Friday, June 21, 2013

662. காணாமல் போன நண்பர்கள் - 20 - இங்கே காணாமல் போன பதிவர்கள்






*



அது .. இதுன்னு 8 வருஷம் முடிஞ்சி போச்சு - நான் பதிவராகி.

24.4.2005-ல் முதல் பதிவிட்டிருக்கிறேன். என்ன எழுதணும்னு அன்னைக்கும் தெரியலை; இன்னைக்கும் தெரியலை. ஆனால் இன்னும் விடாம எழுதிட்டு வந்திருக்கிறேன்.

பதிவுகள் போட்ட விவரம் இப்படி இருக்கு....

May (6)
► April (3)
► March (8)
► February (5)
► January (16)

► 2012 (78)

► 2011 (78)

► 2010 (105)

► 2009 (74)

► 2008 (43)

► 2007 (52)

► 2006 (67)

► 2005 (118)

ஆரம்பிச்ச வருஷம் ரொம்ப உன்னிப்பா இருந்திருப்பேன் போலும். 118 பதிவுகள். நிறைய சொந்தக் கதை சோகக் கதை எழுதியிருக்கிறேன். மதங்களைப் பற்றியும் எழுத ஆரம்பித்து விட்டேன். மதங்களைப் பற்றி எழுதினால் பின்னூட்டங்கள் எப்படியிருக்கும்? காட்ட சாட்டமாத்தான் இருந்தது.

2006 - இந்த ஆண்டும் கொஞ்சம் முக்கியமான ஆண்டாக இருந்திருக்க வேண்டும். மூட நம்பிக்கைகளுக்கு எதிர்த்து நிறைய பதிவுகள்; அடுத்து என்னை நீதி மன்றத்திற்கு இழுப்பேன் என்ற அச்சுறுத்தலுக்கு உள்ளான ‘இடப் பங்கீடு’ பற்றிய பதிவுகள்.

2007, 2008,2009 - வேகம் குறைந்த காலம் போல் தெரிகிறது.

2010 - இன்னும் கொஞ்சம் அதிகப் பதிவுகள்.

2011-லிருந்து பதிவுகள் குறைவு தான். (594-ம் எண்ணிக்கைக்குப் பிறகு பல மாதங்கள் மதங்கள் பற்றியேதும் இல்லை !!!)

பழைய பதிவுகளையும், அவைகளுக்கு வந்த பின்னூட்டங்களையும் பார்த்தேன். ஒரு வேற்றுமை நன்கு தெரிந்தது. பழைய காலத்தில் பின்னூட்ட எண்ணிக்கைகள் அதிகம். இதற்கு இரண்டு விஷயங்கள் காரணமாக இருக்கலாம். எழுதிய பதிவுகளின் ‘சூடு’ ஒரு காரணமாக இருந்திருக்கலாம். அடுத்து அப்போது பின்னூட்ட எண்ணிக்கைகள் பொதுவாகவே பதிவுலகத்தில் அதிகம். ஆனால் இப்போது பின்னூட்ட எண்ணிக்கைகள் எல்லோருக்குமே மிகக் குறைவு என்று தான் நினைக்கிறேன்.

எண்ணிக்கைகளை விட பழைய பின்னூட்டங்களைப் பார்க்கும் போது மனதில் ஒரு மகிழ்ச்சி. நிறைய பின்னூட்டங்கள் வெறுமனே ஒரு கருத்தைச் சொல்லிச் செல்வதற்குப் பதில் தனிப்பட்ட அன்பைப் பல பின்னூட்டங்களில் பார்க்க முடிந்தது. ஏதோ எழுதியிருக்கிறாய் .. நானும் ஏதாவது சொல்லிவிட்டுப் போகிறேன் என்றில்லாமல் எல்லாமே ஈரத்தோடு இருப்பதாகப் பட்டது. Many comments had a very personal touch. I could feel the warmth even when I read it now. மக்க்ள் நெருங்கியிருந்ததாகத் தோன்றுகிறது. பல சச்சரவுகள் இருந்தாலும் .. the stay was pleasant. அதுக்காக இப்போது மோசம்னு சொல்லலை. it is just neutral now! எல்லோரும் வர்ரோம் ... போறோம் அப்டின்றது மாதிரி.

அப்போ இருந்த நண்பர்களில் பலரை இப்போது ‘பார்க்கவே’ முடியவில்லை. போரடித்து ஒதுங்கி விட்டார்களா .. இல்லை.. வாழ்க்கையில் இன்னும் முக்கியமானவைகளில் ஆழ்ந்து ஈடுபட ஆரம்பித்து விட்டார்களா? சிலரை மீண்டும் இழுக்கக்கூட முயற்சித்தேன். அட .. போங்கய்யா .. பொழைக்கிற வழியைப் பார்க்கிறோம்னு சொல்லிட்டுப் போய்ட்டாங்கன்னு நினைக்கிறேன்.

அன்றும் இன்றும் அதே இளமையை எழுத்துக்களில் தொடர்ந்து ஓட விடுவது நம்ம துளசி டீச்சர் மட்டும் தான் என்று நினைக்கின்றேன். கூடாமல் குறையாமல் தன் அனுபவங்களை தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இவரைப் போல் நெடுநாட்களாக பதிவுலகில் நின்று நல்ல பதிவுகள் கொடுக்கும் பதிவர் வேறு யாராவது உள்ளார்களா? எனக்குத் தெரிந்து வேறு யாருமில்லை.

நெடுநாளாக ’காணாமல்’ போயிருந்த ஜிரா இப்போ வந்து அப்பப்போ எழுதுகிறார். ரொம்ப லேட்டஸ்ட்டா வந்தது  $செல்வன்.  நிறைய எழுதியவர்.இப்போ இந்தியாவுக்கே / கோவைக்கே வந்திட்டார். இனிமே எப்டின்னு பார்க்கணும். இக்பால் செல்வனை வாசிக்கும்போதெல்லாம் இந்த செல்வன் எனக்கு நினைவில் வருவதுண்டு. என்ன காரணமோ தெரியவில்லை. வெளிநாட்டிலிருந்து உள்நாட்டு விஷயங்களில் காட்டிய நாட்டமோ என்னவோ தெரியவைல்லை.

 பதிவுகளிலேயே இருவர் எழுத்தின் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. அவர்களைப் பற்றி முன்பே பல முறை சொல்லியுள்ளேன். ஒருவர் இளவஞ்சி.
Oh! .. no .. not Agassi ..!

இவரின் பல பதிவுகளில் முதல் பத்தியை சிரித்துக் கொண்டே படிக்க ஆரம்பிப்போம். ஆனால் பதிவை வாசித்து முடிக்கையில் கண்களில் கண்ணீர் இறங்கி ஓடும். என்ன கலையோ .. மனுஷனுக்கு மனச உருக்குற கலை கைவந்த கலை. நல்ல நகைச்சுவை உணர்வும் இருக்கும். அந்த வகைப் பதிவுகளும் நிறைய எழுதியிருக்கிறார்.
மொட்டும் மலரும்

நிழல்படங்கள் எடுப்பதிலும் வல்லவர். இன்னும் கோவிலுக்குப் போகும் காரைக்குடிப் பெண்களின் தலையில் இருந்த மல்லிகைச் சரப் படம் கண்முன் நிற்கிறது. இவரது கடைசிப் பதிவு: June 22, 2010

அடுத்தவர்  செல்வநாயகி. இவரைப் பற்றி என்னால் அதிகம் சொல்ல முடியாது. காரணம் அவரின் தமிழ். ஒவ்வொரு சொல்லும், எழுத்தும் அழகில் முக்குளித்து மிக்க அழகோடு பிறக்கும். அவரது கவிதை, உரைநடை .. எல்லாமே தனி அழகு. பின்னூட்டங்களில் கூட அவரின் தமிழ் நடைக்கு அழகுண்டு. இவரது பதிவுகள் பற்றிப் பேச, எழுத நல்ல தமிழ் வேண்டும். என்னிடம் அது இல்லை. ஆகவே ‘கழண்டு கொள்கிறேன்’!! இவரது கடைசிப் பதிவு  - ஜூலை 13, 2012.

இவர்கள் இருவரும் அதிகம் எழுதாதது தமிழுக்கு இழப்பு.. Don't attach any trace of  exaggeration to this. I MEAN it. 

இன்னும் பலர் நினைவில் வந்து போகிறார்கள்.

பலருக்கு ஒரு நல்ல ‘பிள்ளையார் சுழி’ போட்டுக் கொடுத்த காசி ...

முதன் முதல் பதிவெழுத வந்த போது உதவிய மதி கந்த சாமி ...


தன் ஒரே ஒரு பதிவால் - இந்து மதம் பற்றிய பதிவு - பலர் மனத்தில் இடம் பிடித்த தங்க மணி ...அப்பதிவை பின்னாளில் நான் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் பதிவுகளையும் காணோம்.

கடும் பின்னூட்டம் மட்டும் இடும் சுடலை மாடன் ...

அறிவு சார்ந்த பதிவுகள் மட்டுமே எழுதும் பத்மா அரவிந்தன் ...

தமிழ் .. திராவிடம் என்று பதிவுலகில் முழங்கிய  முத்து தமிழினி ..

அக்கரைச் சீமையில் இருந்து ஈழத்தமிழர் பற்றிய பல கட்டுரைகளும், நூல்களும் எழுதிய திரு ...

பாடப்புத்தகத்தில் வைக்கும் அளவிற்கு மிகத் தரமான கட்டுரைகள் - ஈழம், காஷ்மீர் போன்ற பல வரலாற்றுச் செய்திகளை உள்ளடக்கிய கட்டுரைகள் - எழுதிய தமிழ் சசி ...

இதுவரை ஒரு பதிவை வாசித்து மிகச் சத்தம் போட்டு சிரித்தேனென்றால் அது வரவனையானின் பதிவுக்குத் தான்.

flash வைத்து பல புதிர் போட்டிகள் நடத்திய பெனாத்தல் சுரேஷ் ...

சுறுசுறுப்புக்கே பெயர் வாங்கிய பொன்ஸ் ...

நகைச்சுவை, மாமியார் கதை, கும்மிப் பதிவுகள் - என்று பலவற்றையும் கலந்து கட்டிய கண்மணி ...

வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம் ஒன்றை வைத்து எல்லோரையும் சிரிக்க வைத்த இளைஞர் குழாம் ...

வெண்பா மன்னன் & குறுக்கெழுத்துப் போட்டி என்று உலுக்கியெடுத்த இலவசக் கொத்தனார் ...

என்னை பெரியப்பா என்றழைத்துக் கொண்டிருந்த மருத்துவர் ராமநாதன் ...

சினிமாக்குள் நுழைய முயற்சித்த கதைகளையெல்லாம் எழுதிய வெளிகண்ட நாதர் ...

இனிமையான நட்போடு இருந்த நெல்லை சிவா ...

இந்து மதத்தினைப் பற்றி நிறைய எழுதிய நேசகுமார் ...

நல்ல கருத்துக்களைத் தரமில்லாத வார்த்தைகளால் தந்தமைக்காக தமிழ்மணத்திலிருந்து விலக்கப்பட்ட ஆரோக்கியம் ...

சமயத்தொடர்புள்ள பதிவுகளில் நாட்டம் காட்டிய வசந்தன் ...

 என்னைத் தாத்தா என்றழைத்த மழை ஷ்ரேயா ...

'நல்லா இருங்கடே!!!'  என்று எல்லோருக்கும் ஆசி வழங்கும் ஆசீப் மீரான்...

தனக்கென தனிவழி என்று வாழ்ந்து காட்டி இன்னும் என்னை மிகுந்த பிரமிப்பில் வைத்திருக்கும்  ராமச்சந்திரன் உஷா ...

என்னோடு மதப் பதிவுகளில் வழக்கமாக ஒருவர் பின் ஒருவராய் வந்து என்னோடு வாதாடிய  இஸ்லாமியப் பதிவர்களில் மிக மட்டமான ‘மனிதன்’ - பின் வந்த  நல்லடியார்  -->  இறை நேசன்  --> நண்பன்  --> (இஸ்லாமியப் பதிவர்கள் அனைவரும் புனைப்பெயரில் மட்டுமே எழுதி வந்தபோது தன் சொந்தப் பெயரில் நான் சந்தித்த முதல் இஸ்லாமியப் பதிவர்) சுல்தான்  போன்றவர்கள் ...

என் கருத்துக்களோடு பலமுறை ஒத்திருந்த inomeno

அடிக்கடி என்னோடு ‘சண்டை’ போட்ட வஜ்ரா ..., முகமூடி ...

மாற்றுக் கருத்துகளை அளித்த மதுரைக்காரர் கால்கரி சிவா ...

நிச்சயமாக இன்னும் பலர் உண்டு. இவர்களும் என் காணாமல் போன நண்பர்களின் பட்டியலில் உள்ளவர்கள் தான்.  காணாமல் போன இவர்களையெல்லாம் மீண்டும் பதிவுகளில் ‘பார்க்கும்’ நிலை வந்தால் மிக்க மகிழ்ச்சி.







*


Thursday, June 20, 2013

661. குருவி கண்டேன் .. குருவியே கண்டேன் ...

*

அட போ’மா! உன்னைப் பார்த்து எத்தனை வருஷமாச்சு!

சும்மா வீட்டுக்குள்ள வந்து தகராறு செஞ்சிக்கிட்டு இருப்பாய். அப்போ உன்னைப் போய் விரட்டி விரட்டி அடிச்சேனேன்னு இப்போ நினச்சிப்  பார்க்கிற போது ரொம்ப கவலையாக இருக்குது. எத்தனை முறை நீ கட்டிய உன் வீடுகளைக் கலைத்துப் போட்டிருப்பேன்.














உன்னை ஒரு பெரிய தொல்லையாக நினைத்த நாட்கள் எத்தனை எத்தனை! உன் கீச்சல்கள் அன்று எரிச்சலைத் தந்தன. இப்போது அவைகளைக் கேட்டு நாளாகி விட்டனவே என்று வருத்தமாக உள்ளது.




உன்னைப் பார்த்து தான் எத்தனை வருஷங்களாகி விட்டன. உன்னைப் பார்ப்பதற்கே கூர்க் வந்தது போல் தெரிகிறது. உன்னைப் பார்த்ததும் அத்தனை சந்தோஷம். ஒரு கவலை. உன்னை ஒரு கூட்டமாகப் பார்க்க முடியாமல் உன்னைத் தனியாக, தனியாக இருந்த உன்னை மட்டும் பார்த்தத் கவலை தான். உன் கூட்டமெல்லாம் எங்கே போனது?!

இருந்தும் உன்னை மட்டுமாவது பார்த்தேனே. உன்னைப் பார்த்த இடம் கூர்க்கில் உள்ள ராஜாவின் திட்டு - RAJA'S SEAT - தனியாளாக நீ மண்ணில் புரண்டு ... பின் என் சத்தத்தில் மேலெழுந்து பறந்து கயிறொன்றில் அமர்ந்து இருந்த  சில நிமிடங்களில் உன்னை ஓரிரு முறை மட்டுமே ‘க்ளிக்’ பண்ண முடிந்தது.



கைத் தொலைபேசியின் கூண்டுகள் உன்னை விரட்டி அடித்து விட்டதாமே. எப்படியோ அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கிறீர்கள் போலும். உங்களைப் பார்க்க ... கூட்டமாகப் பார்க்க ஆவல். வருமோ அந்த நாள் .... ?


Wednesday, June 12, 2013

660. சின்னச் சின்ன கேள்விகள்







*



நக்சல்பாரிகள், மாவோயிஸ்டுகள் என்றாலே ’நல்ல குடிமக்கள்’ எல்லோரும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டுமோ? எனக்கு எப்போதும் அப்படித் தோன்றியதே இல்லை. அவர்கள் மேல் மரியாதை எப்போதும் எனக்கு உண்டு. இது தவறா?

ஆனால் எப்போதும் அவர்கள் மீது எனக்கு ஒரு கோபமும் உண்டு.அவர்களின் போராட்டங்களில் யாராவது அப்பாவி போலீஸ்காரர், காவல் துறை அவுட்போஸ்டுகள், பாவப்பட்ட மக்கள் சிலர், அதிகமாகப் போனால் நில பொறியாளர்கள் அல்லது ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் யாரையாவது கடத்திப் போவது, சிரமப் படுத்துவது, கொலையும் செய்து விடுவது என்பது போன்றவைகளைச் செய்யும் போது எனக்குக் கோபம் வருவதுண்டு. எய்தவனிருக்க ஏன் இவர்கள் அம்பை நோகச்செய்கிறார்கள் என்று.

சமீபத்தில் நடந்த சட்டிஸ்கார் போராட்டத்தில் சல்வார் ஜுடூம் நிறுவனர் மகேந்திர கர்மா கொல்லப்பட்டிருக்கிறார். வருத்தம் ஏதும் வரவில்லை.
நல்ல “கர்மா” ! பார்த்தாலே
நல்ல தலைவர் மாதிரி இருக்கார்ல ...?
இவர் உருவாக்கிய ’படை’ அத்துணை மாபெரும் செயல்களை இதுவரை நடத்தியிருக்கிறது. பஸ்கார் பழங்குடியாராக இருந்தும் குடி கெடுத்துள்ளார். பல கொள்ளைகள்; கொடுமைகள்; தீ எரிப்புகள். பெரும் கம்பெனிகளுக்காக நம் நாட்டு சொத்தை,அங்கு வாழும் மக்களின் சொத்தை ஒன்றிரண்டு கம்பெனிக்களுக்கு வாரிக் கொடுக்க எப்படித்தான் அரசுக்கும், அரசு அதிகாரிகளுக்கும், நம்மையாளும் மன்மோகன்களுக்கும், சிதம்பரத்திற்கும் ஆசை வருமோ தெரியவில்லை. இவர்களுக்கெல்லாம் மனசாட்சி என்று ஒன்று இருப்பதே இல்லையோ? 

நக்சல்பாரிகளுக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் அந்த மனசாட்சி இருப்பது பார்த்து மகிழ்ச்சி. எப்போதும் அம்பு எய்தவனை விட்டு அம்பின் மேல் கோபப்படும் புரட்சியாளர்களின் குறி இம்முறை சரியாக எய்துள்ளது. இப்படி சரியான ஆட்களைக் கொன்றால் தான் மன்மோகன் வகையறாக்களுக்கும் சிதம்பரங்களுக்கும் புத்தி வருமென்றால் அதுவே நல்ல வழிதான்.

ஆனால் பணத்தின் பின்னாலும் அதிகாரத்தின் பின்னாலும் ஓடும் நாய்களுக்கு நல்ல புத்தி இதனால் வந்து விடுமா என்பதும் ஒரு பெரிய கேள்வி.

*****************************

சமீபத்தில் மதுரையில் கட்டுப்பாட்டை மீறி கட்டப்படும் பல கட்டிடங்கள் மதுரை கலெக்டரால் மூடப்பட்டது. அன்சுல் மிஸ்ரா நல்ல கலெக்டர். பல நல்ல காரியங்களைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார். வாழி ...

ஆனாலும் இது போன்ற நல்ல அதிகாரிகளை நல்ல அதிகாரிகளாக எப்பொழுதும் இருக்க நமது அரசு இயந்திரங்கள் விடாது போலும். சென்ற கலெக்டர் சகாயம் சில நல்ல வழிகளை ஆரம்பித்தார். கல் குவாரிக் கொள்ளையைத் தடுக்க முதல் படியை அவர் எடுத்தார். அடுத்து வந்த மிஸ்ராவும் அதைத் தொடர்ந்தார். நீதி மன்றத்திற்கு வழக்கு போனது. சின்னாள் குவாரிக்காரர்கள் கைகள் முடக்கப்பட்டன. சில நாட்கள் போனதும் அவர்கள் ‘மீண்டும் கடை விரித்தாயிற்று’!

நம் நீதி மன்றங்களின் வேலையே இது தான் என நினைக்கிறேன். குற்றவாளி என்று ஒரு அரசியல் வாதியையோ நீதி மன்றத்திற்குக் கொண்டு வந்ததும் நம் நீதியரசர்களுக்கு எல்லாவித ‘நல்ல குணங்களும்’ மறுபடியும் பிறந்து பெருக்கெடுத்து ஓடும். குற்றவாளிகளை விட்டு விடுவார்கள். பிறகு நல்ல அதிகாரிகள் எப்படி நல்ல அதிகாரிகளாக இருக்க முடியும்.

பழைய வழக்கு ஒன்று நினைவுக்கு வருகிறது. டான்ஸி வழக்கு. நீதிபதி கடைசியில் குற்றவாளி தவறு செய்திருக்கிறார். அவர் அதை நினைத்து வருத்தப்பட்டாலே அது போதும் என்று நினைத்து தீர்ப்பையளித்தார்.

இப்போது பிக் பசார் கடை ஒன்றையும் மிஸ்ரா பூட்டி விட்டார். வண்டி நிறுத்த இடம் கொடுக்காமல் அந்தக் கட்டிடத்தைக் கட்டிமுடித்திருக்கிறார்கள். இதனால் அது தவறென்று கடை இழுத்துச் சாத்தப்பட்டது. ஓரிரு நாட்கள் தான். இப்போது கடை வழக்கம்போல் தன் பிசினசைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. கேட்டால், கட்டிடக்காரர்கள் நீதிமன்றம் சென்று ‘ஸ்டே’ வாங்கி விட்டார்களாம். என்னப்பா இது... ?

குற்றம் செய்தவனைக் கையும் களவுமாகப் பிடித்து கலெக்டர் தண்டனை கொடுக்கிறார். தவறைத் திருத்தினால் கடையைத் திறக்கலாம் என்றால் சரி. ஆனால் கோர்ட் தண்டனைக்குரியவனை இவ்வளவு எளிதாக வெளியே விட்டாச்சு. அவன் பிசினஸும் தொடர்கிறது. இங்கே கலெக்டர் இப்போது எங்கே தன் மூஞ்சை வைத்துக் கொள்வார்?

இப்படித் தொடர்ந்து நடந்தால எதற்காக ஒரு கலெக்டர் வேணும். எதற்காக அவர் இது போல் தவறு செய்தவர்களை “வெட்டித்தனமாக”  ஒன்றுமில்லாத தண்டனை ஒண்ணைக் குடுக்கணும். இது ஒரு கலெக்டருக்கே கேவலம் இல்லையா?
ஒண்ணும் புரியலைடா ...சாமி!

கலெக்டருக்கும் ஒரு கேள்வி:

அந்தக் கட்டிடம் கட்ட ப்ளானை அப்ரூவ் செய்த அதிகாரிகள் என்ன ஆனார்கள்? கட்டிடம் கட்டும்போது கார்ப்ரேஷன் அதிகாரிகள் அவ்வப்போது பார்வையிட வேண்டுமாமே ... அவர்கள் அப்போது தூங்கிப் போனார்கள். இப்போது அவர்களை முதலில் ‘உள்ளே’ போட வேண்டாமா? போட்டுட்டீங்களா, கலெக்டர்?

அதுவும் தெரியலையே .. சாமி!

**********************************

 கிரிக்கெட் கதையும் நல்லா கீது ...

அது யாரு ஸ்ரீசாந்த். இவருதான காசு வாங்கிட்டு ஆடினார்னு உள்ளே போட்டாங்க; அவரும் நண்பர்கள் மூலமா இப்படிப் பண்ணிட்டேன் அப்டின்னும் சொன்னாரே .. இப்ப வெளியே விட்டதும் அவர் லாயர் சொல்லிக் கொடுத்ததை சொல்றார்: அவர் எப்போதும் ஒழுங்காகவே விளையாடினாறாம்’!!!!

அவர் கேஸ் அம்புட்டுதான். நம்ம நீதி மன்றங்கள் இருக்கவே இருக்கு. கோடிக்கணக்கிலே தப்பு பண்ணினா அது ஒண்ணுமே பண்ணாதுன்னு ஸ்ரீசாந்துக்குப் புரிஞ்சி போச்சி ... அதான் இப்படி தத்துவமெல்லாம் பேசுறாரு ,,,

 நடக்கட்டும் மகாதேவா ... எல்லாம் நடக்கட்டும்.(நடந்தவை எல்லாமே நன்றாகவே நடந்தது ....)

***********************************

கோல்ப் ஆட்டத்திலும் சூதாட்டமாம்.
A bridie, I win, a bogey, you lose. அடப்பாவிகளா .. எதிலெதிலெல்லாம், எதற்கெல்லாம்  இப்படி ஆட்டம் போடுவீர்கள் !!!

 ***************************************


*

Friday, June 07, 2013

659. FRENCH OPEN 2013 - வாரே .. வாவ் ...!! அரை இறுதியில் நாடல் வெற்றி






*

Rafael Nadal beats Novak Djokovic to reach eighth French Open final



French Open-ல் நாடல் ஜெயிக்கணும்னு ஆசை.

ஆனால் மேட்ச் எங்க டிவியில வரலை.

இப்போ B.B.C.- ல ஆன் லைன் ஸ்கோர் போடுறாங்க. அஞ்சாவது செட்ல இப்போ ரெண்டு பேரும் 7-7. மாறி மாறி ஜெயிக்கிறாங்க.

யாரு ஜெயிச்சாலும் ரிக்கார்ட் செய்றாங்க.

நாடல் ஜெயிச்சா 8 வது தடவை ஒரே பந்தயத்தை வென்ற முதல் ஆள். 
சே ... கட்டாயம் ஜெயிக்கணும்.

ஜோக்கோவிச் ஜெயிச்சா அவருக்கு முதல் French Open.

இந்த தடவை உட்டா அடுத்த தடவை வேணும்னா எடுத்துக்கட்டும். இப்போ நாடல் ஜெயிக்கணும்.

ஸ்கோர் பாத்துட்டு வர்ரேன்.

நாடல் 8 : 7 அடுத்து ஜோக்கோவிச் செர்வீஸ் ... நாடல் லீட். எப்படி போகுதோ...?

சே .. இந்த தடவை டிவியில பார்க்க முடியாம போச்சே ...

ஸ்கோர் பார்க்கணும் .. கேம் போய்க்கிட்டு இருக்கு. இன்னும் நாடல் 8 : 7.

ஏன் மனசு இப்படி படக் .. படக்குன்னு அடிக்குது!



ஆஹா.... நாடல் ஜெயிச்சாச்சு. விசில் அடிக்கணும் போல் இருக்கு....!  


Nadal wins 9-7 in fifth set to reach the final
Djokovic wins 4th set 7-6 (7-3) in a tie-break
 Nadal breaks twice to win 3rd 6-1 in 37 mins
Djokovic wins second set 6-3 in 45 minutes
Nadal takes first set 6-4 in 51 minutes

அம்மாடி ... இனி பைனல்ஸில தல வந்திருவாரு ...


================================



சரி .. அப்படியே பைனல்ஸில் செரினாவும் வெல்லட்டும்.



*  

9.6.2013

தல ஈசியா ஜெயிச்சிருவாருன்னு நினைக்கிறேன்.  

முதல் செட்: 6 : 3 ஸ்கோரை சும்மா நெட் பேப்பர்ல பாத்து தெரிஞ்சுக்க வேண்டியதிருக்கு ...ஆட்டத்தைக்  கண்ணால பார்க்க முடியலையே .. :-(  

இரண்டாவது செட் இப்போ .. 3 : 0; ... 3 : 1; .. 4 : 1; .. 5 : 2; .. 6 : 2.

மூணாவது செட்: தல இப்போ முடிச்சிரும் ...ஸ்ட்ரெய்ட் வெற்றி தான் .. 1 : 0; . 2 : 2; .. 3 : 2; .. 3 : 3; .. 4 : 3; .. 5 : 3; .. 15:15.. 30:15..40:15 .. என்ன ஆச்சு .. சத்தமே காணோம் ,, 6 : 3  

தல ஜெயிச்சாச்சே .............! 





*

Thursday, June 06, 2013

658. காணாமல் போன நண்பர்கள் - 19 - தம்பியான அண்ணாச்சி!







*


”சித்தாள் வேலை”யைப் பற்றி ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன்.

அந்தக் காலத்தில் கல்லூரியில் lecturer post-க்கு முன்னால் tutor அல்லது demonstrator என்ற பணியிடங்கள் உண்டு. இந்த பணியிடங்களுக்கு இளங்கலை முடித்திருந்தால் கூட வேலை கிடைக்கும். ஆனால் முதுகலை முடித்து lecturer ஆக முடியாமல் / கிடைக்காமல் tutor அல்லது demonstrator பணியிடங்களுக்கும் போவது உண்டு. இதில் உள்ள சோகம் என்னவென்றால் இந்த இரு பணியிடங்களில் இருப்பவர்கள் மீது lecturerகளுக்கு மரியாதை பொதுவாக இருப்பதில்லை. துறையில் உள்ள “சின்ன வேலை”களுக்கு இந்தப் பணியாளர்களைப் பயன்படுத்துவதுண்டு. ஆகவே அதில் இருந்த நாங்கள் எங்களை ‘சித்தாள்கள்’ என்று அழைத்துக் கொள்வதுண்டு. கொத்தனார் சொல்றதையெல்லாம் கேட்கணுமே ...

இந்த சித்தாட்களில் பலர் lecturer பதவிகளில் இருப்பவர்களை விட அதிக மதிப்பெண்களோ, அதிகத் திறமையோ கொண்டவர்களாக இருக்கலாம். இருந்தாலும் மரியாதை என்னவோ குறைவு தான். இப்படி சித்தாள்களாக இருப்பவர்களுக்கு அந்தக் காலத்தில் இன்னொரு இடைஞ்சல் இருக்கும். இவர்களை எல்லா கல்லூரிகளிலும் தற்காலிக பணிகளில் மட்டுமே வைத்திருப்பார்கள். 10 A என்று அந்தப் பணியிடங்களுக்குப் பெயர். ஆகவே ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் அவர்களை கல்லூரியிலிருந்து ‘கழட்டி’ விட்டுவிடுவார்கள். அடுத்த ஆண்டு மீண்டும் அவர்கள் வேலையில் எடுத்துக் கொள்ளப்படலாம். ஒரு வேளை வேலை தொடராமலும் போகலாம். இதெல்லாம் முந்திய ஆண்டில் அவர்கள் ‘சேவை’ எந்த அளவு இருந்தது என்பதைப் பொறுத்தது. இந்த ‘சேவை’ என்பது அவர்களின் வேலைத் திறமையாக இருக்கலாம்.அல்லது துறையில் தலைமைக்குச் செய்யும் ‘சேவையாகவும்’ இருக்கலாம். அது துறைத் தலைவர் வீட்டில் நடக்கும் விழாக்களுக்கு வாழை மரம் தூக்கிவருவது .. காய்கறி வாங்கி வருவது ... போன்ற பணிகளாகவும் இருக்கலாம்.

ஒவ்வொரு ஆண்டும் கல்லூரி ஆரம்பிக்கும் காலங்களில் ‘சித்தாள்கள்’ பரிதாபமாக கல்லூரியையும், அவர்களின் துறைத்தலைவரின் அறையையும் ‘மந்திரித்து விட்ட கோழிகள்’ மாதிரி சுற்றிச் சுற்றி வருவார்கள். அனேகமாக துறைத்தலைவரின் கையில் தான் இவர்களுக்கு ஒரு கத்தியோ, கைப்பிடி அரிசியோ இருக்கும். துறைத்தலைவருக்குப் பிடிக்கவில்லையெனில் கத்தியை வீசி விடுவார். பாவப்பட்டால் அந்த ஆண்டுக்கு மட்டும் மறுபடி பதவி - கைப்பிடி அரிசி - போடுவார்.

எனக்கு வேலை கிடைக்கும்போது lecturer பதவிக்குத்தான் போனேன். ஆனால் அப்போது அந்த பணிக்கு இடம் இல்லை; இன்னும் சில மாதங்களுக்கு மட்டும் demonstrator வேலையில் சேர்ந்தால் அடுத்த ஆண்டே lecturer பதவி என்றார்கள். சரியென்று சேர்ந்தேன். ஆனால் அடுத்த ஆண்டு கல்லூரி நிர்வாகம் சென்ற ஆண்டு lecturer இல்லாமலே வேலை செய்தீர்களே அதேபோல் தொடர்ந்து இருங்கள் என்று சொல்லி விட்டார்கள். ஆனால் துறையிலும், துறைத்தலைவரிடமும் முதலிலே இருந்தே நல்ல பெயர் வாங்கி விட்டேன். படிக்கும் போது கல்லூரியில் துறைத்தலைவருக்கு செல்லப்பிள்ளை என்றிருந்தேன். அதே போல் இங்கே துறைத் தலைவருக்கும் செல்லப் பிள்ளையாக ஆகியிருந்தேன். அருமையான துறைத்தலைவர். அவரைப்போல் யாரையும் அவ்வளவு உயர்வாகச் சொல்ல முடியாத அளவுக்கு மிக நல்ல பேராசிரியர். பேராசிரியர் நாராயணன். இருந்தும் எனக்கு வாய்ப்பில்லை. ஆகவே demonstrator ஆக நான்கு ஆண்டுகள் அந்தக் கல்லூரியில் இருந்தேன்.

சித்தாள் என்ற வேலை; ஆனால் மரியாதையும், அன்பும் நிறையவே எனக்கு துறையில் நிறையவே கிடைத்து வந்தது. என்ன நேரமோ .. என்னவோ .. நம்ம ஆங்கிலத்திற்கும் அங்கு ஒரு மரியாதை கிடைத்தது. அதுவும் ஆங்கிலத்துறையில் தனி மரியாதை. ஏனெனில் அங்கிருந்த ஆங்கிலத் துறைத்தலைவர் இலங்கையிலிருந்து வந்தவர். நல்ல பண்பாளர். பேராசிரியர் ஆரோக்கிய சாமி. அவர் ஒரு விஷயத்தில் ரொம்ப ஸ்ட்ரிக்ட். என்னன்னா ... கல்லூரி வளாகத்தில் அவரிடம் ஆசிரியர்கள் பேச வேண்டுமானால் ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டும். இல்லாவிட்டால் விரட்டி விடுவார். ஆனால் நான் அவரோடு கல்லூரியில் மட்டுமல்லாது ரயிலிலும் ஒன்றாக, சமமாக உட்கார்ந்து கதை பேசிக்கொண்டிருப்பேன். அதைப் பார்க்கும் மற்ற ஆசிரியர்களுக்கே ஆச்சரியம். அந்த ஆச்சரியத்தை எனக்கு அனுசரணையாக்கிக் கொண்டேன்!

ஆங்கிலத்துறையில் நிறைய tutors இருப்பார்கள். இதில் சிலர் மட்டும் B.A. ஆங்கிலம் படித்திருப்பார்கள். இவர்களில் பலரும் ‘இங்கிலீஸ்கார குட்டிகள்’ என்ற நினைப்பில் அலைவார்கள். இவர்களோடு M.A. Economics படித்தவர்களும் இருப்பார்கள். இவர்கள் எல்லோருக்குமே ஆங்கிலத் துறையில் step-motherly treatment மட்டும் தான் கிடைக்கும். அதாவது இவர்கள் சித்தாள்கள் மட்டுமல்ல .. orphaned  சித்தாள்கள்! என் சப்போர்ட் எப்பவுமே இந்த இரண்டாம் குழுவின் பக்கம் தான். அதனால் முந்திய க்ரூப் நம்மிடம் கொஞ்சம் வாலாட்டும். ஆனால் நமக்கு அவங்க துறைத் தலைவரே தோஸ்த் ஆச்சே .. அதனால் என்னிடம் ரொம்பவும் வாலாட்ட மாட்டார்கள். ஆட்டிய வாலை ஒட்ட நறுக்கிய சில நிகழ்ச்சிகளும் - எல்லாம் academic விஷயங்கள் தான் - நடந்து, நம்ம கொடியை வானளாவ பரவ விட்டிருந்தேன்!

நான் வேலைக்குச் சேர்ந்த அடுத்த ஆண்டில் முருகேசன் என்ற ஒருவன் ஆங்கிலத்துறைக்கு வேலைக்கு வந்தான். இவன் M.A. Economics. ஆங்கிலத்துறையில் tutor ஆகச் சேர்ந்தான். P.U.C.யில் நாங்கள் ஒரே கல்லூரி - St.Xavier's. இவன் வேலைக்குச் சேர்ந்த பின் தான் எங்களுக்கு இது தெரிந்தது. ஆள் படு உயரமாகவும் பருமனாகவும் இருப்பான். நான் அவனுக்குப் பக்கத்தில் இருந்தால் அவன் தோள் வரைதான் குச்சியாய் ஒட்டிக்கொண்டு இருப்பேன். இவன் சின்ன வயசுக்காரன் என்றாலும் உருவத்தால் பெரிய ஆள் போல் இருப்பான். சுத்த நயம் கருப்பு. நெல்லைக்காரன். அவனை உடல், நிறம், ஊர் எல்லாம் வைத்து கல்லூரியில் அவனை ஏறத்தாழ பலரும் ‘அண்ணாச்சி’ என்று அழைத்து வந்தார்கள். இப்போ தொலைக்காட்சியில் அண்ணாச்சின்னு ஒருத்தர் காமடி நிகழ்ச்சி நடத்தி வர்ராரே அவர் மாதிரியே இருப்பான். நம்ம ஒரு வித்தியாசமான ஆளு இல்லையா ... அதனால் நான் மட்டும் அவனை ‘தம்பி’ என்று அழைப்பேன்.

முதலாண்டு வேலை பார்த்தான். இரண்டாம் ஆண்டு நான் சொன்னது மாதிரி மந்திரிச்சி விட்ட கோழியாக அலைந்தான். வேலை நிச்சயமாக ஆகும் வரை அவன் இருந்தது என் அறையில் தான். காலையில் எழுந்து குளித்து விட்டு நெற்றியில் முகப்பவுடரை வைத்து ஒரு கீற்று போட்டுக் கொள்வான்.

 ’இது எதுக்குடா ..?’ என்பேன். அவன் அப்போவே சாமியெல்லாம் கும்பிட மாட்டான்னு தெரியும்.

‘உனக்கு ஒண்ணும் தெரியாதுடா ... நம்ம மூஞ்சிக்கு இந்த மாதிரி திருநீர் வச்சா கெத்தா தெரியும். உன் ரூம்ல திருநீர் இல்ல. அதான் பவுடர்’ என்பான்.

சொன்னது மாதிரியே அந்தக் கீற்று அவனுக்குப் பொருத்தமா இருக்கும். கல்லூரி போகும் முன்னே அவனைப் பார்க்க நிறைய பேர் வருவார்கள். அப்படி வருபவர்கள் எல்லோருமே அந்த ஆண்டு தன் பையனுக்கு எங்கள் கல்லூரியில் இடம் தேடி வருபவர்களாக இருப்பார்கள். அவர்கள் இவன் மேல் அம்புட்டு நம்பிக்கையோடு பேசிவிட்டு, தங்கள் பையனின் விண்ணப்ப விவரங்களைக் கொடுத்து விட்டுச் செல்வார்கள். அவர்கள் முன்னாலேயே அந்தப் பையனின் பெயர் போன்ற குறிப்புகளை இவனும் ஒரு தாளில் எழுதி வைத்துக் கொள்வான். கட்டாயம் பார்த்துக் கொள்கிறேன் என்பான். ஆனால் உண்மையில் அவனுக்கு அப்போது கல்லூரியிலேயே வேலை கிடைத்திருக்காது.

’இதெல்லாம் எதுக்குடா..?’ என்றால், ‘என்ன பண்ணச் சொல்ற... எனக்கு வேலையே இல்லைன்னு அவங்ககிட்ட சொல்லிட்டு இருக்கணுமா ... என்பான்.

அதே போல் அப்பப்போ அந்த லிஸ்டை எடுத்து சில பெயர்களுக்கு முன்னால் டிக் போட்டுக் கொள்வான். அதாவது அவன் அந்தப் பையனைப் பற்றி துறைத்தலைவருக்கு சொல்லி விட்டானாம். அதே போல் யாராவது ‘சார் .. பையனுக்கு இடம் கிடச்சிருச்சி சார்’ என்றால் உடனே அந்தப் பெயரை அடித்துக் கொள்வான்.

அவனுக்கு உடல் பருமனால் கிடைத்த பெருமை அது. ஆனால் ஆளுக அந்தப் பக்கம் நகர்ந்தால் தனக்கு வேலை கிடைக்குமா இல்லையா என்ற சோகத்தில் இருப்பான். இப்படியாக இரு ஆண்டுகள் அங்கு வேலை பார்த்து தெற்கே வள்ளியூர் என்ற ஊரில் இருந்த புதுக்கல்லூரிக்கு lecturer வேலை கிடைத்து சென்றான். போகும் முன் சேர்ந்து ஒருபோட்டோவெல்லாம் எடுத்துக் கொண்டோம். அதற்குப் பிறகு அவனைப் பார்க்கவேயில்லை .....


*