Saturday, February 08, 2025

THE INCARCERATIONS - CONTENTS


நாயன்மார்கள் = சைவ அடியார்கள்;

ஆழ்வார்கள் = வைணவ அடியார்கள்

தீர்த்தங்கரர்கள் = சமண அடியார்கள்

வேதசாட்சிகள் = கிறித்துவ அடியார்கள்

தூதுவர்கள் – இஸ்லாமிய அடியார்கள்

இப்படி மதத்திற்கொரு வகை அடியார்களுண்டு. இவர்கள் தங்கள் தங்கள் மதக் கடவுள் மீதான அதீத நம்பிக்கையாளர்கள். தங்கள் கடவுளின் மீது மட்டற்ற அன்பு கொண்டவர்கள், ஆகவே அந்தந்த மதக்காரர்களிடமிருந்து பெரும் மதிப்பைப் பெறுகிறார்கள். இவர்கள் கண்ணால் காணாத கடவுளைத் தாங்கினார்கள்; நம்பினார்கள், தொழுதார்கள்; தங்கள் உயிரையும் கொடுத்தார்கள். இதனால் இவர்களுக்கு நாமும் மரியாதை கொடுக்கிறோம். உயரத்தில் வைத்துப் போற்றுகிறோம்.






ஆனால் இப்போது நான் மொழிபெயர்க்கும் நூலில் பேசப்படும் ஒருவர் நம்மோடு இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். 12 வயது வரை அமெரிக்க வாழ்க்கை. அவரது தாயாருக்கு டில்லி JNU பல்கலைக் கழகத்தில் பேராசிரியரானதால் அவருடன் இந்தியா வந்து, கற்றோர் மத்தியில் பலகலைக் கழகத்தின் வளாகத்தில் வாழ்ந்து, பின் கான்பூர் IIT-ல் முதுகலை முடித்தவர். தன்னோடு பயிலும் மாணவர்களில் பலர் அமெரிக்கக் கனவோடு இருப்பது தெரிந்தும், தொழிலாளர் நலனுக்காக பாடுபடவேண்டும் என்ற ஒற்றைக் குறிக்கோளில் தன் அமெரிக்கக் குடியுரிமையை வேண்டாமென்று கொடுத்து விட்டுத் தன் பணியைத் தொடர்ந்தார். தொழிலாளர்களுக்காகப் பணிபுரியும் அவர் அவர்களோடு வாழ்ந்தால்தான் சரியென்று நினைத்து, அதே முகாமில் ஒரே ஒரு அறை மட்டும் உள்ள வீட்டில் தங்கிக் கொண்டு, காலைக்கடன் கழிக்க கையில் குச்சியோடு அருகிலுள்ள வெளிப்புறப் பகுதிக்கு செல்ல வேண்டும். வெருட்டி வரும் பன்றிகளை விரட்டுவதற்குத்தான் அந்தக் குச்சி. 


தொழிலாளிகளுக்காகவே வாழும் இந்தப் பெண்மணிக்கு நகரத்து நக்சலைட் என்று பச்சை குத்தி நமது அரசு அவரைக் கைது செய்தது. மூன்றரை ஆண்டுகள் கழித்து வெளிவந்த இவர் இப்போது மும்பையில் தொழிலாளர்களுக்கானத் தன் பணியைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.




என்னால் நம்ப முடியாத அளவு ஒருவர் தன் வாழ்க்கையை முழுவதையும் தன்னைச் சுற்றியுள்ள தொழிலாளர்களுக்காக அர்ப்பணித்து விட்டார். இதைத் தான் மனிதம் என்பதா? இல்லை .. அதற்கும் மேல் என்றே தோன்றுகிறது. மேலே சொன்ன கடவுளுக்காகத் தன்னை அர்ப்பணித்த மனிதர்களை விட இவர் எவ்வளவோ மேல் என்றே எனக்குத் தோன்றுகிறது. இவர்களை மனித தெய்வங்கள் என்று சொல்வதே சரி. 

அந்த நூலில் இதுபோன்ற மனித தெய்வங்கள் நிறைய இருக்கிறார்கள். ஆச்சரியத்துடனும், அதிசயத்துடனும், மிகுந்த உணர்வு பூர்வமாக இந்த வேலையைச் செய்ய இவர்கள் தூண்டுகிறார்கள்.

 

Friday, February 07, 2025

THE INCARCERATIONS -- CONTENTS



இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் மேடையில் மோடியோடு நின்று கொண்டிருந்தார். கேமரூன் ஏடன், ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகங்களில் பயின்ற படிப்பாளி. பல்லாயிரக் கணக்கான மக்களை இதே மைதானத்தில் தனது பேச்சினால் கட்டிப் போட வேண்டும் என்ற கனவு கட்டிக் கொண்டவராகத்தான் இருந்திருப்பார். ஆனால் அவர் இப்போது ஓர் டீக்கடைக்காரர் மய்யமாக இருக்கும் காட்சியில் ஒரு சின்னக் கதாபாத்திரமாக ஓரத்தில் நின்று கொண்டிருந்தார்.....
பின்னாளில் அவர், “எனது நாட்டு மேடையில் நானே ஓர் அயலானாக, வேடிக்கைப் பொருளாக நின்று கொண்டிருந்தேன்’” என்று கூறியிருந்தார்.





THE INCARCERATIONS - CONTENTS



இந்தப் போராட்டம் வெறுமனே குடியரசைக் காப்பாற்றுவதற்காக மட்டும் எழுந்ததல்ல. அதனோடு சமூக நீதி, சிறுபான்மையினரின் உரிமைகள், பொருளாதார சூழ்நிலைகள் உரிமைகள், நியாயங்கள் பெறுவது என்பதும், உலகம் பொருளாதார மயமாகும் போது நடக்கும் சமமின்மை முற்றிலுமாக தகர்க்கப்பட வேண்டும் என்பவைகளும் இதில் அடக்கம். . இந்தப் போராட்டம் பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம், வேலை பெறுவதற்கான போராட்டம் என்பதையும் தாண்டி நமது அடிப்படை உரிமைகளைத் தக்க வைத்துக் கொள்ளுதல் என்பதும் அடங்கும். இந்த அடிப்படை உரிமைகள் உலக அளவில் அனைவருக்கும் அனைத்தும் சமம் என்ற நிலைக்கான போராட்டம். பி்.கோ. கைதிகள் 16 பேரும் இது போன்ற ஒரு சமூக மாற்றம் கொண்டு வருவதற்கே இந்த யுத்தத்தைத் தங்கள் கைகளில் எடுத்தார்கள்.
குடியரசுக்காக நடக்கும் இந்தப் போராட்டம் முடியவில்லை. இந்தியாவில் குடியரசு நலிந்திருப்பது அப்படியே விடக்கூடிய ஒன்றல்ல. இந்த நூல், அதன் வாசகர்கள் அனைவரும் குடியரசின் நன்மைக்காக இணைந்து ஒன்றாக நிற்க வேண்டும். அதுவே குடியரசிற்குக் காவலாக நிற்கும். நிமிர்ந்து நிற்கும் இந்த போராளிகளைப் பற்றி உலகம் அறிந்து கொள்வதும், அவர்கள் மேல் போடப்பட்ட வழக்குகள் எவ்வளவு திரிக்கப்பட்ட ஒன்று என்றும். உலகம் புரிந்து கொள்ள வேண்டும். உலகமே ஒன்று திரண்டு இந்த யுத்தத்தை, உலகின் தர்ம யுத்தமாக மாற்ற வேண்டும் அதன் மூலமாகவே குடியரசு இங்கேயும், உலகத்தில் எங்கேயும் புதிதாகக் காப்பாற்ற முடியும்.




THE INCARCERATIONS - CONTENTS






சிறையில் அடைபட்ட பிறகு ஸ்டேன் அவர்களின் உடல்நலம் மிகவும் மோசமாகப் போய்க் கொண்டிருந்தது. ஆனால் சிறை அதிகாரிகள் கூட மிகவும் இரக்கமின்றி ஸ்டேன் தன் பையில் எடுத்துச் சென்றிருந்த உறிஞ்சுகுழலுடன் கூடிய தம்ளரைக் கூட அவருக்கு தர மறுத்து விட்டனர்..தனக்கு அந்தத் தம்ளரைத் தர வேண்டும் என்று தேசிய புலனாய்வுத் துறைக்கு அவர் ஒரு விண்ணப்பம் கொடுத்திருந்தார். அதைப்பற்றி ஆராய்வதற்கு அந்த அமைப்பு 20 நாட்கள் எடுத்துக் கொண்டது. ஆயினும் முடிவில் அவரது விண்ணப்பம் முற்றிலுமாக மறுக்கப்பட்டது. நண்பர்கள் பலரும் பெரிய எண்ணிக்கையில் அந்த தம்ளரின் வடிவத்தை.சிறைகளில் தொடர்ந்து ஒட்டியதற்குப் பிறகு ஸ்டேன் அவசியத்திற்காக கேட்ட தம்ளர் அவருக்குக் கொடுக்கப்பட்டது. இந்தக் கருணை பிறப்பதற்கு 50 நாட்கள் தேவைப்பட்டது அங்குள்ளவர்களுக்கு! தம்ளர் ஓர் ஆயுதமல்ல.; ஆனால் அவருக்கு அது ஓர் அத்தியாவசிய தேவை; அது கிடைப்பதற்கு, மக்களின் கருணை பிறப்பதற்கு 50 நாட்கள் தேவையாகி விட்டது.
மனத்தளவில் இறுகிப் போயிருந்த ஸ்டேனின் மனது சிறையின் அழுத்தத்தால் மெல்ல நொறுங்கிப் போக ஆரம்பித்தது. .... தொடர்ந்து கேட்ட பிணையும் அவருக்குக் கிடைக்கவேயில்லை. இதயப் பிரச்சனையும் உண்டாகி சிறையிலேயே மரணம் அடைந்தார்.
2021 ஜூலை 5 மதியம் 1.30 மணிக்கு அவரது இறுதி மூச்சு காற்றோடு காற்றாகக் கலந்தது.