Wednesday, March 01, 2006

137.”அட என்னடா பொல்லாத தேர்தல்…..”

உங்கள் அனைவரிடமும் நான் எவ்வளவு மரியாதையும், அன்பும், அருகாமையும் கொண்டிருந்தேன் என்பது இந்தப் பதிவிலிருந்தே உங்களுக்குப் புரிந்துவிடும். ஏனெனில், இப்பதிவு எனக்கும் என் பார்ட்னர் செல்வனுக்கும் நடுவில் நடந்த personal மயில்களின் தொகுப்பு. எங்கள் பெர்சனல் மயிலகளைக் கூட உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன் என்றால் நான் உங்களுக்கெல்லாம் எவ்வளவு ‘இது’ கொடுத்திருக்கிறேன். (இப்படியெல்லாம் நான் இருந்தும் நீங்கள் எங்கள் டீமுக்கு ஓட்டு போடவில்லையே என்றா சொல்கிறேன்… சீச்ச்சீ…அப்படியெல்லாம் இல்லை..இல்லவே இல்லை)

செல்வனுக்கு என் மயில்:
பார்ட்னர்,
…..இப்படி சில பாட்டு ஞாபகம் வந்து ரொம்ப தொல்லை படுத்துது.

“நாலு பேத்துக்கு நன்றி - மொத்தமே
‘அந்த நாலு’ பேத்துக்கு நன்றி..”

“உன்னைச் சொல்லிக் குத்தமில்லை
என்னைச் சொல்லிக் குத்தமில்லை
கேட்டாதான் ஓட்டுன்றவங்கள சொல்லியும் குத்தமில்லை….”

“சொன்னாலும் வெட்கமடா
சொல்லாவிட்டால் துக்கமடா…”

“அட என்னடா பொல்லாத தேர்தல்…..”

“வாழ்வே மாயம்
இந்த தேர்தலே மாயம்…”

“ஆடி அடங்கும் வாழ்க்கையடா - இதில்
நாலு ஓட்டே மொத்தமடா…”

சில சந்தேகங்களும், ஆதங்கங்களும்…………..


* பதிவாளர்களிடம் ‘கேட்டால்தான் ஓட்டு’ என்ற ஃபிலாஸஃபி இருப்பது நீங்கள் எதிர்பார்த்ததா?

* சும்மா போட்டிருந்தாலாவது என் ரஜினி பதிவை இன்னும் ஒரு நாலு பேராவது பார்த்திருப்பாங்க. நடந்த கலாட்டாவில் நான் நாலைந்து மணி நேரம் (அவ்வளவுதான் நம்ம talent) செலவழித்துப் பண்ணிய வேலையை யாரும் இந்தத் தேர்தல் சுடு களத்தில் கண்டுக்கவே இல்லை.
* லைஃப்ல இந்த time management பற்றி எப்போதுதான் தெரிஞ்சிக்கப் போறேனோ? (இந்தப் பதிவுக்கே :க.கெ.பி. சூர்ய நமஸ்காரம்” அப்டின்னு, அதாவது கண் கெட்ட பின் சூர்ய நமஸ்காரம்னு தலைப்பு வைக்கலாமான்னு யோசிச்சேன்.)

சில சந்தோஷங்கள்…


* விளையாட்டு..இன்னும் நல்லா விளையாடி இருக்கலாமென்றாலும், சந்தோஷமா இருந்திச்சு

* இன்னும் நிலா போட்டி வைக்கப் போறாங்களாம்…நாம இந்தப் போட்டிகளின் founder members ஆயிட்டோம்ல (guinea pigs, too)

* அரை இருட்டுக்குள் இருந்த என் மேல் இன்னும் கொஞ்சம் ‘ஸ்பாட் லைட்’. நன்றி நிலாவுக்கு
* நம்ம நிஜ ‘பாப்புலாரிட்டி’ என்னன்னு தெரிஞ்சிக்கிட்டோம்ல..
=========================================
செல்வனின் பதில் மயில்:


பார்ட்னர்

கவலைபட வேண்டாம்.4 மணிநேரத்தில் 8 பேர் ஓட்டு போட்டார்கள்.அதில் 4 செல்லாததாகி விட்டது.இங்கு இரவு நேரம் என்பதால் என்னால் எதுவும் செய்ய முடியாமல் போய் விட்டது.

ரோஜா அணியினர் அதிகாலையிலிருந்து செயல்பட்டு வெற்றிக்கனியை பறித்து விட்டனர்.நான் 10 மணிக்கு தான் ஆபீஸ் வந்தேன்.இப்படி ஆகிவிட்டது.

இது நல்ல அனுபவம்தான் பார்ட்னர்.முயற்சி செய்து போராடினோமே அதை சொல்லவேண்டும்

======================

வெற்றிக்கனி பறித்த டீமுக்கு

மணந்த,

மணக்கின்ற,

மணக்கும்

மல்லிகைக் குழுவின்

வாழ்த்துக்கள்………..







Pathivu Toolbar ©2005thamizmanam.com


Mar 01 2006 02:05 pm | Uncategorized | | edit this
21 Responses
suresh - penathal Says:
March 1st, 2006 at 2:48 pm e
Apdippodungga!

pot'tea'kadai Says:
March 1st, 2006 at 3:40 pm e
Tharumi,

Tomorrow never dies…:-)

Thangamani Says:
March 1st, 2006 at 3:43 pm e
நான் வந்து பார்க்கும் போது காலம் கடந்துவிட்டது தருமி!:)

Dev Says:
March 1st, 2006 at 4:45 pm e
தருமி சார்,
வெறும் நாலு ஒட்டு இல்ல சார்… நாஆஆலு ஓட்டு சார்.
எங்களுக்கு ஒத்த ஓட்டு அதுவும் சிறில் வேறு வழி இல்லாமல் அவரே போட்டுகிட்ட ஓட்டு…
( எனக்கு அது கூடத் தோணல்ல….தோணியிருந்தா 2 ஓட்டு கிடைச்சிருக்கும்)
இதெல்லாம் கவுண்டர் சொல்லுற மாதிரி அரசியல்ல சாதாரணம்ப்பா…
அடுத்த தடவை தேர்தல் நடக்கட்டும் அப்புறம் பாருங்க…
போலி தருமி, போலி செல்வன், போலி நிலா, போலி குமரன் அப்படின்னு போலிங்கை பின்னி எடுத்துறலாம்…
ஜனநாயக ரீதியாக இந்த முறை மக்கள் ( நக்கல்) தீர்ப்புக்கு தலைப் பணிவோம்….

மணியன் Says:
March 1st, 2006 at 4:52 pm e
//பதிவாளர்களிடம் ‘கேட்டால்தான் ஓட்டு’ என்ற ஃபிலாஸஃபி இருப்பது நீங்கள் எதிர்பார்த்ததா?//

சார், போட்டி என்பதால் நான் ஒவ்வொரு குழுவும் தங்கள் பிரச்சார யுக்தியை எப்படி கையாளப் போகிறார்கள் என்று வைத்து ஒட்டுபோடுவதாக இருந்தேன். இல்லையெனில் எல்லோரும் சமநிலை நண்பர்கள்தானே.

முக்கிய குறை அதிகாலை 3:30க்கு முடிந்ததுதான். அல்லது பிரச்சாரத்திற்கு ஒரு குறிப்பிட்ட நேரம் கொடுத்து அதன் முடிவில் அனைவரும் ஒட்டு போட நேரம் கொடுத்திருக்கவேண்டும்.

குழலி Says:
March 1st, 2006 at 5:19 pm e
ம்… அலுவலகத்தில் தமிழ்மணம் பார்ப்பதில்லை என்ற சபதத்தையும் மீறி இன்று உங்கள் மடல் கண்டு வாக்களித்தேன், என்ன செய்வது அதுவும் செல்லாத வாக்காகிவிட்டது நேரம் கடந்துவிட்டதால்…

Sam Says:
March 1st, 2006 at 6:46 pm e
அன்புள்ள தருமி
உங்கள் வாழ்த்துக்கள் கிடைத்தது. மிக்க நன்றி. அடுத்த முறை தேர்தல் வரும் போது என் தொண்டு உங்களுக்கும் செல்வனுக்கும் கண்டிப்பாக உண்டு. தமிழ்ல் தட்டச்சு செய்ய இன்னும் தடுமாறுகிறேன். நிறைய எழுத முடியவில்லை.
அன்புடன்
சாம்

கோ.இராகவன் Says:
March 1st, 2006 at 9:42 pm e
தருமி,

உமது வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும்
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்
நீதிக்கு இது ஒரு போராட்டம்
இதை நிச்சயம் உலகம் பாராட்டும்

அன்புடன்,
கோ.இராகவன்

தருமி Says:
March 1st, 2006 at 10:01 pm e
சுரேஷ்,
போட்டுட்டேன்..

பொட்டீ,
“Tomorrow never dies…:-)”……but i do! (sick joke?) சும்மா ஜாலிக்குத் தான்…

தருமி Says:
March 1st, 2006 at 10:05 pm e
தங்க மணி, குழலி,
இந்த late comers-க்கு எல்லாம் imposition குடுக்கப் போறேன். (வாத்தியார் புத்தி போக மாட்டேங்குதோ)

குழலி,
இந்த இரண்டும் தெரிந்திருக்கும் என்று நம்புகிறேன்:
Gentle men never promise.
Promises are made to be broken!

சரி, வீட்டம்மா வந்து சேர்ந்தாச்சா?
நாளைக்கு என்ன ‘பதிவர் மாநாடாமே’? ஜமாய்ங்க…

தருமி Says:
March 1st, 2006 at 10:10 pm e
Sam-க்கு Sam எழுதுவது,
அடுத்த தேர்தல்ல எனக்கும் செல்வனுக்கும் வேலை செய்யப் போறீங்களா? நல்லா இருக்கே! நாங்கள்ள உங்களுக்குத் தொண்டு செய்யணும்…

என்ன தேவ்,
நீங்க என்ன இதுக்கெல்லாம் அசர்ர ஆளா? இந்த வருஷ best indibloggies-க்கு ரெடி ஆகுங்க…சரியா..? all the best.

தருமி Says:
March 1st, 2006 at 10:14 pm e
மணியன்,
பாப்புலாரிட்டி ஓட் என்பது ஏற்கெனவே உள்ள பாப்புலாரிட்டி வைத்து என்றும் நினைத்தேன். ஆக இப்போ, நம்ம பாப்புலாரிட்டி எவ்வளவுன்னு தெரிஞ்சு போச்சு, பாத்தீங்களா?

ராகவன்,
நீதிக்கு இது ஒரு சோதனை அப்டிங்கிறீங்களோ?
தோத்தவங்க சொல்றதுக்குத்தான் என்னென்ன இருக்கு பாத்தீங்களா?

selvan Says:
March 1st, 2006 at 10:16 pm e
பார்ட்னர்

பார்த்தீர்களா உங்கள் ரசிகர் பட்டாளம் உங்களுக்கு தரும் அன்பை?நேரப்பிரச்சனையால் தான் இவர்களால் ஓட்டளிக்க முடியாமல் போய்விட்டது.நான் விழித்திருக்கும் நேரம் அங்கு இரவு.அங்கு இரவு என்றால் இங்கு பகல்.இருவரும் சேர்ந்து பேசவே முடியாமல் போய் விட்டது.ரசிகர்களாலும் ஆதரவு தர முடியாமல் போய் விட்டது.

இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?அன்பால் சேர்ந்த இந்த ரசிகர் படைக்கு நம் நன்றியை எப்படி சொல்வது என தெரியவில்லை.

Voice on Wings Says:
March 1st, 2006 at 10:40 pm e
தருமி, எனது மானசீகமான ஓட்டு உங்களுக்கு எப்போதுமே உண்டு யாருக்குமே ஓட்டளிக்கவில்லையென்றாலும், குமரனின் உழைப்பை இங்கு குறிப்பிட்டே ஆகவேண்டும். ஒவ்வொரு பதிவுக்கும் சென்று வோட்டு கேட்டிருக்கிறார், ஒரு உண்மையான அரசியல்வாதியைப் போல். அவருக்கும், இந்த போட்டியில் சிறப்பாகக் கலந்து கொண்ட உங்களுக்கும் எனது பாராட்டுக்கள்.

குமரன் Says:
March 1st, 2006 at 11:08 pm e
//ரோஜா அணியினர் அதிகாலையிலிருந்து செயல்பட்டு வெற்றிக்கனியை பறித்து விட்டனர்.//

இது தவறான தகவல். நாங்களும் எங்கள் நேரம் 9 மணிக்குத் தான் தொடங்கினோம். செல்வனுக்கு 10மணி என்பது எனக்கு 9 மணி (டயம் டிப்பரன்ஸ்). அதனால ஒரே நேரத்துல தான் தொடங்கினோம். என்ன எங்கள் உண்மை வலிமை எது என்று எங்களுக்குத் தெரிந்ததால், விளம்பரத்தில் கவனம் செலுத்தாமல் இதில் முழுமூச்சாய் இறங்கிவிட்டோம். நீங்கள் சுதாரிப்பதற்குள் நேரம் கடந்து விட்டது.

காலத்தின் கோலம் - நான் மிகவும் மதிக்கும் தருமி ஐயாவும், எனக்கு முதன்முதலாய் ரசிகர் மன்றம் தொடங்கிய அன்புச் செல்வனும் எதிரணியினராய்ப் போய்விட்டனர்.

ஜோ Says:
March 2nd, 2006 at 9:31 am e
//காலத்தின் கோலம் - நான் மிகவும் மதிக்கும் தருமி ஐயாவும், எனக்கு முதன்முதலாய் ரசிகர் மன்றம் தொடங்கிய அன்புச் செல்வனும் எதிரணியினராய்ப் போய்விட்டனர். //

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா!

suresh - penathal Says:
March 2nd, 2006 at 11:27 am e
குமரன்,

அதான் தேர்தல் முடிஞ்சுபோச்சு இல்ல.. இப்போ தெர்தலுக்குப் பிந்தைய கூட்டணிய ஆரம்பிச்சுடுங்க!

Padma arvind Says:
March 2nd, 2006 at 4:09 pm e
Dharumi
Was my vote valid or rejected… Next time please let me know. Oflate I have not been following ThamiZmanam. I know I voted for you but did not know for what and why? Am i a typical voter or what.

குமரன் Says:
March 4th, 2006 at 12:13 pm e
பெனாத்தல் சுரேஷ். சரியாச் சொன்னீங்க. தருமி ஐயாவுக்கும் எனக்கும் இருக்கும் கூட்டணி ஊர்ப்பாசக் கூட்டணியாச்சே. என்றும் அந்த அன்புக் கூட்டணி தொடரும். அடுத்த தடவை மதுரைக்குப் போகும் போது அமெரிக்கன் கல்லூரியில் படித்த என் நண்பர்களை எல்லாம் அழைத்துக் கொண்டு தருமி சாரைப் போய் பார்க்கவேண்டும்.

தருமி Says:
March 4th, 2006 at 5:23 pm e
Voice on Wings,
பாராட்டுக்களுக்கு நன்றி.

பத்மா,
“…Am i a typical voter or what.”//
Ha! definitely.. நம்ம ஊரு வாசனை போகுமா..

dharumi Says:
March 4th, 2006 at 5:36 pm e
குமரன்,
“அடுத்த தடவை மதுரைக்குப் போகும் போது .. அது எப்போது, குமரன்?
…அமெரிக்கன் கல்லூரியில் படித்த என் நண்பர்களை எல்லாம் அழைத்துக் கொண்டு தருமியைப் போய் பார்க்கவேண்டும். ……..அந்த ‘அன்புப் படையெடுப்பை’ எதிர்நோக்கியுள்ளேன்.

No comments: