Saturday, July 14, 2007

228. தொடரும் அநியாயங்கள் - இடப் பங்கீடு

சென்ற ஆண்டு ஏறத்தாழ இதே நேரத்தில் (06.06.2006) நான் இடப் பங்கீடு பற்றி எழுதிய ஒரு கட்டுரையில் U.P.S.C. தன் தேர்வு முறைகளில் நடத்தும் அநியாயங்கள் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். அதே சமயத்தில் ஷரத் யாதவ் இந்துவில் எழுதிருந்த ஒரு நடுப்பக்கக் கட்டுரையையும் பதிவிட்டிருந்தேன். U.P.S.C. தேர்வுகளில் உயர் மதிப்பெண் எடுத்துத் தேர்வுபெறும் O.B.C., S.C.,/S.T. -களை O.C. quota-வில் காண்பிக்காது விட்டு,(இது முறைகேடானது என்று உச்ச நீதிமன்றம் கட்டளையிட்டும்) இடப்பங்கீட்டு மோசடி செய்துவந்ததை எழுதியிருந்தேன். இந்த ஆண்டும் தேர்வாளர்கள் தங்கள் திறமையை மீண்டும் அரங்கேற்றியுள்ளார்கள். அதனை எதித்து சென்னை உயர்நீதி மன்றத்தில் பொதுநல வழக்கொன்று பதியப்பட்டுள்ளது.

நீங்கள் ஆண்டுதோறும் இப்படி வழக்கு போட்டுக்கொண்டேயிருங்கள்;நாங்கள் எங்கள் மோசடியைத் தொடர்ந்து நடத்திக்கொண்டேயிருப்போம் என்ற நிலை நீடிக்கும்போது நம் சட்டங்கள், சட்டங்களின் காவலான நீதிமன்றங்கள், நீதியை நிலைநாட்ட வேண்டிய அரசு என்று அத்தனை துறைகள் மீதும் நம்பிக்கையில்லாமல் போய்விடுகிறது. எல்லாமே 'அவர்கள்' கையில்; இதில் நாமென்ன செய்ய முடியும் என்ற கையறு நிலைக்குத்தான் வரவேண்டியதுள்ளது. சமூகநீதிக்குப் போராடுவதாகக் கூறும் அரசியல், சமூகக் கட்சிகளாவது இந்த தொடரும் அநியாயங்களுக்கு எதிர்க்குரல் கொடுக்கக் கூடாதா? இந்த தொடரும் அநியாயங்களை யாரும் நிறுத்தவே முடியாதா?

இந்த வழக்கு பற்றிய இன்றைய (14.07.2007) இந்துவில் வந்துள்ள செய்தி:

The petitioners contended that the UPSC continued to flout the Centre’s directives and the Supreme Court rulings, besides the constitutional provisions, by not including successful candidates from reserved categories in the open category.

The petitions said nearly 60 candidates belonging to the open category were unlawfully included in the merit list.

06.06.2006 அன்று நானெழுதிய பதிவில் வழக்கறிஞர் திரு. ப்ரபு ராஜதுரை அளித்திருந்த பின்னூட்டம்:

PRABHU RAJADURAI said…

உங்களில் யாரும் இதை அறிந்திருக்கிறீர்களா என்பது தெரியாது. மண்டல் கமிஷன் பரிந்துரையினை ஏற்று மத்திய அரசு பணிகளிலும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு ஏற்பட்ட பிறகு, இட ஒதுக்கீட்டினையே கேலிக்குறியதாக்கும் ஒரு மோசடி நடைபெற்றது. அதாவது, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அவர்கள் எவ்வளவு மதிப்பெண் பெற்றாலும் அவர்களை பொது வகுப்பில் தேர்ந்தெடுக்காமல் ஒதுக்கீட்டு பிரிவிலேயே தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இதன் விளைவு தாழ்த்தப்பட்டவர், பிற்படுத்தப்பட்டவருக்கான ஐம்பது சதவீதம் போக மீதி ஐம்பது சதவீதம் இவர்கள் அல்லாத முற்படுத்தப்பட்டவர்களுக்காக ஒதுக்கப்பட்டது.

இப்படி நடக்க முடியுமா என்று யாருக்கேனும் சந்தேகம் ஏற்பட்டால், இத்தகைய ஒரு செயலை எதிர்த்து, எனது நண்பர் சென்னையிலுள்ள மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் (CAT)ஒரு வழக்கு தொடர்ந்து அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட முழு விபரத்தினையும் தர முடியும். வேடிக்கை என்னவென்றால், இந்த தீர்ப்பினை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றம் சென்றது. உச்ச நீதிமன்றம் அந்த வழக்கினை எடுத்த எடுப்பிலேயே தள்ளுபடி செய்தது வேறு விஷயம்.



இந்துவில் வந்திருந்த ஷரத் யாதவ் எழுதிய கட்டுரையை 09.07.2006-ல் பதிப்பித்திருந்தேன்.அதில் இது தொடர்பான பகுதி மீண்டும் இங்கே ...


...but the UPSC has continued to deny meritorious candidates of reserved categories the right to join the civil services as general category candidates.


People controlling the UPSC and DoPT are so strongly motivated against the candidates of reserved categories that they can go to any extent in their adventure to block the entry of reserved categories in the civil services.

17 comments:

லக்கிலுக் said...

"கொடுமை கொடுமைன்னு கோயிலுக்கு போனா அங்கேயும் ஒரு கொடுமை தலைவிரிச்சு ஆடிச்சாம்"

என்றுதான் இந்த அநியாயங்கள் தீருமோ?

சிவபாலன் said...

அடக் கொடுமையே

இந்த அரசியல் கட்சிகள் ஆதரவு இருந்தும் ஒன்றும் செய்ய முடியவில்லையே இவர்களை..

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.......

சாலிசம்பர் said...

//தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அவர்கள் எவ்வளவு மதிப்பெண் பெற்றாலும் அவர்களை பொது வகுப்பில் தேர்ந்தெடுக்காமல் ஒதுக்கீட்டு பிரிவிலேயே தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்//

இப்படியும் நடக்குமா என்று ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை.இந்தக் கலிகாலத்திலேயே இவர்கள் இந்த அளவுக்கு பிராடு செய்தால் விழிப்புணர்வு அற்ற அந்தக்காலங்களில் எவ்வளவு செய்திருப்பார்கள்?

siva gnanamji(#18100882083107547329) said...

//உயர் மதிப்பெண் எடுத்து தேர்வு பெறும் O.B.C.,S.C/S.T களை
Open Quota வில் காண்பித்து...//

"காண்பிக்காமல்"?

எது சரியான சொல் என்று தெளிவாக்குங்கள்...

ஓருவேளை நான் குழம்புகிறேனோ?

மணியன் said...

தவறிழைப்பவர்களுக்கு தக்க தண்டனை கொடுக்கப்பட்டு வந்தால் சரியாகியிருக்கும். தவறு சரி செய்யபட்டவுடன் முதற்கண் தவறிழைத்தவர்களை விட்டு விடுவதால் ஆண்டுக்கு ஆண்டு ஒரே கதை அரங்கேறுகிறது.

//U.P.S.C. தேர்வுகளில் உயர் மதிப்பெண் எடுத்துத் தேர்வுபெறும் O.B.C., S.C.,/S.T. -களை O.C. quota-வில் காண்பித்து,(இது முறைகேடானது என்று உச்ச நீதிமன்றம் கட்டளையிட்டும்) இடப்பங்கீட்டு மோசடி செய்துவந்ததை எழுதியிருந்தேன். //

காண்பிக்காமல் என்று இருக்க வேண்டும் அல்லவா ?

நிர்வாகி (Admin) said...

கடுமையான கோபம் வருகிறது.


//இது முறைகேடானது என்று உச்ச நீதிமன்றம் கட்டளையிட்டும் ...

எனும்போது, உச்ச நீதிமன்றத்தின் 'கட்டளை' என்பது யாருக்கு?

இதை அவர்களின் சர்வைவல் திறமை என்பதா அல்லது பித்தலாட்டம் என்பதா?

கோபத்தில் ஏதாவது தவறான சொற் பயன்பாடு வந்துவிடக்கூடும். பிறகொரு முறை பேசுகிறேன்/எழுதுகிறேன்.

தருமி said...

சிவஞானம் அண்ணாஜி,
தவறைத் திருத்தி விட்டேன். சுட்டியமைக்கு மிக்க நன்றி

தருமி said...

மணியன்,
உங்களுக்கும் நன்றி தவறைச் சுட்டியமைக்கு. திருத்தி விட்டேன்.

தருமி said...

லக்கிலுக்,
உங்களைப் போன்றவர்களை மனத்தில் வைத்துதான் "சமூகநீதிக்குப் போராடுவதாகக் கூறும் அரசியல், சமூகக் கட்சிகளாவது இந்த தொடரும் அநியாயங்களுக்கு எதிர்க்குரல் கொடுக்கக் கூடாதா? " என்று எழுதியுள்ளேன். கொண்டு செல்ல முடிந்த இடத்திற்குக் கொண்டு செல்லுங்களேன்.

தருமி said...

சிவபாலன்,
//இந்த அரசியல் கட்சிகள் ஆதரவு இருந்தும் ஒன்றும் செய்ய முடியவில்லையே இவர்களை..//

இதனால்தான் அவர்களது கோஷங்களை நம்பக் கூடாது என்பதாகிறது. உண்மையான தெளிவான - ஓட்டுக்களை மட்டும் மனத்தில் கொள்ளாத - அரசியல் கட்சி என்று ஏதுமேயில்லையே என்பதுதான் வருத்தமாயுள்ளது.

தருமி said...

ஜாஜா,
இப்படியெல்லாம் ஆச்சரியப்படாதீர்கள் - தோண்டத் தோண்ட நிறைய இதுபோல் வரும்.

தருமி said...

கேள்வி,
//இதை அவர்களின் சர்வைவல் திறமை என்பதா அல்லது பித்தலாட்டம் என்பதா?//

என்ன கேள்வி இது கேள்வி ..??!!!!

குலவுசனப்பிரியன் said...

அடப்பாவிகளா. ஒருபுறம் களவாணித்தனம் செய்து பிழைப்பு நடத்திக்கொண்டே, இன்னொருபுறம் "வாழும் கலை" என்று களவாடப் பட்டவர்களின் மூளையை மழுங்கடிக்கப் பார்ப்பது (ஆத்திரத்தைப் பொருத்து வேறு வார்த்தையை பாவிக்கலாம்). இது உலகறிந்த தந்திரம்தான் என்றாலும், நம்மக்களுக்கு தாமதமாகவேனும் உங்கள் சூழ்ச்சி புரியாமல் போகாது.

குசும்பன் said...

என்ன கொடுமை இது!!! :(((

K.R.அதியமான் said...

Subject: reg : creamy layer misusing reservation policy

From : K.R.Athiyaman, Chennai - 96

To : Thriru.Ki.Veeramani Ayya Avargal, Chennai

Anbulla Ayya,

The creamy layer (that is, those who are upper middle class and above) among BC/SC/ST communities continue to enjoy the benifits of reservation unashamedly.
(i hail from such a family).

We propose that economic criteria should also be included as an additional qualification for being eligible for reservation benefits.
Families whose annual income is above say, Rs.1,80,000/- and where the parents are well educated may be deemed as FCs. And many schools,
where annual fees are above Rs.60,000 may be classified as FC schools.

Reservation was meant to be a short term issue and never a permenent institution as it has become now. And there should be a
standing committe consisting of eminent jurists, educationalists and honest people to perodically evaluate the effects/abuse of reservation benefits. The whole process should a dynamic one, not a static one, which is now a vote bank issue and nutured by vested interests. And there should be a
maximum limit for resrvation (and not the present >70%), which should be gradually brought down to zero.

And in promotion among govt staff only seniority, merit and efficency should be the criteria. Only one generation of any family must be eligible for the benefits.
Subsequent generation must be deemed FCs.

Unfair reservation benefits to numerous well off students has created resentment and heart burn among FCs and many fair minded people. The caste divisions has become more rigid and divisive (esp in govt offices).

I am sure Thandai Periyar and Ambedhkar would endorse my above views if they are alive today.
They were basicaly honest in all issues.

DK should have functioned as a bridge between BCs and SCs (esp in rural areas) and established
peace committes for stopping caste clashes. The aliented SCs have formed many organisations
of their own to fight for their rights, instead of joinning DK. Blaming brahmins alone for all
the ills of the society will not solve any thing.

Thanks & Regards

K.R.Athiyaman
Chennai

தருமி said...

athiyaman,
i would appreciate if you would share responses, if any, to your letter

K.R.அதியமான் said...

ithuvari onnum illenga...

ithai padithivittu thaan dondu sir, enakku muthan muthalil phone panninaar ; nalla nanparhallanom.

Post a Comment