருமி said...

நீங்க வேறொரு அடிப்படைவாதியைப் பற்றி பேசுறீங்கன்னு நினைக்கிறேன்.
ம்ம்..ம்ம்.. நிறைய அடிப்படைவாதிகளின் நடுவில் இருப்பதால் வரும் குழப்பம்தான் ...

வால்பையன் said...

//இஸ்லாமிய அடிப்படைவாதியின் எகிப்து புரட்சியின் பின்னூட்டம் படியுங்கள், அடிப்படைவாதிகளின் எகிப்திய நோக்கம் புரியும்.//


எங்கே!?

தருமி said...

அடிப்படைவாதி முஹம்மத் ஆஷிக் அம்பி அவர்களே!

உங்களையும் அடிப்படைவாதி என்று சொல்வதில் உங்களுக்கு எதிர்ப்பு இருக்காது. ஏனெனில் உங்கள் profile-ல் அப்படித்தானே உங்களை அழைத்துக் கொண்டுள்ளீர்கள். நல்லது. அடுத்து ’அம்பி’க்கும் எந்த எதிர்ப்பும் இருக்காது. ’சுட்டதை திருப்பி சுடுகிறேன்’!

ஒவ்வொரு வார்த்தைக்கும் பின்னூட்ட பதில் சொல்லலாம். என்ன சொன்னாலும் எங்கே ஏறப்போகிறது?

அதென்ன ஹிட்லர் கெட்டவர்னு சொல்லிட்டீங்க. யூதர்களை ஹிட்லர் கொன்றதெல்லாம் பொய்யுன்னு சொல்வீங்களே!

//மக்களுக்கு உபயோகமாகவும் கொஞ்சம் எழுதுங்களேன், நெஞ்சில் துணிவிருந்தால்..//
’மக்களுக்கு’ அப்டின்னா ..? இஸ்லாமிய மக்களுக்கா ..? நமக்கெல்லாம் எதுக்குங்க அம்புட்டு துணிவு; நானோ ஒரு ’ஆர்.எஸ்.எஸ்.அம்பி! உங்களை மாதிரி நானென்ன ஒரு அடிப்படைவாதியா?

//விவாதியுங்களேன், எழுத்தில் பழுத்த நேர்மை இருந்தால்...//
நேர்மைக்கு நான் எங்கங்க போவேன்! நானோ ஒரு ’ஆர்.எஸ்.எஸ்.அம்பி! உங்களை மாதிரி நானென்ன ஒரு அடிப்படைவாதியா?

//அப்பாவி குஜராத் முஸ்லிம்கள் உயிர்... .யிரா?//

- முஸ்லிம்கள் உயிர்... .யிரா? - உங்களுக்குத்தானே அது என்னன்னு தெரியும். எனக்கெப்படி தெரியும். நானோ ஒரு ’ஆர்.எஸ்.எஸ்.அம்பி! உங்களை மாதிரி நானென்ன ஒரு அடிப்படைவாதியா?

//சிங்களன் மட்டும் கொடூரமானவனா? மோடி ரொம்ப நல்லவனோ?//

நான் தான் ஒளரங்கஜேப் மிக மிக மிக நல்லவர் அப்டின்னு சொல்லிட்டேனே. அப்புறம் ஏங்க இப்படி கோபப்படுறீங்க? உங்க ஆளு யாரா இருந்தாலும், நம் நாட்டை படையெடுத்து அடிமைப்படுத்தியிருந்தாலும், உங்க ஆளை ஏதும் சொன்னா உங்களுக்கு உடனே இப்படி கோபம் வரும்னு எனக்கு நல்லா தெரியும். ஏன்னா, நானோ ஒரு ’ஆர்.எஸ்.எஸ்.அம்பி!

//முஸ்லிம்கள் விஷயத்தில் நாத்திக வேஷம் போட்டுக்கொண்டு காவித்தனம் செய்ய வேண்டாம்...//
சரிங்க .. முஸ்லிம்கள் விஷயத்தில் நீங்களே காலித்தனம் செய்யுங்க...

அதென்னங்க... கழுத்தைச் சீவும்போதுகூட சாமி பெயரைச் சொல்றதை you tube-ல் பார்த்திருக்கேன். ஆனா நீங்க என்னை ”வெளுத்து வாங்கும்போதுகூட”, //தங்கள் அனைவர் மீதும் அமைதி நிலவட்டுமாக.// இப்படி சொல்றீங்க. ரொம்பவும் ”மரியாதை”யாகத்தான் கழுத்தைக்கூட வெட்டுவீங்க போலும்!

இதையும் வாசிச்சி பாருங்க அம்பி.

வால்பையன் said...

//அதென்னங்க... கழுத்தைச் சீவும்போதுகூட சாமி பெயரைச் சொல்றதை you tube-ல் பார்த்திருக்கேன். ஆனா நீங்க என்னை ”வெளுத்து வாங்கும்போதுகூட”, //தங்கள் அனைவர் மீதும் அமைதி நிலவட்டுமாக.// இப்படி சொல்றீங்க. ரொம்பவும் ”மரியாதை”யாகத்தான் கழுத்தைக்கூட வெட்டுவீங்க போலும்!//


அதுக்கு பேரு தான் சார் ஹலால் உணவு! :-)

suvanappiriyan said...

திருச்சிக்காரன்!

//"உலகில் மத அடிப்படையில் எந்த ஒரு மனிதன் இன்னொரு மனிதனை தன்னுடைய மதத்துக்கு மாறுமாறு பொருளாதார அடக்கு முறையையோ, உடல் பலத்தையோ படை பலத்தையோ உபயோகித்து நிரப்பந்தப் படுத்தினால், அப்படி நிர்ப்பந்தப் படுத்துபவன் என்னுடைய மதத்தை சேர்ந்தவனாக இருந்தாலும் , அவன் அப்படி செய்வதை எதிர்ப்பேன், கண்டிப்பேன், தடுத்து நிறுத்துவேன் என்று எழுதி நான் (சுவனப் பிரியன்) மனப் பூர்வமாக உறுதி அளிக்கிறேன், ஆண்டவன் பேரால் உறுதி மொழி அளிக்கிறேன் என்று எழுதி உறுதி செய்து மனிதத்துக்கு வலு சேர்க்க இயலுமா?//

உறுதிஅளிக்கிறேன். உறுதி அளிக்கிறேன். என்னையும் உங்களையும் நமது தருமியையும் படைத்த இறைவன் பெயரால் உறுதி அளிக்கிறேன். போதுமா!

நான்தான் முன்பே கூட கட்டாய மத மாற்றம் தவறு என்று கூறியிருக்கிறேனே! ஒளரங்கஜேப்பும் ஒரு மன்னர் தனது குடி மக்களோடு இஸ்லாத்தை தழுவுவதாக சொல்லியும் 'மனம் மாறாமல் நிர்பந்தத்தில் மாறுவதில் எந்த பிரயோசனும் இல்லை' என்று தடுத்ததையும் ஆதாரத்தோடு விளக்கியிருக்கிறேனே! பார்க்கவில்லையா!கட்டாய மத மாற்றத்தை குர்ஆனும் தடை செய்கிறது.

suvanappiriyan said...

திருச்சிக்காரரே!

//மனுவின் கோட்பாடு காலாவதியாகி பல காலம் ஆகி விட்டது. மனு இந்து மதத்தை நிறுவியவர் அல்ல.

மனுவிற்கு முன்னும் இந்து மதமும், இந்திய சமுதாயமும் இருந்தது.

மனுவுக்குப் பிறகும் இந்திய சமுதாயமும், இந்து மதமும் இருக்கிறது.

இந்து மதத்தை பின்பற்றிய இந்திய சமுதாயம் சாதி அமைப்பிலான சமுதாயம் ஆக இருந்ததால், இந்து மதம் சாதியத்தை பின்பற்றுவது போல கருதப் பட்டது.

எந்த இந்து மதத்தின் மீது சாதீயக் குற்றச் சாட்டு வலுவாக வைக்கப் பட்டதோ, அந்த இந்து மதத்தின் முக்கியக் கோவில்களில் இன்று யாரும் சாதி வித்யாசம் பார்ப்பது இல்லை.//

காலாவதியாகி விட்டது என்று நீங்கள் தான் சொல்கிறீர்கள். நடைமுறையில் எந்த மாற்றமும் இன்னும் வரவில்லை. உங்கள் ஊர் ஸ்ரீரங்கம் கோவிலில் கருவறை சென்று வழிபட எங்களையும் அனுமதிக்க வேண்டும் என்று இன்று வரை போராடி எந்த விடிவும் ஏற்படவில்லையே. இன்று வரை பிராமணர்களை மட்டும்தானே அனுமதிக்கின்றனர். சில வாரங்களுக்கு முன்பு கூட சென்னை தியேட்டர் ஒன்றில் நரிக்குறவர் இனத்தவரை முதல் வகுப்புக்கு பணம் கட்ட தயாராக இருந்தும் அனுமதிக்காத அந்த நபரின் சாதி வெறியை வளர்த்தது இந்து மத சட்டங்கள் அல்லவா! 'மனுவின் சட்டங்கள் எங்களை கட்டுப்படுத்தாது' என்று எங்காவது மதத் தலைமையிலிருந்து அதிகாரபூர்வ அறிக்கை வந்திருக்கிறதா! இந்து மதம் என்றாலே பிராமணர்களை தவிர்த்து உங்களால் பேச முடியாது. மனு சட்டத்தை இந்து மதத்திலிருந்து நீக்குவதற்கு சங்கராச்சாரியார் உடன்படுவாரா? பத்திரிக்கைகளில் 'திருமண தகவல்' பக்கத்துக்கு சென்றால்தான் இந்து மத சாதிகளிலேயே எத்தனை உட்பிரிவுகள் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்கிறோம்.

இங்கு ஒரு சம்பவத்தை குறிப்பிட்டால் நலமாக இருக்கும் என்று நினைக்கிறேன். நேற்று உங்களுக்கு பதில் டைப் செய்து கொண்டிருக்கும் போது தொழுகைக்கான நேரம் வந்து விட்டது. பதிலை எழுதி முடித்து மசூதிக்கு செல்வதற்க்குள் கூட்டுத் தொழுகை முடிந்து விட்டது. என்னோடு தாமதமாக வந்த மற்ற ஏழு பேரும் என்னை தலைவராக நின்று தொழ வைக்க சொன்னார்கள். தாடியும் இல்லை. வயதிலும் சிறியவன் என்பதால் அவர்களையே தலைவராக நிற்கச் சொன்னேன். ஆனால் அவர்கள் 'நீங்களே நில்லுங்கள்' என்று என்னை தலைவராக நிறுத்தி விட்டனர். நானும் தொழுது மற்றவர்களுக்கும் தலைவராக நின்று தொழ வைத்தேன். தொழுகை முடிந்து திரும்பிப் பார்த்தால் எனக்குப் பின்னால் கிட்டத்தட்ட இருபது பேர் நின்று தொழுதிருக்கிறார்கள். தொழுதவர்களில் சவூதிகள்,பாகிஸ்தானிகள், எகிப்தியர்கள்,சூடானிகள்,இந்தியர்கள் என்று பலதரப்பட்ட மக்களும் இருந்தனர். நான் மதரஸா சென்று மார்க்க கல்வி பயின்றவன் அல்ல. கேள்வி ஞானத்தால் ஆர்வத்தில் இஸ்லாத்தை தெரிந்து கொண்டவன்.

இது எப்படி சாத்தியமானது? குர்ஆனும் முகமது நபியும் இட்ட கட்டளைகள் அந்த மக்களை நான் குனிந்தால் அவர்களையும் குனிய சொல்கிறது. நான் தொழுகையை முடித்தால் அவர்களையும் தொழுகையை முடிக்கச் சொல்கிறது. எனக்கும் அவர்களுக்கும் உள்ள தொடர்பு என்ன? மொழி, இனம், நிறம் கலாச்சாரம் அனைத்திலும் வேறுபட்டிருக்கும் எங்களை இணைத்தது குர்ஆன் அல்லவா!

இதே அளவுகோளை நம் நாட்டிலும் வைத்துப் பாருங்கள். தலைவராகவெல்லாம் வேண்டாம். சாமியை நெருங்கி சென்று வழிபடுவதற்க்குக் கூட வர்ணாசிரமம் அனுமதிப்பதில்லை. இதை ஒத்துக் கொள்கிறீர்களா?

suvanappiriyan said...

//ஆனால் உலகில் அக்காலத்தில் இருந்த அரசுகளிலே மிகவும் செல்முடைய கஜானவாக இருந்தது ஒளரங்கஜேபின் கஜானா! //

இவ்வளவு செல்வ செழிப்பாக இருந்தும் ஒளரங்கஜேப் தனக்கென்று எதையும் சேர்த்து வைத்துக் கொள்ளவில்லை. அரசாங்க சம்பளத்தை வாங்காமல் தான் தனியாக உழைத்து அதிலிருந்து வரும் வருமானத்தின் மூலம் தனது செலவுகளை பார்த்துக் கொண்டுள்ளார் என்பதிலிருந்து இவரின் தொண்டுள்ளம் நமக்கு தெரிகிறதல்லவா!

//”ஆனால் நான் என் வாழ்நாளில் ஒரு நல்ல காரியம்கூடச் செய்ததில்லை என்பதற்காக நான் மிகவும் வருத்தப்படுகிறேன். ஆனால் இப்போது வருந்துவதனால் எந்தப் பயனுமில்லை’
‘ இப்படி ஒரு ஒப்புதல் வாக்கு மூலத்தை இறுதிக் காலத்தில் அளித்து உள்ளார் ஒளரங்கஜேப். கடைசி காலத்தில் அவருக்கு புரிந்தது இன்றைக்கு அவரது புகழ் பாடி அவரது மத அடிப்படைவாத கொடுங்கோன்மையை நியாயப் படுத்துவோருக்குப் புரியுமா?//

முகமது நபி கடமையான தொழுகை நீங்களாக உபரியான தொழுகைகளையும் நிறைய தொழுவார். அப்பொழுது அவருடைய மனைவி 'உங்களுக்குத்தான் முன் பின் பாவங்களெல்லாம் மன்னிக்கப்பட்டு விட்டதே! நீங்கள் ஏன் அதிகம் தொழுது உடம்பை வருத்திக் கொள்கிறீர்கள்?' என்று கேட்டபோது ' இத்தனை அருட்கொடைகளை அளித்த இறைவனுக்கு நான் நன்றியுள்ள அடியான இருக்க வேண்டாமா?' என்று கேட்டார். இது போல் இந்தியாவை 50 ஆண்டுகள் கட்டிக்காத்ததில் பல நேரங்கள் தொழுகை விடுபட்டிருக்கலாம். அரசர் என்ற முறையில் தவறான முடிவுகளை எடுத்திருக்கலாம். மனிதன் என்ற முறையில் பல தவறுகளும் செய்திருக்கலாம். முகலாய மன்னர்களிலேயே ஒளரங்கஜேப்பின் பண்புகளை பட்டியலிடும் வரலாற்றாசிரியர்கள் அவரிடம் தவறான நடவடிக்கைகள் இருந்ததாக எங்கும் எழுதப்படவில்லை. வரலாறை பதிந்தது அனைவரும் இந்துக்களே!

இறைவனுக்கு முன்னால் மனிதன் தன்னை தாழ்த்திக் கொள்வது உலகம் முழுவதும் உள்ள நடைமுறை. நாமே கூட இறைவனிடம் 'நான் மிகப் பெரும் பாவி' என்று பிரார்த்திப்போம்.

தருமி said...

//ஆனால் உலகில் அக்காலத்தில் இருந்த அரசுகளிலே மிகவும் செல்முடைய கஜானவாக இருந்தது ஒளரங்கஜேபின் கஜானா! //

அயல்நாட்டுக்காரன் நம் மீது படையெடுத்து வந்து அடிமைப்படுத்தி நம் செல்வங்களை சுரண்டினார்கள் என்றேனே .. இதெல்லாம் அந்த செல்வம் தானே!

தருமி said...

//நானும் தொழுது மற்றவர்களுக்கும் தலைவராக நின்று தொழ வைத்தேன்.//

உங்கள் பெருமிதம் புரிகிறது. ஆனால் இந்த நிகழ்வு நிச்சயமாக கிறித்துவத்தில், புத்தத்தில் நடைபெறும். மற்ற மதங்கள் பற்றி அதிகம் தெரியாததால பேசவில்லை.இந்து மதத்தில் புரையோடிப்போன இந்த சாதி விவகாரம் மிகவும் மோசமானது.

ஆனால் இந்த சாதி விவகாரம் எப்படி வந்திருக்க முடியும்? சமயங்கள் தனி மனித ஒழுக்கத்தைப் போதிக்க வேண்டும். அதையும் தாண்டி சமூகக் குழப்பங்களுக்குக் காரணிகளாக இருக்கக்கூடாது. நான் அந்த சாதி..நீ இந்த சாதி .. தள்ளி நில் என்று சொல்வதோ, ஈமான்காரனுக்கு இது .. காபிருக்கு இது என்று பிரிப்பதோ, என்னை வணங்குபனுக்கு மட்டும் சுவனம் என்றெல்லாம் பேசுவதும் இதே இழுக்கைத்தான் விளைவிக்கும். (கிறித்துவத்தில் இருந்த இந்த கருத்து இப்போது அப்படி பேசப்படுவதில்லை.)

நிறைய பேசலாம் ... கேட்கத்தான் ஆளில்லை!

குடுகுடுப்பை said...

இதே அளவுகோளை நம் நாட்டிலும் வைத்துப் பாருங்கள். தலைவராகவெல்லாம் வேண்டாம். சாமியை நெருங்கி சென்று வழிபடுவதற்க்குக் கூட வர்ணாசிரமம் அனுமதிப்பதில்லை. இதை ஒத்துக் கொள்கிறீர்களா?
//
இதையெல்லாம் ஒழிக்கவேண்டும் என்றுதான் திருச்சிக்காரன் பேசுகிறார். இந்துமதத்தில் இருந்துகொண்டு மனுவை எதிர்க்கும் சுதந்திரம்தான் அதன் ஜனநாயகம். தருமி போன்ற நல்லவர்கள் இஸ்லாமை ஏற்றுக்கொள்ளாவிட்டால் நரகத்தில் எரிக்கப்படுவார்கள் என்று நீங்கள் நம்புகிறீர்கள், இப்படிப்பபட்ட நல்லவர் ஏன் நரகத்தில் எரிக்கப்படவேண்டும் என்று கேள்வி கேட்பதும் மனுவை எதிர்ப்பதும் போலத்தான் முடியுமா உங்களால்.

thiruchchikkaaran said...

அன்புக்குரிய சுவனப் பிரியன், முதற்கண் நீங்கள் உறுதி மொழி அளித்ததைப் பாராட்டுகிறேன். வாழ்த்துக்கள். மற்றவரை பலவந்தப் படுத்தக் கூடாது என்னும் மனப் போக்கு இந்தியாவின் முக்கிய தத்துவங்களுள் ஒன்று. இப்படி உறுதி மொழி குடுத்து விட்டு ஜிசியா வரியை எதற்கு நியாயப் படுத்துகிறீர்கள்?


ஜிசியா வரி என்பது மதரீதியிலான பொருளாதார அடக்குமுறையே. அவரங்கஜேப் ஏழை திம்மிகளுக்கு மட்டும் வரி போட வேண்டியது இல்லை. அது தவறு. வரி அவசியமானால எல்லாக் குடி மகனுக்கும் வரி போட வேண்டும்.

என்னைக் கேட்டால் நான் எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல், ஆன்மீக இஸ்லாத்தை அமைதியாகப் பரப்ப முடியும் என்பேன்.

யார் சொன்னாலும் சொல்லாவிட்டாலும், நாங்கள் உலகில் உள்ள எல்லோரிடமும் இஸ்லாத்தின் சிறந்த பண்புகளை எடுத்து செல்வோம். இஸ்லாத்தை மட்டும் அல்ல, இயேசு கிறிஸ்துவின் சமரச விட்டுக் கொடுக்கும் கருத்துக்களை, புத்தரின் அன்பை இரக்கத்தை, இந்து மதத்தின் உண்மையை...எல்லாவற்றையும் உலகில் உள்ள எல்லோரிடமும் எடுத்து செல்வோம்.

உலகில் எல்லோரும் ரமதான் மாதத்தில் ஒரு நாளாவது நோன்பு இருந்து ஈத் திருநாளை கொண்டாடா வும், இயேசு கிறிஸ்துவின் சிறந்த கொள்கைகளை நினைவு கூர்ந்து கிறிஸ்துமஸ் அன்று அவர் முன் மண்டி இடவும், புத்தரின் அன்பை, பகுத்தறிவை போற்றி புத்த பூர்ணிமா அன்று அவரை வணங்கவும்,தீபாவளி அன்று இராமரின் தியாகத்தை, மற்றவரின் நன்மைக்காக தான் துன்பம் ஏற்ற கோட்பாட்டை நினைவு கூர்ந்து அவரை வணங்கவும், காந்தி ஜெயந்தி அன்று காந்தியை வணங்கவும், பெரியார் பிறந்த நாளின் போது, அவரின் எதிர்த்து கேள்வி கேட்கும் பாங்கை நினைவு கூர்ந்து அவருக்கு மாலை அனுவிக்கவும் படிக்கான, யார் யார் வாய்க் கேட்பினும் மெய்ப் பொருள் காணும் படியான சமூகம் உருவாகும்.

பகுத்தறிவுவாதிகளான எங்களுக்கு எந்த ஒரு இசமாக இருந்தாலும், மதமாக இருந்தாலும், அதை ஆக்க பூர்வமாக அணுக தயக்கமில்லை.

எந்தக் கோட்பாட்டையும் நாங்கள் காரணமின்றி வெறுப்புக் கண்ணோட்டத்துடன் அணுகவும் இல்லை.

அதே நேரம் அநியாயத்துக்கு, அடக்குமுறைக்கு, பலவந்தத்துக்கு, பயமுறுத்தலுக்கு, பணியவும் மாட்டோம்.

suvanappiriyan said...

சார்வாகன்!

//மதத்தில் நிர்ப்பந்தம் இல்லை(குரான் 2.256) என்று சொல்கிறீர்கள். இஸ்லாமிய ஆட்சியின் கீழுள்ள பிற மதத்வரிடம் ஜிஸியா வரி(குரான் 9.29) வசூலித்தல் ஒரு நிர்ப்பந்தம் இல்லையா?//

முஸ்லிம்களின் அனைத்து வரிகளும் அரசாங்கத்தின் கஜானாவுக்கு செல்கிறது. முழு அரசாங்கமும் அந்த வரிப்பணத்தில்தான் நடத்தப்படுகிறது. இதில் மற்ற மதத்தவர்களிடம் எந்த வரியும் வாங்காமல் இருந்தால் அல்லது ஆட்சியாளர் பெருந்தன்மையாக விட்டுவிட்டால் அதனால் அவமானம் வரி செலுத்தாதவர்களுக்கே. இதனால் இரண்டாம் தர குடி மக்களாக நடத்தப்படும் அபாயம் உள்ளது. அவர்கள் ஆட்சியாளர்களிடம் எந்த உதவியும் கேட்டுப் பெறவும் முடியாது.

1.ஒரு தூய்மையான(ஷாரியா அடிப்படையிலான) இஸ்லாமிய ஆட்சியில் பிற மதத்தினர் ஜிஸ்யா வரி கட்டித்தான் ஆக வேண்டுமா?

முஸ்லிம்களுக்கு ஐந்து கட்டாய கடமைகள் உண்டு என்பதை நீங்கள் அறிவீர்கள். அதில் ஒன்று முஸ்லிம்கள் தங்களின் வருமானத்தில் குறிப்பிட்ட தொகையை ஏழை வரியாக இஸ்லாமிய அரசாங்கத்துக்கு செலுத்த வேண்டும். இது கட்டாயம். இங்கு ஜிஸியா வரியைப் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை. ஒரு இஸ்லாமிய அரசாங்கத்தில் கஜானா நிரம்பி வழிந்து ஜிஸியா வரி தேவையில்லை என்று ஆள்பவர் முடிவெடுத்தால் அது அவரின் விருப்பத்தைப் பொறுத்தது. ஆனால் முஸ்லிம்கள் மார்க்க கடமை என்பதால் அந்த நிலையிலும் அரசாங்கத்துக்கு வரி செலுத்தியே ஆக வேண்டும்.

2.அவர்கள் இந்த உமர் உடன்படிக்கையின்படியா அல்லது எப்படி நடத்தப் படுவார்கள்?

'முஸ்லிம்களே! இறைவனுக்கு கட்டுப்பட்டு நீதிக்கு சாட்சியாக ஆகிவிடுங்கள். ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள்.' -குர்ஆன் 5:8

இங்கு ஆட்சியாளர்கள் நீதியுடன் நடக்க வேண்டும் என்று குர்ஆன் கட்டளையிடுகிறது. ஒரு சமுதாயம் வேறொரு நம்பிக்கையில் இருந்து முஸ்லிம்களுடன் பகையுடன் இருந்தாலும் முஸ்லிம் ஆட்சியாளர் நீதி தவறாமல் அனைத்து மதத்தவரையும் சமமாக நடத்தச் சொல்கிறது குர்ஆன். இதற்கு மாற்றமாக ஒரு ஆட்சியாளர் நடந்திருந்தால் அவர் குர்ஆனை விளங்கி ஆட்சி செய்யவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

மேலும் நீங்கள் கொடுத்த உமர் சம்பந்தமான சுட்டியில் 'குர்ஆனை எங்கள் குழந்தைகளுக்கு ஓதிக் கொடுக்க மாட்டோம். ஆனால் யாரும் அவர்களாக விரும்பி இஸ்லாத்தை ஏற்றால் அதை நாங்கள் தடுக்கவும் மாட்டோம்' என்று அந்த மக்கள் ஒப்பந்தம் போட்டதை பார்த்தீர்கள்தானே! உமர் நினைத்திருந்தால் அன்று அவருக்கு இருந்த அதிகாரத்துக்கு அனைவரையும் மிரட்டியே இஸ்லாத்தை ஏற்க வைத்திருக்க முடியும். மார்க்கத்தில் நிர்பந்தம் இல்லை என்பதால் அவர் அவ்வாறு செய்யவில்லை. எனவேதான் இன்றும் கூட சிரியாவில் கிறித்தவர்கள் கணிசமாக இருக்கிறார்கள். மற்றவர்கள் முஸ்லிம்களாக மாறியது அவர்களின் சொந்த விருப்பத்தில்தான்.

Unknown said...

முஸ்லிம்கள் தாலிபான்களை பற்றி பேசினால் , அவர்கள் இஸ்லாத்தை விட்டு வெளியேறிவிட்டார்கள். அவர்களது வழிமுறை இஸ்லாத்துக்கு விரோதமானது என்பார்கள். ஆனால் அவர்களை தானாக கண்டிக்க முன்வர மாட்டார்கள்.குர்ஆனில் ஜிகாத் பற்றி இருக்கிறதே என்றால் அது போர் நடை பெரும் பொது இறங்கிய வசனம் என்பார்கள், அதே போல் தான் நம்ம திருச்சிக்காரனும் இந்துத்துவாவுக்கு காவடி தூக்குவார். பாரதியினுடைய முற்போக்குகுக்கும், பெரியாரின் முற்போக்குக்கும் வேறுபாடு இருக்கிறதல்லவா அது போல் தான் இதுவும். பூணூல் தீண்டாமையின் சின்னம் என்பதால், பெரியார் பூணூல் அணிவதையே எதிர்த்தார். பாரதி எல்லோரும் அணிந்து எல்லோரும் பார்பனர் ஆக வேண்டும் என்றார். பெரியாரின் முற்போக்கு இழிவை துடைப்பது ,அதற்க்கு ஆதாரமான இந்து பார்பனிய மதத்தை ஒழிப்பது. பாரதியினுடையது இந்து மதத்தை எப்படியாவது காப்பது.

thiruchchikkaaran said...

இந்து மதம் சுதந்திரமான மதம், சிந்தனைகளுக்கு முழு உரிமை குடுக்கும் இடமாகும்.

நான் ஒரு கோவிலைக் கட்டினால் அதன் வழிபாடும், செயல் பாடும், நிர்வகமும் இவ்வாறு இருக்கும்.

பூசனை நியம குறிப்புகள்:

பக்தர்கள் கர்ப்பக் கிரஹத்திலே மூலவருக்கு மிக அருகாமையில் நிற்பதை வரவேற்கிறோம். அர்ச்சனை செய்யும் போது பூவை தூவி அர்ச்சிப்பதை பக்தர்களே செய்யலாம்!

நீரபிசேகம், பாலாபிசேகம் , சந்தன அபிசேகம் போனறவற்றை பக்தர்கள் தாங்களே செய்ய வேண்டும். பக்தர்கள் இல்லாத போது, அர்ச்சகர் அபிசேகம் செய்தால் போதுமானது.

மூலவரின் பாதங்களை தொட்டு வணக்க விரும்புவோருக்கு எந்த வித தடையும் இன்றி அனுமதி வழங்கப் பட வேண்டும். மூலவரை தொட்டு வணங்குவதற்கான அதிக பட்ச நேரம் பத்து நிமிடங்கள் ஆகும். கூட்டம் அதிகமாக இருந்தால், பக்தர்கள் அனுசரித்து விரைவாக செல்ல வேண்டும்.

தமிழில் வழிபாடு செய்வதை வூக்குவிக்கிறோம். புரியாத மொழியில் சொல்வதை புரியாமலே கேட்டுக் கொண்டு இருப்பதை விட தாய் மொழியில் கேட்டு புரிந்து ஐக்கியமாவது சிறப்பு.

அப்படியே வட மொழியில் பாடினாலும்

“புனரபி ஜனனம், புனரபி மரணம்

புனரபி ஜனனே ஜடரே சயனம்

இஹ சம்சாரே பஹு துக் தாரே

கிருபையா பாரே பாஹி முராரே!”

இதை தமிழில் மொழி பெயர்த்து

“மறுபடி பிறப்பு, மறுபடி இறப்பு,

மறுபடி பிறந்து (தாயின்) வயிற்றினில் வாசம்,

இந்த வாழ்க்கை மிக துன்பமானது

தயவு செய்வாய் முராரி”

என்று தமிழிலும் பாடினால் புரிந்து கொள்ள இயலும்.

இதை சொல்லுகிற நேரத்திலே அர்ச்சனையோ , பாயிரமோ எந்த மொழியில் சொல்லப் பட வேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டியது சந்நிதியில் வழிபட காத்திருக்கும் மனிதர்கள் தான். தாங்கள் எந்த மொழியில் வழிபாட்டை செலுத்த விரும்புகிறோம் என்பதை தீர்மானிக்கும் உரிமை அவரவர்க்கு உண்டு. இதிலே தங்களுடைய அடக்குமுறை பாசிசத்தை காட்டி இந்த மொழியில் தான் வழிபாடு செய்ய வேண்டும் என்று மிரட்டும் உரிமை யாருக்கும் இல்லை, இந்தியா ஒரு சுதந்திர நாடு.

thiruchchikkaaran said...

அர்ச்சனை செய்யும் போது அர்ச்சகர் மந்திரங்களை சொல்லும் போது, கீர்த்தனைகளை பாடும் போதோ, பக்தரும் அதை திருப்பி சொல்லும் படி தெளிவாக சொல்ல வேண்டும், அவருக்கு மந்திரத்தின் வார்த்தைகள் சரியாகப் கேட்கவில்லை என்றால் திருப்பி சொல்லலாம். (நம்மில் பலருக்கு தூய்மையான செந்தமிழை புரிதல் செய்தாலே கடினமாக உள்ளது).

அர்ச்சகர் நியமன வழிகாட்டுதல்:

1) அர்ச்சகர் ஆக இருப்பவர் தான் அர்ச்சனை செய்யும் கடவுளிடம் கொள்கை அடிப்படையில் உணர்வு பூர்வமான தொடர்பும், மரியாதையும் உடையவராக இருக்க வேண்டும். உதாரணமாக முருகனுக்கு அர்ச்சனை செய்பவர் முருகனின் வீரம், கருணை ஆகியவற்றை புரிந்தவராக இருக்க வேண்டும். இராமருக்கு அர்ச்சனை செய்பவர் இராமரின் தியாகம், மற்றவரின் மகிழ்ச்சிக்காக தான் துயரங்களை ஏற்பது ஆகியவற்றை உணர்ந்தவராக இருக்க வேண்டும்

2)அர்ச்சகர் ஆக இருப்பவர் உலகப் பொருட்களை ஈட்டுவதை விட, ஆன்மீக முயற்சியில் அதிக ஈடுபாடு உடையவராக இருக்க வேண்டும்.

3) அர்ச்சகர், கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஆன்மீக உயர்வு அடையும் வண்ணம், அவர்களை வூக்குவிப்பவராக இருக்கவேண்டும்.

4) பக்தர்கள் தாங்கள் வழி பாட்டில் பங்கெடுக்க விரும்பினால், அதை மனப்பூர்வமாக ஆதரித்து அவர்கள் தாங்களே பூசனை செய்ய உதவி செய்பவராக இருக்க வேண்டும்

இதன்னியில்

5)ஒரு அர்ச்சகர் குடி பழக்கம் உடையவராக இருக்கக் கூடாது. குடிப் பழக்கம் இருந்தால் அதை நிறுத்தி விட வேண்டும்

6)அர்ச்சகர் திருமணம் ஆனவராக இருக்க வேண்டும். அவர் தன்னுடைய மனைவியை தவிர வேறு பெண்களுடன் தொடர்பு வைக்க நினைக்காதவராக இருக்க வேண்டும்.

7)பெண்களும் அர்ச்சகர் ஆக பணி புரியலாம். பெண்கள் மாத விடை நேரத்திலே 4 நாட்கள் அவர்கள் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம்.

8)அர்ச்சகர் பணிக்கு தேர்வு செய்யும் போது, வூதியம் பெற்று பணி செய்ய விரும்பும் அர்ச்சகர்களும் தேர்வு செய்யப் படலாம். வூதியும் பெறாமல் ஓய்வு நேரத்தில் அர்ச்சகப் பணி ஆற்றுபவர் களும் வரவேற்க்கப் படுவார்கள.

9)கோவிலை சுற்றி முப்பது கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மக்களை அணுகி, அந்தப் பகுதில் வசிக்கும் எல்லா சமூகத்தை சேர்ந்த மக்களும் பிரதி நிதித்துவம் பெறும்படி அர்ச்சகர் குழு அமைக்கப் படும்.

தருமி said...

//தருமி போன்ற நல்லவர்கள்...?\\

கடவுளே ...!

தருமி said...

சுவனப்பிரியன்

இது ஒரு தொகுப்புரை; இவைகள் உங்கள் முன்வைக்கப்பட்ட சில கேள்விகள். இவைகளுக்கு இதுவரை சரியான பதில் இல்லை.
---------

கொள்ளையடிக்க அப்படிப் படையெடுத்து வந்த ஒரு அயலானை வெறுக்காமல், //நமது நாட்டுக்கு நன்மைதானே கிடைத்திருக்கிறது. // என்று சொல்வது நிச்சயமாக நாம் பிறந்த நாட்டுக்கு செய்யும் ஒரு பச்சைத் துரோகம்.

//மொகலாயர்களுக்கு முன்னால் அகண்ட பாரதமே கிடையாது.//முகலாயர்களுக்கு முன்னால் இந்த அகண்ட பாரதத்தின் மன்னன் யார்? என்ற விபரத்தையும் தாருங்கள். //
போரின் கோரத்தை கண்டு வன்முறை மறுத்து அன்பின் வழிகண்ட அசோகரின் சாம்ராஜ்யம்.http://en.wikipedia.org/wiki/Ashoka

ஆளுக்கொரு, சாதிக்கொரு, சமயத்துக்கொரு வரி என்பது அரசல்ல... அராஜகம்! மதம் அதற்குத் துணையாக இருந்தால் அந்த மதம் ஒரு அராஜக மதம்.

இஸ்லாம் அல்லாதவர்களை காஃபிர்கள் என்பதும், அவர்களை அல்லா மன்னிப்பதில்லை என்பதும் பிராமண சூத்திர வகையறா தான்!

எங்கள் குரானில் அல்லா அப்படியே வாழ்க்கை முறையைக் கொடுத்திருக்கிறார். அந்தக் கொள்கைகள் படிதான் அரசை அமைக்க வேண்டும் என்று தினமும் பாடி வருகிறீர்கள். இல்லையா?

உங்க ஆளு யாரா இருந்தாலும், நம் நாட்டை படையெடுத்து அடிமைப்படுத்தியிருந்தாலும், உங்க ஆளை ஏதும் சொன்னா உங்களுக்கு உடனே இப்படி கோபம் வரும்னு எனக்கு நல்லா தெரியும்.

நான் அந்த சாதி..நீ இந்த சாதி .. தள்ளி நில் என்று சொல்வதோ, ஈமான்காரனுக்கு இது .. காபிருக்கு இது என்று பிரிப்பதோ, என்னை வணங்குபனுக்கு மட்டும் சுவனம் என்றெல்லாம் பேசுவதும் இதே இழுக்கைத்தான் விளைவிக்கும்.

முஸ்லிம்கள் தாலிபான்களை பற்றி பேசினால் , அவர்கள் இஸ்லாத்தை விட்டு வெளியேறிவிட்டார்கள். (ஆனால் வழக்கமாக கடவுள் ஒருவன்; நபி கடைசி நபி என்ற இரண்டையும் நம்பினாலே அவன் இஸ்லாமியன் என்பீர்களே! அதோடு அந்த 5 கடமைகள். தாலிபான்காரங்க எல்லோரும் தாடி வேற வச்சிருக்காங்க ,,, நீங்க அவங்க இஸ்லாமை விட்டு வெளியேறிவிட்டதாக சொல்றீங்க!)

அந்த உரைகல் விஷயம் சொன்னேனே - அதையும் செய்து பார்த்து விட்டு பதில் சொல்லுங்களேன்.

சகோதரர்களை ஏனுங்க அந்த ஐயா கொலை செஞ்சாரு?

saarvaakan said...

/மேலும் நீங்கள் கொடுத்த உமர் சம்பந்தமான சுட்டியில் 'குர்ஆனை எங்கள் குழந்தைகளுக்கு ஓதிக் கொடுக்க மாட்டோம். ஆனால் யாரும் அவர்களாக விரும்பி இஸ்லாத்தை ஏற்றால் அதை நாங்கள் தடுக்கவும் மாட்டோம்' /
நண்பர் சுவனப் பிரியன்,

உஙகளுக்கு நல்ல நகைசுவை உணர்வு.

போரில் தோற்றவர்கள் மீது வெற்றி பெற்றவர்களால் திணிக்கப் படுவதுதான் உடன்படிக்கை.

இதே மாதிரி ஒரு நாடு இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் நாட்டை கைப்பற்றினால் என்று வரலாற்றில் ஒரு எடுத்துக் காட்டு.

(உ.ம்) ஆட்டோமான் பேரரசு போரில்(1921) தோற்றதும் அதனை பல பகுதிகளக பிரித்தது கூட உடன் படிக்கை போட்டுதான்.

அப்போது யாரும் எல்லா இஸ்லாமியர்களை கொல்லவும் இல்லை,மதம் மாற்றம் செய்யவும் இல்லை.

http://en.wikipedia.org/wiki/Treaty_of_S%C3%A8vres

இதில் என்ன இன்னொரு நகைச்சுவை என்றால் சவுதி அரேபியா பிரிட்டிஷ்,ப்ரான்ஸ் படைகளை ஆதரித்தது.நம் நாட்டில் பிரிட்டிஷ் படைகளை எதிர்த்து ஆட்டொமான் சாம்ராஜ்யத்திற்கு ஆதரவாக கிலாபத் இய்க்கம் நடத்தப் பட்டது.

பிரிட்டிஷ் உடன்படிக்கையில் யாரும் மதத்தையோ,கலாச்சாரத்தையோ கலக்கவில்லை. ஆட்டோமான் சாம்ராஜ்யம் கலைக்கப் பட்டது இன்னொரு போரை தடுக்கவே.உடனே 1921‍‍_23ல் துருக்கி நாடு சுதந்திரம் பெற்று விட்டது.

உமரின் உடன்படிக்கை,பிரிட்டிஷ் உடன்படிக்கை எது

நாகரிகமாக,மனிதாபிமானமாக‌ தெரிகிறது?.

ஆட்டோமான் பேரரசு குரான் படி இஸ்லாம் அரசு அல்ல என்ற பதிலா? இங்கு போரி தோற்ற நாட்டு மக்களை எப்படி உடன்படிக்கை போட வேண்டும் என்பதுதான் பிரச்சினை.

தருமி said...

சுவனப்பிரியன்,

இஸ்லாமியருக்கு ஜகாத் இருப்பதுபோல் கிறித்துவர்களுக்கு தசம பாகம் / பத்தில் ஒரு பாகம் / tithe என்றும் உண்டு. நீங்கள் சொல்வதுபோல் வைத்துக் கொண்டால் “கிறித்துவ நாடுகளும்” இரண்டு வரிகள் (ஜகாத் & ஜிஸ்யா என்பது போல்) வைத்திருக்க வேண்டும்.

அப்படி எந்த நாட்டிலும் இருந்தால் சொல்லுங்களேன்.

thiruchchikkaaran said...

அன்புக்குரிய திரு மேட் (Matt) அவர்களே, நான் இந்துத்துவாவுக்கு காவடி தூக்குகிறேன் என்று சொல்கிறீர்கள்.

நான் எழுதும் கருத்துக்களில் எதையாவது மேற்கோள் காட்டி இது தவறானது, மனிதத்துக்கு எதிரானது, இது சமத்துவத்து எதிரானது, இது சமரசத்துக்கு எதிரானது, இது அநியாயத்தை ஆதரிப்பது, இது அடக்குமுறையை அங்கீகரிப்பது... என்று என்னுடைய எழுத்துக்களை மேற்கோள் காட்டி சுட்டிக் காட்டினால் நன்றாக இருக்கும்.


சமரசத்தையும், சமத்துவத்தையும், அன்பையும், நட்பையும் , அமைதியையும் உருவாக்க வேண்டும் என்று எழுதுவதுதான் இந்துத்வாவுக்கு காவடி எடுப்பது என்று நீங்கள் பெயர் சூட்டினால், எந்த பெயரை நீங்கள் சூட்டினாலும், அந்தக் கருத்துக்கள் நல்லதுதானே!

thiruchchikkaaran said...

அன்புக்குரிய திரு குடுகுடுப்பை அவர்களே,

உங்களின் நேசத்துக்கும் ஆதரவுக்கும் நன்றி.

ஆனால் "திருச்சிக்காரனோடு சில கருத்து வேறுபாடு உண்டு",
என்று எழுதி இருப்பது எனக்கு ஒரு வகையில் ஆச்சரியமே. நமக்குள் பெரிய அளவில் கருத்து வேறுபாடு இருக்க வாய்ப்பில்லை என்றே நான் கருதுகிறேன். எந்த வகையில் வேறுபாடு என்பதை தெரியப் படுத்தினால் தெரிந்து கொள்ளலாம். விவாதிக்கலாம். என்னுடைய தளத்தில் வரும் கருத்துக்களுக்கு மாற்றுக் கருத்துக்களை அங்கே பிரசுரிக்கிரோமே.


அதே நேரம் சுயமாக சிந்திக்கும் மனிதர்கள் முழுமையாக கருத்து ஒத்துப் போவது மிகவும் அரிதே. யாரவது ஒருவர் சொல்வதை எந்தக் கேள்வியும் கேட்காமல், மறுப்பும் சொல்லாமல் அப்படியே ஒத்துக் கொண்டு செயல் படுபவர்களிடம் தான் கருத்து வேற்றுமை இல்லாமல் இருக்கும்.

thiruchchikkaaran said...

//இந்து மதம் என்றாலே பிராமணர்களை தவிர்த்து உங்களால் பேச முடியாது. மனு சட்டத்தை இந்து மதத்திலிருந்து நீக்குவதற்கு சங்கராச்சாரியார் உடன்படுவாரா?//

நீங்கள் இந்து மதம் உட்பட எல்லா மதங்களின் கருத்துக்களையும் , கோட்பாடுகளையும் சரியாகப் புரிந்து கொண்டால் விவாதிக்க இயலும். ஆனால் நீங்கள் பிற மதங்களை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்பது உங்களின் எழுத்துக்களில் இருந்தே தெரிகிறது. முதலில் மனு சட்டம் இந்து மதத்தில் இருக்கிறது என்று நீங்கள் எழுதி இருப்பதே உங்களின் புரிதல் இன்மையைக் காட்டுகிறது.


நீங்கள் எல்லா மதங்களையும் உங்கள் மதப் பார்வையில் இருந்தே அணுகுகிறீர்கள். உலகிலே யூத மதம், இஸ்லாம் இந்த இரண்டு மதங்கள் மாத்திரமே அரசியல் பொருளாதாரம், இராணுவம், சமூகம் , ஆன்மீகம் .. உட்பட எல்லாவற்றுக்குமான கோட்பாடுகளை வழங்கி இருக்கின்றன. இதை வைத்துக் கொண்டு எல்லா மதங்களும் இப்படியே இருக்கும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்.

இந்து , புத்த, சமண மதங்கள் எல்லாம் ஆன்மீக முன்னேற்றம், மனிதன் தன் சொந்த முயற்ச்சியால் மனநிலையை உயர்த்தி முன்னேறுதல் ஆகியவற்றை பற்றியே முக்கியமாக சொல்லுகின்றனர். அரசியல் இப்படி இருக்க வேண்டும், சமூகம் இப்படி இருக்க வேண்டும், பொருளாதாரம் இப்படி இருக்க வேண்டும் ... என்று எல்லாம் இவற்றுக்கான கோட்பாடுகளை இந்த மதங்கள் கட்டளை போடவில்லை. அரசியல், பொருளாதார, சமூக விவகாரங்களை எல்லாம் அவ்வப்போது மக்களே தீர்மானிக்கிறார்கள்.

மனு ஒரு அரசர் என்றும் அவர் இயற்றியது அவர் ஆட்சிக்கான சட்டம் என்பதையும் சொல்லி இருக்கிறோம். எந்த ஒரு இந்து மத நூலிலாவது உப நிடதங்களோ , சித்தர் பாடல்களோ, கீதையோ, வேதங்களோ ... இவற்றில் எதிலாவது மனுவைப் பற்றியோ, அவரின் நூலைப் பற்றியோ ஒரு குறிப்பாவது இருக்கிறதா? இவற்றை நீங்கள் படித்து இருக்கிறீர்களா? ஆதி சங்கரர் எந்த இடத்திலாவது மனுவைப் பற்றி சொல்லி இருக்கிறாரா?


இன்னொரு முக்கிய விடயம் என்னவென்றால் இந்து மதத்தை எந்த ஒரு தனிப் பட்ட நபரும் நிறுவவில்லை. எனவே அவர் ஒத்துக் கொள்வாரா, இவர் ஒத்துக் கொள்வாரா என்ற கேள்விக்கு எல்லாம் இங்கே இடம் இல்லை. போப் (Pope) போல ஒரு மைய அத்தாரிட்டி யாரும் இந்து மதத்திற்கு கிடையாது. எனவே யாரிடமும் பெர்மிசன் வாங்க வேண்டிய அவசியம் இந்து மத்தில் இல்லை.


உடலுக்கும் மனதிற்கும் ஊறு விளைவிக்காத, மனதிலே அன்பையும்,அமைதியையும், சிநேகத்தையும், கட்டுப்பாட்டையும் தரக் கூடிய எந்த ஒரு ஆன்மீக முறையையும் எந்த ஒரு இந்துவும் பின்பற்றலாம். அதைப் பரப்பவும் செய்யலாம். அது நல்லது என்று மக்களுக்குப் பட்டால் அதை பின் பெறுவார்கள்.

இந்து மதம் சுதந்திரமான மதம்.
யார் வேண்டுமானாலும் அங்கே ஒரு ஆன்மீகக் கருத்தை, முறையை முன் வைக்கலாம். ஆனால் அவர்கள் அந்த முறையை முயற்சி செய்து கணிசமான ஆன்மீக முன்னேற்றம் பெற்று இருக்க வேண்டும். தாங்கள் உணர்ந்ததை , கண்டறிந்ததை மக்களிடம் சொன்னால் அவர்கள் புரிந்து கொள்கின்றனர்.

ஆனால் வெறுமனே புத்தகத்திலே எழுதி இருப்பதைப் படித்து விட்டு தான் ஆன்மீக முன்னேற்றம் அடைந்தவரைப் போலக் காட்டிக் கொண்டால், சிறிது காலம் வேண்டுமானால் அப்படி ஓட்டாலாம். ஆனால் நீண்ட காலம் அது நீடிக்காது.

அப்பர் (திருநாவுக்கரசர்), பட்டினத்தார், போகர் இப்படிப் பார்ப்பனரல்லாத பல முக்கிய இந்து மத அறிங்கர்கள் உள்ளனர். சுவாமி விவேகானந்தர் - மிக முக்கிய இந்து மத அறிங்கர், பார்ப்பனரல்லாதவர்தான்.

thiruchchikkaaran said...

அவ்ரங்கஜேப் நிகழ்த்திய கட்டாய மத வரி முதலான அனைத்துக் கொடுமைகளும் கடைசி நாளில் அவர் மனதை உறுத்தி இருக்கிறது. அவர் வெளிப்படையாக சொல்லி வருத்தப் பட்டும் விட்டார். குரு கோவிந்த சிங்கின் இரண்டு மகன்களும் மத மாற்றத்துக்கு மறுத்ததால் வாசிர் கான் அந்த இரண்டு சிறுவர்களையும் கொன்றதாக வரலாறு சொல்லுகிறது.

ஆனாலும் அவ்ரங்கஜேப் மேல் தப்பு இல்லை, அவர் இருட்டிலே யாரையாவது தெரியாமல் மிதித்து இருப்பார், அந்தப் பாவத்துக்கு மன்னிப்புக் கேட்டு இருப்பார். பொண்டாட்டியை ஒரு நாள் ரொம்ப திட்டி விட்டார் அதனால் மனம் வருந்தி தன்னை தாழ்த்திக் கொண்டார் என்கிற ரீதியிலே எழுதுகிறீர்கள்.

அவ்ரங்கஜேபே ஒத்துக் கொண்டாலும், நீங்கள் ஒத்துக் கொள்ள மாட்டீர்கள் என்றே தோன்றுகிறது.

suvanappiriyan said...

தருமி!

//முழுவாக்கியமோ அரை வாக்கியமோ அதில் அல்லா ந்ம்மையெல்லாம் பிரித்து பிளவு படுத்தி //உங்களைப் பல சமுதாயங்களாகவும் பல கோத்திரங்களாகவும் ஆக்கினோம்// என்ற வார்த்தைகல்தானே முக்கியம். அதனால் அப்படியிட்டேன். முழுவாக்கியம் போட்டாலும் அர்த்தம் ஏதும் மாறுகிறதா ... இல்லையே!//

உலகில் வெள்ளையர், கருப்பர், உயரமானவர்,குட்டையானவர், உதடு தடித்தவர், மூக்கு சப்பையானவர், என்றெல்லாம் இறைவன் மனிதர்களை வகைப்படுத்தியிருப்பது நாம் ஒருவரை ஒருவர் இனம் கண்டு கொள்வதற்க்காகவே! 500 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் தொகையில் மனித குலத்துக்கு இது தேவையும் கூட. ஆனால் ஒரு சிலர் இந்த பாகுபாட்டையே நீ காலில் பிறந்தவன், நீ வயிற்றில் பிறந்தவன், நான் மட்டும் நெற்றியில் பிறந்தேன். நான் பிராமணன், நீ சூத்திரன். நீ கோவிலுக்குள் ஒரு குறிப்பிட்ட இடத்தைத் தாண்டி வரக் கூடாது என்று சொல்லும்போதுதான் பிரச்னையே! இதை இறைவன் சொல்லவில்லை. இறைவன் பெயரால் மனிதர்கள் கட்டிய கற்பனை கோட்டைகள்.

//நீங்களாகவே இப்படி சொல்லிட்டா சரியாப் போச்சா. எவரும் இஸ்லாமிய நம்பிக்கையோடு இருந்தால் அவர்கள் இஸ்லாமியர்கள் என்று நீங்கள்தானே சொல்வீர்கள். அதோடு அவங்க எல்லாம் எம்புட்டு தாடி - நபி சொன்னது மாதிரி - வச்சிருக்காங்க!// ஆட்டுக்கு கூடத்தான் தாடி இருக்கிறது. சாமியார்களும் தாடி வளர்க்கிறார்கள். பெரியாருக்கு அதை விட பெரிய தாடி இருந்தது. இஸ்லாமிய சட்டத்தை தவறாக விளங்கிக் கொண்டு செயல்படுவதற்கும்,இஸ்லாமிய சட்டத்தை நடைமுறை படுத்துவதற்கும் பெருத்த வேறுபாடு இருக்கிறது. பொது மக்களை கொல்வதை எந்த வகையில் நியாயப்படுத்த முடியும்? போதை பொருட்களின் வருமானத்தை அங்கீகரிக்கும் இவர்கள் எப்படி இஸ்லாத்தினுள் இருக்க முடியும்? பெண் கல்வியையும் தடுக்கிறார்கள்.

மேலும் விபரங்களுக்கு இங்கு

சென்று பார்த்துக் கொள்ளுங்கள்.

Bucker said...

///இன்றைக்கு 99.9% இந்துக்களுக்கு மனு யார் என்றே தெரியாது.///

இந்துக்களாக சொல்லப்படும் 99.9% பேர் இந்துக்களே கிடையாது

Bucker said...

///இன்றைக்கு 99.9% இந்துக்களுக்கு மனு யார் என்றே தெரியாது.///

இன்று இந்துக்களாக சொல்லப்படும் 99.9% பேர் இந்துக்களே கிடையாது என்பதுதான் சரி. மறுத்தால் இந்துக்கள் என்போருக்கு என்ன வரையறை என்பதை கூறும் திருச்சிக்காரரே

தருமி said...

//'இம்மார்க்கத்தில் எந்த வற்புறுத்தலும் இல்லை. வழிகேட்டிலிருந்து நேர் வழி தெளிவாகி விட்டது.'- குர்ஆன் 2:256//

சுவனப்பிரியன்,
இது நீங்கள் குரானிலிருந்து கொடுத்த மேற்கோள். நான் கொடுக்கும் மேற்கோள்களை வைத்து பொருள் சொல்லுங்கள்:

நம்பிக்கையற்றோருக்கான தண்டனைகள்:

4.56:நமது வசனங்களை மறுப்போரை பின்னர் நரகில் கருகச் செய்வோம். அவர்களின் தோல்கள் கருகும் போதெல்லாம் அவர்கள் வேதனையை உணர்வதற்காக வேறு தோல்களை அவர்களுக்கு மாற்றுவோம்.(grafting / plastic surgery...?)( கடவுளின் இத்தகைய மனோபாவம் வேடிக்கையாகவும், வேதனையாகவும் உள்ளதே!) அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்.(இது அல்லா சொன்னது. பிறகு ஏன் அவரே ”அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்” என்று அவரையே அவர் ‘தூக்கி வைத்து”ப் பேசுகிறார்?).

9.23:நம்பிக்கை கொண்டோரே! உங்கள் பெற்றோரும், உங்கள் சகோதரர்களும் நம்பிக்கையை விட (இறை) மறுப்பை விரும்புவார்களானால் அவர்களை உற்ற நண்பர்களாக்காதீர்கள்! உங்களில் அவர்களை உற்ற நண்பர்களாக்குவோரே அநீதி இழைத்தவர்கள். அடப் பாவமே! இப்படி ஒரு அநீதியா?

2.7அவர்களது உள்ளங்களிலும், செவியிலும் அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான். அவர்களின் பார்வைகளில் திரை உள்ளது. அவர்களுக்குக் கடும் வேதனையுமுண்டு. (அவரேச திரை போட்டுட்டு பிறகு அவரே வேதனை கொடுப்பாரோ?! பயங்கரம் தான்!)

தருமி said...

சுவனப்பிரியன்

தயவுசெய்து முந்திய பின்னூட்டத்திற்கு ஒரு விளக்கம் கட்டாயம் தாருங்கள்.

வால்பையன் said...

//உலகில் வெள்ளையர், கருப்பர், உயரமானவர்,குட்டையானவர், உதடு தடித்தவர், மூக்கு சப்பையானவர், என்றெல்லாம் இறைவன் மனிதர்களை வகைப்படுத்தியிருப்பது நாம் ஒருவரை ஒருவர் இனம் கண்டு கொள்வதற்க்காகவே! //


எப்படி இப்படி விடாம ஜோக் அடிக்கிறாரு?
சண்டீவீ கலக்கபோவது யாருக்கு அனுப்பி வைக்கலாமா!?

:)

உடல் ஊனம் கூட அடையாளம் கண்டுகொள்ள கடவுள் படைத்தார்ன்னு சொல்வாரோ!?, இப்படி மூளையை மழுங்கடிக்கும் ஒரு மதம் தேவையா!?

தருமி said...

//...இறைவன் மனிதர்களை வகைப்படுத்தியிருப்பது நாம் ஒருவரை ஒருவர் இனம் கண்டு கொள்வதற்க்காகவே! //

நானும் இதைக் கேட்கணும்னு நினச்சேன். அதான... அப்புறம் நம்ம ஊர் மூஞ்சுகள் ஒரே மாதிரி இருக்கே. இருந்தும் நாம் எப்படி ஒருவரை ஒருவர் இனம் கண்டு கொள்கிறோம்?!

thiruchchikkaaran said...

அன்புக்குரிய சுவனப் பிரியன் அவர்களே,

நான் முன்பே சொன்னது போல நீங்கள் அநேகமாக எந்தக் கோவிலுக்கும் சென்றதில்லை என நினைக்கிறேன். அதனாலே உங்களுக்கு கோவில்கள் , கர்ப்பக் கிரகம் பற்றி எல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே //நான் பிராமணன், நீ சூத்திரன். நீ கோவிலுக்குள் ஒரு குறிப்பிட்ட இடத்தைத் தாண்டி வரக் கூடாது என்று சொல்லும்போதுதான் பிரச்னையே! // என்று நீங்கள் சொல்லுவது உங்களுக்கு கோவில் நடை முறைகள் தெரியாததாலே.


கர்ப்பக் கிரகத்தினுள் சென்று அங்கே அலங்காரம், அபிசேகம், பூசனை செய்வது அர்ச்சகர் மாத்திரமே. அந்த அர்ச்சகரை தவிர வேறு யாரும் உள்ளே செல்வது இல்லை- அது பிராமணர் என்று சொல்லப் படுபவரோ , வேறு யாரோ.

அந்த அர்ச்சகர் பிராமணர் அல்லாதவராகவும் இருக்கின்றனர். உதாரணமாக பெரம்பூர் தான்தோன்றி அம்மன் கோவிலுக்கு சென்று பாருங்கள், அங்கே உள்ள அர்ச்சகர் பிராமணர் அல்ல. அந்தக் கர்ப்பக் கிரகத்தினுள் அவர் மட்டுமே செல்வார். பிராமணர்கள் உட்பட வழிபட வரும் யாரும் சந்நிதியில் நின்று தான் சாமி கும்பிட்டு விட்டு செல்வார்கள், பிராமணரா இல்லையா என்று யாரும் பார்ப்பதும் இல்லை, பிராமணராக இருந்தால் கர்ப்பக் கிரகத்துக்குள் போகலாம் என்று அனுமதிப்பதும் இல்லை.

தமிழ் நாட்டில் இப்படி பார்ப்பனர் அல்லாதவர் அர்ச்சகராக உள்ள கோவில்கள் ஆயிரக் கணக்கில் உள்ளன.


பிராமணர் என்று சொல்லப் படுபவர் பூசனை செய்யும் கோவில்களில் கூட அந்த குறிப்பிட்ட கோவிலுக்கான அர்ச்சகரைத் தவிர வேறு எந்த பிராமணரும் கர்ப்பக் கிரகத்துக்குள் செல்லுவதில்லை.

நாம் முன்பே பதிவு இட்டது போல எல்லோரும் கர்ப்பக் கிரகத்துக்குள் சென்று அவர்கள் விருப்பம் போல அவர்களே பூசனை செய்து கொள்ளலாம் என்று சொல்லி இருக்கிறோம். அதே நேரம் கர்ப்பக் கிரகம் என்பது குறுகலான சிறிய அறை. அங்கே இரண்டு பேருக்கு மேல் நிற்க இடம் இல்லை. இனிக் கட்டப் படும் கோவில்களாவது, பெரிய கர்ப்பக் கிரகத்துடனும், விசாலமாக காற்றோட்டத்துடன் அமைக்கப் படுவது நல்லது என்றும் சொல்லுகிறோம்.

thiruchchikkaaran said...

பிராமணர் அர்ச்சகர் என்றாலும், பிராமணர் அல்லாதவர் அர்ச்சகர் என்றாலும் கர்ப்பக் கிரகத்தின் பொறுப்பு அர்ச்சகர்களுக்கு உண்டு.

இந்துக் கோவில்களில் கர்ப்பக் கிரகத்திலே கோடிக் கணக்கான ரூபாய் பெறுமானம் உள்ள நகைகள் உள்ளன என்பது எல்லோருக்கும் தெரியும்.

திருப்பதி போல காமிரா வைத்து கண்காணிக்கும் இடத்திலேயே உண்டியலில் விழும் நகை, பணம் எல்லாம் காணாமல் போய் விடுகிறது.

ஒரு வங்கி இருக்கிறது என்றால் அதில் கருவூலக் காப்பாளர் தான் அந்த வங்கியில் உள்ள பணத்துக்கு பொறுப்பு.

அது போல கிரீடம் , ஹாரம் உட்பட ஏதாவது காணாமல் போனால் அதற்க்கு பொறுப்பு அர்ச்சகர் தான். போலீஸ் அர்ச்சகரை விசாரிக்கும்.

ஒரு படத்திலே ஒரு காட்சி கூட வரும். வடிவேலு முருகன் கையில் இருக்கும் வேலை நைசாக எடுத்து விடுவார்.

எனவே இனி கட்டப் படும் கோவில்களில் கடவுளின் பீடத்தை கொஞ்சம் உயரமாக வைத்து விட்டால் நன்றாக இருக்கும். அப்போது எல்லோரும் அருகில் சென்று மலரை தூவும் போது பாதத்திலே தூவ சரியாக இருக்கும்.

எப்படி இருந்தாலும் எல்லோரும் கர்ப்பக் கிரகத்துக்குள் செல்ல அனுமதிக்கப் பட வேண்டும் என்பதை வலியுறுத்தி சொல்லுகிறோம்.

suvanappiriyan said...

திருச்சிக்காரரே!

//நான் ஒரு கோவிலைக் கட்டினால் அதன் வழிபாடும், செயல் பாடும், நிர்வகமும் இவ்வாறு இருக்கும்.//

நீங்கள் உங்கள் செலவில் ஒரு கோவிலைகட்டிக் கொண்டு அதற்கு நீங்களே பல வழி முறைகளை ஏற்ப்படுத்துவதைப் பற்றி இங்கு நாம் பேசவில்லை. ஒட்டு மொத்த இந்து சமுதாயத்துக்கும் இன விடுதலை பெற என்ன வழி என்றுதான் கேட்டேன். பெரியாரை விடவா இன்னொருவர் தமிழகத்துக்கு வந்து விடப் போகிறார்.அவரால் கூட வழிபாட்டு முறையில் மாற்றத்தை ஏற்படுத்த முடியவில்லையே! பாப்பாரப்பட்டி, கீரிப்பட்டி, திண்ணியம் சம்பவங்கள் எல்லாம் நம் காலத்திலேயே நடந்து கொண்டுதானே இருக்கிறது. இன்று வரை தாழ்த்தப்பட்டவர் ஒரு வேட்பாளராக நிற்க பயப்படுகிறர் என்றால் வர்ணாசிரமம் எந்த அளவு அந்த மக்களின் மனதை ஆட்கொண்டிருக்கிறது என்பதைத்தானே காட்டுகிறது.

மெத்த படித்தவர்களிடம் கூட சாதி வெறி இன்றும் இருந்து கொண்டுதானே இருக்கிறது. தமிழ்மணத்தில் இது பற்றி பல பதிவுகளே வந்திருக்கிறதே! நீங்கள் கட்டும் கோவிலுக்கு வர எத்தனை பேர் இந்து மதத்திலிருந்து சம்மதிப்பார்கள்?

தருமி said...

திருச்சிக்காரன் & சுவனப்பிரியன்

இருவருமே பேசு பொருளிலிருந்து தடம் மாறிப் போய்க்கொண்டிருக்கிறீர்கள்.

NO said...

அன்பான நண்பர் திரு தருமி,

பின்னூட்டங்களை பார்த்தால் கண்ணை கட்டுது சார்.

கிருத்துவர் என்பாதால் அனேக கிருத்துவர்கள் ஆங்கில ஆட்சியாளர்களை சப்போர்ட் செய்வதில்லை. ஆண்டாண்டு காலங்கள் கிருத்துவர் கோவாவை
ஆண்டாலும், அதை பொன்னான ஆட்சி என்று அவர்கள் சொல்லுவதில்லை. அவர்கள் பிடுங்கி தின்னவர்கள், அந்நியர்கள், துரத்தி அடிக்கப்பட வேண்டும்
என்றுதான் சொன்னார்கள்.

ஆனால் இஸ்லாமியர் பலர் மட்டும் ஏன் இப்படி இருக்கிறார்கள் என்றுதான் தெரியவில்லை? ஆனால் ஒன்று, திரு சுவனப்பிரியன் போன்ற கடைந்தெடுத்த மத வெறியர்கள் சொல்லுவதை ஏன் நீங்கள் பெரிது படுத்த வேண்டும்தான் என்பது புரியவில்லை. ஆனாலும் இவர்களின் அப்பட்ட மத சார்பு புளுகுகளை யாராவது
சொல்லிக்காட்ட வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது என்று புரிகிறது.

என்ன கொடுமை என்றால், இஸ்லாம் பற்றிய சிறு விமர்சனம் யாராவது ஏதாவது பேசினால், உடனே அவர்கள் சங்கு பரிவார் பிரதிநிதி என்று கத்த ஆரம்பித்து
விடுவார்கள். இல்லாவிட்டால், இவன் இஸ்லாமிற்கு எதிரி என்பார்கள். இல்லாவிட்டால், இஸ்லாமை சரியாக புரிந்து கொள்ளவில்லை என்பார்கள்.

Clash of civilizations என்று இஸ்லாமின் இன்றைய உலக எதிர் நிலைபற்றி சும்மா ஒன்றும் ஹட்டிங்டன் சொல்லவில்லை. நம் கண் முன்னே தெரியும் ஒரு மாபெரும் வருங்கால எதிர் நிலை இவர்கள் போகும் பாதை. பல தளங்களில் இவர்கள் எழுதும் பொய்கள், இவர்கள் தங்களில் இரத்தகறை படிந்த சரித்திரத்திற்கு வெள்ளை அடிக்கும் முயற்ச்சிகளில் ஒன்று. எல்லா மதங்களும்தான் சரித்திர பாவங்கள் பல செய்தன! கிருத்துவம், இந்து மதம், யூதம் போன்றவை செய்ததை யாரும் வெள்ளை அடிக்கவில்லை. கிருத்துவம் போட்ட ஆட்டத்தை மிக்க தெளிவாக எழுதி வைத்தவர்கள் கிறுத்துவர்களே. கிருத்துவத்தின் அன்றைய சீற்றத்தை கண்டபடி பகடி செய்து அது ஒரு இருண்ட காலம் என்றுதான் இன்றும் அழைக்கிறார்கள். இஸ்லாமை தவிர மற்ற எல்லா மத நூல்களும் சரித்திரமும் எல்லா வகையிலும் விமர்சிக்க பட்டாகிவிட்டது. பகடி செய்யபட்டாகியும் விட்டடது!

அனால் இஸ்லாம் என்று வரும் பொழுது, அது எதுவாக இருந்தாலும், வரிந்து கொண்டு வருபவர்கள், நம்ம இஸ்லாமிய நண்பர்கள். Not even an inch of debate they concede and not even a word of criticism they accede. They are convinced that they alone are holy and blessed and their gods and prophets alone are the best. They believe completely that they are the ones that are the true sons of the god and anything else is nothing more than a fraud. Thus a giant ego ball has been created and on which tons of holy drivel had been painted. Such is this impenetrable vehicle of intolerance and ignorance, much is their capacity for vehemence. Narcism, superiority complex and an absolute conviction that I am right and so is my faith, creates an definitive wall of containment out of which nothing can seep out or seep in. The seeds of such an exclusiveness has been sowed for the past fifty years, courtesy the oil money from the puritanicals and the tree that is big and wide now is spawning more of its kind all over.

So much is the fear in the west of this one true faith, one has to read the net editions of most respected journals comming out of England and US and look into the comment sections. You can see the kind of fear and revulsion that is being expressed on account of the bombastic exhibition of their religiosity .

The exception is India, where one is scared to talk anything for the fear of being branded as anti secular etc. The height of irony is that Mr Dharumi being called a Hindutva supporter! This shows to the extent such people will go when any one dares to talk about their only true faith!!!

Why Aurangazeb, any Muslim king that is Muslim enough and had destroyed symbols of other religions is a hero for them. Only Indians are foolish enough to listen to this nonsense and keep quite. Whereas Western civilization (not exactly Christian civilization) does not have any need to do so! Hence the inevitable clash of civilization.

suvanappiriyan said...

தருமி!

//2.7அவர்களது உள்ளங்களிலும், செவியிலும் அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான். அவர்களின் பார்வைகளில் திரை உள்ளது. அவர்களுக்குக் கடும் வேதனையுமுண்டு. (அவரேச திரை போட்டுட்டு பிறகு அவரே வேதனை கொடுப்பாரோ?! பயங்கரம் தான்!)//

சிலருக்கு எவ்வளவுதான் விளக்கம் கொடுத்தாலும் விளங்கிக் கொண்டே மறுப்பார்கள். அவர்களின் இதயங்களில் இறைவன் முத்திரையிட்டு விட்டான் என்கிறான் இறைவன்.

'இறைவன் நாடியதை அழிப்பான். நாடியதை அழிக்காது வைப்பான். அவனிடமே தாய் ஏடு உள்ளது'-குர்ஆன் 13:39

சட்டத்தை இயற்றிய இறைவன் தருமி போன்றவர்கள் மனம் திருந்தி நாத்திக கொள்கையிலிருந்து விலகி கர்த்தரை வணங்க ஆரம்பித்தால் தான் எழுதிய விதியை மாற்றி அவரை சொர்க்கத்தில் புக வைக்கிறான்.

'நேர்வழி நடப்பவர் தனக்காகவே நடக்கிறார். வழி கெட்டவர் தன்கு எதிராகவே வழி கெடுகிறார்.'- குர்ஆன் 10:108
இதன் மூலம் மனிதர்களின் காரியங்களுக்கு அவர்களே பொறுப்புதாரியாகிறார்கள். இறைவன் மீது பழி போட்டு தப்பிக்க முடியாது.

'உங்களுக்கு தவறி விட்டதற்காக நீங்கள் கவலைப் படாமல் இருப்பதற்காகவும் அவன் உங்களுக்கு வழங்கியதில் பூரித்து போகாமல் இருப்பதற்காகவும் விதியை ஏற்படுத்தியுள்ளான்.'-குர்ஆன் 57:23

ஒன்றுக் கொன்று முரணாக தோன்றும் இந்த விதியின் ரகசியத்தை நமது நன்மைக்காகவே மறைத்திருப்பதாக இறைவன் கூறுகிறான். எவ்வளவுதான் விளக்கம் சொல்ல புகுந்தாலும் விதியைப் பற்றிய கேள்விக்கு மட்டும் விடை காண இயலாது. முகமது நபியும் விதியைப் பற்றி வாக்கு வாதத்தில் ஈடுபடாதீர்கள் என்று தடுத்துள்ளதால் மறுமையில் இதற்கான விடையை அளிப்பான்: அந்த அளவு அறிவு நமக்கு கொடுக்கப்படவில்லை என்று மட்டும் புரிந்து கொள்ள வேண்டும். ஒருவனுக்கு அவனது விதிப்படி நாளை இறப்பது தெரிந்து விடுவதாக வைத்துக் கொள்வோம். அவனால் நிம்மதியாக இரவில் தூங்க முடியுமா! வாழ்நாள் முழுக்க தவறு செய்து விட்டு இறப்புக்கு முன்னால் நல்லவனாக எல்லோரும் மாறி விடலாம் இல்லையா? இது போன்ற பல காரணங்களால்தான் இறைவன் விதியின் ரகசியத்தை மறைத்து வைத்துள்ளான்.

அறிவு சம்பந்தமாக நான் இட்ட பதிவை இங்கு சென்று பார்த்துக் கொள்ளுங்கள்.

thiruchchikkaaran said...

அன்புக்குரிய திரு. சுவனப் பிரியன் அவர்களே,

இவ்வளவு தூரம் நான் விவாதிக்க காரணம், நீங்கள் திம்மிகளுக்கு மட்டும் வரி என்று, மத ரீதியில் வரி விதித்ததை நியாயப் படுத்துவதால் தான்.

நான் ஒன்று கேட்க விரும்புகிறேன்.

இந்தியாவில் நம்பிக்கையாளர்கள் அதிகமாகவும் திம்மிகள் எண்ணிக்கையில் குறைவாகவும் ஆகி விட்டால்,அப்போது இந்தியாவில் திம்மிகள் எல்லோருக்கும் ஜிசியா வரி விதிக்க வேண்டும் ,200 ரூபாய் சொத்து வைத்திருக்கும் ஏழை திம்மி வருடம் 12 ரூபாய் ஜிசியா வரி கட்ட வேண்டும், 20,000 ரூபாய் சொத்து வைத்திருக்கும் ஏழை திம்மி வருடம் 12OO ரூபாய் ஜிசியா வரி கட்ட வேண்டும் என்பதை சட்டமாக்க முயன்றால் நீங்கள் அதை எதிர்ப்பீர்களா, ஆதரிப்பீர்களா?

இனி உலகில் எந்த ஒரு பகுதியிலும் எந்த ஒரு அரசும் ஒரு குறிப்பிட்ட மதத்தினரை தவிர மாற்று மதத்தினர் மீது தனியாக வரி விதிக்க கூடாது என்கிற கோட்பாட்டை நியாயமானது என நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்களா?

thiruchchikkaaran said...

அன்புக்குரிய சுவனப் பிரியன் & முகி அவர்களே,

மத ரீதியிலான அடக்கு முறையைப் போலவே, சாதீய ரீதியிலான அடக்கு முறையை கண்டிக்கிறோம், எதிர்க்கிறோம்.

மத ரீதியிலான அடக்குமுறை, மத வெறி பரப்புதல் ஆகியவற்றை பற்றி விவாதிப்பதில் இருந்து கவனத்தை திசை திருப்ப விரும்பவில்லை.

எனவே சாதீய வேறுபாட்டைக் களைந்து சமத்த்வத்தை நிலை நாட்டுவது தொடர்பாக பல பதிவுகள் என் தளத்திலே உள்ளன, உங்களுக்கு வசதியாக புதிய விவாதத்தை துவக்க புதிய பதிவையும் இடுவோம், அங்கே நாம் விவாதிக்கலாம்.

முகி, இந்து மதம் என்றால் என்ன, இந்து என்றால் என்ன, இந்து மதம் என்ற ஒன்று இருக்கிறதா, என்பதை பற்றி எல்லாம் நீங்கள் என் தளத்திலே கேள்வி எழுப்பலாம். உங்களை வரவேற்கிறேன்.

தருமி said...

குரானில் / எங்கள் மதத்தில் “எல்லாவற்றிற்கும் பதிலுண்டு” என்று எப்போதும் சவால்விடும் நீங்கள், விதி, கடவுளின் திட்டம், கடைசி காலத்தில் கடவுள் விளக்குவார் போன்ற வசனங்களை பதில் தரமுடியாத விஷயங்களுக்குத் தருகிறீர்கள். இந்த வழக்கம் எனக்கும் பழகிப்போச்சு. அப்படியே நீங்களும் வளர்ந்துவிட்டு எங்களிடம் இந்த ‘வசனங்களைச்’ சொல்லுகிறீர்கள். //அந்த அளவு அறிவு நமக்கு கொடுக்கப்படவில்லை // என்று சொல்லி தப்பிக்கிறீர்கள்!

மதங்களில் இதெல்லாம் சகஜமப்பா!

thiruchchikkaaran said...

இந்தக் கடவுள் என்ற ஒரு கான்செப்ட் இவர்கள் கையில் கிடைத்தாலும் கிடைத்தது. அதை வைத்து எத்தனை உருடல்கள், மிரட்டல்கள், அச்சுறுத்தல்கள், கண்டிப்புகள்.


கடவுள் என்று ஒருவர் இருப்பதாக ஒருவனை எப்படியாவது நம்ப வைத்து விட வேண்டும், இது வெறும் நம்பிக்கை மாத்திரமே.நம்பி விட்டால் போதும், அவ்வளவுதான், இந்தா இந்த புத்தகத்தைப் பிடி, இதிலே சொன்னதை அப்படியே செய்ய வேண்டும், அதனால் யாருக்கு எந்த பாதிப்பு வந்தாலும் கவலைப் படாதே, இதுதான் கடவுள் கான்செப்டை வைத்து இவர்கள் உலகுக்கு செய்தது.

எந்த ஒரு மதத்தினரும் , கடவுளுக்கு சரிபார்த்துக் கொள்ளக் கூடிய நிரூபணம் (verifiable proof) ஒன்றை இது வரை கொடுக்கவில்லை.

ஆயிரத்தெட்டு கதைகளை சொல்லுவார்கள். மனிதர்கள் கண்டு பிடித்த அறிவியல் உண்மைகளை எல்லாம் அடுக்கி விட்டு, இவ்வளவு சிறப்பாக கடவுள் படைத்து இருக்கிறார் என்று ஒரு பிட்டைப் போட்டு விடுவார்கள். இது எல்லாம் மனிதன் தான் கண்டு பிடித்தான் என்றால் மனிதன் கண்டு பிடித்தான் ஆனால் கடவுள் தான் படைத்தார் என்பார் கள். கடவுள் இருப்பதற்கான ஆதாரம் எங்கே என்றால், உன் மனசு கல் நெஞ்சம், அதுல கடவுள் தெரிய மாட்டார் என்று இன்னொரு பிட்டைப் போடுவார்கள்.

யார் மனதையா கல்லு, கடவுளின் பெயரால் இவர்கள் இது வரை செய்த அடக்கு முறைகள், அச்சுறுத்தல் , வன்முறை கொஞ்சமா, நஞ்சமா.

தருமி said...

சுவனப்பிரியன்;
“கண் திறந்து பார்த்தால்: (உங்களால் முடியாத ஒன்று அது!!) நீங்கள் சொல்லிய கீழ்க்கண்ட வார்த்தைகளின் அர்த்தமற்ற தன்மைகள் உங்களுக்குப் புரியும்.

//அவர்களின் இதயங்களில் இறைவன் முத்திரையிட்டு விட்டான்//(அவரே முத்திரை போட்டுட்டார்னா, தருமி என்ன பண்ணுவான், சொல்லுங்க)

//சட்டத்தை இயற்றிய இறைவன் தருமி போன்றவர்கள் மனம் திருந்தி..// (எப்படி திருந்த முடியும் .. அல்லா இயற்றியதைத் தாண்டி ...?)

//இதன் மூலம் மனிதர்களின் காரியங்களுக்கு அவர்களே பொறுப்புதாரியாகிறார்கள். // (அவரே முத்திரையிடுவார்; அப்போ அவர்தான் பொறுப்பு)

//ஒன்றுக் கொன்று முரணாக தோன்றும் இந்த விதியின் ரகசியத்தை நமது நன்மைக்காகவே மறைத்திருப்பதாக இறைவன் கூறுகிறான்.// (இது நல்ல கதை. முரண் இருக்கு; பதில் இல்லை. அதனால் இந்த சால்ஜாப்பு.)

எதற்கும் இதற்குப் பதில் சொல்லும் முன் கிறித்துவத்திற்கு எதிராக நான் எழுதிய இப்பதிவில் உள்ள prayer vs predeterminism என்பதை வாசித்து அதற்குப் பின் பதில் கொடுத்தால் நல்லது. - இதற்கு ஆபிரஹாமியத்தில் பதில் இல்லையென்பது எனக்கு நன்கு தெரியும். ஒத்துக் கொள்ளப்போகிறீர்களா என்ன?

தருமி said...

//கடவுள் என்று ஒருவர் இருப்பதாக ஒருவனை எப்படியாவது நம்ப வைத்து விட வேண்டும், இது வெறும் நம்பிக்கை மாத்திரமே//

என்னங்க திருச்சிக்காரன் .. டபார்னு என் பக்கம் வந்திட்டீங்க!

Bucker said...

//பெரம்பூர் தான்தோன்றி அம்மன் கோவிலுக்கு சென்று பாருங்கள்///

சிறீரங்கம் கோயிலுக்கு அல்லது சிதம்பர நடராஜர் கோயிலுக்கு அல்லது இந்த அல்லது நிறைய உள்ளன அந்த கோயில்களுக்கெல்லாம் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக முடியுமா!

///எனவே சாதீய வேறுபாட்டைக் களைந்து சமத்த்வத்தை நிலை நாட்டுவது///

மேற்குறிப்பிட்ட உங்கள் வார்த்தைகளில் உண்மை இருந்தால் முதலில் நீங்கள், ’நாமெல்லோரும் இந்துக்கள்’ என்று சொல்லிக்கொண்டு சாதீயத்தைக் கடைபிடிக்கும், அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகராவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இந்துக்களை எதிர்த்து போராட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

thiruchchikkaaran said...

தருமி ஐயா,

நான் டபார்னு வரவில்லை, எப்போதும் பகுத்தறிவுப் பக்கத்தில் தான் இருக்கிறேன்.


எல்லா மதங்களையும் ஆராய்கிறோம், அவற்றில் உள்ள நல்ல கருத்துக்களைப் பாராட்டுகிறோம்.எல்லா மதத்தவரையும் நல்லிணக்கப் பாதைக்கு அழைக்கிறோம். இஸ்லாத்தில் உள்ள குடிக்கக் கூடாது, சூதாடக் கூடாது , ஏழைகளுக்கு உதவ வேண்டும் போன்ற கருத்துக்களை வரவேற்கிறோம். அவர்கள் தொழுவதை குறை சொல்லவோ, தடுக்கவோ இல்லை. நல்லிணக்க அடிப்படையில் அவர்களுடன் தொழுகையில் கலந்து கொள்கிறோம் , நாம் அவர்கள் வழிபாட்டை வெறுக்கவில்லை .

இயேசு கிறிஸ்து முன் மண்டி இடுகிறோம் என்றால், அது அவரின் நல்ல கொள்கைகளுக்காக மனப் பூர்வமாக மண்டி இட்டு மரியாதை செலுத்துகிறோம், சும்மா கிறிஸ்தவர்களிடம் நல்ல பெயர் வாங்க நடிக்கவில்லை.

அது போலவே புத்தரின் அன்பு, அளவற்ற அன்பு, அதற்காக அவரை வணங்க தயங்கவில்லை,

அது போலவே இராமர்- வாழ் நாள் முழுவதும் மற்றவரின் மகிழ்ச்சிக்காக தான் துன்பம் ஏற்றவர், எவ்வளவு துன்பம் வந்த போதும் கொள்கையில் இருந்து மாறவோ, மற்றவர்க்கு துன்பம் தரவோ இல்லை, பதவி என்பது தோளில் போடும் துண்டு போன்றது, கொள்கை என்பது இடுப்பில் கட்டும் வேட்டி போனறது என்பதி உண்மையில் நடத்திக் காட்டியவர்.

இப்படி எல்லா மதத்தினருடனும் கலந்து கொள்கிறோம் என்றால், அதற்க்கு அர்த்தம் கடவுள் இருக்கிறார் என்பதை நாம் பார்த்து விட்டதாக அர்த்தம் இல்லை. எந்தக் கடவுளாவது இருக்கிறாரா என்பது எல்லாம் யாருக்கும் தெரியாது. சும்மா நம்பிக்கைதான்.

நம்பிக்கை என்பது வெறும் நம்பிக்கை மாத்திரமே, அது நிரூபிக்கப் பட்டால், சரி பார்த்துக் கொள்ளப் பட்டால தான் அது உண்மை என சொல்ல முடியும்.

நீ என் பிரண்டு, நான் நம்புவதைப் போல நீயும் நம்பு தலைவா, என்று சொல்வதைக் கேட்டு நம்பிக்கை வலையில் சிக்கி விட்டால், இவர்களைப் போல எந்தக் கொடுமை நடந்தாலும், ஓக்கே தான் போ என்று ஒத்துக் கொள்ளும்படியாக ஆகி விடுவோம்.


கேட்கப் பட்ட, படிக்கப்பட்ட ஒவ்வொரு வாசகத்தையும் சிந்தித்து சீர் தூக்கிப் பார்த்து, மக்களுக்கு நல்லதாக இருந்தால் எடுத்துக் கொள்வோம், உண்மையாக இருப்பது நிரூபணமானால் ஒத்துக் கொள்வார்கள்.

suvanappiriyan said...

திருச்சிக்காரன்,தருமி !

முதலில் நான் இங்கு ஒன்றை தெளிவுபடுத்தி விடுகின்றேன். மொகலாயர்கள் அனைவரும் புடம் போட்ட தங்கங்கள் என்று நான் வாதிட வரவில்லை. பலரும் மது மாதுவில் கட்டுண்டு கிடந்தவர்களே! அதேபோல் 'தி கிரேட் அசோகர்' தனது உடன் பிறந்த 99 உடன் பிறப்புகளையும் வெட்டி சாய்த்து விட்டுத்தான் அரியணை ஏறினார். 'ஒளரங்கஜேப் தனது சகோதரர்களை ஏன் கொன்றார்?' என்று தருமி கேட்டால் அசோகர் எதற்காக கொன்றாரோ அதே காரணத்துக்குத்தான் ஒளரங்கஜேப்பும் தனது சகோதரர்களை கொன்றதாக சொல்ல முடியும். அதே போல் தான் அழகில்லை என்று கேலி பேசியதை பொறுக்காத அசோகர் 1000க்கு மேற்பட்ட பெண்களை கழுவில் ஏற்றிக் கொன்றதாக வரலாறு(விக்கி) சொல்கிறது. முகலாயர்கள் வந்து 800 வருடம் எவ்வாறு ஆட்சி செய்ய முடிந்தது என்பதற்கு இது போன்ற கொடுமைகளும் காரணமாக இருந்திருக்கலாம்.

அசோகருக்குப் பிறகு ஒரு பிராமண அமைச்சரின் முயற்ச்சியால் மௌரியப் பேரரசு வீழ்கிறது. அதன்பிறகு திரும்பவும் குறுநில மன்னர்களின் கைகளில் ஆட்சி செல்கிறது. இதன்பிறகுதான் பிரிந்த பாரதத்தை முகலாயர்கள் ஒன்றிணைக்கின்றனர். மொகலாயர்கள் படை எடுத்து வந்ததை குறை கண்டால் அசோகரின் தந்தை நமது தமிழ்நாடு வரை வந்து சண்டையிட்டு கொள்ளையிட்டு சென்றதையும் குறிப்பிட வேண்டும். எனவே இவை எல்லாம் அந்த கால வழக்கப்படி போர்களும் கொள்ளைகளும் சகஜமாகவே இருந்திருக்கிறது. இவ்வாறு உலக மரபு இருக்க ஒளரங்கஜேப்பை மட்டும் நமது வரலாற்று நூல்களிலிருந்து நமது இணைய பதிவர்கள் வரை தூற்றுவது எதற்காக? என்பதுதான் என் கேள்வி. அசோகர் மரங்களை நட்டார் என்றுதான் அனைத்து பாடப் புத்தகங்களிலும் பார்க்கிறோம். ஜிஸியா சரி போட்டு இந்துக்களை கொடுமை படுத்தினார் என்று பொய் கூறிய நமது வரலாற்றாசிரியர்கள் அசோகரையும் மற்ற இந்து மன்னர்களின் குறைகளை பாடப் புத்தகங்களில் ஏற்றாதது ஏன் என்று நான் கேட்கலாம் அல்லவா!

நிறைய பேசிவிட்டோம். இனி அடுத்த தலைப்பை தருமி பதிவில் தொடும்போது நேரமிருப்பின் வருகிறேன். நன்றி!

தருமி said...

//மொகலாயர்கள் அனைவரும் புடம் போட்ட தங்கங்கள் என்று நான் வாதிட வரவில்லை.//
அப்பாடா!

அதோடு, இந்த comparative account தானே வேணாங்குறது! எல்லா அரசர்களும் மட்டம் ..power corrupts; absolute power corrupts absolutely என்பது எங்களுக்குத் தெரியாதா? எல்லாக் கழுதைகளும் ஒண்ணுதான்னு சொல்லிட்டு போயிற வேண்டியதுதானே. மொகலாய மன்னர்களை, அந்த அன்னிய படையாளிகளை தூக்கிப்பிடிக்க வேண்டாமே என்பதுதானே நமது விவாதம்.

//முகலாயர்கள் வந்து 800 வருடம் எவ்வாறு ஆட்சி செய்ய முடிந்தது என்பதற்கு இது போன்ற கொடுமைகளும் காரணமாக இருந்திருக்கலாம்.//
இது சரி. ஆனால், இந்த 800 வருஷத்துக்கு முதலில் வேறு ஒரு காரணம் கொடுத்தீர்களே அதுதான் ஒத்துக்கொள்ள முடியவில்லை.

//ஜிஸியா சரி போட்டு இந்துக்களை கொடுமை படுத்தினார் என்று பொய் கூறிய...//
நீங்கள் சொன்னது: //அவுரங்கசீப் பிற மதத்தை சேர்ந்தவர்களின் மீது ஜிசியா எனப் படும் தனி வரியை விதித்து இருக்கிறார். //
இது நீங்களும் ஒத்துக் கொண்ட விஷயம். இப்போது அது பொய் என்கிறீர்களே! எது பொய்???

தருமி said...

//அடுத்த தலைப்பை தருமி பதிவில் தொடும்போது நேரமிருப்பின் வருகிறேன். //

அடடா .. என்ன சுவனப்பிரியன் .. நீங்க இப்படி டமால்னு விட்டுட்டு போயிடக்கூடாதேன்னுதானே அந்த தொகுப்புரையையே கொடுத்தேன். அந்த கேள்விகளுக்கு இப்போதும் எப்போதும் விடையே இல்லையா? என்னங்க ...!

அட் லீஸ்ட் .. அந்த உரைகல், இன்னும் தொகுத்த ஓரிரு கேள்விகள் - அதுக்காகவாவது பதில் சொல்லியிருக்கலாமே ...
இப்படி உட்டுட்டு போய்ருவீங்க. திருப்பி அதே கேள்வியைக் கேட்டா நம் அடிப்படைவாதி ஆஷிக் ‘இந்த ஆளு திருப்பி திருப்பி திருப்பி திருப்பி கேட்டுக்கிட்டே இருக்கிறார்னு சொல்லிருவார். என்ன செய்ய...?!!!

suvanappiriyan said...

'ஜிஸியா வரி விதித்து இந்துக்களை கொடுமைபடுத்தினார்' என்று வரலாறில் வருகிறதல்லவா! அதைத்தான் பொய் என்றேன். ஜிஸியா வரியின் நியாயத்தை நான் பல பின்னூட்டங்களில் விளக்கியும் இருக்கிறேன். முஸ்லிம்களுக்கு மட்டும் வரி விதித்து அரசு கஜானாவுக்கு போகும்போது இந்துக்கள் வரி கட்டாமல் இருந்தால் நியாயமாகுமா? முஸ்லிம்களும் வரி கட்டியதை வரலாறுகளில் குறிப்பிடவில்லை. இப்படி நிறைய பேசுவோம்.

சில எதிர்பாராத அலுவலக வேலைகள் வந்து விட்டது. விதியை தவிர்த்து மற்ற அனைத்து விஷயங்களைப் பற்றியும் பின்னர் விவாதிப்போம். நாட்களும் நேரமும் தான் நிறைய இருக்கிறதே சார்!

thiruchchikkaaran said...

முகி (mugi) அவர்களே ,


கோவில் அர்ச்சகர் தொடர்பாக, புதிய கட்டுரையை நம்முடைய தளத்திலே தொடங்கி இருக்கிறோம்.

இந்த விடயம் தொடர்பாக அங்கே நாம் கலந்துரையாடலாம்.

thiruchchikkaaran said...

முகி அவர்களே ,

கோவில் அர்ச்சகர் தொடர்பாக புதிய கட்டுரையை நம்முடைய தளத்திலே தொடங்கி இருக்கிறோம். இந்த விடயம் தொடர்பாக அங்கே நாம் கலந்துரையாடலாம்.



http://thiruchchikkaaran.wordpress.com/2011/02/08/temple-and-archchakas/

NO said...

// முதலில் நான் இங்கு ஒன்றை தெளிவுபடுத்தி விடுகின்றேன். மொகலாயர்கள் அனைவரும் புடம் போட்ட தங்கங்கள் என்று நான் வாதிட வரவில்லை. பலரும் மது மாதுவில் கட்டுண்டு கிடந்தவர்களே! //

என்னே நடு நிலைமை என்னே நடுநிலைமை சாருக்கு! அதாவது மது மாதுவை விரும்பியதால் மட்டுமே சில முகலாயர்கள் நல்லவர்கள் இல்லையாம். கெட்டவன்/ நல்லவன் குறி ஈட்டிற்கு இதுதான் அளவுகோல். அதாவது மத வெறியுடன் மற்ற மதத்தினரை அழித்ததால் அவர்கள் நல்லவர்கள் இல்லை என்று சொல்ல அவருக்கு நா வரவில்லை. ஆதலால் அவர்கள் குடித்ததால் அவர்கள் கெட்டவர்கள் என்று ஒருவரின்
"கெட்ட" தன்மையை ஒரே அமுக்காக அமுக்கி விட்டார். அவுரங்கசீப் என்ன, அவரின் மதத்தின் பெயரைச்சொல்லி வெறியாட்டம் ஆடும் யாராக இருந்தாலும் அவர்களை நல்லவர்களாக பார்க்க சிறு
வயதிலிருந்தே பழக்கபடுத்த பட்ட்டவர்கள் இவர்களில் பலர்.

இந்தியா, பங்களாதேஷ், இந்தோனேசியா போன்ற இடங்களில் வசிக்கும் இஸ்லாமியரின் சூபி சார்ந்த ஓரளவுக்கு அமைதியான நோக்கை குலைக்க, அவர்களுக்கு மத வெறி ஊட்டி மற்ற சமூகத்தினரின் மேல் வெறியை உமிழ இவர்களைப்போன்ற பலர் இப்பொழுது இறங்கி உள்ளார்கள். அமைதியான, சூபி அடிப்படை இஸ்லாமிற்கும் இவர்கள் கக்கும் வஹாபி நஞ்சுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது. அது சக மானுடத்துடன் வம்பில்லாமல் வசிக்க அமைக்கப்பட்ட ஒரு வழி. இது - அதாவது அரேபியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட - அந்நிய ஏகாதிபத்திய அடிமை பிடிக்கும் வழி முறை. அரேபியர்களின் நாடு பிடிக்கும் ஆசையின் பரப்பு சாதனமே இந்த வஹாபி இஸ்லாம். இன்று பாகிஸ்தானில் சூபி வழிபாடு மற்றும் ஷியா வகுப்பை சேர்ந்த சக இஸ்லாமியர்களை கொன்று குவிப்பது இதே வகாபி வழி வந்த மத வெறி கும்பல்களே. பாகிஸ்தான் இந்த கான்சரின் பிடியில் முழவதும்
விழுந்துவிட்டது என்று படித்த, விபரம் தெரிந்த பல பாகிஸ்தானிய இஸ்லாமியரே தினமும் அழ ஆரம்பித்து விட்டார்கள். பாகிஸ்தான் விழப்போவது இவர்களால்தான் என்றும் சொல்லுகிறார்கள்.

அப்படிப்பட்ட வகாபி கான்சர் இன்று இந்தியாவில் அப்பாவி இஸ்லாமியர் பலரை பதம் பார்க்க களம் இறங்கி விட்டது! அதி தீவிர இஸ்லாம் உயர்வு பேசுதல் மற்றும் எல்லா தீர்வும் இஸ்லாமிய எண்ணங்களில் மட்டும்தான் இருக்கிறது எனும் சிந்தாத்த பரப்புதல் போன்றவைதான் இவர்களின் இப்போதைய ஆயுதம். இந்த வழியில் இவர்கள் சிலர் போனதால் தங்கள் மதத்தை தாண்டி யோசிக்கும் திறனை இவர்கள் இழந்து விட்டார்கள். மேலும் இஸ்லாமியர் மைனாரிட்டியாக இருக்கும் இந்த இந்தியாவில், தாங்கள் ஒரு காலத்தில் ஆண்ட சமூகமாக இருந்து இன்று காபிர்களிடம் அடிபணிய வேண்டிய நிலைமைக்கு வந்ததன் காரணம் நம்முடைய ஆட்ட்க்கள் எல்லாம் தூய்மையான இஸ்லாமியராக இல்லைஎன்பதால்தான் என்ற ஒரு புது கதையை பரப்பி கொண்டிருக்கிறார்கள்.

அப்படி ஒரு எண்ண ஓட்டம் இருக்கும் ஒரு வகாபி மத வெறியருக்கு அவுரங்கசீப் என்ன, ஹிட்லரே ஒரு இஸ்லாமியராக இருந்தால் அவர் நல்லவர் என்று வாதாடுவார் (இஸ்லாமியர் சிலர் ஹிட்லர் நல்லவர் என்று சொல்லுகிறார்கள், ஏனென்றால் அவர் யூதர்களை பதம் பார்த்ததால். மேலும் ஹிட்லர் எழுதிய ஒரே புத்தகமான மேய்ன் காம்ப்ப் - Mein Kampf, மிக அதிகமாக விற்கும் இடம் துருக்கி மற்றும் சில அரேபியா நாடுகளில்தான். இந்த மாதிரி இஸ்லாமிய சமுதாயத்தில் ஒரு கொடுமையான மாற்றம் வந்ததற்கு காரணம் வகாபி வெறி பேசும் இஸ்லாமியர் சிலரே! சூபிகளும், மற்ற இஸ்லாமிய நேர்மைவாதிகளும்தான் தங்களின் சமுதாயத்தை இவர்களை போன்றவர்களிடம் இருந்து காக்க வேண்டும்)

குடுகுடுப்பை said...

சுவனப்பிரியன்
இந்தியாவை ஒரு இந்து நாடு என்று அறிவித்து, இந்துக்களின் மத விதியில் பிச்சையிடுதல் இருக்கிறது, ஆனால் முஸ்லீம்களை கட்டாயப்படுத்தமுடியாது என்று சொல்லி அவர்கள் மீது இந்துக்களாக மாறும் வரை பிச்சை வரி விதிப்பது என்று ஒரு சட்டம் கொண்டு வந்தால் ஒத்துக்கொள்வீர்களா?

அரசியலில் மதம் இருக்கவே கூடாது என் நிலை, ஆனால் இஸ்லாமிய ஆட்சி இறைவன் கொடுத்தது என்பது உங்கள் நிலை. அதனை விவாதத்தின் மூலம் புரியவைக்கவே மேலே உள்ளது.

thiruchchikkaaran said...

மொத்தம் நூறுக்கு மேலாக பின்னூட்டங்கள் வந்து விட்டன. ஆனால் ஜிசியா வரி என்று மத அடிப்படையில் வரி விதிப்பது பற்றி சிறு சங்கடம் கூட இவர்களுக்கு வரவில்லை. ஆயிரம் பின்னூட்டங்கள் வந்தாலும் இவர்கள் இம்மியாவது மாறுவார்களா என்பது சந்தேகமே. இதிலே அவரங்கஜேபாவது வெளி நாட்டில் இருந்து வந்தவர். இங்கே நம்முடனே இருப்பவர்களே பக்கத்து வீட்டுக் காரன் கூட ஜிசியா வரி கட்டட்டும் , கட்டுய்யா அதுல தப்பில்லை என்று சொல்லும் வகையான எண்ணப் போக்கை நாம் காண முடிகிறது.


மதம் என்பது ஒருவரின் மனதில் உள்ள மனித நேயத்தை, இரக்கத்தை, நியாய உணர்வை அழித்து விடுகிறது என்பதை நாம் தெரிந்து கொள்கிறோம். மதம் என்பது அபின் என்பது கம்யூனிச சித்தாந்தம். அந்த வர்ணனை சரியான வர்ணனை அல்ல என நினைக்கிறேன்.அபின் குடித்தவன் மயங்கி விடுகிறான், அவ்வளவுதான் , அவன் அடுத்தவனுக்கு துன்பம் தர மாட்டான் . ஆனால் மத வெறியோ ,அடுத்தவன் மீது அடக்கு முறையைக் கட்டவிழ்த்து, துன்பத்தை விளைவித்து, பல கொடூரங்க்களை நிகழ்த்துவதற்கு காரணமாக அமைந்து விடுகிறது.


இன்னும் திம்மிக்கு வன்முறை மூலம் சாகும் நிலை வந்தால் கூட , எப்படி இருந்தாலும் ஒரு நாள் சாகத்தான் போகிறான், என்ன கொஞ்சம் 20, 30 வருடம் முன்னால சாகிறார்கள், என்று ஒரு திர்ஹாம் தானே கட்டுவது பெரிய கஷ்டமில்லை என்று சொன்னது போல கருத்து வந்தாலும் வியப்பில்லை.

இந்தக் கட்டுரையை வெளியிட்டதற்கும், தொடர்ந்து விவாதத்தில் பங்கெடுத்ததற்கும் திரு, தருமி ஐயாவுக்கு நன்றி. விவாதத்தில் தொடர்ந்து பங்கெடுத்த அனைவருக்கும் நன்றி.

மதவெறி கொடுமைக்கு பதிலாக நாமும் வெறியில் இறங்கப் போவதில்லை. இரக்கமற்ற அடக்குமுறைக்கு பதிலாக நாமும் அடக்கு முறையில் இறங்கக் மாட்டோம். உலகில் இருக்கும் ஒவ்வொரு சிறுவரையும் , சிறுமியையும் அணுகி அவர்களிடம் மத வெறியின் கொடுமைகளை எடுத்து சொல்லி அவர்களை மனித நேயப் பாதிக்கு, பகுத்தறிவு வழிக்கு அழைத்து வருவோம்.

மத சகிப்புத் தன்மை , மத நல்லிணக்கம் ஆகியவற்றை ஒரு போதும் கை விட மாட்டோம்.

அடுத்தவன் கஷ்டப் பட்டாலும் பரவாயில்லை எனக்கு என் பிடிவாதம் தான் முக்கியம் நினைப்பவர்களுக்கு இருக்கும் மனஉறுதிக்கு குறையாத மன உறுதி உடையவர்களாய் மனித நியாயம், நேயம் கொண்டோர் இருப்போம்.

தருமி said...

//மத நல்லிணக்கம் ஆகியவற்றை ஒரு போதும் கை விட மாட்டோம். //

அப்டியா?!
முடியாதுன்னு நினைக்கிறேன். ஏன்னா இதைப் படிச்சி பாருங்க ...

thiruchchikkaaran said...

Dharumi Aiyya,

I can read the following

//Each religion,at least the major religions of the day, teaches man that THAT is the true religion; the only true religion.//

Can you please tell whether these are your perception, or you have quoted from any one else?

Baranee said...

Dear Sir,

Nice debate..Njoyed urs n Vaalpaiyam arguments.. Continue ur service..


@சுவனப்பிரியன்
Muyalukku moonu kaal than..onuum panna mudiyathu..

@Thiruchikkaran,
Santhula nalla sindhu padureenga...

//7)பெண்களும் அர்ச்சகர் ஆக பணி புரியலாம். பெண்கள் மாத விடை நேரத்திலே 4 நாட்கள் அவர்கள் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம்.// Athu enge antha 4 naal leave kodukkanum..sami kanna nondiduma....

தருமி said...

the major religions of the day, = abrahamic religions, especially christianity and islam.

suvanappiriyan said...

முஹம்மத் ஆஷிக் said...
தங்கள் மீது ஸலாம் உண்டாவதாக சகோ.சுவனப்பிரியன்,
நீங்கள் இன்னும் ஆயிரம் பின்னூட்டம் போட்டாலும் இன்னும் அடிப்படையையே புரிந்து கொள்வதே இல்லை அவர்கள்...

////////On Tuesday, February 08, 2011 10:52:00 PM ,
குடுகுடுப்பை said...

சுவனப்பிரியன்
இந்தியாவை ஒரு இந்து நாடு என்று அறிவித்து, இந்துக்களின் மத விதியில் பிச்சையிடுதல் இருக்கிறது, ஆனால் முஸ்லீம்களை கட்டாயப்படுத்தமுடியாது என்று சொல்லி அவர்கள் மீது இந்துக்களாக மாறும் வரை பிச்சை வரி விதிப்பது என்று ஒரு சட்டம் கொண்டு வந்தால் ஒத்துக்கொள்வீர்களா?//////

---இந்த பின்னூட்டமே அதற்கு சாட்சி, இதையெல்லாம் பார்த்தால் உங்களுக்கு அழுகை வரவில்லையா?

நான் படித்த இஸ்லாமிய பள்ளியில் முஸ்லிம் மாணவர்களை 'ஒழுக்கப்பயிற்சி வகுப்பு' என்று மஸ்ஜிதுக்கு அனுப்பி விடுவார்கள். அங்கே குர்ஆன், ஹதீஸ் இவற்றை சொல்லி பயான் நடக்கும். மாற்று சமய மாணவர்களுக்கு வகுப்பிலேயே பாட்டு கிளாஸ் நடக்கும்.

அதுப்போலத்தான் ஒருத்தருக்கு ஜகாத் மற்றவருக்கு ஜிஸ்யா. ஜகாத்தைவிட ஜிஸ்யா அதிகமாய் இருந்தால் மட்டுமே ஆட்சேபம் வரவேண்டும். மாறாக ஜகாத்தைவிட ஜிஸ்யா ரொம்ப ரொம்ப கம்மி.

குடுப்பைக்காரர் கேட்டகேள்விக்கு என் பதில்...

ஒத்துக்கொள்வேன்...
ஒத்துக்கொள்வேன்... ஒத்துக்கொள்வேன்...

ஏனெனில், என் சக இந்தியன் மட்டும் வரி கட்ட நான் வரி ஏய்க்கும் மோசக்காரன் ஆக மாட்டேன். ஜகாத் அளவையும் கொடுத்து அதையும் கட்டவும் தயங்க மாட்டேன். கூடவாக இருந்தாலும்..! முடியாது என்ற நிலையில் நாட்டைவிட்டு ஹிஜ்ரத் செய்து விடுவேன். இதுதான் இஸ்லாம்.

மற்றவனின் வரியில் மட்டும் அமைக்கப்பட்ட அத்தனை அரசு உள்கட்டுமானங்களையும் நானும் அனுபவித்துக்கொண்டு வரி கட்டாமல் போக இஸ்லாம் எனக்கு கற்றுத்தரவில்லை.

அவ்வளவு ஏன்...? சகோ? எந்த பாளிசியும் போடாமல், வருமானத்துக்கு அப்படியே இருபது சதவீதம் வருமான வரியும் கட்டி மேலும் இரண்டரை அல்லது அந்து அல்லது பத்து சதம் என்று ஜகாத்தும் கொடுக்கிறோமே இந்திய முஸ்லிம்கள்? இதெல்லாம் இவர்களிடம் சொன்னால் "இழிச்சவாயணுங்கன்னு சொல்லி" சிரிப்பார்கள்... நம்மைப்பார்த்து.

சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்... நாம் மறுமைக்காக வாழ்வோம் சகோ. அங்கே மொத்தமாய் சேர்த்துவைத்து சிரிப்போம் இன்ஷாஅல்லாஹ்.
------------------------------
சுவனப்பிரியன் said...
ஆசிக்!

உங்கள் மீதும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்! நீங்கள் சொன்னது போல் மறுமையில் சேர்த்து சிரிப்போம். கூடிய வரை அந்த சிரிப்பில் இந்த நண்பர்களையும் இணைத்துக் கொள்ள பிரார்த்திப்போம். அவ்வளவுதான் நம்மால் செய்ய முடியும்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
12:16 PM

thiruchchikkaaran said...

@Baranee,

Santhula nalla sindhu padureenga...

அப்படியா,எந்த சந்தில் என்னைப் பார்த்தீர்கள் என்று தெரியவில்லையே,
நீங்க எந்த சந்துல இருக்கீங்கன்னு சொல்லுங்க அந்த சந்து முனைக்கு வந்திருக்கோமா, சிந்து பாடி இருக்கோமானு பார்க்கலாம்.

//sami kanna nondiduma....//

சாமி கண்ணு குத்தும்னு சொல்லி பயமுறுத்தும் கோட்பாட்டை நாம் பரப்பவில்லை. நாம் சொல்லும் ஆன்மீகம் பகுத்தறிவு அடிப்படையில் ஒருவன் தன் மன நிலையை தானே உயர்த்துவது- புத்தர், விவேகானந்தர் இவர்களின் வழி போன்றது!


//Athu enge antha 4 naal leave kodukkanum..//

பெண்கள் அர்ச்சகராகப் பணி புரியும் போது, மாத விடாய் காலங்களில் நான்கு நாட்கள் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் - நன்றாக கவனிக்கவும்- விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என்றுதான் எழுதி இருக்கிறேன். அவர்கள் கண்டிப்பாக வரக் கூடாது என்று எழுதவில்லை. மாத விடாய் காலங்களில் கடுமையான வயிற்று வலி உண்டாகிறது. அலுவலகங்களில் பணி புரியும் பெண்கள் தங்கள் கேபினுக்குள் இருப்பதால் அவர்கள் வேதனைப் படுவது எல்லோருக்கும் தெரியாது. கோவில் என்று வந்தால், மூலவரும் அர்ச்சகரும் எல்லோராலும் கவனிக்கப் படுகின்றனர். எனவே இவ்வளவு வலியுடன் அவர்கள் அர்ச்சனை செய்ய வேண்டுமா என்பதை எல்லாம் முடிவு செய்ய வேண்டியது அர்ச்சகரும், கோவிலுக்கு வரும் பக்தர்களும் தான். இதிலே நான் சொல்ல ஒன்றுமில்லை.

கடற்கரையிலே சார்ட்ஸ் , டி சர்ட் அணிந்து வேர்க்க விறுவிறுக்க காலையில் நடை பயிற்சி செய்பவர் அப்படியே போய் தலைவர் சமாதிக்கு மலர் வளையம் வைக்கலாமே. வீட்டுக்கு வந்து, குளித்து சீவி சிங்காரித்து, மடிப்புக் கலையாத வெள்ளை வேட்டி, சட்டை துண்டுடன் மலர் வளையத்தை எடுத்துக்கொண்டு அதே இடத்திற்கு திரும்ப வருவது ஏன்? பெண்களுக்கு மாத விடாய் காலங்களில் இரத்தக் கசிவு ஏற்படுகிறது. அது கீழே விழுந்தால் அந்த இடத்திலே ஈக்கள் வரக் கூடும் என்கிறார்கள் சிலர். அப்படிப் பார்த்தால் ஆண்களுக்கு கூட மூலம் பவுத்திர வியாதியில் மாதம் முழுவதும் இரத்தமும் சீழும் கொட்டுகிறது. அவர்கள் அர்ச்சனை செய்யலாமா?

எனவே நாம் எந்தக் கட்டுப் பாட்டையும் விதிக்கவில்லை. விடுப்பு எடுக்க விரும்பினால் எடுத்துக் கொள்ளலாம், சமபளத்தோடு விடுப்பு அளிக்கப் பட வேண்டும் என்பதே நாம் சொல்வது. இவற்றை பற்றி எல்லாம் முடிவு செய்ய வேண்டியது அர்ச்சகரும் அந்தந்த கோவிலுக்கு வரும் பக்தர்களும்தான் பெண் பக்தர்கள் உட்பட. நான் கட்டளை போட்டு பண்ணையம செய்ய விரும்பவில்லை.

இவை இந்தக் கட்டுரைக்கு தொடர்புடைய பொருள் அல்ல,எனவே இவற்றை எல்லாம் விவாதிக்க திருச்சிக்காரன் தளத்தில் புதிய கட்டுரை தொடங்கி உள்ளோம், அங்கே வந்து எந்த கேள்வியும் கேட்பதில்லை, வராதது ஏன், கடவுள் வந்து கண்ணைக் குத்துவாரா என்று நான் கேட்கவுமில்லை.

தருமி said...

//சுவனப்பிரியன் said...

முஹம்மத் ஆஷிக் said...
தங்கள் மீது ஸலாம் உண்டாவதாக சகோ.சுவனப்பிரியன்,
நீங்கள் இன்னும் ஆயிரம் பின்னூட்டம் போட்டாலும் இன்னும் அடிப்படையையே புரிந்து கொள்வதே இல்லை அவர்கள்...//

யாரது முஹம்மத் ஆஷிக்?
ஓ! அந்த அம்பியா! நல்லது.

ஆமாம் .. நாங்கள் “அடிப்படை”களைப் புரிந்து கொள்வதேயில்லை. என்ன செய்ய?!

:(

thiruchchikkaaran said...

அநீதியான ஒரு மத அடக்குமுறையை நியாயம் போலக் காட்டுகிறார்கள்.

ஜிசியா வரி என்பது ஏழை திம்மிகளிடம் இருக்கும் கொஞ்ச பணத்தையும் கட்டாயமாக வாங்குவது. ஜகாத் என்பது வசதி உள்ள இஸ்லாமியர், ஏழை இஸ்லாமியருக்கு தருவது. இன்னும் சொல்லப் போனால் வரி என்று சொல்வதை விட அதை தானம் என்று சொல்வதுதான் சரி.

சகாத் மூலம் கிடைத்த பணத்தை ஏழை முஸ்லீமுக்கு கொடுக்கிறார்கள். அது பாராட்டுக்குரிய செயலே. அதை வரவேற்கிறோம். ஏழை முஸ்லீமின் நல்வாழ்க்கைக்கு அவருக்கு பணம் உதவி கொடுக்கிறார்கள். ஆனால் ஏழை திம்மிக்கு கட்டாய மத வரி கட்டித்தான் ஆக வேண்டும். மறுத்தால் தண்டனை!


சகாத் என்பதே ஏழை முஸ்லீம்களுக்காக பணக்கார முஸ்லீம்கள் செய்யும் உதவிதான்.இது உண்மையா இல்லையா?

ஏழை முஸ்லீமிடம் சகாத் வசூலிப்பது இல்லை.

நிசாப் எனப் படும் வருவாய்க்கு குறைவாக ஒரு ஏழை முஸ்லீம். சம்பாதித்தால் அவனிடம் சகாத் வசூலிக்கக் கூடாது.

ஆனால் ஏழை திம்மி அவனிடம் சொத்தே இல்லாவிட்டாலும் உடலிலே உயிர் இருந்தால், உடலிலே கொஞ்சம் வலு இருந்தால் அவன் கட்டாயமாக ஜிசியா வரி கட்டித்தான் ஆக வேண்டும். இவ்வளவு அப்பட்டமான அநீதியை நியாயம் போல சாதிப்பது அடுக்குமா?

thiruchchikkaaran said...

Ramadan is the month of giving and benevolence, the Messenger was more benevolent than a falling rain. Muslims are encouraged to emulate the Messenger of Allah (saws), to assess and pay their Zakat during the month of Ramadan, thus combining the two pillars of Islam at the same time.

Zakat (alms) is the name of what a believer returns out of his or her wealth to the neediest of Muslims for the sake of the Almighty Allah. It is called Zakat because the word Zakat is from Zakaa which means, to increase, purify and bless.

Who Should Give Zakat
The obligation of Zakat is mandatory on every Muslim who possesses the minimum Nisaab, whether the person is man, woman, young, old sane or insane. Because the proof of Zakat in Al-Qur'an and Sunnah is general and does not exclude young or insane. Allah (SWT) stated that: "Of their goods take alms so that thou mightiest purify and sanctify them..." (Al-Qur'an, 9: 103)

Imam Ibn Hazim said that every Muslim young or old sane or insane needs to cleanse his or her wealth with Zakat because of generality of the evidence. Anas bin Malik reported that the Messenger of Allah (saws) said: "Trade with the money of the orphan, lest it is eaten up by Zakat." (At-Tabraani) In another Hadith `Amru bin Shuaib related from his grandfather that the Messenger of Allah said:

"Whoever is entrusted with money of an orphan should trade with it and should not leave it sitting to be used up by charity." (Tirmidhi)

The point of reference in these reports is that the Messenger (saws) urged the trustee on the estate of people who due to age or other reasons cannot manage their own financial affairs, to invest it in a business that will yield a return and make it grow until they are in a position to do so themselves. For, if proper investment is not made with an ophan's inheritance, it will be depleted by charity, thus leaving the orphan with little or nothing.

The Nisaab

The Lawgiver, Allah has prescribed the minimum amount that is obligatory for Zakat in different ranges of properties, and that minimum amount is known as nisaab. The reason for nisaab is to ensure that no one is forced to give Zakat out of what he or she does not have, and that no wealth goes without Zakat. Nisaab is also an insurance against the tyranny of the state to tax the poor and or the neediest as is the case in many countries. Nisaab is a reference point for the average Muslim who is not sure whether he possesses the minimum wealth on which Zakat is obligatory. The wealthy need not worry about the Nisaab. Zakat is obligatory on their entire wealth and must be paid out at the end of financial year that they set for their Zakat.

thiruchchikkaaran said...

The Nisaab

The Lawgiver, Allah has prescribed the minimum amount that is obligatory for Zakat in different ranges of properties, and that minimum amount is known as nisaab. The reason for nisaab is to ensure that no one is forced to give Zakat out of what he or she does not have, and that no wealth goes without Zakat. Nisaab is also an insurance against the tyranny of the state to tax the poor and or the neediest as is the case in many countries. Nisaab is a reference point for the average Muslim who is not sure whether he possesses the minimum wealth on which Zakat is obligatory. The wealthy need not worry about the Nisaab. Zakat is obligatory on their entire wealth and must be paid out at the end of financial year that they set for their Zakat.

The Nisaab will not be valid unless it fulfills two conditions:
1) The amount that has reached Nisaab must be the excess or surplus known as "faadil" from one's essential needs such as food, clothing, housing, vehicles, tools and machinery that is used in business. The essentials for living are exempted from Zakat.

Although what constitutes nisaab may change from one country to another, the amount that is needed for the basic needs of living in different countries is very similar, because the market place determines the prices, whether it is an official market or a non-official market. In the poorest countries people do without or live below the poverty standard, and that is why many go hungry or without basic essentials.

However, we must realize that Zakat is an act of worship (ebadah) like Salaat. The element of intention (niyyah) is necessary, and we should not overly rely on state agencies to determine for us the requirements of our religious duty. The so called the "consumption basket" (that is poverty level as determined the social security administration which are updated every fiscal year) may not be the same as what Islam considers minimum Nisaab.

In the industrialized countries, the consumption basket may include items that are not necessarily essential, such as entertainment, extra clothing, variety of food, eating in restaurant or eating at home, owning more than one car as opposed to having three cars in the driveway, drinking water as opposed to juices, eating regular food or special "health" food. This is why I believe it is essential that we do not lose site of the fact that Zakat is ebadah of wealth, like salaat and fasting. Non Muslims may consider all the things mentioned above as essentials while Muslims will not. Indeed, no Muslims in good standing will attempt to hide behind the label of consumption basket so as to evade Zakat.

Nisaab eliminates the possibility of injustice or unfair treatment of the Zakat payer.

thiruchchikkaaran said...

The Nisaab

The Lawgiver, Allah has prescribed the minimum amount that is obligatory for Zakat in different ranges of properties, and that minimum amount is known as nisaab. The reason for nisaab is to ensure that no one is forced to give Zakat out of what he or she does not have, and that no wealth goes without Zakat. Nisaab is also an insurance against the tyranny of the state to tax the poor and or the neediest as is the case in many countries. Nisaab is a reference point for the average Muslim who is not sure whether he possesses the minimum wealth on which Zakat is obligatory. The wealthy need not worry about the Nisaab. Zakat is obligatory on their entire wealth and must be paid out at the end of financial year that they set for their Zakat.

The Nisaab will not be valid unless it fulfills two conditions:
1) The amount that has reached Nisaab must be the excess or surplus known as "faadil" from one's essential needs such as food, clothing, housing, vehicles, tools and machinery that is used in business. The essentials for living are exempted from Zakat.

Although what constitutes nisaab may change from one country to another, the amount that is needed for the basic needs of living in different countries is very similar, because the market place determines the prices, whether it is an official market or a non-official market. In the poorest countries people do without or live below the poverty standard, and that is why many go hungry or without basic essentials.

However, we must realize that Zakat is an act of worship (ebadah) like Salaat. The element of intention (niyyah) is necessary, and we should not overly rely on state agencies to determine for us the requirements of our religious duty. The so called the "consumption basket" (that is poverty level as determined the social security administration which are updated every fiscal year) may not be the same as what Islam considers minimum Nisaab.

http://www.missionislam.com/knowledge/zakat.htm

தருமி said...

//...what a believer returns out of his or her wealth to the neediest of Muslims ..//

ஓ! அதுவும் இஸ்லாமியருக்குத்தான் கொடுக்கணுமாமே! மத்தவங்களுக்குக் கொடுத்தால் புண்ணியமில்லை போலும்!

தருமி said...

'நம்பிக்கை கொண்டோர், யூதர்கள், கிறித்தவர்கள்,மற்றும் இறைத்தூது சென்றடையாத நல்லோர்கள் இறைவனையும் இறுதி நாளையும் நம்பி நல்லறம் செய்வோருக்கு அவர்களின் கூலி அவர்களின் இறைவனிடம் உண்டு. அவர்களுக்கு எந்த பயமும் இல்லை. கவலைப்படவும் மாட்டார்கள்.'
-குர்ஆன் 2:62


இப்படி சொல்லி பின் //4.56:நமது வசனங்களை மறுப்போரை பின்னர் நரகில் கருகச் செய்வோம். // இப்படி சொன்னால் என்னங்க அர்த்தம்???
is it not self-contradictory???

suvanappiriyan said...

திருச்சிக்காரரே!

//However, we must realize that Zakat is an act of worship (ebadah) like Salaat. The element of intention (niyyah) is necessary, and we should not overly rely on state agencies to determine for us the requirements of our religious duty. The so called the "consumption basket" (that is poverty level as determined the social security administration which are updated every fiscal year) may not be the same as what Islam considers minimum Nisaab.//

இப்படி வசூலிக்கப்படும் அனைத்து தொகையும் எங்கு செல்கிறது? அரசு கஜானாவுக்கு செல்கிறது. இது யாருக்கு செலவிடப்படுகிறது?

'யாசிப்பொருக்கும், ஏழைகளுக்கும்,அதை வசூலிப்போருக்கும், உள்ளங்கள் ஈர்க்கப்பட வேண்டியவர்களுக்கும், அடிமைகளை விடுதலை செய்வதற்கும்,கடன் பட்டோருக்கும், இறைவனின் பாதையிலும், நாடோடிகளுக்கும், இந்த ஜகாத் உரியனவாகும்'-குர்ஆன் 9:60

இங்கு கிட்டத்தட்ட ஒரு அரசாங்கம் தனது மக்களுக்கு எதை எல்லாம் செய்யுமோ அத்தனை செலவினங்களும் இதில் அடங்குகிறது. இந்த பணத்தில் இந்துக்களும் பயனடைந்திருக்கிறார்கள். ஏனெனில் இங்கு யாசிப்போர், நாடோடிகள்,கடன்பட்டோர் என்று வருவது அனைத்து சாராரையும் குறிக்கும்.

'முஹம்மதே! முஸ்லிம்களின் செல்வங்களில் தர்மத்தை எடுப்பீராக!'அதன் மூலம் அவர்களைத் தூய்மைபடுத்தி பரிசுத்தமாக்குவீராக!' -குர்ஆன் 9:103

கட்டாயமாக முஸ்லிம்களிடம் எடுக்கச் சொல்கிறது குர்ஆன். இந்த நிலையில் அந்த அரசனுக்கு கீழ் உள்ள மாற்று மதத்தவர் எந்த வரியும் செலுத்தாமல் இருப்பது உங்களுக்கு நியாயமாகப்படுகிறதா?

ஜகாத்தோடு ஒப்பிடும்போது ஜிஸியா வரி மிக சொற்பமானது என்று விளக்கியும் இருக்கிறேன். ஜகாத்தோ,ஜிஸியாவோ ஒரு அரசு செய்ய வேண்டியது. தனிப்பட்ட மனிதர்கள் இங்கு பேசப்படவில்லை என்பதையும் கவனிக்கவும்.

suvanappiriyan said...

//திருவண்ணாமலை அருணாசலேசுவரர் ஆலயத்தில், தட்டச்சர் ஜவான், பலவேலை, திருமஞ்சனம், நிவேத்தியம், சுயம்பாகி, ஓடல் தீபம், ஓதுவார், மணியடி (தட்டு கும்பம்), யானைப்பாகன் உள்ளிட்ட 10 பணியிடங்களுக்கான பணியிட அறிவிப்பை 05.01.2011 அன்று வெளியிட்டது இந்து அறநிலையத்துறை. அந்த அறிவிப்பு விளம்பரத்தில் திருமஞ்சனம், நிவேத்தியம், சுயம்பாகி ஆகிய பணியிடங்களுக்குப் பார்ப்பனர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பணியிடங்கள் சிலையை திருமுழுக்கு (அபிஷேகம்) செய்வது மற்றும் கோயில் பிரசாதம் தயாரிப்பதற்கான பணியிடங்களாகும். பார்ப்பனர்கள் அல்லாமல் வேறு சாதியினர் இந்த வேலைகளைச் செய்தால் ‘புனிதம்’ கெட்டுவிடும் என்று மற்ற சாதியினரை இழிவுபடுத்தும் பார்ப்பன சாதிவெறியை அப்பட்டமாக தோலுரித்துக்காட்டும் அந்த அறிவிப்பை வெளியிட்டது வேறுயாருமில்லை, இந்து அறநிலையத்துறைதான். ஏற்கனவே அர்ச்சகர் பயிற்சி பெற்று அர்ச்சகர்களாக முடியாமல் தவித்துக்கொண்டிருந்த பார்ப்பனரல்லாத மாணவர்கள் இந்த ‘லட்டு’ செய்யும் பணியிலாவது சேரலாம் என்றெண்ணி அப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்தனர்.
பெரியதாக பார்க்க படத்தின் மீது சொடுக்கவும்
இதே பணியிடங்களுக்கு விண்ணப்பித்த அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத்தின் தலைவர் திரு. அரங்கநாதன், உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுத்தார். திருமஞ்சனம், நிவேத்தியம், சுயம்பாகி ஆகிய பணியிடங்களுக்கு பார்ப்பனர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்கிற அறிவிப்பு சாதி வேற்றுமையை தூண்டுவதாகவும், ஆலயத்தீண்டாமையைக் கடைபிடிப்பதாகவும் அரசியலமைப்பு சட்டம் ஷரத்துக்கள் 14, 16 மற்றும் 17 ஆகியவற்றிற்கு எதிராகவும் இருப்பதால் அந்த பணியிடங்களுக்குப் பார்ப்பனர்கள் மட்டுமே தகுதியானவர்கள் என அறிவித்த அறிவிப்பை நிறுத்திவைக்க வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்றத்தில் உறுத்துக்கட்டளை மனுவைத் தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு 07.02.11 அன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுகுணா முன்பு விசாரணைக்கு வந்தது. உறுத்துக்கட்டளை மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்டு, இடைக்கால தடைவிதிக்கக் கோரும் மனுவைத் தள்ளுபடி செய்ததோடு ‘இத்தகைய’ பழக்கவழக்கங்களை அரசியலைப்பு சட்டம் ஷரத்து 13 அங்கிகரிப்பதாகவும் தெரிவித்தார். அரங்கநாதனுக்காக வழக்காடிய வழக்குரைஞர் சகாதேவன் சாதி வேற்றுமை மற்றும் தீண்டாமை காரணமாக பணிவழங்க மறுப்பது அரசியலமைப்பு சட்டம் வழங்கும் சமத்துவ வேலை வாய்ப்பிற்கான உரிமைக்கு எதிரானது என வாதிட்டதை ஏற்காமல் மத உரிமையில் சமத்துவம் (வெங்காயம்!) எல்லாம் கிடையாது என்பதை அரசியலமைப்பு சட்டம் பிரிவு 25 கூறியிருப்பதாகவும், உச்சநீதிமன்றத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் வழக்கு நிலுவையில் இருப்பதால் எதுவும் தற்போது செய்யவியலாது என தடையானை மனுவை தள்ளுபடி செய்து பார்ப்பன மேலாதிக்கத்திற்கு மயிலிறகால் வருடிவிட்டிருக்கிறார் நீதிபதி சுகுணா. உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பது என்பது வேறுவழக்கென்றும், அது அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் வழக்கு. ஆனால், இந்தப் பணி கோயில் பணிவிடைகளுக்கான வேலை என்று வாதாடியதையும் நிராகாரிதுள்ளார் நீதிபதி.//
-நன்றி வினவு.

இந்த லட்சணத்தில் திருச்சிக்காரர் 'எங்களிடம் இப்பொழுது சாதி பாகுபாடெல்லாம் அதிகம் பார்ப்பதில்லை. நானே ஒரு தனி கோவில் கட்டப் போகிறேன்' என்கிறார். ஐயா....இது கோர்ட் கொடுத்த ஆணை. இதற்கு என்ன சொல்கிறீர்கள்.

Robin said...

இஸ்லாமியர்கள் தவறு செய்தாலும் அதிலும் ஒரு நியாயம் இருக்கும் என்பதை அன்புடனும் மிரட்டலுடனும் தெரிவித்துக்கொள்கிறேன்.

தருமி said...

//ஜகாத்தோடு ஒப்பிடும்போது ஜிஸியா வரி மிக சொற்பமானது என்று விளக்கியும் இருக்கிறேன்.//
why double standards எனப்துதான் கேள்வி. ஏனிந்த பிளவு? மதத்தால் ஏன் கடவுள் நம்மைப் பிளக்கணும்?

//
இப்படி சொல்லி பின் //4.56:நமது வசனங்களை மறுப்போரை பின்னர் நரகில் கருகச் செய்வோம். // இப்படி சொன்னால் என்னங்க அர்த்தம்???
is it not self-contradictory//

இதுக்கும் பதில் சொல்லலை! என் தொகுப்புரியையும் அப்படியே விட்டு விட்டீர்கள்!!

தருமி said...

திருச்சிக்காரன், சுவனப்பிரியன்

மீண்டும் தடம் மாறிப்போகின்றீர்கள். இந்துமதத்தைப் பற்றிப் பேச வேறு ஒரு பதிவு எடுத்துக் கொள்வேமே! இங்கே அதை விட்டு விடுங்கள் ...

thiruchchikkaaran said...

அன்புக்குரிய திரு. சுவனப் பிரியன் அவர்களே,

ஏழை திம்மிகளின் மீது விதிக்கப் பட்ட கட்டாய கொடுங்கோல் மத வெறி அநீதியானது என்பதை எடுத்துக் காட்டினால் , உடனே வரியே கட்ட மாட்டீர்களா, நம்பிக்கையாளர் கட்டும் சாகத் வரியில் மட்டும் தான் ஆட்சி நடத்த வேண்டுமா , மாற்று மதத்தவர் வரியே கட்டாமல் இருப்பார்களா, என்ற ரீதியில் திசை திருப்ப பார்க்கிறீர்கள் .

8000 வருடத்துக்கும் மேலான வரலாறு உள்ளது இந்திய சமுதாயம் . இந்தியர்கள் வரி காட்டாமலா அன்று இந்தியாவில் ஆட்சி நடத்தினார்கள் ? கோரி முகமதுவோ, பாபரோ வரும் முன் இந்தியர்கள் வரி கட்டவில்லையா? இப்போது அவரங்க சீப் காலத்தில் மட்டும் வரி காட்டாமல் போகிறார்களா?

மத ரீதியில் மக்களை பிரித்து தனித்தனியாக வரி விதிப்பது என்? எல்லோருக்கும் ஒன்று போல வரி விதிக்காதது ஏன் என்றுதானே கேட்கிறோம்.

ஏழை திம்மிக்கும், பணக்கார திம்மிக்கும் ஜிசியா வரி என்று பிரித்து வரி விதிப்பது என் என்றுதான் கேட்கிறோம், பணக்கார நம்பிக்கையாளருக்கு சகாத் வரி. ஏழை நம்பிக்கையாளர் நிஸாப் குறியீட்டுக்கு கீழே வருமானம் இருந்தால் வரி கட்ட வேண்டியதில்லை. ஏழை திம்மி அவனிடம் சொத்தே இல்லாவிட்டாலும் கட்டாயமாக ஜிசியா வரி கட்ட வேண்டும், இல்லாவிட்டால் தண்டனை, அவன் திம்மியாக இல்லாவிட்டால் மாறி விட்டால் அவனுக்கு வரி விதிப்பு இல்லை

இவ்வளவு தூரம் நான் விவாதிக்க காரணம், நீங்கள் திம்மிகளுக்கு மட்டும் வரி என்று, மத ரீதியில் வரி விதித்ததை நியாயப் படுத்துவதால் தான்.

நான் ஒன்று கேட்க விரும்புகிறேன்.

இந்தியாவில் நம்பிக்கையாளர்கள் அதிகமாகவும் திம்மிகள் எண்ணிக்கையில் குறைவாகவும் ஆகி விட்டால்,அப்போது இந்தியாவில் திம்மிகள் எல்லோருக்கும் மீண்டும் ஜிசியா வரி விதிக்க வேண்டும் ,200 ரூபாய் சொத்து வைத்திருக்கும் ஏழை திம்மி வருடம் 12 ரூபாய் ஜிசியா வரி கட்ட வேண்டும், 20,000 ரூபாய் சொத்து வைத்திருக்கும் ஏழை திம்மி வருடம் 12OO ரூபாய் ஜிசியா வரி கட்ட வேண்டும் என்பதை சட்டமாக்க முயன்றால் நீங்கள் அதை எதிர்ப்பீர்களா, ஆதரிப்பீர்களா?

thiruchchikkaaran said...

அன்புக்குரிய திரு. சுவனப் பிரியன் அவர்களே,

ஏழை திம்மிகளின் மீது விதிக்கப் பட்ட கட்டாய கொடுங்கோல் மத வெறி அநீதியானது என்பதை எடுத்துக் காட்டினால் , உடனே வரியே கட்ட மாட்டீர்களா, நம்பிக்கையாளர் கட்டும் சாகத் வரியில் மட்டும் தான் ஆட்சி நடத்த வேண்டுமா , மாற்று மதத்தவர் வரியே கட்டாமல் இருப்பார்களா, என்ற ரீதியில் திசை திருப்ப பார்க்கிறீர்கள் .

8000 வருடத்துக்கும் மேலான வரலாறு உள்ளது இந்திய சமுதாயம் . இந்தியர்கள் வரி காட்டாமலா அன்று இந்தியாவில் ஆட்சி நடத்தினார்கள் ? கோரி முகமதுவோ, பாபரோ வரும் முன் இந்தியர்கள் வரி கட்டவில்லையா? இப்போது அவரங்க சீப் காலத்தில் மட்டும் வரி காட்டாமல் போகிறார்களா?

மத ரீதியில் மக்களை பிரித்து தனித்தனியாக வரி விதிப்பது என்? எல்லோருக்கும் ஒன்று போல வரி விதிக்காதது ஏன் என்றுதானே கேட்கிறோம்.

ஏழை திம்மிக்கும், பணக்கார திம்மிக்கும் ஜிசியா வரி என்று பிரித்து வரி விதிப்பது என் என்றுதான் கேட்கிறோம், பணக்கார நம்பிக்கையாளருக்கு சகாத் வரி. ஏழை நம்பிக்கையாளர் நிஸாப் குறியீட்டுக்கு கீழே வருமானம் இருந்தால் வரி கட்ட வேண்டியதில்லை. ஏழை திம்மி அவனிடம் சொத்தே இல்லாவிட்டாலும் கட்டாயமாக ஜிசியா வரி கட்ட வேண்டும், இல்லாவிட்டால் தண்டனை, அவன் திம்மியாக இல்லாவிட்டால் மாறி விட்டால் அவனுக்கு வரி விதிப்பு இல்லை

இவ்வளவு தூரம் நான் விவாதிக்க காரணம், நீங்கள் திம்மிகளுக்கு மட்டும் வரி என்று, மத ரீதியில் வரி விதித்ததை நியாயப் படுத்துவதால் தான்.

நான் ஒன்று கேட்க விரும்புகிறேன்.

இந்தியாவில் நம்பிக்கையாளர்கள் அதிகமாகவும் திம்மிகள் எண்ணிக்கையில் குறைவாகவும் ஆகி விட்டால்,அப்போது இந்தியாவில் திம்மிகள் எல்லோருக்கும் மீண்டும் ஜிசியா வரி விதிக்க வேண்டும் ,200 ரூபாய் சொத்து வைத்திருக்கும் ஏழை திம்மி வருடம் 12 ரூபாய் ஜிசியா வரி கட்ட வேண்டும், 20,000 ரூபாய் சொத்து வைத்திருக்கும் ஏழை திம்மி வருடம் 12OO ரூபாய் ஜிசியா வரி கட்ட வேண்டும் என்பதை சட்டமாக்க முயன்றால் நீங்கள் அதை எதிர்ப்பீர்களா, ஆதரிப்பீர்களா?

suvanappiriyan said...

திருச்சிக்காரன்!

//இந்தியாவில் நம்பிக்கையாளர்கள் அதிகமாகவும் திம்மிகள் எண்ணிக்கையில் குறைவாகவும் ஆகி விட்டால்,அப்போது இந்தியாவில் திம்மிகள் எல்லோருக்கும் மீண்டும் ஜிசியா வரி விதிக்க வேண்டும் ,200 ரூபாய் சொத்து வைத்திருக்கும் ஏழை திம்மி வருடம் 12 ரூபாய் ஜிசியா வரி கட்ட வேண்டும், 20,000 ரூபாய் சொத்து வைத்திருக்கும் ஏழை திம்மி வருடம் 12OO ரூபாய் ஜிசியா வரி கட்ட வேண்டும் என்பதை சட்டமாக்க முயன்றால் நீங்கள் அதை எதிர்ப்பீர்களா, ஆதரிப்பீர்களா?//

நான் எதிர்ப்பேன். ஏனெனில் இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு. இந்துக்களும், முஸ்லிம்களும் தங்களின் வருமானத்துக்குத் தக்கவாறு வரி கட்டிக் கொண்டு வருகிறோம். எனவே இங்கு ஜிஸியா வரிக்கும், ஜகாத் வரிக்கும் அவசியமே இல்லை.

இன்றும் கூட முஸ்லிம்கள் அரசுக்கு வரியும் கட்டிவிட்டு இஸ்லாம் செர்ன்ன ஜகாத்தையும் தனிப்பட்ட முறையில் கணக்கிட்டு கொடுத்தும் வருகிறார்கள். இந்த முறை முஸ்லிம்களிடம் முறையாக இன்று வரை செயல்படுவதால்தான் செல்வம் முஸ்லிம்களிடத்தில் பரவலாக இருக்கிறது. விகிதாச்சார அடிப்படையில் இஸ்லாமியர்களிடத்தில் மிகப் பெரும் கோடீஸ்வரர்களையும் பார்க்க முடியாது: அதே போல் மிகவும் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மக்களையும் பார்ப்பது அரிது. இது ஜகாத் என்ற அமைப்பு செயல்படுவதால் வந்த நன்மை. அனைத்து இஸ்லாமியர்களையும் வருடா வருடா ஜகாத் கொடுத்தே தீர வேண்டும் என்ற எண்ணத்துக்கு கொண்டு வர முயற்சி எடுத்து வருகிறோம்.

suvanappiriyan said...

திருச்சிக்காரன்!

//vijay_dl said...

கோவில் என்பது பொதுவானதாக இருக்கவேண்டும் அது என்ன தன் சாதிக்கு மட்டும் கட்டுவது. எல்லாருக்கும் பொதுவாக கட்டாதது எது? சாதி வெறி?அங்கேதான் உங்கள் மனநிலை சரியில்லை. தாழ்த்தப்பட்டவனின் வரி கேளுங்கள் கண்டிப்பாக கட்டுவான், வேண்டுமென்றே ஒதுக்கிவிட்டு நியாயம் வேறா?//

இது டோண்டு பதிவில் வந்த பின்னூட்டம். பிறபடுத்தப்பட்ட சாதியினர் தனியாக ஒரு கோவிலைக் கட்டிக் கொண்டு அந்த கோவிலுக்குள் தாழ்த்தப்படடவர்களை அனுமதிப்பதில்லை. கேட்டால் அவர்கள் கோவிலுக்கு வரி கட்டுவதில்லை என்ற வாதத்தை வைக்கிறார்கள். இது எவ்வளவு அநியாயாயம் என்பது நமக்குத் தெரியும்.

இதே அளவு கோலை ஜிஸியா வரியிலும் வைத்துப் பாருங்கள். முஸ்லிம்களிடம் மட்டும் ஜகாத் வசூலித்து இந்துக்களிடம் எந்த வரியும் வசூலிக்காமல் ஒரு இஸ்லாமிய அரசாங்கம் விட்டு விட்டால் இன்று எப்படி அரிஜனங்கள் பாதிக்கப்பட்டார்களோ அதே பாதிப்பைத்தான் இந்துக்களும் அடைவார்கள். அரிஜனங்கள் பாதிப்படைந்ததை நாம் கண்கூடாகவே பார்க்கிறோம். ஒளரங்கஜேப் அன்று செய்ததை குறை காணும் நீங்கள் அரிஜனங்கள் கோவிலுக்குள் அனுமதிக்காததை நியாயப்படுத்தப் போகிறீர்களா?

தருமி said...

சுவனப்பிரியன்
திருச்சிக்காரரோடு சேர்ந்து கொண்டு என் கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல் போய்விடுகிறீர்களே!

//இந்துக்களும், முஸ்லிம்களும் தங்களின் வருமானத்துக்குத் தக்கவாறு வரி கட்டிக் கொண்டு வருகிறோம்// இதுதானே சரி. கடவுளே நம்மைப் பிளவு செய்கிறாரே, இது நியாயமா, சரியா என்று திரும்ப ... கேட்டுக்கொண்டேயிருக்கிறேன்.

//இஸ்லாமியர்களிடத்தில் மிகப் பெரும் கோடீஸ்வரர்களையும் பார்க்க முடியாது: அதே போல் மிகவும் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மக்களையும் பார்ப்பது அரிது. //

இது உண்மையாகத் தெரியவில்லை.

thiruchchikkaaran said...

அன்புக்குரிய திரு. சுவனப் பிரியன் அவர்களே,

திம்மிகள் எண்ணிக்கை குறைவாக ஆகி விட்டால் இந்தியா எப்படி இருக்கும் என்பது ஒரு புறம் இருக்கட்டும்.

இந்தியா மதச் சார்பற்ற நாடாக இருந்தாலோ அல்லது எப்படி இருக்கிறதோ, இனி வருங்காலத்தில் திம்மிகளுக்கு ஜிசியா வரி விதிப்பதை ஆதரிக்க மாட்டேன், எதிர்ப்பேன் என்று நீங்கள் உறுதியாக சொல்கிறீர்களா?


இவ்வாறெல்லாம் நாம் தெளிவாக்கக் கேட்க்கக் காரணம் நீங்கள் மத ரீதயில் தனியே திம்மிகளுக்கு ஜிசியா வரி விதித்தது தவறல்ல என்கிற கோட்பாட்டை ஆதரித்து எழுதுவதால் தான்.

thiruchchikkaaran said...

அன்புக்குரிய திரு. சுவனப் பிரியன் அவர்களே,

திம்மிகள் எண்ணிக்கை குறைவாக ஆகி விட்டால் இந்தியா எப்படி இருக்கும் என்பது ஒரு புறம் இருக்கட்டும்.

இந்தியா மதச் சார்பற்ற நாடாக இருந்தாலோ அல்லது எப்படி இருக்கிறதோ, இனி வருங்காலத்தில் திம்மிகளுக்கு ஜிசியா வரி விதிப்பதை ஆதரிக்க மாட்டேன், எதிர்ப்பேன் என்று நீங்கள் உறுதியாக சொல்கிறீர்களா?


இவ்வாறெல்லாம் நாம் தெளிவாக்கக் கேட்க்கக் காரணம் நீங்கள் மத ரீதயில் தனியே திம்மிகளுக்கு ஜிசியா வரி விதித்தது தவறல்ல என்கிற கோட்பாட்டை ஆதரித்து எழுதுவதால் தான்.

thiruchchikkaaran said...

//இஸ்லாமியர்களிடத்தில் மிகப் பெரும் கோடீஸ்வரர்களையும் பார்க்க முடியாது: அதே போல் மிகவும் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மக்களையும் பார்ப்பது அரிது. //

இது உண்மையாகத் தெரியவில்லை.

thiruchchikkaaran said...

கோவில் சம்பந்தமான கேள்விகளை நமது தளத்தில் கேட்கலாம். திருப்பதி கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், மயிலை கபாலீஸ்வரர் கோவில் உட்பட இந்து மதத்தின் முக்கியக் கோவிலகளில் நுழையும் யாரையும் எந்த ஜாதி என்று கேட்பதே இல்லை. இதைப் பல முறை எழுதி விட்டோம், இன்னும் எத்தனை முறை எழுத வேண்டும்?

யாரிடமும் இந்தக் கோவில்கள் "வரி" எதுவும் கேட்பது இல்லை. திருப்பதி கோவிலுக்கு செல்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு தரிசனம் முடிந்தவுடன் லட்டு பிரசாதம் இலவசமாக கொடுக்கிறார்கள், அதோடு இலவச சாப்பாட்டு டோக்கன் ஒன்று தரப்படுகிறது. தரமான சாப்படு எல்லோருக்கும் பரிமாறப் படுக்கிறது. எல்லோரும் அருகருகே அமர்ந்து சாப்பிடுகிறார்கள். எனவே இந்துக் கோவில்கள் " வரி" எதுவும் போடவில்லை, மாறாக இலவசமாக சாப்பாடு போடுகின்றன. மற்றபடி தனிப் பட்ட முறையில் யாராவது கோவிலோ அல்லது எதுவோ கட்டிக் கொண்டால் அதில் யாரையும் அனுமதிப்பது அவரவர் விருப்பம். இது பொது இடமல்ல என்று போர்டு வைத்து விட்டால் நான் என்ன செய்ய முடியும்? நானும் உள்ளே போக முடியாது!காரணம் அது தனிப்பட்டவரின் சொந்த சொத்து, அதில் உள்ளே நுழைவது டிரெஸ்பாசிங் என்று ஆகி விடும். இது சொத்து மற்றும் சட்டம் பற்றியதே. அவர்களிடம் நாம் தயவு செய்து எல்லோரையும் அனுமதியுங்கள் என்று நட்பு அடிப்படையில் சொல்லிப் பார்க்கலாம். நாகரீகத்தின் அடிப்படையில் எடுத்து சொல்லலாம். ஆனால் நான் உள்ளே போவேன் என்று போக என்னால் இயலாது,சட்டப் படி எனக்கு இன்னொருவருக்கு சொந்தமான வளாகத்தில் நுழைய எனக்கு உரிமை இல்லை.

நீங்கள் கட்டாய மத வரி அடுக்குமுறைக்கு பதில் சொல்ல இயலாமல், எந்தக் கோவிலுக்கும் போகாமல், என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ளாமல் இந்து மத்தில் அப்படி இப்படி என்று எழுதுகிறீர்கள்.இது பிரச்சினையை திசை திருப்பவே உபயோகப் படுகிறது.

பதிலுக்கு பதில் லாவணி பாட வேண்டுமா?

இஸ்லாத்தில் அடிமை முறையை அங்கீகரித்து உள்ளார்களா இல்லையா? போரிலே பிடிக்கப் படும் அடிமைகளை எப்படி வேண்டுமானாலும் உபயோகப் படுத்திக் கொள்ளலாம் என்று சொல்லப் பட்டுள்ளது என்று கூறப்படுவது உண்மையா இல்லையா?

எந்தக் கட்டளை போட்டாலும் அந்த அடிமைகள் செய்ய வேண்டும் என்பது உண்மையா, இல்லையா? அப்படி அடிமை ஆகி விட்டால் அதோ கதிதான் என்றுதான் சித்தூர் ராணி பத்மினி அலாவுதி கில்ஜி கோட்டையில் உள்ளே நுழையும் முன் நெருப்பில் விழுந்து இறந்து தன மாந்திக் காத்துக் கொண்டாள் என்று வரலாற்றில் உள்ளது உண்மையா இல்லையா?

suvanappiriyan said...

தருமி!

///இந்துக்களும், முஸ்லிம்களும் தங்களின் வருமானத்துக்குத் தக்கவாறு வரி கட்டிக் கொண்டு வருகிறோம்// இதுதானே சரி. கடவுளே நம்மைப் பிளவு செய்கிறாரே, இது நியாயமா, சரியா என்று திரும்ப ... கேட்டுக்கொண்டேயிருக்கிறேன்.///

இதை இறைவன் எங்கு பிரித்தான். ஒரே மார்க்கத்தில்தான் முன்பு அனைவரும் இருந்தோம். இறைவனை புரிந்து கொள்ளாமலும், வேதங்களை மாற்றியும் விட்டதால் இந்து, கிறித்தவர்,பௌத்தர், நாத்திகர், இஸ்லாமியர் என்று பிரிந்து விட்டோம். எனவே தவறு மனிதர்களிடம்தான்.

//இஸ்லாமியர்களிடத்தில் மிகப் பெரும் கோடீஸ்வரர்களையும் பார்க்க முடியாது: அதே போல் மிகவும் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மக்களையும் பார்ப்பது அரிது. //

இது உண்மையாகத் தெரியவில்லை.//

நான் தமிழகத்தை உதாரணமாக காட்டவில்லை. முழு உலக நாடுகளையும் கணக்கெடுத்து பாருங்கள். சவுதியில் பொருளாதாரம் அனைவரிடத்திலும் ஓரளவு சமப்படுத்த்பட்டிருக்கும்.

தமிழகத்தை பொறுத்தவரை முஸ்லிம்கள் செய்தது தவறு. சுதந்திரத்துக்கு முன்பு தேசப்பற்று முற்றி போய் மார்க்க அறிஞர்கள் 'ஆங்கிலம் படிப்பது ஹராம்: அரசு வேலைகளை உதறி விட்டு எல்லோரும் வெள்ளையனுக்கு எதிராக போராட்டத்தில் குதியுங்கள்' என்று தவறான ஃபத்வா(மார்க்க கட்டளை)வை கொடுத்தனர். அதை எங்களது முன்னோர்கள் கடை பிடித்ததனால் இன்று படிப்பிலும், வேலை வாய்ப்பிலும் பின்னுக்கு தள்ளப்பட்டு அதிகம் பேர் வறுமையில் உள்ளனர். பிராமணர்களை போல் வெள்ளையர்களை எங்களது முன்னோர்கள் அனுசரித்து சென்றிருந்தால் இன்று பிராமணர்களை விட முன்னேறிய சமுதாயமாக இருந்திருப்போம். சுதந்திரத்துக்கு பிறகு கூட ராஜாஜி,பட்டேல் போன்றோர்களின் சூழ்ச்சிகளினால் இருந்த இட ஒதுக்கீடும் போனது.

குடுகுடுப்பை said...

அரிஜனங்கள் கோவிலுக்குள் அனுமதிக்காததை நியாயப்படுத்தப் போகிறீர்களா?
//

அந்தப்பின்னூட்டம் டோண்டு பதிவில் இட்டது நாந்தான், நான் ஜஸியா வரியையும் எதிர்க்கிறேன், வரி என்பது அனைவருக்கும் பொதுவானதாக இருக்கவேண்டும், இஸ்லாமிய வரி , இந்துவரி, அரிஜன வரி, சொம்புதூக்கி வரி என்றெல்லாம் இருக்கமுடியாது. சொல்லும் முன் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று புரிந்து சொல்லுங்கள். அதற்கு நீங்கள் மதம் தாண்டி சிந்திக்கவேண்டும்.அது உங்களால் முடியாது.

suvanappiriyan said...

திருச்சிக்காரரே!

//இஸ்லாத்தில் அடிமை முறையை அங்கீகரித்து உள்ளார்களா இல்லையா? போரிலே பிடிக்கப் படும் அடிமைகளை எப்படி வேண்டுமானாலும் உபயோகப் படுத்திக் கொள்ளலாம் என்று சொல்லப் பட்டுள்ளது என்று கூறப்படுவது உண்மையா இல்லையா? //

சோழர்கள் காலத்திலும் அடிமை முறை நம் நாட்டிலும் இருந்ததை மறந்து விட வேண்டாம். அதே போல் முகமது நபி காலத்துக்கு முன்பும் முகமது நபி காலத்திலும் அடிமை முறை மிகவும் அதிகமாக இருந்தது. ஆப்ரிக்காவிலிருந்து கொண்டு வரப்பட்ட அடிமைகள் விலங்குகளை விட கேவலமாக நடத்தப்பட்டனர். இஸ்லாம் அரபு நாடுகளுக்கு வந்தவுடன் படிப்படியாக குறைந்து இன்று அடிமைகளே இல்லாத நிலையைத்தான் நாம் பார்க்கிறோம்.

உடல்நலக்குறைவால் நோன்பு வைக்க முடியவில்லையா? ஒரு அடிமையை விடுதலை செய்தால் சரியாகி விடும், இறைவன் மீது சத்தியம் செய்து விட்டு அதை மீறினால் அதற்கு பகரமாக ஒரு அடிமையை விடுதலை செய்ய வேண்டும், என்று வரிசையாக சிறு பாவங்கள் செய்தவர்களை எல்லாம் அடிமைகளை விடுதலை செய்ய வைத்து தனது வாழ் நாளிலேயே அடிமைகளை முற்றிலுமாக ஒழித்தவர் முகமது நபி.

//அப்படி அடிமை ஆகி விட்டால் அதோ கதிதான் என்றுதான் சித்தூர் ராணி பத்மினி அலாவுதி கில்ஜி கோட்டையில் உள்ளே நுழையும் முன் நெருப்பில் விழுந்து இறந்து தன மாந்திக் காத்துக் கொண்டாள் என்று வரலாற்றில் உள்ளது உண்மையா இல்லையா?//

ஒரு நாட்டை இன்னொரு நாட்டுக்காரன் பிடிப்பதை இஸ்லாத்தோடு ஏன் தொடர்பு படுத்துகிறீர்கள்? இதை விட மோசமாக சமணர்களை உங்கள் மதத்தவர் கொல்லவில்லையா? சேர சோழ பாண்டியர்கள் போரில் பெண்களை மானபங்கப்படுத்தவில்லையா? தன்னை கேலி செய்ததற்க்காக 1000 பெண்களை அசோகர் கழுவிலேற்றி கொல்லவில்லையா? அனைத்துக்கும் ஆதாரம் தரட்டுமா?

thiruchchikkaaran said...

நான் கேட்பது மார்க்கம் அடிமை முறையை அங்கீகரிக்கிறதா இல்லையா? அடிமைகளே கூடாது, எல்லோரும் சுதந்திரமான மனிதர்கள் என்று சொல்லுகிறதா?

இறைவன் மீது சத்தியம் செய்து அதை மீறினால் அதற்க்கு பகரமாக ஒரு அடிமையை விடுவிக்க வேண்டும் என்று சொல்லி இருப்பதாக நீங்கள் சொல்லி இருக்கிறீர்கள். அப்போது எல்லோரிடமும் பல அடிமைகள் இருக்கலாம், இறைவன் மீது இட்ட சத்தியத்தை மீறினவன் ஒரு சத்திய மீறலுக்கு ஒரு அடிமையை விடுவிக்க வேண்டும், மத்த அடிமைகளின் நிலை?

சில மாதங்களுக்கு முன்பு கூட பத்திரிகைகளில் படித்தோம், ஒரு நம்பிக்கையாளர் ஒருவர், அமெரிக்க அதிபர் ஒபாமாவை அவர் இனத்தை சொல்லிக் குறிப்பிட்டு எங்களிடம் அடிமையாக இருந்த இனம், அதை தெரிந்து கொள், இப்போதும் நீ அடிமை இனம்தான், என்கிற ரீதியிலே சொன்னதாக பத்திரிகைகளில் செய்தி வந்தது.

வளைகுடா சண்டையின் போது போரிலே ஈடுபட்ட அமெரிக்க பெண்களை பிடித்தால் அவர்கள் அடிமைகள் என்றும் அடிமைகளை எப்படி வேண்டுமானாலும் உபயோகப் படுத்திக் கொள்ளலாம் என்றும் சொன்னதாக படித்தோம். அந்தப் பெண்களை தன்னுடைய சேவைக்கு மட்டுமல்லாமல் தன்னுடைய நண்பர்கள் விருந்தினர்கள் சேவைக்கும் பயன்படுத்தலாம் என்று சொல்கிறார்கள். இது பற்றி உங்கள் கருத்து என்ன?



இவற்றை எல்லாம் மன்னர்கள், தனி மனிதர்கள் தன்னிச்சையாக செய்ததது போல இல்லாமல், மார்க்கத்தில் இவற்றுக்கு அனுமதி உள்ளது என்கிறார்கள். அடிமை பெண்ணுக்கும் தேவைகள் உள்ளன. அவற்றை எஜமான் தானே நிறைவேற்ற முடியும் என்று இப்போது கூட சிலர் எழுதி வருவதை படிக்கிறோம். இவை உண்மையா? இதெல்லாம் பற்றி உங்கள் கருத்து என்ன?

saarvaakan said...

http://en.wikipedia.org/wiki/Islam_and_slavery

தருமி said...

சார்வாகன்

நீங்கள் கொடுத்த பதிவிலில் இருந்து சில சொற்றொடர்கள்:

Historically, the major juristic schools of Islam traditionally accepted the institution of slavery.

Only children of slaves or non-Muslim prisoners of war could become slaves, never a freeborn Muslim.

....involved enormous suffering and loss of life from the capture and transportation of slaves from non-Muslim lands

slavery was gradually outlawed and suppressed in Muslim lands, largely due to pressure exerted by Western nations

slavery claiming the sanction of Islam is documented presently in the African republics of Chad, Mauritania, Niger, Mali and Sudan.

தடித்த எழுத்துக்களில் இருப்பது ‘வரலாறு மிக முக்கியம், அமைச்சரே!’ என்பதாகத் தோன்றுகிறது!!!!

thiruchchikkaaran said...

அன்புக்குரிய திரு. சுவனப்பிரியன் அவர்களே,

பள்ளி மாணவ மாணவியர் பங்கேற்ற ஒரு நிகழ்ச்சிக்கு நான் சென்று இருந்தேன்.

அதிலே 'இந்தியா' என்ற தலைப்பில் பேசிய ஒரு மாணவி "உலகிலே அடிமை முறை இல்லாத சமுதாயமாக இருந்தது, இந்திய சமுதாயம்" என்று ஒரு வாசகத்தை பேசினார்.

நிகழ்ச்சி முடிந்தவுடன் அவரிடம் நான் இது பற்றி விளக்கம் கேட்டேன். அவர் சொன்னதாவது "அங்கிள், அடிமை முறை என்பது வேறு, சாதி முறை என்பது வேறு, சாதி என்பது மக்கள் தனி சாதிகளாக வாழ்வது, அடிமை முறை என்பது ஒரு மனிதன் இன்னொரு மனிதனை மாட்டை விலைக்கு வாங்குவது போல விலைக்கு வாங்கி உபயோகப் படுத்துவது!

உலகின் பிற பகுதிகளில் நிலவி வந்த அடிமை முறையில், அடிமைகள் தங்களுக்குள் கணவன் மனைவியாக வாழ்ந்து பிள்ளைகளைப் பெற்றாலும், அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் எஜமானுக்கு சொந்தம். எஜமானுக்கு பணம் தேவைப் பட்டால் அவன் அடிமைப் பெண்ணையோ, அல்லது குழந்தைகளையோ தனியாக இன்னொருவனுக்கு விற்று விடுவான். அவன் வேறு இடத்திற்கு அவர்களை கொண்டு செல்லவும் கூடும். குடும்பம் மீண்டும் இணைவது சாத்தியமல்ல. மனைவியோ குழந்தைகளோ தன்னிடமிருந்து பிரித்து எடுத்து செல்லப் படும் போது அழுதுவதைத் தவிர அந்த அடிமை செய்யக் கூடியது வேறு ஒன்றுமில்லை.

இந்தியாவில் சாதி முறை இருந்து வந்தாலும் அவரவர் குடும்பம் அவரவர்க்கு. ஒருவனின் மனைவியையோ, குழந்தையையோ , அவனையோ அவனது உடமைகளையோ வேறு யாரும் சொந்தம் கொண்டாட முடியாது, அப்படி ஒருக்காலும் உரிமை கொண்டாடியடியதும் இல்லை" என்றார்.

இந்திய சமூகத்தில் தொழில் அடிப்படையில் குழுக்களாக சேர்ந்து வாழ்ந்த மக்கள், தங்களை சாதியாக வைத்து, அதைப் பிறப்பு அடிப்படையில் இறுக்கமாக்கி விட்டனர். இதிலே ஒரு பிரிவினர் ஒதுக்கி வைக்கப்பட்டது அநீதியே. அதை நாங்கள் ஆதரிக்கவில்லை , எதிர்க்கிறோம். எல்லா மக்களையும் இணைத்து ஒன்று பட்ட சமத்துவம் சமுதாயம் உருவாகி வருகிறது. இதில் கணிசமான முன்னேற்றம் உள்ளது. இன்னும் நிறைய முன்னேற்றம் தேவையாக உள்ளது.

அடிமைகளை வைத்துக் கொள்வது சரிதான், என்பது போன்ற குறிப்புகள் எந்த நூலில் சொல்லப் பட்டு இருந்தாலும், உங்களின் மார்க்க நூல்களில் சொல்லப் பட்டு இருந்தாலும் நீங்கள் அதைக் கண்டிக்க தயாரா?

thiruchchikkaaran said...

வரி கட்ட மாட்டோம் என்றா சொல்கிறோம், அடுத்தவர் மட்டும் வரி கட்டட்டும் என்றா சொல்கிறோம்?


மத அடிப்படையில் கொடுங்கோல் வரி விதிப்பது தவறு என்றுதான் சொல்கிறோம். திம்மிகளுக்கு அவர்கள் திம்மியாக இருப்பதால் கட்டாய மத வரி விதித்தது தவறு என்றுதான் சொல்கிறோம்.

நம்பிக்கையாளராக இருந்தால் அவன் வருமானம் நிசாப் அளவுக்கு கீழே இருந்தால் அவனுக்கு சகாத் வரி இல்லை.

ஆனால் திம்மியாக இருந்தால் வருவாய் எவ்வளவு குறைவாக இருந்தாலும் அவன் ஜிசியா வரி கட்டித்தான் ஆக வேண்டும்.

வரி கட்ட முடியவில்லை என்றால் , இங்கே வந்துடு கட்ட வேண்டாம் என்கிற ரீதயில் உள்ளது.

இந்தியர்கள் கட்டாத வரியா? இவ்வளவு பணம் இருக்கிறது, இவ்வளவு வரி வசூலிக்கலாம் என்று கணக்கு போட்டுத்தானே ஆசைப் பட்டு இந்தியாவின் மீது படை எடுத்து வருகின்றனர். கோஹினூர் வைரம், மயில் சிம்மாசனம் இவை எல்லாம் எப்படி வந்தது? தாஜ்மஹால் கட்ட கஜானாவில் அவ்வளவு பணம் வந்தது எப்படி? இந்தியர்கள் வரியாக கட்டிய பணம் தானே? இல்லாவிட்டால் எந்தப் பணத்தை வைத்து ஷாஜஹான் தாஜ் மஹால் கட்டினார்?

அவருடைய பாட்டனாருக்கும் பாட்டனார் துருக்மெனிஸ்தானில் அந்தக் காலத்துல கம்மி விலைக்கு நூற்றுக் கணக்கான ஏக்கர் நிலம் வாங்கிப் போட்டு இருந்தாருங்க. ஷாஜஹான் காலத்துல நிலம் விலை எல்லாம் பத்து மடங்குக்கு மேல ஏறிப் போச்சுங்க, அந்த நிலத்தை எல்லாம் வித்து கிடைத்த பணத்திலே தாஜ்மஹால் கட்டினார். இந்தியன்கள் கஞ்சப் பசங்க, வரியே கட்ட மாட்டங்க, பலுசிஸ்தான்காரர் கட்டிய வரியை வைத்து கஷ்டப் பட்டு இந்தியாவை ஆண்டார்கள், ஆப்கானிஸ்தான்காரர் கட்டிய வரியில் இருந்து கிடைத்த பணத்தை வைத்து பண்டார பரதேசி இந்தியர்கள் ஒவ்வொருவருக்கும் தினமும் காலணா பிச்சை போடுவாரு அரசர், என்ற வகையிலே பின்னூட்டம் வந்தாலும் வியப்பதற்கில்லை.

தன்னுடைய மதம் சாராத இன்னொரு மதத்தவனுக்கு கட்டாய வரி போட்டா தப்பில்லை, அதை நியாயப் படுத்த எப்படி வேணும்னாலும் எழுதலாம்.

suvanappiriyan said...

திருச்சிக்காரரே!

//நான் கேட்பது மார்க்கம் அடிமை முறையை அங்கீகரிக்கிறதா இல்லையா? அடிமைகளே கூடாது, எல்லோரும் சுதந்திரமான மனிதர்கள் என்று சொல்லுகிறதா? இதெல்லாம் பற்றி உங்கள் கருத்து என்ன?//

அடிமைகளைப் பற்றி தெரிந்து கொள்ள அன்றைய கால அரபு பழக்கத்தை தெரிந்து கொள்ள வேண்டும். இரண்டு நாடுகளுக்கிடையே போர்நடந்தால் வென்றவர்கள் தோற்றவர்களை சிறை பிடிப்பார்கள். இவ்வாறு சிறை பட்டவர்களை அடைத்து வைக்க அன்று சிறைச்சாலைகள் இல்லை. அவர்களுக்கு உணவளித்து பராமரிப்பதும் மிக சிரமம். எனவே கைது செய்யப்பட்டவர்களை போரில் ஈடுபட்டவர்களுக்கு பங்கிட்டுக் கொடுப்பார்கள். அடிமைகளிடம் வேலை வாங்கிக் கொண்டு அவர்களுக்கு உணவளிப்பது சிரமமாக இருக்காது. வேலைக்கு ஆள் தேவையில்லை என்ற நிலையில் இருப்பவர்கள் தமக்குக் கிடைத்த அடிமைகளை வசதியானவர்களிடம் விற்று விடுவார்கள். இதனால் அடிமைச் சந்தைகளும் கூட செயல்பட்டு வந்தன.

முகமது நபி 'அடிமைகள் இனி சுதந்திரப் பறவைகள்' என்று ஒரு உத்தரவின் மூலம் செயல்படுத்தியிருக்க முடியும.
அப்படி செய்தால் அடிமைகளை விலை கொடுத்து வாங்கியவர்கள் நஷ்டமடைவார்கள். அவர்கள் அனைவருக்கும் இழப்பீட்டுத் தொகையை வழங்கினால் மேற் கொண்டு அரசை நடத்த முடியாது. அன்று அடிமை வியாபாரம் சட்டமாக்கப்பட்டிருந்தது.

மேலும் முகமது நபி தன்னிச்சையாக இந்த சட்டத்தை எடுத்தால் முஸ்லிம்களிடம் உள்ள கைதிகள் விடுதலையடைவார்கள். மற்ற நாடுகளில் சிக்கி இருக்கும் முஸ்லிம்கள் விடுதலையடைய முடியாது. சுற்றியுள்ள நாடுகள் ஒருமித்த கருத்துக்கு வரும் வரை முகமது நபி மட்டும் ஒரு முடிவெடுப்பது நன்மை பயக்காது. ஆனால் யாருக்கும் பாதகம் இல்லாமல் குற்றங்களுக்கு பரிகாரமாக அடிமைகளை விடுதலை செய்து குறுகிய காலத்திலேயே அடிமைகளே இல்லாத நாடுகளாக அரபுலகை மாற்றியது இஸ்லாம்.

'ஒரு மனிதரிடம் அடிமைப் பெண் ஒருத்தி இருந்து, அவளுக்கு அவர் ஒழுக்கமும் கற்பித்து,கல்வியையும் அழகிய முறையில் கற்றுக் கொடுத்து அவளை விடுதலையும் செய்து, திருமணமும் முடித்து வைத்தால் அவருக்கு இரண்டு நன்மைகள் கிடைக்கும்' -முகமது நபி.

நூல்: புகாரி 2547, அறிவிப்பவர்: மூசா அஷ்அரி.

suvanappiriyan said...

திருச்சிக்காரன்!

//அன்புக்குரிய திரு. சுவனப்பிரியன் அவர்களே,

பள்ளி மாணவ மாணவியர் பங்கேற்ற ஒரு நிகழ்ச்சிக்கு நான் சென்று இருந்தேன்.

அதிலே 'இந்தியா' என்ற தலைப்பில் பேசிய ஒரு மாணவி "உலகிலே அடிமை முறை இல்லாத சமுதாயமாக இருந்தது, இந்திய சமுதாயம்" என்று ஒரு வாசகத்தை பேசினார்.

நிகழ்ச்சி முடிந்தவுடன் அவரிடம் நான் இது பற்றி விளக்கம் கேட்டேன். அவர் சொன்னதாவது "அங்கிள், அடிமை முறை என்பது வேறு, சாதி முறை என்பது வேறு, சாதி என்பது மக்கள் தனி சாதிகளாக வாழ்வது, அடிமை முறை என்பது ஒரு மனிதன் இன்னொரு மனிதனை மாட்டை விலைக்கு வாங்குவது போல விலைக்கு வாங்கி உபயோகப் படுத்துவது!//

இனி சோழ நாட்டில்(அதாவது தஞ்சை, திருச்சி) இருந்த அடிமை முறையை வினவு தளத்திலிருந்து பார்ப்போம்.


//வரி கட்ட முடியாதவர்களுக்கு சிவ துரோகி என்ற பட்டமளித்து, அவர்களது நிலத்தை விற்று மைய அரசிடம் சமர்ப்பித்தது ஊர் சபை. அந்த விற்பனைக்கு ராசராசனும் அவனது தமக்கையும் பணம் அளித்ததை கல்வெட்டுகள் பல ஆதாரத்துடன் தெரிவிக்கின்றன. அந்த நிலங்கள் ஆலயத்திற்கு சொந்தமான தேவ தானங்களாகவும், பிராமணர்களுக்கு சொந்தமான பிரம்மதேயங்களாகவும் மற்றும் வேதகல்விச் சாலைகளுக்கான மானியத்திற்காக ஏற்படுத்தப்பட்ட சதுர்வேதி மங்கலங்களாகவும் பின்னர் மாற்றப்பட்டது. அதே நேரத்தில் வரிகட்ட முடியாத ஏழை குத்தகை விவசாயிகள் சிவ துரோக பட்டத்திலிருந்து தப்புவதற்காகவும் தமது பெண்டிரை ஆலய தாசி வேலைக்கு நேர்ந்து விட்ட கொடுமையும் சோழர் கால பொற்கால ஆட்சியில்தான் நிகழ்ந்தது.

வரிக்கொடுமை தாங்காமல் தங்களைத் தாங்களே கோவிலுக்கு அடிமையாக விற்றுக்கொள்ளும் 12 குடும்பங்களின் கதை செங்கற்பட்டு மாவட்ட கல்வெட்டுக்களில் காணப்படுகிறது.

எண்ணற்ற பெண்கள் பொட்டுக் கட்டுதல் என்கிற பெயரால் கோயில்களில் தேவரடியார்களாக ஆக்கப்பட்டதும் இக்காலத்தில்தான்.

போரில் தோற்றவர்களில் இருந்தும் வரி கட்ட முடியாமல் போன குடியானவ வீடுகளில் இருந்தும் தகுதியான பெண்களை தெரிவு செய்து, உடலில் சூடும் போட்டு, கல்வெட்டுகளில் பெயரையும் பதிவு செய்து சுமார் 400 பேரை பெரிய கோவிலில் தேவரடியார் என்ற தாசி தொழிலில் ஈடுபடுத்தியவன் ராசராசன். மீந்த பெண்களை பெரிய கோவிலின் கொட்டாரத்தில் நெல் குற்ற அனுப்பினான்.//

இவை எல்லாம் ஆதாரபூர்வமான நூல்களில் இருந்து எடுத்தவையாகும். அடிமை முறை அறவே இல்லை என்று எதன் அடிப்படையில் சொன்னீர்கள்?

தருமி said...

//அடிமைகளைப் பற்றி தெரிந்து கொள்ள அன்றைய கால அரபு பழக்கத்தை தெரிந்து கொள்ள வேண்டும். //

நல்லது. ராச ராசன் எப்படி அன்றைய நடைமுறையைக் கடைப்பிடித்தானோ அதுபோல் முகமதுவும் அன்றைய நடைமுறையைப் பின்பற்றினார் என்கிறீர்கள். இருவருக்கும் பெரிய வித்தியாசமில்லை; காலத்தின் கட்டாயத்திற்கு உடன்சென்றார்கள்.

இதைத்தான் நானும் சொல்கிறேன். முகமதுவும் அந்தக் காலத்திற்கு என்னென்ன சரியோ அவைகளைச் சொன்னார். காலங்காலத்திற்கும் அல்லாவின் வார்த்தைகளைச் சொன்னார் என்பது எப்படி சரியாக இருக்கும்.

ஒரு உதாரணம். (கொடுக்கும் உதாரணத்திற்கு மன்னிக்கவும்; ஏற்கெனவே கேட்ட உதாரணம்தான.)
உட்கார்ந்து சிறுநீர் கழி என்று சொன்னாரென்றால் அவங்க ஊருக்கு, அன்னைக்கு அவங்க போட்ட உடைக்கு, அங்க அடிக்கிற காத்துக்கு அது சரி. இன்னைக்கும் அதுதான் சரியா?

தருமி said...

//அப்படி செய்தால் அடிமைகளை விலை கொடுத்து வாங்கியவர்கள் நஷ்டமடைவார்கள்.//

அடடே! பாவம் அந்தப் பணக்காரர்கள்!

suvanappiriyan said...

தருமி!

//ஒரு உதாரணம். (கொடுக்கும் உதாரணத்திற்கு மன்னிக்கவும்; ஏற்கெனவே கேட்ட உதாரணம்தான.)
உட்கார்ந்து சிறுநீர் கழி என்று சொன்னாரென்றால் அவங்க ஊருக்கு, அன்னைக்கு அவங்க போட்ட உடைக்கு, அங்க அடிக்கிற காத்துக்கு அது சரி. இன்னைக்கும் அதுதான் சரியா?//

சிறுநீரை உட்கார்ந்தும் கழிக்கலாம். வசதி இல்லாத போது உடைகளிலும் உடம்பிலும் தெரிக்காமல் நின்று கொண்டும் கழிக்கலாம். ஆனால் சிறு நீர் வந்த இடத்தை தண்ணீர் விட்டு சுத்தம் செய்ய வேண்டும். மலமும், சிறுநீரும் உடலில் இருந்து வெளியேறும் கழிவுகள். இரண்டிலுமே துர் நாற்றம் வீசும். ஒன்றை சுத்தம் செய்து விட்டு மற்றொன்றை விடுவது சரியா? ஆரோக்கியத்துக்கு வழி வகுக்குமா?அதிலும் சுன்னத்(விருத்த சேதனம்) செய்யாதவர்களுக்கு நுனி தோல்களில் சிறு நீர் தேங்கி பல நோய்களுக்கும் வழி வகுக்கிறது. சிறுநீர் கழித்து விட்டு அந்த இடத்தை தண்ணீர் விட்டு சுத்தம் செய்தால் நமது உறுப்பும் சுத்தமாகும். கழிவறையிலும் சிறுநீர் தேங்காது. இதை நமது நாட்டில் அனைவரும் கடைபிடித்தால் பஸ் ஸ்டாண்டுகளில் நீங்கள் மூக்கைப் பிடித்துக் கொண்டு செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. பொது கழிப்பிடத்தில் சிறுநீரில் உப்பு ஒன்றாக சேர்ந்து கழிவறையையே நாஸ்தி பண்ணி விடுகிறது. பெரியவர்கள் கூட நம் நாட்டில் எந்த கூச்சமும் இல்லாமல் சுவரோரத்தில் அடித்து விட:டு நழுவி விடுகிறார்கள். அங்கு கொசுக்களின் தொல்லை. பிறகு காய்ச்சல் ஆஸ்பத்திரி ....இதெல்லாம் தேவைதானா!இந்த சட்டம் எந்த காலத்துக்கும் தேவை என்பதை நீங்கள் உணரவில்லையா?

suvanappiriyan said...

தருமி!

//அடிமைகளைப் பற்றி தெரிந்து கொள்ள அன்றைய கால அரபு பழக்கத்தை தெரிந்து கொள்ள வேண்டும். //

நல்லது. ராச ராசன் எப்படி அன்றைய நடைமுறையைக் கடைப்பிடித்தானோ அதுபோல் முகமதுவும் அன்றைய நடைமுறையைப் பின்பற்றினார் என்கிறீர்கள். இருவருக்கும் பெரிய வித்தியாசமில்லை; காலத்தின் கட்டாயத்திற்கு உடன்சென்றார்கள்.

இதைத்தான் நானும் சொல்கிறேன். முகமதுவும் அந்தக் காலத்திற்கு என்னென்ன சரியோ அவைகளைச் சொன்னார். காலங்காலத்திற்கும் அல்லாவின் வார்த்தைகளைச் சொன்னார் என்பது எப்படி சரியாக இருக்கும்.//

ராஜராஜசோழன் தான் ஆட்சி செய்து வசதியாக இருப்பதற்க்காக இல்லாத அடிமை முறையை நம் நாட்டுக்கு அறிமுகப்படுத்துகிறார். அடிமை முறையை கொண்டு வருகிறார். அதே கால கட்டத்தில் முன்பு இருந்த அடிமை முறையை மத சட்டங்களின் மூலம் படிப்படியாக குறைத்து சில ஆண்டுகளிலேயே அடிமைகள் இல்லாத ஒரு நிலையை முகமது நபி கொண்டு வருகிறார்.

ஒருவர் மதத்தின் பெயரால் அடிமை முறையை கொண்டு வருகிறார். மற்றொருவர் மதத்தின் பெயரால் அடிமை முறையை ஒழிக்கிறார். இரண்டையும் எப்படி ஒன்றாக்குகிறீர்கள்?

தருமி said...

நான் கேட்டதென்ன நீங்கள் சொல்வதென்ன?! நடத்திய ‘சிறுநீர் பாடத்திற்கு’ நன்றி.
//சிறுநீரை உட்கார்ந்தும் கழிக்கலாம். வசதி இல்லாத போது உடைகளிலும் உடம்பிலும் தெரிக்காமல் நின்று கொண்டும் கழிக்கலாம். //
இப்படித்தான் உங்கள் நபி சொல்லியிருக்கிறாரா?

அடுத்த கேள்வியிலும் தும்பை விட்டு விட்டு வாலைப் பிடித்துள்ளீர்கள்.

suvanappiriyan said...

தருமி!

//நான் கேட்டதென்ன நீங்கள் சொல்வதென்ன?! நடத்திய ‘சிறுநீர் பாடத்திற்கு’ நன்றி.
//சிறுநீரை உட்கார்ந்தும் கழிக்கலாம். வசதி இல்லாத போது உடைகளிலும் உடம்பிலும் தெரிக்காமல் நின்று கொண்டும் கழிக்கலாம். //
இப்படித்தான் உங்கள் நபி சொல்லியிருக்கிறாரா?

அடுத்த கேள்வியிலும் தும்பை விட்டு விட்டு வாலைப் பிடித்துள்ளீர்கள்.//

'முகமது நபி அவர்கள் ஒரு சமூகத்தாரின் குப்பை கூளங்கள் போடும் இடத்தில் வந்து நின்று கொணடு சிறுநீர் கழித்தார்கள். பின்னர் தண்ணீர் கொண்டு வரச் சொன்னார்கள். நான் கொண்டு வந்தேன். அதில் முகமது நபி அவர்கள் சுத்தம் செய்து கொண்டார்கள்.'
-அறிவிப்பவர்: ஹீதைபா
நூல்: புகாரி 224

முகமது நபி நின்று கொண்டு சிறுநீர் கழித்திருப்பதை இதிலிருந்து அறிய முடிகிறது. இடம் அசுத்தமாக இருந்து நாம் உட்கார்ந்து சிறுநீர் கழிக்க வசதியும் இல்லாமல் இருந்தால் நின்று கொண்டும் சிறுநீர் கழிக்கலாம் என்பதை அறிகிறோம். இங்கு சுத்தத்தைத்தான் கருத்தில் கொள்ள வேண்டும். நான் பார்த்த வகையில் நின்று கொண்டு சிறுநீர் கழிப்பதை முகமது நபி தடுத்ததாக எங்கும் பார்க்கவில்லை.

suvanappiriyan said...

தருமி!

//நான் கேட்டதென்ன நீங்கள் சொல்வதென்ன?! நடத்திய ‘சிறுநீர் பாடத்திற்கு’ நன்றி.
//சிறுநீரை உட்கார்ந்தும் கழிக்கலாம். வசதி இல்லாத போது உடைகளிலும் உடம்பிலும் தெரிக்காமல் நின்று கொண்டும் கழிக்கலாம். //
இப்படித்தான் உங்கள் நபி சொல்லியிருக்கிறாரா?

அடுத்த கேள்வியிலும் தும்பை விட்டு விட்டு வாலைப் பிடித்துள்ளீர்கள்.//

'முகமது நபி அவர்கள் ஒரு சமூகத்தாரின் குப்பை கூளங்கள் போடும் இடத்தில் வந்து நின்று கொணடு சிறுநீர் கழித்தார்கள். பின்னர் தண்ணீர் கொண்டு வரச் சொன்னார்கள். நான் கொண்டு வந்தேன். அதில் முகமது நபி அவர்கள் சுத்தம் செய்து கொண்டார்கள்.'
-அறிவிப்பவர்: ஹீதைபா
நூல்: புகாரி 224

முகமது நபி நின்று கொண்டு சிறுநீர் கழித்திருப்பதை இதிலிருந்து அறிய முடிகிறது. இடம் அசுத்தமாக இருந்து நாம் உட்கார்ந்து சிறுநீர் கழிக்க வசதியும் இல்லாமல் இருந்தால் நின்று கொண்டும் சிறுநீர் கழிக்கலாம் என்பதை அறிகிறோம். இங்கு சுத்தத்தைத்தான் கருத்தில் கொள்ள வேண்டும். நான் பார்த்த வகையில் நின்று கொண்டு சிறுநீர் கழிப்பதை முகமது நபி தடுத்ததாக எங்கும் பார்க்கவில்லை.

தருமி said...

// நான் பார்த்த வகையில் நின்று கொண்டு சிறுநீர் கழிப்பதை முகமது நபி தடுத்ததாக எங்கும் பார்க்கவில்லை.//

என்ன இப்படி சொல்லீட்டீங்க? நீங்க கொடுத்த மேற்கோளோடு தொடர்புடைய மற்றைய மேற்கோள்களையும் கொடுத்திருக்கலாமே!

“....குர் ஆன் அல்லாஹ்வின் தூதர் அவர்களுக்கு அருளப்பட்ட பின்பு அவர்கள் நின்று கொண்டு சிறுநீர் கழித்தார்கள் என்று யாரேனும் உமக்கு அறிவித்தால் அவரை ந்ம்பி விடாதே. பிரித்துக் காட்டக் கூடிய குர் ஆன் அவர்களுக்கு அருளப்பட்டதிலிருந்து அவர்கள் நின்று கொண்டு சிறுநீர் கழித்ததில்லை. “

நூல்: அஹ்மத் 24604

வால்பையன் said...

முரண்பாடுகளின் மொத்த உருவம் இஸ்லாம்!

:)

அதை இஸ்லாமியர்கள் ஒப்புகொள்ள மறுப்பது பெரிய உதாரணம்!

thiruchchikkaaran said...

அடிமை முறையை செயல்படுத்தியவர் யாராக இருந்தாலும் அதை கண்டிக்கிறோம்.

வரலாற்று நூல்களில் இந்திய சமுதாயத்தில் அடிமை முறை இருந்ததாக எந்த குறிப்பும் இல்லை.

சமூக விரோத சக்திகள் ஆங்காங்கே சிலரை அடிமைகளாக ஆக்கி சில காலம் கொடுமைப்படுத்தி இருக்கலாம். அவர்கள் கமுக்கமாக செயல்பட்டு இருந்திருக்கலாம்.

இப்போது கூட செங்கல் சூளையில் கட்டாயமாக பணியில் அமர்த்தப் பட்ட பலரை மீட்டு வருவது போன்ற செய்திகளை பத்திரிகையில் பார்க்கிறோம். இவை எல்லாம் இந்திய சமூகத்தால் விரும்பப் படாத, அங்கீகரிக்கப் படாத முறைகளே. இந்திரா காந்தி காலத்தில் கூட கொத்தடிமை ஒழிப்பு என்பது இருபதம்ச திட்டத்தில் ஒன்றாக இருந்தது.


இராஜ இராஜ சோழன் யாரையாவது அடிமையாக் ஆக்கி இருந்தால் அதை கண்டிக்கிறோம். ஆனால் அப்படி இருந்ததாக வரலாற்றில் நாம் படிக்கவில்லை.

மேலும் இங்கே சொல்லப் பட்ட தகவலில் ஒரு முரண்பாடு உள்ளது.

//ஏழை குத்தகை விவசாயிகள் சிவ துரோக பட்டத்திலிருந்து தப்புவதற்காகவும் தமது பெண்டிரை ஆலய தாசி வேலைக்கு நேர்ந்து விட்ட கொடுமையும் சோழர் கால பொற்கால ஆட்சியில்தான் நிகழ்ந்தது. //

விவாசாயப் பெருங்குடும்பத்தை சேர்ந்த பெண்டிரை எப்படி தேவதாசியாக்க முடியும்?

தேவதாசி என்பது ஒரு சமூகமாக இருந்தது, அந்த சமூகத்தினர் பாடுவது, நடனமாடுவதுஆகியவற்றில் சிறந்து விளங்கினர்! ஆடல், பாடல் ஆகியவற்றை பயிற்றுவிப்பது போன்றவற்றில் ஈடுபட்டு வந்தனர்.



குடுமபப் பொறுப்புகளைக் கவனித்து வந்த பெண்டிரை அடித்து உதைத்து ஆடு, பாடு என்றால் அவர்களால் செய்ய முடியுமா?


எனவே ஏற்கெனவே ஆடல் பாடல் கலைகளில் சிறந்த பயிற்சி பெற்ற தேவதாசி எனப்படும் சமுதாயத்தை சேர்ந்தவர்களையே கோவிலில் ஆடல், பாடல் கலை நிகழ்ச்சிக்கு இராஜ இராஜன் நியமித்திருக்கவே வாய்ப்பு உள்ளது.

thiruchchikkaaran said...

அமெரிக்காவில் கறுப்பினத்தவரை அடிமைகளாக கடந்த நூற்றாண்டு வரை வைத்திருந்தது அனைவரும் அறிந்ததே. அவர்கள் பட்ட அவலங்களும் அடிமையாக உள்ள அம்மாவிடம் இருந்து குழந்தை பிரிக்கப் பட்டு விற்க்கப் படும் போது அந்த தாயும், தகப்பனும் கண்ணீர் வடிப்பது போன்ற (தமிழில் மொழி பெயர்க்கப் பட்டு இருந்த) பல கதைககளை சிறுவனாக இருந்த போது படித்து இருக்கிறேன்.

அவற்றைப் படிக்கும் போது நெஞ்சப் பிழிவதைப் போன்ற உணர்வு உண்டாகி இருந்தது. அதே போல அடிமையை அல்ல, சொந்த மனைவியையே எந்த வித முறையீடும் செய்ய இயலாமல் தன்னுடைய மகவைப் பிரிய வேண்டும்படியான சட்டங்கள் முறைகள் மனித நேயத்துக்கு ஒப்பா?

thiruchchikkaaran said...

குடிக்கவே தண்ணீர் இல்லாத பாலைவனம், தினமும் குளிக்க வாய்ப்பு இல்லை, வெப்பமோ அதிகம், கழுவாமல் இப்படியே இருந்தால் நோய் உண்டாகும் என யூதர்கள் முதலில் விருத்த சேதன முறையை கடைப் பிடிக்க ஆரம்பித்தனர்.

சிறுவர்கள் விருத்த சேதனம் செய்ய பயந்து அழுததால், கடவுள் செய்ய சொன்னார் என்று சொல்லி அவர்களை சரிக் கட்டினர்.

பாலைவனப்பகுதியில் இருந்த எல்லா சமூகத்தினரும் யூதர்களைப் பார்த்து இதை பின்பற்றத் தொடங்கினார்கள்.


ஜப்பான், ரஷியா, சீனா, இந்தியா, ஐரோப்பா, அமெரிக்கா.... உட்பட பல இடங்களில் யாரும் விருத்த சேதனம் செய்வது இல்லை. அவர்களுக்கு அங்கே ஒரு நோயும் வருவதும் இல்லை.

suvanappiriyan said...

தருமி!

///// நான் பார்த்த வகையில் நின்று கொண்டு சிறுநீர் கழிப்பதை முகமது நபி தடுத்ததாக எங்கும் பார்க்கவில்லை.//

என்ன இப்படி சொல்லீட்டீங்க? நீங்க கொடுத்த மேற்கோளோடு தொடர்புடைய மற்றைய மேற்கோள்களையும் கொடுத்திருக்கலாமே!

“....குர் ஆன் அல்லாஹ்வின் தூதர் அவர்களுக்கு அருளப்பட்ட பின்பு அவர்கள் நின்று கொண்டு சிறுநீர் கழித்தார்கள் என்று யாரேனும் உமக்கு அறிவித்தால் அவரை ந்ம்பி விடாதே. பிரித்துக் காட்டக் கூடிய குர் ஆன் அவர்களுக்கு அருளப்பட்டதிலிருந்து அவர்கள் நின்று கொண்டு சிறுநீர் கழித்ததில்லை. “

நூல்: அஹ்மத் 24604///

அந்த ஹதீதை சொன்னது யார்? முகமது நபியின் மனைவி ஆயிஷா. இல்லறம் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும், விளக்கங்களையும் நாம் அன்னை ஆயிஷாவிடமிருந்து பெற முடியும். ஆண்களைப் பொறுத்தவரை வெளியூர்களுக்கு செல்வது, போர்களில் கலந்து கொள்வது போன்ற பல இடங்களுக்கும் செல்லும் அவசியம் ஏற்படுகிறது. அங்கெல்லாம் பெண்கள் அதிகம் வருவதற்கு சாத்தியம் இல்லை. எனவே வீட்டுக்கு வெளியில் நடக்கும் அனைத்து விபரங்களும் மனைவிக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

சிறுநீர் கழித்த சம்பவம் வீட்டுக்கு வெளியில் நடந்த ஒன்று என்பதால் நபித் தோழரின் வாக்கை நாம் நடைமுறைபடுத்தலாம். மேலும் முகமது நபி நேரிடையாக நின்று கொண்டு சிறுநீர் கழிக்க வேண்டாம் என்று எங்கும் சொல்லவில்லை. அனைத்தையும் ஒன்றாக்கிப் பார்த்து நாமாகத்தான் ஒரு முடிவுக்கு வர வேண்டும் இந்த விஷயத்தில். எனவே இதில் குழப்பிக் கொள்ள ஒன்றும் இல்லை.

saarvaakan said...

இஸ்லாம் அடிமை முறையை ஏற்படுட்த்த வில்லை சரி.
ஆனால் எதிர்க்கவும் இல்லை,இஸ்லாமை முதலில் அதிகமாக ஏற்றுக் கொண்டவர்கள் அடிமைகளே.அதனால் முஸ்லிம் அடிமைகள் பற்றி கொஞ்சம் மென்மையான வசனங்கள் உண்டு.

அரபியர்கள் அடிமை முறை,ஆக்கிரமிப்பு போர்கள்,பல தார மணம்,தற்காலிக திருமணம் போன்றவற்றை மிக இயல்பான பெருமையான விஷயங்களாக எண்ணுகிறார்கள்.நமது தமிழ்(இந்திய) இஸ்லாமியர்களுக்கு இது உறுத்தலான விஷயமாக தெரிவது மண்ணின் கலாச்சாரத்தின் காரணமாகவே.

99% இஸ்லாமிய நாடான சவுதியை எடுத்துக் கொள்வோம்.1962ல் அடிமை முறை சட்டப்படி தடை செய்யப் பட்டது.
இப்போதும் ஒரு சவுதி முல்லா அடிமை முறையை நியாயப் படுத்துகிறார்.

http://www.arabianews.org/english/article.cfm?qid=132&sid=2

வால்பையன் said...

//அந்த ஹதீதை சொன்னது யார்? முகமது நபியின் மனைவி ஆயிஷா. இல்லறம் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும், விளக்கங்களையும் நாம் அன்னை ஆயிஷாவிடமிருந்து பெற முடியும். ஆண்களைப் பொறுத்தவரை வெளியூர்களுக்கு செல்வது, போர்களில் கலந்து கொள்வது போன்ற பல இடங்களுக்கும் செல்லும் அவசியம் ஏற்படுகிறது. அங்கெல்லாம் பெண்கள் அதிகம் வருவதற்கு சாத்தியம் இல்லை. எனவே வீட்டுக்கு வெளியில் நடக்கும் அனைத்து விபரங்களும் மனைவிக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. //


முகமதுவின் மனைவியுடமிருந்து வந்த ஹதிஸே பொய்யுன்னு சொல்றிங்க, பல வருடங்கள் கழித்து தொகுக்கபட்ட குரான் மட்டும் அப்படியே உண்மைங்குறீங்க!

அதுல தெளிவா சொல்லியிருக்கு, அதற்கு முன்னாடி முகமது எப்படிவேணும்னாலும் உச்சா போவாரு, ஆனா குரானுக்கு பிறகு அப்படி இல்லைன்னு!, முகமதுவின் மனைவியை விட மத்தவங்களுக்கு முகமதுவை நிறைய தெரியுமோ!

suvanappiriyan said...

வால்பையன்!

//முகமதுவின் மனைவியுடமிருந்து வந்த ஹதிஸே பொய்யுன்னு சொல்றிங்க,//

நான் சொல்லாத ஒன்றை இப்படி இட்டுக்கட்டி சொல்லலாமா? 'என் பொழப்பே அதுதான்' ன்னு சொல்றீங்களோ!

இருவருமே உண்மையைத்தான் சொல்கிறார்கள். வீட்டை தவிர்த்து வெளி உலகில் நடக்கும் பல காரியங்கள் மனைவிக்கு தெரிய வாய்ப்பில்லை. இதன் அடிப்படையில் வீட்டுக்கு வெளியில் நடந்த இந்த சம்பவத்தில் தோழரின் கூற்றை ஆதாரமாக எடுக்கிறோம். தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் நின்று கொண்டும் சிறுநீர் கழிப்பதற்கு ஆதாரத்திற்க்காகத்தான் அந்த ஹதீதை ஆதாரமாக எடுத்தது.

சரி ...இனி உங்கள் விஷயத்துக்கு வருவோம். உங்கள் தோஸ்த் பகுத்தறிவாதி ராஜனின் கல்யாணம் புரோகிதர் வைத்து, மந்திரம் ஓதி, ஆகம விதிகளின் படி அதுவும் உங்களின் மேற்பார்வையில் :-) நடந்ததாமே!

இனி 'பகுத்தறிவு மிட்டாய் விக்கிறேன்' என்று சொல்லிக் கொண்டு இணையப் பக்கம் வர வேண்டாம். 'ஜாதிகள் உள்ளதடி பாப்பா' என்று இனி பதிவுகள் போடவும். வால் பையன் என்ற பெயரை மாற்றி அம்பி பையன் என்று வைத்துக் கொள்ளவும். :-)

suvanappiriyan said...

சார்வானகன்!

//இஸ்லாம் அடிமை முறையை ஏற்படுட்த்த வில்லை சரி.
ஆனால் எதிர்க்கவும் இல்லை,//

ஒத்துக் கொண்டதற்கு நன்றி! உடனே ஏன் தடை செய்யவில்லை என்பதற்கும் முன்பே காரணங்களை சொல்லியிருக்கிறேன்.
தனிப்பட்ட ஒரு சில அரபுகளின் எண்ணங்கள் எல்லாம் இஸ்லாமிய வட்டத்துக்குள் வராது.

//அரபியர்கள் அடிமை முறை,ஆக்கிரமிப்பு போர்கள்,பல தார மணம்,தற்காலிக திருமணம் போன்றவற்றை மிக இயல்பான பெருமையான விஷயங்களாக எண்ணுகிறார்கள்.நமது தமிழ்(இந்திய) இஸ்லாமியர்களுக்கு இது உறுத்தலான விஷயமாக தெரிவது மண்ணின் கலாச்சாரத்தின் காரணமாகவே.//

உங்கள் கருத்தை ஒத்துக் கொள்கிறேன். பலதார மணம் இஸ்லாத்தில் அனுமதித்திருந்தாலும் 95 சதவீத இஸ்லாமியர்கள் ஒரு மனைவியோடு வாழ்வதைத்தான் பார்க்கிறோம்.

suvanappiriyan said...

திருச்சிக்காரரே!

//குடிக்கவே தண்ணீர் இல்லாத பாலைவனம், தினமும் குளிக்க வாய்ப்பு இல்லை, வெப்பமோ அதிகம், கழுவாமல் இப்படியே இருந்தால் நோய் உண்டாகும் என யூதர்கள் முதலில் விருத்த சேதன முறையை கடைப் பிடிக்க ஆரம்பித்தனர்.//

//ஜப்பான், ரஷியா, சீனா, இந்தியா, ஐரோப்பா, அமெரிக்கா.... உட்பட பல இடங்களில் யாரும் விருத்த சேதனம் செய்வது இல்லை. அவர்களுக்கு அங்கே ஒரு நோயும் வருவதும் இல்லை.//

ஒரு சிறந்த மருத்துவரை அணுகி விருத்த சேதனம் செய்வது உடல் நலத்துக்கு நல்லதா கெட்டதா என்று கேட்டு விட்டு அதன் பிறகு பின்னூட்டம் இட்டிருக்கலாம். இனிமேலாவது ஒரு மருத்துவரிடம் ஆலோசனை கேட்டு எனக்கு பதில் தாருங்கள். நான் காத்திருக்கிறேன்.

//எனவே ஏற்கெனவே ஆடல் பாடல் கலைகளில் சிறந்த பயிற்சி பெற்ற தேவதாசி எனப்படும் சமுதாயத்தை சேர்ந்தவர்களையே கோவிலில் ஆடல், பாடல் கலை நிகழ்ச்சிக்கு இராஜ இராஜன் நியமித்திருக்கவே வாய்ப்பு உள்ளது.//

வரியின் கொடுமையால் கட்ட இயலாதவர்களை கொத்தடிமைகளாக ராஜராஜசோழன் ஆக்கியதை அன்றைய கல்வெட்டுகள் தெளிவாக எடுத்துச் சொல்லியும், மறுக்கிறீர்கள். பொட்டுகட்டுதல், தேவதாசி முறை இருந்ததையும் நியாயப்படுத்தப் போகிறீர்களா?

வால்பையன் said...

//சரி ...இனி உங்கள் விஷயத்துக்கு வருவோம். உங்கள் தோஸ்த் பகுத்தறிவாதி ராஜனின் கல்யாணம் புரோகிதர் வைத்து, மந்திரம் ஓதி, ஆகம விதிகளின் படி அதுவும் உங்களின் மேற்பார்வையில் :-) நடந்ததாமே!

இனி 'பகுத்தறிவு மிட்டாய் விக்கிறேன்' என்று சொல்லிக் கொண்டு இணையப் பக்கம் வர வேண்டாம். 'ஜாதிகள் உள்ளதடி பாப்பா' என்று இனி பதிவுகள் போடவும். வால் பையன் என்ற பெயரை மாற்றி அம்பி பையன் என்று வைத்துக் கொள்ளவும். :-) //


எனது மேற்பார்வையில் நடக்கும் அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லை!

ராஜன் கல்யாணம் பண்ணியது அவர் இஷ்டம் அவர் கஷ்டம், இங்கே விவாதித்து கொண்டிருப்பது நான், பதில் சொல்ல முடியவில்லை என்றால் உங்களுக்கு கக்கா போவதில் பிரச்சனையாமே என முக்குவதை நிறுத்தவும்!, நான் இணைய பக்கம் எப்படி வரணும்னு கிளாஸ் எடுக்குறதுக்கு முன்னால், உலகமகா டுபாக்கூர் குரான் பற்றிய கேள்விகளுக்கு ஒழுங்கா பதில் சொல்லுங்க!

வால்பையன் said...

பதிவின் மையம் என்ன?

மதரீதியாக ஆண்ட மன்னர்கள் மனிதம் போற்றவில்லை என்பது, அதற்கு சப்பை கட்டு கட்டிகொண்டிருக்கும் நீங்கள் பேலன்ஸாக நிற்க வாய்ப்பளிக்கும் ஒரே ஆள் திருச்சிக்காரன், ஏனென்றால் அவர் இந்துமதத்திற்கு வக்காலத்து வாங்கி கொண்டிருக்கிறார்!

நான் எதற்காவது வக்காலத்து வாங்கினால் அப்பொழுது அதை பற்றி பேசலாம், இப்போ கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் ப்ளீஸ்!

வால்பையன் said...

ஹதீஸில் பல வசனங்கள் நேரடியாக முகமதுவின் நண்பர்களிடமிருந்து வந்தது அல்ல, நண்பரின் நண்பன் அல்லது நண்பரின் மகன் என்று பல சிக்கல்கள்!

குரான் கூட அப்படி தான் தொகுக்கப்பட்டிருக்க வேண்டும், தற்பொழுது சரிபார்க்க வழியில்லாமல் மூலத்தை அளித்துவிட்டார்கள் மூலம் வந்த மதவாதிகள்!

எனக்கு காபி,டீ குடிக்கும் பழக்கமில்லை, அது எனக்கு பிடிக்காது, அதனால் அதை வேண்டாம் என்பேன், அதுபோல் முகமதுவிற்கு நின்னுட்டு உச்சா போக பிடிக்காதுன்னு மொத்த இஸ்லாமியரும் கடைபிடிக்க வேண்டும் உங்களுக்கு!

முகமது தன் தலமை பதவியை மிக மிக தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டது அப்பட்டமாக குரான் வசனங்களிலிருந்தே தெரிகிறது, முக்கியமாக அவரது பலதாரமணத்தில்!

ஆயினும் சப்பைகட்டு கட்டுவது ஒரே ஒரு விசயத்திற்காக தான், அது உங்கள் பெயரிலேயே சொல்லுது, உங்களுக்கெல்லாம் சொர்க்கம் வேண்டும்!

அப்படி ஒன்னு இருந்தாலும் இப்படி கேனத்தனமாக பல தூதர்களையும், வேதங்களையும் அனுப்பிய முட்டாள்கடவுள் படைத்த சொர்க்கம் எனக்கு வேண்டும்! ஏனென்றால் அதுவும் கேனத்தனமாக தான் இருக்கும்!

thiruchchikkaaran said...

இராஜ இராஜ சோழன் குடும்ப பெண்களை கொத்தடிமை ஆக்கியதாகவோ, அல்லது ஆண்களை கொத்தடிமை ஆக்கியதாகவோ எந்தக் கல்வெட்டில் இருக்கிறது என்பதை எடுத்துக் காட்டினால் நாங்கள் தெரிந்து கொள்வோம்.

அவரங்கஜேபே தான் யாருக்கும் நல்லது செய்யவில்லை என்றும் மன்னிப்புக் கிடைக்க தகுதி இல்லாத பாவி என்று தன்னைப் பற்றி சொன்னபோதும், எல்லாம் ஓக்கேதான், ஏழை திம்மிக்ள மேல் கட்டாய கொடுங்கோல் மத வரி போட்டது சரிதான் என்று நியாயப் படுத்தியது போல நாங்கள் நியாயப் படுத்த முயல மாட்டோம்.

ஆனால் அந்த தளத்தில் எழுதி இருக்கிறது, இந்த தளத்தில் எழுதி இருக்கிறது என்று இன்று இணைய தளத்தில் எழுதுவதை கல்வெட்டாக கருதிக் கொள்ள சொல்லி எடுத்துக்காட்ட‌ வேண்டாம்



பெண்களை அடிமைப் படுத்தும் முறைகளை , கொச்சைப் படுத்தும், துன்பப் படுத்தும் முறைகளை , அவர்களை போகப் பொருளாக கருதி , வேண்டும் போது உபயோகிப்போம், வேண்டாத போது விரட்டி விடுவோம் என்பது போன்ற முறைகளை ஒப்ப இயலாது.


இசை போன்ற‌ க‌லைக‌ளில் ஈடுப‌டுவ‌து ம‌ன‌க் குவிப்பை, க‌ட்டுப் பாட்டை உருவாக்கி ஒருவ‌ரை ஆன்மீக‌ ரீதியாக‌ உய‌ர்த்த‌ உத‌வுகிற‌து. அவ்வ‌கையில் ம‌க்க‌ளின் ம‌ன‌திலே ஆன்மீக‌ த்தை உருவாக்க‌வே இசை, ந‌ட‌ன‌ம் போன்ற‌வை. அப்ப‌ணியில் ஈடுப‌ட்ட‌ தேவ‌ன‌டிமை என‌ப் ப‌ட்ட‌வ‌ர்க‌ளை த‌ன‌க்கு அடிமையாக்கி சில‌ர் வாழ்ந்த‌து த‌வ‌று என்ப‌தை தெளிவாக‌ சொல்லுகிரோம்.

ஒழுக்க‌ம் விழுப்ப‌ம் த‌ர‌லான் என்ப‌தெ இந்திய‌ ச‌முதாய‌ப் ப‌ண்பாடு.

thiruchchikkaaran said...

இராஜ இராஜ சோழன் குடும்ப பெண்களை கொத்தடிமை ஆக்கியதாகவோ, அல்லது ஆண்களை கொத்தடிமை ஆக்கியதாகவோ எந்தக் கல்வெட்டில் இருக்கிறது என்பதை எடுத்துக் காட்டினால் நாங்கள் தெரிந்து கொள்வோம்.

அவரங்கஜேபே தான் யாருக்கும் நல்லது செய்யவில்லை என்றும் மன்னிப்புக் கிடைக்க தகுதி இல்லாத பாவி என்று தன்னைப் பற்றி சொன்னபோதும், எல்லாம் ஓக்கேதான், ஏழை திம்மிக்ள மேல் கட்டாய கொடுங்கோல் மத வரி போட்டது சரிதான் என்று நியாயப் படுத்தியது போல நாங்கள் நியாயப் படுத்த முயல மாட்டோம்.

ஆனால் அந்த தளத்தில் எழுதி இருக்கிறது, இந்த தளத்தில் எழுதி இருக்கிறது என்று இன்று இணைய தளத்தில் எழுதுவதை கல்வெட்டாக கருதிக் கொள்ள சொல்லி எடுத்துக்காட்ட‌ வேண்டாம்



பெண்களை அடிமைப் படுத்தும் முறைகளை , கொச்சைப் படுத்தும், துன்பப் படுத்தும் முறைகளை , அவர்களை போகப் பொருளாக கருதி , வேண்டும் போது உபயோகிப்போம், வேண்டாத போது விரட்டி விடுவோம் என்பது போன்ற முறைகளை ஒப்ப இயலாது.


இசை போன்ற‌ க‌லைக‌ளில் ஈடுப‌டுவ‌து ம‌ன‌க் குவிப்பை, க‌ட்டுப் பாட்டை உருவாக்கி ஒருவ‌ரை ஆன்மீக‌ ரீதியாக‌ உய‌ர்த்த‌ உத‌வுகிற‌து. அவ்வ‌கையில் ம‌க்க‌ளின் ம‌ன‌திலே ஆன்மீக‌ த்தை உருவாக்க‌வே இசை, ந‌ட‌ன‌ம் போன்ற‌வை. அப்ப‌ணியில் ஈடுப‌ட்ட‌ தேவ‌ன‌டிமை என‌ப் ப‌ட்ட‌வ‌ர்க‌ளை த‌ன‌க்கு அடிமையாக்கி சில‌ர் வாழ்ந்த‌து த‌வ‌று என்ப‌தை தெளிவாக‌ சொல்லுகிரோம்.

ஒழுக்க‌ம் விழுப்ப‌ம் த‌ர‌லான் என்ப‌தெ இந்திய‌ ச‌முதாய‌ப் ப‌ண்பாடு.

thiruchchikkaaran said...

அன்புக்குரிய சுவனப் பிரியன்,

இந்தியாவில் உள்ள எல்லா தொலைக் காட்சி நிகழ்ச்சிகளிலும் வாரந்தோறும் மிகச் சிறந்த மருத்துவர்கள் வந்து,பல மருத்தவக் குறிப்புக்களை தருகின்றனர்.

கொழுப்பு சத்துள்ள உணவுகளை குறைவாக உண்ணுங்கள், பச்சைக் காய்கறிகளை உண்ணுங்கள், நார்ச்சத்து உள்ள உணவுகளை உண்ணுங்கள், உடல் பயிற்சி செய்யுங்கள்.... இப்படி பல நலக் குறிப்புகளை தருகின்றனர்

எந்த ஒரு மருத்துவராவது விருத்த சேதனம் செய்து கொள்ளுங்கள் என்று அறிவுரை சொல்லி இருக்கிறார்களா?


எந்த ஒரு மருத்துவராவது விருத்த சேதனம் செய்து கொள்ளுங்கள் என்று அறிவுரை சொல்லி இருக்கிறார்களா?


அப்படி உண்மையிலேயே அதனால் பலன் இருந்தால் ஆர்க்டிக் முதல், அண்டார்டிகா வரை வாழும் இத்தனை மக்கள் அதை செய்து கொள்ளாமல் இருப்பார்களா? சற்று சிந்தித்துப் பாருங்கள்.

suvanappiriyan said...

வால்பையன்!

//ராஜன் கல்யாணம் பண்ணியது அவர் இஷ்டம் அவர் கஷ்டம், இங்கே விவாதித்து கொண்டிருப்பது நான்,//

மற்றவர்கள் ஆகம விதிப்படி திருமணம் புரிந்த போது நக்கலும் கிண்டலும் பண்ணிவிட்டு இப்பொழுது 'ஙே' என்று மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தத்தளிக்கும் வால் பையனைப் பார்த்தால் நமக்கெல்லாம் ஒரு ஒரு காமெடி பீஸாக தெரியவில்லையா!

//குரான் பற்றிய கேள்விகளுக்கு ஒழுங்கா பதில் சொல்லுங்க!//

நான் பத்து நாட்களுக்கு முன்பு உலகம் உருவானதற்கு அறிவியல் ரீதியான நிரூபணம், காரணம் கேட்டிருந்தேனே! இதுவரை பதில் இல்லையே! குர்ஆன் சம்பந்தமாக என்னிடம் கேட்ட கேள்விகளுக்கு நான் முன்பே பதில் அளித்து விட்டேன். உங்கள் பதில்தான் இன்னும் பாக்கி இருக்கிறது.

உங்களின்பல பின்னூட்டங்களையும் படித்தால் எனக்கு ஒரு குறள் ஞாபகம் வருகிறது.

பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்.

வால்பையன் said...

//மற்றவர்கள் ஆகம விதிப்படி திருமணம் புரிந்த போது நக்கலும் கிண்டலும் பண்ணிவிட்டு இப்பொழுது 'ஙே' என்று மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தத்தளிக்கும் வால் பையனைப் பார்த்தால் நமக்கெல்லாம் ஒரு ஒரு காமெடி பீஸாக தெரியவில்லையா!//


நான் யாரை விமர்சிக்கனும்னு நீங்க தான் லிஸ்ட் கொடுப்பிங்களா நாட்டாமை, உங்களுக்கு அவரை விமர்சிக்க தகுதி இல்லைன்னு நான் சொன்னேனா!? நான் முளிச்சிகிட்டு இல்லையே அப்பவும் விவாதிச்சிகிட்டு தானே இருந்தேன்.

வால்பையன் said...

//நான் பத்து நாட்களுக்கு முன்பு உலகம் உருவானதற்கு அறிவியல் ரீதியான நிரூபணம், காரணம் கேட்டிருந்தேனே! இதுவரை பதில் இல்லையே! குர்ஆன் சம்பந்தமாக என்னிடம் கேட்ட கேள்விகளுக்கு நான் முன்பே பதில் அளித்து விட்டேன். உங்கள் பதில்தான் இன்னும் பாக்கி இருக்கிறது. //

ஆகுக என்று சொன்னால் உடனே ஆவது போல் கட்டுரை எழுதுக என்றால் உடனே எழுத முடியாது அண்ணே!

நான் உண்மையிலேயே ஒன்பதாவது வரை தான் படித்திருக்கிறேன், எனக்கு ஆங்கிலம் தகராறு, அதை புரிந்து அல்லது யாரையாவது வைத்து மொழிபெயர்த்து அதை தர்க்கரீதியாக விவாதித்து, அதன் அதிகபட்ச சாத்தியகூறுகளை ஆராய்ந்து பின் கட்டுரை எழுத எனக்கு நேரம் வேண்டாமா!?

எப்படியும் நான் எழுதபோவதை நீங்கள் ஒத்துக்கொள்ள போவதில்லை என்பது வேறு விசயம், நான் எழுதுவது உங்களுக்காக இல்லை என்பதால் நான் முழுமையாக எழுதவே முற்படுவேன்!

வால்பையன் said...

//பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்.//


ஹாஹாஹாஹா!

இங்கே சர்வே எடுப்போமா? இது இங்கே யாருக்கு பொருத்தம்ன்னு!

வால்பையன் said...

//எந்த ஒரு மருத்துவராவது விருத்த சேதனம் செய்து கொள்ளுங்கள் என்று அறிவுரை சொல்லி இருக்கிறார்களா?


அப்படி உண்மையிலேயே அதனால் பலன் இருந்தால் ஆர்க்டிக் முதல், அண்டார்டிகா வரை வாழும் இத்தனை மக்கள் அதை செய்து கொள்ளாமல் இருப்பார்களா? சற்று சிந்தித்துப் பாருங்கள். //


மனிதனை படைத்த கடவுள் தான் விலங்குகளையும் படைத்தான் என்றால் ஏன் மனிதனுக்கு மட்டும் குஞ்சை வெட்டனும்!

வெட்டுன குஞ்சு தான் சேஃப் என்றால் எல்லாம் வல்ல (முட்டாக்)கடவுள் ஏன் வெட்டின குஞ்சோட மனிதனை படைக்கவில்லை!

அது முடியாதென்றால் அந்த (முட்டாக்)கடவுள் எப்படி எல்லாம் வல்ல கடவுள் ஆக முடியும்!?

அவன் இஷ்டப்படி தான் செய்வான் என்றால், அவனிடம் அடிமையாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்கிறேன்! அவன் சகல சக்தியுள்ளவன் என்றால் என்னிடம் மோதி வெற்றி பெறட்டும் என்கிறேன்!, அது இதுவரை முடியாத பட்சத்தில் என்னை பொறுத்தவரை கடவுள் என் குஞ்சு மசுரை விட கேவலம் தான்!

thiruchchikkaaran said...

அன்புக்குரிய வால் பையன் அவர்களே,

நான் இந்து மதத்திற்கு வக்காலத்து வாங்குவதாக எழுதி இருக்கிறீர்கள்.

திரு. சுவனப் பிரியன் கட்டாய மத வரிக் கொடுங்கோன்மையை நியாயம் போலக் காட்டப் பார்க்கிறார். அது முடியாத போகவே கவனத்தை திசை திருப்பும் விதமாக கோவில்,அர்ச்சகர் என்று இழுக்கிறார்.

அதோடு இந்தியாவை இது வரை ஆண்ட மன்னர்கள் எல்லோரும் மோசமானவர்கள், அவர்களை விட நம்பிக்கையாளராக உள்ள மன்னர்கள் ரொம்ப நல்லவர்கள், அவரங்கஜேபும் ரொம்ப நல்லவர், ஜிசியா வரியைக் கட்டிட்டு போக வேண்டியதுதானே என்று சொல்வதாக இருக்கிறது அவரது எழுத்து. இதை நான் எதற்கு ஒப்ப வேண்டும்.


உலக வரலாற்றில் அசோகரைப் போல ஒரு மன்னன் யாராவது உண்டா மிகச் சிறந்த வீரன், போர்க் களத்தில் இறங்கி சண்டை இட்டால் எதிரிகள் நடுங்குவர்.

இன்னொரு அலேக்சாண்டராகவோ, செங்கிஸ்கானாகவோ ஆகி இருக்க கூடியவர். ஆனால் அவரது அடி மனதில் இருந்த நியாயமும், கருணையும், பண்பும் அவரது ஆதிக்க ஆசையை அடக்கி மேல் வந்து விட்டது. இந்திய சமுதாயத்தின் சரியான பண்புகளை அவர் வெளிப்படுத்தி இருக்கிறார்.

அக்பரின் மனதிலும் இந்திய சமுதாயத்தின் சிந்தனைகள் தாக்கத்தை ஏற்படுத்தியதால் அவர் மதச் சகிப்புத் தன்மை உள்ளவராக மத நல்லிணக்க வாதியாகி விட்டார். அக்பர் சிறந்த பாரட்டுக்குரியவரே.

அசோகருக்கு, அக்பருக்கு, காந்திக்கு ... நான் வக்காலத்து வாங்குகிறேன்.

உலகிலே நியாயத்தையும், நீதியையும்,சமரசத்தையும், சமத்துவத்தையும்,மத சகிப்புத் தன்மையையும், மத நல்லிணக்கத்தையும் மனதில் கொண்ட ஒவ்வொரு மனிதருக்கும் நான் வக்காலத்து வாங்குகிறேன்!

வெறிக் கோட்பாட்டை விடுத்து கருணையை மனதில் வைத்தவருக்கு நான் வக்காலத்து வாங்குகிறேன்!

மற்றவரின் மனதில் அச்சத்தை உருவாகிய அசோகரை ஆதரிக்கவில்லை- மனம் மாறி தன் மனதில் கருணையை வைத்த அசோகரின் செயலை ஆதரிக்கிறோம்!கலிங்கப் போருக்கு பிந்தைய அசோகரை ஆதரிக்கிறோம்!

thiruchchikkaaran said...

உலகம் எப்படி தோன்றியது என்று அறிவியல் ரீதியாக ஆராய்ந்து கொண்டுதானே இருக்கிறோம்.

பகுத்தறிவு ஆராய்ச்சியாளர் ஆராய்ச்சி அடிப்படையில் அறிந்து கொண்ட உண்மைகளைத் தான் தர முடியும் - ஏதோ ஒன்றை எழுதி அப்படியே ஒத்துக் கொள் என்று சொல்ல முடியாது.

அறிவியல் படிப்படியாக வளர்ந்து பல உண்மைகளை சொல்லி வருகிறது. மின் காந்தப் புலத்தை மின் கடத்தி குறுக்கு வெட்டாக வெட்டி சென்றால் மின்னோட்டம் உண்டாகிறது என்பதை நிரூபிக்க முடியும். எத்தனை முறை வேண்டுமானாலும் நிரூபிக்க முடியும். கடவுள் இருப்பதற்க்கான சரி பார்த்துக் கொள்ளக் கூடிய நிரூபணத்தை தர இயலுமா?

அறிவியல் மக்களுக்கு உதவக் கூடிய நன்மை தந்து இருக்கிறது, பென்சிலின், இன்சுலின் இவற்றை எல்லாம் ஆராய்ந்து கண்டு பிடித்து உள்ளனர். எந்த மதத்தின் புனித நூலில் இவை எல்லாம் சொல்லப் பட்டதா. மக்கள் மனதில் அமைதியையாவது பரப்பினீர்களா? வெறுப்புணர்ச்சியை வெறித் தனத்தை, வன்முறையை, அடாவடியைபரப்பி இரத்த ஆறு ஓட விட்டது தானே நடந்தது! இணையத்தில் இப்படி எழுதக் கூடாது , அப்படி எழுதக் கூடாது என்று மிரட்டல் வேறு. எவ்வளவு கோவம், எவ்வளவு ஆத்திரம். தனி மனித தாக்குதலில் இறங்குகிறார்கள். இத்தனைக்கும் இவர்களுடைய வழி பாட்டு முறைகளை வெறுக்கவோ, கண்டிக்கவோ, தடுக்கவோ இல்லை. அமைதியா கும்பிட்டுக்கங்க என்கிறோம். ஆனால் மத அடிப்படையில் கட்டாயப் படுத்து வரி விதிக்க கூடாது. எல்லோருக்கும் ஒரே மாறி வரை போடணும் என்கிறோம். அதற்க்கு இவ்வளவு கோவமா?

thiruchchikkaaran said...

உலகம் எப்படி தோன்றியது என்று அறிவியல் ரீதியாக ஆராய்ந்து கொண்டுதானே இருக்கிறோம்.

பகுத்தறிவு ஆராய்ச்சியாளர் ஆராய்ச்சி அடிப்படையில் அறிந்து கொண்ட உண்மைகளைத் தான் தர முடியும் - ஏதோ ஒன்றை எழுதி அப்படியே ஒத்துக் கொள் என்று சொல்ல முடியாது.

அறிவியல் படிப்படியாக வளர்ந்து பல உண்மைகளை சொல்லி வருகிறது. மின் காந்தப் புலத்தை மின் கடத்தி குறுக்கு வெட்டாக வெட்டி சென்றால் மின்னோட்டம் உண்டாகிறது என்பதை நிரூபிக்க முடியும். எத்தனை முறை வேண்டுமானாலும் நிரூபிக்க முடியும். கடவுள் இருப்பதற்க்கான சரி பார்த்துக் கொள்ளக் கூடிய நிரூபணத்தை தர இயலுமா?

அறிவியல் மக்களுக்கு உதவக் கூடிய நன்மை தந்து இருக்கிறது, பென்சிலின், இன்சுலின் இவற்றை எல்லாம் ஆராய்ந்து கண்டு பிடித்து உள்ளனர். எந்த மதத்தின் புனித நூலில் இவை எல்லாம் சொல்லப் பட்டதா. மக்கள் மனதில் அமைதியையாவது பரப்பினீர்களா? வெறுப்புணர்ச்சியை வெறித் தனத்தை, வன்முறையை, அடாவடியை பரப்பி இரத்த ஆறு ஓட விட்டது தானே நடந்தது! இணையத்தில் இப்படி எழுதக் கூடாது , அப்படி எழுதக் கூடாது என்று மிரட்டல் வேறு. எவ்வளவு கோவம், எவ்வளவு ஆத்திரம். தனி மனித தாக்குதலில் இறங்குகிறார்கள். இத்தனைக்கும் இவர்களுடைய வழி பாட்டு முறைகளை வெறுக்கவோ, கண்டிக்கவோ, தடுக்கவோ இல்லை. அமைதியா கும்பிட்டுக்கங்க என்கிறோம். ஆனால் மத அடிப்படையில் கட்டாயப் படுத்து வரி விதிக்க கூடாது. எல்லோருக்கும் ஒரே மாறி வரிபோடணும் என்கிறோம். அதற்க்கு இவ்வளவு கோவமா?

NO said...

// சரி ...இனி உங்கள் விஷயத்துக்கு வருவோம். உங்கள் தோஸ்த் பகுத்தறிவாதி ராஜனின் கல்யாணம் புரோகிதர் வைத்து, மந்திரம் ஓதி, ஆகம விதிகளின் படி அதுவும் உங்களின் மேற்பார்வையில் :-) நடந்ததாமே! //
//இனி 'பகுத்தறிவு மிட்டாய் விக்கிறேன்' என்று சொல்லிக் கொண்டு இணையப் பக்கம் வர வேண்டாம். 'ஜாதிகள் உள்ளதடி பாப்பா' என்று இனி பதிவுகள் போடவும். வால் பையன் என்ற பெயரை மாற்றி அம்பி பையன் என்று வைத்துக் கொள்ளவும். :-)//

கற்பனை கதைகளையும் இட்டுக்கட்டிய சரித்திரங்களையும் கையில் எடுத்துக்கொண்டு உலகில் மற்றும் இந்த பிரபஞ்சத்தில் உள்ள அத்துணை பற்றியும் எங்கள் சரித்திர நாயகர்கள் எழுதி வைத்து விட்டார்கள் என்று கூப்பாடு போட்டு, அது போதாதென்று மாற்று மதக்காரர்களை பார்த்து நீங்கள் கல்லை கும்ம்புடிகிரீர்கள், கற்பனைகளை கும்புடிகிரீர்கள் எண்டு வாய்க்கு வந்தபடி வசைபாடுவதைவிட, மேலே சொன்ன காரியங்கள் ஒன்றும் பாவமில்லை.

மேலும், பகுத்தறிவு மிட்டாயை உங்களைப்போன்ற மத வெறியர்கள் விர்ப்பதைக்காட்டிலும் எந்த கடவுளுமே இல்லை என்று சொல்லுபவர்கள் விற்பது எந்த தவறுமில்லை! இதை எல்லாம் விட கொடுமை, மற்ற மதங்களை பிற்போக்கு சாத்தான், அசிங்கம், கேவலம் என்று வசை பாடும் நீங்களும் உங்கள் மத வெறி ஜிகாதி கும்பல்களும், நீங்கள் திட்டுவதை விட மிக்க பிற்போக்கான, நம்பகத்தன்மை சிறிதும் இல்லாத, இரத்த கரை படிந்த சரித்திரத்தை கொண்ட, எந்த ஒரு சகிப்புத்தன்மையும் இல்லாத ஒரு அரேபியா காலாச்சார ஏகாதிபத்தியத்தை "முற்போக்கு" மானுடம்" "சமநீதி" என்று பித்தாலாட்ட பேச்சு பேசி கூவி விற்பது!!!!

மாற்றனை திட்டுவதற்கு முன் உன்னைப்பற்றி எண்ணிப்பார் என்பார்கள். அதே போல மாற்றானின் நம்பிக்கைகளை கேவலமாக பேசுவதற்குமுன், உங்களின் நம்பிக்கைகள் எவ்வளவு மூடத்தனமானவை என்று எண்ணிப்பார்க்கவேண்டும்!

சகல வித கடவுள்களையும், மதங்களையும், தூதர்களையும், புனித புத்தகங்களையும் விமர்சிக்கும் அருகதை, இவை அனைத்தும் இல்லவே இல்லை, அனைத்தும் மூட நம்பிக்கைகளே என்று சொல்லுபவருக்குதான் உண்டு. அதை விட்டு, அதே அளவிலான மூட நம்பிக்கைகளையும் பிதற்றல்களையும் உள்ளே வைத்துக்கொண்டு, அதுவே உலக நீதி, அன்றே நாங்கள் சொல்லிவிட்டோம், ஆதலால் நீங்கள் எல்லாம் பொய்யர்கள், நாங்களே நல்லவர்கள், எங்கள் தூதரே உண்மை உங்கள் ஆட்கள் எல்லாம் பொய் என்று சற்றும் கவலை இல்லாமல் உளரும் மத வெறியர்களின் கூச்சல், ஒரு பைத்தியம் நாந்தான் நாட்டுக்கு ராஜா மத்தவனெல்லாம் எனக்கு தூக்கவேண்டும் கூஜா என்று தினமும் கத்துவது போலதான்!!!!!

அதை போன்ற பைத்தியங்களை நாம் அடையாளம் கண்டு கொள்ளுவது எளிது. நாலு ஊசி, நல்ல மருந்து, நல்ல மருத்துவ கவனிப்பு இருந்தால் அவர்களையும் ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வரலாம். ஆனால் ஜிகாதி மத வெறி பைத்தியங்களை என்ன செய்தாலும் மாறமாட்டார்கள்!!! அவர்கள் சொல்லுவதையே சொல்லுவார்கள். மற்ற எல்லோரையும் பழிப்பார்கள்!! ஆட்சி அதிகாரம் கையில் கிடைத்தால் பல புதிய மத வெறி பைத்தியங்களை உருவாக்குவார்கள், மற்று எண்ணமுள்ளவர்களை கூண்டோடு ஒழிப்பார்கள்!!!

இவர்களைப்போன்றவர்களால் clash of the civilizations ஒரு கட்டத்தில் உண்மையாகவே நடக்கக்கூடும் என்று தோன்றுகிறது!

NO said...

நண்பர் திரு சுவன்னப்பிரியன் போன்ற பகுத்தறிவு உள்ள வகாபி மத விரும்பிகள் சந்தோஷம் படும்படியான விடயங்கள் பல இஸ்லாமிய நாடுகளில் நடந்து வருகின்றது. அதாவது, இவரைப்போலவே ஜிஹாதி மத வெறியர்களை சிறு வயது முதலே வளர்க்க உதவும் பாட திட்டங்கள் பல இஸ்லாமிய நாடுகளில் சாதரான விடயம். நாம் இந்திய ஜிகாதி நண்பற்களைஎல்லாம் தூக்கி சாப்பிடும்படியான மத காவலர்களை பல இஸ்லாமியா நாடுகள் உருவாக்கி கொண்டு வருகிறது.

இதை என் இங்கு சொல்லுகின்றேன் என்றால், இவர்களின், அதாவது வகாபிகளின், இந்த அதி தீவிர தன் மத உயர்வு நோக்கு, மற்றும் மாற்று மதங்களில் மேல் உள்ள தீராத வெறுப்பு மற்றும் பகை போன்றவற்றை சுட்டிக்காட்டத்தான்!

வகாபிகள் மானுடத்தை பற்றி பேசி நான் சமூக நீதி கொடுக்கிறேன் என்று கூறுவது பொய் பித்தலாட்டத்தின் உச்சகட்டம். ஏதோ இவர்களின் சலாபி / வகாபி மதம் ஒரு சமத்துவத்தை கொடுப்பதை போன்று ஒரு தோற்றத்தை வரையப்பார்க்கிரார்கள். ஆனால் உண்மையாக கொடுப்பதோ ஒரு வெறுப்பு கவசம் மட்டுமே. இவர்கள் மானுட விரும்பிகள் இல்லை. இவர்கள் வெறுப்புவியாபாரிகள். இஸ்லாம் பெயரை வைத்துக்கொண்டு பித்தலாட்டம் ஆடுபவர்கள். பிற கலாச்சாரங்களை வெறுத்து, பழித்து பேசி, அரேபியையவை மட்டுமே தங்களின் ஒரே ஊற்றாக நினைப்பவர்கள்.

அப்படி பட்ட அரேபியா நாடுகளில் உள்ள பள்ளிகளில் சிறுவர்களுக்கு செய்யப்படும் போதனைகளின் சாம்பிள் சிலதை பார்ப்போம்:-

.............................. some passages from a Kuwaiti and Saudi school textbook taught at the first secondary grade. Here is an English translation of passages from the book, "Jurisprudence", page 38:

Fourth grade textbook on Monotheism and Religion instructs students:
"Any other religion other than Islam is invalid (false)." (P. 29 )

"Hate (yakrah) the polytheists and the infidels" as a requirement of "true faith." (P. 86)



5th Grade. Book: Monotheism and Religion:

*"Every religion other than Islam is invalid." (P. 33)

*"It is not permitted to be a loyal to non-Muslims, and to those who oppose God and His Prophet." (P. 14)

*"A Muslim, even if he lives far away, is your brother in religion. Someone who opposes God, even if he is your brother by family tie, is your enemy in religion." (P. 73)

*"Muslims will triumph because they are right. He who is right is always victorious, even if most people are against him." (P. 117)

"A woman who shows in public any part of her body except that of her eyes will be punished by hellfire by almighty Allah." (P. 194) Grade 5:

Teacher's Manual:

Teach that after their death, non-Muslims will be sent to hell. (P. 30)

Quiz: Is it permissible to love the Jews and Christians? Of course no. Explain why. (P. 15) Teacher's Manual:

Grade 8:

*Command Muslims to "hate" Christians, Jews, polytheists and other "unbelievers," including non-devout Muslims." (P. 14)

*Instruct students not to "greet," "befriend," "imitate," "show loyalty to," "be courteous to", or "respect" non-believers. (P. 24)

NO said...

Teacher's Manual:

Grade 9:

*Define jihad to include "wrestling with the infidels by calling them to the faith and battling against them," (P. 25) and assert that the spread of Islam through jihad is a "religious obligation." (P. 26) [the word qital, translated here as "battle," is derived from the verb qatala, "to kill," and is virtually never used metaphorically.]

Teachers Manual Grade 10:

*Cite a selective teaching of violence against Jews, while in the same lesson, ignoring the passages of the Quran and hadeeths [narratives of the life of the Prophet, Peace be upon Him, that counsel tolerance. (P. 28)

*Teach the Protocols of the Elders of Zion as historical fact and relate modern events to it. (P. 29)

*Discuss Jews in violent terms, blaming them for virtually all the "subversion" and wars of the modern world. (P. 30)

*"Give examples of false religions, like Judaism, Christianity, paganism, etc." (P. 66)

*"Explain that when someone dies outside of Islam, hellfire is his fate." (P. 67)

By the way, over 20 Saudi schools, each chaired by the local ambassador from Saudi Arabia, are located throughout the world, in Bonn, Berlin, Washington, Algiers, Ankara, Beijing, Djibouti, Islamabad, Istanbul, Jakarta, Karachi, Kuala Lumpur, London, Madrid, Moscow, Paris, Rabat, Rome, and Tunis.
In fact, you can find some of the above stuff in many school textbooks in all the Arab Gulf countries, Egypt, Kuwait, The United Arab Emirates, Qatar, and Jordan. Fourteen-year-old boys' and girls' brains are stuffed with intolerance, animosity towards other religions and their followers.

மேலே சொன்னதுபோல, இவை எல்லாம் ஒரு சாம்பிள்தான்.

சௌதி மசூதிகளில், கிருத்துவத்தை பற்றியும், யூதம் பற்றியும் மிக கேவலமான சொற்பொழிவு ஆற்றுவார்கள். நம்ம ஊரு சலாபிகளை கேட்டால், நாங்கள் இயேசுவை மதிக்கிறோம் என்பார்கள். ஆனால் சத்தம் போட்டு கும்பல் கூட்டி சௌதியில் திட்டுவார்கள். இந்து மதத்தை பற்றி ஒரு நாள் மிக கேவலமாக பேசியதை அங்கே இருந்த நண்பர் ஒருவர் சொன்னார். மிக தரமிழந்த கிண்டல் மற்றும் கேலி. இந்த அழகில் அந்த ஊரில் கிட்டத்தட்ட பத்தாயிரம் மேலான இந்துக்கள் வேலை செய்து வருகிறார்கள். ஆனால் மைனாரிட்டி பற்றி இவர்களுக்கெல்லாம் என்ன கவலை. அதே இவர்கள் மைனாரிட்டியாக இருக்கும் இடத்தில் மைக் போட்டு எங்கே வேண்டுமானாலும் கத்துவேன், ஏனென்றால் அதுதான் மைனாரிட்டிக்கு நீங்கள் கொடுக்கவேண்டிய உரிமை என்பார்கள்.

சௌதியில் உட்கார்ந்திருக்கும் இந்தியாவை சேர்ந்த பல பல இஸ்லாமிய நண்பர்கள், அங்கே இருக்கும், பிழைக்க வந்த சக நாட்டு இந்து மற்றும் கிருத்துவர்களின் மத சுதந்திரத்திற்க்காக ஒரு முறையானாலும் குரல் கொடுத்துர்ப்பார்களா??? மலேசியாவில் குரல் கொடுத்தார்களா?? அல்லது வேறு நாட்டு இஸ்லாமியர்கள் அந்த நாட்டு மைனாரிட்டி மக்கள் படும் அவலத்தை பார்த்து குரல் கொடுத்தார்களா??? பிரான்சில் படுதா போட தடை வந்த பொழுது அதை எதிர்த்து இங்கு சென்னையில் மீட்டிங் போட்ட வகாபிகள், இஸ்லாமிய நாடுகளில் கிருத்துவர்களை வேட்டையாடும்பொழுது அது தவறு நாங்கள் கண்டிக்கிறோம் என்று ஒரு வார்த்தை சொன்னார்களா? போன மாதம் பலோசிச்தானில் (பாகிஸ்தானில்) இருந்து துரத்தி அடிக்கப்பட்ட இந்து குடும்பங்களுக்கு யாராவது பேசினார்களா?? சில வருடங்களுக்கு முன்னாள் இந்துக்களும் சீக்கியர்களும் தனி அடையாளங்களை அணியவேண்டும் என்று ஆப்கானிஸ்தான் தாலிபான் போட்ட சட்டத்தை கண்டித்து கூட்டம் போட்ட இஸ்லாமியர் யார் யார்?? யாரும் இல்லை. வன்மையாக கண்டித்தது, கிருத்துவ அமெரிக்க, இங்கிலாந்து போன்ற நாடுகள்தான். இஸ்லாமிய நாடுகள் எதவும் கண்டு கொள்ளவில்லை. எங்காவது இஸ்லாமியர் இலாத மைனாரிட்டி மக்கள் இஸ்லாமியர்களால் அடிகபட்டால், பாதிகபட்டால் எந்த இஸ்லாமியாராவது கோபம் கொண்டு அதை கேள்வி கேட்டிருக்கிறார்களா? . இல்லை இல்லை இல்லை. அனால் அதே இவர்கள் இந்தியாவிற்கு அல்லது எந்த தேசத்தில் இருந்தாலும் நாங்க மைனாரிட்டி எங்களுக்கு உரிமைகளை கொடு என்று வக்கணையாக பேசுவார்கள். ஏனென்றால் அவர்கள் legitimate ஆக நினைப்பது தங்கள் மதத்தை மட்டும்தான். பிற மதங்களும் நம்பிக்கைகளும் துரத்தப்பட வேடியவை என்பதே அவர்களின் முதல் மற்றும் கடைசி வாதம்! ஆதலால் உண்மையான மதச்சார்பிலோ அல்லது மத நல்லினகத்திலோ சற்றும் நம்பிக்கை இல்லாதவர்கள்தான் இவர்கள்.

இவர்கள் பேசும் மத நல்லிணக்கம் மற்றும் முற்போக்கு வெறும் பித்தலாட்டம் மட்டுமே!!!!

thiruchchikkaaran said...

அன்புக்குரிய, திரு. வால் பையன் அவர்களே, நீங்கள் உருட்டல் மிரட்டல்களுக்கு அஞ்ச வேண்டாம்.

சிந்திப்பதற்கு பெரிய படிப்பு தேவை இல்லை. ஸ்கூலுக்கே போகதாவர்கள் கூட பகுத்தறிவுவாதிகளாக இருக்க முடியும். மூளையை உபயோகித்து சிறிது சிந்தித்தால் போதும்.

நம்பிக்கையாளர்கள் எதை வேண்டுமானாலும் சொல்லி விடுவார்கள். ஆனால் எதையும் நிரூபிக்க வேண்டியது பற்றி நினைத்ததுக் கூடப் பார்க்க வேண்டியதில்லை. அது நம்பிக்கை, நீயும் நம்பு என்று முடித்த்து விடலாம்.

ஆனால் பகுத்தறிவு வாதி எதையும் ஆராய்ந்து பார்த்து, சிந்தித்துப் பார்த்து- இது இப்படி, இந்த முடிவு இப்படிவந்தது,இதை இப்படி சரி பார்த்துக் கொள்ளுங்கள் என்பார்கள்.

உலகம் உருண்டை என்பதை அறிவியல் அறிஞர்கள் சொன்ன போது ஐரோப்பிய மத அடிப்படை வாதிகள் அவர்களை சித்திரவதை செய்தனர், நெருப்பிலே போட்டனர். அவர்களின் தடைகளை எல்லாம் மீறி அறிவியலை வளர்த்து வருகின்றனர். படிப் படியாக அறிவியல் பல உண்மைகளை கண்டு பிடித்து வருகிறது. சந்திரசேகர் லிமிட் என்கிற அளவுக்கு மேலே எந்த ஒரு ஒயிட் டிவார்ப் நட்சத்திரமும் இருக்க முடியாது என்று கண்டு பிடித்து இருக்கிறார்கள். இந்த அடைப்படையிலே கோள்கள் உருவாக்கம் பற்றிய நவீன ஆராய்ச்சி தொடர்ந்து நடை பெறுகிறது. ஆராய்ச்சிகளில் கிடைக்கும் முன்னேற்றங்களை அவ்வப் போது வெளி இட்டு வருகின்றனர்.


அறிவியல் அறிஞர்கள் ஆராய்ச்சி முடிவின் அடிப்படையிலேயே கருத்து சொல்ல முடியும். குயவர் சட்டி பானை செய்வதைப் பார்த்து விட்டு, கடவுள் இதே போல உலகத்தைப் படைத்தார் என்று சும்மா எடுத்து விட முடியாது.

thiruchchikkaaran said...

அன்புக்குரிய, திரு. வால் பையன் அவர்களே, நீங்கள் உருட்டல் மிரட்டல்களுக்கு அஞ்ச வேண்டாம்.

சிந்திப்பதற்கு பெரிய படிப்பு தேவை இல்லை. ஸ்கூலுக்கே போகதாவர்கள் கூட பகுத்தறிவுவாதிகளாக இருக்க முடியும். மூளையை உபயோகித்து சிறிது சிந்தித்தால் போதும்.

நம்பிக்கையாளர்கள் எதை வேண்டுமானாலும் சொல்லி விடுவார்கள். ஆனால் எதையும் நிரூபிக்க வேண்டியது பற்றி நினைத்ததுக் கூடப் பார்க்க வேண்டியதில்லை. அது நம்பிக்கை, நீயும் நம்பு என்று முடித்த்து விடலாம்.

ஆனால் பகுத்தறிவு வாதி எதையும் ஆராய்ந்து பார்த்து, சிந்தித்துப் பார்த்து- இது இப்படி, இந்த முடிவு இப்படிவந்தது,இதை இப்படி சரி பார்த்துக் கொள்ளுங்கள் என்பார்கள்.

உலகம் உருண்டை என்பதை அறிவியல் அறிஞர்கள் சொன்ன போது ஐரோப்பிய மத அடிப்படை வாதிகள் அவர்களை சித்திரவதை செய்தனர், நெருப்பிலே போட்டனர். அவர்களின் தடைகளை எல்லாம் மீறி அறிவியலை வளர்த்து வருகின்றனர். படிப் படியாக அறிவியல் பல உண்மைகளை கண்டு பிடித்து வருகிறது. கோள்கள் உருவாக்கம் பற்றிய நவீன ஆராய்ச்சி தொடர்ந்து நடைபெறுகிறது. ஆராய்ச்சிகளில் கிடைக்கும் முன்னேற்றங்களை அவ்வப்போது வெளி இட்டு வருகின்றனர்.


அறிவியல் அறிஞர்கள் ஆராய்ச்சி முடிவின் அடிப்படையிலேயே கருத்து சொல்ல முடியும். குயவர் சட்டி பானை செய்வதைப் பார்த்து விட்டு, கடவுள் இதே போல உலகத்தைப் படைத்தார் என்று சும்மா எடுத்து விட முடியாது.

«Oldest ‹Older   1 – 200 of 254   Newer› Newest»

Post a Comment