Tuesday, July 26, 2011

517. WHY I AM NOT A MUSLIM ... 22 (முடிந்தது ...)

*

*

ஏனைய முந்திய பதிவுகள்:
பதிவு - 7
பதிவு - 8
பதிவு - 9
பதிவு - 10
பதிவு - 11
பதிவு - 12
பதிவு - 13
பதிவு - 14
பதிவு - 15
பதிவு - 16
பதிவு - 17
பதிவு - 18
பதிவு - 19

........................... இப்பதிவு - 22

Image and video hosting by TinyPic





CHAPTER  17

ISLAM IN THE WEST 

சல்மான் ரஷ்டியின் நிகழ்வுக்குப் பிறகே ஐரோப்பியர்கள் நமக்கு நடுவில் சமய நல்லிணக்கத்திற்கு எதிரான மக்கள் வாழ்கிறார்கள் என்ற உணர்வைப் பெற்றார்கள். 

1989க்குப் பிறகு இங்கிலாந்தும், பிரான்சும் தங்களது சமய மாச்சரியம் இல்லாத நிலைப்பாடுகளின் நடுவே, இஸ்லாமியர் தங்கள் சமயப் பழக்க வழக்கங்களைக் கைக்கொள்ள முழு உரிமை வேண்டும் என்ற உச்சக்கட்ட நிலைப்பாடுகளுக்கும் போராட்டங்களுக்கும் வெவ்வேறு நிலைகளை மேற்கொண்டனர்.  

ரஷ்டியைக் கொல்ல வேண்டும் என்ற தங்கள் பத்வாவைப் பற்றிப் பேசும் எந்த இஸ்லாமியரையும் இங்கிலாந்து காவல் துறை கைது கூட செய்யவில்லை. 
இஸ்லாமிய அமைப்பைச் சார்ந்த Dr. Siddiqui இங்கிலாந்தின் சட்ட திட்டங்களை நாம் மதிக்க வேண்டியதில்லை; இஸ்லாமிய ஷாரியத் சட்டங்களே நமக்குத் தேவை என்று கூட்டத்தில் உரையாற்றிய போதும் அவரைக் காவல் துறை ஏதும் செய்யவில்லை.  ஆனால் பிரான்சில் ஒரு துருக்கி இஸ்லாமியக் குரு ஷரியத் சட்டங்களே பிரஞ்சு சட்டங்களை விட இஸ்லாமியருக்கு முக்கியமானது என்று கூறிய 48 மணி நேரத்தில் நாட்டை விட்டு அனுப்பப் பட்டார். 

பிரிட்டனில் அரபு நாடுகளின் வழக்கமான் பெண்களின் பாலியல் உறுப்புகளில் மேற்கொள்ளப்படும் பயங்கர அறுவை சிகிச்சைகளைப் பற்றி அதிகம் கண்டு கொள்வதில்லை. அதில் தலையிட்டால் ‘இனவெறி’ என்ற அவலத்திற்கு ஆளாகலாம். ஆனால் பிரான்சில் இவைகளுக்கு எதிரான வழக்குகள் உண்டு. (351)

பிரிட்ட்னில் இஸ்லாமியரும் அவர்களின் விழைவும்:
கடந்த 15 ஆண்டுகளில் இஸ்லாமியர் தாங்கள் வசிக்கும் பிரிட்டனின் சமூகத்தோடு ஒருங்கிணையத் தயாராக இல்லை. 
இஸ்லாமியப் பண்பாட்டுக் கழக முன்னாள் தலைவர் Dr. Zaki Badawi, ‘தங்கள் மதத்தைப் பரப்ப வேண்டும் என்பவர்கள் அமைதியாக இருக்க முடியாது. ...  இஸ்லாம் பிரிட்டனில் வளரவேண்டிய மதம். இஸ்லாமே உலகத்திற்குமான மதம்.  ... ஒரு காலத்தில் இந்த மதமே முழு மானிட சமுதாயத்திற்கும் உரியதாக வளர்ந்து, முழு மனிதச் சமுதாயம் ’உம்மா’ வாக மாறும்’, என்றார். (352)

ஒரு இமாம், ’உண்மையான ஒரே கடவுள் அல்லா; கிறித்துவர்களின் திரித்துவக் கொள்கை மனிதனின் ஊடுறுவலே. பிரிட்டன் பல்வேறு பிரிவினைகளோடு நிற்கிறது. ஆனால் இஸ்லாம் இங்கு முழுமையாக நிறுவப்பட்டாலே இந்த நாட்டுக்கு விமோசனம்’, என்றார். 

கிறித்துவத்தை இஸ்லாமியர் இழிப்பது உண்டு; ஆனால் இஸ்லாமியத்தை யாராவது இழிவு செய்ய முனைந்தால் பெருத்த சினத்தோடு கொதித்தெழுகிறார்கள். இஸ்லாமியரல்லாதவரும் குரான் கடவுளிடமிருந்து வந்ததை அப்படியே நம்ப வேண்டுமென  எதிர்பார்க்கிறார்கள். 

கேம்ப்ரிட்ஜ் பல்கலையின் இஸ்லாமிய அமைப்பு இங்கிலாந்தின் கல்வி முறை பற்றிய ஒரு கருத்துக் கணிப்பில், அந்த நாட்டின் சமயச் சார்பற்ற கல்வி முறை மகிழ்ச்சியளிப்பதாகவில்லை என்று கூறப்பட்டுள்ளது.  இங்கிலாந்தின் அரசியல் சட்டத்தை எதிர்த்தும், தங்களது அடிப்படையான கருத்துக்களைத் தான் இஸ்லாமியர் பின்பற்ற வேண்டும் என்றனர். (353)

இஸ்லாமியரின் தேவைகளும், முரண்களும்:
இஸ்லாமியரின் தேவைகள் மிக அதிகம். அவைகளை நிறைவேற்ற முயன்றால் இங்கிலாந்து சமுதாயத்தின் பல நல்ல பண்புகள் மறைந்தொழிந்து விடும். (353)

Peter Singer தான் எழுதிய Animal Liberation நூலில் ஒரு சான்று தருகிறார். இஸ்லாமியரும், யூத பழமைவாதிகளும் உணவுக்காகக் கொல்லப்படும் உயிரினங்கள் முழு உயிர்ப்போடு இருக்க வேண்டுமென்பார்கள். இங்கிலாந்தில் உயிரினங்கள் கொல்லப்படும் முன் மயக்கமாக்கப்பட்டு அதன் பின்னே கொல்லப்படும். இது கொல்லப்படுபவைகள் வலியோடு சாக வேண்டாமென்பதற்காகச் செய்யப்படுவது. ஆனால் யூத, இஸ்லாமியக் கோட்பாட்டின் படி அவைகள் முழு நினைவோடு இருக்கும்போது கொல்லப்பட வேண்டும். இன்றைய நிலையில் இது மிகவும் கொடுமையானது. ஆனால்  மதத்தின் பெயரால் செய்யப்படும் இந்தக் ‘கொலை’ அவர்களுக்கு நியாயமாகத்தான் இருக்கிறது. (354)

இஸ்லாமியப் பெண்களுக்கான கட்டாயக் கல்யாணம், honour killing, படிப்பறிவு தராதது, ஆண்களின் மேலாதிக்கம் .. இவைகளுக்கெதிராக காவல் துறை இருப்பதில்லை. கண்டும் காணாது போய் விடுகிறார்கள். இங்கிலாந்தில் வாழ்ந்தாலும் அந்த நாட்டின் சட்டங்கள் இந்தப் பெண்களுக்கு உதவாமல் போய்விடுகிறது.

இஸ்லாமிய நாட்டிற்காகத் தீவிரமாகக் குரல் கொடுக்கும் லண்டனின் இஸ்லாமிய அமைப்பின் இயக்குனர் Dr. Kalim Siddiqui பிரிட்டனின் இஸ்லாமிய நாடாளுமன்றம் அமைத்து, அது இங்கிலாந்து இஸ்லாமியரின் நன்மைக்காகப் போராட வேண்டுமென்கிறார். அவர் எழுதிய பல நூல்களில், இஸ்லாம் உலகமயமாகுதல், அயத்துல்லா கோமேனி பற்றிய புகழாரங்கள், கத்தியால்  இஸ்லாம் பரப்புதல், மேலை நாட்டு தத்துவம், சமுதாயம், அரசியல், பொருளாதாரம் பண்பாடு ... அனைத்தையும் சிதைத்து அல்லாவின் ராஜ்யத்தை இவ்வுலகில் பரப்ப வேண்டுமென்கிறார். அரசியலும் மதமும் பிரிக்க முடியாதவை என்கிறார். 

அவரின் எழுத்துக்களில் ஜனநாயகம், விஞ்ஞானம், தத்துவம், நாட்டுப் பற்று, தானே முடிவெடுத்தல் போன்ற அனைத்தும் அவரின் கோபத்துக்குள்ளாகின்றன. (355)

பல பண்பாட்டுக் குவியல்:
Mervyn Hiskett, ’சமய நம்பிக்கைகளைப் பொறுத்துக் கொள்ளலாம்; ஆனால் சமய பழக்க வழக்கங்களும், அமைப்புகளும் ஒரு நாட்டின் சட்ட திட்டங்களுக்குப் புறம்பாக நின்றால் அவைகளைப் பொறுத்துக் கொள்ளக் கூடாது’ என்கிறார். . ஆனால் இது பெரும்பான்மையான இஸ்லாமியருக்குப் பொருந்தாத கொள்கை. இதனாலேயே இங்கிலாந்திலேயே பிறந்து வளர்ந்த ஒரு பெண்ணை அவளின் விருப்பத்திற்கு மாறான திருமணத்திற்குள் தள்ளுவது, மற்றவர்களுக்கு மிக கொடூரமாகத் தோன்றும் விதத்தில் உயிரினங்களைக் கொல்வது, பள்ளியில் பரிமாணத்தைப் பாடமாக வைப்பதை எதிர்ப்பது, பள்ளியாண்டு தங்கள் சமய பழக்க வழக்கங்களுக்கு ஏற்றாற்போல் மாற்றி வைக்கப் போராடுவது ... இப்படி ஒரு பெரிய பட்டியலே உண்டு. (356)

அரசியல்வாதிகளின் ஏமாற்றல்:
11, டிசம்பர், 1990-ல் The Daily Telegraph -ல் வந்த தலையங்கத்திலிருந்து சில பகுதிகளை  Hiskett சுட்டுகிறார்: 
 இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு விட்டுக் கொடுக்கும் அளவு நிச்சயமாக வேறு எந்த மதத்திற்கும் நாம் கொடுப்பதில்லை. ஏனிப்படி? அரசும் லேபர் கட்சியுமே இதற்கான காரணங்கள். 
லேபர் கட்சி பதவிக்கு வந்தால் அமெரிக்காவில் யூதர்களின் தாக்கம் அரசியலில் அதிகம் இருப்பது போல் இங்கும் இஸ்லாமியரின் ஆதிக்கம் காலூன்றும்.
கன்சர்வேடிவ் கட்சியும் தன் பங்கிற்கு பொருளாதார நன்மைக்காக செளதி அரேபியாவின் மக்கள் நன்மைக்கெதிராக செய்பவைகளைக் கண்டுகொள்வதில்லை. BBC-யின் நிகழ்ச்சிகள் செளதிக்கு எதிராக இல்லாதவாறு தடை செய்கிறது. செளதியில் வாழும் கிறித்துவர்கள் அந்த அரசுக்குப் பயந்து, இங்கிலாந்தில் இஸ்லாமியருக்கு இருக்கும் சுதந்திரம் போல் அல்லாமல்,  தங்கள் மதங்களை மிக ரகசியமாகப் பின்பற்ற வேண்டியதுள்ளது.

கல்வியாளர்களின் ஏமாற்றல்:
பிரிட்டனில் கல்வியும் அரசியலும் முழுவதுமாகப் பிரிக்கப்படவில்லை. இதனாலேயே பள்ளிகளில் கூட்டுப் பிரார்த்தனை நடந்து வருகிறது. இதை வைத்து  இஸ்லாமியர் பள்ளிகளில் தங்கள் பிரச்சாரத்தைத் தொடங்கி விடுகிறார்கள். கல்வியிலிருந்து சமயத்தைப் பிரிப்பதே மிகச் சிறந்தது.

பொதுப் பள்ளிகள் இஸ்லாமிற்கு மட்டுமின்றி எந்த சமயத்திற்கும் எவ்வித சலுகையையும் கொடுக்கக் கூடாது. எல்லாப் பள்ளிகளிலும் கலை, இசை, நாடகம் எல்லாம் சொல்லிக் கொடுக்கப் படவேண்டும். பெற்றோர்களுக்கு இவையெல்லாம் கட்டாயப் பாடம் என்றும், எந்த மதத்து மாணவரும் இவைகளைப் பயில் வேண்டுமென்றும் சொல்லிவிடல் வேண்டும். (358)

அறிவாளிகளின் ஏமாற்றல்:
 Pluralism -- இது பல சமூகங்கள் இணைந்த ஒட்டு மொத்த சமூகம். நானாவித குமுகங்கள் குவிந்து இணைந்திருக்கும் - தங்களின் வேறுபாடுகளோடு.
Multiculturalism  --பல சமூகங்கள் தங்கள் வேற்றுமைகளைக் காண்பித்துக் கொண்டு கூடியிருத்தல். (இடியாப்பச் சிக்கல்)

ஜனநாயகத்தில் பல குளறுபடிகள் இருக்கலாம். ஆனாலும் மேற்கத்திய ஜனநாயகம் வெகு நிச்சயமாக அதிகாரமும், மனதை வெருட்டும் இஸ்லாமிய சமய அரசியலை விட மிக நல்லது.

போராட்டம் இஸ்லாமிற்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் நடுவேயில்லை; அது சுதந்திரத்தை விரும்புவோருக்கும் அதனை எதிர்ப்போருக்கும் நடுவே!


======================
இத்துடன் WHY I AM NOT A MUSLIM என்ற நூலின் முக்கியக் குறிப்புகள் முடிந்து விட்டன. நீ..... ண் ... ட ...   கட்டுரையாகி விட்டது. இக்கட்டுரையை எழுதிப் பதிப்பித்த போது எனக்கு சில ஊன்றுகோல்கள் கிடைத்தன; சில தூண்டுகோல்கள் கிடைத்தன.

ஊன்றுகோல்கள்:
சார்வாகன்
Cortext
கல்வெட்டு
The Analyst
கும்மி
சீனு
வால்பையன்
No
நரேன்
குஜால்
கணேசன்
செங்கொடி
 குடுகுடுப்பை
Yasir

தூண்டுகோல்கள்:
சுவனப்பிரியன்
இறையடியான்
Zia
ராபின்
கார்பன் கூட்டாளி
மு. மாலிக்

விடை பெறும் முன் இன்னொன்று சொல்ல ஆசை. இப்பதிவுகளில் கலந்து கொண்டோர் சிலர் என்னை வியக்க வைத்துள்ளனர். அவர்களுக்கு என் பாராட்டுகளைத் தெரிவிக்க விரும்புகிறேன்.

முதலில் ஒரு தூண்டுகோல் - சுவனப்பிரியன். இவரது மத அறிவு என்னை ஆச்சரியப்பட வைத்தது. (வயதும் சின்ன வயது என்றே நினைக்கிறேன்.) என்னை ஆச்சரியப்பட வைக்கும் இன்னொன்று எப்படி இஸ்லாமியரில் மிகப் பலர் மதத்திற்காக இத்தனை  வலுவாக இருக்கிறார்கள் என்பது. (எங்கள் மதம் உண்மை; அதனால்தான் இப்படி என்ற விவாதம் வேண்டாமே. ஏனெனில் கிறித்துவ மக்களுக்கும் அவர்கள் மதமே சரியென்ற எண்ணம் உண்டு.)  இந்த இரு மதங்களிலுமே சிறு வயதிலிருந்தே “மதப்பாடம்” அழுத்தமாகச் சொல்லித் தருவதுண்டு. இஸ்லாமில் மதராஸா ஒரு extra விசயம். அது மட்டுமே இவ்வாறு ஒரு அழுத்தத்தைக் கொடுக்கிறதா என்று தெரியவில்லை. சுவனப்பிரியனின் மத அறிவுக்கு என் பாராட்டு.

IbnWarraq நிறைய நூல்களைத் தொகுத்து இந்நூல் எழுதியுள்ளார். சொன்ன செய்திகள் ஏராளம். ஆனால் அவரையும் விட இன்னும் நம் மக்கள் சிலர் மிக ஆழமாக இஸ்லாமைப் பற்றித் தெரிந்து வைத்துள்ளார்கள். இவர்களே இப்படி ஒரு நூல் எழுதினால் நிச்சயமாக அது மிக மிக நன்றாக - இந்த நூலைவிட நன்றாக - இருக்கும் என நம்புகிறேன். சார்வாகன், கும்மி, செங்கொடி - இவர்களின் மத அறிவு என்னை மிக வியப்படைய வைக்கிறது. மத நம்பிக்கையுள்ளவர்கள் மத நூல்களை பக்தியோடு வாசிப்பது வேறு; அது எளிதும் கூட. நம்பிக்கையோடு வாசிப்பது கண்ணை மூடிக்கொண்டு வாசிப்பது என்பதற்கு ஒப்பு. ஆனால் நம்பிக்கையில்லாமல் ஒரு தீவிர ஆய்வு மனப்பான்மையோடு வாசிப்பது மிகவும் கடினம். அப்படி வாசித்து தெளிவாக இருப்பது வியப்பு. இம்மூவருக்கும் என் வாழ்த்துகளும், பாராட்டுகளும்.

ஊன்றுகோல்களுக்கும்
தூண்டுகோல்களுக்கும்
மிக்க நன்றி






55 comments:

சீனு said...

//கன்சர்வேடிவ் கட்சியும் தன் பங்கிற்கு பொருளாதார நன்மைக்காக செளதி அரேபியாவின் மக்கள் நன்மைக்கெதிராக செய்பவைகளைக் கண்டுகொள்வதில்லை. BBC-யின் நிகழ்ச்சிகள் செளதிக்கு எதிராக இல்லாதவாறு தடை செய்கிறது. செளதியில் வாழும் கிறித்துவர்கள் அந்த அரசுக்குப் பயந்து, இங்கிலாந்தில் இஸ்லாமியருக்கு இருக்கும் சுதந்திரம் போல் அல்லாமல், தங்கள் மதங்களை மிக ரகசியமாகப் பின்பற்ற வேண்டியதுள்ளது.//

இந்தியாவிலும் இது தான் நடக்கிறது...

வால்பையன் said...

this is very much help to us, thank you very much sir

வால்பையன் said...

for follow up

saarvaakan said...

வணக்க்ம அய்யா,
அருமையான தொடர்,புத்தக்த்தை விடவே உங்கள் தொடர் அதன் பல விஷயங்களை ஆழமாக் அலசியது.விவாதங்கள் இன்னும் பல சிக்கல்களை வெளிக் கொண்டு வந்தன.
மத கண்ணோட்டம் இலாதவர்களுக்கு இத்தொடர் பல விஷயங்களை புரிய வைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.எத்த‌னை வாதங்கள்,பிடிவாதங்கள்?.அத்தனையும் சமாளித்தீர்கள்.அருமையான மொழி நடை.இதற்கு கடும் உழைப்பு தேவைப்பட்டு இருக்கும்.நீங்களே இப்புத்தக்த்தை தமிழாக்கம் செய்தால் நலமாக் இருக்கும்.
ஏதோ என்னால் முடிந்த்வரை இந்த விவாதங்களில் பங்கு கொண்டேன்.வாழ்த்துகள் . இன்னும் நிறைய சாதிக்க வேண்டி உள்ளது.
நன்றி

saarvaakan said...

/இந்த மதமே முழு மானிட சமுதாயத்திற்கும் உரியதாக வளர்ந்து, முழு மனிதச் சமுதாயம் ’உம்மா’ வாக மாறும்’/
தவறான கூற்று.ஹதிதுகளின் படி இப்படி ஆக்க முடியாது.1000 பேருக்கு ஒருவர் என்ற ரீதியில் மட்டுமே சொர்க்கம் செல்ல முடியும்.அப்பட்டமான் நாடு பிடிக்கும் ஆசைக்கு மதக் கருத்துகளை பயன் படுத்துகிறார். இத்னால்தான் மதத்தை எதிர்க்கிறோம்.பிறகு மனித சமுதாயம் முழுவதும் உம்மா எப்படி வரும்?.
இதனை படியுங்கள்.
_________
6530. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
(மறுமை நாளில்) அல்லாஹ் (ஆதி மனிதரை நோக்கி) 'ஆதமே!' என்று அழைப்பான். அதற்கு அவர்கள் '(இறைவா!) இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன். (கட்டளையிடு.) நலம் அனைத்தும் உன் கரங்களில் தான்' என்று கூறுவார்கள்.
அப்போது அல்லாஹ் '(உங்கள் சந்ததிகளில்) நரகத்திற்குச் செல்லவிருப்பவர்களை (மற்றவர்களிலிருந்து) தனியாகப் பிரித்திடுங்கள்' என்று கூறுவான். ஆதம் (அலை) அவர்கள் 'எத்தனை நரகவாசிகளை?' என்று கேட்பார்கள். அதற்கு அவன் 'ஓவ்வோர் ஆயிரம் பேரிலிருந்தும் தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றொன்பது பேரை (தனியாகப் பிரித்திடுங்கள்)' என்று பதிலளிப்பான். (அப்போதுள்ள பயங்கர சூழ்நிலையின் காரணத்தால்) பாலகன் கூட நரைத்து (மூப்படைந்து) விடுகின்ற, கர்ப்பம் கொண்ட ஒவ்வொரு பெண்ணும் கர்ப்பத்தை(ப் பீதியின் காரணத்தால் அரைகுறையாக)ப் பிரசவித்து விடுகிற நேரம் இதுதான். மக்களை (அச்சத்தால்) போதையுற்றவர்களாக நீங்கள் காண்பீர்கள். ஆனால், அவர்கள் (உண்மையிலேயே மதுவால்) போதையுற்றிருக்கமாட்டார்கள். மாறாக, அல்லாஹ்வின் வேதனை கடுமையானதாகும்.
இவ்வாறு நபியவர்கள் கூறியது மக்களுக்குச் சிரமமாக இருந்தது. எனவே, அவர்கள் 'இறைத்தூதர் அவர்களே! (ஒவ்வோர் ஆயிரத்திலும் நரகத்திற்குச் செல்லாமல் எஞ்சியிருக்கும்) அந்த ஒரு நபர் எங்களில் யார்?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் '(பயப்படாதீர்கள்;) நற்செய்தி பெறுங்கள். யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தாரில் ஆயிரம் பேர் என்றால், உங்களில் ஒருவர் (நரகத்திற்குச் செல்ல தனியாக பிரிக்கப்பட்டோரில்) இருப்பார்' என்று கூறிவிட்டுப் பிறகு, 'என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீதாணையாக! நீங்கள் சொர்க்கவாசிகளில் மூன்றில் ஒரு பங்கினராக இருக்கவேண்டும் என்று நான் பேராவல் கொள்கிறேன்' என்று கூறினார்கள். உடனே நாங்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து தக்பீர் (அல்லாஹு அக்பர்) முழக்கமிட்டோம். பிறகு, நபி(ஸல்) அவர்கள் 'என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீதாணையாக! நீங்கள் சொர்க்கவாசிகளில் பாதிப்பேராக இருக்கவேண்டுமென நான் பேராவல் கொள்கிறேன். மற்ற சமுதாயங்களோடு ஒப்பிடுகையில் நீங்கள் கறுப்புக் காளை மாட்டின் தோலிலுள்ள வெள்ளை முடியைப் போன்று, அல்லது கழுதையின் காலிலுள்ள வெள்ளை சொட்டையைப் போன்று இருக்கிறீர்கள்' என்றார்கள்.
என அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.111
Volume :7 Book :83
____________

தருமி said...

//நீங்கள் கறுப்புக் காளை மாட்டின் தோலிலுள்ள வெள்ளை முடியைப் போன்று, அல்லது கழுதையின் காலிலுள்ள வெள்ளை சொட்டையைப் போன்று //

கவித்துவ நடை அப்டி .. இப்டின்னு சொல்லுவாங்க... என் ‘அறிவுக்கு’ அப்படியெல்லாம் தெரியவில்லை. ம்ம் ..ம் ..

Robin said...

இஸ்லாமியர்களிடமிருந்து கொலை மிரட்டலோ வசைபாடும் பின்னூட்டங்களோ வரவில்லையா?

இந்தத் தொடரில் இஸ்லாம் மதத்தைவிட கிறிஸ்தவமதம் better என்று அடிக்கடி குறிப்பிட்டுள்ளீர்கள்.

அடுத்ததாக அர்த்தமுள்ள இந்துமதம் என்ற தொடரை எதிர்பார்க்கிறேன். இதற்கு சீனு, No போன்றோர் தூண்டுகோல்களாக இருப்பார்கள்.

தருமி said...

//,,,வசைபாடும் பின்னூட்டங்களோ வரவில்லையா?//

நம் பதிவர்களெல்லாம் அப்படிப்பட்ட ஆளுங்க இல்லையே! நீங்க வேற ...

//கிறிஸ்தவமதம் better என்று அடிக்கடி குறிப்பிட்டுள்ளீர்கள்.//
நானா? Ibn Warraq-ஆ??

//அர்த்தமுள்ள இந்துமதம் என்ற தொடரை எதிர்பார்க்கிறேன். //

why i am not a christian by Bertrand Russell??
வேணாமா??!!

Robin said...

//நம் பதிவர்களெல்லாம் அப்படிப்பட்ட ஆளுங்க இல்லையே! நீங்க வேற ...// வயசான ஆளாச்சே என்று பாவம் பார்த்து விட்டிருப்பார்கள்.

//நானா? Ibn Warraq-ஆ??// உங்கள் கருத்தும் அப்படித்தான் இருந்தது. ஒருவேளை ஒரு flow-வில் வந்திருக்கலாம்.

//why i am not a christian by Bertrand Russell??// இதைப் பற்றி நீங்கள் ஏற்கனவே எழுதியதாக நினைவு. இந்து மதத்தைப் பற்றி எழுதும்போது மேற்படியார்கள் எப்படி எதிர் வினையாற்றுகிறார்கள் என்று பார்க்கலாம். ஆனால் ஓன்று, இந்த திருச்சிக்காரனை சமாளிப்பதுதான் கஷ்டம். பக்கம் பக்கமாக உளறித் தள்ளி விடுவார். இவர் எழுதுவதை படிக்காமல் இருப்பதற்காக ஸ்க்ரோல் பண்ணி பண்ணி கை வலிப்பதுதான் மிச்சம்!

சீனு said...

//why i am not a christian by Bertrand Russell??
வேணாமா??!!//

:))

suvanappiriyan said...

திரு தருமி!

//இத்துடன் WHY I AM NOT A MUSLIM என்ற நூலின் முக்கியக் குறிப்புகள் முடிந்து விட்டன.//

அப்பாடா..... ஒரு வழியாக இஸ்லாத்தின் மேல் எந்த அளவு அபாண்டங்களையும், வசன திரிபுகளையும் செய்ய முடியுமோ அந்த அளவு 22 பதிவுகளில் செய்து முடித்தாகி விட்டது. இந்த கருத்துக்கள் அனைத்தும் புதியனவாக இருந்திருந்தால் உங்களின் இந்த பதிவுகள் பெருத்த சலசலப்பை ஏற்படுத்தியிருக்கும். ஆனால் உங்கள் பதிவுகளின் கருத்துக்கள் அனைத்தும் உலக அளவிலேயே ஆங்கிலத்திலேயே பல முறை விவாதிக்கப்பட்டு தீர்வு கண்டவைகளே! எனவே தான் இந்த பதிவுகள் எந்த ஒரு பாதிப்பையும் இணையத்தில் ஏற்படுத்தவில்லை.

//முதலில் ஒரு தூண்டுகோல் - சுவனப்பிரியன். இவரது மத அறிவு என்னை ஆச்சரியப்பட வைத்தது. (வயதும் சின்ன வயது என்றே நினைக்கிறேன்.) என்னை ஆச்சரியப்பட வைக்கும் இன்னொன்று எப்படி இஸ்லாமியரில் மிகப் பலர் மதத்திற்காக இத்தனை வலுவாக இருக்கிறார்கள் என்பது.//

எனக்கும் தற்போது 45 வயதாகிறது. வேலை நேரம் போக இணையத்தில் ஏ.ஆர்.ரஹ்மானையும், இளையராஜாவையும் தேடித் தேடி எனது நேரத்தை போக்கிக் கொண்டிருந்தேன். தற்செயலாக தமிழ்மணம் பக்கம் போகும்போது நேசகுமார், தருமி, டோண்டுராகவன், கால்கரி சிவா போன்றவர்களின் இஸ்லாம் சம்பந்தப்பட்ட பதிவுகளை படிக்க நேர்ந்தது. நான் பின்பற்றும் மதம் உண்மையில் இவர்கள் சொல்வதுபோல்தான் இருக்கிறதா என்று குர்ஆனை புரட்ட ஆரம்பித்தேன். என்ன ஆச்சரியம். இது நாள்வரை எனது தாய் தந்தையர் இஸ்லாம் என்பதால் பெயரளவில் முஸ்லிமாக இருந்த நான் குர்ஆனின் தமிழ் மொழி பெயர்ப்பை படிக்க ஆரம்பித்தவுடன் என்னையறியாமல் உடல் சிலிர்க்க ஆரம்பித்தது. பி.ஜெய்னுல்லாபுதீன், டாக்டர் ஜாகிர்நாயக் போன்றோரின் எழுத்துக்களும் வீடியோக்களும் என்னை மேலும் இஸ்லாத்தை அறிய தூண்டியது. இன்று ஓரளவு மற்றவர்களுக்கு இஸ்லாத்தை சொல்லக் கூடிய அளவு தேர்ச்சி பெற்றதற்கு இணையதளம் முதற்காரணம். தருமியும் ஒரு காரணம். எனவே என்னை சினிமா மோகத்திலிருந்து இஸ்லாத்தின் பால் கொண்டு வந்த இஸ்லாமிய எதிர்ப்பு பதிவர்களுக்கு நான் முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

//போராட்டம் இஸ்லாமிற்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் நடுவேயில்லை; அது சுதந்திரத்தை விரும்புவோருக்கும் அதனை எதிர்ப்போருக்கும் நடுவே!//


இதற்கு பதிலை நான் சொல்வதை விட ஒரு கிறித்தவரே கார்டியன் பத்திரிக்கையில் விவரித்துள்ளார். அதையும் பார்ப்போம்.

மேற்கண்ட 22 பதிவுகளுக்கு பிராயச்சித்தமாக 'நான் ஏன் கர்த்தரை ஏற்றுக் கொண்டேன்?' என்று பதிவுகளும் உங்களிடமிருந்தே வரும் காலம் தொலைவில் இல்லை.

suvanappiriyan said...

கொஞ்சம் இந்த கட்டுரையையும் படித்துப் பாருங்களேன்.

Black conversion or "reversion" to Islam is not new; it has been taking place in the African diaspora since time immemorial. However, I looked deeper into the phenomenon to find out why a growing number of Black Britons, especially younger ones, are embracing Islam. Although I am not a Muslim, I have always been interested in Islam – three of my all-time heroes, Muhammad Ali, Malcolm X and Jamaican singer Prince Buster were Muslim converts, and I was intrigued by the way Islam inspired all three to transcend their respective vocations to become icons.
What surprised me at the start of my study was that very little of any substance had been written about a religious phenomenon which first came to public prominence in the dubious form of Michael de Freitas, a Trinidad-born, UK-based lapsed Catholic. As Michael X and then Michael Abdul Malik, he was at the forefront of the race equality struggle in Britain during the 1960s. It was this stark lack of information that encouraged me to write a book, something that involved painstaking research and innumerable interviews in cities and towns with a growing Black Muslim presence.

One of the first issues I became aware of was the fact that many converts feel uncomfortable with the term "black Muslim", as they regard themselves as part of a worldwide community of believers who do not recognise "race". However, others are less reticent about associating their blackness with being a Muslim, and believe that Islam is the "natural religion of black people" and provides the means for full "spiritual, mental and physical liberation" from an oppressive system designed to subjugate them.
My research reveals that there is no one, straightforward reason for conversions, but a plethora of theological, emotional and cultural motivations. Practically all those interviewed suggested that Islam had given their lives meaning and woken them from a spiritual malaise. Others said that their faith provided inspiration and strength to engage with a society they regarded as corrupted by materialism and moral relativism. And for those whose lives had previously been errant, Islam's decisiveness on a range of religious and socio-cultural matters had given them a focus and an anchor. Equally, many of the women interviewed suggested that the Islamic focus on modesty had liberated them from the rampant fashion-related consumerism that objectifies all women, and sexualises pre-pubescent girls.

What I also found of real interest was the fact that the vast majority of those interviewed had some previous connection to Christianity, either as former church attendees or through having relatives with firm ecclesiastical connections. This differs from white converts who tend to have no previous religious experience.....

suvanappiriyan said...

continue......

I also found that the aforementioned Malcolm X had influenced many black folks, particularly men, to consider Islam. In many respects brother Malcolm's life reads like a blueprint for the majority of those with whom I spoke. He was bright child who was brought up as a Christian, but was failed by an institutionally racist society. As a result he became a delinquent who subsequently fell foul of the law. While incarcerated he embraced Islam (in the form of the Nation of Islam) and this turned his life around , resulting in him becoming one of the most eloquent, courageous and uncompromising spokespeople for black civil and human rights.

Black Muslims in this country, just like in the US, have also gained a reputation for "cleaning up" the lives of those involved in crime, drugs and gang violence, and many of those I spoke with were recipients of this remedial work. As a result, these beneficiaries were never bashful about sharing their beliefs with those of others faiths or none, and it would be true to say that black converts are often in the vanguard of efforts to proselytise. Having said that, my book includes contributions from Black Muslim doctors, academics, students, artists, sportsmen and musicians. The latter are important because Muslims are increasingly using the musical genre of hip-hop to promote Islamic teachings, and it is worth noting that many of the leading hip-hop artists are Muslims.
Black Muslims are mindful that both 9/11 and 7/7 have placed their faith under a microscope with converts singled out for particular scrutiny. However, all those interviewed showed a commitment to walking "the straight path" and believed that sections of the media made too much of the so-called impressionability and/or susceptibility of converts to the wiles of "preachers of hate".
Finally, I would say that Islam is providing a spiritual alternative among those who would generally have looked to Christianity for answers to life's great questions. My book is an attempt to find out more about a phenomenon that is enriching Britain's religious landscape, and should hopefully be a catalyst for greater discussion and study.

Black Muslims in Britain: Why are a growing Number of Young Black people are Converting to Islam? is published by Lion Hudson

-Richard reddy
Guardian news paper, uk, Monday 5 October 2009 16.00 BST

சீனு said...

//ஆனால் உங்கள் பதிவுகளின் கருத்துக்கள் அனைத்தும் உலக அளவிலேயே ஆங்கிலத்திலேயே பல முறை விவாதிக்கப்பட்டு தீர்வு கண்டவைகளே!//

தீர்வே கண்டுபிடிச்சாச்சா? சொல்லவேயில்ல...

//மேற்கண்ட 22 பதிவுகளுக்கு பிராயச்சித்தமாக 'நான் ஏன் கர்த்தரை ஏற்றுக் கொண்டேன்?' என்று பதிவுகளும் உங்களிடமிருந்தே வரும் காலம் தொலைவில் இல்லை.//

தருமி ஐயாவை எனக்கு தெரிய ஆரம்பித்ததே "நான் ஏன் மதம் மாறினேன்?" என்ற தொடர் மூலம் தான். படித்து பாருங்கள்.

தருமி said...

//பி.ஜெய்னுல்லாபுதீன், டாக்டர் ஜாகிர்நாயக் போன்றோரின் எழுத்துக்களும் வீடியோக்களும் என்னை மேலும் இஸ்லாத்தை அறிய தூண்டியது. //

ஹா ... ஹா ..
அப்படியே நரேன் சொன்ன பதிவையும் பார்த்துக் கொள்ளுங்கள் - உங்கள் மததிற்கு கிடைக்கும் அடுத்த ‘மெடலே”அதுதான்.நீங்கள் சொன்ன இருவரையும் இவர் ‘பீட்’ அடித்து விடுவார் போலும்!

இதுதான் உங்கள் மதம் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

தருமி said...

//குர்ஆனின் தமிழ் மொழி பெயர்ப்பை படிக்க ஆரம்பித்தவுடன் என்னையறியாமல் உடல் சிலிர்க்க ஆரம்பித்தது. //

இதைத்தான் நான் இப்படி கூறியுள்ளேன்:
//மத நம்பிக்கையுள்ளவர்கள் மத நூல்களை பக்தியோடு வாசிப்பது வேறு; அது எளிதும் கூட. நம்பிக்கையோடு வாசிப்பது கண்ணை மூடிக்கொண்டு வாசிப்பது என்பதற்கு ஒப்பு//

உங்களுக்கு அப்படித்தான் சிலிர்க்கும். எனக்குக் கிடைப்பது - இப்படியா, அடக் கடவுளே என்ற ஜில்லிப்பு!

//விவாதிக்கப்பட்டு தீர்வு கண்டவைகளே! //
இந்தக் ‘கதை’ எனக்கு வேண்டாம். இன்னும் ஒன்று சொல்வீர்களே .. அதை விட்டு வீட்டீர்கள் .. ”1400 ஆண்டுகளாக ....”
ஒரு சின்ன கேள்வி: பின் ஏன் சுவனம் பற்றிய என் பதிவில் சத்தத்தையே காணோம். இப்படி மெளனமாக விட்ட கேள்விகள் ஏராளம். பேச்சுக்கு ஒரு தரம் எல்லாக் கேள்விகளுக்கும் 1400 வ்ருஷமா பதில் சொல்லிட்டோம் அப்டின்ற பொய்யை சொல்ல வேண்டாம். நீங்கள் பதில் சொல்லாது அல்லது சொல்லியதாகப் பொய் சொல்லும் வினாக்களை தனிப்பதிவு ஒன்றில் தொகுக்கப்போகிறேன். பார்த்துக் கொள்ளுங்கள்.

தருமி said...

//இதற்கு பதிலை நான் சொல்வதை விட ஒரு கிறித்தவரே கார்டியன் பத்திரிக்கையில் விவரித்துள்ளார்.//

மாறி மாறி காண்பித்துக் கொள்ள வேண்டியதுதான். இதற்கேது முடிவு....

தருமி said...

//ஒரு வழியாக இஸ்லாத்தின் மேல் எந்த அளவு அபாண்டங்களையும், வசன திரிபுகளையும் செய்ய முடியுமோ //

உங்களுடைய அபாண்டமான திரிபுகள் இவை. அப்படியே குரான் வசனங்களைத் தந்தாலும் இல்லையென்றால் நானென்ன செய்வது.

தருமி said...

ஜாகிர் நாயக் உங்களை ‘உய்வித்தாரா’? அடப் பாவமே! மனுஷன் நல்ல மனப்பாடம் பண்றார். ஆனால் வாயைத் திறந்தால் பொய். ஏன் ‘உங்க ஊர்ல’ மற்ற மதங்களை அனுமதிப்பதில்லை என்ற கேள்விக்குஅவரளித்த பதில் ஒன்று போதும் ... போதும்டா சாமின்னு சொல்லி ஒதுங்கிப் போக....

சீனு said...

//அப்படியே நரேன் சொன்ன பதிவையும் பார்த்துக் கொள்ளுங்கள் - உங்கள் மததிற்கு கிடைக்கும் அடுத்த ‘மெடலே”அதுதான்.நீங்கள் சொன்ன இருவரையும் இவர் ‘பீட்’ அடித்து விடுவார் போலும்!//

அப்ப காங்கிரஸுக்கு ஓட்டு கோவிந்தாவா? :))

NO said...

அன்பான நண்பர் திரு தருமி ஐயா அவர்கட்க்கு,

It always takes a lot of guts to openly debate about the "truthfulness" of any religion. Especially in this scenario where the followers of one particular religion have been fed with story's of "superiority" and myths like "only true path available for mankind" and where they do not hesitate to gang up and cause injury to the one that talks such, your courage on this matter is simply awesome. If you do not know, Ibn Warraq's real identity is not known that much. I believe he lives in Australia and he doesnt reveal himself much for obvious reasons. Being the case your action to show yourself openly and then pull the rug under the "one true religion" is nothing short of enormous courage. I dont think many will dare. Hats off to you.That is one part.

The second part of your perseverance is about trying hard to talk reason with souls like திரு சுவனபிரியன் etc . என்னை பொறுத்தவரையில் இது மிக்க கடினமான செயல்.
சுத்தமாக பிரைன் வாஷ் செய்யப்பட்ட ஜீவன்களிடம் பேசுவது மிகக்கடினம்! அதாவது திரு ராபின் போன்ற முகமூடி போட்ட மத வெறியர்கள் சில சமயங்களில் atleast will yield somewhere . அவர்களிடம் பேசலாம். தங்களின் மதத்தை திட்டாத வரையில் அவர்கள் ஓகே.
ஆனால் மேலே சொன்ன நண்பர்களோ உலகம், வாழ்க்கை, எண்ணம், செயல், எல்லாமே அவர்களின் மதத்தின் மூலம் மட்டுமே தெளிவாக சொல்லப்படிருக்கிறது என்ற மாபெரும் superiority complex கொண்ட narcissitic எந்திரங்கள்! ஜாக்கிர் நாயக் என்ற ஏமாற்று பேர்வழியை தன்னின் வழிகாட்டியாக சொல்லும் ஒருவர் எப்படி
இருப்பார் என்பதை புரிந்து கொள்வது ஒன்றும் பெரிய விடயம் இல்லை. ஆனால் அதை புரிந்து கொண்டு அவரிடமும் முடிந்தவரை எடுத்து சொல்லி, அதுவும் மிக
நாகரீகமாக (நண்பர்கள் திரு வால் பையன், திரு கும்மி, திரு ராஜன் போன்றவர்கள் கவனிக்கவும்) உரையாடுவது பெரிய விடயம்தான். அதை செய்ததற்கு மற்றொருமுறை hats off !!!

NO said...

கிருத்துவ மதப்பிரியர்/வெறியர் திரு ராபின் -

நான் சொல்லுவதை ப்ளீஸ் ரிப்பீட் செய்யுங்கள் பார்க்கலாம்!!!! (அதாவது இந்து மதத்தை தூக்கி விட்டு அதற்க்கு பதிலாக கிருத்துவம்,
இயேசு, பைபிள் போன்றவற்றை போடவும்! அப்படி சொன்னால் நீங்கள் மதவாதி இல்லை).

இந்து மதத்தையும் சேர்த்து எல்லா மதங்களுமே அந்தந்த காலகட்டத்தில் இருந்த மக்களின் நாகரீக பிரதிபலிப்பே அன்றி வேறொன்றுமில்லை!
அதில் நல்லவைகள் இருந்தாலும் எந்த புனிதங்களும் இல்லை! அந்த நல்லவைகளை சொல்ல மதம் என்ற வாகனம் இப்பொழுது தேவை இல்லை!

கீதையையும் சேர்த்து எல்லா புனித புத்தகங்களும் அதிகமாக கற்பனை கலந்த கொஞ்சம் சரித்திரம் சொல்ல எழுதப்பட்ட சாதாரண எழுத்துக்களே!!

கண்ணன், முருகன், சிவன், விஷ்ணு, ஆகிய எல்லா இந்து கடவுலார்களையும் சேர்த்து மற்ற எல்லா மதக்கடவுள்களும் கற்பனையே!!

இந்து மதத்தில் இருக்கும் புனிதர்களோ தூதுவர்களோ யாரும் கடவுளால் அனுப்பப்படவில்லை! அவர்கள் எல்லோருமே சாதாரண மனிதர்கள்தான்! அந்த காலகட்டத்தின் மக்களின் பலர் நல்லவை வேண்டும் என்ற ஆதங்கத்தின் ஒரு உருவகம் மட்டுமே அது!
அந்த உருவகமானது அந்த சமயத்தில் இருந்த அல்லது அடுத்து வந்தவர்கள் இருந்ததாக நம்பப்பட்ட ஒரு உருவம் மீது விழுந்ததால், அந்த உருவகம் உருவமாகி அதுவே தூதுவராகவோ, புனிதராகவோ அல்லாதோ கடவுளாகவோ கூட ஆகிவிட்டது!!!

அவ்வளுவுதான் திரு ராபின்!!! கமான் கமான். கிருத்துவம், இயேசு, பைபிள் போன்றவற்றை போட்டு ரிப்பிட் செய்யுங்கள்!!!பயப்படாதீங்க eternal hell fire
இல் விழுந்து விடமாடீங்க!! யம தர்மன், நரகம், hell , Satan , எல்லாம் வெறும் ரீல்தான்!!! ஆனால் பாருங்க பகுத்தறிவுவாதியான நீங்க யமதருமன், நரகம் எல்லாம் நம்பமாடீங்க! ஆனால், சாத்தான், ஹெல், புனித வெள்ளி, சிலுவையில் மாண்டு மறுபடியும் எழுவது போன்றவற்றை நம்புவீங்க!!! ஏனென்றால்
வெள்ளைக்காரன் கோதுமை கொடுத்து பேரை மாத்தி அல்லேலூவியா பாடச்சொன்னா அது பகுத்தறிவு!!

Why I am not a Christian - Because I find the things said in its holy books, the life, death and resurrection of its imaginary god all too silly and unfit to guide Humans!!

If at all Humans deserve better then the religion of Mr. Robin is not the alternative for it matches word by word on the stupidity content of all other religions that he undermines whenever he gets a chance!! Mr. Robin abusing Mr. Suvanapiriyan's ilk is the contest of the year for its a match where one brainwashed tries to pinpoint the lack of brain of the other where in reality both have their top floor emptied for rent!! No doubt both of them have been occupied by imaginary things which actually doesnt exist!!!!

NO said...

அன்பான நண்பர் திரு தருமி ஐயா அவர்கட்க்கு,

It always takes a lot of guts to openly debate about the "truthfulness" of any religion. Especially in this scenario where the followers of one particular religion have been fed with story's of "superiority" and myths like "only true path available for mankind" and where they do not hesitate to gang up and cause injury to the one that talks such, your courage on this matter is simply awesome. If you do not know, Ibn Warraq's real identity is not known that much. I believe he lives in Australia and he doesnt reveal himself much for obvious reasons. Being the case your action to show yourself openly and then pull the rug under the "one true religion" is nothing short of enormous courage. I dont think many will dare. Hats off to you.That is one part.

The second part of your perseverance is about trying hard to talk reason with souls like திரு சுவனபிரியன் etc . என்னை பொறுத்தவரையில் இது மிக்க கடினமான செயல்.
சுத்தமாக பிரைன் வாஷ் செய்யப்பட்ட ஜீவன்களிடம் பேசுவது மிகக்கடினம்! அதாவது திரு ராபின் போன்ற முகமூடி போட்ட மத வெறியர்கள் சில சமயங்களில் atleast will yield somewhere . அவர்களிடம் பேசலாம். தங்களின் மதத்தை திட்டாத வரையில் அவர்கள் ஓகே.
ஆனால் மேலே சொன்ன நண்பர்களோ உலகம், வாழ்க்கை, எண்ணம், செயல், எல்லாமே அவர்களின் மதத்தின் மூலம் மட்டுமே தெளிவாக சொல்லப்படிருக்கிறது என்ற மாபெரும் superiority complex கொண்ட narcissitic எந்திரங்கள்! ஜாக்கிர் நாயக் என்ற ஏமாற்று பேர்வழியை தன்னின் வழிகாட்டியாக சொல்லும் ஒருவர் எப்படி
இருப்பார் என்பதை புரிந்து கொள்வது ஒன்றும் பெரிய விடயம் இல்லை. ஆனால் அதை புரிந்து கொண்டு அவரிடமும் முடிந்தவரை எடுத்து சொல்லி, அதுவும் மிக
நாகரீகமாக (நண்பர்கள் திரு வால் பையன், திரு கும்மி, திரு ராஜன் போன்றவர்கள் கவனிக்கவும்) உரையாடுவது பெரிய விடயம்தான். அதை செய்ததற்கு மற்றொருமுறை hats off !!!

NO said...

கிருத்துவ மதப்பிரியர்/வெறியர் திரு ராபின் -

நான் சொல்லுவதை ப்ளீஸ் ரிப்பீட் செய்யுங்கள் பார்க்கலாம்!!!! (அதாவது இந்து மதத்தை தூக்கி விட்டு அதற்க்கு பதிலாக கிருத்துவம்,
இயேசு, பைபிள் போன்றவற்றை போடவும்! அப்படி சொன்னால் நீங்கள் மதவாதி இல்லை).

இந்து மதத்தையும் சேர்த்து எல்லா மதங்களுமே அந்தந்த காலகட்டத்தில் இருந்த மக்களின் நாகரீக பிரதிபலிப்பே அன்றி வேறொன்றுமில்லை!
அதில் நல்லவைகள் இருந்தாலும் எந்த புனிதங்களும் இல்லை! அந்த நல்லவைகளை சொல்ல மதம் என்ற வாகனம் இப்பொழுது தேவை இல்லை!

கீதையையும் சேர்த்து எல்லா புனித புத்தகங்களும் அதிகமாக கற்பனை கலந்த கொஞ்சம் சரித்திரம் சொல்ல எழுதப்பட்ட சாதாரண எழுத்துக்களே!!

கண்ணன், முருகன், சிவன், விஷ்ணு, ஆகிய எல்லா இந்து கடவுலார்களையும் சேர்த்து மற்ற எல்லா மதக்கடவுள்களும் கற்பனையே!!

இந்து மதத்தில் இருக்கும் புனிதர்களோ தூதுவர்களோ யாரும் கடவுளால் அனுப்பப்படவில்லை! அவர்கள் எல்லோருமே சாதாரண மனிதர்கள்தான்! அந்த காலகட்டத்தின் மக்களின் பலர் நல்லவை வேண்டும் என்ற ஆதங்கத்தின் ஒரு உருவகம் மட்டுமே அது!
அந்த உருவகமானது அந்த சமயத்தில் இருந்த அல்லது அடுத்து வந்தவர்கள் இருந்ததாக நம்பப்பட்ட ஒரு உருவம் மீது விழுந்ததால், அந்த உருவகம் உருவமாகி அதுவே தூதுவராகவோ, புனிதராகவோ அல்லாதோ கடவுளாகவோ கூட ஆகிவிட்டது!!!

அவ்வளுவுதான் திரு ராபின்!!! கமான் கமான். கிருத்துவம், இயேசு, பைபிள் போன்றவற்றை போட்டு ரிப்பிட் செய்யுங்கள்!!!பயப்படாதீங்க eternal hell fire
இல் விழுந்து விடமாடீங்க!! யம தர்மன், நரகம், hell , Satan , எல்லாம் வெறும் ரீல்தான்!!! ஆனால் பாருங்க பகுத்தறிவுவாதியான நீங்க யமதருமன், நரகம் எல்லாம் நம்பமாடீங்க! ஆனால், சாத்தான், ஹெல், புனித வெள்ளி, சிலுவையில் மாண்டு மறுபடியும் எழுவது போன்றவற்றை நம்புவீங்க!!! ஏனென்றால்
வெள்ளைக்காரன் கோதுமை கொடுத்து பேரை மாத்தி அல்லேலூவியா பாடச்சொன்னா அது பகுத்தறிவு!!

Why I am not a Christian - Because I find the things said in its holy books, the life, death and resurrection of its imaginary god all too silly and unfit to guide Humans!!

If at all Humans deserve better then the religion of Mr. Robin is not the alternative for it matches word by word on the stupidity content of all other religions that he undermines whenever he gets a chance!! Mr. Robin abusing Mr. Suvanapiriyan's ilk is the contest of the year for its a match where one brainwashed tries to pinpoint the lack of brain of the other where in reality both have their top floor emptied for rent!! No doubt both of them have been occupied by imaginary things which actually doesnt exist!!!!

suvanappiriyan said...

//ஒரு சின்ன கேள்வி: பின் ஏன் சுவனம் பற்றிய என் பதிவில் சத்தத்தையே காணோம். இப்படி மெளனமாக விட்ட கேள்விகள் ஏராளம்.//
காரணம் ஏற்கெனவே அனைத்திற்க்கும் பதில் சொல்லியாகி விட்டது.

//ஓரினச் சேர்ககைக்கு இஸ்லாம் பெருந்தடை ஏதும் விதிப்பதில்லை. பாபர் (1483-1530) ஒரு பையன் மீது கொண்ட காதலைத் தன் வாழ்க்கைக் குறிப்பில் எழுதியுள்ளார். (340) //

சாய்பாபா ஓரின சேர்க்கை பிரியர். எனவே இந்து மதம் ஓரினச் சேர்க்கையை ஆதரிக்கிறது என்று யாராவது எழுதினால் அந்த நபரை மனநலம் பிறழ்ந்தவராகத்தான் என்னால் பார்க்க முடியும்.

//குரானிலும் 52:24, 56:17, 76:19 - சுவனத்தில் பையன்களால் நீங்கள் கவனிக்கப் படுவீர்கள் என்பதற்கான பொருள், அவர்கள் உங்களுக்கு ஏவல் செய்ய என்பதுவா, பாலின இன்பத்திற்காகவா என்பது ஒரு கேள்வியே. ((342)//

'நீங்கள் பெண்களை விட்டு இச்சைக்காக ஆண்களிடம் செல்கிறீர்கள். நீங்கள் வரம்பு மீறிய கூட்டமாகவே இருக்கிறீர்கள்.' என்று லூத் கூறினார்.
-குர்ஆன் 7:81

'நமது கட்டளை வந்த போது அவ்வூரின் மீது சுடப்பட்ட கற்களால் கல் மழை பொழிந்து அதன் மேற்பகுதியை கீழ்ப் பகுதியாக்கினோம்.

அவை உமது இறைவனிடம் அடையாளமிடப்பட்டது. அவ்வூர் இந்த அநீதி இழைத்தோருக்குத் தொலைவில் இல்லை.'
-குர்ஆன் 11:82,83

ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டவர்களை திருத்துவதற்க்காகவே லோத் என்ற இறைத்தூதரை இறைவன் அனுப்புகிறான். அவர்கள் திருந்தாத காரணத்தால் அந்த ஊரையே தலைகீழாக புரட்டி எடுத்து விட்டதாக இறைவன் கூறுகிறான். அந்த இடம் இன்று வரை மனிதர்கள் வசிப்பதற்கு லாயக்கற்றதாக ஆகியுள்ளது. Dead Sea 'இறந்த கடல்' என்று ஜோர்டான் கடல் பகுதியில் இன்றும் அந்த இடத்தை நீங்கள் பார்வையிடலாம். அந்த கடல் பகுதிகளுக்குள் மீன்கள் வந்தாலும் இறந்து விடுகிறதாம். அந்த அளவு உப்பின் அளவு மற்ற கடல்களை விட அதிகரித்திருப்பதே காரணம். குர்ஆன் பெரும்பாவங்களில் ஒன்றாக ஓரினச் சேர்க்கையை கண்டித்திருக்க இஸ்லாம் அனுமதிக்கிறது என்ற பொயயை நெஞ்சறிந்து சொல்லலாமா?

'அவர்களுக்குரிய ஊழியர்கள் அவர்களைச் சுற்றி வருவார்கள். அவர்கள் மூடி வைக்கப்பட்ட முத்துக்களைப் போல் இருப்பார்கள்'
-குர்ஆன் 52:24

'இளமை மாறாத சிறுவர்கள் தெளிவான பானம் கொண்ட கிண்ணத்துடனும், குவளைகளுடனும் தட்டுக்களுடனும் அவர்களைச் சுற்றி வருவார்கள்'
-குர்ஆன் 56:17,18

இங்கு உலகத்தில் இறைவனின் கட்டளைகளுக்கு கீழ்படிந்து வாழ்ந்த மக்களுக்கு சுவனத்தில் பணிவிடை செய்வதற்காக சிறுவர்களை இறைவன் அமர்த்துகிறான். வேலைக்கு அமர்த்துபவர்களை பாலின நோக்கத்தோடு பார்ப்பவர் கண்டிப்பாக மன நலம் பிறழ்ந்தவரே!

Dead Sea salt refers to salt extracted or taken from the Dead Sea.
The Dead Sea is popular with tourists from all over the world for its reputed therapeutic effects. The water of the Dead Sea has ten times the salt content of other sea water and is consequently substantially denser. This allows anyone to easily float on Dead Sea water because of its greater density. Its mineral composition is also different from ocean water since only 12-18% of Dead Sea salt is sodium chloride. A 2006 analysis of a commercial Dead Sea Salt product measured a 2.5% sodium chloride content; by comparison, 97% of the salt in normal ocean water is sodium chloride.

உலகிலேயே மிக நீண்டகாலமாக மக்கள் தொடர்ந்து வசித்து வருமிடமாக சாக்கடலுக்கு அண்மையிலுள்ள ஜெரிக்கோ (எரிக்கோ) நகரம் கருதப்படுகிறது. விவிலியத்தில் குறிப்பிடப்படும் சோதோம், கொமொரா நகரங்கள் சாக்கடலின் தென்கீழ்க்கரைக்கு அண்மையில் அமைந்தன என்று ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். விவிலிய நூற்பகுதியாகிய பழைய ஏற்பாட்டின்படி சோதோம், கொமோரா ஆகிய இந்நகரங்கள் ஆபிரகாம் காலத்திலே கடவுளால் அழிக்கப்பட்டது தொடக்க நூல் 19:1-9).

சவுல் அரசன் தாவீதை கொலை செய்யத் தேடியபோது தாவீது மறைந்திருந்த குகை சாக்கடலுக்கண்மையில் உள்ள ஏன்கேதியில் அமைந்துள்ளது.
சோதோம், கொமோரா என்னும் நகர்கள் கடவுளுக்கு எதிராகப் பெரும் தீங்கு செய்ததால் கந்தகத்தாலும் நெருப்பாலும் அழிக்கப்பட்டன தொடக்க நூல் 19:1-29) என்றும், அப்பகுதியே சாக்கடல் என்றும் விவிலியம் கூறுகிறது. சோதோமை அழிப்பதற்கு முன், கடவுள் லோத்து என்பவரையும் அவருடைய குடும்பத்தவரையும் பாதுகாப்பாக வெளியேற்றினார். ஆனால் லோத்தின் மனைவி கடவுளின் கட்டளையை மீறி, எரிந்த நகரைத் திரும்பிப் பார்த்ததால் உப்புத் தூணாக மாற்றப்பட்டாள் தொடக்க நூல் 19:23-29).
-விக்கிபீடியா

தருமி said...
This comment has been removed by the author.
தருமி said...

////ஒரு சின்ன கேள்வி: பின் ஏன் சுவனம் பற்றிய என் பதிவில் சத்தத்தையே காணோம். இப்படி மெளனமாக விட்ட கேள்விகள் ஏராளம்.//
காரணம் ஏற்கெனவே அனைத்திற்க்கும் பதில் சொல்லியாகி விட்டது.

இப்படி சொல்வதைத்தான் ‘பொய் சொல்லுவது’ என்றழைக்கிறேன்.
உதாரணமாக,http://dharumi.blogspot.com/2011/07/509-2-why-i-am-not-muslim-17.html என்ற பதிவில் இறுதி சொற்றொடர்: இதுபோன்ற சில கேள்விகளிலிருந்து பதிவர்கள் விவாதங்களில் வழக்கமாக ஒதுங்கிப் போவதும் ஒரு ‘எஸ்கேப் - பாலிசி’ தான்!)
http://dharumi.blogspot.com/2011/06/506.html -- நிறைய கேள்விகள்... பதில்கள் தந்து விட்டீர்களா??
http://dharumi.blogspot.com/2011/07/513-3-why-i-am-not-muslim.html -- இந்தப் பக்கமே காணோம்.

பதிலளிக்காத கேள்விகள் நிறைய. பட்டியல் சீக்கிரம் தருகிறேன். எல்லாவற்றிற்கும் பதில் த்ருகிறேன் என்ற பொய்த்தகவல் மட்டும் வேண்டாம்.

தருமி said...

'அவர்களுக்குரிய ஊழியர்கள் அவர்களைச் சுற்றி வருவார்கள். அவர்கள் மூடி வைக்கப்பட்ட முத்துக்களைப் போல் இருப்பார்கள்'
-குர்ஆன் 52:24

'இளமை மாறாத சிறுவர்கள் தெளிவான பானம் கொண்ட கிண்ணத்துடனும், குவளைகளுடனும் தட்டுக்களுடனும் அவர்களைச் சுற்றி வருவார்கள்'
-குர்ஆன் 56:17,18

-------- இவர்களெல்லோரும் தெய்வீகப் பிறவிகளா .. ஷைத்தான் மாதிரி? Created only to serve good people in suvanam? ஆக சுவனத்திற்கென்று அல்லா சிறுவர்களையும், ஹூரிக்களையும் படைக்கிறாரோ?

ஆம்பிளைங்களுக்கு இந்த ரெண்டும். சுவனம் வரும் பெண்களுக்கு என்ன படைக்கப் போகிறார்?? ஹூரர்களும், சிறுமிகளுமா?

தருமி said...

dead sea கதை எதற்கு என்று தெரியவில்லை. தெரிந்தால் பேசுகிறேன்

சீனு said...

Dead sea? இங்க கங்கைக்கு ஒரு கதை இருக்கிற மாதிரி...

Riyas said...

//இத்துடன் WHY I AM NOT A MUSLIM என்ற நூலின் முக்கியக் குறிப்புகள் முடிந்து விட்டன.//

அப்போ இதெல்லாம் உங்க சொந்த சரக்கு இல்லயா... எவனோ எழுதின புத்தகத்த வெச்சித்தான் இவ்வளவு பீத்தலா...!

எதுவும் விமர்சனத்துக்கு உட்பட்டதுதான்.. தான் பார்த்த கேட்ட உணர்ந்த அனுபவித்தவைகளை தனது சொந்த எழுத்தாக கொண்டு வரனும்,,

எவனோ திண்டதை நீங்க வாந்தியெடுக்கிங்க இதெல்லாம் ஒரு பொழப்பு..

Riyas said...

//சார்வாகன்
Cortext
கல்வெட்டு
The Analyst
கும்மி
சீனு
வால்பையன்
No
நரேன்
குஜால்
கணேசன்
செங்கொடி
குடுகுடுப்பை
Yasir//

இத்தன அல்லக்கைகளா.. இதுல பல பேருக்கு இது முழுநேர தொழில்..

naren said...

இந்த தொடரின் அதன் மறுமொழிகளின் தாக்கம் என்னை பல துறைகளை ஆராய தூண்டி, கற்று, அறிய உதவியது.

முதலில் குரானை ஆழமாக படிக்க உதவியது. அதன் பிறகு பைபிளையும் கீதைப் பக்கம் மறுபரீசீலனை செய்ய வைத்தது.
theology யை அறிமுகம் செய்தது.
logic மேம்படுத்த உதவியது.
பரிணாம வளர்ச்சி கொள்கையை ஆழமாக அறிய உதவியது.
அறிவியல் புரிய ஆரம்பித்தது.
மதப்பிரச்சாரம் செய்வது எப்படி என்பதை அறிய முடிந்தது.
வரலாறை ஆழமாக படிக்க தூண்டியது.
இன்னும் பல........

ஒவ்வொன்றுக்கு விடை தேட, தேடலில் அறிவு வளர..

நன்றி.

naren said...

//இங்கு உலகத்தில் இறைவனின் கட்டளைகளுக்கு கீழ்படிந்து வாழ்ந்த மக்களுக்கு சுவனத்தில் பணிவிடை செய்வதற்காக சிறுவர்களை இறைவன் அமர்த்துகிறான். வேலைக்கு அமர்த்துபவர்களை பாலின நோக்கத்தோடு பார்ப்பவர் கண்டிப்பாக மன நலம் பிறழ்ந்தவரே!//

child labour யை அனுமதிக்கும் ஏக எல்லாம் வல்ல கடவுள் தான் கண்டிப்பாக மன நலம் பிறழ்ந்தவரே.

உடனே labour officer, collector and police கிட்டே புகார் அளித்து, சுவன industry சீல் போட்டு மூடச் சொல்லி, கடவுளை கைது செய்து ஜெயிலே போடுங்கப்பா.

இஸ்லாம் child labour அனுமதிக்கிறது என்பதை சுட்டிக் காட்டிய புண்ணியவானுக்கு நன்றி.

தருமி said...

//எவனோ திண்டதை நீங்க வாந்தியெடுக்கிங்க இதெல்லாம் ஒரு பொழப்பு..//

//இத்தன அல்லக்கைகளா.. //

ரியாஸ்,
என்னுடைய பதிவுகளில் இப்படியான கீழ்த்தரமான பின்னூட்டங்கள் வருவது மிகவும் அரிது. உங்கள் தரம் இதுதான் என்றால் மிக்க மகிழ்ச்சி. ஆனால் அதை இங்கே கொட்ட வேண்டாம். புரிகிறதா?

//எவனோ எழுதின புத்தகத்த வெச்சித்தான் இவ்வளவு பீத்தலா...!//

எல்லோருமே இதைத்தான் செய்து கொண்டு இருக்கிறோம்.

சீனு said...

/////
//எவனோ எழுதின புத்தகத்த வெச்சித்தான் இவ்வளவு பீத்தலா...!//

எல்லோருமே இதைத்தான் செய்து கொண்டு இருக்கிறோம்.
/////

ஹா...ஹா...இவருக்கு என்ன பதில் போடுவது என்று கொஞ்சம் கோபமாக வார்த்தைகளை கோர்த்து வைத்திருந்தேன். ஆனா உங்க பதில் பார்த்ததும் என்னை அறியாமல் சிரித்து விட்டேன். இதை விட சிறந்த பதில் இருக்குமா? :)))))))))))

சீனு said...

'Riyas' வேற எப்படி பாஸ் பேசுவாரு? :))

saarvaakan said...

வணக்கம்,
உலகின் எந்த விஷயமும் விமர்சந்த்திற்கு அப்பாற்பட்டது அல்ல.இஸ்லாமின் மீது வைக்கப் பட்ட அழுத்தமான ,ஆழமான் விமர்சனம் இந்த புத்த‌கம் என்றால் மிகையாகாது.தருமி அய்யாவின் தமிழாக்க நடை ஆங்கிலத்தில் படித்திருந்த போதும் பல விஷயங்களை தெளிவாக விளக்கியது.இது அனைத்து மதங்களுக்கும்,மத புத்தகங்களுக்கும் பொதுவான உண்மைதான்.மத புத்தகம் எந்த காலத்தில் எழுதப் பட்டதோ அக்காலத்து வாழ்வியல் நடைமுறைகளையே பிரதிபலித்து நியாயப் படுத்தி இருக்கும்.இத்னை உணர்ந்து பிற‌ மதங்கள் எப்போதோ தாண்டி வந்து விட்டன.விமர்சனங்கள் மதங்கள் பண்பட்டன என்பதே உண்மை.
*****************************
விமர்சனங்களில் மனித சமுதாயத்திற்கு பாதிப்பு ஏற்படும் விஷயங்களை உண‌ர்ந்து ,அவறறை களைந்து முன்னேற்றப் பாதையில் பயணிப்பது அனைவருக்கும் நல்லது.இஸ்லாமும் பிற மதங்கள் போல்தான், இஸ்லாமியர்களும் பிற தமிழர்கள் போல்தான்.நல்லது,கெட்டது, நல்லவர்கள்,கெட்டவர்கள் இரண்டும் இஸ்லாமில் உண்டு.
********************
இஸ்லாமிய சகோதரர்களுக்கு ஒரு விஷயம் விவாதத்தின் போது சில சமயம் கடுமையான விமர்சனம் செய்வது இது மனிதர்களை பாதிக்கிறது என்பதாலும் ,அனைத்தையும் இக்காலத்திற்கும் பொருந்தும்,சர்வ ரோஹ நிவாரணி என்று வாதிடுபவர்களை நிலைமையை புரிய வைக்கவே .யார் மனதையும் புண்படுத்த அல்ல. விவாதித்தவர்கள் தமிழ் இஸ்லாமியர்களின் பிரதிநிதி அல்ல என்பதும் தெரியும்.சில தனிப்பட்ட மனிதர்களின் கருத்து மட்டுமே.பொதுவாக தமிழ் நாட்டில் மதச்சார்பின்மை உலகின் பிற பகுதிகளை விடவே சிற்ப்பாக கடைப்பிடிக்கப் படுகிறது என்பதில் எனக்கு பெருமை.அத்னை கட்டிக் காப்பது நம்து கடமை.
*******************
இத்தொடரை அளித்த தருமி அய்யா,விவாதித்த நண்பர்களுக்கும் நன்றி.

Robin said...

//ரியாஸ்,
என்னுடைய பதிவுகளில் இப்படியான கீழ்த்தரமான பின்னூட்டங்கள் வருவது மிகவும் அரிது. உங்கள் தரம் இதுதான் என்றால் மிக்க மகிழ்ச்சி. ஆனால் அதை இங்கே கொட்ட வேண்டாம். புரிகிறதா?// இப்படி எழுதும் தருமிக்கு

//கிருத்துவ மதப்பிரியர்/வெறியர் திரு ராபின்// இதெல்லாம் தரமான பின்னூட்டமா தெரியுதோ?

கல்வெட்டு said...

.

அன்புள்ள தருமி (பேராசான்)
உங்களின் இடைவிடாத முயற்சிக்கு வாழ்த்துகள். பல நேரங்களின் தொடர்ந்து கலந்துரையாட முடியாவிட்டாலும் படித்துக்கொண்டே உள்ளேன்.

மதம் என்று தேடும் பலருக்கு, உங்களின் பதிவுகள் நல்ல வாசிப்பு அனுபவமாக இருக்கும். வாசிப்பைத் தாண்டி,சுயகேள்விகளால் சுத்திகரித்துக்கொள்வது அவரவரின் விருப்பம் மற்றும் தேர்வுகள்.

உங்களின் உழைப்பிற்கு நன்றி!

நீஙகள் குறிப்பிட்ட ஊன்றுகோல்களிடம் இருந்து நிறையக் கற்றுக்கொண்டுள்ளேன்.
அனைவருக்கும் நன்றி!

**

NO said...

////எவனோ எழுதின புத்தகத்த வெச்சித்தான் இவ்வளவு பீத்தலா...!//
எல்லோருமே இதைத்தான் செய்து கொண்டு இருக்கிறோம். //
master class riposte !!!!!

நீங்களாவது சுமார் பத்து வருடங்களுக்கு முன் வந்த புத்தகத்தை வைத்து மட்டுமே பீற்றுகிரீர்கள். நீங்கள் பொய் சொல்லி இருக்கீர்களா அல்லது இல்லாத
ஒருவர் எழுதியதாக சொல்லப்பட்டதை நீங்களே இட்டு கட்டுகுரீர்களா என்று கண்டு பிடிப்பது சுலபம். மிஞ்சி போனால் இப்ன் வாராக்கை தொடர்பு கொண்டு கேட்டு விடலாம்!! ஆனால் இவர்கள் நிலைதான் பாவம்!!! Just read that the scientists have conculded that time travel is definitely not possible as nothing can travel more than the speed of light (Einstein is getting vindicated every decade on this matter and Stephen Hawkins too concluded the same about time travel couple of years ago)! Being the case, going back thousand four hundred years would be an impossible task.

// //கிருத்துவ மதப்பிரியர்/வெறியர் திரு ராபின்// இதெல்லாம் தரமான பின்னூட்டமா தெரியுதோ?// - ஆமாம் தெரியாது ஏனென்றால் the contents are deemed as not being indecent when the bar for indecency has already been set quite low by the one that whines, which in this case is Mr. Robin!!!

கீழே திரு ராபின் அவர்களின் பின்னூட்டம் ஒரு சாம்பிள்!!!
//இந்த திருச்சிக்காரனை சமாளிப்பதுதான் கஷ்டம். பக்கம் பக்கமாக உளறித் தள்ளி விடுவார். // The man no less a narcissist than the others he seeks to castigate generally decides to impose his own standards on others but turns victim when the others choose to do so!!!

My god and faith are alone true and hence I only have the right to raise calumny against all others and when the same is done by others on my faith I cry out calling them as immoral methods to dirty my faith. Such moral-less attitude is not the property of one Abrahamic religion alone as stiff competition is given to such by Mr. Robin and other soft fundamentallists. The problem is such super high plane that they sit on while discussing about their faith spills over when they start defining other things too. The above pinpointing of what is indecent is one fine example. He seems to sit high above on his self sanctioned moral high ground which he thinks as given by his imaginary benefactor and tries define things for the general community. Thus starts the fundamentallist!

Sundararajan P said...

தொடர் பதிவுக்கு மிக்க நன்றி ஐயா!

அவ்வபோது படித்து வந்தேன். இப்போது முழுமையாக படிக்க வேண்டும்.

ஆபாசமான, அருவெருக்கத்தக்க விமர்சனங்கள் இப்போது மட்டுமல்ல, இது போன்ற அறிவார்ந்த விவாதங்களை எழுப்பும் அனைவரும் சந்திப்பதே என்ற உண்மையை உணர்ந்து மிகவும் பக்குவமாக கையாண்டுள்ளீர்கள்.

தருமி said...

சுந்தரராஜன்,

’பார்த்து’ நீண்ட காலமாயிற்று.

உங்களைப் போன்ற ‘silent readers' இருப்பது அறிந்து மகிழ்ச்சி.

நன்றி

Anna said...

வாழ்த்துக்கள் Sir.

As the next assignment, you might like to watch this: Jesus, the cold case. :)

இந்த documentary இங்கு சில தினங்களுக்கு முன் ஒளிபரப்பப்பட்டது. யேசுவை உண்மையில் யார் கொலை செய்தது என ஒரு detective ஆக Bryan Bruce என்பவர் ஆராய்கிறார். Hopefully உங்கிருந்து இதை access செய்யலாமென நினைக்கிறேன்.

தருமி said...

The Analyst

எங்க ஊர்ல எல்லாம் அது தெரியாதுன்னு போட்டிருக்கே! only within NZ?

Riyas said...

//என்னுடைய பதிவுகளில் இப்படியான கீழ்த்தரமான பின்னூட்டங்கள் வருவது மிகவும் அரிது. உங்கள் தரம் இதுதான் என்றால் மிக்க மகிழ்ச்சி. ஆனால் அதை இங்கே கொட்ட வேண்டாம். புரிகிறதா//

முதலில் கீழ்த்தரமான பின்னூட்டத்திற்கு எனது வருத்தங்கள்.. தருமி ஐயா

நீங்கள் இஸ்லாத்தை விமர்சித்தீர்கள் நான் உங்கள் பதிவை விமர்சித்தேன் அவ்வளவுதான்..


//ஆனால் அதை இங்கே கொட்ட வேண்டாம்// உங்கள் பதிவை விமர்சிக்க வேண்டாம் எங்கிறீர்களா..?

உங்களுக்கு சார்பான விமர்சனங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்று சொல்கிறீர்களா..?

Riyas said...

/எல்லோருமே இதைத்தான் செய்து கொண்டு இருக்கிறோம்//

நாங்கள் செய்வது தவறு என்றால் அதையே நீங்கள் திரும்பி செய்யலாமா...?

Riyas said...

@சீனு

//'Riyas' வேற எப்படி பாஸ் பேசுவாரு//
அதுதான் பேசிட்டம்ல நீங்க இப்ப பதில் தயார் பன்னுங்கோ..

Gujaal said...

இத்தொடரின் மூலம் அறிந்துகொண்டவை ஏராளம்.

மிக்க நன்றி.

சிறு வயதில் புகட்டப்பட்ட இறைக் கற்பிதங்கள் அப்படித்தான் என்ற நிலையிலிருந்து ஏன் அப்படி என்ற நிலையை அடைந்திருக்கிறேன். எனக்கு வேண்டாம் என்ற நிலையையும் அடையக்கூடும்.

///எல்லோருமே இதைத்தான் செய்து கொண்டு இருக்கிறோம்//

நாங்கள் செய்வது தவறு என்றால் அதையே நீங்கள் திரும்பி செய்யலாமா...?//

ஏய்யா நான் சரியாத்தான் பேசறனா?

Unknown said...
This comment has been removed by a blog administrator.
Anna said...

Sorry Sir. Thought that would happen.

அது இலவசமாக இணையத்தில் எங்கும் இருப்பதாகத் தெரியவில்லை. இந்த ஆராய்ச்சியை ஒட்டி ஒரு புத்தகமும் எழுதியுள்ளார். இதையொட்டி அவரது ஒரு பேட்டியையும் ஒரு சில trailers உம் மட்டுமே இப்போதைக்கு என்னால் கண்டுபிடிக்க முடிந்தது.

அவரது ஆராய்ச்சியின் சாராம்சம் இதுதான். சிலிவையில் அறைவது அக்காலத்தில் மிகவும் சாதாரணமான ஒன்று. யேசு கிறிஸ்துவை ரோமர்களே கொன்றனர். Jews அல்ல. He put the whole blame (supported by quite a lot of evidence) on Pontius Pilate. இந்த நிகழ்வு நடந்த சில 50-80 ஆண்டுகளுக்குப் பிறகே Gospels எழுதப்பட்டது. எழுதியவர்கள் வேண்டுமென்றே Pontius Pilate ஜ நல்லவனாக்கினர். Jews ஜக் கெட்டவராக்கினால் மக்கள் கிறிஸ்தவத்தை இலகுவாக ஏற்றுக்கொள்வார்கள் என நம்பியதால். Gospels எல்லாம் கட்டுக்கதைகளே ஒழிய வரலாற்று ஆவணங்கள் அல்ல என்பதை அழகாக சான்றுகளுடன் விவரிக்கப்பட்டது. இதன் விளைவு Antisemitism. அதன் கொடூரமான விளைவே ஹிட்லர் அரங்கேற்றிய holocaust.

Close Up: Jesus Christ - The Ultimate Cold Case - Interview

Jesus: The Cold Case - Trailer One

Jesus: The Cold Case - Trailer Four

There's quite a few of these trailers. All starts with the same thing but after 56 seconds, they have bits that are different from the first trailer.

'The further you get from history, the nicer Pilate becomes, the more benign Pilate becomes. He becomes almost a "christian". And interestingly, the nicer Pilate becomes in each account, the more malevolent Jews becomes.'
-Historical Jesus Expert: Prof. Elaine Pagels.


Jesus: The Cold Case- A Preview

yasir said...

வணக்கம் தருமி அய்யா,

முதுபெரும் ஆசிரியர் அவர்களுக்கு எனது சிறு ஊன்றுகோலும் பயன்பட்டிருப்பதைக் கண்டு வியப்படைந்தேன். நான் படித்து பட்டம் வாங்கவில்லையே என்ற குற்ற உணர்வு எனக்குள் இருந்து கொண்டிருந்தது. ஆனால் தங்களிடமிருந்து கிடைத்தப் பாராட்டுப் பதிவைவிட ஒரு சிறந்த பட்டம் எனக்குத் தேவையில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது.

தங்களின் மதம் தொடர்பான பதிவுகள் எனக்கு ஓர் அனுபவம்.இது மீண்டும் தொடர வாழ்த்துகிறேன். அமீரகத்தில் சில நல்ல பதிவர்களின் நல்ல பதிவுகள் தடை செய்யப்பட்டுள்ளதால், படிக்க முடிவதில்லை பின்னூட்டமிட்டாலும் பதிவாவதில்லை வருத்தமாக உள்ளது ஏனென்று விலங்கவில்லை. நாம் போகும் பாதை சரியெனப் படுவதால் தடைகற்களோ?

yasir said...

வணக்கம் தருமி அய்யா,

முதுபெரும் ஆசிரியர் அவர்களுக்கு எனது சிறு ஊன்றுகோலும் பயன்பட்டிருப்பதைக் கண்டு வியப்படைந்தேன். நான் படித்து பட்டம் வாங்கவில்லையே என்ற குற்ற உணர்வு எனக்குள் இருந்து கொண்டிருந்தது. ஆனால் தங்களிடமிருந்து கிடைத்தப் பாராட்டுப் பதிவைவிட ஒரு சிறந்த பட்டம் எனக்குத் தேவையில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது.

தங்களின் மதம் தொடர்பான பதிவுகள் எனக்கு ஓர் அனுபவம்.இது மீண்டும் தொடர வாழ்த்துகிறேன். அமீரகத்தில் சில நல்ல பதிவர்களின் நல்ல பதிவுகள் தடை செய்யப்பட்டுள்ளதால், படிக்க முடிவதில்லை பின்னூட்டமிட்டாலும் பதிவாவதில்லை வருத்தமாக உள்ளது ஏனென்று விலங்கவில்லை. நாம் போகும் பாதை சரியெனப் படுவதால் தடைகற்களோ?

குறும்பன் said...

உங்கள் இந்த தொடர் இடுகை மூலமும் அதில் வந்த பின்னூட்டங்கள் மூலமும் நிறைய தெரிந்து கொண்டேன். அனைவருக்கும் பாராட்டுகள்.

நான் வலைப்பதிவுக்கு வந்த புதிதில் மதம் தொடர்பான இடுகைக்கு அவர் தீவிர மதசார்பாளர் என்று தெரியாமல் மறுமொழி இட்டேன். அதுக்கு அவர் அளித்த மறுமொழிய பார்த்து நொந்து போயிட்டேன். அதிலிருந்து மதப்பதிவர்களின் பதிவுகளை படிப்பதில்லை எனவும் அப்படியே படித்தாலும் மறு மொழி இடுவதில்லை எனவும் முடிவு செய்தேன்.

தருமி said...

நன்றி குறும்பன்.

Post a Comment