Friday, June 25, 2010

405. சிங்கப்பூர் -- 'வாழை இலை'யில் பரிசளிப்பு

*
28.05.2010

28.05.2010 நாள் மாலை 6 மணிக்கு லிட்டில் இந்தியா எனப்படும் 'நம்மூர்' வாடை அடிக்கும் இடத்தில் உள்ள "வாழை இலை" (banana leaf) என்னும் உணவு விடுதியில் 'தஞ்சை அறை'யில் பரிசளிப்பு விழா சிறப்பாக நடந்தேறியது.


சிங்கைப் பதிவர்கள் எழுதிய 
கட்டுரைத் தொகுப்பான "மணற்கேணி" இன்று முறையாக வெளியிடப்பட்டது இந்த மாபெரும் விழாவை திரு.மா.அன்பழகன்,திருமதி சித்ரா ரமேஷ்,திருமதி ஜெயந்தி சங்கர், திரு விஜயபாஸ்கர், திரு.இராமகண்ணபிரான்,திரு.பாண்டியன், திரு.கவி, கவிஞர் பாலுமணிமாறன் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு சிறப்பித்தனர். மேலும் சிங்கப்பூர் வலைப்பதிவர்கள், வாசகர் வட்டம் உறுப்பினர்களும் கலந்துகொண்டு விழா சிறக்க துணையாக இருந்தார்கள். இவ்விழாவில் திரு. மா. அன்பழகனால் வெளியிடப்பட்ட மணற்கேணியில் உள்ள கட்டுரைகளைப் பற்றிய ஆய்வுரை ஒன்றை திருமதி. சித்ரா ரமேஷ் வெகு விளக்கமாகக் கொடுத்தார்.

அதன் பின், வெற்றியாளர்களுக்கான பரிசளிப்பு விழா நடைபெற்றது.
வலைப்பதிவில் செயல்பட்டும் இணையத் தமிழ்வளர்ச்சிக்கு உறுதுணையாகவும் இருந்து தற்போது மறைந்துவிட்ட தேனி எழுத்துறு தந்த தேனி உமர் தம்பி, தேன்கூடு திரட்டி உருவாக்கி மாதம் தோறும் சிறுகதைகள் போட்டி நடத்தி தமிழ்ப் பதிவர்களை ஊக்குவித்த திரு.தேன்கூடு சாகரன், கேன்சருடன் ஒரு யுத்தம் நடத்திக்கொண்டே தமிழ் வலையுலகில் கேன்சர் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் எழுதிய திருமதி.அனுராதா சுப்ரமணியன், தமிழ் கணிமை இணைய வளர்ச்சியில் பங்காற்றிய திரு.சிந்தாநதி அவர்களின் நினைவாக போட்டியில் வென்றோர்க்கு பரிசுகள வழங்கப்பட்டன.





வெற்றியாளர்கள் மூவரும் தங்கள் கட்டுரை பற்றிய கருத்துக்களை கூட்டத்தினரோடு கலந்துரையாடல் நடத்தினார்கள்.




கட்டுரைகள் பற்றிய கருத்துக்களை சிங்கை நண்பர்களும் பேசினார்கள்.




கருத்துரையாடல்களுக்குப் பிறகு இனிய இரவு உணவு - நம் தமிழ்நாட்டு உணவு, பிரியாணி .. இன்ன பிற - இனிதாக நடந்தேறியது.




கூட்டம் முடிந்த பின்னும், உணவுக்குப் பின்னும் நண்பர்கள் அனைவரும் இனிதாக உரையாடி மகிழ்ந்தோம். விடுதிக்குள் பேசியது போதாது என்பது போல், விடுதிக்கு வெளியேயும் நின்று நெடுநேரம் பேசி மகிழ்ந்தோம்.









வாழைஇலையில் இன்னும் கொஞ்சம் "பலகாரம்" பார்க்க ...


6 comments:

மதுரை சரவணன் said...

நல்ல பகிர்வு. கால்பந்து ஜூரத்தில் சிங்கப்பூர் மறந்து விட்டீர்களோ என்று நினைத்தேன்.. .புகைப்படங்கள் அருமை. வாழ்த்துக்கள்

மீனாட்சி சுந்தரம் said...

Nice post., one thing I would like to tell about Joseph Anna, in this function Anna looks so handsome. The reason behind it he was wearing my shirt !:)

துளசி கோபால் said...

படங்களுக்கு நன்றி.

நண்பர்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி.

ஆபிசர் said...

உங்கள் சிங்கை பதிவுகளில் சாப்பாடு பற்றிய விஷயங்கள் தவறாமல் இடம் பிடிக்குது.ஆங் இடப்பங்கீடா அது plate எவளோ ரூபா

தருமி said...

ஆப்பீசரு,
சாப்பாடு விதயமா ..? இதுவரை ஏதுமில்லையே. இனிமேதானே அதெல்லாம் வரும். :(

ஆ.ஞானசேகரன் said...

பதிவும் படமும் அருமை.. பகிர்வுக்கு நன்றிங்க ஐயா....

Post a Comment