Monday, April 11, 2011

494. WHY I AM NOT A MUSLIM ... 13

*





ஏனைய முந்திய பதிவுகள்:
பதிவு - 7
பதிவு - 8
பதிவு - 9
பதிவு - 10
பதிவு - 11
பதிவு - 12

இப்போதைய பதிவு: 13



Image and video hosting by TinyPic


CHAPTER  8

ARAB IMPERIALISM, ISLAMIC COLONIALISM

அராபிய படையெடுப்புகளும், இஸ்லாமிய காலனியாதிக்கமும்

எந்த வரலாற்று நூலை எடுத்தாலும் மிகக் குறுகிய காலத்தில் பாதிக்கும் மேலான நாகரீக உலகம் - கிழக்கே சிந்து நதியிலிருந்து மேற்கே அட்லாண்டிக் கடல் வரையிலும் - இஸ்லாமியப் படையெடுப்பால் ஒரே பெரிய சாம்ராஜ்யமாக இருந்ததைப் படிக்கலாம். 

ஐரோப்பிய நாடுகள் மூன்றாம் உலகம் முழுவதிலும் பல காலனிகளை உருவாக்கினார்கள் என்று கூறப்பட்டாலும், இஸ்லாமியப் படையெடுப்பால் பல வளர்ந்த நாகரீக நாடுகளும் காலனிகளாக்கப்பட்டதும், அந்த நாட்டின் கலாச்சாரம் இஸ்லாமியரால் அழித்தொழிக்கப்பட்டது என்பதையும் பலர் உணர்வதில்லை. (198)

பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வழி வழியாய் வந்த இஸ்லாம் அல்லாத தங்கள் பண்பாடுகளை இழந்தார்கள். (199)

தங்களது பெரு வெற்றிக்குப் பிறகு  இஸ்லாமியர் அல்லாதாரை தங்களுக்கு ஈடாக அவர்களால் நினைக்க முடிந்ததில்லை. இஸ்லாமியரல்லாதவர்களை தங்களை விட தாழ்ந்தவர்களாகவும், அவர்களை, பொருளாதார, சமூக,  அரசியல், ராணுவ காரியங்களில் கீழானவர்களாகவும் நடத்தினர்.  

தோற்றவர்களின் பெண்கள் அடிமைகளாக ஆக்கப்பட்டனர். அவர்களது குழந்தைகளும் கீழாக நடத்தப்பட்டனர். தோற்றவர்களோடு எந்த வித திருமணத் தொடர்பும் சமூகத்தீமையாகக் கருதப்பட்டன. (202)

சுரா 16 : 77; 30: 28 - அடிமைத்தனம் அனுமதிக்கப்பட்டதாகவும், கீழ்த்தரமாக நடத்தப்படவும் அனுமதி அளிக்கின்றன.
4 : 3; 23 : 6; 3 : 50-52; 70 : 30  -- வைப்பாட்டிகளை வைத்துக் கொள்ளுதலுக்கு அனுமதி அளிக்கின்றன.
குரானில் அடிமைகளுக்கு இரக்கம் காட்ட வேண்டுமென்பதும் குறிக்கப்படுகிறது ( ! ) ஆனாலும் முகமது தான் வென்ற போர்களில் பிடிக்கப்பட்ட பெண்களை ஏலத்தில் போகவில்லையென்றால் அவர்களைத் தனக்கு அடிமையாக்கிக் கொண்டார். 

சீனா, இந்தியா, தென்கிழக்கு ஆசிய நாடுகளில் போர்களில் வென்ற அடிமைகளைவியாபாரம் செய்தனர். (203)

வெற்றி பெற்ற இஸ்லாமிய வீரன் தன் வெற்றி வழியில் செல்லும் போது  ‘நம்பிக்கையற்ற’ பெண்களை எதுவும் செய்து கொள்ள அனுமதிக்கப்பட்டான். 

20-ம் நூற்றாண்டு வரை இஸ்லாமியம் அடிமை வியாபாரத்தை மேற்கொண்டிருந்தது. அதிலும் சவுதி அரேபியாவிலும், யேமனிலும் 1950 வரையும் கூட அடிமை வியாபாரம் நடந்து வந்துள்ளது. ( காலங்கடந்த இந்த அநியாயத்திற்கும் குரானிலிருந்து ஏதாவது மேற்கோள் காண்பித்து, அப்படி நடந்ததெல்லாம் சரியே என்பரோ?! )

Brunschvig சொல்வது போல் குரானோ இஸ்லாமோ அடிமைத்தனத்திற்கு எதிரானதல்ல. அடிமைத்தனத்தை குரான் சட்டபூர்வமானது என்கிறது. 

பிரஞ்சு செய்தித்தாள் L Vie ( no. 2562; 6 Oct, 1994)-ல்  45,000 கறுப்பு ஆப்ரிக்க மக்கள் வளைகுடா நாடுகளில் வீட்டு வேலைக்காகக் கடத்தப்பட்டார்கள். (205)









5 comments:

saarvaakan said...

இப்புத்தகத்தை ஆழ்ந்து படித்து விட்டீர்கள் என்று நினைக்கிறேன்.ஏற்கெனவே தெலுங்கில் இப்புத்தகம் மொழி பெயர்க்கப் பட்டு விட்டது.இபின் வாராக் மத சார்பின்மைக்கான மையம் என்ற பெயரின் உலகம் முழுதும் தொடர்பகங்களை ஏற்படுத்தி வருகிறார்..இந்த இணைப்பில் தெலுங்கு மொழிபெயர்ப்பும்,அந்த மையத்தின் இந்திய இணையம் இது.நீங்கள் தமிழில் மொழி பெயர்க்க கூடாது.விரும்பினால் தொடர்பு கொள்ளலாம்.
http://www.centerforinquiry.net/india/local_resources/why_i_am_not_a_muslim/
____________
இப்பதிவில் இஸ்லாமியப் படையெடுப்புகள் மற்றும் ஆக்கிரமிப்புகள் பற்றி கூறப்பட்டுள்ள்து.வரலாற்றில் எல்லா படையெடுப்புகளிலும் நடந்தவையே இதிலும் நடந்துள்ளது என்று கூறலாம்.ஐரோப்பியர்கள் பிற நாடுகளின் மீது ஆக்கிரமிப்பு செய்த போதும் பல மக்கள் அடிமைகளாக பிற நாடுகளுக்கு விவசாயம் ,பிற வேலைகளுக்கு வலுக்கட்டாயமாக் கடத்தப்பட்டனர்.
நன் சொல்ல வருவது எந்த கால கட்டத்திலும் இஸ்லாமிய அரசுகளும் பிற அரசுகள் போலத்தான் நடைமுறைகளை கொண்டிருந்த்ன. என்ன வித்தியாசம் என்றால் எல்லாவற்றை கடவுளுக்காக‌ செய்வதாகவே இஸ்லாமியர்களை நம்ப வைத்தது மட்டுமே.அடிமை முறையை ஒழிக்க ஆபிரஹாம் லிங்கன் பெரிய போரை நடத்த வேண்டி இருந்தது. அதன் பிறகும் கூட பல பகுதிகளில் இருந்து வந்த அடிமை முறை 1948ன் மனித உரிமை பிரகடனத்தில் மனித விரோதமாக வரையறுக்கப் பட்டது.
இஸ்லாமிய நாடுகளில் நிலவி வந்த அடிமை முறை பிற நாடுகளின் அழுத்தம் காரணமாக்வே கொஞ்சம் கொஞ்சமாக கைவிடப் பட்டது.இன்னும் அடிமை முறை மதத்தின் படி ச்ரியானது என்று வாதிடும் மதவாதிகள் உண்டு.
http://www.wnd.com/?pageId=21700
_____________
இஸ்லாமியர்களின் ஒரே பிரச்சினை அவர்களின் மத குருக்களே. எந்த பிரசினையையும் வரலாறு,மனித உரிமைகள் ரீதியாக் அணுகாமல் மதத்தின் பார்வை வழியாக்வே பார்க்க வலியுறுத்தப் படுவதும்,மாற்று சிந்தனைகள ,மத நிந்தனையாக ஆக்கப் படுவதும், சமூகத்தின் முட்டுக்கட்டைகளாகி விட்டன.
____________
அடிமை முறைக்கு அவர்கள் அளிக்கும் விளக்கம் புல்லரிக்க வைக்கும்.
அடிமை முறை இஸ்லாம் ஏற்படுத்தவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக் ஒழித்தது.எப்படியெனில் தவறு செய்தவன் அடிமையை விடுவித்தால் மன்னிக்கப் படும் என்று கூறுவதன் மூலம் அடிமை முறை ஒழிப்புக்கு வித்திட்டதே இஸ்லாம் என்று ஒரே போடாய் போட்டு விடுவார்கள்.
_____________

4:92. தவறாக அன்றி, ஒரு முஃமின் பிறிதொரு முஃமினை கொலை செய்வது ஆகுமானதல்ல; உங்களில் எவரேனும் ஒரு முஃமினை தவறாக கொலை செய்துவிட்டால், அதற்குப் பரிகாரமாக முஃமினான ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும்; அவனுடைய குடும்பத்தாருக்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் - அவனுடைய குடும்பத்தார் (நஷ்ட ஈட்டுத் தொகையை மன்னித்து) அதை தர்மமாக விட்டாலொழிய; கொல்லப்பட்ட அவன் உங்கள் பகை இனத்தைச் சார்ந்தவனாக (ஆனால்) முஃமினாக இருந்தால், முஃமினான ஓர் அடிமையை விடுதலை செய்தால் போதும் (நஷ்ட ஈடில்லை; இறந்த) அவன் உங்களுடன் சமாதான (உடன்படிக்கை) செய்து கொண்ட வகுப்பாரைச் சேர்ந்தவனாக இருந்தால் அவன் சொந்தக்காரருக்கு நஷ்ட ஈடு கொடுப்பதுடன், முஃமினான ஓர் அடிமையை விடுதலை செய்யவும் வேண்டும்; இவ்வாறு (பரிகாரம்) செய்வதற்கு சக்தியில்லாதவனாக இருந்தால், அல்லாஹ்விடம் மன்னிப்புப் பெறுவதற்காகத் தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு வைக்க வேண்டும் - அல்லாஹ் நன்கு அறிந்தவனாகவும், பூரண ஞானமுடையவனாகவும் இருக்கிறான்.
___________
இதே போல் அக்கால கட்டத்தில் அரெபியாவின் நான்குக்கு மேற்பட்ட திருமணங்களை தடுக்கவே,நான்கு என்று எல்லை ஏற்படுத்தியது.(Qur'ans .4.3) அதுவும் இதே போல் கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து ஒரு ம்னைவி மட்டுமே என்று கொள்ளலமா என்றால் என்ன சொல்வார்கள்?.
_________________

(Cond)

ஜோதிஜி said...

முதல் பகுதியை மட்டும் இப்போது வாசித்தேன். அட இத்தனை நாளாய் தவற விட்டு விட்டோம் என்று யோசிக்க வைத்த நடை ஆழம் கருத்து.

சர்வாகன் உங்கள் சுட்டிக்கு நன்றி.

அடிமைகள் பற்றி தகவல் சேகரித்துக் கொண்டிருக்கின்றேன்.

முடிந்தால் தொடர்பு கொள்ளுங்க.

haja sulthan said...

WHY I AM NOT MUSLIM? BECAUSE YOU DON,T EVEN KNOW SINGLE THING ABOUT ISLAM.GO WATCH (ONLINPJ.COM) U MIGHT GOT REAL THING ABOUT ISLAM OR BETTER READ THE QURAN AND HADITHS.PEACE BE UPON YOU.

தருமி said...
This comment has been removed by the author.
தருமி said...

haja sulthan,

உங்களுக்கான பதிலை ஒரு கேள்வியாக அடுத்த பதிவில் வைக்க நினைக்கிறேன். அப்போது உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன்.

Post a Comment