Thursday, September 15, 2005

67. நான் ஏன் மதம் மாறினேன்...?..6

*

*

தொடர்புடைய மற்றைய பதிவுகள்:

1.
2.
3.
4.
5.
6.
7.http://dharumi.blogspot.in/2006/09/175-7.html
8.



முதலில் பதிந்த நாள்:13.09.05



நல்லவேளை...67-வது பதிவில் இந்த தொடர்பதிவின் 6-ம் பகுதி வந்துள்ளது. இது ஒரு தற்செயல்தான். ஆனால், இதே பதிவை நான் 66-ம் பதிவாக பதிந்திருந்தேன் என்று வைத்துக்கொள்ளுங்கள் இன்னொரு interesting-ஆன விதயம் நடந்திருக்கும். '666' என்ற எண் பைபிளில் 'அந்தி கிறிஸ்து' - anti-Christ என்ற 'பேய்' க்கு உரியது. இது வந்து என்னென்னவோ செய்யப்போகிறதாம். Omen படம் பார்த்தவர்களுக்கு இது தெரிந்திருக்கும். அப்படி நான் 66 வரிசை எண்ணில் 6-வது பகுதியை எழுதியிருந்தால் தருமிதான்அந்த பேய் என்று சொல்லியிருக்கலாம் ! நான் நினக்காத ஒரு சிறு பதிவை 66-ல் போட்டதால் இது 667 ஆகிவிட்டது. எல்லாம் தற்செயல்தான். நல்ல வேளை 'பேய் ஆவதிலிருந்து' தப்பித்தேன் !!


ஒரு கிறித்துவ மதவாதி என்னிடம் ஒரு முறை சொன்னது: 666 ஒரு பேய் மனிதனாகவோ, மனிதப் பேயாகவோ இருக்கவேண்டியதில்ல; WWW என்பதுதான் வரப்போகும் அந்தப் பேயைக் குறிக்கிறது; அதாவது மனித குலத்தின் அழிவே வலையுலகத்தால்தான் (internet) என்றார் ! வலைஞர்களே, ஜாக்கிரதை! நம்பிக்கைகள்தான் எப்படியெப்படி எல்லாம் இருக்கின்றன !!


இப்போ... நம்ம விதயத்திற்கு வருவோம்...


இஸ்லாம்:

யூத மதத்திற்கு - பழைய ஏற்பாடும், டோராவும் (Torah); அதன் பின் வந்த கிறித்துவத்திற்கு பழைய ஏற்பாடும், பைபிளும்; அதன் பின் வந்த இஸ்லாமிற்கு பழைய ஏற்பாடும், குரானும். இந்த மூன்று மதங்களும் ஆபிரகாமிய மதங்கள் என்றோ, semitic religions என்றோ அழைக்கப்படுகின்றன. யூத மதம் மோசஸ் காலம் வரை பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்டவைகளை உள்ளடைக்கியது. Ten Commandments படக் கதைதான். அவர்களைப்பொறுத்த வரை மனிதர்களை மீட்க 'மெஸையா' இன்னும் வரவேண்டும்; அதற்காகக் காத்திருக்கிறார்கள். கிறித்துவர்களுக்கோ மோசஸ் காலத்திலும் அதற்கு முன்பும் சொல்லப்பட்ட - கடவுளால் வாக்களிக்கப்பட்ட - 'மெஸையா'தான் ஏசு. ஏசுவின் வருகை வருமுன் உறைக்கும் 'தீர்க்க தரிசி'கள் (Prophets)பலரால் முன்மொழியப்பட்டதாகவும், அவை அப்படியே நிறைவேறின என்பதும் கிறித்துவர்களின் நம்பிக்கை. தந்தை (Holy Father), ஜெஹோவா என்றழைக்கப்படும் முதல் கடவுளின் ஒரே மகனே ஏசு என்பது கிறித்துவர்களின் நம்பிக்கை. மூன்றாவதாக, மேற்கூறிய Torah-வும், பைபிளும் மனிதர்களால் திரிக்கப்பட்டு விட்டதால் இறுதியாக கடவுளால் (அல்லாஹ்) முகமது நபிக்கு ஜிப்ரீல் (Gabriel) என்ற கடவுளின் தூதன்(arch-angel) மூலம் ஹீரா என்ற மலையிலுள்ள ஒரு குகையில் கொடுக்கப்பட்டதே 'இறுதி வேதமான' குரான் என்பது இஸ்லாமியரின் நம்பிக்கை.

முகம்மது 570 கி.பி.-ல் க்வாரிஷ்(Quraish) என்ற அரேபிய குலத்தில் (Tribe) பிறந்து, கதீஜா என்ற பணக்காரப் பெண்ணின் கீழ் வேலை செய்து, பின் அவரையே திருமணம் செய்திருக்கிறார். அதன் பின் 610-ல் கடவுளின் தூதரால் 'கடவுளின் கட்டளைகள்' மனிதர்களுக்காக அருளப்பட்டது என்பதாகவும், தனக்கு எழுதப்படிக்கத் தெரியாத நிலயில் தான் எப்படி கடவுளின் வார்த்தைகளை எழுதிவைக்கமுடியும் என்ற அச்சத்தையும், ஐயத்தையும் ஜிப்ரீல் தீர்த்துவைத்ததாகவும் சொல்லப்படுகிறது. இதிலேயே, முகமது ஒரு பெரிய வியாபாரத்தைக் கவனித்துக் கொண்டிருந்தவர் என்ற முறையில் எப்படி எழுதப்படிக்கத் தெரியாதவராக இருந்திருப்பார் என்ற கேள்வியும், இஸ்லாம் அறிஞர்களுக்குள்ளாகவே முகமது எழுதப்படிக்கத் தெரிந்தவர்தான் என்பதான கருத்தும் உண்டு. அது எப்படியிருப்பினும் அதற்கு எவ்வித முக்கியத்துவம் தரவும் தேவையில்லை. முகமதே ஜிப்ரீலின் வார்த்தைகளில் நம்பிக்கைகொள்ளத் தயங்கியபோது கதீஜா அவருக்குத் தைரியம் கூறியுள்ளார். 595 to 619 வரை கதீஜாவுடன் மட்டுமே திருமண வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார் முகமது. அவரது கூற்றுக்களில் முதன் முதல் நம்பிக்கைவைத்தவர் மனைவி கத்தீஜாதான். அதன் பிறகு 10 வயதான Ali ibn Abi Talib என்பவரும், அதன்பின் அவரது நெருங்கிய நண்பரான அபு பக்கரும் அவரைப் பின்பற்றினர். அதன்பின் முகமதின் பின்சென்ற மெதீனா முஸ்லீம்களுக்கும், மெக்காவிலிருந்தவர்களுக்கும் பலமுறை யுத்தம் நிகழ ஆரம்பிக்கின்றது. ஹதீஸ்களில் சொல்லப்பட்டவைகளை வைத்து அவரது பிந்திய வாழ்க்கை வரலாறு அறியப்படுகிறது. அந்த வரலாறுகளைச் சுருக்கிச் சொல்லும் முகமாக ஒரு சிறு அட்டவணை:

618 Medinan Civil War
624 Battle of Badr
625 Battle of Uhud
627 Battle of the Trench
628 Conquest of the Jewish oasis
629 Attack on Byzantine empire fails
630 Attacks and bloodlessly captures Mecca
630 Battle of Hunayn
630 Siege of al-Ta'if
631 Subjugates Arabian peninsula tribes
632 Attacks the Ghassanids: Tabuk

ஆக, 40-வது வயதில் கடவுள் தூதனின் தரிசனம்; 48-வது வயதிலிருந்து போர்முனையில் வாழ்க்கை. . 15 ஆண்டுகள் போர்வீரனாகவும் வாழ்வு. இதில் சில போர்முனைகள் வெற்றியைத் தந்தன; சில தோல்விகளைத் தந்தன. (வெற்றிக்குக் காரணம் அல்லாஹ்வின் ஆசி என்றால், தோல்விகளுக்கு யார் காரணம் - இந்தக் கேள்வி Omniscience பற்றி நான் எழுதிய முதல் பதிவின் தொடர்ச்சியாகக் கொள்ளவும்.)


இதன் பின் அவரது திருமண வாழ்க்கை:

இது பற்றி அதிகம் பேச விரும்ப வில்லையாயினும் சில முக்கிய சம்பவங்களைப் பற்றி மட்டும்: கத்தீஜாவிற்குப் பிறகு 9 அல்லது 10 மனைவியர் என்பது வரலாறு. அதில், மூன்று திருமணங்கள் மட்டுமே (என்னைப் பாதித்தவை) குறிப்பிடத் தக்கவை.

1 ஆயிஷா - முகமது இப்பெண்ணை மணம் முடிக்கும்போது அவரது வயது 50-க்கு மேல்; பெண்ணுக்கோ 9. (இல்லை, 15 என்ற கருத்தும் உண்டு).(இராமாயண சீதாதேவி கதையின் சாயலில் ஒரு நிகழ்ச்சியும் உண்டு)Sahih Muslim Book 008, Number 3310: 'A'isha (Allah be pleased with her) reported: Allah's Apostle (may peace be upon him) married me when I was six years old, and I was admitted to his house when I was nine years old.'

2. Zaynab bint Jahsh- ஜேனாப் என்ற இந்தப் பெண்மணி முகமதின் வளர்ப்பு மகனின் மனைவி; வளர்ப்பு மகன் விவாகரத்து செய்த பின் இப்பெண்ணை முகமது மணம் முடிக்கிறார்.

3. ஜுவேரியா - இந்தப் பெண்ணின் கதை மனசுக்குக் கொஞ்சம் கஷ்டமாயிருந்தது. போரில் தோற்றவனின் மனைவி விரும்பாத ஒருவனின் மனைவியாவதைத் தவிர்க்க, பேரம் பேசப்பட்டு, முகமதின் மனைவியாகிறாள். எந்த நூற்றாண்டாயிருந்தால் என்ன..பெண்கள் நிலை எங்கும் எப்போதும் ஒரே மாதிரிதான் போலும்!


முகமதின் மனைவிமார்கள்:
Hafsa bint Umar
Juwayriya bint al-Harith
Khadijah bint Khuwaylid
Maria al-Qibtiyya
Maymuna bint al-Harith
Ramlah bint Abu Sufyan
Safiyya bint Huyayy Sawada bint Zama
Umm Salama Hind bint Abi Umayya
Zaynab bint Jahsh
Zaynab bint Khuzayma



இனி என் ஐயங்கள்:


1.)பழைய ஏற்பாடு இரு (கிறித்துவம், இஸ்லாம்)மதத்தினருக்கும் பொது எனப்படுகின்றது. கிறித்துவர்களின் பைபிளில் ஆதாம் - ஏவாள் படைப்பைப் பற்றி சொல்லும்போது ஆணின் விலா எலும்பிலிருந்து பெண் படைக்கப்பட்டாள் என்பதை, இது ஓர் ஆணாதிக்க விளக்கம் என்று கூறியிருந்தேன். ஆனால், முஸ்லீம் எழுத்துக்களில் அந்த முதல் பெண்ணுக்குப் பெயரே இல்லை. பெயர் தரும் அளவிற்குக்கூட பெண்ணுக்கு முக்கியம் இல்லையோ? (இக்கேள்விக்குப் பதில் கிடைத்துள்ளது; ஆவா என்ற பெயர் அம்முதல் பெண்ணுக்கு. ஆகவே இக்கேள்வியைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன்.)

2.) ஆதாம் கடவுளால் தோற்றுவிக்கப் பட்டான்; ஏவாள் அவனது விலா எலும்பிலிருந்து உண்டாக்கப் பட்டதாக பழைய ஏற்பாடு சொல்கிறது. இஸ்லாமில் மனிதன் உறைந்த ரத்தத்திலிருந்து உண்டாக்கப் பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. அது யாருடைய ரத்தம்? மனிதன் படைக்கப் படுவதற்கு முன் எங்கிருந்து ரத்தம் வந்தது? ஒருவேளை கடவுளின் ரத்தமாக இருக்குமோ?

3.)ஆபிரஹாமின் வழித்தோன்றல்கள்தான் கிறித்தவர்களும், இஸ்லாமியரும் - பழைய ஏற்பாட்டின் படி. அதை இஸ்லாம் ஏற்றுக்கொள்கிறதா? (ஏனெனில், குழந்தை இல்லா ஆபிரஹாமுக்கும் அவர் மனைவி சாராயின் அடிமைப் பணிப் பெண்ணான ஆகாருக்கும் பிறந்த குழந்தையான - 'இஸ்மயேலின்' சந்ததிகள்தான் பின்னால் இஸ்லாமியர்களாக ஆனார்கள் - என்கிறது பழைய ஏற்பாடு.) அதோடு, கடவுளின் தூதர் இஸ்மயேலைப் பற்றி சொல்லும் "நல்ல" வார்த்தைகள்...? (ஆதி. 16, 17) அவைகளை நான் இங்கு தர விரும்பவில்லை; வேண்டுமென்றால் தெரியாதோர் அங்கு சென்று வாசித்துக் கொள்ளவும்.

4.)யூதர்களுக்கு அருளப்பட்ட தோராவும், கிறித்தவர்களுக்குக் கொடுக்கப்பட்ட புதிய ஏற்பாடும் திரிக்கப்பட்டு விட்டதாலேயே 'இறுதி' வார்த்தைகளாக குரான் கொடுக்கப்பட்டது என்ற வாதம் ஒன்று வந்தது. இது ஏதோ மதங்களின் பரிணாம வளர்ச்சிபோல சொல்லப்பட்டு, அந்தப் பரிணாம வளர்ச்சியின் 'இறுதி நிலை'தான் (the final format)இந்த இஸ்லாம் என்பதுபோல கூறப்பட்டது. உலகம் என்ன இந்த மூன்றே மூன்று மதங்களை மட்டுமா கொண்டுள்ளது. ஆயிரக்கணக்கான மதங்கள்; நம்பிக்கைகள் - அவைகளில் இந்த மூன்றும் உண்டு; அவ்வளவே. நம் பார்வைகள் அகன்றிருக்க வேண்டிய அவசியம் இந்த விவாதத்திலிருந்து தெரியும்.

5.)'கண்ணுக்குக் கண்; பல்லுக்குப் பல்' (மத். 6: 38) என்பது பழைய ஏற்பாட்டின் விதிமுறை. இந்த வன்முறை புதிய ஏற்பாட்டில், :"...அப்போது ஏசு அவரிடம், "உனது வாளை அதன் உறையில் போடு. ஏனெனில், வாளை எடுப்பவன் வாளால் அழிந்து போவர்; ..." (மத். 26:52) என்றும், அதே போல, "...மாறாக, உங்களை வலது கன்னத்தில் அறைபவருக்கு மறு கன்னத்தையும் காட்டுங்கள்" (மத். 6: 39) மிகவும் சாத்வீகமான ஒன்றாக மாறியுள்ளது. (இது சரியா, நம்மால் முடியுமா என்ற கேள்விகளுக்குள் இப்போது நுழையத்தேவையில்ல. ஏனென்றால், வேதங்கள் சொல்வதை எல்லாம் நம்மால் கடைப்பிடிக்க முடியுமா என்ன? 'எதைக் கொண்டு வந்தோம்; எதைக் கொண்டு போகப் போகிறோம் என்றா இருக்க முடியும்?) . பழைய ஏற்பாட்டின் வன்முறை மறைந்து புதிய ஏற்பாட்டில் சாத்வீகம் வந்த பின்பு மறுபடியும் இஸ்லாமில் ஏன் இந்த வன்முறை மீண்டும் புகுந்தது? மனிதனுக்கும் மனிதனுக்கும் இந்த வன்முறை வந்தால்கூட பரவாயில்லை; இஸ்லாமில் இந்த வன்முறை கடவுளுக்கும்-மனிதனுக்கும் நடுவே வருவது ஆச்சரியம் மட்டுமல்ல; அதி பயங்கரமும் கூட.

இந்த வசனத்தைப் பாருங்களேன்: ஹதீது: ஹ்ல்ரத் அலீ (ரலி): "உலகினில் ஏற்படுகின்ற குழப்பங்களுக்குத் தீர்வு காண அல்லாஹ்வின் வேதந்தான் சிறந்த வழி. ...(தன் அறிவைக்கொண்டு) பெருமையடிக்கிறவன் இதனை (அமல் படுத்தாமல்) விட்டு விட்டால், அல்லாஹ் அவனைத் துண்டு துண்டாக ஆக்கிவிடுவான். அது அல்லாத (வேறு கிரந்தத்)தில் நேர்வழியைத் தேடுபவரை வழிதவறச் செய்து விடுவான்." கடவுள் கருணையின் உருவாய் இருக்கவேண்டாமோ? இதென்ன கொடுமை? கடவுளின் வார்த்தைகளில் தேவையா இந்தக் கொடூரம்?

6.)ஏற்கெனவே கிறித்துவ மதம் பற்றி பேசும்போது கேட்ட கேள்வி இங்கும் பொருந்தும். நித்திய தண்டனையான நரகம் பற்றியது. அது போன்ற நித்திய தண்டனை சரிதானா என்று அங்கேயே கேட்டேன். இப்போது அதோடு சேர்ந்த மற்றொரு கேள்வி: கிறித்துவத்தில் 'மோட்சத்தில் கடவுளை முகம் முகமாய் கண்டு கொண்டிருப்பார்கள்' என்றிருக்கும்; கடவுளின் பிரசன்னமே பெரிய பாக்கியம் என்ற பொருளில். ஆனால், இஸ்லாமிய மோட்சத்தில் தேன் பாயும்; பச்சைப்பசேல் என்றிருக்கும் என்பதெல்லாம் சரி. ஆனால் இது என்ன ? ஒவ்வொருவருக்கும் 'houris' எனப்படும் (perpetual virgins) 'நித்திய கன்னிகைகள்'? முகமதுக்கு இவ்வுலகத்தில் கிடைத்ததைவிடவும் இரண்டு மடங்கு எண்ணிகையில் கிடைக்கும் என்பது எந்த வகையில் ஒரு கடவுள் தரும் 'பரிசாக' இருக்கும். It is not definitely in good taste. (நரகத்தில் பெண்களே அதிகமாயிருப்பார்கள் என முகமதுவே ஒரு இடத்தில் குறிப்பிடுகிறார்.) ஆயினும் ஆண்களுக்குக் கிடைக்கும் இந்தப் பரிசிற்குச் சமமாக மோட்சம் செல்லும் பெண்களுக்குக் கிடைக்க என்னவெல்லாம் காத்திருக்கப் போகிறது என்பதைப் பற்றி 'நல்ல வேளை' எதுவும் சொல்லப்படவில்லை!

7.) (Arch-angel, Gabriel)தேவதூதன் காப்ரியல் ஏசுவின் பிறப்பைப் பற்றி மேரியிடம் சொல்லியதாகவும், பிறக்கப்போகும் அந்தக் குழந்தையே மனிதர்களை உய்விக்க வந்த 'இம்மானுவேல்' என்றும் கூறியதாகவும் கிறித்துவம் சொல்கிறது. ஆனால், அதே தேவதூதன் (இஸ்லாமில், ஜிப்ரேல்) முகமதுவிற்கு அல்லாஹ்வின் வார்த்தைகளைக் கூறியதாகச் சொல்லப் படுகிறது. இரண்டு தேவதூதரில் எது சரி? 'இதோ, கடவுள் உன்னிடம் குழந்தையாகப் பிறக்கப் போகிறார்' என்று மேரியிடம் சொன்ன தேவதூதனா, இல்லை, பயப்படாதே, நான் அல்லாஹ்வினால் அனுப்பப் பட்டேன் என்று முகமதுவிடம் சொன்ன தேவதூதனா, எது சரி? இரண்டில் ஒன்றுதான் சரியாக இருக்க வேண்டும். அல்லது இரண்டுமே கதையாக இருக்க வேண்டும். கடைசியாகச் சொன்னதே எனக்குச் சரியெனப் படுகிறது.


இனி நபியின் வாழ்க்கை வரலாறுக்கு வருவோம்:


8.)கிறித்துவத்தில் (St. Paul) பவுல் என்றொருவர் ஏசுவின் பக்தர்களுக்குச் சிம்ம சொப்பனமாக இருந்தவர்; பின் மனம் மாறி ஏசுவின் முக்கிய போதகராக மாறினார் என்று சொல்வார்கள். அதைக்கூட விடுங்க; நம் நாட்டின் தந்தை காந்தியடிகள் சின்ன வயதில் தவறுகள் பல செய்தும் பின் மனம் மாறி மகாத்மா ஆனார் என்பது வரலாறு. சாதாரண மனிதர்களே வாழ்வில் இது போல நடந்து கொண்ட போது, முகமது 40 வயது வரை வியாபாரம் செய்து கொண்டிருந்தவர் ஒரு பெரும் போர்வீரனாக, தளபதியாக மாறியது மட்டுமின்றி, அந்த நாட்டின், மக்களின் அன்றைய வழக்கப்படியே கொள்ளையில் ஆரம்பித்து (Much criticism has been leveled at Muhammad for engaging in caravan raids and wars of conquest. Critics say that his wars went well beyond self-defense. Muslim commentators, however, argue that he fought only to defend his community against the Meccans, and that he insisted on humane rules of warfare), பல போர்களை முன்னின்று நடத்தி, ஒரு திறமையான போர்த்தளபதியாக விளங்கி, அதோடு அங்குள்ள வழக்கப்படியே, தோற்றவர்களைக் (வயதுக்கு வந்த சிறுவர்களையும், பெண்களையும் கூட) கொன்று, அல்லது சிறைப்பிடித்து அடிமைகளாக்கி - எல்லாமே அந்த நாளில் இருந்திருக்கக்கூடிய ஒரு தளபதியாகவே முகமது இருந்திருக்கிறார். (After the battle, all the Banu Qurayza adult males (including boys who had reached puberty), as well as one woman, were beheaded by the order of Saad ibn Muadh, an arbiter chosen by the Banu Qurayza. The remaining women and children were taken as slaves or for ransom. All the property from the tribe was then divided among the Muslims).இது வரலாறு தரும் சேதி. இஸ்லாமிய ஹதீதுகள் தரும் சேதி. யாரும் மறுக்கவோ, மாற்றவோ முடியாதது. ஆனால், தனித் தனி அர்த்தங்கள் கற்பிக்கலாம். அது அவரவரது நம்பிக்கையையோ, நம்பிக்கையின்மையையோ பொருத்தது.

இங்கு ஏசுவின் போதனைகளை நினைவு கூறுவது நலம். (நான் கிறித்துவத்தை தூக்கி வைத்துப் பேசுகிறேன் என்று யாரும், அதுவும் என் முந்தைய பதிவுகளைப் படித்தவர்கள் கூற மாட்டீர்களென நம்புகிறேன்.) இஸ்லாமியர்கள் சொல்லுவது போலவே, ஏசுவின் வாழ்க்கையைத் திரித்து அப்படி அவரை ஜோடித்துவிட்டார்கள் என்று கூட வைத்துக்கொள்வோம். ஒரு இறைதூதன் என்ற மரியாதைக்கேற்ப அவரது கதை'ஜோடிக்கப்பட்ட' விதயம் என்றுகூட கொள்வோம். ஒரு மரியாதை வரக்கூடிய அளவில் எசுவின் 'கதை' உள்ளது. ஆனால், முகமதின் வாழ்க்கை - அதுவும் ஹதீஸிலேயே சொல்லப்பட்டுள்ள - வாழ்க்கை வரலாறு, கடவுளால் தேர்ந்தெடுக்கப் பட்ட மனிதனின் வாழ்க்கை - அது எப்படி இருக்கவேண்டுமென சாதாரணமாக எதிர்பார்ப்போம். நிச்சயமாக எல்லாவிதத்திலும் வேறுபட்ட, என்னைவிட, உங்களை விட சிறந்த ஒரு மனிதனாக அவர் இருக்க வேண்டாமா? நாம்தான் அது வலைப்பதிவுகளாக இருக்கட்டும், கோத்ராவாக இருக்கட்டும்; காஷ்மீராக இருக்கட்டும்; ஈராக்காக இருக்கட்டும்; செர்ப்-ஸ்லோவாக்கியாவாக இருக்கட்டும் - எங்கேயும் எப்போதும் சண்டை போட்டுக்கொண்டே இருக்கும் அற்ப மனிதர்களாய் இருக்கிறோம். நம்மை வழிகாட்ட வந்த தெய்வமனிதர்களுமா அப்படி இருப்பார்கள்; கடவுள் அப்படிப்பட்ட ஒரு சாதாரண மனிதனையா தேர்ந்தெடுப்பார் என்கிறீர்கள்? எந்த விதத்தில் முகமது நம் வாழ்க்கையில் நாம் நித்தம் நித்தம் காணும் சாதாரண மனிதர்களை விட உயர்ந்தவராக இருந்ததாக வரலாறு கூறுகிறது? உண்மையிலேயே எனக்கு இந்தக் கேள்விக்குப் பதில் தெரியவில்லை; தெரிந்தவர்கள் எனக்குச் சொல்லுங்கள். அவர் என்ன சொன்னார் என்பதைவிட (எனக்கும் உங்களுக்கும் முன்மாதிரியாக) அவர் எப்படி நடந்துகொண்டார் எனபதைத் தெளிவு படுத்துங்கள்.

9.) ஏசுவின் வாழ்க்கையில் அவரின் 'ஜாதித் துவேஷம்' என்று சில நிகழ்வுகளை வைத்துக் கூறியிருந்தேன். அதன் முடிவாக - என் முடிவாக - அவர் தன் ஜாதி (tribe)மக்களை முன்னேற்ற வந்த சமூகத் தலைவர் என்றே நான் கருதியதாகச் சொல்லியுள்ளேன். அவராவது, பல இடங்களில் தன் குலத்திற்காக மட்டுமே வந்ததாகக் கூறியிருந்தாலும், சில இடங்களிலாவது தான் எல்லா மானுடப் பிறவிகளுக்காகவும் வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். நான் காண்பித்தது எனக்கு வேண்டியிருந்த negative side மட்டும்தான்.

ஆனால், நபி முழுக்க முழுக்க தன் க்வாரஷி குல நன்மைக்காகப் போராடிய மாவீரன் என்பதைத் தவிர -உலக மக்களுக்காக, அனைத்து மனிதர்களுக்காக, அவர்தம் நன்மைக்காக வந்ததாக எங்கும் குரானிலோ, ஹத்தீஸிலோ கூறியுள்ளதாகக் காண்பித்தால் நன்று. ஏசு தன் குலம்பற்றியே பேசியது போலவே, முகமதுவும் தன் க்வாரஷி மக்களுக்கு என்று ஆரம்பித்து, முஸ்லீம்கள் என்ற தன்னைப் பின் பற்றிய அந்த நாளைய அரபி மக்களைப் பற்றி மட்டும்தானே பேசுகிறார்?

10.) முகமதுவின் மறைவிற்குப் பின் வந்த நான்கு கலிஃபாக்களுமே அவரோடு ரத்த சம்பந்தம் உள்ளவர்கள் தான். (நாம் இன்று சொல்கிறோமே - குடும்ப அரசியல் அல்லது அரசியல் குடும்பம் என்று; அதேபோல் தான்.) இந்தக் கலிஃபா க்கள் முகமதின் மறைவுக்குப் பின் 'சில தத்துவங்கள்' பேசி, இறந்த முகமதின் விதவைகளுக்கு நியாயமாகக் கிடைக்கவேண்டிய சொத்தில் ஏதும் பங்கு தராது விட்டது வரலாற்று உண்மை. ("We (Prophets) do not have any heirs; what we leave behind is (to be given in) charity" நபி உலக உறவுகளுக்கு அப்பாற்பட்டவர்; ஆகவே, அவருக்கு விதவைகள் என்று யாரும் உரிமை கொண்டாடக்கூடாது என்ற தத்துவமே அது!) Might is right- இந்த இரண்டு வரலாற்று உண்மைகளைப் பார்க்கும்போது அன்றிருந்தது முழுக்க முழுக்க ஒரு tribal set up என்பதே இதிலிருந்து தெரிகிறது.


இனி அவர்தம் தனி வாழ்க்கை பற்றி :


11.) Less said about this is better. முகமதின் திருமணங்களைப்பற்றி அதிகம் கூற விரும்பவில்லை. இருப்பினும், அவைகளுக்குக் கற்பிக்கப்பட்ட சில நியாயங்கள் பற்றி மட்டும் சொல்ல விழைகிறேன். சில மேற்கோள்கள் தர ஆசை. தனக்குக் கற்பிக்கப் பட்டது எவ்வளவு தவறான ஒரு விதயமாக இருந்தாலும் ஏதோ ஒரு காரணம் காட்டி, அவைகளை நியாயப்படுத்தப் பார்க்கும் மனித மனங்களின் இயல்பு இங்கு தெளிவாகத் தெரியும் என்றே நினைக்கிறேன்.

Rather, they( இந்தத் திருமணங்கள்) had much higher purposes in the divine plan. These goals were mainly related to his mission of unifying Arabs, and also, not less importantly, intended to set standards (என்ன விதமான ஸ்டாண்டர்ட்ஸ்!!!) for reforming intractable customs that had caused so much misery and destruction for humanity."

12.) "By marrying them he was setting a precedent to reverse the taboo of widow marriage" (கைம்பெண்களுக்கு வாழ்வளிப்பதற்கு இதுதான் நல்ல வழியா? ஏன் தன் கீழுள்ள வாலிபர்களுக்குத் திருமணம் செய்வித்திருக்கலாமே!!!????). Secondly, he was paying back his due to some of the companions who had perished in battles leaving behind widows (நன்றிக்கடன்!)
இப்படியும் ஒரு காரணம்: The wisdom behind the Prophet (SAW)'s plural marriages is to show all possible types of marriage in Islam. (முன்மாதிரி? இந்த விளக்கங்கள் உண்மையிலேயே நம்பிக்கையாளர்களுக்கு ஏற்புடையதாகத்தான் இருக்கிறதா? ஆம், என்று சொல்வீர்களேயானால், அதற்கு மேல் உங்களிடம் பேசுவதற்கு என்னிடம் ஏதுமில்லை. அதில் எந்த பொருளுமில்லை - கால விரையம் மட்டுமே)

இதை விட, கீழ்வரும் பதிவு எனக்கு முக்கியமாகப் படுகிறது.The question of the Prophet’s multiple marriage should never pose a problem for the faithful when they heed the statement of Allah in the Qur’an concerning his marriages:
“(Hence) no blame whatever attaches to the Prophet for (having done) what God has ordained for him. (Al-Ahzab: 38).13.) எனது கேள்வி: கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தனி மனிதனின் செயல்களை அல்லாவே இவ்வாறு எல்லோரையும் ஏற்றுக்கொள்ளச் சொல்வார் எனபதை நம்புவதா? அல்லது அப்படி அல்லாஹ் என்னிடம் சொன்னார் என்று சொல்வதை நம்புவதா? (குற்றம் சுமத்தப்பட்டவரே சாட்சி சொல்வதுபோல் அல்லவா இது இருக்கிறது!) Is it not strange to accept that God himslef would have come to give excuses to the excess of his disciple?

14.) இன்னொன்று. நம் ஊரில் இப்போதும் ஒன்று பார்க்க முடியும். Our law makers are the first law-breakers. நான்கு மனைவிகள் வைத்துக்கொள்ளலாம் என்று மற்றவர்க்குச் சொன்ன நபி தான் மட்டும் எப்படி இப்படி...? "Those who regard him as the inventor of these Qur'anic rules see this as a case of a leader enjoying privileges he denied to his followers!"

15.)Dr Annie Besant(Dr Annie Besant in 'The Life and Teachings of Mohammad,' Madras, 1932)"But do you mean to tell me that the man who in the full flush of youthful vigour, a young man of four and twenty (24), married awoman much his senior, and remained faithful to her for six and twenty years (26), at fifty years of age when the passions are dying married for lust and sexual passion?" - இதற்குப் பதில் சொல்லவேண்டுமா? வயதிற்கும், பாலியல் உணர்வுகளுக்கும் தொடர்புண்டா என்ன? அதோடு 45-50 வயதிற்குப் பிறகே அவர் தன் இனத்தாருக்குத் தனிப்பெருந் தலைவராகிறார்; அது மட்டுமல்லாது, வாழ்வின் வசதிகள் கூடியாதாகவும், பெரும் செல்வந்தர் ஆனாரெனவும் ஹத்தீஸிலிருந்து தெரிகிறது. அதிலும், 50 வயதிற்குப் பிறகு இளம் பெண்களைக் கல்யாணம் செய்து கொள்வதால் அந்த பெண்களுக்கு வாழ்வா கிடைக்கும்; அது அவர்களுக்கு 'இரட்டை தண்டனை' அல்லவா?

16.) அன்றைய சமுதாயச் சூழலில் நான்கு மனைவியர் என்பது தேவையான ஒன்று; அதனாலேயே அவ்வாறு நபி சொன்னதாக நம் நண்பர்கள் சொல்வதுண்டு. ஆனால், இப்போது யாரும் அப்படி செய்வதுகொள்வதில்லை என்பதும் தெரியும். நபியைப் பின்பற்றும் நம் தற்காலத்து முஸ்லீம் நண்பர்கள் யாரும் அப்படி பலதாரக்காரர்கள் அல்ல; ஏனென்றால், இன்றைய வாழ்க்கைக்கு, சமூகத்துக்கு, வாழ்வியலுக்கு ஒத்து வராத காரியம். Simple logic: ஆகஅன்று நபி சொன்னது எல்லாருக்கும் எல்லா காலத்துக்கும் பொதுவான விஷயங்களாக இல்லை, இருக்கவும் முடியாது என்பது தெளிவாகிறதல்லவா?
பின் எப்படி என்றைக்கும், எல்லாருக்கும் அருளப்பட்டதாகக் குரானைச் சொல்ல முடியும்?

17.) இஸ்லாமியர் ஒவ்வொருவருக்கும் ஐந்து கடமைகள் உள்ளன; அவைகளில் ஒன்று ஹஜ் யாத்திரை. முகமதால் அருளப்பட்ட இந்தக் கடமையை உலகில் உள்ள இஸ்லாமிய மக்கள் யாவரும் நிறைவேற்ற முடியுமா? ஏழை இஸ்லாமியருக்கு அது ஒரு கனவாகவே முடியும். பின் எப்படி இந்தக் கடமை கொடுக்கப்பட்டிருக்க முடியும். 90 விழுக்காடு முஸ்லீம்களுக்கு இந்தக் கடமையை ஒரு காலத்தில் நிறைவேற்ற முடியாது போகும் என்பது அல்லாஹுக்கு அன்றே தெரிந்திருக்காதா? அன்று, நபியால் இந்தக் கடமை கொடுக்கப் பட்ட போது இஸ்லாம் அன்றைய அரபு நாட்டில் மட்டுமே பரவியிருந்த மதம். அப்போது அந்தக் கடமையைச் செய்ய - குதிரைப் பயணமாகவோ, ஒட்டகப் பயணமாகவோ - சிறிது சிரமத்துடன் நிறைவேற்றக்கூடிய ஒன்றாக இருந்திருக்கும். அதனால் அன்று அது சரி. ஆனால், இன்று எல்லா கண்டங்களிலும் பரவியிருக்கும் இஸ்லாம் மதத்தினர் எல்லோருக்கும் அது சாத்தியமில்லை. அப்படியானால், ஏற்கெனவே கூறியபடி இது ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை வைத்து வந்த மதமே - கிறித்துவம் போலவே - என்பது (எனக்குத்) தெளிவாகிறாது.

18.) என்னிடம் கடவுள் பேசினார்; நானே கடவுள்; - இப்படியெல்லாம் சொல்லி தனக்கென cult-களை உருவாக்குவது என்பது எல்லா மதங்களிலும் நடந்துவரும் ஒரு விதயமே. சான்றுகள்: நம்ம ஊர் கல்கி; அமெரிக்காவில் ஜோன்ஸ்;ஜப்பானில் ரயிலில் விஷ வாயு வைத்த கூட்டம்; இதுபோல் எண்ணற்றவர்கள் உண்டு - இவர்களின் சாயம் நாளாவட்டத்தில் வெளிறி விடுகிறது. இவர்கள் இப்படி சொல்வதற்கு அவரை நம்புவோர் யாரும் எந்தச் சான்றுகளும் கேட்பதில்லை. மதங்களில்தான் கேள்விகளே கிடையாதே! ஏசு பல அதிசயங்கள் நிகழ்த்திக் காட்டியதாகவும், இறுதியில் உயிர்த்தெழுந்தாரென்றும் - அவைகள் இட்டுக் கட்டப்பட்ட கதைகளாகவேகூட இருக்கட்டும் - சொல்லப்படும் காரியங்கள் அவரை நம்புவோர்க்குச் சான்றுகளாகத் தெரியும். ஆனால், முகமதுதான் கடவுளின் தூதன் என்று சொல்லியதை 'அன்று' அவர் கூட்டத்தினர் நம்பியது பெரிதல்ல; ஆனால் இன்றுவரை நம்புவதற்குரிய காரணங்கள் - ' ஊட்டப்பட்ட மத நம்பிக்கை என்பதைத் தவிர - ஏதாவது உண்டா? என் தாத்தா பாட்டியும் நம்பினார்கள்; , அப்பா அம்மாவும் சொல்லிக் கொடுத்தார்கள் என்பதா வளர்ந்தவர்களின் நம்பிக்கைகுரிய தூண்களாக இருக்கவேண்டும்? நமது நம்பிக்கைகளுக்கு ஏதாவது ஒரு சான்று வேண்டாமா? அது தேவையில்லையா? ஆத்மார்த்தமாக உணர்கிறேன் என்ற கிறித்துவர்களின் வழக்கமான பதிலில் எனக்கு உடன்பாடில்லை. ஏனெனில், ஆத்மார்த்தமான உணர்வுகள் ஊட்டப்பட்டவை; simple brain-washing.

19.)தன் அம்மாவின் கைச்சமையலை அவ்வப்போது புகழ்ந்து பேசாதவர் யாரேனும் உண்டா? அதற்குக் காரணம் நம் அம்மாவின் உண்மையான சமையல் திறன் அல்ல. சிறு வயதிலிருந்தே our tastes are conditioned to her cooking - என்பதுதான் உண்மை. And it becomes the reference point. நம் மதங்களும் அப்படியே. We are conditioned to accept the beliefs and faiths as they were given to us from childhood. அதைவிட்டு கொஞ்சம் வெளியே எட்டிப் பார்த்தாலென்ன? அதில் என்ன தவறு? ஆனால், 'வெளியே' பார்த்து விடாதே என்பதில்தான் இந்த மூன்று ஆபிரஹாமிய மதங்களில்தான் என்ன ஒரு ஒற்றுமை! மூன்றிற்கும் உள்ள ஒற்றுமைகள் இதோடு முடிவடைவதில்லை. வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு இன்னொரு முக்கிய ஒற்றுமை தெரியும் - இந்த மூன்று மதத்தினருமே தம் தம் மதமே, மார்க்கமே சரியான வழி என்ற நம்பிக்கையில் மிகவும் தீவிரமாக இருப்பவர்கள். யூத மதம் பிறப்பினால் வரும் ஒன்றாக இருப்பதால் அதை நாம் விட்டுவிடலாம்; அதோடு அவர்கள் மற்றவர்களைத் தம் மதத்தின் பக்கம் இழுக்க முயற்சிப்பதேயில்லை; ஆகவே, அவர்களைப்பற்றிய விவாதம் நமக்கு இங்கு தேவையில்லை. நானே ஒரு கிறித்துவனாக வளர்க்கப்பட்டாலும் எனக்கு புரியாததும், ஆச்சரியத்திற்குரிய விதயமாக இன்னும் இருப்பது இந்த இரு மதங்களிலும் உள்ளவர்களுக்கு மட்டும் மதத்தின் மேல் எப்படி இவ்வளவு ஆழமான நம்பிக்கையும், ஈடுபாடும், தீவிரமும் சிறு வயது முதற்கொண்டே வந்துவிடுகின்றன என்பதே. இதிலும் இஸ்லாம் ஒரு படி மேல்தான். இந்த மதத்தீவிரம் தீவிரவாதமாக மாறுவதும் தேவையற்ற ஒன்றாகவே உள்ளது. 'அவரவர் நம்பிக்கை அவரவர்க்கு' என்று பேச்சுக்குச் சொல்லப்பட்டாலும், இவ்விரு மத நம்பிக்கையாளர்களுமே தன் மதமே உயர்ந்தது என்ற நம்பிக்கையால் ஒரு superiority complexயை ஏற்படுத்திக் கொண்டு, தம் கருத்துக்களைத் தவிர வேறு உண்மைகளே இருக்கமுடியாது என்ற தீவிர நம்பிக்கையால், தங்கள் மதம் கேள்விகளுக்கு அப்பாற்பட்டது; விமரிசிப்பவர்களின் விமர்சங்கள் எல்லாமே தேவ தூஷணம் (blaspehmy) என்ற முடிவுக்கே வருகிறார்கள். அவர்களின் மதங்கள் தரும் அறிவுரைகளைப் பார்ப்போமே: ஹல்ரத் அலீ (ரலி): "உலகினில் ஏற்படுகின்ற குழப்பங்களுக்குத் தீர்வு காண அல்லாஹ்வின் வேதந்தான் சிறந்த வழி ....(தன் அறிவைக்கொண்டு) பெருமையடிக்கிறவன் இதனை அமல் படுத்தாமல் விட்டு விட்டால், அல்லாஹ் அவனைத் துண்டு துண்டாக ஆக்கிவிடுவான். அது இல்லாத (வேறு கிரந்தத்)தில் நேர்வழியைத் தேடுபவரை வழிதவறச் செய்துவிடுவான்...". ஏசுவோ என்னைத் தவிர உனக்கு வேறு கடவுளே இல்லை; நானே வழியும் ஜீவனுமாயிருக்கிறேன்' என்கிறார். இந்த மதத்தீவிரம் தேவைதானா? நானும், நீயும் நண்பனாயிருக்க மதம் தேவையா? 'மனிதம்' மட்டுமே போதாதா?

20) "இஸ்லாத்தை ஏற்று அம்மார்க்கத்தை சரியாகப் பின்பற்றியவர்களுக்கு பரிசாக சொர்க்கமும், இஸ்லாத்தை நிராகரித்தவர்களுக்கு தண்டனையாக நரகமும் வழங்கப்படும் என்று எவ்வித ஒளிவு, மறைவு இல்லாமல், வெளிப்படையாக இஸ்லாம் கூறுகிறது." அதாவது, நீ அந்தப் பக்கமா, இந்தப் பக்கமா என்பதை வைத்துதான் உன் மறு வாழ்க்கையும், அதற்குரிய பரிசு / தண்டனையும் தீர்மானிக்கப் படும்.

"You are either with us or with them". 9/11 -க்குப் பிறகு ஜார்ஜ் புஷ் சொன்ன இந்த வாக்கியத்தின் பொருளை நான் விளக்க வேண்டியதில்லை. மதத்தின் பெயரால் ஒசாமா செய்ததால் அந்த மதத்தையும், மதத்தைச் சார்ந்தவர்களையும், விரோதிகளாக அவர் பார்த்தார்; அதே போல்தான் எல்லோரும் பார்க்க வேண்டும் என்றும் எதிர்பார்த்தார். அவரின் இந்தக் கூற்றுக்கு உலகத்தின் பல நாட்டவரும், பல நாட்டுத் தலைவர்களும் எதிர்ப்பைத் தெரிவித்தனர். அவரைப் பொருத்தவரை அவருக்குச் சரியானதாகத் தோன்றும் ஒன்று, உலகத்தில் எல்லோருக்கும் அதே போல்தான் தோன்ற வேண்டுமென அவர் எதிர்பார்த்ததை உலகம் ஒப்புக் கொள்ளவில்லை. இல்லையா?

இந்த புஷ்ஷின் கருத்திற்கும், மேலே சொல்லியுள்ள இஸ்லாமியக் கருத்திற்கும் - ஒன்று மனிதன் கூறியது; இன்னொன்று கடவுளால் கூறப்பட்டதாக நம்பிக்கையாளர்களால் கருதப்படுவது என்பதைத் தவிர. இரண்டுமே கருத்துக்கள் என்ற வரையில் ஒன்றுதானே? ஆனால் ஒன்றை தவறென்று கூறி, இன்னொன்றை எப்படி புனித வார்த்தையாகக் கொள்ளுவது?



21) என் சின்ன வயதில் மனிதன் எவ்வளவு நல்லவனாயிருந்தாலும் அவன் கிறித்துவனாக இருந்தால் மட்டுமே அவனுக்கு மோட்சம் என்ற கருத்தைத்தான் சொல்லி வந்தார்கள். நாங்கள் சின்ன பசங்களாக இருந்த போது இதற்கு எதிர்க் கேள்வியாக காந்தி அல்லது அதுபோன்ற பெரிய, நல்ல, ஆனால், கிறித்துவரல்லாத மனிதர்களின் பெயர்களைச் சொல்லி, அவர்கள் கூடவா மோட்சம் செல்ல முடியாது என்று கேட்டிருக்கிறோம். அப்போதெல்லாம் அவர்களுக்கு மோட்சம் கிடைக்காது; வேறு என்ன என்பதை ஏசு முடிவு செய்வார் என்றுதான் கூறினார்கள் எங்களுக்கு வேதம் சொல்லித் தந்தவர்கள். ஆனால், பின்னால் இந்தக் கருத்து கிறித்துவத்தில் நன்றாகவே நீர்த்துப் போய் விட்டது; முன்பு போன்று 'வெட்டு ஒன்று; துண்டு இரண்டு' என்ற நிலை மாறிவிட்டது. ஆனால், இன்னமும் இஸ்லாம் அந்தக் கருத்தில்தான் வேரூன்றி நிற்கிறது. இது ஒரு பாஸிச கருத்தன்றி வேறல்ல.

22.) ஒரு பானைக்கு ஒரு சோறு: Satanic verses என்பது முகமது சாத்தானால் சோதிக்கப்பட்டு, அல்லாஹ் கூறாத ஒரு வசனத்தைக் குரானில் சேர்த்ததாகவும், பின்பு மனம் கசிந்து அதை எடுத்ததாகவும், இல்லை அப்படி ஒன்று நடக்கவே இல்லை என்றும் இரு தரப்பு வாதங்கள் உண்டு. முகமதின் வாழ்க்கையில் நடந்த இந்த நிகழ்வுக்கு சர் வில்லியம் முய்ர் என்பவர் வைத்த பெயரே இது. இதை ஒரு நாவலுக்கு தலைப்பாக வைத்தார், சல்மான் ருஷ்டி. அதற்கு ஏன் இத்தனை வன்மம்? எந்த மதத்தின் மீதுதான் கிண்டல்களோ, விவாதங்களோ, எதிர்ப்புகளோ வரவில்லை. கீமாயணம் எழுதியதால், பிள்ளையார் சிலை உடைப்பால் இந்து மதம் நலிந்து விட்டதா? கடைசியாக எழுதப்பட்ட Da Vinci Code மாதிரி எத்தனை புத்தகங்கள், சினிமாக்கள் - கிறித்துவமதத்தைவிட்டு எல்லோரும் வெளியேறி விட்டார்களா? அதை விடுங்கள், கிறித்துவமதமும், இஸ்லாமும் எதிர் கொள்ளாத தடைகளா, இல்லை போர்களா; இந்த இரண்டு மதங்களுமே போடாத சண்டைகளா (பங்காளிகள் அல்லவா?) crusades, spanish inquisition - இதனாலென்ன, அந்த மதங்கள் மறைந்து விட்டனவா, என்ன? மதத்திற்கு எதிராக எழும் வாதங்களையோ, மற்ற விதயங்களையோ ஏன் மற்ற மதத்தினர்போல் இஸ்லாமியர்கள் எதிர் கொள்ளக் கூடாது? ஏனிந்த மதத்தீவிரம்? யாருக்குத்தான் அவரவர் மதங்கள் மேலும், கடவுள்கள் மேலும் பற்று இல்லை. பற்று சரி; தீவிரப் பற்று ஒரு 'மதக்காரனை' தன்னையே முதலில் காயப் படுத்திக் கொண்டு, பின் அடுத்தவனையும் காயப் படுத்த வைக்கிறது. அத்தகைய 'தீவிர மதப்பற்று' தேவைதானா?


Some references:


1. குரான் தர்ஜமா -திரீயெம் பிரிண்டர்ஸ், சென்னை
1. Revelation, Rationality, Knowledge and Truth -Mirza Tahir Ahmad
3. Introduction to Asian Religions - Geoffrey Parrinder, Oxford University Press

4. http://www.arches.uga.edu/~godlas/Sufism.html 5.http://www.islamonline.net/servlet/Satellite?id=1119503547222&pagename=IslamOnline-English-Ask_Scholar/FatwaE/FatwaEAskTheScholar
6. http://answering-islam.org.uk/Hahn/Mawdudi/
7. http://en.wikipedia.org/wiki/Bah%C3%A1%27%C3%AD_Faith
8.http://www.islamonline.net/servlet/Satellite?cid=1119503547222&pagename=IslamOnline-English-Ask_Scholar/FatwaE/FatwaEAskTheScholar
9. http://www.islamicinstitute.ca/answers.php?id=362
10. http://www.themodernreligion.com/women/w_polyplural.htm
11. http://www.wefound.org/texts/Muhammad_files/Muhammad2.htm (Wisdom Behind Prophet Muhammad’s Plural Marriages Dr. Norlain Dindang Mababaya)

12.http://en.wikipedia.org/wiki/Islam 10.http://en.wikipedia.org/wiki/Pillars_of_Islam 13.http://en.wikipedia.org/wiki/Muhammad
14.http://en.wikipedia.org/wiki/Gabriel_%28archangel%29 15.http://en.wikipedia.org/wiki/Archangel
16.http://en.wikipedia.org/wiki/Fundamentalism
17.http://en.wikipedia.org/wiki/Ahmadiyya



கடைசிப் பதிவொன்று அடுத்த இரண்டு நாட்களுக்குள் தருகிறேன். அதன் பிறகு பின்னூட்டச் சாளரங்களைத் திறக்கிறேன். சரிதானே...?


*

அடுத்த பதிவுக்குச் செல்ல: 7ம் பதிவுக்கு.>


*

24 comments:

Anonymous said...

supero super kalakkarenga dharumi

குழலி / Kuzhali said...

//சிறு வயதிலிருந்தே our tastes are conditioned to her cooking - என்பதுதான் உண்மை. And it becomes the reference point.
//
ஹி ஹி மிகச்சரியாக கூறினீர்கள், இது மத விடயத்தில் மட்டுமல்ல, எல்லா விடயத்திலும் உண்மை.

//இந்த மூன்று மதத்தினருமே தம் தம் மதமே, மார்க்கமே சரியான வழி என்ற நம்பிக்கையில் மிகவும் தீவிரமாக இருப்பவர்கள்.
//
மிக சமீபத்தில் குர்ரான் வரிகளை ஒலித்தட்டில் கேட்டபோது அவரவர்கள் மார்க்கம் அவரவர்களுக்கு, இதில் சிறந்தது இது தான் என்று விவாதிப்பதில் அர்த்தமில்லை என்று பொருள் வரும்படியான வரிகள் வந்தனவே... ஒரு வேளை தவறாக புரிந்து கொண்டவர்கள் செய்த பிழை தான் காரணமோ?

உங்கள் பதிவுகள், அதிலும் குறிப்பாக மதம் பற்றிய பதிவுகள் வெவ்வேறு பரிமாணங்களில் சிந்திக்கத்தூண்டுகின்றன, இவை வெறும் இணையத்தில் மட்டுமல்லாமல் அச்சிலும் பதிக்கப்பட்டால் நன்றாக இருக்கும், பின் விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல :-))

நன்றி

மு மாலிக் said...

கடவுளால் அனுப்பப் பட்டவர் போராளியாக இருக்கமுடியாது எனும் உங்களின் வாதம் சரியாக எனக்குப் புரியவில்லை. அது கிறிஸ்தவ நம்பிக்கையாக வேண்டுமானால் இருக்கலாம் (இருந்தும் பல போப்-கள் படைத்தளபதிகளாயிருந்தது வேறு விசயம்).

இருப்பினும், பல இடங்களில் உங்கள் கேள்விகள், வினாவினை அறியத் தூண்டும் ஆற்றல் பெற்றவை.

தருமி said...

இனோமீனோ, நன்றி

குழலி, நன்றி. நீங்கள்தானே பதிப்பாசிரியராக இருக்கப் போகிறீர்கள்!

மாலிக், நன்றி
நீங்கள் தனி மடலில் குறிப்பிட்டபடி நான் மூலங்களைக் (references)கொடுத்திருக்கவேண்டும்; தவறி விட்டேன். முடிந்தால் நினைவில் உள்ள மூலங்களைக் கொடுக்க முயற்சிக்கிறேன். நிறைய மேற்கோள்கள் விக்கிபீடியாவிலிருந்து எடுத்தேன் - neutral views கிடைக்கும் என நினைத்தேன்.

நபி, போராளி என்பது மட்டுமல்லவே?

தருமி said...

சில references இப்போது (18.09.05)சேர்த்திருக்கிறேன்.

மு மாலிக் said...

நன்றி தருமி அவர்களே,

ஆனால், உங்கள் சுட்டிகள் (reference) பற்றி ஒரு சின்ன குறிப்பு:

Mirza Tahir Ahmad என்பவரின் எழுத்துக்களை எடுத்துக் கொண்டுள்ளீர். அவர் 'அஹமதியா' எனும் பிரிவினின் தற்போதைய தலைவர் ஆவார். அஹமதியா எனும் பிரிவு வெறும் 0.01% தான். அப்பிரிவின் கருத்துக்களுக்கு ஏனைய இஸ்லாமியர்கள் ஒத்த கருத்து உடையவர்கள் அல்லர்.

மேலும்

http://answering-islam.org எனும் இணையதளம் முஸ்லீம்களை எதிர்ப்பதற்காகவே உள்ள்தொன்று என்பதை அறிக.

மேலும்

wikipedia போன்றவைகளை இரண்டாம் தர மூலமாகவே கருதமுடியும். நீங்கள் முதன்மையான ஆதாரங்களை (those refering directly to hadiths or Quraan)முயன்றிருக்கலாம்.

மேலும் நடுநிலையான நூல்களையும் பார்த்திருக்கலாம். உதாரணங்கள்....

1) Muhammad
Author: Karen Armstrong

2) What everyone needs to know about Islam ?

Author: John L Esposito
Press: Oxford University press

நீங்கள் கூறியுள்ள குர்-ஆனின் இருந்ததாகக் கூறப் படும் 'சாத்தானிய வசனங்கள்' பற்றி Esposito-வின் புத்தகத்தில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. சல்மான் ருஷ்டி-யைப் பற்றியும் தான். மேலும், உங்களைப் பாதித்ததாகக் கூறப்படும் முகம்மது(pbuh)-ஆயிஷா(RA) திருமணம் பற்றியும், முகம்மது பலரை மணக்க நேர்ந்த காரணங்கள்-சூழ்நிலைகள் பற்றியும் கூறப் பட்டுள்ளது.

மேலும் எனது வலைப்பதிவிற்கு உங்களின் வருகைக்கு நன்றி

Anonymous said...

Hey could'nt read your entire writing about Islam. I see you had quoted several references. I urge you to visit www.faithfreedom.org to further substantiate your arguments. It is hosted by ex-Iranians and provides very interesting read and arguments. Good luck!!!

தருமி said...

http://www.islamicinstitute.ca/answers.php?id=362

http://www.themodernreligion.com/women/w_polyplural.htm

the Islamic sites referred by me for this aspect..

மு மாலிக் said...
This comment has been removed by a blog administrator.
மு மாலிக் said...
This comment has been removed by a blog administrator.
மு மாலிக் said...

நன்றி தருமி,

உங்களுடைய பதிலை மற்றொரு பதிவில் கூறியிருந்தீர்கள். அதனைப் பார்த்தேன். நன்றி

@இனோமினோ,

நீங்கள் என்னிடம், தருமியின் பதிவின் பின்னூட்டப் பகுதியில் கேட்டுள்ளீர்கள். நான் இதற்கு இப்பின்னூட்டப் பகுதியிலேயே விடை கூற முயற்சிப்பதற்கு, தருமி மன்னிப்பாராக.

அரேபியாவின் அக்கால செயல்பாடுகள் மற்றும் பழக்கவழக்கங்கள் ஆராயப் படவேண்டும். அப்பொழுது தான் இந்த கடினமான விடயத்தினை விளக்கமுடியும்.

பலதார-மணமானது அரேபியாவுக்கு முகம்மது அவர்களால் கொண்டுவரப்பட்டதொன்று அல்ல. (நான் எழுதுவதைப் படிக்கக் கூடிய தன்மையை (to increase the readability) அதிகரிக்க முகம்மது-வின் பெயருக்குப் பின்னால் தற்சமயத்திற்கு pbuh இடுவதை தவிர்த்துக் கொள்கிறேன்). அது ஏற்கனவே அங்கு வழக்கிலிருந்த ஒன்று. தற்போதைய பார்வையில் அது மிகவும் ஒரு பின்தங்கிய செயலாக வேண்டுமானால் இருக்கலாம். அப்போது இருந்த சூழ்நிலையில் அது ஒரு மிகச் சாதாரணமான செயல்.

அவரின் திருமணங்கள் உடல் இன்பத்திற்காக மட்டுமே உள்ள ஒன்று அல்ல. திருமணங்கள் ஒரு அவசியமாகத் தென்பட்டன. பெண்கள் வேலை செய்து சம்பாதிக்கும் அளவிற்கு அவர்கள் அனைவருக்கும் வேலை கிடைக்கும் நிலையோ, அவர்களுக்கு ஏதுவான வேலை முறைகளோ அக்கால அரேபியாவில் கிடையாது. கணவனின் பொருளீட்டலில் தான் மனை-மாட்சியினை அவர்கள் ஆற்றி வந்தார்கள். போர் போன்ற காரணங்களினால் ஆண்களின் எண்ணிக்கை குறைவு. விளைவு -பலதார மணம். சமூகத்தினால் அங்கீகரிக்கப் பட்ட பலதார மணம். மேலும் தம்பதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கு வயது ஒரு தகுதியாகவும் கருதப் படவில்லை. முகம்மதுவின் தந்தையுடைய திருமணத்தின் போது முகம்மதுவின் பாட்டனாரும் மற்றொரு திருமணம் செய்துக் கொண்டார். திருமணத்தைப் பொருத்தவரை அவர்களுடைய சமூகத்தில் இருந்த பழக்கம் அவ்வளவுதான். அச் சமூகத்திலிருந்த பழக்கத்திற்கு முகம்மது தான் காரணம் என்று கூற முடியாது.

முகம்மதுவின் திருமணங்களின் காரணமாக அரசியல் சூழ்நிலைகள் சுமூகமாக அமைந்தன. இரு வேறுபட்ட சமூகத்தினருக்கோ அல்லது குடும்பங்களுக்கோ இடையே உறவு ஏற்பட வேண்டுமாயின், அவர்களின் தலைவர்கள் மாற்று குழுவிலிருந்து பெண் எடுத்து மணமுடித்துக் கொள்வது வழக்கமாக இருந்தது. பல சமூகங்களுக்கிடையில் ஒற்றுமை ஏற்படுத்தவும், அவர்களது பண்பாட்டில் தனது சமூகக் கொள்கைகள் மூலம் சீர்திருத்தங்களைக் கொண்டுவரவும், முகம்மதுவிற்கு, அச்சமூகத்தின் தலைமைகளின் ஒத்துழைப்பு அவசியமாக இருந்தது. அந்த ஒத்துழைப்பினை ஏற்படுத்துவதற்கு இத் திருமணங்கள் பயன்பட்டன. அவரின் முதல் மனைவி உட்பட அனைவரும் விதவைகள், அனால் ஒரு மனைவியைத் தவிர. அந்த ஒரு மனைவிதான் ஆயிஷா. அத் திருமணம், அவருக்கும் அப்பெண்ணின் தந்தைக்குமிடையே நெறுங்கிய உறவு ஏற்பட நிகழ்ந்தது (மீண்டும் இது அரேபிய சமூகத்தால் அக்காலத்தில் அங்கீகரிக்கப்பட்ட, வழக்கிலிருந்த செயலே ஆகும்).

நீங்கள் கேட்கலாம், முகம்மது நினைத்திருந்தால் இந்தப் பலதார மணப் பழக்கத்தினை ஒழித்திருக்கலாம் அல்லவா ? என்று. முகம்மதுவிற்கு மற்ற சீர்திருத்தங்களே முக்கியமாகப் பட்டன. ஓரிறைக் கொள்கை, சமூகத்தில் சமத்துவம், ஜாதி ஒழிப்பு, மது ஒழிப்பு, வட்டி ஒழிப்பு, வாய்மை, அடக்கமுடைமை, புறங்கூறாமை, அடிமைகளின் மறுவாழ்வு, ஏழைகளுக்கு ஈகை, பெண்களுக்கு சொத்துரிமை போன்ற சீர்திருந்தங்களை செய்வதே முகம்மதுவிற்கு முக்கியமாகப் பட்டது. இச் சீர்திருத்தங்களை செய்ய, பல சமூகங்களின் உறவினைப் பெற இத்திருமணங்கள் பயன்பட்டன.

ஆகவே தருமி அவர்களே தாங்கள் கேட்டிருந்தது போல முகம்மது அவர்கள் போராளியாக மட்டும் இருக்கவில்லை. இந்த சீர்திருத்தங்களை தன் வாழ்நாட்களுக்குள் செய்த தீர்க்கதரிசி (prophet) முகம்மது ஆவார். அது அவ்வளவு எளிதல்ல. பாரம்பரிய கலாச்சாரத்தினை எதிர்த்து அவருக்கு அதைச் செய்ய வேண்டியிருந்தது. அதனால்தான் கலாச்சார வெறியர்களுடன் அத்தனைப் போர்களை அவர் மேற்கொள்ள வேண்டியிருந்தது. அவர் தந்து நோக்கப் பணியினை (mission) வெற்றிகரமாகச் செய்துவிட்டிருந்தார். தனது சீர்திருத்தங்கள் அரேபியா முழுவதும் அவர் இருக்கும்போதே மக்கள் பின்பற்றலாயினர்.

நன்றி

nagoreismail said...

நீங்கள் இஸ்லாத்தை பற்றி நிறைய கேள்விகளை சந்தேகங்கள் என்ற பெயரில் வைக்கிறீர்கள், நான் எழுத போகும் பதில்கள் உங்களுக்கு திருபதி அளிக்க போகிறதோ அல்லது உங்களது கேள்விகள் எனக்கு திருப்தி அளிக்காதது போல் மறுதலிக்க போகிறதோ தெரியாது,
8வது கேள்வியில் பெருமானார் அவர்கள் உங்களுக்கும் எனக்கும் எப்படி முன்மாதிரியாக இருந்தார்கள் என்று கேட்டிருக்கிறீர்கள்?,
இந்து மதத்தை அல்லது வேத மதத்தை உயிர்பிக்க வந்த சங்கராச்சாரியார் ஒரு புரட்சிக்காரர்.
'எட்டிப்போ' என்று சொன்னதற்கு 'உடலையா? அல்லது ஆன்மாவையா' என்று திருப்பி கேட்ட சாதி தாழ்ந்தவனாக தோற்றம் அளித்தவரை ஆசிரியராக கொண்ட சங்கரர் ஒரு புரட்சிக்காரர், மறைக்கப்பட வேண்டிய வேதத்தை கோவில் மதில்சுவரில் நின்று அனைவருக்கும் கூறிய ராமானுசர் ஒரு புரட்சிகாரர்,
சஃபாத் நாளில்(வாரத்தின் கடைசி நாள்) அசைவின்றி சோம்பேறியாக கிடந்த சமுதாயத்தை வேலை செய்யலாம் என்று வீர முழக்கமிட்ட ஈஸா நபியவர்கள் ஒரு புரட்சிகாரர், பலியிடுதலை எதிர்த்த புத்தர் ஒரு புரட்சி காரர் தான் சந்தேகமே இல்லை,
பெருமானார் அவர்கள் பிறக்கும் முன்னர் தந்தையை இழந்தவர்கள், ஆறாம் வயதில் தாயை இழந்தார்கள், இறந்த 2 ஆண்டுகளில் பாட்டனாரை இழக்கிறார்கள், எட்டு வயதிற்குள் தாய் தந்தை பாட்டனார் இழந்த அனாதையான பெருமானார் அவர்கள் அபுதாலிப் என்ற ஏழை பெரிய தந்தையாரின் ஆதரவில் வளர்கிறார்கள், ஆயினும் அன்னாருக்கு சுமையாக இருக்க கூடாது என்பதற்காக கூலிக்கு ஆடு மாடு மேய்த்தார்கள், 12 வது வயதிலேயே நாடு விட்டு நாடு போய் வணிகத்தில் அன்னாருக்கு உதவியாய் இருந்தார்கள், வெளியே செல்ல முடியாத ஏழைத் தாய்மார்களின் வீட்டிற்கு சென்று, 'நான் கடை வீதி செல்கிறேன், ஏதேனும் வாங்கி வர வேண்டுமா?' என்று வினவி வரும் போது மூட்டைகளை வாங்கி வருவார்கள், வஞ்சிக்கப் பட்டவருக்கு வாழ்வளிக்க 'ஹிஸ்புல் புளுல்' என்ற இயக்கத்தை தொடங்கி சமுதாய நன்மைக்காக பாடுபட்டார்கள், ஒருவர் பெருமானாரிடம், நீங்கள் அந்த தெருவில் நில்லுங்கள், நான் வருகிறேன், என்று கூறி விட்டு மறந்து விட்டார், மூன்று நாள் கழித்து அந்த இடத்திற்கு வந்த போது பெருமானார் நிற்பதை பார்த்து விட்டு வியந்து போய், 'நீங்கள் இங்கேயா நிற்கிறீர்கள்' என்று கேட்டதற்கு சிறிதும் சலனமில்லாமல் 'நீங்கள் தானே நிற்க சொன்னீர்கள்' என்று கேட்டார்கள்,'அல்-அமீன் (நம்பிக்கைக்குறியவர்) என்றும், அல்-ஸாதிக் (உண்மையின் உறைவிடம்) என்றும் அனைவராலும் அழைக்கப்பட்டார்கள், 'உம்மீ' என்றால் 'அறிவிலி' என்று பொருளல்ல, உதாரணமாக 256 ஐயும் 426 ஐயும் பெருக்குங்கள் என்று பெரிய படிப்பு படித்தவர்களை சொன்னால் கால்குலேட்டர் கேட்பார்கள், ஆனால் 'உம்மி'களோ கணக்கில் மட்டுமல்ல தந்தை-பாட்டன் -முப்பாட்டன் என 10 15 தலைமுறைகளை சற்றும் யோசிக்காமல் கடகடவென சொல்லும் ஆற்றல் படைத்தவர்கள் தான் 'உம்மி'கள், இத்தகைய திறமையிலும் நேர்மையிலும் சிறந்து விளங்கிய பெருமானாரை செல்வ சீமாட்டியான 'தூய்மையானவர்' என்ற பெயர் தாங்கி அழைக்கப்பட்ட 15 வயது மூத்தவரை அன்னாரின் விருப்பத்திற்கேற்ப மணமுடிக்கிறார்கள், பெருமானார் பணக்காரர் அல்ல ஏழை, துறவி அல்ல திருமணமானவர், ஞான பண்டிதர் அல்ல எழுத்தறிவு இல்லாதவர், ஆதரவில்லாத அனாதை, இந்த கட்டத்தில் தான் இறைவன் தன் அடியாரை தூதுவனாக தேர்ந்தெடுக்கிறான், அதுவரை பெருமானாரை புகழ்ந்தவர்கள் மார்க்கம் பற்றி சொன்ன போது எதிர்த்தார்கள், அப்படி என்ன சொல்லி விட்டார்கள், சிலை, படம், உருவம் என்ற மனித மனத்தினை பலவீனமாக்கக் கூடியவைகளை கூடாது என்பது தான் அது, மந்திர தந்திரங்களில் ஈடுபடாமல் கருத்து புரட்சியில் நம்பிக்கை வைத்தார்கள், 'இறைவனே ஏன் என்னைக் கைவிட்டீர்' என்று எல்லா மதத்திலும் பாடல்கள் இருக்கும் போது 'செங்கதிரும் தன் மதியும் சேர்த்து கையில் தந்திடினும் எம் கொள்கை விடமாட்டோம்' என்று பெரிய தந்தையிடமே அடக்கமாகவும் அழுத்தமாகவும் சொன்னவர் தான் பெருமானார், ஒரு கூட்டத்தில் கலவரம் என்றால் முதலில் அந்த இடத்தை காலி செய்வது அந்த கூட்டத்தின் தலைவர் தான், ஆனால் எதிரிகள் எதிர்த்த போது தான் மட்டும் அங்கேயே இருந்து கொண்டு ஆதரவளித்தவர்களை அபீசினியாவிற்கும் மதினாவிற்கும் அனுப்பி வைக்கிறார், இறைகட்டளை ஏற்று மதினா சென்றும் மக்கத்து எதிரிகள் போர் தொடுக்க நினைத்த போது போர்க் குதிரைக்குரிய லகான்களில் ஒன்றுக்கு துணி கூட இல்லாமல் பழந்துணியை முறுக்கி கயிறு போல் கட்டி இருந்தாலும் புறமுதுகிட்டு ஓடாமல் தற்காப்பு போர் புரிகிறார் -தற்காப்பு போர் என்றால் ஆமாம் தற்காப்பு போரே தான் அது ஏதோ எண்ணெய் வளம் இருப்பதால் நாடு பிடிக்க நடந்த போர் அல்ல- மார்க்கத் தலைவர் குடும்பத் தலைவர் மட்டுமல்ல போர் வீரராகவும் விளங்கினார், தற்காப்பு போரை 'ஜிஹாத்' என்று அதாவது 'இறைவழி போராட்டம்' என்று வீர உணர்வு ஊட்டினார், போரில் உயிர் துறப்பவர்களை உயிரோடு தான் உள்ளார்கள்' என்றும் 'சுவர்க்கம்' என்றும் பெருமை படுத்தினார், ஈஸா நபியை இறைவனின் குமாரனாக்கியதிலிருந்து சிலுவையில் அறையப்பட்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார் என்ற வலுவாக நின்ற கருத்தை துணிவோடு தவறென்று மறுத்து நின்றார், ஈஸா நபியை இழிவு படுத்தாமல் மறுத்து மட்டுமே நினறார், ஆனால் மதிப்பு கொடுக்க தவறியதில்லை, இறைவனிடமிருந்து எந்த அற்புதத்தை பெற்றீர் என்ற வினாவிற்கு திருக்குரான் தான் தான் பெற்ற அற்புதம் என்கிறார், திருக்குரான் என்பது பெருமானார் இறைவனை பற்றி பாடிய துதி பாடல் அல்ல, வானவர் தலைவர் மூலம் இறைவனால் பெருமானாரின் இதயாசனத்தில் இறக்கி வைக்கப்பட்டு திருவாய் மலர்ந்தது, வாளெடுத்து வெட்ட வந்த உமர் (ரலி) அவர்களை திருக்குரான் தான் அற்புதத்தில் மாற்றியது, அரபி பெரும் புலவர்கள் கூட - மாஹாதா கலாமுல் பஷர் - நிச்சயமாக மனிதனின் சொல்லன்று என்று ஒப்புக் கொண்டது இஸ்லாமிய வரலாறு,குப்பையை தலையில் கொட்டிய போதும், கற்களாலும் சொற்களாலும் நையப் புடைக்கப்பட்ட போதும், தொழுகையின் போது ஒட்டகத்தின் குடலை எடுத்து வீசிய போதும், கொலை செய்வதற்கே துணிந்த போதும், போர் போர் என்று எடுத்ததற்கெல்லாம் அறைகூவலிட்டு அழைத்த போதும் அசைந்து கொடுக்காமல் அழுத்தம் இன்னும் அழுத்தம் என்று கொண்ட இறை கொள்கைக்காக பாடுபட்ட பெருமானாரை பார்த்து இறைவனே 'அந்த பொறுப்பு உமது எலும்பை முறித்து கொண்டிருந்தது' என்று கூறும் அளவிற்கு அழுத்தமாக நின்று சாதித்து காட்டியவர் தான் பெருமானார், பூண்டு சாப்பிட்டு விட்டு பள்ளிவாசலுக்கு வர கூடாது என்றும் அசுத்த காற்று வெளியாகி விட்டால் அங்க சுத்தி (ஒலு) செய்ய வேண்டும் என்று தூய்மை கற்றுக் கொடுத்தவர் எங்கள் பெருமானார், தூய்மை இறைவிசுவாசத்தின் ஒரு பகுதி என்று போதனை செய்தவர் பெருமானார், எச்சிலை யாராவது துப்பியிருந்தால் கழுவி விட்டு சுத்தம் செய்துவிடுவார்கள், அப்படி துப்பக் கூடாது என்று கேட்டுக் கொண்டார்கள், முதலாளிகளின் சுரண்டல் எனப்படும் அதிக லாபத்தில் 'சகாத் ஏழைவரி' வழங்க சொல்லி பொருளாதார புரட்சியை ஏற்படுத்தியவர் பெருமானார், அது வரை எவ்வளவு சம்பாதிக்கிறோம் என்ற கணக்கு கூட இல்லாமல் இருந்த மக்களை கணக்கு பார்க்க சொல்லி 2.5 சதவிகிதம் வழங்க சொல்கிறார்கள் பெருமானார், பெருமானார் அவர்கள் பாயிலும் படுத்தார்கள், சில சமயம் மண் தரையிலும் படுத்தார்கள், பார்லி ரொட்டியை விரும்பி உண்டார்கள், பல நாள் பட்டினி கிடந்தார்கள், பேரீச்சம் பழமும் தண்ணீரும் மட்டுமே உணவாக பல நாள் உட்கொண்டார்கள், களி மண்ணும் பேரிச்சம் பழ ஓலையுமே வீட்டை அலங்கரித்தது, அரபு நாட்டினை ஆண்ட அரசரிடம் எங்கள் பெருமானாரிடம் பசி மிகுந்த ஒருவர் உண்ணக் கேட்ட போது, 'வீட்டில் ஏதாவது இருக்கிறதா? என்று மனைவியிடம் கேட்ட போது 'தண்ணீர் மட்டுமே உள்ளது'' என்று பதில் வந்தது, ஒரு நாட்டின் மன்னரின் நிலை தான் இது என்றால் என்ன வென்று சொல்லி போற்றுவது, நாயனின் நாவால் புகழப்பட்டவரை என்ன சொல்லி புகழ்வது, துறவியாக இருந்துக் கொண்டு எளிமையாக இருக்க வில்லை அரேபியாவையும் அதன் பக்கத்து நாட்டையும் ஆண்ட அரசர் ஏழையாய் - 'இறைவா ஏழையாகவே என்னை இறக்கச் செய்' என்று பிரார்த்தித்தவர்- எளிமையாய் - கிழிந்த தனது ஆடைகளை தன் கைபட தைத்து அணிவார்கள்- குடிசையில் வாழ்ந்தார்கள் என்பது அனைத்து மனித குலத்திற்கும் பெருமானாரின் வாழ்க்கை அழகிய முன்மாதிரி என்று இறைவன் சொன்னால், நாம் கை கட்டி வாய் பொத்தி ஏற்றுக் கொள்ள வேண்டிய அழகிய மொழிகளன்றோ, இது வரை பெருமானார் அவர்களை கடவுள் என்ற அந்தஸ்த்திற்கு உயர்த்தாமல் அவர் மனித குலத்தின் முன்மாதிரி என்ற அளவிலேயே 1400 ஆண்டுகளுக்கும் மேலாக எந்த திரிபுமின்றி காப்பாற்றப்பட்டு வருகிறது என்று சொன்னால் மறுக்க தான் ஆளுண்டோ? இன்னும் எழுதலாம் எங்கள் பெருமானாரை பற்றி, எனினும் இந்த அளவில் விடை பெறும்
நாகூர் இஸ்மாயில்

nagoreismail said...
This comment has been removed by a blog administrator.
தருமி said...

//உங்களது கேள்விகள் எனக்கு திருப்தி அளிக்காதது போல்...// அப்படியிருப்பினும் இத்துணை நீள பதிலை அளித்தமைக்கு மிக்க நன்றி. உடன் பதிலும் தராதுவிட்டதற்கு கோபம் கொள்ளற்க; முடியாது போயிற்று.

நபி நாம் எல்லோரும் பின்பற்றும் அளவுக்கு இருந்தாரா என்ற என் ஒரு கேள்விக்கு நன்கு பதில் கொடுத்துள்ளீர்கள்.மிக்க நன்றி. நீங்கள் சொன்னதை வைத்து அந்த என் கேள்விக்கு முழுமையாகப் பதில் கூறிவிட்டதாகவே கொள்கிறேன்.

இருப்பினும் சில கருத்துக்களை அதை ஒட்டி சொல்ல விழைகிறேன்:

1. perspective என்பது எனக்கு மிகவும் பிடித்த ஒரு சொல். நாம் பார்க்கும் கோணம் என்று கொள்வோமே. நீங்கள் இருக்குமிடத்தில் இருந்து பார்க்கும் பொழுது உங்களுக்குக் கிடைக்கும் 'பார்வை' எனக்கு வேறாக இருக்கும்.
உதாரணமாக Casabianca-வின் கதையை சின்ன வயதில் படிக்கும்போது உயர்வாகக் காண்பிக்கப்பட்டது; அதனால் உயர்வாகவே தோன்றியது. ஆனால் வயதாக ஆக அந்தச் சின்னப் பையன் செய்தது தவறு என்று எனக்குத் தோன்றுகிறது. நீங்கள் சொன்ன ஒரு நிகழ்வும் அவ்வாறே எனக்குத் தோன்றுகிறது: //நீங்கள் அந்த தெருவில் நில்லுங்கள், நான் வருகிறேன், என்று கூறி விட்டு மறந்து விட்டார், மூன்று நாள் கழித்து அந்த இடத்திற்கு வந்த போது பெருமானார் நிற்பதை பார்த்து விட்டு வியந்து போய், 'நீங்கள் இங்கேயா நிற்கிறீர்கள்' என்று கேட்டதற்கு சிறிதும் சலனமில்லாமல் 'நீங்கள் தானே நிற்க சொன்னீர்கள்' என்று கேட்டார்கள்,..//

2. நீங்கள் சொன்ன நற்குணங்கள் ஒவ்வொன்றும் நாம் பார்க்கும் நல்லவர்கள் பலரிடம் விரவிக் கிடக்கலாம்; ஆனால் நபியிடம் அவைகளை எல்லாம் ஒட்டு மொத்தமாக நீங்கள் காண்கிறீர்கள். நன்று. உதாரணமாக, உங்கள் பதிலின் இறுதியில் அவரது ஏழ்மைக் கோலம் பற்றிக் கூறியுள்ளீர்கள்; ஒளரங்கசீப்பின் ஏழ்மை நினைவுக்கு வந்தது. அதில் ஒரு ஐயம்: தன்னால் எல்லோரையும் சமமாகவும், சுகமாகவும் வைத்திருக்க முடிந்தவர்கள் மட்டுமே ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியரை மணந்து கொள்ளலாம் என்றிருக்கையில், வீட்டில் வெறும் தண்ணீர் மட்டுமே இருக்கிறது' என்று சொல்லுமளவிற்குப் பொருளாதாரத்தில் கடைநிலையில் இருந்தவர் அத்தனை மனைவியரை மணப்பதே தவறோ என்று தோன்றியது.

எழுந்த என் ஐயங்கள் ஒருபக்கம் இருந்தாலும், எனது இருபது அல்லது இருபத்தோரு கேள்விகளில் ஏற்கெனவே பதிலளிக்கப் பட்டுள்ள நாலைந்து கேள்விகளோடு இந்த 8வது கேள்வியும் பதிலிறுக்கப்பட்டு விட்டதாகக் கொள்கிறேன்.

Anonymous said...

தருமி,



உங்களின் பதிவு மற்றும் வந்துள்ள பின்னூட்டங்கள், ஏனைய பதிவுகளில் சொல்லப்பட்டுள்ள பதில்கள் ஆகியவற்றைப் பற்றி எனக்குத் தோன்றும் சில சிந்தனைகள்:


1. முகமது எளிமையானவர், ஏழை - அதனால் நல்லவர் என்ற இவர்களின் கருத்தாக்கமே குறைபாடுடையதுதான். பணத்தையும் விட போதை தரக்கூடியது அதிகாரம். அப்படிப் பார்த்தால் இன்னும் சில நூற்றாண்டுகள் கழித்து நமது அமைச்சர்களும், எம்.எல்.ஏக்களும் ஏழ்மையில் வாழ்ந்தார்கள் என்று சரித்திரத்தை திரித்து விடலாம்.

2. அப்படிப் பணம் என்று பார்த்தாலும், முகமதுவுக்கென்று காபிர்களிடமிருந்து கொள்ளையடிக்கப் பட்ட பணத்தில் ஐந்தில் ஒரு பங்கு போனது. அவர் செத்த பின்பும் அவரது குடும்பத்தாருக்கு பெரும் தொகை இப்படிப் போய்க்கொன்டிருந்தது. கஜானாவே அவருடையதுதான் என்கையில், அவரது வீட்டில் தண்ணீர் இருந்தது என்றால் அது பம்மாத்தல்லவா?

3.முகமது பணவசூலில் குறியாயிருந்தார் என்பதைத்தான் குரானில், ஹதீதுகளில் பார்க்கின்றோம். ஜகாத் என்பதை ஏழை வரி என்று இன்று திரிக்கின்றார்கள். அப்படிப்பார்த்தல், இன்று நாம் அரசுக்கு செலுத்தும் வரிகூட ஏழைவரிதான்! அல்லாஹ், குரானில் திரும்பத்திரும்ப ஜகாத் கொடு என்று கேட்கிறார். பல இடங்களில் அல்லாஹ்வை நம்பினால் மட்டும் போறாது, ஏக இறைக்கொள்கையை நம்பினால் மட்டும் போதாது, முகமதுவை ஏற்றுக் கொள்ள வேண்டும், அவருக்கு அடிபணிந்து ஜகாத் கொடுக்க வேண்டும் என்றிருப்பதைப் பார்க்கலாம்.

4. இது போகட்டும், ஆயிஷா விஷயத்துக்கு வருவோம். முகமதுவின் நடவடிக்கைகளில் தொடர்ச்சியாக ஒரு பேட்டர்ன்(pattern) இருப்பதைப் பார்க்கலாம். ஆயிஷா மீது ஆசைப்பட்டு, கடவுள் வந்து தனக்கு கனவில்(கனவில் வருவதும் வஹீதான்) ஆயிஷாவை மணமுடித்து விட்டார் என்று அபூபக்கரிடம் சொல்கிறார். அபூபக்கர் கனவுகளை நம்பக்கூடியவர், கனவுகளுக்கு அர்த்தம் சொல்லக்கூடியவர் என்பதை இங்கே கவனிக்க வேண்டும். அபூபக்கர் முதலில் மறுக்கிறார்(இது குறித்து ஏமாறாதவன் விரிவாக எழுதியிருப்பதால் நான் விளக்கமாக அவற்றை இங்கே சொல்லவில்லை, நிறைய இணைய தளங்களிலும் இவ்விஷயம் காணக்கிடைக்கின்றது). பின்பு, முகமதின் மகளின் கரத்தைக் கேட்கிறார். முகமது ஒப்புக்கொண்டு தாம் முதலில் ஆயிஷாவை மணந்து கொள்கிறார். பின்பு, பாத்திமாவை அபூபக்கர் மணந்து கொள்வதை கடவுள் விரும்பவில்லை என்று தெரிவித்து விடுகிறார்(இன்றும் இஸ்லாமியர்களிடையே அதனால் பெண்ணைக் கொடுத்து பெண்ணை மணப்பது விரும்பப்படுவதில்லை). அபூபக்கர் கடைசிவரை பெண்ணையும் இழந்து சூழ்நிலைக்கைதியாக மாறிவிடுகின்றார்.

5. இங்கே முற்போக்கு இஸ்லாமியர்கள் என்று தம்மை கற்பனை செய்துகொள்ளும் இஸ்லாமிய நண்பர்கள் என் மீது கோபம் கொள்ளக் கூடும். என்னது முகமதை நேசகுமார் தவறாக நினைக்கிறாரே, பெண்ணைக் கொடுப்பது பரிமாறிக்கொள்வது காட்டுமிராண்டித்தனம், பெண்ணடிமைத்தனம் என்றெல்லாம் புலம்பக்கூடும். ஆனால், பெண்ணை உடமைபோல, பண்டமாற்று செய்து கொண்டது முகமதுதான். உதாரணமாக, போரில் பிடித்த பெண்களை தமது மருமகன் அலிக்கு , மாமனார் உமருக்கு(இவரது மகள் ஹஃப்சாவும் முகமதுவிடம் பறிபோனார்) , தமக்கு என்று பங்குபோட்டுக் கொண்டவர் தான் முகமது. தாம் பங்கிட்டு பெண்களை விலங்குகள் போன்று மற்றவர்களுக்கு தந்ததோடு மட்டுமல்லாமல், போரில் பிடித்த காபிர் பெண்ணுடன் உறவு வைத்துக்கொண்ட தமது மருமகன் அலியைத் தட்டிக் கொடுத்து, அதைவிட அதிகமாக அவர் எடுத்துக் கொள்ளலாம், அலிக்கு அதற்கு உரிமை இருக்கின்றது என்று சொன்னவர் முகமது. போரில் பிடித்த யூதப்பெண்ணை அவரது கணவரை, உடனிருந்தவர்களை கொன்றுவிட்டு அன்றிரவே அவசரவசரமாக 'முதலிரவை' முடித்துக் கொண்டவர்தான் முகமது. இதற்கெல்லாம் ஏற்கெனவே ஆதாரங்களை எனது பதிவுகளில் எடுத்து வைத்திருப்பதால், மேலும் விவரிக்காமல் மேலே செல்கிறேன்.

6. முகமதுவின் பெண்ணாசைக்கு ஒன்றல்ல இரண்டல்ல, ஓராயிரம் உதாரணங்கள் இருக்கின்றன. அது எப்படி தமது வளர்ப்பு மகனின் அழகிய மனைவியை அல்லாஹ் இவருக்கு 'ஏற்கெனவே' திருமணம் செய்துவைத்து விடுகின்றார்? வளர்ப்பு மகன் முறை ஒழிய வேண்டுமென்றால், குரானின் வசனமாக இறைவன் அதை இறக்க வேண்டியதுதானே? தெருவில் போகும்போது தென்படும் அழகிய பெண்ணின் வனப்பால் கவரப்பட்ட முகமது வீட்டு வேலை செய்துகொண்டிருந்த மருமகள் ஜைனப்பை அழைத்து உறவு வைத்துக் கொண்டதும் ஹதீதுகளில் பதிவாகி இருக்கின்றது. அதே போன்று எஸ்.எல் அவர்கள் வேலைக்காரி என்று தவறாக எழுதியிருந்த கோப்டிக் அடிமைப்பெண்(அவரை திருமணம் செய்துகொண்டார் என்கிறார்கள்) விஷயத்தில் கூட ஹஃப்சா வீட்டில் உறவு வைத்துக் கொண்டார் முகமது. இதை நேரில் பார்த்துவிட்ட ஹஃப்சாவும், கேள்விப்பட்ட ஆயிஷாவும் சண்டையிடவே, கோபித்துக் கொண்டு போய் அந்த அடிமைப்பெண் வீட்டிலேயே ஒரு மாதம் தங்கிவிட்டார் முகமது. பின்பு மாமனார்கள் வந்து தம் பெண்களை சமாதனப்படுத்தி முகமதுவையும் திரும்ப அழைத்துக்கொண்டு வந்தார்கள்.இப்படி செக்ஸ் உணர்வை அடக்க முடியாதவர், உத்தமர், இந்தத் திருமணங்களையெல்லாம் அல்லாஹ் கட்டளையிட்டதால் வேறு வழியின்றிச் செய்தார் என்பது இஸ்லாமிஸ்டுகளின் பிதற்றலே தவிர வேறொன்றுமில்லை.

7.மேலே நாகூர் இஸ்மாயில் அவர்கள் எழுதியிருப்பதெல்லாம் இவர்களாகவே பிறகு கற்பனை செய்து கொண்டது. முகமது பெரிய உத்தமர் என்றால், அவரை விட உத்தமர்கள் அன்றிருந்தார்கள். அன்றே அவர் தமது வளர்ப்பு மகனின் மனைவியை திருமணம் செய்துகொண்டது முறையற்ற செயலாகக் கருதப்பட்டது.

8.அதே போன்று, குரானைப் பாருங்கள். அங்கேயும் காம இச்சை ததும்ப சொர்க்கம் விவரிக்கப் படுகின்றது. ஜிகாதிகளை முகமது கூட்டியதும், இப்படி காபிர் பெண்களைக் காட்டித்தான்(இப்போது நான் படித்துக் கொண்டிருக்கும் அற்புதமான நூலின் அட்டைப்படம் சம்பந்தப்பட்டது. அதில் வரும் வரிகளைக் கவனியுங்கள்- "Then [later] they [i.e., the Muslims] celebrated and enjoyed beautiful women" http://www.hirhome.com/islam/art.htm ).இதுதான் முகமதுவின் சுன்னாஹ். அதனால்தான் ஜிகாத் நடைபெறும் இடங்களில் எல்லாம் பாலியல் வன்கொடுமைகளும் சேர்ந்தே நிகழ்கின்றன. அதற்கு மத அடிப்படையிலான ஒரு தர்க்கத்தை இஸ்லாம் முன்வைக்கின்றது - அதாவது காபிர்களின் பெண்டு பிள்ளைகள் முஃமீன்களின் உடமை என்று(women and children of kafirs are legitimate war booty for muslims engaged in jihad). இந்த கோட்பாடுகளெல்லாம் முகமதுவின் காம வேட்கைகளினின்று எழுந்தவையே.

9. இஸ்லாத்தை மற்றவர்கள் விமர்சனம் செய்தால் அதை வன்முறை கொண்டு அடக்கிவிட்டு, இப்படி புரட்டல் வாதத்தில் இறங்கிவிடுகின்றார்கள் நமது இஸ்லாமிய சகோதரர்கள்.கதீஜா அவர்கள் உயிருடன் இருந்தவரை முகமது ஒழுங்காக இருந்தார் என்று வாதிடுபவர்கள், முகமது தமக்கு அதிகாரம் வரும் வரை ஒழுங்காகத்தான் - எல்லா விதங்களிலும் இருந்தார் என்பதை கவனிக்க தவறிவிடுகின்றார்கள். அதிகாரம் வந்தவுடன் முகமதுவின் நடவடிக்கைகள், செயல், சொல்(குரானின் வசனங்கள்) எல்லாமே மாறிவிட்டன. அதுவரை அடக்கி வைத்த காமம், தனது மனமயக்கங்களின் மூலம்(கடவுளிடம் பேசுவதாக, கடவுள் தன்னிடம் காட்சிகளை காண்பிப்பதாக) வடிகால் தேடிக்கொண்டது என்பதுதான் இஸ்லாத்திலிருந்து தள்ளி நின்று பார்க்கும்போது நாம் காண்பது.


10. இது தவிர, முகமதுவின் குரூரத்திற்கும், செல்வ ஆசைக்கும், நயவஞ்சகத்திற்கும் நிறைய உதாரணங்களை குரான் , ஹதீஸ், சீரா போன்றவைகளிலிருந்தே காட்ட முடியும். இன்றுவரை இவர்கள் முகமதைப் பற்றிய ஒரு விவாதத்தை வன்முறையின்றி செய்ய முடியாதது ஏன் என்றால் - இதனால்தான், இந்த உண்மைகள் வெளிவருவது குறித்த அச்சத்தினால்தான்.

தருமி said...

thank you, delphine

//some better research than about religions.//
do you mean to say that religons are 'above' research?

Prabhu said...

யப்பா... ஒரே ரவுண்டில் எல்லா பாகங்களையும் படிச்சு கிர்ர்ர்ர்ன்னு இருக்கு!... நல்லா எழுதியிருக்கீங்க! அதவிடவும் முக்கியமான விஷயம், நிறைய படிச்சிருக்கீங்க! Bit heavy for me... Would take me sometime to digest it. Interesting... Where are those two posts u are supposed to be publish?

தருமி said...

which chapters you mean, pappu?
are they these?

http://dharumi.blogspot.com/2006/09/175-7.html

http://dharumi.blogspot.com/2005/09/68-8.html

தெய்வமகன் said...

தருமி அவர்களே உங்களின் கட்டுரை மிகவும் அருமை.என் நம்பிக்கை கிறிஸ்தவமாக இருந்தாலும் உங்களின் கேள்விகளில் கிறிஸ்தவத்தை பற்றிய ஒரு சில புரிதல்கள் தவறாக தெரிதாலும் ஒரு சராசரி மனிதனாக உங்களிடம் இருந்து வரும் உணர்வுகளை புரிந்துகொள்ள முடிகிறது.

இஸ்லாம் பற்றிய கண்ணோட்டங்கள் சற்றேரக்குறைய மிகவும் சரியாக இருந்தது என்று என்னிக்கொண்டு இருக்கும் வேளையில் யாரோ ஒருவர் கொடுத்த பதிலில் பல்டி அடித்தது அவ்வளவு சரியாக படவில்லை.

//நபி நாம் எல்லோரும் பின்பற்றும் அளவுக்கு இருந்தாரா என்ற என் ஒரு கேள்விக்கு நன்கு பதில் கொடுத்துள்ளீர்கள்.மிக்க நன்றி. நீங்கள் சொன்னதை வைத்து அந்த என் கேள்விக்கு முழுமையாகப் பதில் கூறிவிட்டதாகவே கொள்கிறேன்.//

முகமதுவுடைய சில நல்ல குணங்களை மட்டும் வைத்து உங்கள் வாதத்தை திரும்ப பெருவது என்பது சரியானதல்ல.நேசகுமார் எழுதியதை போல முகமதுவின் காலத்திற்கு முன்பும் அவர் காலத்திலும் எவ்வளவோ நல்லவர்கள் இருந்தார்கள் என்பதற்கு முகமதுவின் சித்தப்பாவே சாட்சி.அவர் இல்லாவிட்டால் இன்று முகமதுவே இல்லை.முகமதுவின் கொள்கை பிடிக்கவிட்டாலும் அவரை பாதுகாத்த உத்தமர் அவர்தான்.ஆனால் அவரும் நரகம் தான் செல்வார் என்பதே அல்லாவிப்ன் கூற்று.

சரி விசயத்துக்கு வருவோம் முகமது இன்றைக்கும் பின்பற்ற கூடியவரா இருந்தால் ஈராக்கை பிடித்த அமேரிக்க துருப்புகள் அங்கிருந்த பெண்களுக்கு செய்த கொடுமைகள் ஒன்றும் பெரியது அல்ல.அதைவிட கொடுமையானதை முகமது நமக்கு கற்றுக்கொடுத்துள்ளார்.அதாவது முகமது செய்தது போலவே செய்ய வேண்டுமானால் ஈராக்கில் இருந்த ஆண்கள் எல்லோரையும் கொன்று விட்டு அவர்களின் மனைவிகள்,மற்றும் பெண் பிள்ளைகளாகிய எல்ல இஸ்லாமிய பெண்களையும் அமேரிக்கர்கள் ஆளுக்கு இவ்வளவு என்று பிரித்து அடிமைகளாக வைத்துக்கொண்டு வண்புணர்ச்சியில் ஈடுபடுத்தினாலே அது முகமதுவின் வழியும்,அல்லாவின் வழியுமாகும்.

இப்பொழுது சொல்லுங்கள் இது பின் பற்றக்கூடிய வழியா?

இதை நீங்கள் ஒத்துக்கொள்ளுவீர்களா?

அண்ணாமலையான் said...

மிக அருமையான தொகுப்பு ஐயா...நன்றி

தருமி said...

//என் நம்பிக்கை கிறிஸ்தவமாக இருந்தாலும் உங்களின் கேள்விகளில் கிறிஸ்தவத்தை பற்றிய ஒரு சில புரிதல்கள் தவறாக தெரிதாலும்..//

எனது அடுத்த பதிவில் வரும் கேள்விக்குப் பதிலளிக்க அழைக்கிறேன். பதிவு;377

தருமி said...

//அடுத்த பதிவில் வரும் கேள்விக்குப் பதிலளிக்க அழைக்கிறேன். பதிவு;377//

மன்னிக்கணும்; முந்திக்கிட்டேன். பதிவு : 376

Anonymous said...

தருமி சார்,
உங்கள் கட்டுரையைப் படித்தேன். அதற்கு மாலிக் மற்றும் இஸ்மாயில் போன்றவர்களின் விளக்கங்களையும் படித்தேன். நன்றாக இருந்தது. நிறைய ஆராய்ந்து படித்து எழுதியுள்ளீர்கள்.

மதங்கள் கேள்விக்குள்ளாக்கப்படுவதை எதிர்க்கும் குணம் மதம் மீதான விமர்சனங்களை அனுமதிக்காத குணம் எல்லா மதங்களிலும் இருந்திருக்கிறது. நாளடைவில் அம்மதத்தின் ஆளுநர்கள் அடைந்த அதிகார வளர்ச்சிகளைப் பொறுத்து மதத்தின் மீதான இறுக்கமும் தளர்ந்திருக்கிறது.

இஸ்லாமிய மதம் இன்னும் அம்மாதிரிக் கேள்விகளை இன்னும் தனக்குள் போதுமான அளவு எழுப்பிக் கொள்ள வில்லை என்று சொல்லலாம். கிறித்துவ மதம் ஏறக்குறைய மேற்கத்தியநாடுகளி்ல் ஓரினச் சேர்க்கை, குடும்ப அமைப்பின் பிளவு என்று சிதைக்கும் யதார்த்தங்களால் வெறும் அடையாளமாக குறுகி விட்டிருக்கிறது. இந்து மதம் இந்தியாவில் பல்வேறு நெகிழ்வுத் தன்மைகளுடன் ரவிசங்கர் முதல் பால்தாக்கரே வரை யார் இழுத்த இழுப்புக்கும் வளைந்துகொண்டிருக்கிறது.

இந்து மதத்தில் ரிஷிமார்களின் பத்தினிகளை வீடுபுகுந்து சிவன் கற்பழித்த கதை உண்டு. இயேசுவின் காதலி மக்தலீனா என்கிற பார்வைகளும் உண்டு. இவற்றை அந்தந்த மதத்துக்காரர்கள் வசதியாக மறந்து கொள்வதும் தெரிந்தது தான். முகமதுவின் காம இச்சைகள் பற்றி விலாவரியாகப் பேசுவது அவர் அக்காலத்தின் மிகச்சிறந்த ஒரு சமூக சீர்திருத்தவாதி என்பதை மறக்கடிக்க விரும்பும் தன்மையே ஆகும். மதங்கள் எப்போதும் இது போன்ற குறைபாடுகளையும் அதே சமயம் ஆழ்ந்த நம்பிக்கைகளையும் ஆதாரமாகக் கொண்டவை.

இஸ்லாமிய இனம் தற்போது உலகெங்கும் ஒடுக்கப்பட்டுக்கொண்டும், ஆக்கிரமிப்பிற்கும் உள்ளாகிக் கொண்டிருக்கும் ஒரு இனம். இது மேற்கத்திய கிறித்துவ X இஸ்லாம் என்ற போரின் தொடர்ச்சியாக உள்ளார்ந்து நடைபெறுகிறது. இவ்விதமான ஆக்கிரமிப்புக்கான போரின் (ஈராக், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், தென்னாப்பிரிக்க நாடுகள் etc) முதன்மைக் காரணம் இஸ்லாமிய நாடுகளின் எண்ணை வளம். மற்றது எளிதில் வசப்படும் சந்தை(market). இப்போரில் உலக இஸ்லாமிய மக்களின் ஒன்றிணைப்பு நிகழவில்லை. அவர்கள் மேற்கத்திய நாடுகளால் தந்திரமாக துண்டாடப்படுகிறார்கள் (சவூதி, குவைத் முதல் தற்போதைய யேமன் வரை).

இஸ்லாமியரின் ஜிகாத் என்பது ஒரு குறியீடாக்கப்பட்டது இஸ்லாமிய மதஉணர்வின் சகோதரத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட தீவிரவாத இயக்கங்களால் தான். மேற்கத்திய உலகும் அதன் அடிவருடிகளும்(எ.கா. நம்ம மன்மோகனின் இந்தியா) தற்போது இஸ்லாம்= தீவிரவாதம் என்ற பார்வையை நிலைநிறுத்தியுள்ளனர். இதன் பேரில் நடக்கும் ஆக்கிரமிப்புகளிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ள இஸ்லாமிய சமூகத்தின் உடன் இருக்கும் இணைப்புக் கருவி இஸ்லாம் மட்டுமே. அதன் பேரில் அவர்கள் ஒன்று படவேண்டும்; உலக வரைபடத்தில் தங்களை நிலைநிறுத்திக் கொள்ளவேண்டும். தீவிரவாதிகள் அப்பாவி மக்களைக் கொன்று பயங்கரவாதிகள் என்று பெயர் வாங்குவதை விடுத்து மேற்கத்திய அரசுகள் மற்றும் MNC க்களின் பிடியிலிருந்து வன்முறையிலேனும் வெளியேறவேண்டும். அதுதான் தற்போதைய அவசரத் தேவை.

உங்களின் மற்ற கட்டுரைகளைப் படிக்கவில்லை. உங்களின் பதிவில் இஸ்லாமியர்கள் தங்களை சுய மீள்பார்வை செய்வதற்காகத் தான் என்கிற நோக்கம் மட்டும் இருந்தால் அது அர்த்தமுள்ளது தான். உங்கள் எழுத்துக்களில் இஸ்லாமியர்களை சமூகத்தின் எதிரிகளாக, முரடர்களாக, பயங்கரவாதிகளாக சித்தரிப்பதன் அடிப்படை வேலையைச் செய்யாமல் பார்த்துக் கொள்ளுவீர்கள் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

Anonymous said...

தருமி சார்,
உங்கள் கட்டுரையைப் படித்தேன். அதற்கு மாலிக் மற்றும் இஸ்மாயில் போன்றவர்களின் விளக்கங்களையும் படித்தேன். நன்றாக இருந்தது. நிறைய ஆராய்ந்து படித்து எழுதியுள்ளீர்கள்.

மதங்கள் கேள்விக்குள்ளாக்கப்படுவதை எதிர்க்கும் குணம் மதம் மீதான விமர்சனங்களை அனுமதிக்காத குணம் எல்லா மதங்களிலும் இருந்திருக்கிறது. நாளடைவில் அம்மதத்தின் ஆளுநர்கள் அடைந்த அதிகார வளர்ச்சிகளைப் பொறுத்து மதத்தின் மீதான இறுக்கமும் தளர்ந்திருக்கிறது.

இஸ்லாமிய மதம் இன்னும் அம்மாதிரிக் கேள்விகளை இன்னும் தனக்குள் போதுமான அளவு எழுப்பிக் கொள்ள வில்லை என்று சொல்லலாம். கிறித்துவ மதம் ஏறக்குறைய மேற்கத்தியநாடுகளி்ல் ஓரினச் சேர்க்கை, குடும்ப அமைப்பின் பிளவு என்று சிதைக்கும் யதார்த்தங்களால் வெறும் அடையாளமாக குறுகி விட்டிருக்கிறது. இந்து மதம் இந்தியாவில் பல்வேறு நெகிழ்வுத் தன்மைகளுடன் ரவிசங்கர் முதல் பால்தாக்கரே வரை யார் இழுத்த இழுப்புக்கும் வளைந்துகொண்டிருக்கிறது.

இந்து மதத்தில் ரிஷிமார்களின் பத்தினிகளை வீடுபுகுந்து சிவன் கற்பழித்த கதை உண்டு. இயேசுவின் காதலி மக்தலீனா என்கிற பார்வைகளும் உண்டு. இவற்றை அந்தந்த மதத்துக்காரர்கள் வசதியாக மறந்து கொள்வதும் தெரிந்தது தான். முகமதுவின் காம இச்சைகள் பற்றி விலாவரியாகப் பேசுவது அவர் அக்காலத்தின் மிகச்சிறந்த ஒரு சமூக சீர்திருத்தவாதி என்பதை மறக்கடிக்க விரும்பும் தன்மையே ஆகும். மதங்கள் எப்போதும் இது போன்ற குறைபாடுகளையும் அதே சமயம் ஆழ்ந்த நம்பிக்கைகளையும் ஆதாரமாகக் கொண்டவை.

இஸ்லாமிய இனம் தற்போது உலகெங்கும் ஒடுக்கப்பட்டுக்கொண்டும், ஆக்கிரமிப்பிற்கும் உள்ளாகிக் கொண்டிருக்கும் ஒரு இனம். இது மேற்கத்திய கிறித்துவ X இஸ்லாம் என்ற போரின் தொடர்ச்சியாக உள்ளார்ந்து நடைபெறுகிறது. இவ்விதமான ஆக்கிரமிப்புக்கான போரின் (ஈராக், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், தென்னாப்பிரிக்க நாடுகள் etc) முதன்மைக் காரணம் இஸ்லாமிய நாடுகளின் எண்ணை வளம். மற்றது எளிதில் வசப்படும் சந்தை(market). இப்போரில் உலக இஸ்லாமிய மக்களின் ஒன்றிணைப்பு நிகழவில்லை. அவர்கள் மேற்கத்திய நாடுகளால் தந்திரமாக துண்டாடப்படுகிறார்கள் (சவூதி, குவைத் முதல் தற்போதைய யேமன் வரை).

இஸ்லாமியரின் ஜிகாத் என்பது ஒரு குறியீடாக்கப்பட்டது இஸ்லாமிய மதஉணர்வின் சகோதரத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட தீவிரவாத இயக்கங்களால் தான். மேற்கத்திய உலகும் அதன் அடிவருடிகளும்(எ.கா. நம்ம மன்மோகனின் இந்தியா) தற்போது இஸ்லாம்= தீவிரவாதம் என்ற பார்வையை நிலைநிறுத்தியுள்ளனர். இதன் பேரில் நடக்கும் ஆக்கிரமிப்புகளிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ள இஸ்லாமிய சமூகத்தின் உடன் இருக்கும் இணைப்புக் கருவி இஸ்லாம் மட்டுமே. அதன் பேரில் அவர்கள் ஒன்று படவேண்டும்; உலக வரைபடத்தில் தங்களை நிலைநிறுத்திக் கொள்ளவேண்டும். தீவிரவாதிகள் அப்பாவி மக்களைக் கொன்று பயங்கரவாதிகள் என்று பெயர் வாங்குவதை விடுத்து மேற்கத்திய அரசுகள் மற்றும் MNC க்களின் பிடியிலிருந்து வன்முறையிலேனும் வெளியேறவேண்டும். அதுதான் தற்போதைய அவசரத் தேவை.

உங்களின் மற்ற கட்டுரைகளைப் படிக்கவில்லை. உங்களின் பதிவில் இஸ்லாமியர்கள் தங்களை சுய மீள்பார்வை செய்வதற்காகத் தான் என்கிற நோக்கம் மட்டும் இருந்தால் அது அர்த்தமுள்ளது தான். உங்கள் எழுத்துக்களில் இஸ்லாமியர்களை சமூகத்தின் எதிரிகளாக, முரடர்களாக, பயங்கரவாதிகளாக சித்தரிப்பதன் அடிப்படை வேலையைச் செய்யாமல் பார்த்துக் கொள்ளுவீர்கள் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

Post a Comment