Monday, April 09, 2012

561. A SUFI MESSAGE ...

*

http://www.thehindu.com/opinion/op-ed/article3294318.ece

இன்று - 9.4.12 - இந்துவில் வந்துள்ள செய்தி ஒன்றின் சில பகுதிகளைக் கீழே தந்துள்ளேன் - எனது சில கருத்துக்களோடு.

இச்செய்தியில் இஸ்லாமியத்தில் இருக்கும் இரு வேறு கோட்பாடுகளைப் பற்றிய கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன. ஒன்று - சூபியிசம்; இரண்டாவது - வஹாபியிசம்.

சூபியிசம்      - மனித நேயத்தின் பாற்பட்ட ஒரு தத்துவம்.
வஹாபியிசம் - புத்தகத்தின் பாற்பட்ட ஒரு தீவிரம்.

Sufism  - A compassionate and all-embracing passion.
Wahabism- A rigid and all-hating practice.

Sufism  - More importance to other humans.
Wahabism- Least importance to this life.

Sufism  - Love thy neighbour.
Wahabism- 'Jihad' a war cry.

சூபியசத்தால் சகோதரர்களாக யாரையும் பார்க்க முடிகிறது
வஹாபியிசத்தில் மூமினும் காபிரும் விலகல் கோட்டுக்கு இரு புறமும்.
 
Lofty symbolism: 




Pakistan President Asif Ali Zardari 
at the shrine of Khwaja Moinuddin Chishti in Ajmer 
on Sunday. 



A Sufi message from a Pakistani President




*The appearance of such a large Pakistani delegation at the Sufi Saint Khwaja Moinuddin Chisti's shrine in Ajmer will strike a chord with an overwhelming majority of Pakistanis who are more comfortable with the soft, humane message of the Sufis compared with the vengefulness that Hafiz Saeed represents. (சூபியிசத்தையும் வஹாபியிசத்தையும் கட்டுரை ஆசிரியரே அழகாக கூறிவிட்டார்.)

*Contrary to popular perception, the rapid spread of Islam across the length and breadth of India was primarily the handiwork of Sufis. The message the Sufis sought to communicate offended nobody: oneness of Being (Wahdat ul Wajood), equality of men, Love as a universal value. (முழு மனித நேயம்.)


*Egalitarian Rungs of the stratified Hindu order found the egalitarianism of Sufi Khanqahs, ashrams, hospices, compelling. The first-time visitors to the hospice were overwhelmed by the hospitality. The cuisine was custom made for universal consumption. It was not just vegetarian but care was taken to avoid garlic and onion too which some Hindu sects abstain from. (இதற்குப் பெயர் தான் மனித நேயம்.)


*If there was one dogma the Sufis lived by, it was their total aversion to Kings and Sultans or those who sat at the top of the feudal heap. (ஐம்பது வயதுக்கு மேல் செத்துப் போன ஒரு செளதி இளவரசனுக்காக இங்கே இரங்கல், அதுவும் ஒரு அகால மரணம் என்ற செய்தியோடு இரங்கல் செலுத்த மாட்டார்கள்!!)


*It was part of their spiritual training to harmonise totally with the cultural environment of whichever place they had made their home. They accepted and adopted the local culture. (பொங்கல் விழாவில் கலந்து கொள்ளாமல் இருக்க ‘இவர்கள்’ கொடுக்கும் தத்துவங்கள் நினைவுக்கு வருகிறது! பாவம்.)


*Their contribution therefore to folk, popular and classical art forms was immense. For instance, Hazrat Amir Khusro, principal disciple of Hazrat Nizamuddin Aulia, invented the sitar, tabla, ragas. And, by experimental fusion of Hindvi and Persian, he virtually laid the foundation of what later came to be recognised as Urdu. For popular participation, there were always the Qawwalis, with trance inducing rhythms deftly employed between spiritual and romantic lyrics. (இசை, பாட்டு எல்லாம் உண்டு. அதையெல்லாம் ‘சீச்சீ..’ என்று சொல்லும் “மேதாவித்தனம்” இங்கு இல்லை போலும்!)


*It was in pursuance of the trend set by the Sufis that every great Urdu poet proceeded to strengthen sub-continental syncretism. Hasrat Mohani always followed up his “haj” by a visit to Barsana for a “darshan” of Radha, because it was a belief he fancied that God had sent prophets to every country and the one he sent to India was Lord Krishna! (’பக்தி’ கடவுளையும் மனிதனையும் இணைக்கும்; இசை அதற்குப் பாலமிடும்.)


*Quite naturally, the rapid expansion of this spectacular, colourful Islam, far removed from the arid rigidity of Najd in Saudi Arabia, invited a puritanical reaction. (ஹா! puritanical !!! அப்டி ஒண்ணு இருக்கோ!ஆனால் நம் ‘சகோ’க்கள் சவுதிக்கு கை கால்களில் சங்கிலி போடாத அடிமைகளாகத்தானே இருக்கிறார்கள்.)


By and large, Islam in Afghanistan, Kashmir, North West Frontier Province, other parts of Pakistan and India has, for years, been cloaked in colours of Sufism. (இதுவரை இருந்து வந்துள்ள சகோதரத்தன்மைக்கு இதுதான் காரணமாக இருந்திருக்க முடியும். ஆனால வஹாபியசம் மனிதர்களை மூமீன் - காபிர் என இரண்டாகப் பிரித்தே வைத்திருக்கும். வேற்றுமைகளை வளர்க்கும்; பகைமையை மூட்டும்.)


*But it was the manufacture of Wahabism in Afghanistan (அதுதான் வஹாபியிசம் இந்த ‘அழகில்’ இருக்கிறதா?!அப்போ, வஹாபீயினர் தாலிபான்களின் ‘குலக் கொழுழ்ந்துகள்’ என்றல்லவா பொருள். ஒசாமாவின் ‘தவப் புதல்வர்கள்’ அல்லவா இவர்கள்?) to fight the Soviet Union which was at the bottom of recent Islamic upheavals, of which 9/11 and its aftermath are landmarks of Islamic extremism.(வஹாபிசத்தின் ‘திருவிளையாடல்’.)


* But a backlash from the Afghan war reached its crescendo with the fall of the Lal Masjid in Islamabad in 2007. Extremism has remained on a plateau.


*Hafiz Saeed is currently the most high profile representative of this extremism which is linked to Wahabism first manufactured in Afghanistan in 1980. (பொறந்த இடமும் சரியில்லை; வளர்ந்து, படர்ந்து வரும் முறையும் சரியில்லை ... )


*In India, Deoband is a harmless reform school. But in Pakistan, Deobandi/Salafi alliance is embarked on a vicious Jehad for the soul of the nation.(நம் அச்சத்திற்கே அதுதானே காரணம்.)

-----------------------------------------------------

சிறு வயதில் இஸ்லாமியத் தெருவில், இஸ்லாமிய நண்பர்களோடு நான் இருந்த போது இல்லாத வித்தியாசம் கடந்து சில ஆண்டுகளில் அதிகமாகத் தெரிகிறது.  வேணுமோ வேண்டாமோ தங்களைத் தனியாகப் பிரித்துக் கொண்டு, முன்பில்லாத அளவிற்கு ஆண், பெண்கள் தங்கள் தனித்த அடையாளங்களோடு இருப்பது இந்த வஹாபிய வளர்ச்சியின் காரணம் என்றே நினைக்கிறேன். பதிவுலகமும் 35-40 ஓட்டுகளுடன் இப்போது மிகக் காரசாரமாகவே இருக்கிறது.  அந்த ஓட்டுக்கள் அவர்கள் எவ்வளவு “கட்டுக் கோப்புடன்” இருக்கிறார்கள் என்ற உண்மை உடைத்துக் காண்பிக்கிறது

இந்து மதத்தைப் பற்றியோ, வேறு எதைப் பற்றியோ யாராவது எழுதினால் ஒரு பெரிய கூட்டமே அதற்கு ஆதரவாகவோ, எதிர்ப்பாகவோ வருவது என்பதை இதுவரை பதிவுலகத்தில் பார்த்ததில்லை.  ஆனால் இந்த 35040 பேருக்கு  அவர்கள் கொள்கைகளுக்கு மாறான எந்த ஒரு விஷயமும் அவர்களின் ஒட்டு மொத்த சத்தத்திற்கு அடங்கிப் போக வேண்டும் என்ற எண்ணம் அவர்கள் மனதில் இருக்கிறது. தமிழ் மணத்திலேயே அதைச் சந்திக்கவில்லையா?  தேவையில்லாத arm twisting ... சில பயமுறுத்தல்கள் .. தமிழ்மணத்திற்குத் தடை ...

தேவையில்லாத அச்சங்களை மட்டும் தான் அவர்களால் உருவாக்க முடியும். நிச்சயமாக இதுபோன்ற சத்தங்களால் அவர்கள் மார்க்கத்தின் பக்கம் யாருக்கும் இதனால் ஈர்ப்பு ஏற்படாது; விலகிச் செல்லவே பலருக்கும் விருப்பம். தோழமையோடு வாழ மதங்கள் குறுக்கீடு என்பதைப் பார்த்தாகி விட்டது. 

மக்கள் மனதில் “மதங்கள்” குறைய வேண்டும். வாழ அதுவே வழி.












*
 

25 comments:

சார்வாகன் said...

வணக்கம் அய்யா

நல்ல பதிவு,

இந்தியாவும் பாகிஸ்தானும் ஒருவருக்கொருவர் பயந்து ஈடுபடும் ஆய்தப்போட்டி சில ஆண்டுகளுக்கு நிறுத்தினால் பல் பொருளாதார சிக்கல்களில் இருந்து இரு நாடுகளும் விடுபடும்.

வஹாபியியம் என்பதை மத்ப் பிரிவாக கூட‌ கருதுவது தவறு என்கிறேன்.இது முழுக்க முழுக்க அரசியல் சார்ந்த கொள்கையாக்கம்.மதம் சார்ந்த உலகளாவிய அரசு அமைக்க இப்போது போர் புரிந்து வெல்ல முடியாத சூழலில் வேறுவகையில் மதம் பரப்பி,ஆக்கிரமிப்பு முயற்சியே.இதற்கு என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.

இது சவுதியை வைத்து மையமாக செய்யப்படுவது அவர்கள் இதற்கு ஆக்கமும்,ஊக்கமும் அளிப்பதால்.ஆனால் வஹாபிகள் போர்றி புகழும் சவுதி அரசே மேலை நாடுகளின் கையாள் என்பதும்,அவர்களின் எண்னெய் திருட்டை மறைக்கவே இந்த பிரச்சார நாடகம் என்பதை வஹாபிகளைத் தவிர அனைவருக்கும் தெரியும்.

வஹாபிகளினால் பெரிதாக் எதுவும் செய்ய இயலாது ,சவுதியில் எண்ணெய் வளம் இருக்கும் வரை கொஞ்சம் சத்தம் போடுவார்கள்,பிற்கு வரலாற்றில் காணாமல் போவார்கள்.

வஹாபிகளால் கடவுளை நிரூபிப்பதில் இருந்து சர்வரோஹ நிவாரணியாக் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கொடுக்க இயலும். தேடல் கிடையாது.வஹாபியியம் மட்டுமே சரி என்று அறிந்தவர்கள், மற்றவர்களை (காஃபிர்!) இச்சிந்தைக்குள் கொண்டுவரும் பெரும் பொறுப்பு உடையவர்க்ள்.

இவர்களுக்கு எங்கும் எதிலும் எதிர்ப்புதான் கிடைக்கும்.ஆனால் இவர்களை ஒரு சிறந்து பொழுது போக்கு விடய்மாக் கருதலாம் என்பதே நம் கருத்து.நமக்கும் நல்ல பொழுது போகும்!.பொழுது போகவில்லை எனில் ஏதேனும் ஒரு தாவா புகழ் வஹாபியிடம் சென்று கிண்டலாக் ஒரு கேள்வி கேட்டு இதற்கு ஆதாரம் உண்டா என்றால்,அதற்கும் (அதனை அறியாமல்)அவர் ஏதேனும் வசனத்தை எடுத்து அதை பிய்த்து போட்டு கிளரி,ஒரு (புது) விளக்க்கம் கொடுக்கும் போது "ஆஹா இன்னொரு முறை சொல்லுங்க" என்று இன்னொரு கேள்வி கேட்ட வைக்கும்.ஜிஸ்யா வரி,கல்லெறிந்து கொல்லுதல் போன்றவைகளையும் நியாயப் படுத்தி கலவரப் படுத்தி விடுவார்கள்.

தாவா பதிவுகள் இல்லாமல் போர் அடிக்குது.ஆகவே சீக்கிரம் தமிழ்மணம் பிரச்சினையை முடித்து நகைச்சுவையை வளர்க்க வேண்டுகிறேன்.

நன்றி

குடுகுடுப்பை said...

சுவனப்பிரியனிடம் இருந்து எதிர்பார்த்தேன் தருமியிடம் இருந்து வருகிறது:)

suvanappiriyan said...

திரு தருமி!

நன்றாக எழுதிக் கொண்டு வரும்போதே இடையில் காமெடியாக ஏதாவது பதிவு எழுத முடிவெடித்தால் வஹாபி, தீவிரவாதம், தாடி, முக்காடு என்று சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் ஏதாவது எழுதி விடுகிறீர்கள். நாத்திகம் வீழ்வதையும் இஸ்லாம் மலர்வதையும் கண்டு பொறுக்காமல் கோபம் வரும்போது இது போன்ற பதிவுகள் வருவது இயற்கையே! தவ்ஹீத் வளர்ச்சியினால் இன்று தமிழகத்தில் மட்டும் எந்த திட்டமிட்ட பிரசாரமும் இல்லாமல் தினமும் இரண்டு மூன்று இந்து கிறித்தவ நண்பர்கள் இஸ்லாத்தை ஏற்ற வண்ணம் உள்ளனர். சென்ற பதிவுகளில் ஊர், புகைப்படம் முதற்கொண்டு வெளியிட்டுள்ளேன். அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பாவை பற்றி சொல்லவே வேண்டாம். அசுர வேகத்தில் இஸ்லாம் வளர்ந்து வருகிறது.

டார்வினுக்கும் நாத்திகத்துக்கும் இனி அவ்வளவாக எதிர்காலம் சுபிட்சமாக இருக்காது. உங்களுக்கு கசந்தாலும் உண்மை அதுதான்.

சூஃபியிசம் என்பது இஸ்லாமிய ஓரிறைக் கொள்கையையும் அத்வைதத்தையும் இந்து புராணங்களையும் கலந்து உருவாக்கப்பட்ட ஒரு வழிமுறை. அதை தனி மதமாக வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம். இஸ்லாத்தில் அதனை நுழைக்க முடியாது. கிறித்தவத்தையும் பவுத்தத்தையும் எப்படி இந்து மதத்தின் ஒரு பிரிவாக ஆரியம் ஆக்கியதோ அதுபோல் இஸ்லாத்தையும் ஆக்கி அழிக்க நினைக்கின்றனர். அது நடக்காத ஒன்று என்ற உண்மையை மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.

கல்வெட்டு said...

சில மனிதர்கள் நினைத்தால் மதங்களையும் அது சொல்லிய முறைகளையும் மனிதத்தைப் போற்றும் வண்ணம் மாற்ற‌ முடியும். அப்படிச் செய்வதால் சுவனம் கிடைக்காவிட்டாலும் மனிதம் தளைக்கும்.

நல்ல மனிதர்களால் மிகச் சுலபமாக மதங்களை மாற்ற முடியும்.

California church holds Easter services at mosque

http://www.foxnews.com/us/2012/04/09/california-church-holds-easter-services-at-mosque/

Mosque Allows Christian Church In To Hold Easter Services

http://news.yahoo.com/video/sacramentocbs13-15751210/mosque-allows-christian-church-in-to-hold-easter-services-28893240.html

இப்படி மசூதியில் நடந்து இருப்பதால் இந்த மசூதி நிர்வாகிகளைப் பற்றிய வஹாபியிசவாதிகளின் கருத்து என்னவாக இருக்கும்?

மதம் மனிதனை மாற்றுகிற‌து என்றால், தமிழ்நாட்டில் அமிந்தகரை மசூதியில் அய்யப்பசாமிகள் ஒரு நாள் பூசை செய்து மலையேற இயலுமா என்ன?...இயலாது.

ஒரே மதமாக இருந்தாலும் மனிதர்கள் வேறு அல்லவா?
தமிழ் நாட்டு இஸ்லாமியர் இஸ்லாம்


ஒரு குதிரையும் (
கலிபோர்னியா இஸ்லாமியர்)
, யானையும் (தமிழ் நாட்டு இஸ்லாமியர்) ஒரே சாலையில் (இஸ்லாம் நடப்பதால் மட்டுமே ஒன்றாகி விடுவது இல்லை.

நல்ல மனிதர்களே மதத்திற்கு அழகு சேர்க்கிறார்கள். எந்த இடத்தில் இருந்தாலும்.

.

naren said...

உங்கள் மீது Darth Vader-ன் dark matter உண்டாகட்டும், அவரின் ஆற்றல் பரவட்டும்

====================================

naren said...
நண்பர் சுவனப்பிரியன்,

உங்களை பார்த்தால் பெருமையாக இருக்கின்றது. இந்த பதிவை தமிழ்நாட்டு மக்கள் தான் படிக்கிறார்கள் என நினைத்திருந்தேன். ஆனால், பாகிஸ்தான் அதிபர் ஆஸிப் சர்தாரியே படிக்கிறார் என்று அறிந்தவுடன் மெய்சிலிர்த்து போனேன்.

சூஃபிஸம் எதிராக பதிவு போட்டவுடன் பொங்கி எழுந்து அஜ்மீர் தர்காவுக்கு ஒரு படையுடன் பயணமே மேற்கொண்டுள்ளார். ஒரு வேளை சூஃபிஸம் பார்ப்பனர்களின் சதி என்று உங்கள் பதிவு மூலம் தப்பாக புரிந்து கொண்டுள்ளார் போலும். அப்படி அல்ல அது இஸ்லாமியர்களின் சதி என்று காட்ட வந்திருப்பார் போலும். தப்பான மொழிப்பெயர்ப்பை அளித்துள்ளார்கள்.

வார்த்தைகளால் விவரிக்கமுடியாத Great spiritual experience என்று சொல்லி 5 கோடி ரூபாயை நன்கொடையாக அளித்துள்ளார் (மிஸ்டர்10% க்கு இது ஒரு டிப்ஸ்).

அப்படி என்னத்தான் இருக்கு என்று அஜ்மீருக்கு ஒரு நடை போய்ட்டு வந்திரவேண்டியதுதான்.

12:42 AM
===================================

naren said...

சுவனப்பிரியன் said...
சகோ நரேன்!

//வார்த்தைகளால் விவரிக்கமுடியாத Great spiritual experience என்று சொல்லி 5 கோடி ரூபாயை நன்கொடையாக அளித்துள்ளார் (மிஸ்டர்10% க்கு இது ஒரு டிப்ஸ்).//

'தம்மிடம் தெளிவான சான்றுகள் வந்து இத்தூதரான முஹம்மத் உண்மையாளர் என்று விளங்கி நம்பிக்கை கொண்டு விட்டு பிறகு மறுத்த கூட்டத்திற்கு இறைவன் எவ்வாறு நேர்வழி காட்டுவான்? அநீதி இழைத்த கூட்டத்துக்கு இறைவன் நேர்வழி காட்ட மாட்டான்'
-குர்ஆன் 3:86

இறை சட்டத்தை இறை வசனத்தை கொண்டுதான் புரிந்து கொள்ள வேண்டும். உண்மை இது என்று விளங்கியும் இறைவனுக்கு இணை வைக்கும் செயலை ரஹ்மான் செய்தாலும் ஆஷிப் சர்தாரி செய்தாலும் தவறுதான். விளங்கிய கூட்டம் தவறு செய்தால் இறைவன் அதிக கோபம் அடைகிறான்.

//அப்படி என்னத்தான் இருக்கு என்று அஜ்மீருக்கு ஒரு நடை போய்ட்டு வந்திரவேண்டியதுதான்.//

'இறைவா! அவர்கள் உயிரிப்பிக்கப்படும் நாள் வரை எனக்கு அவகாசம் தருவாயாக!' என்று சாத்தான் கேட்டான். 'குறிப்பிட்ட நேரம் வரும் நாள் வரை நீ அவகாசம் அளிக்கப்பட்டவன்.' என்று இறைவன் கூறினான்.

'என் இறைவா! என்னை நீ வழி கெடுத்ததால் பூமியில் தீமைகளை அழகாக்கிக் காட்டுவேன். அவர்களில் உன்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட உனது அடியார்களைத் தவிர மற்றவர்கள் அனைவரையும் வழி கெடுப்பேன்' என்று கூறினான்.

-குர்ஆன் 15:36,37,38,39

மசூதிகளில் ஒரு நாளைக்கு ஐந்து முறை 'இறைவனை தொழ வாருங்கள்' 'வெற்றியின் பக்கம் வாருங்கள்' என்று பலமுறை அழைப்பு விடுத்தாலும் இந்த காதில் வாங்கி மற்ற காது வழியாக விட்டு விடுகிறீர்கள்.

ஆனால் அஜ்மீர் தர்ஹாவிலோ நாகூர் தர்ஹாவிலோ யாரும் அழைப்பதில்லை. 'தர்ஹாவுக்கு தொழ வாருங்கள்' என்று ஸ்பீக்கரில் அழைப்பும் கொடுப்பதில்லை. இதற்காக அமைப்புகள் எதுவும் பிரசாரத்திலும் ஈடுபடுவதில்லை. ஆனாலும் பாருங்கள் ஒரு முறை அஜ்மீருக்கு போய் தரிசனம் செய்ய வேண்டும் என்று உங்கள் மனம் சொல்கிறதல்லவா! இங்குதான் சாத்தான் வெற்றி பெற்று விட்டான்.

'பூமியில் தீமைகளை அழகாக்கிக் காட்டுவேன்' என்ற சாத்தானின் சபதம் நரேன் மூலமாக நிறைவேறுவதை எண்ணி வியக்கிறேன். குர்ஆனின் வாக்கு நரேன் மூலமாக ஊர்ஜிதப்படுத்தப்படுகிறது.

3:15 AM
///////////////////////////////

சார்வாகன் said...

வணக்கம் அய்யா!,

ஹையா தாவா!!!!!!!!!!!!!!

சகோ சுவனன் வருவார்னு தெரியாமல் கேள்வி கேடக மறந்து விட்டேன்.

ச.கோ சு.பி,

/சூஃபியிசம் என்பது இஸ்லாமிய ஓரிறைக் கொள்கையையும் அத்வைதத்தையும் இந்து புராணங்களையும் கலந்து உருவாக்கப்பட்ட ஒரு வழிமுறை. /

1.அத்வைதம் என்றால் என்ன?10 வரிகளுக்குள் மிகாமல் விள்க்கவும்

இந்த தாவாவாதிகளால் அடிக்கடி பயன்படுத்தப்படும் ஒரு சொல் அத்வைதம்.என்ன பொருளில் பயன்படுத்துகிறார்கள் என அறிய விரும்புகிறேன்.

2.ஓரிறைக் கொள்கை என்பது யூத‌ மத்த்திலும் இருக்கிரது,ஆகவே இஸ்லாமிய ஓரிறைக் கொள்கை யூத ஓரிறைக் கொள்கை, 6 வித்தியாசம் கூறவும்.

3.இந்து புராணம் என்று எதனை சொல்கிறீர்கள்?

4. இப்போது எப்படி, என்ன சத்வீதம்,யார் செய்தது மிக்ஸிங் என விள்க்குங்கள்!

5.ஓசூர் இராஜன் பதிவில் "அவர் சொல்வது சூஃபிக்களால் இந்தியாவில் இஸ்லாம் பரவியது" என்பதை ஆமாம் அய்யா போடும் நீங்கள்,இங்கு சூஃபிக்களை இஸ்லாமியர்கள் அல்ல என எதிர்ப்பதாக் போடுவது இரட்டை வேடம்.

6. உன்மையான் வஹாபி இஸ்லாம் இந்தியாவிற்கு வந்து 30+ வருடங்கள் மட்டுமே ஆகிறது.இதற்கு முன் வாழ்ந்தவர்கள் முஸ்லிம்கள் அல்ல!.சூப்பரப்பு.

7. குந்தவைக்கு இபோதும் முஸ்லிம் பெண்கள் வழிபாடு செய்வதாக ஓசூர் இராஜன் குறிப்பிட்டதற்கு எதிர்ப்பு ஏன் தெரிவிக்க வில்லை?

/டார்வினுக்கும் நாத்திகத்துக்கும் இனி அவ்வளவாக எதிர்காலம் சுபிட்சமாக இருக்காது./

8 .சு.பி அதிர்ச்சி அடையாதிர்கள்!.டார்வின் செத்து விட்டார்.செத்தவருக்கு எதிர்காலம் என்று ஷிர்க் வைக்காதீர்கள்.

9.நாத்திகத்திற்கும் எப்போதோ இறந்த டார்வினுக்கும் என்ன தொடர்பு?.10 வரிக்கு மிகாமல் விடையளிக்கவும்.

10 சவுதி என்ன் எப்போதும் மக்களால் அடித்து துரத்தப்ப‌டும் தலைவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கிறது?.

(தொடரும்)

சித்திரவீதிக்காரன் said...

மக்கள் மனதில் “மதங்கள்” குறைய வேண்டும். வாழ அதுவே வழி.\\

யானைக்குத்தான் மதம் பிடிக்கும். நமக்கு மதம் பிடித்தால் தப்புத்தான்.

நல்ல பகிர்வு.

நன்றி.

கோவி.கண்ணன் said...

சவுதியில் பாலாறூம் தேனாறும் ஓடுவதாக எழுதும் வஹாபிகளில் ஒருவர் இதுதான் இந்தியா என்ற பெயரில் 1,2,3 தொடராக அவலங்களை படம் ஏற்றுகிறார், இவர்களெல்லாம் ஏன் இன்னும் இந்தியாவில் இருக்க விரும்புகிறார்கள் என்று கேட்டால் அவருடைய நாட்டுப்பற்றில் சந்தேகம் கொள்கிறார்கள் என்று கூப்பாடுபோடுவார்கள்.

[PART 3. இதுதான் இந்தியா வியப்பும் கலக்கமும் ...
VANJOOR]

அவருவேற பெரிய மனுசனாம்

புதுகை.அப்துல்லா said...

//
தேவையில்லாத அச்சங்களை மட்டும் தான் அவர்களால் உருவாக்க முடியும். நிச்சயமாக இதுபோன்ற சத்தங்களால் அவர்கள் மார்க்கத்தின் பக்கம் யாருக்கும் இதனால் ஈர்ப்பு ஏற்படாது; விலகிச் செல்லவே பலருக்கும் விருப்பம்.

//

well said.

புதுகை.அப்துல்லா said...

// சூஃபியிசம் என்பது இஸ்லாமிய ஓரிறைக் கொள்கையையும் அத்வைதத்தையும் இந்து புராணங்களையும் கலந்து உருவாக்கப்பட்ட ஒரு வழிமுறை. அதை தனி மதமாக வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம்.

//


:))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

suvanappiriyan said...

சகோ சார்வாகன்!

//1.அத்வைதம் என்றால் என்ன?//

அத்வைதம் (அ + துவைதம், அத்துவிதம்) - அதாவது இரண்டற்ற நிலை. சீவன் (ஜீவாத்மா) என்பதும் இறைவன் (பரமாத்மா) என்பதும் ஒன்றுதான்; வேறல்ல என்றும் சகல உயிரினங்களுக்குள்ளும் பொதுவாக ஆத்மா விளங்குகின்றது என்றும் கூறும் தத்துவம்.

கி.பி. 788-820ம் காலத்தே வாழ்ந்த சங்கரராய் (இவரது காலம் கி.மு மூன்றாம் நூற்றாண்டு எனவும் ஒரு வாதம் இருக்கின்றது) முதன்முதலில் அத்வைத தத்துவத்தைத் தொகுத்து எழுதி வைத்தார். இவர் யாருக்கும் உபதேசிக்கவோ பிரசாரம் செய்யவோ இல்லை.
-Wiki pedia

//3.இந்து புராணம் என்று எதனை சொல்கிறீர்கள்?//

நீங்கள் ஒரு புத்தகத்தை எழுதி அதனை இந்து மத புராணம் என்று சொன்னாலும் யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள். யார் வேண்டுமானாலும் எழுதலாம். இதற்கு ஒரு வரைமுறை கிடையாது. ராமாயண் கதையே பத்துக்கு மேல் பல மாடல்களில் இருப்பது உங்களுக்கும் தெரிந்திருக்கும்.

//4. இப்போது எப்படி, என்ன சத்வீதம்,யார் செய்தது மிக்ஸிங் என விள்க்குங்கள்!//

ஒரிஜினல் இருந்தாலல்லவா மிக்ஸிங்கைப் பற்றியும் சதவீதத்தைப் பற்றியும் பேசமுடியும். அனைத்தையும்தான் திறமையாக அழித்து விட்டீர்களே!

//5.ஓசூர் இராஜன் பதிவில் "அவர் சொல்வது சூஃபிக்களால் இந்தியாவில் இஸ்லாம் பரவியது" என்பதை ஆமாம் அய்யா போடும் நீங்கள்,இங்கு சூஃபிக்களை இஸ்லாமியர்கள் அல்ல என எதிர்ப்பதாக் போடுவது இரட்டை வேடம்.//

எங்கு ஆமாம் போட்டேன் என்பதை ஆதாரத்தோடு கூறவும்.

அடுத்து இவர் இஸ்லாமியர் என்று யாரையும் என்னால் சொல்ல முடியாது. அது இறைவனுக்கு தெரிந்த ரகசியம்

//6. உன்மையான் வஹாபி இஸ்லாம் இந்தியாவிற்கு வந்து 30+ வருடங்கள் மட்டுமே ஆகிறது.இதற்கு முன் வாழ்ந்தவர்கள் முஸ்லிம்கள் அல்ல!.சூப்பரப்பு.//

அப்படி நான் சொல்லவில்லை. அது உங்களின் கற்பனை.

//7. குந்தவைக்கு இபோதும் முஸ்லிம் பெண்கள் வழிபாடு செய்வதாக ஓசூர் இராஜன் குறிப்பிட்டதற்கு எதிர்ப்பு ஏன் தெரிவிக்க வில்லை?//

தர்ஹா வணக்கம் இஸ்லாத்துக்கு புறம்பானது என்று பல இடங்களிலும் சொல்லி வருகிறேன். முகமது நபி அடக்கஸ்தலத்தை வணங்கினாலும் இஸ்லாமிய பார்வையில் தவறு. எனவேதான் மதினாவில் இன்றும் காவலர்கள் நின்று அறியாத மக்கள் வணங்கக் கூடாது என்பதற்காக பாதுகாப்பு கொடுத்து வருகின்றனர்.

.

சார்வாகன் said...

1.அத்வைதம் என்பது ஆதிசங்கரரால் உருவாக்கப்பட்ட கொள்கையாக்கம்.பள்ளிகூடத்தில் கடவுள்=பரமாத்மா,மனிதன் =ஜீவாத்மா என்றும் ஜீவாத்மா பரமாத்மாவை அடைவதே முக்தி என்று சொல்லிக் கொடுத்தனர்.

ஜீவாத்மாவும் பரமாத்வாவும் வேறு வேறு எனினும் அடைய முடியும் என்றே அத்வைதம் கூறுகிறது.

இரண்டும் ஒன்று என்பது இரமாநுஜரின் விஷிஷ்டாதவைபம் சகோ.அத்வைதக் கொள்கை பற்றி விக்கிபிடியாவில் இருந்து

“According to Adi Shankara, God, the Supreme Cosmic Spirit or Brahman is the One, the whole and the only reality. Other than Brahman, everything else, including the universe, material objects and individuals, are false.”

சங்கரர் இறைவனைத் தவிர மற்றதெல்லாம் மாயை என்கிறார்.சங்கரர் ஒரு அக்மார்க் கருத்தியல்வாதி.

சூஃபி இப்படித்தன் சொல்கிறதா?

&&&&&&&&&
சூஃபி மார்க்கம் தோன்றியது அரேபியாவில் ,முதல் ஹிஜ்ரி நூற்றாண்டில் இதுவும் உலகம் முழுதுமே இருக்கிறது.பிறகு எப்படி அத்வைதம் உலக் முழுதும் இஸ்லாமில் கலக்கும்?

ஆகவே சூஃபி மார்க்கம் என்றால் என்ன என்பதை மீண்டும் தெளிவாக விள்க்கவும்

Sufism or taṣawwuf (Arabic: تصوّف‎) is defined by its adherents as the inner, mystical dimension of Islam.[1][2][3] A practitioner of this tradition is generally known as a ṣūfī (صُوفِيّ). Another name for a Sufi is Dervish.
Classical Sufi scholars have defined Sufism as "a science whose objective is the reparation of the heart and turning it away from all else but God".[4]Alternatively, in the words of the Darqawi Sufi teacher Ahmad ibn Ajiba, "a science through which one can know how to travel into the presence of the Divine, purify one's inner self from filth, and beautify it with a variety of praiseworthy traits".[5]
Classical Sufis were characterised by their attachment to dhikr (a practice of repeating the names of God) and asceticism. Sufism gained adherents among a number of Muslims as a reaction against the worldliness of the early Umayyad Caliphate (661-750 CE[6]). Sufis have spanned several continents and cultures over a millennium, at first expressed through Arabic, then through Persian, Turkish and a dozen other languages
விக்கிபிடியா சூஃபி கருத்துகள் அரபியில் இருந்து,பெர்சியன் வழி பிற மொழிகளுக்கு பரவியது என்கிறது.நீங்கள் அத்வைதம்(சம்ஸ்கிருதம்) சூஃபீயில் கலந்தது என்கிறீர்கள்.இது இந்தியாவில் மட்டும் என் கருதலாம்.

2. சூஃபியீயம் என்பது தவறு என்றால் உங்களின் பிரிவான வஹாபியீயம் எப்படி சரி என்று சொல்கிறீர்கள்?.

சார்வாகன் said...

சகோ சு.பி

ஓச்சுர் இராஜன் பதிவில் அவரின் கருத்துகளை எந்தவிதத்திலும் எதிர்க்காமல் ,மாற்றுக் கருத்து எதுவும் சொல்லாமல்,பொத்தாம் பொதுவாக பேசினால் அவைகளை ஏற்பதாகவே பொருள்.அவர் நத்தர்வெளி என்னும் சூஃபியால் இராசராச சோழனின் அக்கா குந்தவை இஸ்லாமிய மதம் மாறினார்,அவர்தான் துலுக்க நாச்சியார்,ஆகவே பல முஸ்லிம் பெண்கள் அவருக்கு சீரங்கம் கோயிலில் வழிபாடு செய்கின்றார் என்றால் என்று கூறுவதற்கு அதனை பொய் செய்தி என்று மறுக்கவில்லையே!.அது இஸ்லாம் அல்ல சூஃபியம் என பொங்கவில்லையே!.

சோழ அரசி மட்டும் சூஃபியாக் இருப்பது இஸ்லாமுக்கு பெருமை.அப்போது சூஃபி=இஸ்லாம் ,ஒரு ஏழை,சாமான்யன் சூஃபியாக் இருப்பது சிறுமையா?

கல்வெட்டு said...

Monday, April 09, 2012 8:42:00 PM
//சூஃபியிசம் என்பது இஸ்லாமிய ஓரிறைக் கொள்கையையும் அத்வைதத்தையும் இந்து புராணங்களையும் கலந்து உருவாக்கப்பட்ட ஒரு வழிமுறை. அதை தனி மதமாக வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம். //

Tuesday, April 10, 2012 1:41:00 PM
//இவர் இஸ்லாமியர் என்று யாரையும் என்னால் சொல்ல முடியாது. அது இறைவனுக்கு தெரிந்த ரகசியம்//

***

யார் இஸ்லாமியர் என்று இறைவனுக்கு மட்டுமே தெரிந்த ஒன்று.

ஆனால் சூஃபியிசம் என்பது இஸ்லாமல்லாத தனிமதம் என்பது மட்டும் நன்றாகவே தெரிந்திருக்கிறது. :‍-)))))

***

யார் இஸ்லாமியர் என்று இறைவனுக்கு மட்டுமே தெரிந்த ஒன்று அல்ல, அது அரபு ரோட்டில் உள்ள தகவல் பலகைக்கும் தெரிந்த ஒன்று.

"Non-Muslim Bypass:
Mecca.http://www.wikinfo.org/index.php/File:Christian_Bypass.jpg

யார் முஸ்லீம் என்பதை இறைவனின் கணிப்பிற்கு விட்டுவிட்டால் அந்த இறைவனே வந்து சொல்லாதவரை காபிர் என்று யாரும் யாரையும் சொல்லத் தகுதி இல்லை. :‍-)) ஏன் என்றால் அது இறைவனுக்கு மட்டுமே தெரிந்த ஒன்று.

அப்படி இறைவனை உண்மையிலேயே நம்புகிற‌வர்கள் தமிழ் இணையத்தில் "இஸ்லாமியர்" "இஸ்லாம் அல்லாதவர் (காபிர்)" என்று பேசித் திரிவதை இன்றிலிருந்தாவது நிறுத்த வேண்டும். செய்யுங்கள் அதை முதலில்.

.

புதுகை.அப்துல்லா said...

சூஃபியிசம் உணர்ந்த யாரும் தர்ஹாவில் வணங்கமாட்டார்கள். தர்ஹாவில் வணங்குபவர்கள் சூஃபியும் இல்லை... இஸ்லாமியரும் இல்லை. இவர்களுக்கு உண்மைப் பொருளை உணர்த்தும் பொறுப்பு இஸ்லாத்தின் பக்தி மார்க்கம், ஞான மார்க்கம் இவற்றை பின்பற்றுபவர்கள் பொறுப்பு. அதைத் தவிர்த்து தர்ஹாவில் வணங்குபவர்களை சூஃபிகள் என்று சொல்வது அறிவுடைய செயல் அல்ல,

suvanappiriyan said...

சகோ சார்வாகன்!

//சூஃபியீயம் என்பது தவறு என்றால் உங்களின் பிரிவான வஹாபியீயம் எப்படி சரி என்று சொல்கிறீர்கள்?.//

உறவுகளிலிருந்து நீங்கி உலக ஆசைகளைத் துறந்து சன்னியாசியாகி தவக்கோலம் தரித்து, நிஷ்டையில் திளைத்து காண்பதெல்லாம் இறைவன் என்ற முக்தியைப் பெறுவதே ஸூஃபியிசம். துறவு வழியாக அனைத்துப் பொருள்களும் இறைவன் என்றாகி இறுதியில் தானும் இறைவன் என்ற உச்ச நிலையை எட்டுவதே ஸூஃபியிசக் கொள்கை!
ஷரீஅத் மட்டுமில்லாமல் தரீகத், ஹகீகத், மஃரிஃபத் என மார்க்கத்தோடு மேலதிகக் கொள்கைக் கோட்பாடுகளைச் சேர்த்துக்கொண்ட ஸூஃபித் துறவற அத்வைதிகள் சம்சாரி வாழ்க்கையைப் புறக்கணித்து, சிற்றின்பங்களைத் துறந்தால் பிறகு ''நீ தான் இறைவன், இறைவன் தான் நீ'' என்று ஆகிவிடுவாய் என பாமரமக்களை ஏமாற்றுகின்றனர். பீர் முரீது பைஅத் - குரு சிஷ்யன் எனக் கூறி குருவின் விருப்பபடியெல்லாம் சிஷ்யனை நடத்தலாம் என்று மனித சுயமாரியாதையை இழக்கும் அளவுக்கு முற்போக்குக் கொள்கையுடைய சூஃபியிசக் கொள்கையை இஸ்லாமுடன் ஒப்பிடுவது பொருத்தமற்றதாகும்.

இன்னும் துறவு நெறியில் முற்றிய சூஃபி ஞானிகள் தன்னைக் காதலனாக்கி, இறைவனைக் காதலியாக்கி வர்ணித்து முட்டை பொறித்து முழுக்கோழியும் பொறித்து, தட்டைப் பீங்கனில் வைத்துக் கொடுத்து, குணங்குடி மஸ்த்தான் களிப்பாடல்கள் பாடிய சங்கதிகளும் உண்டு. துறவறத்தின் மூலம் இறைவனும் மனிதனும் ஒன்றாகக் கலந்திடலாம் வாருங்கள் என்ற அத்வைதக் கொள்கைக்கு அழைப்பதே சூஃபியிசமாகும். இஸ்லாமில் துறவறத்துக்கு அறவே இடமில்லை.

''அவர்கள் தாங்களே புதிதாக உண்டாக்கிக் கொண்ட துறவித்தனத்தை நாம் அவர்கள் மீது விதிக்கவில்லை.''
- (அல்குர்ஆன் 57:27)

குர்ஆன் துறவு வாழ்க்கையை கண்டித்திருக்க சூஃபிகள் துறவு வாழ்க்கையை மேற்கொள்வது இஸ்லாத்துக்கு மாற்றமல்லவா?

அடுத்து வஹாபியிசத்துக்கு வருவோம். வஹாபிசம் என்று இஸ்லாத்தில் தனியாக ஒன்றும் இல்லை. தவ்ஹீத், ஏகத்துவம், வஹாபி என்று அந்தந்த ஊரில் பிரபலமான பெயரை வைத்து அழைத்துக் கொள்கிறார்கள். இநத மூன்று பிரிவினரும் குர்ஆனையும் முஹமது நபி அவர்களின் ஆதாரபூர்வமான ஹதீதுகளையும் பின்பற்றக் கூடியவர்கள். இஸ்லாம் கூறுவதும் அதுதான். குர்ஆனின் கட்டளையும் அதைத்தான் சொல்கிறது.

'வேதத்துக்கு முரண்படுவோர் உண்மையிலிருந்து தூரமான முரண்பாட்டிலேயே உள்ளனர்'
-குர்ஆன் 2:176

இது போன்று பல இடங்களில் வேதத்துக்கு முரண்படக் கூடாது என்று முஸ்லிம்களைப் பார்த்து இறைவன் எச்சரிக்கிறான். எவ்வளவு பெரிய சூஃபி ஞானியாக இருந்தாலும் அவரது கருத்து குர்ஆனுக்கு மாற்றமாக இருந்தால் அதனை புறந்தள்ள வேண்டும். குர்ஆனில் நாம் ஆராய்ந்து வெளியிடும் கருத்துக்கள் இஸ்லாத்தின் அடிப்படையை தகர்க்காததாக இருக்க வேண்டும். குர்ஆனின் முழு விளக்கத்தையும் முகமது நபியை தனது வாழ்நாளில் விரிவாக விளக்கி விட்டார். தற்போது அதனை மொழி மாற்றம் தான் செய்து வருகிறோம். அப்படி மொழி மாற்றம் செய்யும் போது தற்கால அறிவியல் கருத்துகளோடும் குர்ஆன் வசனத்தைப் பொருத்திப் பார்க்கிறோம். அப்பொழுது கூட முகமது நபியின் விளக்கவுரைக்கு எதிர் கருத்தாக நமது கருத்தும் அமைந்து விடக் கூடாது. இதிலெல்லாம் தவ்ஹீத்வாதிகள்(வஹாபிகள்) கவனமாக இருப்பர். சூஃபி பக்தர்கள் இதிலெல்லாம் கவனத்தை செலுத்தாது தங்களின் தலைவர் என்ன சொல்கிறாரோ அதற்கு மறு பேச்சு பேசாமல் அவருக்கு தலையாட்டுபவர்களாக முடிவில் மாறி விடுகின்றனர். இதைத்தான் நாம் கண்டிக்கிறோம்.

suvanappiriyan said...

திரு கல்வெட்டு!

//ஆனால் சூஃபியிசம் என்பது இஸ்லாமல்லாத தனிமதம் என்பது மட்டும் நன்றாகவே தெரிந்திருக்கிறது. :-)))))//

உண்மைதான். குர்ஆனில் ஒரு முஸ்லிம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற கட்டளை வருகிறது. இறைவனை இப்படித்தான் நெருங்க வேண்டும் என்ற சட்டம் உள்ளது. அதெல்லாம் எனக்கு தேவையில்லை. என் மனம் எப்படி இறைவனை நாடுகிறதோ அதுபோல தான் நானும் நாடுவேன் என்பது இறைவனுக்கு நாம் பாடம் எடுப்பதாகி விடும். எனவேதான் அதனை தவறு என்கிறோம்.

சகோ சார்வாகன்!

// நத்தர்வெளி என்னும் சூஃபியால் இராசராச சோழனின் அக்கா குந்தவை இஸ்லாமிய மதம் மாறினார்,அவர்தான் துலுக்க நாச்சியார்,ஆகவே பல முஸ்லிம் பெண்கள் அவருக்கு சீரங்கம் கோயிலில் வழிபாடு செய்கின்றார் என்றால் என்று கூறுவதற்கு அதனை பொய் செய்தி என்று மறுக்கவில்லையே!.அது இஸ்லாம் அல்ல சூஃபியம் என பொங்கவில்லையே!.

சோழ அரசி மட்டும் சூஃபியாக் இருப்பது இஸ்லாமுக்கு பெருமை.அப்போது சூஃபி=இஸ்லாம் ,ஒரு ஏழை,சாமான்யன் சூஃபியாக் இருப்பது சிறுமையா?//

இந்த வரலாறுகளை எழுதி வரும் ஓசூர் ராஜனே இதற்கான ஆதாரங்கள் அனைத்தையும் சமர்ப்பிப்பதாக கூறுகிறார். எனக்கு அந்த ஆராய்ச்சி நூல்களைப் பற்றி தெரியாததால் நான் ஒன்றும் கேட்கவில்லை. ஆரியர்கள் செய்த சூழ்ச்சியினால் நமது தொன்மையான வரலாறுகள் பல மறைக்கப்பட்டுள்ளதை பல அறிஞர்களும் ஒத்துக் கொண்டுள்ளனர். குந்தவைக்கு அன்றைய காலகட்டத்தில் ஒரு சூஃபி ஞானி இஸ்லாத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். இறைவனுக்கு இணை வைக்காமல் ஒருவன் முஸ்லிமாக மாறினால் அவன் சூஃபியாகவே இருந்தாலும் கடைசியில் குறைந்த மார்க்கிலாவது பாஸாகி விடுவான். இஸ்லாத்துக்கு மாறாமல் மரணிப்பதை விட ஒரு சூஃபி இஸ்லாமியனாக மரணிப்பது இஸ்லாமிய பார்வையில் சிறந்ததே! அதற்காக துறவறம் பூணுவதும் தர்ஹாக்களே கதி என்று கிடப்பதும் பரதேசிகளாக ஊர்ஊராக அலைந்து திரிந்து பிச்சை எடுத்து சாப்பிடுவதும் இஸ்லாம் காட்டாத வழி அல்லவா! மனிதனுக்கு சுய மரியாதை அவசியம் இல்லையா!

உழைத்து சாப்பிடுங்கள்: குர்ஆன் சொன்னதற்கு மேல் அதிகப்பிரசங்கித்தனமாக வணக்கங்களை புதிதாக உருவாக்காதீர்கள்: திருமணம் முடித்து குழந்தை குட்டிகளோடு சந்தோஷமாக இருங்கள். ஒரு நாளைக்கு அரை மணி நேரம் ஐந்து நேர தொழுகையை பள்ளியில் வந்து நிறைவேற்றுங்கள். உங்களுக்கு நீங்களே ஏன் சிரமத்தை ஏற்படுத்திக் கொள்கிறிர்கள் என்றுதான் கேட்கிறோம்.

Avargal Unmaigal said...

//நிச்சயமாக இதுபோன்ற சத்தங்களால் அவர்கள் மார்க்கத்தின் பக்கம் யாருக்கும் இதனால் ஈர்ப்பு ஏற்படாது; விலகிச் செல்லவே பலருக்கும் விருப்பம்///

மிகச் சரியாக கூறியிருக்கிறிர்கள்

தருமி said...

//Avargal Unmaigal said...

//நிச்சயமாக இதுபோன்ற சத்தங்களால் அவர்கள் மார்க்கத்தின் பக்கம் யாருக்கும் இதனால் ஈர்ப்பு ஏற்படாது; விலகிச் செல்லவே பலருக்கும் விருப்பம்///

மிகச் சரியாக கூறியிருக்கிறிர்கள்//

இது அந்த 35-40 பேருக்கு கொஞ்சமாவது புரிந்தால் நல்லாயிருக்குமே! :(

தருமி said...

//இறைவனுக்கு இணை வைக்காமல் ஒருவன் முஸ்லிமாக மாறினால் அவன் சூஃபியாகவே இருந்தாலும் கடைசியில் குறைந்த மார்க்கிலாவது பாஸாகி விடுவான்//

அடடே ... இப்படி 35 மார்க்ல பாசாக முடியுமா ..? நல்லா இருக்கே.

ஆனால் இப்படி பாசாகி சுவனத்தில ஓரத்தில் உக்கார வச்சி, உங்க சாமி peg ரொம்ப குறைச்சி, ஹூரிஸ் எண்ணிக்கையையும் ரொம்பவே குறைச்சிட்டா நல்லா இருக்காதே .. என்ன செய்யலாம், சு.பி.?

தருமி said...

//முஹமது நபி அவர்களின் ஆதாரபூர்வமான ஹதீதுகளையும் பின்பற்றக் கூடியவர்கள்.

சாமின்னா அது அல்லா மட்டும் தான். அதுதான் சரி .. ஆனால் ஹதீதுல மட்டும் strong .. not so strong .. weak .. இப்படி வகை வகையா இருக்கே. வேணுங்கறது மாதிரி வச்சிக்கிறதுக்கா ...?

//குர்ஆனில் நாம் ஆராய்ந்து வெளியிடும் கருத்துக்கள் இஸ்லாத்தின் அடிப்படையை தகர்க்காததாக இருக்க வேண்டும்.//

ஓ! அப்படி ஒரு அட்ஜஸ்ட்மெண்ட் இருக்கோ? செருப்புக்கு ஏத்த மாதிரி காலை வெட்டிக்கணும் அப்டின்றீங்க ...!

தருமி said...

விமான நிலையம் என்ற பெயரில் பின்னூட்டம் அனுப்பிய பதிவருக்கு ...

ராம் ஜெயம் எழுதுறது மாதிரி நிறைய தொடர்ச்சியா ஏதேதோ எழுதியிருக்கீங்க. குரானின் வசனம் எல்லாம் ஈமான் உள்ளவர்களுக்கு தேவ வார்த்தைகள்.

எனக்கு அப்படியில்லை. அதனால் அவை இங்கு தேவையில்லை.

? said...

//அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பாவை பற்றி சொல்லவே வேண்டாம். அசுர வேகத்தில் இஸ்லாம் வளர்ந்து வருகிறது.//

இந்த தவறான தகவலை பலர் பரப்பி வருகின்றனர். இசுலாம் மதத்திற்கு ஆள் பிடிப்போரும் இசுலாமை எதிர்ப்போர் இருவரும் இந்த வேலையை செய்கிறார்கள். இசுலாம் சேரும் ஆட்களுக்கு இணையாகவே அதிலிருந்து தப்பி ஓடுபவர்களின் எண்ணிக்கை இருப்பதினால் இசுலாம் வளரும் வீகிதம் மிகவும் குறைவுதான். ஆனால் இசுலாம் குறைந்த அளவில் வளர்ந்து வருகிறது இதுக்கு காரணம் மதமாற்றமல்ல, இசுலாமியருக்கு குடும்ப கட்டுப்பாட்டில் நம்பிக்கை இல்லாதேயாகும்.

உதாரணமாக அமெரிக்காவில் இந்து மத வளர்ச்சி வீதம் 237% ஆனால் இசுலாமின் வளர்ச்சி வீதம் 109% சதவீதம் மட்டும் என விக்கி கூறுகிறது (சீக்கியமதம் இன்னமும் அதிகம் 338%). மேலும் அமெரிக்க பத்திரிக்கையான நீயூஸ்வீக்கில் வெளியான கட்டுரையை படித்து பாருங்கள் We Are All Hindus Now

வேகநரி said...

//அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பாவை பற்றி சொல்லவே வேண்டாம். அசுர வேகத்தில் இஸ்லாம் வளர்ந்து வருகிறது.//

இவர்கள் இப்படி சொல்வதே இஸ்லாமில் இப்போ இருப்பவர்கள் தப்பியோடக் கூடாதே என்கின்ற பயத்தாலும் இஸ்லாமிய பெண்கள் எங்கே பர்தாவை கைவிட்டுவார்களே என்ற கவலையாலுமே.
German government moves to block Quran distribution
http://www.hurriyetdailynews.com/PrintNews.aspx?PageID=383&NID=18178

Post a Comment